<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>must Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/must/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/must/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Fri, 14 Feb 2025 09:03:50 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>must Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/must/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title> மின் துண்டிப்பு  தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் &#8211; சஜித்</title>
		<link>https://oruvan.com/government-must-respond-to-power-outages-sajith/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Feb 2025 09:03:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[governmen]]></category>
		<category><![CDATA[must]]></category>
		<category><![CDATA[outages]]></category>
		<category><![CDATA[Power]]></category>
		<category><![CDATA[Sajith]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=10464</guid>

					<description><![CDATA[<p>மின் துண்டிப்பு  மற்றும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் பொறுப்பான அமைச்சர் உடனடியாக கருத்து தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் இன்று வெள்ளிக்கிழமை உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான பதில்களை நாடே எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறது. மின் துண்டிப்பு தொடர்ந்து நடக்குமா? அரசியல் பழிவாங்கல்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமா? போன்ற பிரச்சினைகளுக்கு பதில் வழங்கப்பட வேண்டும். இந்த மின் துண்டிப்பு குறித்து இந்த [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/government-must-respond-to-power-outages-sajith/"> மின் துண்டிப்பு  தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் &#8211; சஜித்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மின் துண்டிப்பு  மற்றும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் பொறுப்பான அமைச்சர் உடனடியாக கருத்து தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.</p>
<p>நாடாளுமன்றத்தின் இன்று வெள்ளிக்கிழமை உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.</p>
<p>இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,</p>
<p>மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான பதில்களை நாடே எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறது. மின் துண்டிப்பு தொடர்ந்து நடக்குமா? அரசியல் பழிவாங்கல்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமா? போன்ற பிரச்சினைகளுக்கு பதில் வழங்கப்பட வேண்டும்.</p>
<p>இந்த மின் துண்டிப்பு குறித்து இந்த சபையில் அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும். பிரதான செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் அரசியல் பழிவாங்கல்களுக்கு ஆளாகி வருகின்றனர். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கூட நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.</p>
<p>இந்த ஞாயிற்றுக்கிழமையும் மின்சாரம் துண்டிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தி உற்பத்திக்கு ஏற்ப விநியோகம் இடம்பெறாவிட்டால் மின் தடை ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. இது தொடர்பில் அரசாங்க தரப்பில் பதில் வழங்க வேண்டும்.</p>
<p>புதிய உற்பத்தி ஆலைகளைத் திறந்து சமநிலையற்ற தன்மையை ஏற்படுத்தாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேலும் குரங்குகள் மீது பழி போட வேண்டாம்” என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/government-must-respond-to-power-outages-sajith/"> மின் துண்டிப்பு  தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் &#8211; சஜித்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பெப்ரவரிக்கு முன்னர் சொத்து அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்</title>
		<link>https://oruvan.com/property-reports-must-be-submitted-before-february/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Sat, 28 Dec 2024 09:46:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[be]]></category>
		<category><![CDATA[before]]></category>
		<category><![CDATA[February]]></category>
		<category><![CDATA[must]]></category>
		<category><![CDATA[Property]]></category>
		<category><![CDATA[reports]]></category>
		<category><![CDATA[submitted]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=4353</guid>

					<description><![CDATA[<p>எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் குஷானி லோஹணதீர அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்பு அறிக்கைகளை கையளித்து வருவதாக நாடாளுமன்ற தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் 82(ஏ) பிரிவின்படி, அனைத்து எம்.பி.க்களும் பதவிக்கு நியமிக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள் தங்களது சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்க [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/property-reports-must-be-submitted-before-february/">பெப்ரவரிக்கு முன்னர் சொத்து அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் குஷானி லோஹணதீர அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.</p>
<p>நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்பு அறிக்கைகளை கையளித்து வருவதாக நாடாளுமன்ற தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் 82(ஏ) பிரிவின்படி, அனைத்து எம்.பி.க்களும் பதவிக்கு நியமிக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள் தங்களது சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.</p>
<p>அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு வருடமும் ஜூன் 30ஆம் திகதிக்கு முன்னர் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும்.</p>
<p>புதிதாக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் சொத்துப் பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியிருப்பதால், ஜூன் மாதம் மீண்டும் அந்த அறிக்கைகளை பெற்றுக்கொள்வதா என்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>The post <a href="https://oruvan.com/property-reports-must-be-submitted-before-february/">பெப்ரவரிக்கு முன்னர் சொத்து அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வேட்பாளர்கள் கல்வித் தகைமைகளை வழங்க வேண்டும்?</title>
		<link>https://oruvan.com/candidates-must-provide-educational-qualifications/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Fri, 27 Dec 2024 05:35:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[candidates]]></category>
		<category><![CDATA[educational]]></category>
		<category><![CDATA[must]]></category>
		<category><![CDATA[provide]]></category>
		<category><![CDATA[qualifications]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=4109</guid>

					<description><![CDATA[<p>தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் வேட்பாளர்களின் கல்வி அல்லது ஏனைய தகைமைகள் உள்ளடங்கிய தரவு தாளை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்குவதை கட்டாயமாக்கும் அமைப்பை தயார் செய்யுமாறு தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் மற்றும் பல வெகுஜன அமைப்புகளும் தேர்தல் ஆணைய தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமைகள் தொடர்பில் நாட்டில் நிலவும் சர்ச்சைக்குரிய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படாமல் தடுக்கும் நோக்கில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக பஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/candidates-must-provide-educational-qualifications/">வேட்பாளர்கள் கல்வித் தகைமைகளை வழங்க வேண்டும்?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் வேட்பாளர்களின் கல்வி அல்லது ஏனைய தகைமைகள் உள்ளடங்கிய தரவு தாளை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்குவதை கட்டாயமாக்கும் அமைப்பை தயார் செய்யுமாறு தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் மற்றும் பல வெகுஜன அமைப்புகளும் தேர்தல் ஆணைய தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
<p>சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமைகள் தொடர்பில் நாட்டில் நிலவும் சர்ச்சைக்குரிய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படாமல் தடுக்கும் நோக்கில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக பஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.</p>
<p>கல்வி மற்றும் இதர தகுதிகள் வாக்காளர்களுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்ய உதவும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p>
<p>தேர்தல் ஆணையத்தின் ஊடாக அந்த முறையை நடைமுறைப்படுத்த முடியாத பட்சத்தில் அந்தந்த அரசியல் கட்சிகள் இணையம் ஊடாக அதனை நடைமுறைப்படுத்த முடியும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.</p>
<p>கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து வேட்பாளர்களின் அடிப்படை தரவுகளையும் சேகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் ஆயிரத்திற்கும் குறைவான வேட்பாளர்களே தகவல்களை வழங்கியதாக ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/candidates-must-provide-educational-qualifications/">வேட்பாளர்கள் கல்வித் தகைமைகளை வழங்க வேண்டும்?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் &#8211; ரணில்</title>
		<link>https://oruvan.com/sri-lanka-must-stick-with-imf-programme-in-good-times-and-bad-ranil/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Thu, 19 Dec 2024 14:04:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[IMF]]></category>
		<category><![CDATA[must]]></category>
		<category><![CDATA[programme]]></category>
		<category><![CDATA[Ranil]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=3271</guid>

					<description><![CDATA[<p>சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையின் கட்டமைப்பிற்குள் நாட்டின் பொருளாதாரம் தொடர்பான விமர்சனங்களை முன்வைக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். விசேட அறிக்கையொன்றை இன்று வியாழக்கிழமை அவர் இதனைத் தெரிவித்தார். ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்திருப்பதாவது, சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை முன்னெடுத்துச் செல்வதும், அதனைப் பாதுகாப்பதும் அவசியம். அந்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதற்கு அரசாங்கத்திற்கோ அல்லது எதிர்க்கட்சியினருக்கோ அதிகாரம் இல்லை உடன்படிக்கையில் இருந்து வெளியேறினால் நாட்டில் மீண்டும் பொருளாதாரப் பிரச்சினைகள் எழும். டிசம்பர் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lanka-must-stick-with-imf-programme-in-good-times-and-bad-ranil/">மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் &#8211; ரணில்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையின் கட்டமைப்பிற்குள் நாட்டின் பொருளாதாரம் தொடர்பான விமர்சனங்களை முன்வைக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.</p>
<p>விசேட அறிக்கையொன்றை இன்று வியாழக்கிழமை அவர் இதனைத் தெரிவித்தார்.</p>
<p>ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்திருப்பதாவது,</p>
<p>சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை முன்னெடுத்துச் செல்வதும், அதனைப் பாதுகாப்பதும் அவசியம்.</p>
<p>அந்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதற்கு அரசாங்கத்திற்கோ அல்லது எதிர்க்கட்சியினருக்கோ அதிகாரம் இல்லை</p>
<p>உடன்படிக்கையில் இருந்து வெளியேறினால் நாட்டில் மீண்டும் பொருளாதாரப் பிரச்சினைகள் எழும்.</p>
<p>டிசம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் புதிய சர்வதேச பிணைமுறி கூப்பன் வழங்குவதற்கு இலங்கை தயாராகி வருகின்றது. அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது நிறைவடைந்துள்ளன.</p>
<p>நாம் திவால்நிலையிலிருந்து வெளியே வந்துவிட்டோம் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும். அதன்பின்னர் வங்கிகளும் தேவையான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளும்” என்றார்.</p>
<p>இதேவேளை மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lanka-must-stick-with-imf-programme-in-good-times-and-bad-ranil/">மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் &#8211; ரணில்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
