<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>program Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/program/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/program/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Mon, 18 Aug 2025 08:51:35 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>program Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/program/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஆசிரியர் பயிற்சித் திட்டம் தொடர்பில் விசேட அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/special-announcement-regarding-the-teacher-training-program/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 18 Aug 2025 08:51:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[announcement]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[program]]></category>
		<category><![CDATA[Special]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[Teacher]]></category>
		<category><![CDATA[training]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=29844</guid>

					<description><![CDATA[<p>கல்வி சீர்திருத்தங்களை வெற்றிகரமாக செயற்படுத்தும் நோக்கத்துடன், மூன்றாம் தவணை நிறைவடைவதற்கு ஆசிரியர் பயிற்சித் திட்டத்தை நிறைவு செய்ய கல்வி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இந்தப் பயிற்சித் திட்டத்தை மாகாண மட்டத்தில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் அதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே மாகாண கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது, தேசிய கல்வி நிறுவனம் (NIE) பயிற்சியாளர்களுக்கு பயிற்சியளிக்க ஆரம்பித்துள்ளது. முதல் கட்டத்தில் முதல் தர ஆசிரியர்களுக்கு பயிற்சியளிப்பதற்கான பயிற்சியாளர்கள் குழுவிற்கு பயிற்சி அளித்த பின்னர், பயிற்சித் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/special-announcement-regarding-the-teacher-training-program/">ஆசிரியர் பயிற்சித் திட்டம் தொடர்பில் விசேட அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கல்வி சீர்திருத்தங்களை வெற்றிகரமாக செயற்படுத்தும் நோக்கத்துடன், மூன்றாம் தவணை நிறைவடைவதற்கு ஆசிரியர் பயிற்சித் திட்டத்தை நிறைவு செய்ய கல்வி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.</p>
<p>இந்தப் பயிற்சித் திட்டத்தை மாகாண மட்டத்தில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>மேலும் அதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே மாகாண கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>தற்போது, தேசிய கல்வி நிறுவனம் (NIE) பயிற்சியாளர்களுக்கு பயிற்சியளிக்க ஆரம்பித்துள்ளது.</p>
<p>முதல் கட்டத்தில் முதல் தர ஆசிரியர்களுக்கு பயிற்சியளிப்பதற்கான பயிற்சியாளர்கள் குழுவிற்கு பயிற்சி அளித்த பின்னர், பயிற்சித் திட்டம் மாகாண மட்டத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.</p>
<p>இதனைத் தொடர்ந்து, ஆறாம் வகுப்பு ஆசிரியர் பயிற்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p>
<p>இந்த சீர்திருத்தங்களுக்கு இணங்க, கல்வி வெளியீட்டுத் துறை ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கான புதிய பாட அலகுகளை (தொகுதிகள்) அச்சிடுவதையும் ஆரம்பித்துள்ளது.</p>
<p>புதிய பாடத்திட்டத்துடன் தொடர்புடைய பாரம்பரிய பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக இந்தப் புதிய அலகுகள் அறிமுகப்படுத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/special-announcement-regarding-the-teacher-training-program/">ஆசிரியர் பயிற்சித் திட்டம் தொடர்பில் விசேட அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>காணிப்பத்திரம் வழங்கும் ஹிமிகம தேசிய வேலைத்திட்டம் இன்று அங்குரார்ப்பணம்</title>
		<link>https://oruvan.com/himigama-national-land-title-granting-program-launched-today/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 13 Aug 2025 07:15:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Granting]]></category>
		<category><![CDATA[Himigama]]></category>
		<category><![CDATA[Land]]></category>
		<category><![CDATA[launched]]></category>
		<category><![CDATA[national]]></category>
		<category><![CDATA[program]]></category>
		<category><![CDATA[today]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=29318</guid>

					<description><![CDATA[<p>காணிப்பத்திரம் வழங்கும் ஹிமிகம தேசிய வேலைத்திட்டம் இன்று (13) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. கிளிநொச்சி பளை மத்திய கல்லூரி பிரதான மண்டபத்தில் காலை 09 மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பமானது. கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ.லால்காந்த தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறுகிறது. முதற்கட்டத்தின் கீழ் 50 ஆயிரம் காணிப்பத்திரங்களை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கை மகாவலி அதிகார சபை, காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு ஊடாக அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/himigama-national-land-title-granting-program-launched-today/">காணிப்பத்திரம் வழங்கும் ஹிமிகம தேசிய வேலைத்திட்டம் இன்று அங்குரார்ப்பணம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>காணிப்பத்திரம் வழங்கும் ஹிமிகம தேசிய வேலைத்திட்டம் இன்று (13) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.</p>
<p>கிளிநொச்சி பளை மத்திய கல்லூரி பிரதான மண்டபத்தில் காலை 09 மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பமானது.</p>
<p>கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ.லால்காந்த தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறுகிறது.</p>
<p>முதற்கட்டத்தின் கீழ் 50 ஆயிரம் காணிப்பத்திரங்களை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.</p>
<p>இலங்கை மகாவலி அதிகார சபை, காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு ஊடாக அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் வசிக்கும் இதுவரை எவ்வித உறுதிப்பத்திரமும் இல்லாத மக்களுக்கு அவற்றை வழங்குவதே இதன் நோக்கமாகும் என காணி மற்றும் நீர்ப்பாசன பிரதியமைச்சர், கலாநிதி சுசில் ரணசிங்க சுட்டிக்காட்டினார்.</p>
<p>இந்த திட்டத்தை எதிர்வரும் சில ஆண்டுகளுக்கு முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/himigama-national-land-title-granting-program-launched-today/">காணிப்பத்திரம் வழங்கும் ஹிமிகம தேசிய வேலைத்திட்டம் இன்று அங்குரார்ப்பணம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அரச வைத்திசாலைகளின் உள்நோயாளர்களுக்கு  சத்தான உணவை வழங்குவதற்கான விசேட திட்டம்</title>
		<link>https://oruvan.com/special-program-to-provide-nutritious-food-to-in-patients-of-government-hospitals/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 06 Jul 2025 09:11:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[hospitals]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[program]]></category>
		<category><![CDATA[provide]]></category>
		<category><![CDATA[Special]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=25764</guid>

					<description><![CDATA[<p>அரச வைத்திசாலைகளில் உள்நோயாளர்களாக சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு தரமான சத்தான உணவை வழங்குவதற்காக விசேட திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த விசேட வேலைத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கான முன்னோடித் திட்டம் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையை மையமாகக் கொண்டு ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் அமைச்சில் நடைபெற்றது. இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர், “நோயாளர்களுக்கு , சத்தான உணவை வழங்க வேண்டிய அவசியத்துடன் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/special-program-to-provide-nutritious-food-to-in-patients-of-government-hospitals/">அரச வைத்திசாலைகளின் உள்நோயாளர்களுக்கு  சத்தான உணவை வழங்குவதற்கான விசேட திட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அரச வைத்திசாலைகளில் உள்நோயாளர்களாக சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு தரமான சத்தான உணவை வழங்குவதற்காக விசேட திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த விசேட வேலைத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கான முன்னோடித் திட்டம் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையை மையமாகக் கொண்டு ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p>
<p>இது தொடர்பான கலந்துரையாடல் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் அமைச்சில் நடைபெற்றது.</p>
<p>இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,</p>
<p>“நோயாளர்களுக்கு , சத்தான உணவை வழங்க வேண்டிய அவசியத்துடன் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் ஆர்பிக்கப்படும் இந்த முன்னோடித் திட்டம்,<br />
எதிர்காலத்தில் நாட்டின் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் செயற்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம்</p>
<p>அரச வைத்தியசாலைகளில் உள்ள நோயாளர்களுக்கு உணவு மற்றும் பானங்களை வழங்குவதற்காக சுகாதார அமைச்சகம் ஆண்டுதோறும் பெரும் தொகையைச் செலவிடுகிறது என்றாலும், அந்தப் பணம் நியாயமாகச் செலவிடப்படுகிறதா என்பது குறித்து கவலைகள் உள்ளன ” என்றார்</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/special-program-to-provide-nutritious-food-to-in-patients-of-government-hospitals/">அரச வைத்திசாலைகளின் உள்நோயாளர்களுக்கு  சத்தான உணவை வழங்குவதற்கான விசேட திட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த “Child First“ திட்டம்</title>
		<link>https://oruvan.com/child-first-program-to-ensure-the-safety-of-children/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 14 Jun 2025 05:27:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Child First]]></category>
		<category><![CDATA[children]]></category>
		<category><![CDATA[ensure]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[program]]></category>
		<category><![CDATA[safety]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=23409</guid>

					<description><![CDATA[<p>குழந்தைகளைப் பாதுகாப்பது சமூகப் பொறுப்பு மற்றும் காலத்தின் தேவை என்பதைக் கருத்திற்கொண்டு, இலங்கை பொலிஸ் சிறுவர் பாதுகாப்பை நோக்கிச் செயற்பட“Child First” என்ற புதிய திட்டத்தை செயற்படுத்தியுள்ளது. ஆரம்ப நிகழ்வு நேற்று காலை மொறட்டுவை பௌத்த மத மண்டபத்தில், கல்கிசை பொலிஸ் பிரிவை மையமாகக் கொண்டு, சமூக பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவிற்கு பொறுப்பான பெண் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிம்ஷானி ஜசிங்கராச்சியின் தலைமையில் இடம்பெற்றது. குழந்தைப் பாதுகாப்பு என்பது பாதுகாவலர்களின் பொறுப்பு” என்ற [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/child-first-program-to-ensure-the-safety-of-children/">சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த “Child First“ திட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>குழந்தைகளைப் பாதுகாப்பது சமூகப் பொறுப்பு மற்றும் காலத்தின் தேவை என்பதைக் கருத்திற்கொண்டு, இலங்கை பொலிஸ் சிறுவர் பாதுகாப்பை நோக்கிச் செயற்பட“Child First” என்ற புதிய திட்டத்தை செயற்படுத்தியுள்ளது.</p>
<p>ஆரம்ப நிகழ்வு நேற்று காலை மொறட்டுவை பௌத்த மத மண்டபத்தில், கல்கிசை பொலிஸ் பிரிவை மையமாகக் கொண்டு, சமூக பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவிற்கு பொறுப்பான பெண் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிம்ஷானி ஜசிங்கராச்சியின் தலைமையில் இடம்பெற்றது.</p>
<p>குழந்தைப் பாதுகாப்பு என்பது பாதுகாவலர்களின் பொறுப்பு” என்ற கருப்பொருளில், சமூகப் பொலிஸ்பிரிவின் மூலம், குழந்தைகளைப் பராமரிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இலங்கை பொலிஸ் தொடர்ச்சியான திட்டங்களைத் முன்னெடுத்துள்ளது.</p>
<p>சிறுவர் துஷ்பிரயோகம் புறக்கணிப்படுதல் மற்றும் பின்தொடர்தல் இல்லாமை காரணமாக குழந்தைகள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதைக்கு ஆளான சம்பவங்கள் பல கடந்த காலங்களில் பதிவாகியுள்ளதை கருத்திற்கொண்டும் குழந்தைகளைப் பாதுகாக்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/child-first-program-to-ensure-the-safety-of-children/">சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த “Child First“ திட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நாளை ஆரம்பமாகும் “க்ளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டம்</title>
		<link>https://oruvan.com/clean-sri-lanka-program-begins-tomorrow/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Tue, 31 Dec 2024 06:36:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[“Clean Sri Lanka”]]></category>
		<category><![CDATA[Begins]]></category>
		<category><![CDATA[program]]></category>
		<category><![CDATA[tomorrow]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=4673</guid>

					<description><![CDATA[<p>புத்தாண்டுக்கான கடமைகள் ஆரம்பிக்கும் நாளை (01) அனைத்து அரச நிறுவனங்களிலும் உத்தியோகபூர்வ வைபவம் இடம்பெறும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சின் செயலாளர் எஸ்.அலோக பண்டார மூலம் அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டப்பூர்வ சபைகளின் தலைவர்களுக்கு அறிவிக்கும் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய வருடத்தில் “க்ளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்துடன் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுத்துறை மற்றும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/clean-sri-lanka-program-begins-tomorrow/">நாளை ஆரம்பமாகும் “க்ளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>புத்தாண்டுக்கான கடமைகள் ஆரம்பிக்கும் நாளை (01) அனைத்து அரச நிறுவனங்களிலும் உத்தியோகபூர்வ வைபவம் இடம்பெறும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.</p>
<p>அமைச்சின் செயலாளர் எஸ்.அலோக பண்டார மூலம் அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டப்பூர்வ சபைகளின் தலைவர்களுக்கு அறிவிக்கும் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>புதிய வருடத்தில் “க்ளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்துடன் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>பொதுத்துறை மற்றும் தனியார் துறையுடன் இணைந்து தூய்மையான இலங்கை திட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளை (01) ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.</p>
<p>அதற்கமைய அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களும் முழு அரச சேவை ஊழியர்களின் பங்களிப்புடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறும் பணிகளுக்கு சமாந்தரமாக தமது பணியிடங்களில் பணிகளை ஆரம்பிக்க வேண்டுமென பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.</p>
<p>“க்ளீன் ஸ்ரீலங்கா” நிகழ்ச்சித் திட்டத்தின் தேசிய வைபவத்தை அனைத்து அரச மற்றும் தனியார் இலத்திரனியல் அலைவரிசைகள் ஊடாக ஒலிபரப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், அனைத்து அரச நிறுவனங்களின் ஊழியர்களும் இதனைக் காணும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அதன்படி, அனைத்து அரச ஊழியர்களும் “க்ளீன் ஸ்ரீலங்கா” உறுதிமொழியை வழங்க நேரலையில் இணைய சேவண்டும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தனது சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/clean-sri-lanka-program-begins-tomorrow/">நாளை ஆரம்பமாகும் “க்ளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
