<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Sathsara Nimesh Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/sathsara-nimesh/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/sathsara-nimesh/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Wed, 30 Apr 2025 10:11:34 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Sathsara Nimesh Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/sathsara-nimesh/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>நிமேஷ் சத்சரவின் மரணம் &#8211; விசாரணைகளுக்கு நீதிமன்றம் உத்தரவு</title>
		<link>https://oruvan.com/nimesh-sathsaras-death-court-orders-investigation/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 30 Apr 2025 10:11:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[Court]]></category>
		<category><![CDATA[Nimesh]]></category>
		<category><![CDATA[Sathsara Nimesh]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=18967</guid>

					<description><![CDATA[<p>வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்ததாக கூறப்படும் 26 வயதுடைய நிமேஷ் சத்சர என்ற இளைஞனின் மரணம் தொடர்பான சாட்சியங்களின் விசாரணைகளை, மே 16ஆம் திகதி முதல் ஆரம்பிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டது. இதன்படி, சம்பந்தப்பட்ட விசாரணையில் சாட்சியமளிக்க அன்றைய தினம் ஐந்து சாட்சியாளர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கையை பரிசீலித்த பின்னர் கொழும்பு மேலதிக [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/nimesh-sathsaras-death-court-orders-investigation/">நிமேஷ் சத்சரவின் மரணம் &#8211; விசாரணைகளுக்கு நீதிமன்றம் உத்தரவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்ததாக கூறப்படும் 26 வயதுடைய நிமேஷ் சத்சர என்ற இளைஞனின் மரணம் தொடர்பான சாட்சியங்களின் விசாரணைகளை, மே 16ஆம் திகதி முதல் ஆரம்பிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டது.</p>
<p>இதன்படி, சம்பந்தப்பட்ட விசாரணையில் சாட்சியமளிக்க அன்றைய தினம் ஐந்து சாட்சியாளர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p>
<p>குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கையை பரிசீலித்த பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.</p>
<p>நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட முந்தைய உத்தரவின்படி, இறந்த இளைஞனின் உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.</p>
<p>இதன்படி, மூவர் அடங்கிய வைத்திய குழுவால் அந்த சடலத்தை மீண்டும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியதாகவும், அதன் முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p>
<p>இந்த பிரேத பரிசோதனையின் போது எடுக்கப்பட்ட இறந்தவரின் உடலின் சில பாகங்கள் பிரதான சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>அதன்படி, இந்த மரணம் தொடர்பான நீதவான் விசாரணையின் போது 22 சாட்சியாளர்களிடமிருந்து சாட்சியங்களைப் பதிவு செய்ய எதிர்பார்ப்பதாகவும், அதில் ஐந்து சாட்சியாளர்களுக்கு அடுத்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்குமாறும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் நீதிமன்றத்தைக் கோரினர்.</p>
<p>இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த நீதவான், அந்த சாட்சியாளர்களை எதிர்வரும் 16 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்குமாறு உத்தரவிட்டார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/nimesh-sathsaras-death-court-orders-investigation/">நிமேஷ் சத்சரவின் மரணம் &#8211; விசாரணைகளுக்கு நீதிமன்றம் உத்தரவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நிமேஷ் சத்சரவின் உடல் மீளவும் தோண்டி எடுக்கப்பட்டது</title>
		<link>https://oruvan.com/sathsara-nimeshs-body-exhumed-again/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 23 Apr 2025 10:10:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#police]]></category>
		<category><![CDATA[Nimesh]]></category>
		<category><![CDATA[Sathsara Nimesh]]></category>
		<category><![CDATA[நிமேஷ் சத்சர]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=18141</guid>

					<description><![CDATA[<p>வெலிக்கடை பொலிஸ் காவலில் இருந்தபோது சந்தேகத்திற்குறிய முறையில் உயிரிழந்த 26 வயதுடைய நிமேஷ் சத்சர என்ற இளைஞனின் உடல் இன்று காலை பிரேத பரிசோதனைகளுக்காக மீளவும் தோண்டி எடுக்கப்பட்டது. பதுளை நீதவான் நுஜித் டி சில்வா மற்றும் இதற்காக நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட மருத்துவக் குழுவின் முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டிருந்தது. இது குறித்த பணிகள் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்ததுடன், 11.40 மணியளவில் நிறைவடைந்திருந்தன. இளைஞனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sathsara-nimeshs-body-exhumed-again/">நிமேஷ் சத்சரவின் உடல் மீளவும் தோண்டி எடுக்கப்பட்டது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>வெலிக்கடை பொலிஸ் காவலில் இருந்தபோது சந்தேகத்திற்குறிய முறையில் உயிரிழந்த 26 வயதுடைய நிமேஷ் சத்சர என்ற இளைஞனின் உடல் இன்று காலை பிரேத பரிசோதனைகளுக்காக மீளவும் தோண்டி எடுக்கப்பட்டது.</p>
<p>பதுளை நீதவான் நுஜித் டி சில்வா மற்றும் இதற்காக நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட மருத்துவக் குழுவின் முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டிருந்தது.</p>
<p>இது குறித்த பணிகள் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்ததுடன், 11.40 மணியளவில் நிறைவடைந்திருந்தன.</p>
<p>இளைஞனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா கடந்த ஒன்பதாம் திகதி உத்தரவிட்டிருந்தார்.</p>
<p>இளைஞனின் மரணம் தொடர்பாக சட்ட மருத்துவ அதிகாரி நடத்திய பிரேத பரிசோதனை திருப்திகரமாக இல்லாததால், உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த மூன்று பேர் கொண்ட நிபுணர் மருத்துவ குழுவை நியமிக்க உத்தரவிடக் கோரி, பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகள் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.</p>
<p>குறித்த மனு உள்ளிட்ட முந்தைய விசாரணையின்போது முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த பின்னர் நீதவான் உடலை தோண்டி எடுக்குமாறு உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.</p>
<p>நீதிமன்றின் உத்தரவின்படி, தலைமை தடயவியல் மருத்துவர் பிரியந்த அமரரத்ன, மூத்த சிறப்பு தடயவியல் மருத்துவர் பி.ஆர். ருவன்புர மற்றும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மூத்த பேராசிரியர் நிபுணர் வைத்தியர் முதித விதானபத்திரண ஆகியோர் நிபுணர் தடயவியல் மருத்துவ குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.</p>
<p>இந்த சம்பவம் தொடர்பான ஆரம்ப விசாரணைகள் கொழும்பு குற்றப்பிரிவால் நடத்தப்பட்டன, ஆனால் பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், விசாரணை ஏப்ரல் நான்காம் திகதி முதல் குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டது.</p>
<p>நாவல பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கடந்த முதலாம் திகதி கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன் பொலிஸ் காவலில் இருந்த போது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக முல்லேரியாவில் உள்ள தேசிய மனநல நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டார்.</p>
<p>அதனை தொடர்ந்து, இரண்டாம் திகதி அதிகாலையில், சந்தேகநபரான இளைஞன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.</p>
<p>The post <a href="https://oruvan.com/sathsara-nimeshs-body-exhumed-again/">நிமேஷ் சத்சரவின் உடல் மீளவும் தோண்டி எடுக்கப்பட்டது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
