<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Nilakshi Raguthas Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/nilakshi-raguthas/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/nilakshi-raguthas/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Fri, 04 Apr 2025 04:15:47 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Nilakshi Raguthas Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/nilakshi-raguthas/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>கனடாவில் இலங்கை பெண் சுட்டுக்கொலை &#8211; இருவர் கைது</title>
		<link>https://oruvan.com/two-arrested-in-connection-with-the-shooting-death-of-nilakshi-raguthas/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Apr 2025 04:15:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Canada]]></category>
		<category><![CDATA[Nilakshi Raguthas]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=16810</guid>

					<description><![CDATA[<p>கனடாவில் கடந்த மாதம் இலங்கை தமிழ் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் ஏழாம் திகதி காலை 6:30 மணியளவில் மார்க்கம் நகரின் சோலஸ் வீதியிலுள்ள வீட்டிற்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர். குறித்த வீட்டில் 20 வயது நிலக்ஷி ரகுதாஸ் மற்றும் 26 வயது ஆண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், அந்த வீட்டில் ஒரு நாய் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/two-arrested-in-connection-with-the-shooting-death-of-nilakshi-raguthas/">கனடாவில் இலங்கை பெண் சுட்டுக்கொலை &#8211; இருவர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கனடாவில் கடந்த மாதம் இலங்கை தமிழ் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.</p>
<p>கடந்த மார்ச் ஏழாம் திகதி காலை 6:30 மணியளவில் மார்க்கம் நகரின் சோலஸ் வீதியிலுள்ள வீட்டிற்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.</p>
<p>குறித்த வீட்டில் 20 வயது நிலக்ஷி ரகுதாஸ் மற்றும் 26 வயது ஆண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.</p>
<p>மேலும், அந்த வீட்டில் ஒரு நாய் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலக்ஷி ரகுதாஸ் உயிரிழந்தார்.</p>
<p>இந்நிலையில், சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பொலிஸார், துப்பாக்கிச் சூடு இலக்கு வைக்கப்பட்ட ஒன்று என தெரிவித்திருந்தனர்.</p>
<p>இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் கடந்த புதன்கிழமை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 28 வயதான ஏக்வோன் முர்ரே மற்றும் 35 வயதான ஹெஷ்மத் ரசூலி-கலந்தர்சேட் ஆகியோர் டொராண்டோவில் கைது செய்யப்பட்டதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>கைது செய்யப்பட்ட இருவருக்கும் எதிராக முதல் நிலை கொலை, கொலை முயற்சி, விலங்குகளைக் கொல்வது அல்லது காயப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p>
<p>குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவலில் உள்ளனர் என்றும், இந்த மாத இறுதியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>நிலக்ஷி ரகுதாஸ் தனது பெற்றோர் மற்றும் இரண்டு சகோதரர்களுடன் வசித்து வந்த சோலஸ் வீதியில் அமைந்துள்ள வீடு, 2018 முதல் குறைந்தது ஐந்து முறை குறிவைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p>
<p>துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக தன்னை குமார் என்று மட்டுமே அடையாளம் கண்டுகொண்ட பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவர், அந்த ஐந்து சம்பவங்களில் மூன்று சம்பவங்கள் கடந்த ஒரு மாத காலப்பகுதியில் நடந்ததாக கூறினார்.</p>
<p>இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/two-arrested-in-connection-with-the-shooting-death-of-nilakshi-raguthas/">கனடாவில் இலங்கை பெண் சுட்டுக்கொலை &#8211; இருவர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கனடாவில் துப்பாக்கிச் சூடு &#8211; யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் பெண் படுகொலை</title>
		<link>https://oruvan.com/shooting-in-canada-young-woman-from-jaffna-killed/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 11 Mar 2025 04:19:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Nilakshi Raguthas]]></category>
		<category><![CDATA[ரகுதாஸ் நிலக்ஷி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=14034</guid>

					<description><![CDATA[<p>கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இலங்கையின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஏழாம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் மார்க்கம் நகரில் வசித்து வரும் 20 வயதான ரகுதாஸ் நிலக்ஷி என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும், இந்த சம்பவத்தில் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் ஒன்றும் கொல்லப்பட்டுள்ளதாகவும், 26 வயதான ஆண் ஒருவர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/shooting-in-canada-young-woman-from-jaffna-killed/">கனடாவில் துப்பாக்கிச் சூடு &#8211; யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் பெண் படுகொலை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இலங்கையின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>கடந்த ஏழாம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் மார்க்கம் நகரில் வசித்து வரும் 20 வயதான ரகுதாஸ் நிலக்ஷி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p>
<p>மேலும், இந்த சம்பவத்தில் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் ஒன்றும் கொல்லப்பட்டுள்ளதாகவும், 26 வயதான ஆண் ஒருவர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>உயிரிழந்த பெண் யாழ்ப்பாணத்தின் முன்னாள் மேயர் அல்பிரட் துரையப்பாவின் பேத்தி ரகுதாஸ் நிலாக்ஷி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p>
<p>குறித்த பெண், யாழ்ப்பாணத்தின் கோண்டாவில் உள்ள மேற்கு கல்வீட்டில் வசித்து வளர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>யோர்க் பிராந்திய பொலிஸாரின் கூற்றுப்படி, வெள்ளிக்கிழமை காலை 6:30 மணியளவில் நெடுஞ்சாலை 48 மற்றும் காசில்மோர் அவென்யூவிற்கு அருகிலுள்ள சோலஸ் சாலையில் உள்ள வீட்டில் துப்பாக்கிச் சூடு நடந்தது.</p>
<p>உயிரிழந்தப் பெண் அந்த வீட்டில் இரண்டு வருடங்களாக வசித்து வந்தார். அந்த வீட்டின் மீது இதற்கு முன்பு மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p>
<p>கடந்த 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஒருமுறையும், மார்ச் மாதத்தில் இருமுறையும் இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p>
<p>ஒவ்வொரு வழக்கிலும், சந்தேக நபர்கள் தூரத்திலிருந்து வீட்டை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். மேலும், புலனாய்வு அமைப்புகளால் சந்தேக நபர்களைக் கைது செய்ய முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் ரகுதாஸ் நிலக்ஷி கொல்லப்பட்டார், அதே வீட்டில் இருந்த 26 வயதுடைய ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p>
<p>அவரது காயங்கள் கடுமையானவை ஆனால் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்று பொலிஸார் தெரிவித்துள்ளார். வீட்டைக் காவல் காத்துக்கொண்டிருந்த ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாயும் துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டது.</p>
<p>துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நான்கு பேர் துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் டாக்ஸியில் தப்பிச் செல்வதை சிசிடிவி காட்சிகள் காட்டுவதாக கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், இதுவரை எந்த சந்தேக நபர்களும் கைது செய்யப்படவில்லை.</p>
<p>சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், இந்த சம்பவம் ஒரு திட்டமிட்ட கொலையாக விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/shooting-in-canada-young-woman-from-jaffna-killed/">கனடாவில் துப்பாக்கிச் சூடு &#8211; யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் பெண் படுகொலை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
