<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Pahalgam Attack Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/pahalgam-attack/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/pahalgam-attack/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Fri, 16 May 2025 06:18:48 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Pahalgam Attack Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/pahalgam-attack/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் &#8211; பாகிஸ்தான் அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/pakistan-announces-readiness-to-hold-peace-talks-with-india/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 16 May 2025 05:23:57 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[India-Pakistan War]]></category>
		<category><![CDATA[Pahalgam]]></category>
		<category><![CDATA[Pahalgam Attack]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=20375</guid>

					<description><![CDATA[<p>இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மே 10 அன்று இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்ட பின்னர் பாகிஸ்தானின் முதல் அமைதி முயற்சி இதுவாகும். சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை முடக்குவதற்கான இந்தியாவின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தானின் நீர்வள அமைச்சகம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. கடந்த ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/pakistan-announces-readiness-to-hold-peace-talks-with-india/">இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் &#8211; பாகிஸ்தான் அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.</p>
<p>மே 10 அன்று இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்ட பின்னர் பாகிஸ்தானின் முதல் அமைதி முயற்சி இதுவாகும்.</p>
<p>சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை முடக்குவதற்கான இந்தியாவின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தானின் நீர்வள அமைச்சகம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.</p>
<p>கடந்த ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, 1960 ஆம் ஆண்டு உலக வங்கியின் மத்தியஸ்தத்தில் மேற்கொள்ளப்பட்ட நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்திலிருந்து இந்தியா விலகியது.</p>
<p>பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் வலுவான நிலைப்பாட்டை எடுக்கும் வரை ஒப்பந்தத்தை முடக்க இந்தியா முடிவு செய்துள்ளது.</p>
<p>வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்பிய கடிதத்தில், இந்தியாவின் இந்த முடிவு பாகிஸ்தானில் நெருக்கடியை உருவாக்கும் என்று பாகிஸ்தான் நீர்வள அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p>
<p>இந்த ஒப்பந்தத்தின்படி, கிழக்குப் பகுதி நதிகளான சட்லஜ், பியாஸ் மற்றும் ரவி ஆகியவற்றின் நீரை இந்தியாவும், மேற்குப் பகுதி நதிகளான சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகியவற்றின் நீரை பாகிஸ்தானும் பயன்படுத்தலாம்.</p>
<p>ஆனால் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்வது படிப்படியாக முற்றிலுமாக நிறுத்தப்படும் என்று நீர்வள அமைச்சர் சி.ஆர். பாட்டீல் கூறினார்.</p>
<p>மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகும், நதி நீர் ஒப்பந்தம் குறித்த தனது நிலைப்பாட்டில் இந்தியா மாறாமல் இருப்பதை தெளிவுபடுத்தியுள்ளது.</p>
<p>&#8220;சிந்து நதி நீர் ஒப்பந்தம், அதன் முன்னுரையில் கூறப்பட்டுள்ளபடி, நல்லெண்ணம் மற்றும் நட்பை அடிப்படையாகக் கொண்டது.</p>
<p>ஆனால் பாகிஸ்தான் பல தசாப்தங்களாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதன் மூலம் இந்தக் கொள்கைகளிலிருந்து வெகு தொலைவில் உள்ளது&#8221; என்று போர் நிறுத்த அறிவிப்புக்குப் பிறகு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.</p>
<p>பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாயாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெளிவுபடுத்தியதைத் தொடர்ந்து, பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை முடக்குவதாக அறிவித்தது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/pakistan-announces-readiness-to-hold-peace-talks-with-india/">இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் &#8211; பாகிஸ்தான் அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் &#8211; பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் போட்டிகள் இடமாற்றம்</title>
		<link>https://oruvan.com/xtures-of-the-pakistan-super-league-psl-have-been-moved-to-the-united-arab-emirates/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 09 May 2025 03:17:09 +0000</pubDate>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[India-Pakistan War]]></category>
		<category><![CDATA[Pahalgam]]></category>
		<category><![CDATA[Pahalgam Attack]]></category>
		<category><![CDATA[PSL]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான் சூப்பர் லீக்]]></category>
		<category><![CDATA[மொஹ்சின் நக்வி]]></category>
		<category><![CDATA[ராவல்பிண்டி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=19760</guid>

					<description><![CDATA[<p>பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் (PSL) மீதமுள்ள எட்டு போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) அறிவித்துள்ளது. இதன்படி, தகுதிச் சுற்று, எலிமினேட்டர்கள் மற்றும் இறுதிப் போட்டி இரண்டும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகளின் சரியான அட்டவணை, திகதிகள் மற்றும் இடங்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் (PSL) மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்படும் என்று [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/xtures-of-the-pakistan-super-league-psl-have-been-moved-to-the-united-arab-emirates/">இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் &#8211; பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் போட்டிகள் இடமாற்றம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் (PSL) மீதமுள்ள எட்டு போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) அறிவித்துள்ளது.</p>
<p>இதன்படி, தகுதிச் சுற்று, எலிமினேட்டர்கள் மற்றும் இறுதிப் போட்டி இரண்டும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>போட்டிகளின் சரியான அட்டவணை, திகதிகள் மற்றும் இடங்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.</p>
<p>பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் (PSL) மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் (PCB) தலைவர் மொஹ்சின் நக்வி கூறியுள்ளார்.</p>
<p>பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, அரசியல் மற்றும் விளையாட்டு ஆகியவை தனித்தனியாக வைக்கப்பட வேண்டும்.</p>
<p>ஆனால் தொடரின் மீதமுள்ள போட்டிகள் &#8220;ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தை குறிவைத்த மிகவும் பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான இந்தியச் செயலைத்&#8221; தொடர்ந்து மாற்றப்பட்டதாக நக்வி குறிப்பிட்டார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/xtures-of-the-pakistan-super-league-psl-have-been-moved-to-the-united-arab-emirates/">இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் &#8211; பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் போட்டிகள் இடமாற்றம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>எல்லைகள் மூடப்பட்டன, ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு தயார் &#8211; இந்திய-பாக் எல்லை பகுதியில் கடும் பதற்றம்</title>
		<link>https://oruvan.com/borders-closed-missile-defense-system-ready-high-tension-on-the-india-pakistan-border/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 08 May 2025 08:31:04 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[India-Pakistan War]]></category>
		<category><![CDATA[Pahalgam]]></category>
		<category><![CDATA[Pahalgam Attack]]></category>
		<category><![CDATA[Pahalgam terror attack]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=19715</guid>

					<description><![CDATA[<p>பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய பதிலடியைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரைத் தவிர, பாகிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலங்களும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இரு மாநிலங்களிலும் விடுப்பில் சென்ற அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர். பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. எல்லை மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. பாகிஸ்தானுடன் 1,037 கிலோமீட்டர் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ராஜஸ்தானில் உள்ள எல்லைப் பகுதி, முழுமையாக எல்லைப் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/borders-closed-missile-defense-system-ready-high-tension-on-the-india-pakistan-border/">எல்லைகள் மூடப்பட்டன, ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு தயார் &#8211; இந்திய-பாக் எல்லை பகுதியில் கடும் பதற்றம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய பதிலடியைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரைத் தவிர, பாகிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலங்களும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.</p>
<p>இரு மாநிலங்களிலும் விடுப்பில் சென்ற அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர். பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. எல்லை மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.</p>
<p>பாகிஸ்தானுடன் 1,037 கிலோமீட்டர் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ராஜஸ்தானில் உள்ள எல்லைப் பகுதி, முழுமையாக எல்லைப் பாதுகாப்புப் படை கட்டுப்பாட்டில் உள்ளது.</p>
<p>சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் யாரைப் பார்த்தாலும் அவர்களைச் சுட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.</p>
<p>ஜோத்பூர், கிஷாங்காட் மற்றும் பிகானீர் விமான நிலையங்கள் மூடப்பட்டன. மேற்குப் பகுதி விமானப்படை போர் விமானங்களால் கண்காணிக்கப்படுகிறது. ஏவுகணை பாதுகாப்பு அமைப்பும் செயல்படுத்தப்பட்டுள்ளது.</p>
<p>குஜராத்தில் உள்ள கங்காநகர் முதல் ரான் ஆஃப் கட்ச் வரையிலான பகுதியில் சுகோய் ஜெட் விமானங்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளன. பிகானீர், ஸ்ரீ கங்காநகர், ஜெய்சால்மர் மற்றும் பார்மர் மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.</p>
<p>பொலிஸாரை தவிர, ரயில்வே ஊழியர்களின் விடுப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேவைப்படும் நேரங்களில் எல்லை கிராமங்களை காலி செய்வதற்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தில் உள்ளன.</p>
<p>அவசரகால சூழ்நிலைகளுக்கு வைத்தியசாலைகள் தயாராக இருக்க அறிவுறுத்தல்கள் உள்ளன. ஜெய்சால்மர் மற்றும் ஜோத்பூரில் நள்ளிரவு முதல் அதிகாலை 4 மணி வரை மின் தடை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.</p>
<p>இந்த நேரத்தில் வீடுகளிலும் பிற இடங்களிலும் விளக்குகளை அணைக்க வேண்டும். எதிரி விமானங்களுக்கு இலக்காக மாறுவதைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>பஞ்சாபில், முதல்வர் பகவந்த் மான் அனைத்து அதிகாரப்பூர்வ நிகழ்வுகளையும் ரத்து செய்துள்ளார். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புதன்கிழமை காலை ஒன்பது பயங்கரவாத முகாம்களை இந்தியப் படைகள் அழித்துவிட்டன.</p>
<p>ஆபரேஷன் சிந்தூர் என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட 25 நிமிடப் பணியில் 24 ஏவுகணைகளை வீசி பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.</p>
<p>இந்த கூட்டு நடவடிக்கை மூலம் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளின் பயிற்சி முகாம்களை அழிக்க முடிந்ததாக இந்திய தரப்பு தெரிவித்துள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/borders-closed-missile-defense-system-ready-high-tension-on-the-india-pakistan-border/">எல்லைகள் மூடப்பட்டன, ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு தயார் &#8211; இந்திய-பாக் எல்லை பகுதியில் கடும் பதற்றம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம்; லாகூருக்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நிறுத்தம்</title>
		<link>https://oruvan.com/srilankan-airlines-has-suspended-all-flights-to-lahore/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 08 May 2025 06:55:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[India-Pakistan War]]></category>
		<category><![CDATA[Pahalgam]]></category>
		<category><![CDATA[Pahalgam Attack]]></category>
		<category><![CDATA[Pahalgam terror attack]]></category>
		<category><![CDATA[SriLankan Airlines]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=19698</guid>

					<description><![CDATA[<p>பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கையிலிருந்து பாகிஸ்தானின் லாகூருக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இன்று (08) காலை பாகிஸ்தானின் லாகூரில் மூன்று குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்டது. பாதுகாப்பு கவலைகளை மேற்கோள் காட்டி, கராச்சிக்கான விமானங்கள் தற்போது வரை பாதிக்கப்படவில்லை என்பதை விமான நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்கள் மற்றும் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மோதல் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/srilankan-airlines-has-suspended-all-flights-to-lahore/">இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம்; லாகூருக்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நிறுத்தம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கையிலிருந்து பாகிஸ்தானின் லாகூருக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.</p>
<p>இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இன்று (08) காலை பாகிஸ்தானின் லாகூரில் மூன்று குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்டது.</p>
<p>பாதுகாப்பு கவலைகளை மேற்கோள் காட்டி, கராச்சிக்கான விமானங்கள் தற்போது வரை பாதிக்கப்படவில்லை என்பதை விமான நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.</p>
<p>இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்கள் மற்றும் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மோதல் வான்வெளி கட்டுப்பாடுகளுக்கு வழிவகுத்த நிலையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p>
<p>புதுப்பிப்புகள் மற்றும் மாற்று பயண ஏற்பாடுகளுக்கு பயணிகள் விமான நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p>
<p>பல சர்வதேச விமான வழித்தடங்களில் இடையூறுகளுக்கு வழிவகுத்த இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அதிகரித்த பதட்டங்களுக்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>லாகூர் விமானங்களில் முன்பதிவு செய்த பயணிகள், மறு அட்டவணை அல்லது பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பான கூடுதல் தகவலுக்கு விமான நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுமாறு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வலியுறுத்தியது.</p>
<p>இடைநிறுத்தத்தின் காலம் குறித்து மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.</p>
<p>The post <a href="https://oruvan.com/srilankan-airlines-has-suspended-all-flights-to-lahore/">இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம்; லாகூருக்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நிறுத்தம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்தியாவைத் தாக்க பாகிஸ்தான் இராணுவத்திற்கு அனுமதி</title>
		<link>https://oruvan.com/pakistan-authorizes-military-to-respond-to-indias-strikes/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 07 May 2025 10:16:47 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[India-Pakistan War]]></category>
		<category><![CDATA[Pahalgam Attack]]></category>
		<category><![CDATA[Pahalgam terror attack]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=19626</guid>

					<description><![CDATA[<p>இந்தியா மேற்கொண்ட தாக்குதலுககு பின்னர் அதற்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆயுதப்படைகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. &#8220;இந்த நியாயமற்ற தாக்குதல்கள் கற்பனையான பயங்கரவாத முகாம்கள் இருப்பதாக பொய்யான சாக்குப்போக்கின் கீழ் வேண்டுமென்றே பொதுமக்கள் பகுதிகளை குறிவைத்துள்ளன. இதன் விளைவாக அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டனர், மேலும் மசூதிகள் உட்பட பொதுமக்களின் உள்கட்டமைப்புக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக,&#8221; என்று அந்த அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. &#8220;ஐ.நா. சாசனத்தின் பிரிவு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/pakistan-authorizes-military-to-respond-to-indias-strikes/">இந்தியாவைத் தாக்க பாகிஸ்தான் இராணுவத்திற்கு அனுமதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியா மேற்கொண்ட தாக்குதலுககு பின்னர் அதற்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆயுதப்படைகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p>
<p>&#8220;இந்த நியாயமற்ற தாக்குதல்கள் கற்பனையான பயங்கரவாத முகாம்கள் இருப்பதாக பொய்யான சாக்குப்போக்கின் கீழ் வேண்டுமென்றே பொதுமக்கள் பகுதிகளை குறிவைத்துள்ளன.</p>
<p>இதன் விளைவாக அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டனர், மேலும் மசூதிகள் உட்பட பொதுமக்களின் உள்கட்டமைப்புக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக,&#8221; என்று அந்த அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>&#8220;ஐ.நா. சாசனத்தின் பிரிவு 51 இன் படி, அப்பாவி பாகிஸ்தானிய உயிர்களை பலி வாங்கியமைக்கும் அதன் இறையாண்மையை அப்பட்டமாக மீறியதற்கும் பழிவாங்க, தற்காப்புக்காக, அது தேர்ந்தெடுக்கும் நேரத்தில், இடத்தில் மற்றும் முறையில் பதிலளிக்கும் உரிமையை பாகிஸ்தான் கொண்டுள்ளது.&#8221;</p>
<p>&#8220;இது தொடர்பாக பாகிஸ்தான் ஆயுதப்படைகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க முறையாக அதிகாரம் பெற்றுள்ளன,&#8221; என்று அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு குழு, இந்தியா &#8220;பிராந்தியத்தில் ஒரு தீயை மூட்டியுள்ளதாக&#8221; கூறியதுடன், இந்தியா இதற்கு பொறுப்புக் கூற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/pakistan-authorizes-military-to-respond-to-indias-strikes/">இந்தியாவைத் தாக்க பாகிஸ்தான் இராணுவத்திற்கு அனுமதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>போர் துவங்கியது : பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல், எட்டுப் பேர் பலி</title>
		<link>https://oruvan.com/operation-sindoor-india-launches-missile-attack-on-pakistan/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 07 May 2025 02:15:24 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[India-Pakistan War]]></category>
		<category><![CDATA[Operation Sindoor]]></category>
		<category><![CDATA[Pahalgam]]></category>
		<category><![CDATA[Pahalgam Attack]]></category>
		<category><![CDATA[Pahalgam terror attack]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=19554</guid>

					<description><![CDATA[<p>பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகனை தாக்குதலை மேற்கொண்டுள்ளது. ஒபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதல் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய இராணுவம் பயங்கரவாதிகள் தங்கியிருந்த இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. தாக்குதல் குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது இஷாக் டார் கருத்து வெளியிடுகையில், இந்தியத் தாக்குதல்களில் எட்டு பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும், 35 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அகமதுபூர் கிழக்கு நகரில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/operation-sindoor-india-launches-missile-attack-on-pakistan/">போர் துவங்கியது : பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல், எட்டுப் பேர் பலி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகனை தாக்குதலை மேற்கொண்டுள்ளது. ஒபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p>
<p>இன்று அதிகாலை முதல் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய இராணுவம் பயங்கரவாதிகள் தங்கியிருந்த இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.</p>
<p>தாக்குதல் குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது இஷாக் டார் கருத்து வெளியிடுகையில், இந்தியத் தாக்குதல்களில் எட்டு பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும், 35 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.</p>
<p>அகமதுபூர் கிழக்கு நகரில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் கூறுகிறார்.</p>
<p>இந்திய இராணுவம் மேற்கொண்ட தாக்குதலை பாகிஸ்தான் பிரதமர் ஷப்பாஸ் ஷெரீப் உறுதிபடுத்தியுள்ளார். இதையடுத்து லாகூர், சியல்கோட் விமான நிலையங்களை அடுத்த 48 மணி நேரத்திற்கு பாகிஸ்தான் மூடியது.</p>
<p>கடந்த மாதம் 22ஆம் திகதி பஹல்காமில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் ஏற்பட்டிருந்தது.</p>
<p>பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய பல்வேறு இராஜதந்திர நடவடிக்கைகளை எடுத்திருந்த நிலையில், பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தது.</p>
<p>மேலும், இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் போர் வெடிக்கும் என்ற நிலைப்பாடு உருவாகியது. இதனையடுத்து இரு நாடுகளும் இந்த விடயத்தில் பொறுமையை கடைப்பிடிக்குமாறு உலக நாடுகளும் வலியுறுத்தியிருந்தன.</p>
<p>நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று (ஏழாம் திகதி) போர் கால ஒத்திகை நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.</p>
<p>இந்நிலையிலேயே, இன்று அதிகாலை ஒபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.</p>
<p>இந்தியப் படைகள் மூன்று இடங்களில் ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தானைத் தாக்கியதாக பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் மேற்கோள் காட்டியுள்ளார்.</p>
<p>பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் கடுமையான ஷெல் தாக்குதல்கள் மற்றும் பலத்த வெடிப்புகள் ஏற்பட்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.</p>
<p>இந்தியாவின் தாக்குதலை தொடர்ந்து லாகூர், பஞ்சாபில் அவசரநிலை பிரகடனத்தை பாகிஸ்தான் அறிவித்துள்ளது.</p>
<p>இதனிடையே, இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரின் ஜம்மு, சம்பா, கதுவா, ரஜோரி மற்றும் பூஞ்ச் ​​பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இன்றும் மூடப்படும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.</p>
<p>இன்று அதிகாலை, இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் பீம்பர் காலி பகுதியில் பாகிஸ்தான் பீரங்கித் தாக்குதல் நடத்தியதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.</p>
<p>பிராந்தியத்தின் பல பகுதிகளில் வெடிச்சத்தம் கேட்டதாக உள்ளூர்வாசிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.</p>
<p>காஷ்மீரில் பாகிஸ்தான் படையினர் நடத்திய ஷெல் தாக்குதலில் மூன்று இந்திய பொதுமக்கள் கொல்லப்பட்டதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.</p>
<p>எவ்வாறாயினும், ஐந்து இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாக்கிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/operation-sindoor-india-launches-missile-attack-on-pakistan/">போர் துவங்கியது : பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல், எட்டுப் பேர் பலி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்திய கப்பல்கள் துறைமுகங்களுக்கு நுழைய பாகிஸ்தான் தடை</title>
		<link>https://oruvan.com/pakistan-bans-indian-ships-from-entering-ports/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 04 May 2025 07:29:43 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[Pahalgam]]></category>
		<category><![CDATA[Pahalgam Attack]]></category>
		<category><![CDATA[pakistan]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=19312</guid>

					<description><![CDATA[<p>பாகிஸ்தான் தனது துறைமுகங்களில் இந்திய கப்பல்களுக்கு தடை விதித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தான் கப்பல்களையும் இந்தியா தடை செய்தது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்திய மத்திய அரசு பாகிஸ்தான் கப்பல்களுக்கு தடை விதித்தது. இந்தியா தடை விதித்த சில மணி நேரங்களுக்குள் பாகிஸ்தானும் தனது முடிவை அறிவித்தது. அண்டை நாடு எடுத்த நடவடிக்கையைத் தொடர்ந்து, கடல்சார் இறையாண்மை, பொருளாதார நலன்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றைக் காரணம் காட்டி, இந்தியக் கப்பல்கள் பாகிஸ்தான் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/pakistan-bans-indian-ships-from-entering-ports/">இந்திய கப்பல்கள் துறைமுகங்களுக்கு நுழைய பாகிஸ்தான் தடை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பாகிஸ்தான் தனது துறைமுகங்களில் இந்திய கப்பல்களுக்கு தடை விதித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தான் கப்பல்களையும் இந்தியா தடை செய்தது.</p>
<p>பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்திய மத்திய அரசு பாகிஸ்தான் கப்பல்களுக்கு தடை விதித்தது. இந்தியா தடை விதித்த சில மணி நேரங்களுக்குள் பாகிஸ்தானும் தனது முடிவை அறிவித்தது.</p>
<p>அண்டை நாடு எடுத்த நடவடிக்கையைத் தொடர்ந்து, கடல்சார் இறையாண்மை, பொருளாதார நலன்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றைக் காரணம் காட்டி, இந்தியக் கப்பல்கள் பாகிஸ்தான் துறைமுகங்களில் நுழையத் தடை விதிக்கப்படுகிறது.</p>
<p>இந்தியக் கப்பல்கள் தமது நாட்டு துறைமுகங்களுக்குள் நுழைவதையும் தடை செய்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. சில கப்பல்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து மேலும் விவாதங்கள் நடத்தப்படும் என்றும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.</p>
<p>இதற்கிடையில், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் கப்பல்கள் மீதான தடையை பாதுகாக்க முன்வந்தார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா தனது ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளைத் தொடர்கிறது என்று ஷாபாஸ் ஷெரீப் கூறினார்.</p>
<p>பயங்கரவாதத் தாக்குதலில் இந்தியா தமது நாடு மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் மேலும் கூறினார்.</p>
<p>பாகிஸ்தானில் இருந்து நேரடி மற்றும் மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களையும் தடை செய்வதாக இந்தியா நேற்று அறிவித்தது.</p>
<p>பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கடுமையான நடவடிக்கை எடுத்தது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/pakistan-bans-indian-ships-from-entering-ports/">இந்திய கப்பல்கள் துறைமுகங்களுக்கு நுழைய பாகிஸ்தான் தடை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் &#8211; பாகிஸ்தான் வானொலிகளில் இந்திய பாடல்களுக்கு தடை</title>
		<link>https://oruvan.com/pahalgam-terror-attack-indian-songs-banned-on-pakistani-radios/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 02 May 2025 05:02:09 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[India - Pakistan]]></category>
		<category><![CDATA[Pahalgam]]></category>
		<category><![CDATA[Pahalgam Attack]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=19081</guid>

					<description><![CDATA[<p>பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடித்துள்ள நிலையில், பாகிஸ்தான் வானொலி நிலையங்கள் இந்தியப் பாடல்களை ஒளிபரப்புவதை நிறுத்திவிட்டன. பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கம் (பிபிஏ) நாடு முழுவதும் உள்ள பாகிஸ்தான் வானொலி நிலையங்களில் இந்திய பாடல்களை ஒளிபரப்ப தடை விதித்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ஷகீல் மசூத் அறிவித்தார். இந்நிலையில், பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் இந்த முடிவை அந்நாட்டு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அதாவுல்லாஹ் தரார் வரவேற்றுள்ளார். இந்த முடிவானது [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/pahalgam-terror-attack-indian-songs-banned-on-pakistani-radios/">பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் &#8211; பாகிஸ்தான் வானொலிகளில் இந்திய பாடல்களுக்கு தடை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடித்துள்ள நிலையில், பாகிஸ்தான் வானொலி நிலையங்கள் இந்தியப் பாடல்களை ஒளிபரப்புவதை நிறுத்திவிட்டன.</p>
<p>பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கம் (பிபிஏ) நாடு முழுவதும் உள்ள பாகிஸ்தான் வானொலி நிலையங்களில் இந்திய பாடல்களை ஒளிபரப்ப தடை விதித்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ஷகீல் மசூத் அறிவித்தார்.</p>
<p>இந்நிலையில், பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் இந்த முடிவை அந்நாட்டு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அதாவுல்லாஹ் தரார் வரவேற்றுள்ளார். இந்த முடிவானது தேசபக்தி எனவும் அவர் விபரித்துள்ளார்.</p>
<p>இதுபோன்ற சோதனையான காலங்களில் தேசிய ஒற்றுமையை மேம்படுத்துவதிலும் அடிப்படை மதிப்புகளை ஆதரிப்பதிலும் அனைவரும் ஒற்றுமையாக நிற்கிறார்கள் என்பதற்கு இந்திய பாடல்கள் தடை செய்யப்பட்டுள்ளது சான்றாகும் என்று அவர் கூறினார்.</p>
<p>பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் நடிகர் ஃபவாத் கான் நடித்த &#8216;அபிர் குலால்&#8217; திரைப்படம் இந்தியாவில் வெளியிடப்படாது என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.</p>
<p>பாகிஸ்தானுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்களுக்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>திரையரங்குகள் படத்தைத் திரையிடத் தயாராக இல்லை என்றும், பல அமைப்புகள் படத்தைப் புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.</p>
<p>பின்னர், பாகிஸ்தானின் மூத்த விநியோகஸ்தரான சதீஷ் ஆனந்த், அபிர் குலால் பாகிஸ்தானிலும் வெளியிடப்படாது என்பதை உறுதிப்படுத்தினார்.<br />
இதேவேளை, &#8216;அபிர் குலால்&#8217; படத்தின் இரண்டு பாடல்களான குதயா இஷ்க் மற்றும் அங்ரேஜி ரங்ராசியா ஆகியவை யூடியூப் இந்தியாவிலிருந்து நீக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/pahalgam-terror-attack-indian-songs-banned-on-pakistani-radios/">பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் &#8211; பாகிஸ்தான் வானொலிகளில் இந்திய பாடல்களுக்கு தடை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பாகிஸ்தானுக்கு எதிரான தனது வான்வெளியை மூடுகிறது இந்தியா</title>
		<link>https://oruvan.com/india-closes-its-airspace-against-pakistan/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 01 May 2025 05:01:43 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[Pahalgam]]></category>
		<category><![CDATA[Pahalgam Attack]]></category>
		<category><![CDATA[pakistan]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=18981</guid>

					<description><![CDATA[<p>ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சமீபத்தில் 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானுக்கான தனது வான்வெளியை இந்தியா மூடியுள்ளது. கடந்த வாரம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்த கடுமையான அரசியல் முடிவுகளைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் தனது வான்வெளியை இந்தியாவுக்கான விமானப் பாதையை மூடியதை அடுத்து, இந்திய அரசாங்கம் நேற்று (30) இரவு இந்த முடிவை எடுத்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தி வலைத்தளம் தெரிவித்துள்ளது. இந்தத் தடை ஏப்ரல் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/india-closes-its-airspace-against-pakistan/">பாகிஸ்தானுக்கு எதிரான தனது வான்வெளியை மூடுகிறது இந்தியா</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சமீபத்தில் 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானுக்கான தனது வான்வெளியை இந்தியா மூடியுள்ளது.</p>
<p>கடந்த வாரம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்த கடுமையான அரசியல் முடிவுகளைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p>
<p>பாகிஸ்தான் தனது வான்வெளியை இந்தியாவுக்கான விமானப் பாதையை மூடியதை அடுத்து, இந்திய அரசாங்கம் நேற்று (30) இரவு இந்த முடிவை எடுத்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தி வலைத்தளம் தெரிவித்துள்ளது.</p>
<p>இந்தத் தடை ஏப்ரல் 30 முதல் மே 23 வரை நடைமுறையில் இருக்கும் என்று இந்திய அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டது.</p>
<p>எவ்வாறாயினும், பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம் மட்டுமே இந்திய வான்வெளியைப் பயன்படுத்தி கோலாலம்பூருக்கு விமானங்களை இயக்குவதால், இந்தியாவின் முடிவு பாகிஸ்தானின் விமானப் போக்குவரத்துத் துறைக்கு கடுமையானதாக இருக்காது என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p>
<p>கடந்த வாரம், பாகிஸ்தான் தனது வான்வெளியை இந்தியாவுக்குச் சொந்தமான அல்லது இயக்கப்படும் விமான நிறுவனங்களுக்கு மூடியது.</p>
<p>பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடிய பிறகு இந்திய விமான நிறுவனங்கள் மில்லியன் கணக்கான ரூபாய்களை இழந்து வருவதாக business-standard.com வலைத்தளம் வெளிப்படுத்தியது.</p>
<p>இதனால் வட இந்திய நகரங்களில் இருந்து சர்வதேச விமானங்களில் வாரத்திற்கு 77 கோடி ரூபா கூடுதலாக இந்திய விமான நிறுவனங்களுக்கு செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/india-closes-its-airspace-against-pakistan/">பாகிஸ்தானுக்கு எதிரான தனது வான்வெளியை மூடுகிறது இந்தியா</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் &#8211; பாகிஸ்தான் தூதருக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்</title>
		<link>https://oruvan.com/terrorist-attack-in-jammu-and-kashmir-protest-in-colombo-against-pakistani-ambassador/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 30 Apr 2025 07:28:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[Pahalgam]]></category>
		<category><![CDATA[Pahalgam Attack]]></category>
		<category><![CDATA[Pahalgam terror attack]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=18957</guid>

					<description><![CDATA[<p>ஜம்மு-காஷ்மீரில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் தீவிரவாதிகளால் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கொழும்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்படி, கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதருக்கு எதிராக இந்திய வம்சாவளி சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர். மக்களைக் கொலை செய்வதன் மூலம் எந்த தீர்வையும் அடைய முடியாது என்றும், அதற்கு பதிலாக அனைவரும் சமாதானம், அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர். இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களைக் கட்டுப்படுத்தவும், [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/terrorist-attack-in-jammu-and-kashmir-protest-in-colombo-against-pakistani-ambassador/">ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் &#8211; பாகிஸ்தான் தூதருக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஜம்மு-காஷ்மீரில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் தீவிரவாதிகளால் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கொழும்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p>
<p>இதன்படி, கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதருக்கு எதிராக இந்திய வம்சாவளி சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர்.</p>
<p>மக்களைக் கொலை செய்வதன் மூலம் எந்த தீர்வையும் அடைய முடியாது என்றும், அதற்கு பதிலாக அனைவரும் சமாதானம், அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.</p>
<p>இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களைக் கட்டுப்படுத்தவும், நாட்டில் செயல்படும் பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை ஒழிக்கவும் பாகிஸ்தானை வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/terrorist-attack-in-jammu-and-kashmir-protest-in-colombo-against-pakistani-ambassador/">ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் &#8211; பாகிஸ்தான் தூதருக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
