<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>petitions Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/petitions/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/petitions/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Mon, 18 Aug 2025 12:39:49 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>petitions Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/petitions/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>சிறப்புரிமை இரத்து சட்டமூலத்துக்கு எதிராக மேலும் இரு மனுக்கள்</title>
		<link>https://oruvan.com/two-more-petitions-against-the-abrogation-of-privileges-bill/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 18 Aug 2025 12:39:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Abrogation]]></category>
		<category><![CDATA[against]]></category>
		<category><![CDATA[Bill]]></category>
		<category><![CDATA[petitions]]></category>
		<category><![CDATA[privileges]]></category>
		<category><![CDATA[Two more]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=29860</guid>

					<description><![CDATA[<p>ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்யும் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் மேலும் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வெயாங்கொடையைச் சேர்ந்த ஹரிந்திரரத்ன பனகல மற்றும் பன்னிபிட்டியவைச் சேர்ந்த பிரேமசிறி விஜேசேகர ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.. இந்த மனுவின் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார். முன்மொழியப்பட்ட சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பினால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அதிகார பகிர்வு, இறையாண்மை மற்றும் மக்களின் இறைமையை மீறும் வகையில் உள்ளதாக மனுவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/two-more-petitions-against-the-abrogation-of-privileges-bill/">சிறப்புரிமை இரத்து சட்டமூலத்துக்கு எதிராக மேலும் இரு மனுக்கள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்யும் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் மேலும் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.</p>
<p>வெயாங்கொடையைச் சேர்ந்த ஹரிந்திரரத்ன பனகல மற்றும் பன்னிபிட்டியவைச் சேர்ந்த பிரேமசிறி விஜேசேகர ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..</p>
<p>இந்த மனுவின் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.</p>
<p>முன்மொழியப்பட்ட சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பினால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அதிகார பகிர்வு, இறையாண்மை மற்றும் மக்களின் இறைமையை மீறும் வகையில் உள்ளதாக மனுவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p>
<p>முன்மொழியப்பட்ட சட்டமூலத்தின் விதிகள், ஒட்டுமொத்தமாக, அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளை மீறுவதாகவும், அரசியலமைப்பின் 1, 3, 4 மற்றும் 12(1) பிரிவுகளை மீறுவதாகவும் உள்ளதென மனுதாரர்கள் கூறியுள்ளனர்.</p>
<p>அதன்படி, சட்டமூலத்தின் தொடர்புடைய விதிகளை நிறைவேற்ற, நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை எனவும், சர்வசன வாக்கெடுப்பின் மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தைக் கோரியுள்ளனர்.</p>
<p>இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேராவும் முன்னதாக குறித்த சட்டமூலத்தை எதிர்த்து மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/two-more-petitions-against-the-abrogation-of-privileges-bill/">சிறப்புரிமை இரத்து சட்டமூலத்துக்கு எதிராக மேலும் இரு மனுக்கள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மின்சார சட்டமூலத்திற்கு எதிராக 07 மனுக்கள்</title>
		<link>https://oruvan.com/07-petitions-against-the-electricity-bill/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Fri, 06 Jun 2025 11:19:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Bill]]></category>
		<category><![CDATA[electricity]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[petitions]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=22656</guid>

					<description><![CDATA[<p>அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானவையென தீர்ப்பளிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் ஏழு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இலங்கை மின்சார சபையின் பொறியாளர்கள் சங்கம், முன்னணி சோசலிசக் கட்சியின் விளம்பரச் செயலாளர் துமிந்த நாகமுவ மற்றும் இலங்கை பசுமை அமைப்பு உள்ளிட்ட ஏழு தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் ஏ.எச்.எம்.டி.நவாஸ், குமுதுனி விக்ரமசிங்க மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/07-petitions-against-the-electricity-bill/">மின்சார சட்டமூலத்திற்கு எதிராக 07 மனுக்கள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானவையென தீர்ப்பளிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் ஏழு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.</p>
<p>இலங்கை மின்சார சபையின் பொறியாளர்கள் சங்கம், முன்னணி சோசலிசக் கட்சியின் விளம்பரச் செயலாளர் துமிந்த நாகமுவ மற்றும் இலங்கை பசுமை அமைப்பு உள்ளிட்ட ஏழு தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.</p>
<p>இந்த மனுக்கள் ஏ.எச்.எம்.டி.நவாஸ், குமுதுனி விக்ரமசிங்க மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.</p>
<p>இதன்போது இந்த மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பமாகும் என உத்தரவிடப்பட்டது.</p>
<p>இந்த மனுக்கள் ஏ.எச்.எம்.டி. நவாஸ், அர்ஜுன ஒபேசேகர மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.</p>
<p>முன்மொழியப்பட்ட சட்டமூலம் இலங்கை மின்சார சபையை தனியார்மயமாக்க முன்மொழிவதாக இந்த மனுக்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.</p>
<p>ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்குவதன் மூலம் சேவையை நிறுத்துவது தொடர்பான தெளிவான உத்தரவு சட்டமூலத்தில் இல்லை என்றும் மனுக்கள் கூறுகின்றன.</p>
<p>தொடர்புடைய சட்டமூலத்தில் உள்ள சில பிரிவுகள் அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகவும் நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>
<p>இந்நிலையில் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டுமானால், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகளால் அங்கீகரிக்கப்பட்டு, பின்னர் வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பை வழங்க வேண்டும் என்றும் மனுக்களில் கோரப்பட்டுள்ளன.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/07-petitions-against-the-electricity-bill/">மின்சார சட்டமூலத்திற்கு எதிராக 07 மனுக்கள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
