<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Pillayan Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/pillayan/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/pillayan/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Fri, 16 May 2025 03:30:44 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Pillayan Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/pillayan/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி 100 மில்லியன் ரூபா இழப்பீடு கோரும் பிள்ளையான்</title>
		<link>https://oruvan.com/pillayan-seeks-rs-100-million-in-compensation-alleging-violation-of-fundamental-rights/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 16 May 2025 02:57:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Pillaiyan]]></category>
		<category><![CDATA[Pillayan]]></category>
		<category><![CDATA[சிவநேசதுரை சந்திரகாந்தன்]]></category>
		<category><![CDATA[பிள்ளையான்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=20361</guid>

					<description><![CDATA[<p>பிள்ளையான் என்று பரவலாக அறியப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், இலங்கை உச்ச நீதிமன்றத்தில் ஒரு அடிப்படை உரிமைகள் (FR) மனுவைத் தாக்கல் செய்துள்ளார். குற்றப் புலனாய்வுத் துறையால் (CID)தான் சமீபத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதன் சட்டப்பூர்வத்தன்மையை எதிர்த்து அவர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவின் ஊடாக தான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது என்று அறிவிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தனது அடிப்படை உரிமைகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிற்காக 100 மில்லியன் ரூபா [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/pillayan-seeks-rs-100-million-in-compensation-alleging-violation-of-fundamental-rights/">அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி 100 மில்லியன் ரூபா இழப்பீடு கோரும் பிள்ளையான்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பிள்ளையான் என்று பரவலாக அறியப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், இலங்கை உச்ச நீதிமன்றத்தில் ஒரு அடிப்படை உரிமைகள் (FR) மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.</p>
<p>குற்றப் புலனாய்வுத் துறையால் (CID)தான் சமீபத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதன் சட்டப்பூர்வத்தன்மையை எதிர்த்து அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.</p>
<p>இந்த மனுவின் ஊடாக தான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது என்று அறிவிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p>
<p>மேலும் தனது அடிப்படை உரிமைகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிற்காக 100 மில்லியன் ரூபா இழப்பீடும் கோரியுள்ளார்.</p>
<p>பிள்ளையான் கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி மட்டக்களப்பில் வைத்து குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் 90 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.</p>
<p>எவ்வாறாயினும், பிள்ளையான் கைது செய்யப்பட்டதற்கான குறிப்பிட்ட காரணங்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பகிரங்கமாக வெளியிடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>தனது அடிப்படை உரிமைகள் மனுவில், தனது கைது மற்றும் தடுத்து வைக்கப்பட்டது அரசியல் நோக்கம் கொண்டது என்றும் போதுமான சட்ட அடிப்படை இல்லை என்றும் பிள்ளையான் வலியுறுத்துகிறார்.</p>
<p>குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நடவடிக்கைகள் அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட தனது அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>இந்த அடிப்படை உரிமை மீறலை உறுதிப்படுத்தும், அதேவேளை, அடிப்படை உரிமைகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிற்காக 100 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/pillayan-seeks-rs-100-million-in-compensation-alleging-violation-of-fundamental-rights/">அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி 100 மில்லியன் ரூபா இழப்பீடு கோரும் பிள்ளையான்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பிள்ளையானை பற்றி பேசாவிட்டால் களுவாஞ்சிக்குடி அஷ்ரப்பிற்கு தூக்கம் வராது &#8211; கருணா</title>
		<link>https://oruvan.com/kaluvanchikudi-ashrap-wont-be-able-to-sleep-if-we-dont-talk-about-pillaiyaan-karuna/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 02 May 2025 03:28:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Karuna Amman]]></category>
		<category><![CDATA[Pillayan]]></category>
		<category><![CDATA[கருணா]]></category>
		<category><![CDATA[பிள்ளையான்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=19061</guid>

					<description><![CDATA[<p>களுவாஞ்சிக்குடி அஷ்ரப்பிற்கு பிள்ளையானைப் பற்றிப் பேசாவிட்டால் அவருக்கு நித்திரை வருவதில்லை என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னனியின் தலைவர் கருணா அம்மான் தெரிவித்துள்ளார். வாழைச்சேனையில் இடம்பெற்ற கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் மே தின கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொது செயலாளர் பூ.பிரசாந்தன் மற்றும் அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் த.தஜீவரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இதன்போது கருத்துத் தெரிவித்த கருணா அம்மான். களுவாஞ்சிக்குடி அஷ்ரப்பின் வாயில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/kaluvanchikudi-ashrap-wont-be-able-to-sleep-if-we-dont-talk-about-pillaiyaan-karuna/">பிள்ளையானை பற்றி பேசாவிட்டால் களுவாஞ்சிக்குடி அஷ்ரப்பிற்கு தூக்கம் வராது &#8211; கருணா</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>களுவாஞ்சிக்குடி அஷ்ரப்பிற்கு பிள்ளையானைப் பற்றிப் பேசாவிட்டால் அவருக்கு நித்திரை வருவதில்லை என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னனியின் தலைவர் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.</p>
<p>வாழைச்சேனையில் இடம்பெற்ற கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் மே தின கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொது செயலாளர் பூ.பிரசாந்தன் மற்றும் அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் த.தஜீவரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.</p>
<p>இதன்போது கருத்துத் தெரிவித்த கருணா அம்மான்.</p>
<p>களுவாஞ்சிக்குடி அஷ்ரப்பின் வாயில் வரும் வார்த்தை பிள்ளையான் பிள்ளையான், பிள்ளையான பற்றி பேசாவிட்டால் அவருக்கு நித்திரை வருவதில்லை என தெரிவித்தார்.</p>
<p>அரசியல் பழிவாங்கலினால் திட்டமிட்டு பிள்ளையானை கைது செய்து செய்தார்கள். இந்த உலகம் முழுவதும் பிள்ளையான் பிள்ளையான் என கத்துகின்றனர்” என்றார்.</p>
<p>இதன்போது பிள்ளையான தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொது செயலாளர் பூ.பிரசாந்தன் கருத்து தெரிவிக்கையில்,</p>
<p>கடந்த 72 வருடங்களுக்கு மேலாக வீட்டு சின்னத்திற்கு வாக்களித்து வாக்களித்து வீடு கூட இல்லாமல் தமிழ் மக்களை நடுத்தெருவிற்கு கொண்டு வந்தவர்கள்தான் தமிழரசுக்கட்சியினர்.</p>
<p>போராளிகளின் புதை குழிகளில் நின்று கேவலமாக வாக்கு கேட்கும் நீங்கள் போராளிகளின் குடும்பங்களை பாதுகாக்க முடியாமல் நிற்கின்றார்கள்” என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/kaluvanchikudi-ashrap-wont-be-able-to-sleep-if-we-dont-talk-about-pillaiyaan-karuna/">பிள்ளையானை பற்றி பேசாவிட்டால் களுவாஞ்சிக்குடி அஷ்ரப்பிற்கு தூக்கம் வராது &#8211; கருணா</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பிள்ளையான் சிறையில் இருப்பது கொடுமையானது &#8211; கருணா ஆதங்கம்</title>
		<link>https://oruvan.com/it-is-cruel-that-pillayan-is-in-prison-karuna-anger/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 01 May 2025 03:23:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[karuna]]></category>
		<category><![CDATA[Pillayan]]></category>
		<category><![CDATA[கருணா]]></category>
		<category><![CDATA[கருணா பிள்ளையான்]]></category>
		<category><![CDATA[பிள்ளையான்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=18977</guid>

					<description><![CDATA[<p>பிள்ளையான் சிறையில் இருப்பது கொடுமையான விடயமாகும் என முன்னாள் பிரதியமைச்சரும், தமிர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான வினாயகமூர்த்தி முரளிதரன்(கருணாஅம்மான்) தெரிவித்துள்ளார். ஏற்கனவே இல்லாத பிரச்சனையில் நான்கு வருடங்கள் சிறையிலேயே இருந்தவர் நிரபராதியாக வெளிய வந்தார். அவ்வளவு காலத்திற்கும் யார் பதில் சொல்வது? அதேபோன்று தான் தற்போதும் அவருக்கு நடந்துள்ளது. அதற்காக வேண்டி வெளிநாட்டில் இருக்கின்ற ஊதுகுழர்கள் கத்திக்கொண்டு இருப்பார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார். உள்ளூராட்சி தேர்தல் பரப்புரை கூட்டமொன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசுகையில், [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/it-is-cruel-that-pillayan-is-in-prison-karuna-anger/">பிள்ளையான் சிறையில் இருப்பது கொடுமையானது &#8211; கருணா ஆதங்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பிள்ளையான் சிறையில் இருப்பது கொடுமையான விடயமாகும் என முன்னாள் பிரதியமைச்சரும், தமிர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான வினாயகமூர்த்தி முரளிதரன்(கருணாஅம்மான்) தெரிவித்துள்ளார்.</p>
<p>ஏற்கனவே இல்லாத பிரச்சனையில் நான்கு வருடங்கள் சிறையிலேயே இருந்தவர் நிரபராதியாக வெளிய வந்தார். அவ்வளவு காலத்திற்கும் யார் பதில் சொல்வது?</p>
<p>அதேபோன்று தான் தற்போதும் அவருக்கு நடந்துள்ளது. அதற்காக வேண்டி வெளிநாட்டில் இருக்கின்ற ஊதுகுழர்கள் கத்திக்கொண்டு இருப்பார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>உள்ளூராட்சி தேர்தல் பரப்புரை கூட்டமொன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசுகையில்,</p>
<p>கிழக்கு மாகாணத்திலே முதன் முதலாக மாகாண சபையைக் கட்டி எழுப்பி அதிலே முதல் முதலமைச்சராக பிள்ளையான் பதவி வகித்து அதனுடாக பாரிய அபிவிருத்திகளை செய்திருந்தார்.</p>
<p>அதன் பின்னர்தான் கல்வி அபிவிருத்தி உள்ளிட்ட அனைத்து அபிவிருத்திகளும் கிழக்கில் இடம்பெற்றன. பின்னர் நான் மத்திய அரசாங்கத்தில் இருந்து கொண்டு பல வீட்டுத்திட்டங்களையும், வீதிகள், பாலங்கள், என பல அவிருத்திட்டங்களை செய்திருந்தேன்.</p>
<p>அதுபோல் வியாழேந்திரன் அவர்கள் மத்திய அரசாங்கத்தில் இருந்தபோது பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை செய்திருந்தார்.</p>
<p>இவ்வாறு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை செய்து விட்டுதான் நாங்கள் தற்போது இந்த உள்ளுராட்சி மன்றத்தில் நமது பிரதிநிதிகளை களம் இறக்கி இருக்கின்றோம்.</p>
<p>எனவே மக்கள் தற்போது கிடைத்திருக்கின்ற வாய்ப்பை தவற விடக்கூடாது. ஏனெனில் பல பிரச்சனைகள் நம் மத்தியில் காணப்படுகின்றன. ஒரு நபர் வயல் செய்வதற்காக பல மக்கள் பாவிக்கின்ற குளத்தை உடைக்கின்றார்கள்.</p>
<p>மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் ஒருவரும் சென்று அதனை பார்வையிடவில்லை. இவ்வாறானவர்கள் நமக்கு எதற்கு? தேர்தல் காலத்தில் மேய்சல் தரைப் பிரச்சினையைத் தீர்த்து வைப்போம் என தெரிவிப்பார்கள்.</p>
<p>தேர்தலில் வெற்றி பெற்றதும் அந்தப் பக்கமே அவர்கள் போகவில்லை. இவர்களை நம்பி வாக்களித்ததுதான் மீதமாக உள்ளது, இதற்காக வேண்டித்தான் நாம் கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளோம்.</p>
<p>இதனை எமது மக்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான ஒரு அத்திவாரம் தற்போது போடப்பட்டுள்ளது. மக்கள் இவ்விடயத்தில் விழிப்பாக இருந்து செயல்பட வேண்டும்.</p>
<p>தவறான பிரசாரங்களை எடுத்து விடுவார்கள், இதனை நம்பி மக்கள் ஏமாந்து விடக்கூடாது. தற்போது நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும், இதனை ஏனையோருக்கும் தெளிவாக்க வேண்டும்.</p>
<p>இலங்கை அரசாங்கத்தில் ஓர் விதி போன்று ஒன்று உள்ளது. அரசாங்கம் மாறி மாறி வருகின்ற போது முன்னை அரசாங்கத்தில் இருப்பவர்களை பிடித்து கைது செய்வது விதி போன்ற உள்ளது.</p>
<p>தற்போது அரசாங்கத்தில் இருப்பவர்கள் அடுத்த முறை வருகின்ற அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு அனைவரும் உள்ளே அனுப்பப்படுவார்கள். நானும் உள்ளே இருந்து வந்தவன்தான், இவை அனைத்தும் அரசியல் பழி வாங்கல்கள்.</p>
<p>இவை எமது மக்களையும் எமது இருப்புக்களையும் ஒருபோதும் பாதிக்கப் போவதில்லை. இதை பற்றி நாம் அலட்டிக் கொள்ள வேண்டிய தேவையும் இல்லை. ஆனால் எவ்வகையான தியாகங்களை செய்தவர்கள் என்பதை எனது மக்கள் சிந்திக்க வேண்டும்.</p>
<p>பிள்ளையான் தற்போது சிறையில் இருப்பது கொடுமையான விடயமாகும். ஏற்கனவே இல்லாத பிரச்சனையில் நான்கு வருடங்கள் சிறையிலேயே இருந்தவர். அப்போது நிரபராதி என வெளிய வந்தவர்.</p>
<p>அவ்வளவு காலத்திற்கும் யார் பதில் சொல்வது. அது போன்றுதான் தற்போதும் அவருக்கு நடைபெற்று இருக்கின்றது. அதற்காக வேண்டி வெளிநாட்டில் இருக்கின்ற ஊதுகுழர்கள் கத்திக்கொண்டு இருப்பார்கள்.</p>
<p>இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பெரும்பான்மையான மக்கள் வாக்களித்து எமது உறுப்பினர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும். அது கிழக்கு மாகாணத்திற்குரிய ஒரு அத்திவாரமாகும்.</p>
<p>தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி என்பது கிழக்கு மாகாண மக்களுக்காக முதன்முதலாக உருவாக்கப்பட்ட ஒரு கட்சியாகும். அக்கட்சியின் சின்னம்தான் படகு சின்னமாகும். அதன் ஊடாக கிழக்கு மாகாணத்தை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் நமது நோக்கம்.</p>
<p>அம்பாறை மாவட்டத்திலேயே 60 கிராமங்கள் இல்லாமல் போய்விட்டது. மட்டக்களப்பில் தளவாய்க் கிராமமும் இல்லாமல் போய்விட்டது. அதற்கு எல்லாம் துணிந்தவன் முன்வர வேண்டும்.</p>
<p>நாங்கள் துணிந்துதான் நிற்கின்றோம். தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற ஒன்று இல்லை. அவர்களுக்கு தலைவரும் இல்லை. தலைமை போட்டிக்கு வழக்கு வைத்து ஆளுக்கு ஆள் சண்டை பிடிக்கிறார்கள்.</p>
<p>வடக்கு மக்கள் அவர்களை விரட்டியுள்ளார்கள். அவர்களை, கிழக்கிலும், விரட்டி அடிக்க வேண்டும். அவர்கள் அரசாங்கத்தின் முகவர்களாக இருந்து செயற்பட்டவர்கள். இதனை வடக்கு மக்கள் நன்கு அறிந்துவிட்டார்கள்.</p>
<p>கிழக்கு மாகாண மக்களும் இதனை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதை நான் கூறிக் கொள்கின்றேன். ஆகவே எமது வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/it-is-cruel-that-pillayan-is-in-prison-karuna-anger/">பிள்ளையான் சிறையில் இருப்பது கொடுமையானது &#8211; கருணா ஆதங்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>விடுதலைப் புலிகளின் குற்றச் செயல்களுக்கு பிள்ளையானே வாழும் சாட்சி &#8211; கம்மன்பில</title>
		<link>https://oruvan.com/pillayan-is-a-living-witness-to-the-crimes-of-the-ltte-udaya-gammanpila/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 16 Apr 2025 09:22:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CID]]></category>
		<category><![CDATA[NPP]]></category>
		<category><![CDATA[Pillayan]]></category>
		<category><![CDATA[Udaya Gammanpila]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=17554</guid>

					<description><![CDATA[<p>தமிழீழ விடுதலைப் புலிகள் வலுக்கட்டாயமாக சிறுவர் போராளிகளை இணைத்துக்கொண்டமைக்கு பிள்ளையான் ஒரு வாழும் சான்றாக உள்ளார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பிள்ளையான் என்கின்ற சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்தித்தது குறித்து இன்று (16) பிவித்துரு ஹெல உறுமய கட்சி தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இன்று நான் நடத்தும் செய்தியாளர் சந்திப்பு என் வாழ்நாளில் நான் ஒருபோதும் எதிர்பார்க்காத ஒன்று. நான் பிள்ளையானை ஒரு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/pillayan-is-a-living-witness-to-the-crimes-of-the-ltte-udaya-gammanpila/">விடுதலைப் புலிகளின் குற்றச் செயல்களுக்கு பிள்ளையானே வாழும் சாட்சி &#8211; கம்மன்பில</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழீழ விடுதலைப் புலிகள் வலுக்கட்டாயமாக சிறுவர் போராளிகளை இணைத்துக்கொண்டமைக்கு பிள்ளையான் ஒரு வாழும் சான்றாக உள்ளார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.</p>
<p>குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பிள்ளையான் என்கின்ற சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்தித்தது குறித்து இன்று (16) பிவித்துரு ஹெல உறுமய கட்சி தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.</p>
<p>இன்று நான் நடத்தும் செய்தியாளர் சந்திப்பு என் வாழ்நாளில் நான் ஒருபோதும் எதிர்பார்க்காத ஒன்று. நான் பிள்ளையானை ஒரு அரசியல்வாதியாக சந்திக்கவில்லை. ஒரு சட்டத்தரணியாகவே சந்தித்தேன்.</p>
<p>நான் எனது அரசியல் வாழ்க்கையையும் தொழில் வாழ்க்கையையும் தனித்தனியாக வைத்திருக்கிறேன். அதனால்தான் நான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குச் செல்வதற்கு முன்பும் சரி, பின்பும் சரி, அதைப் பற்றி ஊடகங்களுக்குச் சொல்லவில்லை.</p>
<p>நான் பிள்ளையானைச் சந்தித்ததை ஊடகங்களுக்குச் சொல்ல வேண்டாம் என்று குற்றப் புலனாய்வுத் திணைக்கள நிர்வாக அதிகாரி என்னிடம் கேட்டுக்கொண்டார். அப்போதும் எனக்கு சட்டத்தரணிகளின் நெறிமுறைகள் தெரியும்&#8221; என்று அவர்களிடம் கூறினேன்.</p>
<p>ஆனால் அடுத்து நடந்ததுதான் வரலாற்றில் இதற்கு முன் கண்டிராத வகையில் காவல்துறை அரசியல்மயமாக்கப்பட்டதற்கு சிறந்த உதாரணம் என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.</p>
<p>இந்த அரசாங்கத்தின் தலைவர்கள், நாட்டின் சட்டத்தை அப்பட்டமாக மீறி, முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அல்லது பிள்ளையானை கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.</p>
<p>பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்படும்போது, ​​கைது செய்யப்பட்டமைக்கான காரணத்தைக் கூறும் ஆவணம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அதைச் செய்யவில்லை.</p>
<p>மேலும், ஒரு சட்டத்தரணி தன்னுடன் இந்த விடயத்தைப் பற்றி விவாதிக்க வாய்ப்பு கோரினால், அவருக்கு அது வழங்கப்பட வேண்டும். அதுவும் நிராகரிக்கப்பட்டது.</p>
<p>மேலும், அவர்களது குடும்பத்தினருடனும் உறவினர்களுடனும் பேச அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றாலும், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.</p>
<p>எவ்வாறாயினும், பிள்ளையானின் சட்டத்தரணியாக அவரை நான் 30 நிமிடங்கள் சந்தித்துப் பேசியிருந்தேன். பிள்ளையான் என்னிடம் கண்ணீர் பெருக்கெடுத்து பேசினார்.</p>
<p>“நான் புலிகளிடமிருந்து பிரிந்து என் உயிரைப் பணயம் வைத்து புலிகளைத் தோற்கடித்தேன். அப்போது புலிகள் பக்கம் போராடிய சிலர் இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். சிலர் வெற்றிகரமான தொழிலதிபர்கள்.</p>
<p>சிலர் அரசு சாரா நிறுவனத் தலைவர்கள். அவர்கள் சமூகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வாழ்கிறார்கள். பொய்யான வழக்கின் கீழ் ஐந்து ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டேன். இறுதியாக, ஆதாரங்கள் இல்லாததால் வழக்கு கைவிடப்பட்டது.</p>
<p>இப்போது நான் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். நாட்டைக் காப்பாற்ற நான் உதவியிருந்தாலும், என்னை இப்படித்தான் நடத்துகிறார்கள்.” என அவர் அழுதுகொண்டே கூறினார்.</p>
<p>சமூக ஊடகங்களில் எழுதும் சிலருக்கு பிள்ளையான் யார் என்று தெரியாது. இந்த நாட்டில் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில் அவர் ஆற்றிய தீர்க்கமான பங்கிற்காக அவர் ஒரு தேசிய வீரராகக் கருதப்பட வேண்டும்.</p>
<p>கருணாவும், பிள்ளையானும் விடுதலைப் புலிகளை விட்டு வெளியேறி இராணுவத்தில் சேர்ந்த பின்னர் தான் விடுதலைப் புலிகளின் முடிவு தொடங்கியது.</p>
<p>பிள்ளையான் என்பவர் 14 வயதில் விடுதலைப் புலிகளினால் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட ஒரு சிறுவர் போராளி. விடுதலைப் புலிகள் சிறுவர் போராளிகளை சேர்த்ததற்கு பிள்ளையான் ஒரு வாழும் சான்றாக உள்ளார்.</p>
<p>பிள்ளையானைப் போலவே, கிழக்குப் புலித் தலைவர் கருணா அம்மானும் நமது இராணுவத்திற்கு தலைவலியாக மாறிய திறமையான போராளிகள்.</p>
<p>கருணாவும் பிள்ளையானும் 2003ஆம் ஆண்டு ஆறாயிரம் பயங்கரவாதிகளுடன் சேர்ந்து விடுதலைப் புலிகளை விட்டு வெளியேறினர்.</p>
<p>விடுதலைப் புலிகளைக் கைவிட்டு, பிரிவினைவாதத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் எதிராக தனது உயிரைப் பணயம் வைத்து, நமது இராணுவத்துடன் இணைந்து நாட்டிற்காகப் போராடிய உண்மையான தேசபக்தர்.” என்று கம்பன்பில கூறியுள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/pillayan-is-a-living-witness-to-the-crimes-of-the-ltte-udaya-gammanpila/">விடுதலைப் புலிகளின் குற்றச் செயல்களுக்கு பிள்ளையானே வாழும் சாட்சி &#8211; கம்மன்பில</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
