<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>MS DHONI Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/ms-dhoni/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/ms-dhoni/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Mon, 06 Apr 2026 11:31:13 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>MS DHONI Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/ms-dhoni/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>சென்னை அணியின் தொடர் தோல்வி &#8211; கடுமையாக எதிர்வினையாற்றிய அஸ்வின்</title>
		<link>https://oruvan.com/chennai-teams-consecutive-defeat-ashwin-reacts-strongly/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Apr 2026 11:31:13 +0000</pubDate>
				<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Chennai Super Kings]]></category>
		<category><![CDATA[CSK]]></category>
		<category><![CDATA[IPL 2026]]></category>
		<category><![CDATA[IPL News]]></category>
		<category><![CDATA[MS DHONI]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48055</guid>

					<description><![CDATA[<p>நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சந்தித்துவரும் அவலநிலைகள் குறித்து அந்த அணியின் முன்னாள் வீரர் ரவி அஸ்வின் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார். நேற்று ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்கு எதிராக அணி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அஸ்வின் இவ்வாறு கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார். சென்னை அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வுபெறும் முடிவு தனக்கு மிகுந்த வேதனையை அளித்ததாக அஸ்வின் இதன் போது குறிப்பிட்டுள்ளார். &#8220;நான் மனதளவில் மிகுந்த சிரமத்தில் இருந்தேன். என்னால் இன்னும் அதிகமாக விளையாடியிருக்க [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/chennai-teams-consecutive-defeat-ashwin-reacts-strongly/">சென்னை அணியின் தொடர் தோல்வி &#8211; கடுமையாக எதிர்வினையாற்றிய அஸ்வின்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சந்தித்துவரும் அவலநிலைகள் குறித்து அந்த அணியின் முன்னாள் வீரர் ரவி அஸ்வின் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.</p>
<p>நேற்று ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்கு எதிராக அணி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அஸ்வின் இவ்வாறு கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.</p>
<p>சென்னை அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வுபெறும் முடிவு தனக்கு மிகுந்த வேதனையை அளித்ததாக அஸ்வின் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>&#8220;நான் மனதளவில் மிகுந்த சிரமத்தில் இருந்தேன். என்னால் இன்னும் அதிகமாக விளையாடியிருக்க முடியும், ஆனால் அதற்கான ஆற்றல் என்னிடம் இல்லை. நான் சென்னையில் தொடங்கி சென்னையிலேயே முடிப்பேன் என்று நினைத்தேன்.</p>
<p>என்னை அணியில் வைத்திருப்பதா அல்லது விடுவிப்பதா என்ற தலைவலியை நிர்வாகத்திற்குக் கொடுக்க விரும்பாததால், நான் ஓய்வு பெற முடிவு செய்தேன்.</p>
<p>அது அவர்களுக்கு 10 கோடி ரூபாயை சேமிக்க உதவியது என்று அஸ்வின் கூறினார்.</p>
<p>கடந்த ஆண்டு அணியில் நடந்தவை குறித்து அதிகம் பேச விரும்பாத அஸ்வின், அது இன்னும் தன்னை பாதிப்பதாகக் கூறினார்.<br />
அனுபவமிக்க வீரர்களை விலக்கிவிட்டு இளம் வீரர்களை உள்ளே கொண்டுவரும் சென்னை அணியின் உத்தியையும் அஸ்வின் கேள்விக்குள்ளாக்கினார்.</p>
<p>இளம் வீரர்களுக்கு முறையான பயிற்சியையும் சூழலையும் வழங்குவதில் அணி தவறி வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.<br />
அவர்கள் துடுப்பாட்ட வீரர்கள் பலத்தைப் புரிந்து கொள்ளாமல் பந்து வீசுகிறார்கள்.</p>
<p>அன்ஷுல் கம்போஜ் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோர் தங்களுடைய பாணிக்கு மாறான &#8216;வைட் யோர்க்கர்களை&#8217; வீசியதுதான், டிம் டேவிட் மற்றும் ஏனைய வீரர்கள் சென்னை அணியை வீழ்த்தியதற்கு காரணம் என்றும் அஸ்வின் விமர்சித்தார்.</p>
<p>இந்த பருவத்தில் முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்த சென்னை அணி, புள்ளிப் பட்டியலில் பின்தங்கியுள்ளது. அந்த அணியால் தற்போது ஒரு முறையான ஆடும் பதினொருவர் அணியை கூட அமைக்க முடியவில்லை.</p>
<p>நேற்றையப் போட்டியில் பெங்களூருவிடம் அடைந்த தோல்வியும் அணியின் நம்பிக்கையைப் பாதித்துள்ளது.</p>
<p>பெங்களூரு அணி நல்ல நிலையில் இருப்பதாகவும், அவர்கள் மற்ற அணிகளுக்கு ஒரு பெரிய எச்சரிக்கையை விடுத்து வருவதாகவும் அஸ்வின் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/chennai-teams-consecutive-defeat-ashwin-reacts-strongly/">சென்னை அணியின் தொடர் தோல்வி &#8211; கடுமையாக எதிர்வினையாற்றிய அஸ்வின்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால் &#8211; தோனியின் கவலை</title>
		<link>https://oruvan.com/the-challenge-awaiting-the-indian-team-dhonis-concern/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 04 Feb 2026 07:15:54 +0000</pubDate>
				<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[MS DHONI]]></category>
		<category><![CDATA[MSD]]></category>
		<category><![CDATA[T20 Wold Cup]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=44425</guid>

					<description><![CDATA[<p>டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் விரைவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார். இதன்படி, பனி பொழிவு இந்திய அணிக்கு பெரும் சவாலாக இருக்கும் என தோனி சுட்டிக்காட்டியுள்ளார். விளையாட்டு தொகுப்பாளர் ஜதின் சாம்ப்ரு எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய தோனி இவ்வாறு கூறியுள்ளார். &#8220;இந்திய அணி மிகவும் ஆபத்தான அணி. துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் இந்திய அணி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-challenge-awaiting-the-indian-team-dhonis-concern/">இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால் &#8211; தோனியின் கவலை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் விரைவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.</p>
<p>இதன்படி, பனி பொழிவு இந்திய அணிக்கு பெரும் சவாலாக இருக்கும் என தோனி சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>விளையாட்டு தொகுப்பாளர் ஜதின் சாம்ப்ரு எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய தோனி இவ்வாறு கூறியுள்ளார்.</p>
<p>&#8220;இந்திய அணி மிகவும் ஆபத்தான அணி. துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் இந்திய அணி மிகவும் ஆபத்தானது.</p>
<p>தற்போதைய அணிக்கு அனுபவம் உள்ளது, குறிப்பாக டி20 வடிவத்தில் மிகுந்த அனுபவம் உள்ளது.</p>
<p>வீரர்கள் அழுத்தத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்டுள்ளனர், மேலும் அனைவரும் தங்களின் பாத்திரங்களை சிறப்பாக செய்கிறார்கள்.</p>
<p>ஆனாலும் எனக்கு மிகப்பெரிய கவலை பனி பொழிவு தான்.</p>
<p>எனெனில் பனிப் பொழிவு போட்டியின் போக்கை முற்றிலும் மாற்றிவிடும் என தோனி சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>&#8220;நான் விளையாடும்போது, ​​பனிப் பொழிவை கண்டு மிகவும் பயந்துள்ளேன். இதுபோன்ற சமயங்களில்,  நாணய சுழற்சி உங்களுக்கு மிக முக்கியமானதாகிவிடும்.</p>
<p>சிறந்த அணிகளுக்கு எதிராக 10 போட்டிகளில் விளையாடினால், நாங்கள் வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும்.</p>
<p>எனினும், எங்கள் வீரர்கள் மோசமான நாளையும், எதிர் அணி நல்ல நாளையும் அனுபவிக்கும்போது சந்தரப்பம் எழும், இது டி20 கிரிக்கெட்டில் அடிக்கடி நடக்கும்.</p>
<p>இந்த சந்தர்ப்பம் லீக் கட்டத்திலோ அல்லது நாக் அவுட் கட்டத்திலோ எந்த நேரத்திலும் நிகழலாம்&#8221; என்று தோனி மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/the-challenge-awaiting-the-indian-team-dhonis-concern/">இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால் &#8211; தோனியின் கவலை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தோனியின் சகாப்தம் முடிகின்றதா? இளம் வீரர்களை தட்டித்தூக்கிய சென்னை</title>
		<link>https://oruvan.com/is-dhonis-era-over-chennai-taps-young-players/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 17 Dec 2025 10:39:48 +0000</pubDate>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Chennai Super Kings]]></category>
		<category><![CDATA[CSK]]></category>
		<category><![CDATA[IPL]]></category>
		<category><![CDATA[IPL 2026]]></category>
		<category><![CDATA[IPL Mini Auction]]></category>
		<category><![CDATA[MS DHONI]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=40870</guid>

					<description><![CDATA[<p>சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி 2026 ஐபிஎல் சீசனுக்காக விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முதலீடு செய்துள்ளது. நேற்று நடந்து முடிந்த மினி ஏலத்தில் சுமார் 32 கோடி இந்திய ரூபாயை இரண்டு வீரர்களுக்காக செலவிட்டுள்ளது. இந்தத் தொகை அணியின் திறன்களை மேம்படுத்துவதற்காக மட்டுமல்லாமல், தோனிக்குப் பிறகு எதிர்காலத்திற்கு சென்னை அணி தயாராகி வருவதையும் குறிக்கிறது. தோனியை அணி தக்க வைத்துக் கொண்டிருக்கலாம் என்றாலும், இந்த முதலீடு எதிர்காலத்திற்கான ஒரு உத்தியையும் ஒரு வாரிசை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/is-dhonis-era-over-chennai-taps-young-players/">தோனியின் சகாப்தம் முடிகின்றதா? இளம் வீரர்களை தட்டித்தூக்கிய சென்னை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி 2026 ஐபிஎல் சீசனுக்காக விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முதலீடு செய்துள்ளது.</p>
<p>நேற்று நடந்து முடிந்த மினி ஏலத்தில் சுமார் 32 கோடி இந்திய ரூபாயை இரண்டு வீரர்களுக்காக செலவிட்டுள்ளது.</p>
<p>இந்தத் தொகை அணியின் திறன்களை மேம்படுத்துவதற்காக மட்டுமல்லாமல், தோனிக்குப் பிறகு எதிர்காலத்திற்கு சென்னை அணி தயாராகி வருவதையும் குறிக்கிறது.</p>
<p>தோனியை அணி தக்க வைத்துக் கொண்டிருக்கலாம் என்றாலும், இந்த முதலீடு எதிர்காலத்திற்கான ஒரு உத்தியையும் ஒரு வாரிசை உருவாக்குவதையும் தெளிவாகக் குறிக்கிறது.</p>
<p>நேற்று செலவிட்ட தொகையே இதை பறைசாற்றுகின்றன. 19 வயதான கார்த்திக் சர்மாவை சென்னை 14.20 கோடிக்கு வாங்கியுள்ளது. முன்னதாக, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சனை 18 கோடிக்கு சென்னை அணி வாங்கியது.</p>
<p>உர்வில் படேலை தக்கவைத்துக் கொண்டதன் மூலம், அணியில் இப்போது நான்கு விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்கள் (சஞ்சு சாம்சன், எம்எஸ் தோனி, உர்வில் படேல் மற்றும் கார்த்திக் சர்மா) உள்ளனர்.</p>
<p>2008 முதல் தோனியை மட்டுமே நம்பியிருக்கும் அணிக்கு இந்த நடவடிக்கை நம்பிக்கையை கொடுத்துள்ளது.</p>
<p>தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் சமீபத்தில் சென்னை அணியின் உத்தியில் பெரிய மாற்றத்தைச் செய்துள்ளதாக ஒப்புக்கொண்டார்.</p>
<p>சென்னை அணி தனது மொத்த கையிருப்பான 43.40 கோடியில் 60 வீதத்தை இரண்டு புதிய வீரர்களுக்காக மட்டுமே செலவிட்டது, இது அவர்களின் பாரம்பரிய கொள்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.</p>
<p>44 வயதான தோனி தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை, ஆனால் அவரது சமீபத்திய அறிக்கைகள் அவரது வாழ்க்கை அதன் இறுதி கட்டத்தில் இருப்பதை தெளிவாகக் காட்டுகின்றன.</p>
<p>&#8220;நான் என் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இருக்கிறேன் என்பதில் இருந்து தப்பிக்க முடியாது. நான் என் வாழ்க்கையை முழுமையாக முடித்துவிட்டேன் என்று சொல்லவில்லை.</p>
<p>ஆனால் அடுத்த சீசனுக்கான உறுதியான உறுதிப்பாடுகள் இன்னும் எனக்கு இல்லை.&#8221; என்று தோனி அண்மையில் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/is-dhonis-era-over-chennai-taps-young-players/">தோனியின் சகாப்தம் முடிகின்றதா? இளம் வீரர்களை தட்டித்தூக்கிய சென்னை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தோனிக்கு முக்கிய பதவி &#8211; பி.சி.சி.ஐ எடுத்துள்ள தீர்மானம்</title>
		<link>https://oruvan.com/important-post-for-dhoni-bccis-decision/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 31 Aug 2025 10:21:34 +0000</pubDate>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[BCCI]]></category>
		<category><![CDATA[Dhoni]]></category>
		<category><![CDATA[MS DHONI]]></category>
		<category><![CDATA[MSD]]></category>
		<category><![CDATA[Team India]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=31222</guid>

					<description><![CDATA[<p>இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து சுமார் ஆறு ஆண்டுகள் ஆகியிருந்தாலும் இன்றளவும் அவர் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். அதோடு வளர்ந்து வரும் வீரர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக இருந்து வருகிறார். இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரோடு அவர் ஒட்டுமொத்தமாக ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி தோனி அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவித்த பிறகு என்ன [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/important-post-for-dhoni-bccis-decision/">தோனிக்கு முக்கிய பதவி &#8211; பி.சி.சி.ஐ எடுத்துள்ள தீர்மானம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து சுமார் ஆறு ஆண்டுகள் ஆகியிருந்தாலும் இன்றளவும் அவர் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.</p>
<p>அதோடு வளர்ந்து வரும் வீரர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக இருந்து வருகிறார். இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரோடு அவர் ஒட்டுமொத்தமாக ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>அப்படி தோனி அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவித்த பிறகு என்ன திட்டங்களை வைத்துள்ளார்? என்பது குறித்து இதுவரை அவர் எந்த ஒரு உறுதியான பதிலையும் அளிக்கவில்லை.</p>
<p>இந்நிலையில் இந்திய கிரிக்கெட் சபையான பி.சி.சி.ஐ அடுத்த ஆண்டு தோனிக்கு மீண்டும் ஒரு முக்கிய பதவியை வழங்க காத்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.</p>
<p>அந்த வகையில் ஏற்கனவே கடந்த 2021ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் நடைபெற்ற வேளையில் இந்திய அணியின் ஆலோசகராக தோனி செயல்பட்டார்.</p>
<p>அப்போதைய தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி அணியில் இருந்தாலும் வீரர்களுக்கு ஆலோசனை வழங்கும் ஒரு முக்கிய பொறுப்பினை தோனி சம்பளம் எதுவும் பெறாமல் செய்திருந்தார்.</p>
<p>ஆனால் அந்த தொடரில் இந்திய அணி லீக் சுற்றோடு வெளியேறியிருந்தது.</p>
<p>இந்நிலையில் தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியாவில் நடைபெற இருக்கும் 2026 டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக தோனியை நியமிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p>
<p>மேலும் இது தொடர்பாக தோனியை பி.சி.சி.ஐ நிர்வாகம் அணுகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த பதவியை தோனி ஏற்பாரா? இந்திய அணியுடன் இணைந்து செயல்படுவாரா? என்பது அவர் எடுக்கப்போகும் முடிவில் தான் இருக்கிறது.</p>
<p>ஏனெனில் ஏற்கனவே தோனிக்கும் கம்பீருக்கும் செட் ஆகாது என்று பேசப்படும் வரும் வேளையில் தற்போது பயிற்சியாளராக கம்பீர் இந்திய அணியில் இருக்கும் தருவாயில் தோனி எப்படி அணிக்குள் வருவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/important-post-for-dhoni-bccis-decision/">தோனிக்கு முக்கிய பதவி &#8211; பி.சி.சி.ஐ எடுத்துள்ள தீர்மானம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சஞ்சு சாம்சன் மட்டும் இல்லை&#8230; 35 வயது வீரரையும் வாங்கும் சென்னை அணி?</title>
		<link>https://oruvan.com/not-just-sanju-samson-will-chennai-team-also-buy-a-35-year-old-player/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 06 Jul 2025 08:39:50 +0000</pubDate>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Chennai Super Kings]]></category>
		<category><![CDATA[CSK]]></category>
		<category><![CDATA[IPL 2025]]></category>
		<category><![CDATA[IPL 2026]]></category>
		<category><![CDATA[MS DHONI]]></category>
		<category><![CDATA[சஞ்சு சாம்சன்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=25755</guid>

					<description><![CDATA[<p>ஐபிஎல் 2025 சீசன் முடிவடைந்தாலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் டிரேடிங் செயல்முறைகள் தான் தற்போது அதிக கவனம் பெறுகின்றன. ஏனெனில், இந்த டிரேடிங் முறையின் மூலம் அணிகள், எதிர்கால சீசனுக்கான தங்களின் பிளேயிங் லெவனை வலுப்படுத்த திட்டமிடுகின்றன. அந்தவகையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸை சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) தங்கள் அணிக்குள் கொண்டுவர முயற்சி செய்து வருவதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. அவுஸ்திரேலியாவை சேர்ந்த 35 வயது ஸ்டோய்னிஸின் ஆட்டத்திறமை மீது சென்னை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/not-just-sanju-samson-will-chennai-team-also-buy-a-35-year-old-player/">சஞ்சு சாம்சன் மட்டும் இல்லை&#8230; 35 வயது வீரரையும் வாங்கும் சென்னை அணி?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஐபிஎல் 2025 சீசன் முடிவடைந்தாலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் டிரேடிங் செயல்முறைகள் தான் தற்போது அதிக கவனம் பெறுகின்றன. ஏனெனில், இந்த டிரேடிங் முறையின் மூலம் அணிகள், எதிர்கால சீசனுக்கான தங்களின் பிளேயிங் லெவனை வலுப்படுத்த திட்டமிடுகின்றன.</p>
<p>அந்தவகையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸை சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) தங்கள் அணிக்குள் கொண்டுவர முயற்சி செய்து வருவதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
<p>அவுஸ்திரேலியாவை சேர்ந்த 35 வயது ஸ்டோய்னிஸின் ஆட்டத்திறமை மீது சென்னை அணி உயர்ந்த நம்பிக்கையுடன் உள்ளது.</p>
<p>2025 ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயாண்ட்ஸ் அணிக்காக விளையாடிய ஸ்டோய்னிஸ், சென்னைக்கு எதிரான போட்டியில் சென்னையின் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் சதம் விளாசியதும், அந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்ததும் இன்னும் ரசிகர்கள் நினைவில் உள்ளது.</p>
<p>அதன் பின் அவரைத் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்க விருப்பமாக இருந்ததாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>துடுப்பாட்டத்தில் மட்டுமல்லாமல், பந்துவீச்சிலும் திறமையுடன் செயல்படக்கூடிய ஸ்டோய்னிஸை டிரேடிங் முறையில் கைப்பற்றுவதற்கு சென்னை அணி தீவிரமாக முனைந்துள்ளது.</p>
<p>இதற்காக பஞ்சாப் அணியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர் நாதன் எல்லிஸை பஞ்சாப் கேட்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.</p>
<p>ஏற்கனவே எல்லிஸ், பஞ்சாப் அணிக்காக விளையாடிய அனுபவம் உள்ளவர் என்பதால், இந்த பரிமாற்றம் விரைவில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>மேலும், ராஜஸ்தான் அணியின் அணியின் சஞ்சு சாம்சன், குஜராத் அணியின் வாஷிங்டன் சுந்தர் மற்றும் பினிஷர் ராகுல் தெவட்டியாவையும் சென்னை அணி இலக்காகக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>இது சென்னை அணி தங்கள் அடுத்த சீசனுக்கான அணியை மிகவும் திட்டமிடப்பட்ட முறையில் உருவாக்கிக்கொண்டு இருப்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.</p>
<p>மொத்தத்தில், 2026 சீசனுக்கு முன்பே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வலுவூட்டும் நடவடிக்கைகள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/not-just-sanju-samson-will-chennai-team-also-buy-a-35-year-old-player/">சஞ்சு சாம்சன் மட்டும் இல்லை&#8230; 35 வயது வீரரையும் வாங்கும் சென்னை அணி?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தோனி விளையாடும் கடைசிப் போட்டி &#8211; திருவிழா போல் கொண்டாடுமாறு ரசிகர்களிடம் கோரிக்கை</title>
		<link>https://oruvan.com/mohammad-kaif-has-urged-the-fans-to-celebrate-the-gujarat-titans-vs-chennai-super-kings-ipl-2025-match-like-a-festival/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 25 May 2025 07:42:07 +0000</pubDate>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[CSK]]></category>
		<category><![CDATA[IPL]]></category>
		<category><![CDATA[IPL 2025]]></category>
		<category><![CDATA[IPL News]]></category>
		<category><![CDATA[MS DHONI]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=21275</guid>

					<description><![CDATA[<p>நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இறுதி லீக் போட்டியில் சென்னை அணி இன்று விளையாடவுள்ள நிலையில், இந்தப் போட்டியை திருவிழா போல கொண்டாடுமாறு முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் ரசிகர்களை வலியுறுத்தியுள்ளார். ஏனெனில், ஒரு தலைவராகவும், அணியின் வீரராகவும் தோனியின் கடைசிப் போட்டியாக இது இருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று பகல் இடம்பெறவுள்ள சென்னை அணியின் கடைசி லீக் போட்டியை 43 வயதான தோனி வழிநடத்தவுள்ளார். தொடரின் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/mohammad-kaif-has-urged-the-fans-to-celebrate-the-gujarat-titans-vs-chennai-super-kings-ipl-2025-match-like-a-festival/">தோனி விளையாடும் கடைசிப் போட்டி &#8211; திருவிழா போல் கொண்டாடுமாறு ரசிகர்களிடம் கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இறுதி லீக் போட்டியில் சென்னை அணி இன்று விளையாடவுள்ள நிலையில், இந்தப் போட்டியை திருவிழா போல கொண்டாடுமாறு முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் ரசிகர்களை வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>ஏனெனில், ஒரு தலைவராகவும், அணியின் வீரராகவும் தோனியின் கடைசிப் போட்டியாக இது இருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று பகல் இடம்பெறவுள்ள சென்னை அணியின் கடைசி லீக் போட்டியை 43 வயதான தோனி வழிநடத்தவுள்ளார்.</p>
<p>தொடரின் ஆரம்பத்தில் சென்னை அணியின் தலைவராக ருதுராஜ் கெய்க்வாட் செயற்பட்டார். ஆனால் முழங்கை எலும்பு முறிவு காரணமாக அவர் தொடரின் பாதியிலேயே வெளியேறினார்.</p>
<p>இதனையடுத்து அணி நிர்வாகம் தலைமைப் பதவியை தோனியிடம் ஒப்படைத்தது. எனினும், சென்னை அணியின் தோல்வியை அவராலும் தடுக்க முடியவில்லை. துடுப்பாட்டம், பந்துவீச்சு என அனைத்து துறையிலும், சென்னை அணி பலவீனமாக காணப்படுகின்றது.</p>
<p>இந்நிலையில், தோனி இந்த தொடருடன் ஓய்வு பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இது குறித்து தோனி வெளிப்படையாக பேசவில்லை. தற்போது அடுத்த பதிப்பிற்கான அணியை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.</p>
<p>இந்நிலையில், குஜராத் அணியுடன் சென்னை அணி இன்று பகல் மோதவுள்ளது. இந்தப் போட்டியை ரசிகர்கள் ஒரு திருவிழா போல கொண்டாட வேண்டும், ஏனெனில் இது தோனியின் கடைசி போட்டியாக இருக்கலாம்.</p>
<p>அவர் ஒரு தலைவராகவும், வீரராகவும் கடைசியாக ஒரு முறை மைதானத்தில் நுழைவார். அவருக்கு அன்பைக் கொடுத்து மைதானத்தை மஞ்சள் வண்ணம் தீட்ட வேண்டும்,&#8221; என்று முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.</p>
<p>&#8220;அவர் கடைசி போட்டியில் வெற்றி பெற விரும்புகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் தான் தோனி, தோனி தான் சென்னை சூப்பர் கிங்ஸ்.</p>
<p>எட்டு மாதங்கள் கிரிக்கெட்டிலிருந்து விலகியிருந்த பின்னர் மூன்று மாதங்கள் விளையாடுவது கடினம். இந்த ஆண்டு தோனி அதைப் புரிந்துகொண்டார்,&#8221; என்று முகமது கைஃப் மேலும் கூறினார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/mohammad-kaif-has-urged-the-fans-to-celebrate-the-gujarat-titans-vs-chennai-super-kings-ipl-2025-match-like-a-festival/">தோனி விளையாடும் கடைசிப் போட்டி &#8211; திருவிழா போல் கொண்டாடுமாறு ரசிகர்களிடம் கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மிகப்பெரிய வாய்ப்பு &#8211; ஆனால், தோனி விடுவாரா?</title>
		<link>https://oruvan.com/gurjat-team-has-a-chance-to-top-the-ipl-points-table/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 25 May 2025 07:17:08 +0000</pubDate>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[CSK]]></category>
		<category><![CDATA[Gujarat Titans]]></category>
		<category><![CDATA[IPL]]></category>
		<category><![CDATA[IPL 2025]]></category>
		<category><![CDATA[IPL Cricket]]></category>
		<category><![CDATA[IPL News]]></category>
		<category><![CDATA[MS DHONI]]></category>
		<category><![CDATA[Shubman Gill]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=21272</guid>

					<description><![CDATA[<p>ஐபிஎல் 2025 தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் &#8211; குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் குஜராத் அணி ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்துக்கு செல்லும். இதன் மூலம் ஐபிஎல் குவாலிபயர் 1 போட்டிகளை குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடும். இப்படியான ஒரு மிகப்பெரிய வாய்ப்பு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கிடைத்திருக்கிறது. நேற்று நடைபெற்ற டெல்லி கேப்பிட்டல் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியதால் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/gurjat-team-has-a-chance-to-top-the-ipl-points-table/">குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மிகப்பெரிய வாய்ப்பு &#8211; ஆனால், தோனி விடுவாரா?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஐபிஎல் 2025 தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் &#8211; குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் குஜராத் அணி ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்துக்கு செல்லும்.</p>
<p>இதன் மூலம் ஐபிஎல் குவாலிபயர் 1 போட்டிகளை குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடும். இப்படியான ஒரு மிகப்பெரிய வாய்ப்பு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கிடைத்திருக்கிறது.</p>
<p>நேற்று நடைபெற்ற டெல்லி கேப்பிட்டல் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியதால் இந்த வாய்ப்பு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கிடைத்திருக்கிறது.</p>
<p>ஒருவேளை பஞ்சாப் கிங்ஸ் அணி நேற்றைய போட்டியில் வெற்றி பெற்று அந்த அணி கடைசியாக விளையாடும் போட்டியிலும் வெற்றி பெற்று இருந்தால் ஐபிஎல் 2025 தொடரின் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றிருக்க முடியும்.</p>
<p>அந்த வாய்ப்பை பஞ்சாப் கிங்ஸ் அணி இப்போது இழந்திருக்கிறது. இப்போது இந்த வாய்ப்பு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கிடைத்திருக்கிறது.</p>
<p>இன்று இரவு நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றால் 18 புள்ளிகளுடன் இருக்கும் அந்த அணி 20 புள்ளிகளைப் பெற்று ஐபிஎல் 2025 புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும்.</p>
<p>ஆனால் குஜராத் அணியின் இந்த கனவு அவ்வளவு எளிதாக நிறைவேறி விட வாய்ப்பு இல்லை.</p>
<p>ஏனென்றால் எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இப்போட்டியில் வெற்றி பெற்று ஐபிஎல் 2025 தொடரை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறது.</p>
<p>அப்படியான சூழலில் குஜராத் டைட்டன்ஸ் அணி இப்போட்டியை அவ்வளவு எளிதாக வென்று விட வாய்ப்பு இல்லை.</p>
<p>குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இருக்கும் ஒரே ஒரு சாதகமான விஷயம் என்னவென்றால் இந்த போட்டி குஜராத் அணியின் சொந்த மைதானமான அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது.</p>
<p>சூழல் சாதகமாக இருப்பதை பயன்படுத்திக் கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது அந்த அணி ஆதிக்கம் செலுத்தலாம். ஆனால் சிஎஸ்கே அணியை பொறுத்தவரை இப்போட்டியை வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கிறது.</p>
<p>13 போட்டியில் விளையாடி இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது ஒரு வேளை இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் நான்காவது வெற்றியாக அந்த அணிக்கு இருக்கும்.</p>
<p>அத்துடன் இந்த ஐபிஎல் போட்டியில் மிகக் குறைந்த வெற்றிகளை பெற்றிருக்கும் ராஜஸ்தான் அணிக்கு நிகரான வெற்றி பெற்று இருக்கிறோம் என்ற ஆறுதலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் பெற்றுக் கொள்ள முடியும்.</p>
<p>இதற்காகவாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற கடினமாக முயற்சிக்கும்.</p>
<p>குஜராத் டைட்டன்ஸ் அணி இப் போட்டியில் தோற்றால், ஐபிஎல் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிப்பதற்காக பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி ஆகிய அணிகளின் கடைசி ஆட்டங்களின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும்.</p>
<p>ஏனென்றால் குஜராத் டைட்டன்ஸ் அணி இன்றைய போட்டியில் தோற்று, பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி அணிகள் முறையே தங்களது கடைசி போட்டிகளில் வெற்றி பெற்றால் அந்த இரு அணிகளும் ஐபிஎல் புள்ளி பட்டியலில் முதல் 2 இடத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது.</p>
<p>குவாலிஃபயர் முதல் சுற்றில் விளையாட வேண்டும் என்றால் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இன்றைய போட்டி வெற்றி மிக மிக முக்கியமானது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/gurjat-team-has-a-chance-to-top-the-ipl-points-table/">குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மிகப்பெரிய வாய்ப்பு &#8211; ஆனால், தோனி விடுவாரா?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஐ.பி.எல் தொடரிலிருந்து முதலாவது அணியாக வெளியேறிய சிஎஸ்கே</title>
		<link>https://oruvan.com/csk-becomes-first-team-to-exit-ipl/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 01 May 2025 10:30:43 +0000</pubDate>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Chennai Super Kings]]></category>
		<category><![CDATA[CSK]]></category>
		<category><![CDATA[IPL]]></category>
		<category><![CDATA[IPL 2025]]></category>
		<category><![CDATA[IPL Cricket]]></category>
		<category><![CDATA[MS DHONI]]></category>
		<category><![CDATA[MSD]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=19035</guid>

					<description><![CDATA[<p>நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து முதல் அணியாக சென்னை அணி வெளியேறியுள்ளது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்ற நிலையில், பிளே ஓப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை அந்த அணி இழந்துள்ளது. இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு எதிரான நேற்றையப் (30) போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/csk-becomes-first-team-to-exit-ipl/">ஐ.பி.எல் தொடரிலிருந்து முதலாவது அணியாக வெளியேறிய சிஎஸ்கே</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து முதல் அணியாக சென்னை அணி வெளியேறியுள்ளது.</p>
<p>இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்ற நிலையில், பிளே ஓப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை அந்த அணி இழந்துள்ளது.</p>
<p>இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு எதிரான நேற்றையப் (30) போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.</p>
<p>போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.</p>
<p>இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 190 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.</p>
<p>சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் சாம் கரன் அதிகபட்சமாக 88 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.</p>
<p>இதனையடுத்து 191 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.</p>
<p>பஞ்சாப் கிங்ஸ் அணியின் சார்பில் ஸ்ரேயாஸ் ஐயர் அதிகபட்சமாக 72 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். போட்டியின் ஆட்டநாயகனாக ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவு செய்யப்பட்டார்.</p>
<p>இதற்கமைய 2025 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரிலிருந்து முதலாவது அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியுள்ளது.</p>
<p>18 ஆண்டு கால ஐ.பி.எல் வரலாற்றின் முதல் முறையாக சென்னை அணி தொடர்ந்து இரண்டு முறை பிளே ஓப் சுற்றுக்கு தகுதிபெறாமல் வெளியேறியுள்ளது.</p>
<p>ஐந்து முறை கிண்ணம் வென்றுள்ள சென்னை அணி, முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேற முதல் சந்தர்ப்பமும் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/csk-becomes-first-team-to-exit-ipl/">ஐ.பி.எல் தொடரிலிருந்து முதலாவது அணியாக வெளியேறிய சிஎஸ்கே</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ரிஷப் பந்த்தை வாங்குவதில் ஆர்வம் காட்டிய சிஎஸ்கே &#8211; மெகா ஏலத்தின் இறுதியில் நடந்த ட்விஸ்ட்</title>
		<link>https://oruvan.com/csk-interested-in-buying-rishabh-pant/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 23 Apr 2025 08:30:33 +0000</pubDate>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Chennai Super Kings]]></category>
		<category><![CDATA[CSK]]></category>
		<category><![CDATA[IPL 2025]]></category>
		<category><![CDATA[IPL 2025 MEGA Auction]]></category>
		<category><![CDATA[IPL Cricket]]></category>
		<category><![CDATA[MS DHONI]]></category>
		<category><![CDATA[MSD]]></category>
		<category><![CDATA[Rishabh Pant]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=18125</guid>

					<description><![CDATA[<p>நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் அணியின் தலைவர் ரிஷப் பந்த் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சுமார் 27 கோடிக்கு வாங்கப்பட்ட அவர் அணிக்கு ஒரு சுமையாக மாறி வருவதாகக் கருதப்படுகிறது. டெல்லி அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியிலும் அவர் ஓட்டங்கள் எடுக்க தவறியிருந்தார். இந்த தொடரில் இதுவரை அவர் ஒரேயொரு அரைச் சதத்தை மட்டுமே அடித்துள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் சவூதி அரேபியாவில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தின் போது, ரிஷப் பந்த் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/csk-interested-in-buying-rishabh-pant/">ரிஷப் பந்த்தை வாங்குவதில் ஆர்வம் காட்டிய சிஎஸ்கே &#8211; மெகா ஏலத்தின் இறுதியில் நடந்த ட்விஸ்ட்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் அணியின் தலைவர் ரிஷப் பந்த் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சுமார் 27 கோடிக்கு வாங்கப்பட்ட அவர் அணிக்கு ஒரு சுமையாக மாறி வருவதாகக் கருதப்படுகிறது.</p>
<p>டெல்லி அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியிலும் அவர் ஓட்டங்கள் எடுக்க தவறியிருந்தார். இந்த தொடரில் இதுவரை அவர் ஒரேயொரு அரைச் சதத்தை மட்டுமே அடித்துள்ளார்.</p>
<p>இந்நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் சவூதி அரேபியாவில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தின் போது, ரிஷப் பந்த் வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆர்வம் கொண்டிருந்ததாக தற்போது தகவல்கள் வெளியாகியள்ளன.</p>
<p>தி இந்து பத்திரிகையின் செய்தியாளர் ஒருவர் எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.</p>
<p>அவரின் கூற்றுப்படி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தோனி ஆகியோர் ரிஷப் பந்த்தை அணிக்குள் கொண்டு வருவதில் மிகவும் ஆர்வம் காட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>எனினும், ரிஷப் பந்த் தலைவர் பதிவியை கோரியதாக அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் தோனி ரிஷப் பந்த்தை தொடர்புகொண்டு பேசியதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மெகா ஏலத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வரை, சென்னை அணி இரண்டு வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடிவுசெய்திருந்தது. பந்த்தை ஏலத்தில் வாக்குவதே அவர்களின் முடிவு என்பதை இது தெளிவுப்படுத்துகின்றது.</p>
<p>எவ்வாறாயினும், சென்னை அணியில் முதலில் ஒரு வீரராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள விரும்பினாலும், தலைவர் பதவியை விரும்புவதில் பந்த் பிடிவாதமாக இருந்தார்.</p>
<p>ஆனால் சென்னை அணி அந்த கோரிக்கை ஏற்கவில்லை எனவும், இறுதியில் மீதமுள்ள மூன்று வீரர்களைத் தக்க வைத்துக் கொண்டதாகவும் அவரின் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/csk-interested-in-buying-rishabh-pant/">ரிஷப் பந்த்தை வாங்குவதில் ஆர்வம் காட்டிய சிஎஸ்கே &#8211; மெகா ஏலத்தின் இறுதியில் நடந்த ட்விஸ்ட்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தோனி மரியாதையை இழந்து வருகின்றார் &#8211; மனோஜ் திவாரி</title>
		<link>https://oruvan.com/dhoni-is-losing-respect-manoj-tiwary/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 06 Apr 2025 04:01:16 +0000</pubDate>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Chennai Super Kings]]></category>
		<category><![CDATA[CSK]]></category>
		<category><![CDATA[IPL]]></category>
		<category><![CDATA[IPL 2025]]></category>
		<category><![CDATA[IPL Cricket]]></category>
		<category><![CDATA[IPL News]]></category>
		<category><![CDATA[Manoj Tiwary]]></category>
		<category><![CDATA[MS DHONI]]></category>
		<category><![CDATA[எம்.எஸ் தோனி]]></category>
		<category><![CDATA[ஐபிஎல்]]></category>
		<category><![CDATA[தோனி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=16966</guid>

					<description><![CDATA[<p>2023 ஐபிஎல் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் வெற்றிபெற்ற போது எம்.எஸ் தோனி ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்றும், இப்போது ரசிகர்களின் மரியாதையை இழந்து வருவதாகவும் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கூறியுள்ளார். சென்னை அணியில் தொடர்ந்து முக்கிய வீரராக இருக்கும் தோனி, இந்த சீசனில் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டார், சென்னை அணி லீக்கில் தடுமாறி வருகிறது. இதுவரை விளையாடிய 4 போட்டிகளில், தோனி 76 ஓட்டங்களை மட்டுமே எடுத்துள்ளார், இதனால், ரசிகர்களும் நிபுணர்களும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/dhoni-is-losing-respect-manoj-tiwary/">தோனி மரியாதையை இழந்து வருகின்றார் &#8211; மனோஜ் திவாரி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>2023 ஐபிஎல் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் வெற்றிபெற்ற போது எம்.எஸ் தோனி ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்றும், இப்போது ரசிகர்களின் மரியாதையை இழந்து வருவதாகவும் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கூறியுள்ளார்.</p>
<p>சென்னை அணியில் தொடர்ந்து முக்கிய வீரராக இருக்கும் தோனி, இந்த சீசனில் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டார், சென்னை அணி லீக்கில் தடுமாறி வருகிறது.</p>
<p>இதுவரை விளையாடிய 4 போட்டிகளில், தோனி 76 ஓட்டங்களை மட்டுமே எடுத்துள்ளார், இதனால், ரசிகர்களும் நிபுணர்களும் அவரது துடுப்பாட்ட நிலையை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.</p>
<p>டெல்லி அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற லீக் போட்டியில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்திருந்தது. தோனி 26 பந்துகளில் வெறும் 30 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்தார்.</p>
<p>இந்நிலையில், கிரிக்பஸிடம் பேசிய மனோஜ் திவாரி, 2023 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிதான் தோனி ஓய்வு பெற சரியான நேரம் என்று கருதியதாக குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>சென்னை அணியின் ரசிகர்கள் தோனி மீது ஆதங்கப்பட தொடங்கியுள்ளனர், இது தோனியின் மாயாஜாலம் வேலை செய்யவில்லை என்பதற்கான அறிகுறி எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>&#8220;அவர் ஓய்வு பெற சரியான நேரம் 2023 ஆம் ஆண்டு, அவர் ஐபிஎல் கிண்ணத்தை வென்றபோதுதான் என்று நான் நினைக்கிறேன். அப்போதே அவர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.</p>
<p>கிரிக்கெட்டில் அவர் சம்பாதித்த புகழ், பெயர் மற்றும் மரியாதை கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் விளையாடும் விதத்தால் அது நழுவி வருவதாக நான் உணர்கிறேன்.&#8221; &#8220;ரசிகர்களால் அவரை இப்படிப் பார்ப்பதை தாங்க முடியவில்லை.</p>
<p>சென்னை ரசிகர்களின் இதயங்களில் அவர் உருவாக்கிய நம்பிக்கை, ரசிகர்கள் வீதிகளில் அவருக்கு எதிராக பேசும் விதம், அவரின் மாயாஜாலம் வேலை செய்யவில்லை என்பதற்கான அறிகுறியாக இருந்திருக்க வேண்டும்,&#8221; என்று திவாரி மேலும் கூறினார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/dhoni-is-losing-respect-manoj-tiwary/">தோனி மரியாதையை இழந்து வருகின்றார் &#8211; மனோஜ் திவாரி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
