<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Sajith Premadasa Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/sajith-premadasa/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/sajith-premadasa/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Thu, 05 Mar 2026 07:42:53 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Sajith Premadasa Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/sajith-premadasa/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>கொழும்பு துறைமுகத்தை நெருங்கும் மற்றொரு ஈரானிய கப்பல்</title>
		<link>https://oruvan.com/another-iranian-ship-approaching-colombo-port/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Mar 2026 07:42:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Iran War]]></category>
		<category><![CDATA[IRIS Dena]]></category>
		<category><![CDATA[Sajith Premadasa]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=46194</guid>

					<description><![CDATA[<p>கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் மற்றொரு ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக திர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்நிலையில், குறித்த கப்பல் தொடர்பில் அரசாங்கம் அறிந்திருக்கிறதா என்பதை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகங்களும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளரும் நேற்று வெளியிட்ட அறிக்கைகளும் ஈரானிய கப்பல் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் மூழ்கடிக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. இந்த நிலையில், இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அப்படி ஒரு தாக்குதல் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/another-iranian-ship-approaching-colombo-port/">கொழும்பு துறைமுகத்தை நெருங்கும் மற்றொரு ஈரானிய கப்பல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் மற்றொரு ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக திர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்நிலையில், குறித்த கப்பல் தொடர்பில் அரசாங்கம் அறிந்திருக்கிறதா என்பதை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p>
<p>நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p>
<p>சர்வதேச ஊடகங்களும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளரும் நேற்று வெளியிட்ட அறிக்கைகளும் ஈரானிய கப்பல் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் மூழ்கடிக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.</p>
<p>இந்த நிலையில், இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அப்படி ஒரு தாக்குதல் நடக்கவில்லை என்று கூறியிருப்பது சிக்கலானது என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அரசாங்கம் உடனடியாக அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.</p>
<p>இலங்கை கடற்படை மேற்கொண்ட உயிர்காக்கும் நடவடிக்கைக்கு அவர் தனது பாராட்டுகளையும் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/another-iranian-ship-approaching-colombo-port/">கொழும்பு துறைமுகத்தை நெருங்கும் மற்றொரு ஈரானிய கப்பல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை &#8211; அரசாங்கம் அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/there-is-no-gas-shortage-in-the-country-government-announces/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 19 Feb 2026 07:58:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Gas Shortage]]></category>
		<category><![CDATA[Sajith Premadasa]]></category>
		<category><![CDATA[Wasantha Samarasinghe]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=45407</guid>

					<description><![CDATA[<p>நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும், லாஃப்ஸ் கேஸ் அதன் விநியோகத்தை தாமதப்படுத்துவதால் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். லாஃப்ஸ் கேஸ் விநியோகம் பல நாட்களாக நிறுத்தப்பட்டிருந்ததாகவும், மக்கள் லிட்ரோ கேஸுக்கு மாற முடிவெடுத்துள்ளதாகவும், இது லிட்ரோ கேஸுக்கும் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சமரசிங்க, லிட்ரோ கேஸ் விநியோகம் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/there-is-no-gas-shortage-in-the-country-government-announces/">நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை &#8211; அரசாங்கம் அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.</p>
<p>எனினும், லாஃப்ஸ் கேஸ் அதன் விநியோகத்தை தாமதப்படுத்துவதால் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.</p>
<p>லாஃப்ஸ் கேஸ் விநியோகம் பல நாட்களாக நிறுத்தப்பட்டிருந்ததாகவும், மக்கள் லிட்ரோ கேஸுக்கு மாற முடிவெடுத்துள்ளதாகவும், இது லிட்ரோ கேஸுக்கும் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சமரசிங்க, லிட்ரோ கேஸ் விநியோகம் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.</p>
<p>இதன்படி, நாளாந்த விநியோகம் 1,200 மெட்ரிக் தொன்னிலிருந்து 1,500 மெட்ரிக் தொன்னாக அதிகரித்துள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>&#8220;எங்களிடம் போதுமான எரிவாயு இருப்பு உள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அடுத்த செவ்வாய்க்கிழமை இரண்டு எரிவாயு கப்பல்கள் வரவுள்ளன.</p>
<p>எதிர்வரும் 25ஆம் திகதி லாஃப்ஸ் கேஸ் விநியோகம் செய்யப்படவுள்ளன. லாஃப்ஸ் கேஸ் நுகர்வோரை ஏமாற்றாமல் தொடர்ச்சியான விநியோகத்தை பராமரிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/there-is-no-gas-shortage-in-the-country-government-announces/">நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை &#8211; அரசாங்கம் அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பிரித்தானிய துணை பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் சந்திப்பு</title>
		<link>https://oruvan.com/british-deputy-prime-minister-and-opposition-leader-sajith-meet/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 18 Feb 2026 05:27:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[David Lammy]]></category>
		<category><![CDATA[Sajith]]></category>
		<category><![CDATA[Sajith Premadasa]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=45309</guid>

					<description><![CDATA[<p>பிரித்தானிய துணை பிரதமர் டேவிட் லாம்மி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. பிரித்தானிய துணை பிரதமர் டேவிட் லாம்மி உள்ளிட்ட குழுவினர் நேற்று இலங்கைக்கு விஜயம் செய்திருந்தனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் பிரித்தானிய துணை பிரதமர் நேற்று சந்திப்பு நடத்தியிருந்தார். இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று சந்தித்துப் பேசியுள்ளார். இதன் போது இருவரும் ஜனநாயக [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/british-deputy-prime-minister-and-opposition-leader-sajith-meet/">பிரித்தானிய துணை பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் சந்திப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பிரித்தானிய துணை பிரதமர் டேவிட் லாம்மி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.</p>
<p>இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.</p>
<p>பிரித்தானிய துணை பிரதமர் டேவிட் லாம்மி உள்ளிட்ட குழுவினர் நேற்று இலங்கைக்கு விஜயம் செய்திருந்தனர்.</p>
<p>ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் பிரித்தானிய துணை பிரதமர் நேற்று சந்திப்பு நடத்தியிருந்தார்.</p>
<p>இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று சந்தித்துப் பேசியுள்ளார்.</p>
<p>இதன் போது இருவரும் ஜனநாயக நிர்வாகம், வர்த்தக விரிவாக்கம் மற்றும் இருதரப்பு மனிதாபிமான ஒத்துழைப்பு குறித்த விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/british-deputy-prime-minister-and-opposition-leader-sajith-meet/">பிரித்தானிய துணை பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் சந்திப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தொழில்முனைவோரைப் பாதுகாக்க வங்கிகளின் மிகை லாபத்தைப் பயன்படுத்துக: சஜித் கோரிக்கை</title>
		<link>https://oruvan.com/use-banks-excess-profits-to-protect-entrepreneurs-sajith-demands/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Feb 2026 02:50:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Sajith Premadasa]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=44502</guid>

					<description><![CDATA[<p>இலங்கையின் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக விளங்கும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோரைப் பாதுகாக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். நாட்டில் சுமார் 11 இலட்சம் தொழில்முனைவோர் காணப்படுவதுடன், அவர்கள் 45 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்குகின்றனர். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இவர்களின் பங்களிப்பு 52% ஆக உள்ள போதிலும், கடந்த கால நெருக்கடிகளால் இத்துறை பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 2022 ஆம் ஆண்டு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/use-banks-excess-profits-to-protect-entrepreneurs-sajith-demands/">தொழில்முனைவோரைப் பாதுகாக்க வங்கிகளின் மிகை லாபத்தைப் பயன்படுத்துக: சஜித் கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையின் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக விளங்கும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோரைப் பாதுகாக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>நாட்டில் சுமார் 11 இலட்சம் தொழில்முனைவோர் காணப்படுவதுடன், அவர்கள் 45 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்குகின்றனர்.</p>
<p>நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இவர்களின் பங்களிப்பு 52% ஆக உள்ள போதிலும், கடந்த கால நெருக்கடிகளால் இத்துறை பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.</p>
<p>2022 ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, சுமார் 2,63,000 தொழில்முயற்சிகள் மூடப்பட்டுள்ளதுடன், 1,50,000 க்கும் அதிகமானவை வங்குரோத்தடைந்துள்ளன.</p>
<p>நாட்டின் கடனைச் செலுத்த 2028 வரை கால அவகாசம் கிடைத்துள்ள போதிலும், இந்தத் தொழில்முனைவோரின் கடன்கள் முறையாக மறுசீரமைக்கப்படவில்லை.</p>
<p>பராட்டே (Parate) சட்ட அமுலாக்கத்தில் தற்காலிக சலுகை வழங்கப்பட்டாலும், இடைப்பட்ட காலத்தில் இவர்களின் கடன் சுமை குறையவில்லை என அவர் கவலை தெரிவித்தார்.</p>
<p>நாடு இக்கட்டான சூழலில் இருந்தபோதும் இலங்கையின் வங்கிக் கட்டமைப்பு மிகை இலாபங்களை ஈட்டியுள்ளதை எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.</p>
<p>இந்த இலாபத்தின் ஒரு பகுதியை, கடன் பொறியில் சிக்கியுள்ள நுண் மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு நிவாரணமாக வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.</p>
<p>ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய 100 மில்லியன் டொலர் நிதி உதவிக்காக நன்றி தெரிவித்த அவர், உள்நாட்டு வங்கிகளும் தமது சமூகப் பொறுப்பை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/use-banks-excess-profits-to-protect-entrepreneurs-sajith-demands/">தொழில்முனைவோரைப் பாதுகாக்க வங்கிகளின் மிகை லாபத்தைப் பயன்படுத்துக: சஜித் கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்</title>
		<link>https://oruvan.com/no-confidence-motion-against-the-prime-minister/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 07 Jan 2026 05:35:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[NPP Gov]]></category>
		<category><![CDATA[Sajith Premadasa]]></category>
		<category><![CDATA[SJB]]></category>
		<category><![CDATA[Sri Lanka Prime Minister]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=42561</guid>

					<description><![CDATA[<p>கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சி முடிவு செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி, இன்று (07 ஆம் திகதி) கையெழுத்து சேகரிப்பைத் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தன்னிச்சையான மற்றும் புரிந்துகொள்ள முடியாத நடத்தை மற்றும் தரம் 06 கல்வி முறை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை ஆகியவற்றின் அடிப்படையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/no-confidence-motion-against-the-prime-minister/">பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சி முடிவு செய்துள்ளது.</p>
<p>நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.</p>
<p>இதன்படி, இன்று (07 ஆம் திகதி) கையெழுத்து சேகரிப்பைத் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.</p>
<p>கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தன்னிச்சையான மற்றும் புரிந்துகொள்ள முடியாத நடத்தை மற்றும் தரம் 06 கல்வி முறை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை ஆகியவற்றின் அடிப்படையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.</p>
<p>நேற்று முன்தினம் (05) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் கல்வி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்மொழியப்பட்டது.</p>
<p>பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.</p>
<p>எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் கயந்த கருணாதிலக, இந்த முன்மொழிவுக்கு மற்ற எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.</p>
<p>அதன்படி, இன்று முதல் தீர்மானத்திற்கான கையொப்பங்களை சேகரிக்கத் தொடங்கவும், இந்த வாரத்திற்குள் நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கவும் முடிவு செய்யப்பட்டதாக எம்.பி. தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/no-confidence-motion-against-the-prime-minister/">பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் &#8211; பிரதமர் உறுதி</title>
		<link>https://oruvan.com/the-executive-presidency-will-be-abolished-prime-minister-confirms/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 19 Dec 2025 06:58:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[NPP]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[Sajith Premadasa]]></category>
		<category><![CDATA[The executive presidency]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=41052</guid>

					<description><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் வாக்குறுதியளிக்கப்பட்டபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதியளித்துள்ளார். முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பின் மூலம் நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளன. புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முந்தைய குழு அறிக்கைகள் மற்றும் பிற திட்டங்கள் தற்போது [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-executive-presidency-will-be-abolished-prime-minister-confirms/">நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் &#8211; பிரதமர் உறுதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் வாக்குறுதியளிக்கப்பட்டபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதியளித்துள்ளார்.</p>
<p>முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பின் மூலம் நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.</p>
<p>எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p>
<p>புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முந்தைய குழு அறிக்கைகள் மற்றும் பிற திட்டங்கள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>புதிய அரசியலமைப்பு வரைவு குறித்த கருத்துரு ஒன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு குறித்து ஆய்வு தொடங்கப்பட்டுள்ளதாகவும், புதிய அரசியலமைப்பை கொண்டு வராமல் அதைச் செய்ய முடியாது என்றும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/the-executive-presidency-will-be-abolished-prime-minister-confirms/">நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் &#8211; பிரதமர் உறுதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நிவாரணப் பணிக்கு இடையூறு &#8211; மன்னிப்பு கோரினார் சஜித் பிரேமதாச</title>
		<link>https://oruvan.com/sajith-premadasa-apologizes-for-hindering-relief-efforts/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 04 Dec 2025 07:39:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[kandy]]></category>
		<category><![CDATA[Relief work]]></category>
		<category><![CDATA[Relief work In Kandy]]></category>
		<category><![CDATA[Sajith Premadasa]]></category>
		<category><![CDATA[SJB]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=39945</guid>

					<description><![CDATA[<p>கண்டி மாநகர சபை வளாகத்தில் தன்னார்வலர்களால் நடத்தப்பட்ட வெள்ள நிவாரண மையத்திற்கு இடையூறு விளைவித்த மாநகர சபை உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின்தலைவரான பிரேமதாச, தனது எக்ஸ் சமூக ஊடகப் பதிவில் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதுடன், இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளார். கண்டி மாவட்டத்தின் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தன்னார்வலர்கள் குழு மேற்கொண்ட [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sajith-premadasa-apologizes-for-hindering-relief-efforts/">நிவாரணப் பணிக்கு இடையூறு &#8211; மன்னிப்பு கோரினார் சஜித் பிரேமதாச</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கண்டி மாநகர சபை வளாகத்தில் தன்னார்வலர்களால் நடத்தப்பட்ட வெள்ள நிவாரண மையத்திற்கு இடையூறு விளைவித்த மாநகர சபை உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார்.</p>
<p>ஐக்கிய மக்கள் சக்தியின்தலைவரான பிரேமதாச, தனது எக்ஸ் சமூக ஊடகப் பதிவில் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதுடன், இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.</p>
<p>கண்டி மாவட்டத்தின் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தன்னார்வலர்கள் குழு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு, சபை உறுப்பினர்களின் &#8220;மோசமான நடத்தை மற்றும் தேவையற்ற செயல்களால்&#8221; ஏற்பட்ட இடையூறுக்காக மன்னிப்பு கோருகின்றேன்.</p>
<p>சமூகங்கள் மனிதாபிமான ஆதரவை நம்பியுள்ள இச்சமயத்தில், சோமே மற்றும் அவரது தன்னார்வக் குழுவின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த உறுப்பினர்களின் நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர் குறிப்பிட்டார்.</p>
<p>அவசரகால நிவாரண முயற்சிகளைப் பலவீனப்படுத்தும் எந்தவொரு செயலையும் கட்சி சகித்துக் கொள்ளாது என்று பிரேமதாச தெரிவித்தார்.<br />
அத்துடன், அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.</p>
<p>சம்பந்தப்பட்ட மாநகர சபை உறுப்பினர்கள் மீது கட்சித் தலைமை கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>The post <a href="https://oruvan.com/sajith-premadasa-apologizes-for-hindering-relief-efforts/">நிவாரணப் பணிக்கு இடையூறு &#8211; மன்னிப்பு கோரினார் சஜித் பிரேமதாச</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தேசிய பேரிடர் நிலையை அறிவியுங்கள் &#8211; ஜனாதிபதியிடம் சஜித் கோரிக்கை</title>
		<link>https://oruvan.com/declare-a-national-disaster-sajith-requests-the-president/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Nov 2025 09:04:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[Anura Kumara Dissanayake]]></category>
		<category><![CDATA[Sajith Premadasa]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=39453</guid>

					<description><![CDATA[<p>தேசிய பேரிடர் நிலைமையை உடனடியாக அறிவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்தார். இன்று நாடாளுமன்ற வளாகத்தில் ஜனாதிபதியை சந்தித்தபோது, ​​அவரிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாக பிரேமதாச நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். &#8220;பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி தேசிய பேரிடர் நிலைமை அறிவிக்கப்பட்டால், பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என்பதால் நான் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாக தெரிவித்துள்ளார். &#8220;தேசிய பேரிடர் சூழ்நிலையை அறிவிப்பதற்கான ஏற்பாடுகளை உருவாக்கும் சட்டங்கள் குறித்து அரசாங்கத்திற்குத் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/declare-a-national-disaster-sajith-requests-the-president/">தேசிய பேரிடர் நிலையை அறிவியுங்கள் &#8211; ஜனாதிபதியிடம் சஜித் கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தேசிய பேரிடர் நிலைமையை உடனடியாக அறிவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்தார்.</p>
<p>இன்று நாடாளுமன்ற வளாகத்தில் ஜனாதிபதியை சந்தித்தபோது, ​​அவரிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாக பிரேமதாச நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.</p>
<p>&#8220;பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி தேசிய பேரிடர் நிலைமை அறிவிக்கப்பட்டால், பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என்பதால் நான் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாக தெரிவித்துள்ளார்.</p>
<p>&#8220;தேசிய பேரிடர் சூழ்நிலையை அறிவிப்பதற்கான ஏற்பாடுகளை உருவாக்கும் சட்டங்கள் குறித்து அரசாங்கத்திற்குத் தெரியாது போல் தெரிகிறது,&#8221; என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/declare-a-national-disaster-sajith-requests-the-president/">தேசிய பேரிடர் நிலையை அறிவியுங்கள் &#8211; ஜனாதிபதியிடம் சஜித் கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பாரியளவு போதைப் பொருள் மீட்பு &#8211; ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரின் பதவி இடைநிறுத்தம்</title>
		<link>https://oruvan.com/massive-drug-seizure-samagi-jana-balawegaya-member-suspended/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Nov 2025 06:46:41 +0000</pubDate>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[#police]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[drugs]]></category>
		<category><![CDATA[pannala]]></category>
		<category><![CDATA[Sajith Premadasa]]></category>
		<category><![CDATA[Samagi Jana Balawegaya]]></category>
		<category><![CDATA[SJB]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=38871</guid>

					<description><![CDATA[<p>தெற்கு கடற்கரையில் பாரிய அளவு போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளரின் உறுப்பினர் பதவியை கட்சி இடைநிறுத்தியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அந்த நபரின் உறுப்பினர் பதவி உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் அடுத்தகட்ட நடவடிக்கையைத் தீர்மானிக்க தனி விசாரணை நடத்தப்படும் என்று அவர் தனது சமூக ஊடக தளமான X இல் தெரிவித்தார். &#8220;ஒரு கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி நமது சமூகத்திற்கு ஒரு புற்றுநோயான போதைப்பொருள் வர்த்தகத்தை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/massive-drug-seizure-samagi-jana-balawegaya-member-suspended/">பாரியளவு போதைப் பொருள் மீட்பு &#8211; ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரின் பதவி இடைநிறுத்தம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தெற்கு கடற்கரையில் பாரிய அளவு போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளரின் உறுப்பினர் பதவியை கட்சி இடைநிறுத்தியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.</p>
<p>அந்த நபரின் உறுப்பினர் பதவி உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் அடுத்தகட்ட நடவடிக்கையைத் தீர்மானிக்க தனி விசாரணை நடத்தப்படும் என்று அவர் தனது சமூக ஊடக தளமான X இல் தெரிவித்தார்.</p>
<p>&#8220;ஒரு கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி நமது சமூகத்திற்கு ஒரு புற்றுநோயான போதைப்பொருள் வர்த்தகத்தை கடுமையாக எதிர்க்கிறது.</p>
<p>இந்த சட்டவிரோத, கண்டிக்கத்தக்க செயலில் ஈடுபடுபவர்களுக்கு மிக உயர்ந்த தண்டனையை வழங்கும் வகையில் எங்கள் சட்டங்களை மறுசீரமைப்பதில் நாங்கள் உறுதியாக நம்புகிறோம்,&#8221; என்று பிரேமதாச மேலும் கூறினார்.</p>
<p>தெற்கு கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட ஒரு மீன்பிடிக் கப்பலில் இருந்து ஹெராயின் மற்றும் ஐஸ் உட்பட 376 கிலோகிராம் போதைப்பொருட்களை இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது.</p>
<p>இதன் மதிப்பு நான்கு பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>இந்த போதைப்பொருட்களை மீட்டது தொடர்பாக பன்னலையைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ளூராட்சி மன்ற வேட்பாளரை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/massive-drug-seizure-samagi-jana-balawegaya-member-suspended/">பாரியளவு போதைப் பொருள் மீட்பு &#8211; ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரின் பதவி இடைநிறுத்தம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தேரர்களை அடிக்க பொலிஸாருக்கு உரிமை இல்லை &#8211; சஜித் வலியுறுத்து</title>
		<link>https://oruvan.com/police-have-no-right-to-beat-up-monks/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Nov 2025 06:29:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[Sajith Premadasa]]></category>
		<category><![CDATA[Trincomalee Issue]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=38538</guid>

					<description><![CDATA[<p>திருகோணமலை விஹாரை பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், புத்தசாசனத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற பொது பாதுகாப்பு அமைச்சின் செலவினத் தலைப்பு மீதான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தின் போது அவர் இவ்வாறு கூறினார். திருகோணமலை விஹாரை பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதற்கு தனது கட்சி ஆதரவளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/police-have-no-right-to-beat-up-monks/">தேரர்களை அடிக்க பொலிஸாருக்கு உரிமை இல்லை &#8211; சஜித் வலியுறுத்து</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>திருகோணமலை விஹாரை பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p>
<p>அத்துடன், புத்தசாசனத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற பொது பாதுகாப்பு அமைச்சின் செலவினத் தலைப்பு மீதான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தின் போது அவர் இவ்வாறு கூறினார்.</p>
<p>திருகோணமலை விஹாரை பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதற்கு தனது கட்சி ஆதரவளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>எவ்வாறாயினும் பௌத்த தேரர்களை அடிக்க பொலிஸாருக்கு உரிமை இல்லை என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர், புத்த சாசனத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/police-have-no-right-to-beat-up-monks/">தேரர்களை அடிக்க பொலிஸாருக்கு உரிமை இல்லை &#8211; சஜித் வலியுறுத்து</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
