<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Sabaragamuwa Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/sabaragamuwa/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/sabaragamuwa/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sat, 23 Aug 2025 13:49:44 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Sabaragamuwa Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/sabaragamuwa/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>சப்ரகமுவ மாகாணத்தில் உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு</title>
		<link>https://oruvan.com/students-in-sabaragamuwa-province-who-achieved-excellent-results-in-advanced-level-examinations-are-commended/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 23 Aug 2025 13:49:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[achieved]]></category>
		<category><![CDATA[Advanced]]></category>
		<category><![CDATA[commended]]></category>
		<category><![CDATA[examinations]]></category>
		<category><![CDATA[Level]]></category>
		<category><![CDATA[Sabaragamuwa]]></category>
		<category><![CDATA[students]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=30469</guid>

					<description><![CDATA[<p>ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் உயர் திறமைகளை வெளிப்படுத்திய சிறந்த மாணவர்களை கௌரவிக்கும் சபரகமுவ மாகாண நிகழ்வு, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று (23) முற்பகல் இரத்தினபுரி மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இங்கு, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 06 பாடப்பிரிவுகளில் உயர் சித்தி பெற்ற முதல் 10 மாணவர்கள் வீதம், 360 மாணவர்களுக்கு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/students-in-sabaragamuwa-province-who-achieved-excellent-results-in-advanced-level-examinations-are-commended/">சப்ரகமுவ மாகாணத்தில் உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் உயர் திறமைகளை வெளிப்படுத்திய சிறந்த மாணவர்களை கௌரவிக்கும் சபரகமுவ மாகாண நிகழ்வு, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று (23) முற்பகல் இரத்தினபுரி மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.</p>
<p>இங்கு, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 06 பாடப்பிரிவுகளில் உயர் சித்தி பெற்ற முதல் 10 மாணவர்கள் வீதம், 360 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபா பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதற்காக ஜனாதிபதி நிதியத்தினால் 36 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.</p>
<p>மாணவர்களிடையே உரையாற்றிய சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, மக்களின் எதிர்கால சுபீட்சத்திற்காக அரச சொத்துக்களைப் பயன்படுத்துவது ஒரு அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும், ஜனாதிபதி நிதியம் தற்போது அந்தப் பொறுப்பை முறையாக நிறைவேற்றி வருவதாகவும் தெரிவித்தார்.</p>
<p>மேலும், நாட்டிற்கு அறிவு, திறன்கள் மற்றும் மனப்பாங்குகளை வளர்த்துக் கொண்ட எதிர்கால தலைமுறை அவசியம் என்றும், தற்போதைய அரசாங்கத்தின் புதிய கல்விக் கொள்கைகள் மூலம் உருவாக்க எதிர்பார்ப்பது, அவ்வாறான ஒரு தலைமுறையை ஆகும் என்றும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.</p>
<p>புத்தசாசன , சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி மாணவர்களிடையே உரையாற்றியதுடன், கடினமான பயணத்திற்குப் பிறகு ஒரு பாரிய சமூக மாற்றத்துடன் நாட்டைப் பொறுப்பேற்ற தற்போதைய அரசாங்கம், ஒரு சிறந்த கல்விப் பரிமாற்ற முன்மொழிவையும் முன்வைத்துள்ளதுடன், அந்தக் கல்வி மாற்றங்களை யதார்த்தமாக்குவதன் மூலம், நாட்டின் பிள்ளைகள், ஒரு அழகான எதிர்காலத்தைப் பெற முடியும் என்றும் தெரிவித்தார்.</p>
<p>சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரும் வைபவத்தில் உரையாற்றினர்.</p>
<p>ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோஷன் கமகே உட்பட ஜனாதிபதி நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், மாவட்ட செயலாளர்கள், அரச அதிகாரிகள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/students-in-sabaragamuwa-province-who-achieved-excellent-results-in-advanced-level-examinations-are-commended/">சப்ரகமுவ மாகாணத்தில் உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் மரணம் &#8211; விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு</title>
		<link>https://oruvan.com/sabaragamuwa-university-students-death-investigation-report-submitted/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 27 Jul 2025 08:12:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Investigation]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Sabaragamuwa]]></category>
		<category><![CDATA[submitted]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[University]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=27707</guid>

					<description><![CDATA[<p>சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒருவர், அண்மையில் பகிடிவதையின் பின்னர் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட குழுவின் அறிக்கை, பல்கலைக்கழக துணைவேந்தரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை அடுத்த வாரம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என சப்ரகமுவ பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சுனில் சாந்த தெரிவித்துள்ளார். அதன்படி, தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த குறித்த மாணவரின் மரணம் தொடர்பில் விசாரணையில் கண்டறியப்பட்ட விடயங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிடும் எனவும் அவர் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sabaragamuwa-university-students-death-investigation-report-submitted/">சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் மரணம் &#8211; விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒருவர், அண்மையில் பகிடிவதையின் பின்னர் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட குழுவின் அறிக்கை, பல்கலைக்கழக துணைவேந்தரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த அறிக்கை அடுத்த வாரம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என சப்ரகமுவ பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சுனில் சாந்த தெரிவித்துள்ளார்.</p>
<p>அதன்படி, தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த குறித்த மாணவரின் மரணம் தொடர்பில் விசாரணையில் கண்டறியப்பட்ட விடயங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிடும் எனவும் அவர் கூறினார்.</p>
<p>சம்பவம் தொடர்பாக சுமார் 70 மாணவர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக குறித்த விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/sabaragamuwa-university-students-death-investigation-report-submitted/">சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் மரணம் &#8211; விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து ஆராய புதிய குழு நியமனம்</title>
		<link>https://oruvan.com/new-committee-appointed-to-investigate-irregularities-at-sabaragamuwa-university/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 15 Jul 2025 04:51:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[appointed]]></category>
		<category><![CDATA[Committee]]></category>
		<category><![CDATA[New]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Sabaragamuwa]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[University]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=26585</guid>

					<description><![CDATA[<p>சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முறைகேடுகளைப் பற்றி ஆராய்வதற்கு புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற, நிர்வாக மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காகவே சுயாதீன விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகம் தொடர்பில் அரசாங்கப் பொறுப்புக் கணக்குகள் குழுவின் (COPE) பரிந்துரைகளைச் செயற்படுத்துவதற்காக நான்கு அங்கத்தவர்களைக் கொண்ட இக்குழு உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவவினால் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/new-committee-appointed-to-investigate-irregularities-at-sabaragamuwa-university/">சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து ஆராய புதிய குழு நியமனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><!--StartFragment --></p>
<p class="pf0"><span class="cf0">சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முறைகேடுகளைப் பற்றி ஆராய்வதற்கு புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.</span></p>
<p class="pf0"><span class="cf0">இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற, நிர்வாக மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காகவே சுயாதீன விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது</span><span class="cf1">.</span></p>
<p class="pf0"><span class="cf0">இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகம் தொடர்பில் அரசாங்கப் பொறுப்புக் கணக்குகள் குழுவின் (</span><span class="cf1">COPE) </span><span class="cf0">பரிந்துரைகளைச் செயற்படுத்துவதற்காக நான்கு அங்கத்தவர்களைக் கொண்ட இக்குழு உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவவினால் நியமிக்கப்பட்டுள்ளது.</span></p>
<p class="pf0"><span class="cf0">இந்த குழுவின் தலைவராக முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி விஜித் கே. மலல்கொட, ருஹுனு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் காமினி சேனாநாயக்க, அரச உடமைகள் மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் டபிள்யு.எம்.சி. பண்டார ஆகியோர் குழு அங்கத்தவர்களாகவும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உதவி கணக்காய்வாளர் ஹஸ்தி பத்திரண அழைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.</span></p>
<p class="pf0"><span class="cf0">மேற்குறிப்பிட்ட சம்பவம் பற்றிய விசாரணை அறிக்கையினை 60 நாட்களுக்குள் கல்வி, உயர் கல்வி, தொழிற்கல்வி அமைச்சிடம் கையளிக்க வேண்டும்.</span></p>
<p>&nbsp;</p>
<p><!--EndFragment --></p>
<p>The post <a href="https://oruvan.com/new-committee-appointed-to-investigate-irregularities-at-sabaragamuwa-university/">சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து ஆராய புதிய குழு நியமனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி</title>
		<link>https://oruvan.com/100mm-rainfall-likely-in-western-sabaragamuwa-and-other-districts/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Jun 2025 06:04:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Rainfall]]></category>
		<category><![CDATA[Sabaragamuwa]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[Western]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=22985</guid>

					<description><![CDATA[<p>தென்மேற்கு பருவமழை காரணமாக,நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இவ்வாறு மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தென் மேற்குப் பகுதியில் மழை வீழ்ச்சி பதிவாவதுடன் அதனை அண்மித்துள்ள கடற்பிராந்தியங்களில் பலத்த காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/100mm-rainfall-likely-in-western-sabaragamuwa-and-other-districts/">100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தென்மேற்கு பருவமழை காரணமாக,நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும்<br />
சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.</p>
<p>இதன்படி, நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இவ்வாறு மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>நாட்டின் தென் மேற்குப் பகுதியில் மழை வீழ்ச்சி பதிவாவதுடன் அதனை அண்மித்துள்ள கடற்பிராந்தியங்களில்<br />
பலத்த காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>வட மாகாணத்திலும், அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>இதனிடையே, பதுளை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p>
<h1 class="inner_header mmfpmf"></h1>
<p>The post <a href="https://oruvan.com/100mm-rainfall-likely-in-western-sabaragamuwa-and-other-districts/">100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்த சம்பவம் &#8211; கைதான மாணவர்களுக்கு விளக்கமறியல்</title>
		<link>https://oruvan.com/sabaragamuwa-university-student-dies-in-accident-arrested-students-remanded/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 05 May 2025 10:00:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[arrested]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Sabaragamuwa]]></category>
		<category><![CDATA[students]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[University]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=19425</guid>

					<description><![CDATA[<p>சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 04 மாணவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 16 ஆம் திகதி வரை குறித்த மாணவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பம் பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்ற மாணவர் ஒருவர் , கடந்த 29 ஆம் திகதி தற்கொலை செய்து கொண்டார். மன அழுத்தம் காரணமாகவே தற்கொலை செய்து கொள்வதாக குறித்த மாணவன் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sabaragamuwa-university-student-dies-in-accident-arrested-students-remanded/">சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்த சம்பவம் &#8211; கைதான மாணவர்களுக்கு விளக்கமறியல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 04 மாணவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p>
<p>இதன்படி, எதிர்வரும் 16 ஆம் திகதி வரை குறித்த மாணவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p>
<p>சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பம் பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்ற மாணவர் ஒருவர் , கடந்த 29 ஆம் திகதி தற்கொலை செய்து கொண்டார்.</p>
<p>மன அழுத்தம் காரணமாகவே தற்கொலை செய்து கொள்வதாக குறித்த மாணவன் கடிதம் எழுதியுள்ளதுடன் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட பகிடிவதை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பொலிஸில் முறைப்பாடளித்துள்ளனர்.</p>
<p>இதனைத் தொடர்ந்து உயர்கல்வி அமைச்சு கடந்த 02 ஆம் திகதி அறிக்கை ஒன்றை வெளியிட்டு, இந்த விடயம் குறித்து முழுமையான விசாரணை நடத்த விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கை கிடைத்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.</p>
<p>இதேவேளை, பல்கலைக்கழகங்களில் பகிடிவதையுடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கும் மாணவர்களை பாதுகாப்பதற்கு ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் அதிகாரியொருவரை நியமிக்க கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.</p>
<p>பல்கலைக்கழக நிர்வாக சபையின் கீழ் செயற்படும் வகையில் அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளதாக பிரதியமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன தெரிவித்திருந்தார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/sabaragamuwa-university-student-dies-in-accident-arrested-students-remanded/">சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்த சம்பவம் &#8211; கைதான மாணவர்களுக்கு விளக்கமறியல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
