<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>representatives Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/representatives/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/representatives/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sat, 11 Oct 2025 12:41:26 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>representatives Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/representatives/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதி இடையே சந்திப்பு</title>
		<link>https://oruvan.com/meeting-between-us-trade-representatives-and-the-president/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 11 Oct 2025 12:40:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[between]]></category>
		<category><![CDATA[Meeting]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[president]]></category>
		<category><![CDATA[representatives]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=35070</guid>

					<description><![CDATA[<p>நாட்டின் முதலீட்டு வாய்ப்புகள், வர்த்தக சூழல் மற்றும் சட்ட நிலைமைகள் குறித்து ஆய்வு செய்யும் நோக்கில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் குழுவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (11) காலை  இந்த சந்திப்பு  இடம்பெற்றுள்ளது. இதன்போது முன்னர் இருந்த முறைகேடுகளை மாற்றி முதலீடுகளுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அந்த சூழலை மேலும் பலப்படுத்த வெளிப்படையான புதிய சட்டங்களை உருவாக்கி வருவதாகவும் ஜனாதிபதி அந்த குழுவுக்கு விளக்கமளித்துள்ளார். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/meeting-between-us-trade-representatives-and-the-president/">அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதி இடையே சந்திப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாட்டின் முதலீட்டு வாய்ப்புகள், வர்த்தக சூழல் மற்றும் சட்ட நிலைமைகள் குறித்து ஆய்வு செய்யும் நோக்கில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் குழுவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.</p>
<p>ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (11) காலை  இந்த சந்திப்பு  இடம்பெற்றுள்ளது.</p>
<p>இதன்போது முன்னர் இருந்த முறைகேடுகளை மாற்றி முதலீடுகளுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அந்த சூழலை மேலும் பலப்படுத்த வெளிப்படையான புதிய சட்டங்களை உருவாக்கி வருவதாகவும் ஜனாதிபதி அந்த குழுவுக்கு விளக்கமளித்துள்ளார்.</p>
<p>அதன்படி, நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என்றும், அவர் சுட்டிகாட்டியுள்ளார்.</p>
<p>அதற்காக, இனவாதம் மற்றும் மதவாதம் எனபவற்றை ஒதுக்கி தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புதல், செயற்திறனான அரச சேவையை உருவாக்குதல், வெளிப்படையான இராஜதந்திர உறவுகள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவற்றின் நோக்கங்களை அடைவதற்காக அரசாங்கம் தொடர்ந்தும் செயல்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/meeting-between-us-trade-representatives-and-the-president/">அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதி இடையே சந்திப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சுற்றுலாத் துறையில் முதலீடு செய்யுமாறு ஜேர்மனுக்கு ஜனாதிபதி அழைப்பு</title>
		<link>https://oruvan.com/president-calls-on-german-tourism-representatives-to-invest-in-tourism-sector/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Jun 2025 13:15:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[German]]></category>
		<category><![CDATA[president]]></category>
		<category><![CDATA[representatives]]></category>
		<category><![CDATA[Tourism]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=23372</guid>

					<description><![CDATA[<p>ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,ஜேர்மனியின் சுற்றுலா மற்றும் பயணத் தொழில் சங்கங்கள் மற்றும் வெளிச்செல்லும் பயணம்/சுற்றுலாத்துறை செயற்பாட்டாளர்கள் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு பேர்லினின் வெல்டொர்ப் எஸ்டோரியா ஹோட்டலில் இன்று (13) முற்பகல் இடம்பெற்றுள்ளது. இலங்கையில் நிலைபேறான சுற்றுலாத் துறைக்காக அரசாங்கம் எடுத்துள்ள சாதகமான நடவடிக்கைகள் குறித்து இங்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி, விசேடமாக சுற்றுலா வசதிகளை அதிகரித்தல், ஊக்குவிப்புத் திட்டங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி, [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/president-calls-on-german-tourism-representatives-to-invest-in-tourism-sector/">சுற்றுலாத் துறையில் முதலீடு செய்யுமாறு ஜேர்மனுக்கு ஜனாதிபதி அழைப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,ஜேர்மனியின் சுற்றுலா மற்றும் பயணத் தொழில் சங்கங்கள் மற்றும் வெளிச்செல்லும் பயணம்/சுற்றுலாத்துறை செயற்பாட்டாளர்கள் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.</p>
<p>இந்த சந்திப்பு பேர்லினின் வெல்டொர்ப் எஸ்டோரியா ஹோட்டலில் இன்று (13) முற்பகல் இடம்பெற்றுள்ளது.</p>
<p>இலங்கையில் நிலைபேறான சுற்றுலாத் துறைக்காக அரசாங்கம் எடுத்துள்ள சாதகமான நடவடிக்கைகள் குறித்து இங்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி, விசேடமாக சுற்றுலா வசதிகளை அதிகரித்தல், ஊக்குவிப்புத் திட்டங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி, நிலைபேறான சுற்றுலா பொறிமுறைகள் மூலம் இலங்கை ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது என்றும் தெரிவித்தார்.</p>
<p>சுற்றுலாத் துறையில் மனித வளங்களை மேம்படுத்துதல், சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பை அதிகரித்தல், கலாசார மற்றும் சூழல்சார் சுற்றுலாத்துறையை<br />
ஊக்குவித்தல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.</p>
<p>இலங்கையில் உள்ள புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.</p>
<p>இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நாடுகளில் ஜெர்மனி தற்போது 04 ஆவது இடத்தில் உள்ளது.</p>
<p>2024 ஆம் ஆண்டில் 136,000 ஜேர்மன் சுற்றுலாப் பயணிகள் இந்நாட்டிற்கு வருகை தந்துள்ளதுடன், இந்த ஆண்டு மே மாதம் வரை அந்நாட்டு சுற்றுலாப் பயணிகள் 69,000 பேர் இங்கு வருகை தந்துள்ளனர்.</p>
<p>வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஜெர்மனிக்கான இலங்கைத் தூதுவர் வருணி முதுகுமாரன உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/president-calls-on-german-tourism-representatives-to-invest-in-tourism-sector/">சுற்றுலாத் துறையில் முதலீடு செய்யுமாறு ஜேர்மனுக்கு ஜனாதிபதி அழைப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>உலக வங்கி பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு</title>
		<link>https://oruvan.com/meeting-between-world-bank-representatives-and-the-prime-minister/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Jan 2025 03:46:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[and the Prime Minister]]></category>
		<category><![CDATA[Meeting between]]></category>
		<category><![CDATA[representatives]]></category>
		<category><![CDATA[World Bank]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=7774</guid>

					<description><![CDATA[<p>உலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான உப தலைவர் மார்டின் ரெய்சர் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்து பிரதான அபிவிருத்தி முன்னுரிமைகள் தொடர்பில் கலந்துரையாடினார். கல்வி, பாலின சமத்துவம் மற்றும் பிராந்திய விடயங்கள், நிலையான முன்னேற்றத்தை ஏற்படுத்தல் மற்றும் தேசிய சவால்களுக்கு முகம்கொடுப்பதற்கான தேவைகள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டது. தொழில்நுட்ப மற்றும் தொழில் கல்வி மற்றும் பயிற்சி ஊடாக (TVET) தரமான கல்வி அணுகலை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடலின் போது பிரதானமாக [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/meeting-between-world-bank-representatives-and-the-prime-minister/">உலக வங்கி பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>உலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான உப தலைவர் மார்டின் ரெய்சர் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்து பிரதான அபிவிருத்தி முன்னுரிமைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.</p>
<p>கல்வி, பாலின சமத்துவம் மற்றும் பிராந்திய விடயங்கள், நிலையான முன்னேற்றத்தை ஏற்படுத்தல் மற்றும் தேசிய சவால்களுக்கு முகம்கொடுப்பதற்கான தேவைகள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டது.</p>
<p>தொழில்நுட்ப மற்றும் தொழில் கல்வி மற்றும் பயிற்சி ஊடாக (TVET) தரமான கல்வி அணுகலை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடலின் போது பிரதானமாக அவதானம் செலுத்தப்பட்டது.</p>
<p>மாணவர்களுக்கு பலதரப்பட்ட தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு TVET இனை பிரதான கல்வியுடன் இணைப்பதன் முக்கியத்துவம் தொடர்பில் இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.</p>
<p>வேலைத்தளங்களில் பாலின சமத்துவம் என்ற சிக்கலுக்குரிய விடயம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.</p>
<p>பொருளாதார செயற்பாடுகளில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்துவதற்கு கொள்கை ரீதியிலான தலையீடு மற்றும் ஒத்துழைப்பு கட்டமைப்புகளின் தேவை குறித்தும் இரு தரப்பும் தமது அங்கீகாரத்தை சுட்டிக்காட்டியது.</p>
<p>கல்வி, பாலின சமத்துவம் மற்றும் பிராந்திய அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கான நிலையான தீர்வுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் இலங்கை மற்றும் உலக வங்கியின் பரஸ்பர உறுதிப்பாடு இந்த கலந்துரையாடலின் ஊடாக வலுப்படுத்தப்பட்டது.</p>
<p>நேபாளம், மாலைதீவு மற்றும் இலங்கைக்கான பிராந்திய நாடுகளின் பணிப்பாளர் டேவிட் சிசிலன் உள்ளிட்ட உலக வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகளும், இலங்கை அரசின் சார்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்ரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, வெளியக வளங்கள் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சமந்த பண்டார வெளிவிவகார அமைச்சின் பொருளாதார விவகாரங்களுக்கான (இரு தரப்பு) சிரேஷ்ட பணிப்பாளர் நாயகம் தர்ஷன எம்.பெரேரா, வெளிவிவகார அமைச்சின் தென்கிழக்காசியா மற்றும் மத்திய ஆசிய பிரிவிற்கான பணிப்பாளர் லஷின்கா தம்முலுகே உள்ளிட்டவர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/meeting-between-world-bank-representatives-and-the-prime-minister/">உலக வங்கி பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கு சட்டத்தரணிகள் சங்கம் அனுப்பிய கடிதம்</title>
		<link>https://oruvan.com/letter-sent-by-the-bar-association-to-representatives-of-parliament/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Wed, 11 Dec 2024 05:35:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#local]]></category>
		<category><![CDATA[Anurakumara dissanayaka]]></category>
		<category><![CDATA[Bar Association]]></category>
		<category><![CDATA[current]]></category>
		<category><![CDATA[Letter]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[of Parliament]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[Policians]]></category>
		<category><![CDATA[representatives]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=2029</guid>

					<description><![CDATA[<p>நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குதல் உள்ளிட்ட நாட்டின் அரசியலமைப்பு மற்றும் நீதித் துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்த்திருத்தங்கள் தொடர்பிலான தமது நிலைப்பாட்டை விளக்கி சட்டத்தரணிகள் சங்கம், புதிய அமைச்சரவை உள்ளிட்ட நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்குதல், நிகழ்நிலை காப்புச் சட்டத்தை இரத்து செய்தல் மற்றும் ஆட்சிமுறை தொடர்பில் தற்போது அவதானிக்கப்படும் சிக்கல்கள் குறித்து அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழக அமைப்பின் சுயாட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்காக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/letter-sent-by-the-bar-association-to-representatives-of-parliament/">நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கு சட்டத்தரணிகள் சங்கம் அனுப்பிய கடிதம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குதல் உள்ளிட்ட நாட்டின் அரசியலமைப்பு மற்றும் நீதித் துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்த்திருத்தங்கள் தொடர்பிலான தமது நிலைப்பாட்டை விளக்கி சட்டத்தரணிகள் சங்கம், புதிய அமைச்சரவை உள்ளிட்ட நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.</p>
<p>பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்குதல், நிகழ்நிலை காப்புச் சட்டத்தை இரத்து செய்தல் மற்றும் ஆட்சிமுறை தொடர்பில் தற்போது அவதானிக்கப்படும் சிக்கல்கள் குறித்து அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p>
<p>பல்கலைக்கழக அமைப்பின் சுயாட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்காக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள சட்டத்தரணிகள் சங்கம், அரச பல்கலைக்கழகங்களை சுதந்திரமாகவும் வலுவாகவும் மாற்றும் சீர்திருத்தங்களைக் கருத்தில் கொள்ளுமாறு சட்டவாக்க சபையை வலியுறுத்துகிறது.</p>
<p>ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, பேராசிரியர் சாவித்திரி குணசேகர, ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரத்தினம், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், பேராசிரியர் தீபிகா உடகம, பேராசிரியர் கமினா குணரத்ன, சட்டத்தரணி கே.டபள்யூ ஜனரஞ்சன, சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரோரா, சட்டத்தரணி அர்மிசா டீகல், சட்டத்தரணி தர்ஸன குருப்பு ஆகியோர் கையெழுத்திட்டனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/letter-sent-by-the-bar-association-to-representatives-of-parliament/">நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கு சட்டத்தரணிகள் சங்கம் அனுப்பிய கடிதம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
