<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Mumbai Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/mumbai/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/mumbai/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Thu, 26 Feb 2026 07:52:53 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Mumbai Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/mumbai/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பொடி லெஸ்ஸியை இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை</title>
		<link>https://oruvan.com/action-to-deport-podi-lassi-to-sri-lanka/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 26 Feb 2026 07:52:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Indian]]></category>
		<category><![CDATA[Mumbai]]></category>
		<category><![CDATA[Podi Lassi]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=45840</guid>

					<description><![CDATA[<p>இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவை சேர்ந்த பொடி லெஸ்ஸி எனப்படும் அருமஹந்தி ஜனித் மதுசங்க டி சில்வாவை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த நபர் இன்று இலங்கைக்கு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜதந்திர மட்டத்திலும் இன்டர்போல் மூலமாகவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக, இந்தியாவில் சட்ட நடவடிக்கைகள் முடிந்த பிறகு, சந்தேக நபர் இன்று (26) இலங்கைக்கு நாடு கடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக கொலைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/action-to-deport-podi-lassi-to-sri-lanka/">பொடி லெஸ்ஸியை இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவை சேர்ந்த பொடி லெஸ்ஸி எனப்படும் அருமஹந்தி ஜனித் மதுசங்க டி சில்வாவை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன்படி, குறித்த நபர் இன்று இலங்கைக்கு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இராஜதந்திர மட்டத்திலும் இன்டர்போல் மூலமாகவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக, இந்தியாவில் சட்ட நடவடிக்கைகள் முடிந்த பிறகு, சந்தேக நபர் இன்று (26) இலங்கைக்கு நாடு கடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>முன்னதாக கொலைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்த பொடி லெஸ்ஸி 2024 டிசம்பர் ஒன்பதாம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.</p>
<p>சிறையில் இருந்து விடுதலையான பின்னர், தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறி, அவர் சட்டவிரோதமாக கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார்.</p>
<p>போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இந்தியாவை விட்டு வெளியேற முயன்றபோது, ​​2025 ஜனவரி மாதம் மும்பையில் இந்திய பாதுகாப்புப் படையினரால் அவர் கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/action-to-deport-podi-lassi-to-sri-lanka/">பொடி லெஸ்ஸியை இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்தியாவில் சிக்கித் தவிக்கும் இலங்கை மாணவர்கள்! மும்பைக்கு அனுப்பப்படும் சிறப்பு விமானம்</title>
		<link>https://oruvan.com/nearly-70-sri-lankan-scouts-stranded-in-india/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Feb 2026 10:31:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Mumbai]]></category>
		<category><![CDATA[Sri Lankan Airlines]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=44556</guid>

					<description><![CDATA[<p>இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச சாரணர் முகாமில் பங்கேற்ற சுமார் 70 இலங்கை பாசடாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உடன் வந்த ஊழியர்கள் நேற்று (04) அதிகாலை முதல் மும்பை விமான நிலையத்தில் சிக்கித் தவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் உள்ள பல பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தக் குழு, நேற்று அதிகாலை 5.00 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL 142 மூலம் நாடு திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், அந்தக் குழு சரியான நேரத்தில் விமான நிலையத்திற்கு வரத் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/nearly-70-sri-lankan-scouts-stranded-in-india/">இந்தியாவில் சிக்கித் தவிக்கும் இலங்கை மாணவர்கள்! மும்பைக்கு அனுப்பப்படும் சிறப்பு விமானம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச சாரணர் முகாமில் பங்கேற்ற சுமார் 70 இலங்கை பாசடாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உடன் வந்த ஊழியர்கள் நேற்று (04) அதிகாலை முதல் மும்பை விமான நிலையத்தில் சிக்கித் தவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>இலங்கையில் உள்ள பல பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தக் குழு, நேற்று அதிகாலை 5.00 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL 142 மூலம் நாடு திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது.</p>
<p>எனினும், அந்தக் குழு சரியான நேரத்தில் விமான நிலையத்திற்கு வரத் தவறியதால், விமானம் பல காலி இருக்கைகளுடன் கட்டுநாயக்காவுக்குப் புறப்பட்டது.</p>
<p>மும்பை விமான நிலையத்திற்குச் செல்லும் பாதையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக தாமதம் ஏற்பட்டதாகவும், இதனால் சாரணர் குழு திட்டமிட்டபடி விமான நிலையத்தை அடைவது தடைப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>இதன் விளைவாக, இன்று பிற்பகல் வரை இலங்கைக்குத் திரும்புவது குறித்து அந்தக் குழு நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டது.</p>
<p>நிலைமையைத் தொடர்ந்து, அரசாங்கம் தலையிட்டு, சிக்கித் தவிக்கும் மாணவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வர ஒரு சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்துள்ளது.</p>
<p>அதன்படி, அதிகரிக்கப்பட்ட இருக்கை வசதியுடன் கூடிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL 144, இன்று மாலை மும்பைக்குப் புறப்பட்டு, இன்று இரவு 8.45 மணியளவில் கட்டுநாயக்காவை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/nearly-70-sri-lankan-scouts-stranded-in-india/">இந்தியாவில் சிக்கித் தவிக்கும் இலங்கை மாணவர்கள்! மும்பைக்கு அனுப்பப்படும் சிறப்பு விமானம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தரையிறங்கும் போது ஏர் இந்திய விமானத்தின் டயர்கள் வெடித்ததால் பரபரப்பு</title>
		<link>https://oruvan.com/air-india-plane-skidded-off-the-runway/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 21 Jul 2025 08:52:48 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Air India]]></category>
		<category><![CDATA[Mumbai]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=27210</guid>

					<description><![CDATA[<p>மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இன்று திங்கள்கிழமை காலை பெய்த கனமழை காரணமாக, தரையிறங்கும் போது ஏர் இந்தியா விமானம் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. A320 விமானம் பிரதான ஓடுபாதை 27 இல் இருந்து விலகி செப்பனிடப்படாத பகுதிக்குள் சென்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் விமானத்திற்கு சிறிய சேதங்கள் ஏற்பட்ட போதிலும் விமான [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/air-india-plane-skidded-off-the-runway/">தரையிறங்கும் போது ஏர் இந்திய விமானத்தின் டயர்கள் வெடித்ததால் பரபரப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இன்று திங்கள்கிழமை காலை பெய்த கனமழை காரணமாக, தரையிறங்கும் போது ஏர் இந்தியா விமானம் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>A320 விமானம் பிரதான ஓடுபாதை 27 இல் இருந்து விலகி செப்பனிடப்படாத பகுதிக்குள் சென்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.</p>
<p>எனினும், விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த சம்பவத்தில் விமானத்திற்கு சிறிய சேதங்கள் ஏற்பட்ட போதிலும் விமான நிறுத்துமிடத்திற்கு பாதுகாப்பாக கொண்டுச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பிரதான ஓடுபாதை மூடப்பட்டுள்ளது.</p>
<p>ஓடுபாதையில் இறங்கும்போது விமானத்தின் மூன்று சில்லுகளும் (டயர்கள்) வெடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், விமான நிலையத்தின் முதன்மை ஓடுபாதையில் சிறிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>
<p>&#8220;தொடர்ச்சியான செயல்பாடுகளை உறுதி செய்வதற்காக, இரண்டாம் நிலை ஓடுபாதை செயல்படுத்தப்பட்டுள்ளது,&#8221; என்று மும்பை விமான நிலைய செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.</p>
<p>தரையிறங்கிய பின்னர் ஏர் இந்திய விமானம் ஓடுபாதையில் இருந்து 16 முதல் 17 மீட்டர் தூரம் விலகிச் சென்றது, ஆனால் பாதுகாப்பாகத் திரும்பி விமான நிறுத்துமிடத்திற்கு சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>காலை 9.27 மணிக்கு கொச்சியிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானம் AI-2744 தரையிறங்கியபோது இந்த சம்பவத்தை எதிர்கொண்டிருந்தது.</p>
<p>இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) குழு விமான நிலையத்திற்கு விரைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/air-india-plane-skidded-off-the-runway/">தரையிறங்கும் போது ஏர் இந்திய விமானத்தின் டயர்கள் வெடித்ததால் பரபரப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு &#8211; 19 ஆண்டுகளுக்கு பின்னர் குற்றவாளிகள் 12 பேர் விடுதலை</title>
		<link>https://oruvan.com/mumbai-train-blast-case-12-convicts-acquitted-after-19-years/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 21 Jul 2025 07:52:36 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Mumbai]]></category>
		<category><![CDATA[Mumbai High Court]]></category>
		<category><![CDATA[mumbai train bomb blast]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=27204</guid>

					<description><![CDATA[<p>கடந்த 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற மும்பை ரயில் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தண்டனை விதிக்கப்பட்டிருந்த 12 பேரையும் விடுதலை செய்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் திகதி மும்பையின் புறநகரில் உள்ள ஏழு ரயில்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன. இதில் 188 பேர் கொல்லப்பட்டதுடன், 700க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் 13 பேர் கைது செய்யப்பட்டு ஒன்பது ஆண்டுகுள் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 192 பேரிடம் சாட்சியங்களும் பதிவுசெய்யப்பட்டிருந்தன. [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/mumbai-train-blast-case-12-convicts-acquitted-after-19-years/">மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு &#8211; 19 ஆண்டுகளுக்கு பின்னர் குற்றவாளிகள் 12 பேர் விடுதலை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கடந்த 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற மும்பை ரயில் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தண்டனை விதிக்கப்பட்டிருந்த 12 பேரையும் விடுதலை செய்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>
<p>கடந்த 2006ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் திகதி மும்பையின் புறநகரில் உள்ள ஏழு ரயில்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன. இதில் 188 பேர் கொல்லப்பட்டதுடன், 700க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருந்தனர்.</p>
<p>இந்த சம்பவம் தொடர்பில் 13 பேர் கைது செய்யப்பட்டு ஒன்பது ஆண்டுகுள் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 192 பேரிடம் சாட்சியங்களும் பதிவுசெய்யப்பட்டிருந்தன.</p>
<p>இதன்படி, கடந்த 2015ஆம் ஆண்டு விசாரணைகளின் நிறைவாக ஐந்து பேருக்கு மரண தண்டனையும், ஏழு பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்து.</p>
<p>இந்த தீர்ப்பிற்கு பின்னர், மகாராஷ்டிர அரசு குற்றவாளிகளின் மரண தண்டனை உறுதி செய்ய கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதே நேரத்தில், தண்டனையை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றில் பிரதிவாதிகள் மேல்முறையீடு செய்தனர்.</p>
<p>இந்நிலையில், விசாரணை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, உயர் நீதிமன்ற நீதிபதிகளான அனில் கிலோர் மற்றும் ஷியாம் சந்தக் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான வழக்கை நிரூபிக்க அரசு தரப்பு &#8220;முற்றிலும் தவறிவிட்டது&#8221; தெரிவித்துள்ளது.</p>
<p>&#8220;குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான வழக்கை நிரூபிக்க அரசு தரப்பு முற்றிலும் தவறிவிட்டதாகவும் எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டை நம்புவது கடினம் என நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p>
<p>எனவே, அவர்களின் தண்டனை ரத்து செய்யப்பட்டு, தள்ளுபடி செய்யப்படுவதாக,&#8221; மும்பை உயர் நீதிமன்ற அமர்வு கூறியது.</p>
<p>விசாரணையின் போது மீட்கப்பட்ட வெடிபொருட்கள், ஆயுதங்கள் மற்றும் வரைபடங்கள் குண்டுவெடிப்புகளுடன் தொடர்பில்லாததாகத் தெரிகிறது என்றும் நீதிமன்ற அமர்வு சுட்டிக்காட்டியுள்ளது.</p>
<p>மேலும், குண்டுவெடிப்புகளில் என்ன வகையான குண்டுகள் பயன்படுத்தப்பட்டன என்பதை அரசு தரப்பு நிரூபிக்க தவறியுள்ளதாகவும் மும்பை உயர் நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.</p>
<p>ந்தச் சம்பவம் நடந்த 19 ஆண்டுகளுக்கு பின்னர் குற்றவாளிகள் 12 பேரை நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பு அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/mumbai-train-blast-case-12-convicts-acquitted-after-19-years/">மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு &#8211; 19 ஆண்டுகளுக்கு பின்னர் குற்றவாளிகள் 12 பேர் விடுதலை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
