<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Prime Minister Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/prime-minister/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/prime-minister/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sun, 12 Oct 2025 10:49:18 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Prime Minister Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/prime-minister/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பிரதமர் பீஜிங் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்</title>
		<link>https://oruvan.com/prime-minister-arrives-at-beijing-international-airport/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 12 Oct 2025 10:49:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Airport]]></category>
		<category><![CDATA[arrives]]></category>
		<category><![CDATA[Beijing]]></category>
		<category><![CDATA[International]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Prime Minister]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=35154</guid>

					<description><![CDATA[<p>பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சீனாவின் பீஜிங் (Beijing) சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். ​​தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாக அமைச்சர் கவோ ஷூமின் (Cao Shumin) அவரை வரவேற்றார். பிரதமர் முதல்நாளன்று தடைசெய்யப்பட்ட நகரம் மற்றும் சீனப் பெருஞ்சுவரைப் பார்வையிடுவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. “ஒரு பகிரப்பட்ட எதிர்காலம்: பெண்களின் முழுமையான வளர்ச்சிக்கான புதிய மற்றும் துரிதப்படுத்தப்பட்ட செயன்முறை” என்ற கருப்பொருளின் கீழ் பெய்ஜிங்கில் நடைபெறும் இந்த உயர்மட்ட உச்சிமாநாட்டை சீன அரசும் ஐ.நா. பெண்களும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/prime-minister-arrives-at-beijing-international-airport/">பிரதமர் பீஜிங் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சீனாவின் பீஜிங் (Beijing) சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.</p>
<p>​​தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாக அமைச்சர் கவோ ஷூமின் (Cao Shumin) அவரை வரவேற்றார்.</p>
<p>பிரதமர் முதல்நாளன்று தடைசெய்யப்பட்ட நகரம் மற்றும் சீனப் பெருஞ்சுவரைப் பார்வையிடுவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>“ஒரு பகிரப்பட்ட எதிர்காலம்: பெண்களின் முழுமையான வளர்ச்சிக்கான புதிய மற்றும் துரிதப்படுத்தப்பட்ட செயன்முறை” என்ற கருப்பொருளின் கீழ் பெய்ஜிங்கில் நடைபெறும் இந்த உயர்மட்ட உச்சிமாநாட்டை சீன அரசும் ஐ.நா. பெண்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர்.</p>
<p>பிரதமரின் இந்த விஜயத்தின் போது, ​​பாலின சமத்துவம், பெண்கள் அதிகாரமளித்தல் மற்றும் உள்ளடக்கிய கொள்கை சீர்திருத்தங்களில் இலங்கையின் முன்னேற்றத்தை எடுத்துரைக்கும் முக்கிய உரையை ஹரிணி அமரசூரிய ஆற்றவுள்ளார்.</p>
<p>இரு நாடுகளுக்கும் இடையேயான சமூக மேம்பாடு, கல்வி மற்றும் பெண்கள் தலைமையிலான தொழில்முனைவோர் ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் வகையில், சீன ஜனாதிபதி சி ஜின்பிங் மற்றும் பிரதமர் லி கியாங் ஆகியோருடன் இருதரப்பு கலந்துரையாடல்களையும் அவர் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>பெண்கள், குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் சமூக அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் பிரதிநிதிகள் பிரதமருடன் சென்றுள்ளனர்.</p>
<p><img fetchpriority="high" decoding="async" class="alignleft size-full wp-image-35156" src="https://oruvan.com/wp-content/uploads/2025/10/PM-2.jpg" alt="" width="1011" height="539" srcset="https://oruvan.com/wp-content/uploads/2025/10/PM-2.jpg 1011w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/PM-2-400x213.jpg 400w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/PM-2-650x347.jpg 650w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/PM-2-250x133.jpg 250w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/PM-2-768x409.jpg 768w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/PM-2-150x80.jpg 150w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/PM-2-50x27.jpg 50w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/PM-2-100x53.jpg 100w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/PM-2-200x107.jpg 200w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/PM-2-300x160.jpg 300w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/PM-2-350x187.jpg 350w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/PM-2-450x240.jpg 450w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/PM-2-500x267.jpg 500w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/PM-2-550x293.jpg 550w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/PM-2-800x427.jpg 800w" sizes="(max-width: 1011px) 100vw, 1011px" /></p>
<p>The post <a href="https://oruvan.com/prime-minister-arrives-at-beijing-international-airport/">பிரதமர் பீஜிங் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>துஷ்பிரயோகம் செய்யப்பட்ட ஜனாதிபதி நிதியத்தை சரியான திசைக்கு கொண்டு வந்துள்ளோம் &#8211; பிரதமர்</title>
		<link>https://oruvan.com/we-have-brought-the-misused-presidential-fund-in-the-right-direction-prime-minister/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 15 Sep 2025 05:12:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[direction]]></category>
		<category><![CDATA[Fund]]></category>
		<category><![CDATA[Presidential]]></category>
		<category><![CDATA[Prime Minister]]></category>
		<category><![CDATA[right]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=32649</guid>

					<description><![CDATA[<p>கடந்த ஆட்சியின் போது, அதிகாரத்திலிருந்த குழுக்களால் ஜனாதிபதி நிதியம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த அரசாங்கத்தினால் சரியான திசைக்கு கொண்டு வர முடிந்ததாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். மத்திய மாகாணத்தில் க.பொ.த உயர்தரத்தில் சிறந்து பெறுபேறு பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்வு கண்டி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (14) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர், “ஜனாதிபதி நிதியம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/we-have-brought-the-misused-presidential-fund-in-the-right-direction-prime-minister/">துஷ்பிரயோகம் செய்யப்பட்ட ஜனாதிபதி நிதியத்தை சரியான திசைக்கு கொண்டு வந்துள்ளோம் &#8211; பிரதமர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கடந்த ஆட்சியின் போது, அதிகாரத்திலிருந்த குழுக்களால் ஜனாதிபதி நிதியம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருந்த நிலையில்<br />
இந்த அரசாங்கத்தினால் சரியான திசைக்கு கொண்டு வர முடிந்ததாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.</p>
<p>மத்திய மாகாணத்தில் க.பொ.த உயர்தரத்தில் சிறந்து பெறுபேறு பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்வு<br />
கண்டி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (14) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்<br />
போதே அவர் இதனைக் கூறினார்.</p>
<p>இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,</p>
<p>“ஜனாதிபதி நிதியம் நிறுவப்பட்டதற்கான உண்மையான நோக்கம் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகிறது. தொலைதூர கிராமங்களில் வாழும் மக்களுக்கு வசதிகளை வழங்க ஜனாதிபதி நிதியம் தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது.</p>
<p>மருத்துவ உதவிக்கு அப்பாற்பட்ட ஒரு திட்டத்தை செயல்படுத்த ஜனாதிபதி நிதியம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது, மாணவர்களின் கல்விக்கு உதவும் ஒரு திட்டத்தை செயற்படுத்துவதன் மூலம், அறிவு நிறைந்த சிறந்த எதிர்கால மனித வளத்தை உருவாக்க பங்களிக்கும்.</p>
<p>ஒரே கட்டமைப்பின் கீழ் இருக்கும் கல்வி முறைக்குப் பதிலாக, பல்வேறு துறைகளைப் பார்க்கும் மற்றும் திறந்த மனதைக் கொண்ட மனித வளத்தை உருவாக்க புதிய கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்தத் தயாராக இருக்கிறோம்<br />
இது மாணவர்கள் தங்கள் கனவுகளை நனவாக்க உதவும்” என்றார்.</p>
<p>இந்த நிகழ்வில், கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களைச் சேர்ந்த 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 06 பாடப் பிரிவுகளின் கீழ் உயர் சித்திகளைப் பெற்ற முதல் 10 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபா புலமைப்பரிசில் வழங்கப்பட்டது. ஜனாதிபதி நிதியம் இதற்காக 36.1 மில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/we-have-brought-the-misused-presidential-fund-in-the-right-direction-prime-minister/">துஷ்பிரயோகம் செய்யப்பட்ட ஜனாதிபதி நிதியத்தை சரியான திசைக்கு கொண்டு வந்துள்ளோம் &#8211; பிரதமர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தனியார் பல்கலைக்கழக பட்டங்கள் தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவிப்பு</title>
		<link>https://oruvan.com/prime-minister-states-that-studies-have-been-conducted-regarding-private-university-degrees/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 15 Jun 2025 07:40:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[degrees]]></category>
		<category><![CDATA[Prime Minister]]></category>
		<category><![CDATA[Private]]></category>
		<category><![CDATA[University]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=23535</guid>

					<description><![CDATA[<p>தனியார் பல்கலைக்கழகங்களின் கல்வியியல் பட்டங்களின் தரம் தொடர்பில் முறையான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சு வளாகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே பிரதமர் இதனை தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “இலங்கையில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் இணைந்த உயர்கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் கல்வியியல் பட்டங்களின் தரம் தொடர்பில் கல்வி அமைச்சு முறையான ஆய்வை முன்னெடுத்துள்ளது. இந்த நிறுவனங்களில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/prime-minister-states-that-studies-have-been-conducted-regarding-private-university-degrees/">தனியார் பல்கலைக்கழக பட்டங்கள் தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தனியார் பல்கலைக்கழகங்களின் கல்வியியல் பட்டங்களின் தரம் தொடர்பில் முறையான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.</p>
<p>இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சு வளாகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.</p>
<p>இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,</p>
<p>“இலங்கையில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் இணைந்த உயர்கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் கல்வியியல் பட்டங்களின் தரம் தொடர்பில் கல்வி அமைச்சு முறையான ஆய்வை முன்னெடுத்துள்ளது.</p>
<p>இந்த நிறுவனங்களில் கல்வியியல் பட்டம் பெற்ற பட்டதாரிகளின் தகுதிகள், குறிப்பாக இலங்கை ஆசிரியர் சேவையில் நியமனம் பெறுவதற்கான தகுதி மற்றும் பொருத்தப்பாடு தொடர்பாக சிக்கல்கள் எழுந்துள்ளன.</p>
<p>அண்மைய ஆசிரியர் நியமனங்கள் முந்தைய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர் சேவை விதிமுறைகளுக்கு இணங்கவே மேற்கொள்ளப்பட்டன.</p>
<p>எனினும், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் கல்வியியல் பட்டங்களின் தரம் மற்றும் நம்பகத்தன்மை தற்போது கல்வி அமைச்சின் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.</p>
<p>எதிர்காலத்தில் ஆசிரியர் சேவைக்கான நியமனங்கள் இந்த தர ஆய்வின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும்” என்றார்.</p>
<p>இந்த சந்திப்பில் பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, கல்வி அமைச்சின் பதில் செயலாளர் அமல் எதிரிசூரிய உள்ளிட்ட மூத்த அமைச்சு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/prime-minister-states-that-studies-have-been-conducted-regarding-private-university-degrees/">தனியார் பல்கலைக்கழக பட்டங்கள் தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பிரதமரை சந்தித்த ஐரோப்பிய ஒன்றியக் குழு</title>
		<link>https://oruvan.com/eu-delegation-meets-prime-minister/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 06 May 2025 06:54:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[delegation]]></category>
		<category><![CDATA[eu]]></category>
		<category><![CDATA[Prime Minister]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=19491</guid>

					<description><![CDATA[<p>பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, GSP+ கண்காணிப்புப் பணியின் ஒரு பகுதியாக, ஐரோப்பிய வெளிவிவகார சேவையின் தெற்காசியப் பிரிவின் தலைவர் சார்லஸ் வைட்லியை, நேற்று திங்கட்கிழமை (05) சந்தித்தார். ஐரோப்பிய ஒன்றியக் குழுவை வரவேற்ற பிரதமர், குறிப்பாக GSP+ சட்டகத்தின் ஊடாக, ஐரோப்பிய ஒன்றியத்துடனான கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார். வறுமை ஒழிப்பு, டிஜிட்டல் பரிமாற்றம் மற்றும் “Clean Sri Lanka” திட்டம் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமைகள் குறித்து இந்தக் கலந்துரையாடலின் போது [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/eu-delegation-meets-prime-minister/">பிரதமரை சந்தித்த ஐரோப்பிய ஒன்றியக் குழு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, GSP+ கண்காணிப்புப் பணியின் ஒரு பகுதியாக, ஐரோப்பிய வெளிவிவகார சேவையின் தெற்காசியப் பிரிவின் தலைவர் சார்லஸ் வைட்லியை, நேற்று திங்கட்கிழமை (05) சந்தித்தார்.</p>
<p>ஐரோப்பிய ஒன்றியக் குழுவை வரவேற்ற பிரதமர், குறிப்பாக GSP+ சட்டகத்தின் ஊடாக, ஐரோப்பிய ஒன்றியத்துடனான கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார்.</p>
<p>வறுமை ஒழிப்பு, டிஜிட்டல் பரிமாற்றம் மற்றும் “Clean Sri Lanka” திட்டம் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமைகள் குறித்து இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.</p>
<p>கலந்துரையாடலின் போது, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகள் குறித்து பிரதமர் குறிப்பாக வலியுறுத்தியதுடன், போதைப்பொருள் கடத்தல், மனித கடத்தல் போன்றவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான சட்டத்தை இயற்றுவது குறித்தும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட தற்போதைய சட்ட சீர்திருத்தங்கள் குறித்தும் கவனப்படுத்தினார்.</p>
<p>இலங்கை அறிமுகப்படுத்தியுள்ள புதிய கொள்கைகளை, குறிப்பாக GSP+ பொறிமுறையின் முக்கிய நோக்கங்களுடன் இணங்கிச்செல்லும் கொள்கைகளை ஐரோப்பிய ஒன்றியக் குழு வரவேற்றது. GSP+ வரிச் சலுகைகளுக்காக மீளவும் விண்ணப்பம் செய்யும் முறை குறித்த வழிகாட்டுதலை அவர்கள் வழங்கியதுடன், இலங்கையின் முறையான அபிவிருத்தி முயற்சிகளை ஆதரிப்பதற்கான தமது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தினர்.</p>
<p>இந்த உரையாடலின் போது சர்வதேச நாணய நிதியத்தின் பங்கேற்பு மற்றும் பெண்களின் அரசியல் மற்றும் பொருளாதார பங்கேற்பை அதிகரிப்பதன் முக்கியத்துவம் குறித்து மேலும் கலந்துரையாடப்பட்டது. தொழிற்படையில் அதிக பெண்களை ஈர்க்கும் வகையில் குழந்தை பராமரிப்பு சேவைகள், முதியோர் பராமரிப்பு மற்றும் போக்குவரத்து போன்ற ஆதரவு முறைமைகளை மேம்படுத்துவதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.</p>
<p>பொருளாதாரம், கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறைகள் மூலம் இலங்கையுடனான உறவுகளை மேம்படுத்துவதில் ஐரோப்பிய ஒன்றியம் கவனம் செலுத்துவதாக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் கார்மென் மொரேனோ இதன் போது தெரிவித்தார்.</p>
<p>பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, வெளிவிவகார அமைச்சின் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்கப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுகீஸ்வர குணரத்ன உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/eu-delegation-meets-prime-minister/">பிரதமரை சந்தித்த ஐரோப்பிய ஒன்றியக் குழு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு</title>
		<link>https://oruvan.com/meeting-between-japanese-defense-minister-and-prime-minister/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 04 May 2025 09:23:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[between]]></category>
		<category><![CDATA[Defense]]></category>
		<category><![CDATA[Japanese]]></category>
		<category><![CDATA[Meeting]]></category>
		<category><![CDATA[Minister]]></category>
		<category><![CDATA[Prime Minister]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=19329</guid>

					<description><![CDATA[<p>ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நகாதானி, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை அலரிமாளிகையில் சந்தித்தார். மேலும் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்புத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டது.நீண்டகால இருதரப்பு நட்புறவு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. இந்தோ-பசுபிக் பிராந்தியம் முழுவதும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான முயற்சிகளுக்கு ஜப்பானின் ஆதரவை ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் உறுதிப்படுத்தினார். கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிராந்திய உறவுகளில் இலங்கையின் மூலோபாய முக்கியத்துவத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார். நாட்டின் வளர்ச்சித் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/meeting-between-japanese-defense-minister-and-prime-minister/">ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நகாதானி, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை அலரிமாளிகையில் சந்தித்தார்.</p>
<p>மேலும் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்புத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டது.நீண்டகால இருதரப்பு நட்புறவு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.</p>
<p>இந்தோ-பசுபிக் பிராந்தியம் முழுவதும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான முயற்சிகளுக்கு ஜப்பானின்<br />
ஆதரவை ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் உறுதிப்படுத்தினார்.</p>
<p>கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிராந்திய உறவுகளில் இலங்கையின் மூலோபாய முக்கியத்துவத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.</p>
<p>நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஜப்பானிய அரசாங்கம், குறிப்பாக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கு பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.</p>
<p>வெளிப்படைத்தன்மை, பொருளாதார சீர்திருத்தம் மற்றும் தேசிய மாற்றத்திற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.</p>
<p>காலநிலை மாற்றம், மனிதாபிமான உதவி மற்றும் கடல்சார் பாதுகாப்பு போன்ற பொறுப்புகளை உள்ளடக்கியதாக இலங்கையின் பாதுகாப்புப் படைகளின் பங்கை விரிவுபடுத்துவதற்கான அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வை குறித்தும் பிரதமர் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.</p>
<p>வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா உள்ளிட்ட ஐந்து முக்கிய துறைகளில் இராஜதந்திர உறவுகளை மேலும் விரிவுபடுத்தவும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.</p>
<p>இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமாட்டா உட்பட ஜப்பான் மற்றும் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/meeting-between-japanese-defense-minister-and-prime-minister/">ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் வாழும் நாட்டை அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டும் &#8211; பிரதமர்</title>
		<link>https://oruvan.com/we-must-pass-on-a-country-that-lives-in-peace-and-harmony-to-the-next-generation-prime-minister/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 21 Apr 2025 10:16:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Prime Minister]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=17856</guid>

					<description><![CDATA[<p>அனைத்து பிரஜைகளும் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் வாழும் நாட்டை அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டியது அவசியம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். வன்னி தேர்தல் மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் மனிக் பாம் சனசமூக அபிவிருத்தி நிலையம் மற்றும் உக்குளங்குளம் விளையாட்டு மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், பொதுமக்களின் விவகாரங்கள் குறித்து அரசாங்கம் அக்கறையுடன் உள்ளது. எமது வரலாற்றில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/we-must-pass-on-a-country-that-lives-in-peace-and-harmony-to-the-next-generation-prime-minister/">அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் வாழும் நாட்டை அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டும் &#8211; பிரதமர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அனைத்து பிரஜைகளும் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் வாழும் நாட்டை அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டியது அவசியம் என<br />
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.</p>
<p>வன்னி தேர்தல் மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் மனிக் பாம் சனசமூக அபிவிருத்தி நிலையம் மற்றும் உக்குளங்குளம் விளையாட்டு மைதானத்தில்<br />
நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.</p>
<p>இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,</p>
<p>பொதுமக்களின் விவகாரங்கள் குறித்து அரசாங்கம் அக்கறையுடன் உள்ளது. எமது வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான பெண் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்.</p>
<p>முன்னர் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 5 வீதத்திற்கும் குறைவான பெண்களே பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டனர். ஆனால் இந்த நாட்டின் சனத்தொகையில் 52 வீதமானோர் பெண்கள்.</p>
<p>இந்த நாட்டில் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதிலும், குடும்ப அலகைப் பராமரிப்பதிலும், சமூகத்தைப் பராமரிப்பதிலும் சிறப்பாகப் பணியாற்றும் பெண்களின் பிரதிநிதித்துவம் எம்மிடம் மிகக் குறைவாகவே உள்ளது. எனவே அடுத்த தேர்தலில் வன்னி மாவட்டத்திலிருந்து சகோதர உறுப்பினர்களை மட்டுமல்ல, சகோதரிகளான உறுப்பினர்களையும் நாடாளுமன்றத்திற்கு அனுப்புமாறு நாங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.</p>
<p>வவுனியா தற்போது அபிவிருத்தியடைந்து வரும் நகரமாக உள்ளது. உள்ளூராட்சி மன்றத்தினால் நடக்க வேண்டிய விடயங்கள் நடைபெற வேண்டும். கிராமத்தின் வளர்ச்சியில் உள்ளூராட்சி மன்றம் செயற்றிரனுடன் தலையிட வேண்டும்.</p>
<p>வடபகுதி மக்களுக்கு கல்வி மிகவும் முக்கியமானது என்பதை நாங்கள் அறிவோம். நீங்கள் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறீர்கள். பொதுவாக, நாட்டில் கல்வி வீணடிக்கப்பட்டு பலவீனப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. குறிப்பாக வடக்குப் பகுதி கல்வித் துறைக்கு போதுமான கவனம் செலுத்தப்படாததால், ஏனைய பகுதிகளை விட மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.</p>
<p>இதனிடையே மற்றுமொரு பயங்கரமான விடயம் பற்றி அறிந்தேன். இளைஞர் யுவதிகள் கல்வியின் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து வருகிறது. போதைப்பொருள் மற்றும் மது இப்போது எல்லா இடங்களிலும் சாதாரணமாக கிடைக்கிறது. இவற்றில் இருந்து விலகி இளைஞர்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு இங்கே வேறு வழிகள் இல்லை.</p>
<p>விஞ்ஞானம், கலை, நாடகம் போன்ற துறைகளில் வளர்ச்சி இன்மையால் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கான வழியை இழந்துவிட்டனர். எனவே இதற்கு ஒரு பெரிய தலையீடு தேவை என்பதை உணர்ந்தேன்.</p>
<p>ஊழல் இல்லாத ஒரு குழுவை நீங்கள் தெரிவுசெய்தால், நாங்கள் உங்களுக்காக ஒதுக்கும் பணத்தை பயமின்றி ஒப்படைக்க முடியும். உங்கள் கிராமத்தின் வளர்ச்சிக்கு இதைப் பயன்படுத்த முடியும். &#8220;அதனால்தான் உங்கள் தெரிவு எங்களுக்கு முக்கியமானது&#8221; என பிரதமர் கூறினார்.</p>
<p>இந்த சந்திப்புகளில் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். திலகநாதன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஜெகதீஸ்வரன் ஆகியோர் உட்பட பல உள்ளூராட்சித் தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் பிரதேச வாசிகள் கலந்து கொண்டனர்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/we-must-pass-on-a-country-that-lives-in-peace-and-harmony-to-the-next-generation-prime-minister/">அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் வாழும் நாட்டை அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டும் &#8211; பிரதமர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வளைகுடா நாட்டின் உயரிய விருது</title>
		<link>https://oruvan.com/indian-prime-minister-narendra-modi-receives-gulf-countrys-highest-award/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Sun, 22 Dec 2024 11:56:38 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Gulf country's highest award]]></category>
		<category><![CDATA[Indian]]></category>
		<category><![CDATA[Mubarak Al Kabeer]]></category>
		<category><![CDATA[Narendra Modi]]></category>
		<category><![CDATA[Prime Minister]]></category>
		<category><![CDATA[receives]]></category>
		<category><![CDATA[The Order of]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=3665</guid>

					<description><![CDATA[<p>இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக குவைத்துக்கு சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, வளைகுடா நாட்டின் உயரிய விருதான ‘தி ஆர்டர் ஆஃப் முபாரக் அல்-கபீர்’ (The Order of Mubarak Al Kabeer) விருது இன்று (22) வழங்கப்பட்டது. இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை வலுப்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய பங்களிப்புக்காக குவைத் இந்த கெளரவ விருதினை அவருக்கு வழங்கியது. குவைத்தின் பயான் அரண்மனையில் வைத்து குவைத்தின் அமீர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/indian-prime-minister-narendra-modi-receives-gulf-countrys-highest-award/">இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வளைகுடா நாட்டின் உயரிய விருது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக குவைத்துக்கு சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, வளைகுடா நாட்டின் உயரிய விருதான ‘தி ஆர்டர் ஆஃப் முபாரக் அல்-கபீர்’ (The Order of Mubarak Al Kabeer) விருது இன்று (22) வழங்கப்பட்டது.</p>
<p>இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை வலுப்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய பங்களிப்புக்காக குவைத் இந்த கெளரவ விருதினை அவருக்கு வழங்கியது.</p>
<p>குவைத்தின் பயான் அரண்மனையில் வைத்து குவைத்தின் அமீர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல் சபாவிடம் இருந்து பிரதமர் மோடி இந்த விருதினை பெற்றார்.</p>
<p>‘தி ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர்’ என்பது குவைத்தின் மாவீரர் பட்டமாகும்.</p>
<p>இது நாட்டுத் தலைவர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் அரச குடும்பங்களின் உறுப்பினர்களுக்கு நட்பின் அடையாளமாக வழங்கப்படுகிறது.</p>
<p>இதற்கு முன்னர், பில் கிளிண்டன்,இளவரசர் சார்லஸ் மற்றும் ஜார்ஜ் புஷ் போன்ற உலகத் தலைவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.</p>
<p>“குவைத்தின் உயரிய அமீர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல் சபாஹ் அவர்களால் முபாரக் அல்-கபீர் விருது வழங்கப்பட்டதற்கு நான் பெருமைப்படுகிறேன். இந்த கௌரவத்தை இந்திய மக்களுக்கும் இந்தியாவிற்கும் குவைத்துக்கும் இடையிலான வலுவான நட்புறவுக்காக நான் அர்ப்பணிக்கிறேன்” என தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/indian-prime-minister-narendra-modi-receives-gulf-countrys-highest-award/">இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வளைகுடா நாட்டின் உயரிய விருது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
