<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>next Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/next/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/next/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Wed, 18 Jun 2025 10:39:09 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>next Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/next/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மீனவர்களுக்கான புதிய காப்பீட்டுக் கொள்கை &#8211;  அடுத்த மாதம் அறிமுகம்</title>
		<link>https://oruvan.com/new-insurance-policy-for-fishermen-to-be-introduced-next-month/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 18 Jun 2025 10:39:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[fishermen]]></category>
		<category><![CDATA[insurance]]></category>
		<category><![CDATA[month]]></category>
		<category><![CDATA[next]]></category>
		<category><![CDATA[policy]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=23943</guid>

					<description><![CDATA[<p>&#160; மீனவர்கள் எதிர்கொள்ளும் அபாயங்களைக் கருத்திற்கொண்டு, புதிய காப்பீட்டுக் கொள்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் விவசாயிகள் காப்பீட்டு சபையின் தலைவர் பேமசிறி ஜசிங்கராச்சி கூறியுள்ளார். &#160; இந்த காப்பீடு ஜூலை முதலாம் திகதி டிக்வெல்ல மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார். &#160; கடற்றொழிலில் ஈடுபட்டுள்ள மீனவ சமூகத்தினர், தங்கள் பணியின் அபாயகரமான தன்மை காரணமாக, உயிருக்கு ஆபத்தான விபத்துக்களுக்கு ஆளாகும் அபாயம் அதிகம் காணப்படுகிறது. &#160; இதன் ஊடாக கடற்றொழிலில் ஈடுபடும்போது சீரற்ற [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/new-insurance-policy-for-fishermen-to-be-introduced-next-month/">மீனவர்களுக்கான புதிய காப்பீட்டுக் கொள்கை &#8211;  அடுத்த மாதம் அறிமுகம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>&nbsp;</p>
<p>மீனவர்கள் எதிர்கொள்ளும் அபாயங்களைக் கருத்திற்கொண்டு, புதிய காப்பீட்டுக் கொள்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் விவசாயிகள் காப்பீட்டு சபையின் தலைவர் பேமசிறி ஜசிங்கராச்சி கூறியுள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>இந்த காப்பீடு ஜூலை முதலாம் திகதி டிக்வெல்ல மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>கடற்றொழிலில் ஈடுபட்டுள்ள மீனவ சமூகத்தினர், தங்கள் பணியின் அபாயகரமான தன்மை காரணமாக, உயிருக்கு ஆபத்தான விபத்துக்களுக்கு ஆளாகும் அபாயம் அதிகம் காணப்படுகிறது.</p>
<p>&nbsp;</p>
<p>இதன் ஊடாக கடற்றொழிலில் ஈடுபடும்போது சீரற்ற வானிலையால் அல்லது வேறு ஏதேனும் சந்தர்ப்பங்களில் மீனவர்களுக்கு ஏற்படும் விபத்துகள், இயலாமை மற்றும் உயிர் இழப்பு போன்றவற்றின் போது, அவர்களுக்கு இந்த காப்பீட்டுத் திட்டம், நன்மைகளை வழங்கும்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/new-insurance-policy-for-fishermen-to-be-introduced-next-month/">மீனவர்களுக்கான புதிய காப்பீட்டுக் கொள்கை &#8211;  அடுத்த மாதம் அறிமுகம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>“தூய்மையான இலங்கை” திட்டம் எதிர்வரும் ஜனவரியில் அமுல்!</title>
		<link>https://oruvan.com/the-clean-sri-lanka-project-will-be-implemented-next-january/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Sat, 28 Dec 2024 10:10:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[“Clean Sri Lanka”]]></category>
		<category><![CDATA[implemented]]></category>
		<category><![CDATA[January!]]></category>
		<category><![CDATA[next]]></category>
		<category><![CDATA[Theproject]]></category>
		<category><![CDATA[will be]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=4370</guid>

					<description><![CDATA[<p>புதிய ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதி கடமைகளை ஆரம்பிக்கும் போது அரச பணியாளர்கள் வழங்கும் உறுதிமொழி இம்முறை வேறுபட்டதாக இருக்கும் எனவும் அரசாங்கத்தால் அன்றைய தினம் ஆரம்பிக்கப்படும் &#8216;தூய்மையான இலங்கை&#8217; (Clean Sri Lanka) திட்டத்துடன் இணைக்கப்பட்ட உறுதிமொழியாக அமையும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. முறையான சுகாதார சூழலை உருவாக்குதல், இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழித்தல், டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட புதுமையான திட்டங்களுடன் &#8216;தூய்மையான இலங்கை&#8217; (Clean Sri Lanka) என்ற கருத்துரு பல வழிகளில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-clean-sri-lanka-project-will-be-implemented-next-january/">“தூய்மையான இலங்கை” திட்டம் எதிர்வரும் ஜனவரியில் அமுல்!</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>புதிய ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதி கடமைகளை ஆரம்பிக்கும் போது அரச பணியாளர்கள் வழங்கும் உறுதிமொழி இம்முறை வேறுபட்டதாக இருக்கும் எனவும் அரசாங்கத்தால் அன்றைய தினம் ஆரம்பிக்கப்படும் &#8216;தூய்மையான இலங்கை&#8217; (Clean Sri Lanka) திட்டத்துடன் இணைக்கப்பட்ட உறுதிமொழியாக அமையும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
<p>முறையான சுகாதார சூழலை உருவாக்குதல், இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழித்தல், டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட புதுமையான திட்டங்களுடன் &#8216;தூய்மையான இலங்கை&#8217; (Clean Sri Lanka) என்ற கருத்துரு பல வழிகளில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில், ஜனவரி மாதம் முதலாம் திகதி உத்தியோகபூர்வமாக நடைபெறவுள்ளதாக தெரியவருகிறது.</p>
<p>ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள் பொது சேவை உறுதிமொழியை வழங்கிய போது, ​​இம்முறை ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) திட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிமொழியும் உள்ளடக்கப்பட்டதாக ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்தார்.</p>
<p>மேலும், முதற்கட்டமாக &#8216;தூய்மையான இலங்கை&#8217; (Clean Sri Lanka) வேலைத்திட்டம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அதனை மேலும் அர்த்தமுள்ளதாக்குவதற்கும் அனைத்து தரப்பினரின் கருத்துக்களும் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/the-clean-sri-lanka-project-will-be-implemented-next-january/">“தூய்மையான இலங்கை” திட்டம் எதிர்வரும் ஜனவரியில் அமுல்!</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஜனாதிபதி அடுத்த மாதம் இந்தியாவுக்கு விஜயம்</title>
		<link>https://oruvan.com/president-to-visit-india-next-month/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 22 Dec 2024 04:39:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[month]]></category>
		<category><![CDATA[next]]></category>
		<category><![CDATA[president]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=3584</guid>

					<description><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நீண்டகாலமாக தாமதமாகி வந்த வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்த சில நாட்களுக்குப் பின்னர், எதிர்வரும் ஜனவரி மாதம் பேச்சுவார்த்தைக்காக மிகப்பெரிய இருதரப்புக் கடன் வழங்கும் சீனாவுக்குச் செல்லவுள்ளார். 2022 ஆம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சியின் போது, ​​உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு பணம் செலுத்த அந்நிய செலாவணி இல்லாமற் போனபோது, ​​இலங்கையின் இருதரப்புக் கடனில் பாதிக்கும் மேலான தொகையை சீனா கொண்டிருந்தது. சர்வதேச நாணய நிதியத்திடம் பெற்றுக் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/president-to-visit-india-next-month/">ஜனாதிபதி அடுத்த மாதம் இந்தியாவுக்கு விஜயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நீண்டகாலமாக தாமதமாகி வந்த வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்த சில நாட்களுக்குப் பின்னர், எதிர்வரும் ஜனவரி மாதம் பேச்சுவார்த்தைக்காக மிகப்பெரிய இருதரப்புக் கடன் வழங்கும் சீனாவுக்குச் செல்லவுள்ளார்.</p>
<p>2022 ஆம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சியின் போது, ​​உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு பணம் செலுத்த அந்நிய செலாவணி இல்லாமற் போனபோது, ​​இலங்கையின் இருதரப்புக் கடனில் பாதிக்கும் மேலான தொகையை சீனா கொண்டிருந்தது.</p>
<p>சர்வதேச நாணய நிதியத்திடம் பெற்றுக் கொண்ட கடன் தொகையின் பின்னர் நாடு மீண்டெழுந்தது.</p>
<p>இந்நிலையில் அடுத்த மாத நடுப்பகுதியில் சீனாவுக்குச் செல்வுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க<br />
அறிவித்துள்ளார். ஆனாலும் சரியான திகதி கூறவில்லை.</p>
<p>The post <a href="https://oruvan.com/president-to-visit-india-next-month/">ஜனாதிபதி அடுத்த மாதம் இந்தியாவுக்கு விஜயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
