<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Organization Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/organization/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/organization/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Tue, 14 Oct 2025 11:41:09 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Organization Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/organization/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 03 இருமல் மருந்துகளை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு தடை</title>
		<link>https://oruvan.com/world-health-organization-bans-use-of-3-cough-medicines-made-in-india/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Oct 2025 11:41:09 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[health]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Organization]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[world]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=35379</guid>

					<description><![CDATA[<p>இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் கோல்ட்ரிப் எனும் இருமல் மருந்தை உட்கொண்ட 23 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. ராஜஸ்தானிலும் இருமல் மருந்தை உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து தமிழ்நாட்டை சேர்ந்த நிறுவனம் தயாரித்து வந்த கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பரிசோதனையில் கோல்ட்ரிப் இருமல் மருந்தில் டை எதிலீன் கிளைக்கால் என்ற இரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டது. இதன்பின்னர் பல்வேறு நிறுவனங்களின் மருந்துகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. இதன்போது மத்திய பிரதேசத்தில் மேலும் 02 இருமல் மருந்துகளுக்கு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/world-health-organization-bans-use-of-3-cough-medicines-made-in-india/">இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 03 இருமல் மருந்துகளை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு தடை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் கோல்ட்ரிப் எனும் இருமல் மருந்தை உட்கொண்ட 23 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.</p>
<p>ராஜஸ்தானிலும் இருமல் மருந்தை உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.</p>
<p>இதனையடுத்து தமிழ்நாட்டை சேர்ந்த நிறுவனம் தயாரித்து வந்த கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.</p>
<p>பரிசோதனையில் கோல்ட்ரிப் இருமல் மருந்தில் டை எதிலீன் கிளைக்கால் என்ற இரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டது.<br />
இதன்பின்னர் பல்வேறு நிறுவனங்களின் மருந்துகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.</p>
<p>இதன்போது மத்திய பிரதேசத்தில் மேலும் 02 இருமல் மருந்துகளுக்கு தடைவிதிக்கப்பட்டது.</p>
<p>இருமல் மருந்து குடித்து குழந்தைகள் உயிரிழப்பது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு விசாரணை மேற்கொண்டு வருகிறது.</p>
<p>இந்த நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 03 இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p>
<p>இந்தியாவை சேர்ந்த நிறுவனங்களின் தயாரிப்பான கோல்ட்ரிப், ரெஸ்பிப்ரெஷ் டி.ஆர், ரீலைப் ஆகிய 03 இருமல் மருந்துகள் பாதிக்கப்பட்ட மருந்துகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்த மருந்துகள் குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்துவதாகவும், கடுமையான, உயிருக்கு ஆபத்தான நோயை ஏற்படுத்தக்கூடியவை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.</p>
<p>மேலும் இந்த மருந்துகள் வேறு நாட்டில் பயன்பாட்டில் இருப்பது கண்டறியப்பட்டால் உடனே முறைப்பாடளிக்குமாறு<br />
உலக சுகாதார அமைப்பு கேட்டு கொண்டுள்ளது.</p>
<p>முன்னதாக கலப்பட மருந்துகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை என உலக சுகாதார அமைப்பிடம் இந்தியா<br />
தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/world-health-organization-bans-use-of-3-cough-medicines-made-in-india/">இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 03 இருமல் மருந்துகளை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு தடை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் நாட்டை வந்தடைந்தார்</title>
		<link>https://oruvan.com/the-director-general-of-the-world-health-organization-arrived-in-the-country/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 12 Oct 2025 08:55:23 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[country]]></category>
		<category><![CDATA[Director]]></category>
		<category><![CDATA[health]]></category>
		<category><![CDATA[Organization]]></category>
		<category><![CDATA[world]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=35131</guid>

					<description><![CDATA[<p>உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் டெட்ரொஸ் அதனொம் கேப்ரியஸஸ் (Tedros Adhanom Ghebreyesus) இன்று (12) நாட்டிற்கு வருகை தந்துள்ளார். இலங்கையில் இடம்பெறும் 8 ஆவது தென்கிழக்கு ஆசிய பிராந்திய சர்வதேச சுகாதார உச்சி மாநாட்டின் பிரதம விருந்தினராக பங்கேற்பதற்காக அவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார். இவர் இன்று முற்பகல் 9.40 அளவில் கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR 660 விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். இதன்போது அவரை சுகாதாரம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-director-general-of-the-world-health-organization-arrived-in-the-country/">உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் நாட்டை வந்தடைந்தார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் டெட்ரொஸ் அதனொம் கேப்ரியஸஸ் (Tedros Adhanom Ghebreyesus) இன்று (12) நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.</p>
<p>இலங்கையில் இடம்பெறும் 8 ஆவது தென்கிழக்கு ஆசிய பிராந்திய சர்வதேச சுகாதார உச்சி மாநாட்டின் பிரதம விருந்தினராக பங்கேற்பதற்காக அவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.</p>
<p>இவர் இன்று முற்பகல் 9.40 அளவில் கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR 660 விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.</p>
<p>இதன்போது அவரை சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க வரவேற்றார்.</p>
<p>உலக சுகாதார ஸ்தாபனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாடு நாளை (13) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெற உள்ளது.</p>
<p>தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுகாதார அமைச்சர்களும் இந்த மாநாட்டிற்காக இலங்கைக்கு வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>The post <a href="https://oruvan.com/the-director-general-of-the-world-health-organization-arrived-in-the-country/">உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் நாட்டை வந்தடைந்தார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
