<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Prisons Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/prisons/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/prisons/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sat, 14 Jun 2025 06:19:25 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Prisons Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/prisons/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>சிறைச்சாலைகள் திணைக்கள உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் தொடர்பில் CID விசாரணை</title>
		<link>https://oruvan.com/cid-investigates-assets-of-senior-prisons-department-officials/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 14 Jun 2025 06:19:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CID]]></category>
		<category><![CDATA[Department]]></category>
		<category><![CDATA[investigates]]></category>
		<category><![CDATA[officials]]></category>
		<category><![CDATA[Prisons]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=23415</guid>

					<description><![CDATA[<p>சிறைச்சாலைகள் திணைக்கள உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் தொடர்பிலான விசாரணைகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிவில் குழுக்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது வங்கிக் கணக்குகள், சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முழுமையான தகவல்கள் தொடர்பிலான வெளிப்படுத்தல்களுக்கு நீதிமன்ற உத்தரவுகள் பெறப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் பாதாள உலக நபர்களுக்கும் இடையிலான தொடர்புகள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/cid-investigates-assets-of-senior-prisons-department-officials/">சிறைச்சாலைகள் திணைக்கள உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் தொடர்பில் CID விசாரணை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சிறைச்சாலைகள் திணைக்கள உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் தொடர்பிலான விசாரணைகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>சிவில் குழுக்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அவர்களது வங்கிக் கணக்குகள், சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மேலும் முழுமையான தகவல்கள் தொடர்பிலான வெளிப்படுத்தல்களுக்கு நீதிமன்ற உத்தரவுகள் பெறப்படும் எனவும்<br />
கூறப்பட்டுள்ளது.</p>
<p>சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் பாதாள உலக நபர்களுக்கும் இடையிலான தொடர்புகள் மற்றும் ஜனாதிபதி மன்னிப்புகளை தவறாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.</p>
<p>நீண்டகாலமாக பணியாற்றிய அதிகாரிகளின் இடமாற்றங்கள் உட்பட துறை மறுசீரமைப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p>
<p>இதனிடையே, நீதி அமைச்சின் செயலாளர் உட்பட உயர் அரச அதிகாரிகள் பலர், ஜனாதிபதி மன்னிப்பை கைதிகளை விடுவிப்பதற்காக தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுவது தொடர்பாக விசாரிக்கப்படுவார்கள் என பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல கூறினார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/cid-investigates-assets-of-senior-prisons-department-officials/">சிறைச்சாலைகள் திணைக்கள உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் தொடர்பில் CID விசாரணை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் நீதிமன்றில் முன்னிலை</title>
		<link>https://oruvan.com/suspended-commissioner-general-of-prisons-appears-in-court/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 11 Jun 2025 05:25:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Commissioner]]></category>
		<category><![CDATA[Court]]></category>
		<category><![CDATA[Prisons]]></category>
		<category><![CDATA[suspended]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=23073</guid>

					<description><![CDATA[<p>பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனிய, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை முன்னிலையாகியுள்ளார். அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரை சட்டவிரோதமாக விடுவித்தது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாக பயன்படுத்தி சிறைக் கைதி ஒருவரை விடுதலை செய்தமை தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மேற்கொண்டு வரும் விசாரணைகளின் பின்னணியில், சிறைச்சாலைகள் ஆணையாளர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (09) கைது செய்யப்பட்டார். அவரை நேற்று [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/suspended-commissioner-general-of-prisons-appears-in-court/">பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் நீதிமன்றில் முன்னிலை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனிய, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை முன்னிலையாகியுள்ளார்.</p>
<p>அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரை சட்டவிரோதமாக விடுவித்தது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.</p>
<p>ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாக பயன்படுத்தி சிறைக் கைதி ஒருவரை விடுதலை செய்தமை தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மேற்கொண்டு வரும் விசாரணைகளின் பின்னணியில், சிறைச்சாலைகள் ஆணையாளர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (09) கைது செய்யப்பட்டார்.</p>
<p>அவரை நேற்று செவ்வாய்க்கிழமை, புதுக்கடை இலக்கம் 01 நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p>
<p>இதேவேளை, அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) இரவு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து<br />
நேற்று முன்தினம் (09) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.</p>
<p>இதன்போது அவரையும் இன்று (11) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/suspended-commissioner-general-of-prisons-appears-in-court/">பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் நீதிமன்றில் முன்னிலை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஜனாதிபதி பொது மன்னிப்பு விவகாரம் &#8211; சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு விளக்கமறியல்</title>
		<link>https://oruvan.com/commissioner-general-of-prisons-remanded/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Jun 2025 08:44:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Commissioner]]></category>
		<category><![CDATA[General]]></category>
		<category><![CDATA[Prisons]]></category>
		<category><![CDATA[remanded]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=23008</guid>

					<description><![CDATA[<p>பணிநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய நாளை புதன்கிழமை வரை (11) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று செவ்வாய்க்கிழமை, புதுக்கடை இலக்கம் 01 நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாக பயன்படுத்தி சிறைக் கைதி ஒருவரை விடுதலை செய்தமை தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மேற்கொண்டு வரும் விசாரணைகளின் பின்னணியில், சிறைச்சாலைகள் ஆணையாளர் நேற்று திங்கட்கிழமை (09) கைது செய்யப்பட்டார். இதேவேளை, அனுராதபுரம் சிறைச்சாலை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/commissioner-general-of-prisons-remanded/">ஜனாதிபதி பொது மன்னிப்பு விவகாரம் &#8211; சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு விளக்கமறியல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பணிநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய நாளை புதன்கிழமை வரை (11) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p>
<p>அவர் இன்று செவ்வாய்க்கிழமை, புதுக்கடை இலக்கம் 01 நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p>
<p>ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாக பயன்படுத்தி சிறைக் கைதி ஒருவரை விடுதலை செய்தமை தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மேற்கொண்டு வரும் விசாரணைகளின் பின்னணியில், சிறைச்சாலைகள் ஆணையாளர் நேற்று திங்கட்கிழமை (09) கைது செய்யப்பட்டார்.</p>
<p>இதேவேளை, அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) இரவு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து<br />
நேற்று (09) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது அவரை நாளை (11) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/commissioner-general-of-prisons-remanded/">ஜனாதிபதி பொது மன்னிப்பு விவகாரம் &#8211; சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு விளக்கமறியல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நியமனம்</title>
		<link>https://oruvan.com/appointment-of-acting-commissioner-general-of-prisons/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 09 Jun 2025 12:20:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[acting]]></category>
		<category><![CDATA[Appointment]]></category>
		<category><![CDATA[Commissioner]]></category>
		<category><![CDATA[General]]></category>
		<category><![CDATA[Prisons]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=22951</guid>

					<description><![CDATA[<p>சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் நிஷான் தனசிங்க, பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி கைதி ஒருவர் விடுவிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்துவதற்காக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டார். இன்று (09) பிற்பகல் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. &#160; &#160;</p>
<p>The post <a href="https://oruvan.com/appointment-of-acting-commissioner-general-of-prisons/">பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நியமனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் நிஷான் தனசிங்க, பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.</p>
<p>ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி கைதி ஒருவர் விடுவிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்துவதற்காக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டார்.</p>
<p>இன்று (09) பிற்பகல் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/appointment-of-acting-commissioner-general-of-prisons/">பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நியமனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
