<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Mannar Court Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/mannar-court/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/mannar-court/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Mon, 29 Dec 2025 04:13:54 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Mannar Court Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/mannar-court/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மன்னார் நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்திய பிரதான சந்தேக நபர் கைது</title>
		<link>https://oruvan.com/main-suspect-in-shooting-near-mannar-court-arrested/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Dec 2025 04:13:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#police]]></category>
		<category><![CDATA[Mannar]]></category>
		<category><![CDATA[Mannar Court]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=41837</guid>

					<description><![CDATA[<p>மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உள்ளடங்களாக இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக கடந்த ஜனவரி 16ஆம் திகதி இரண்டு நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இதன்படி கிடைத்த தகவலின் அடிப்படையில், மன்னார் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவும், மன்னார் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/main-suspect-in-shooting-near-mannar-court-arrested/">மன்னார் நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்திய பிரதான சந்தேக நபர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உள்ளடங்களாக இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.</p>
<p>மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக கடந்த ஜனவரி 16ஆம் திகதி இரண்டு நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.</p>
<p>இதன்படி கிடைத்த தகவலின் அடிப்படையில், மன்னார் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவும், மன்னார் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவும் இணைந்து நேற்று தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டன.</p>
<p>இதன்போது, மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள ஒரு விடுதியில் மறைந்திருந்த நிலையில், சந்தேக நபர்கள் இருவரும் நேற்று (28) கைது செய்யப்பட்டனர்.</p>
<p>மேலும், அவர்களிடம் இருந்து ஒரு உயிருள்ள கையெறி குண்டும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>கைது சந்தேக நபர்கள் 22 மற்றும் 38 வயதுடைய உயிலங்குளத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p>
<p>மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/main-suspect-in-shooting-near-mannar-court-arrested/">மன்னார் நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்திய பிரதான சந்தேக நபர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மன்னார் துப்பாக்கி சூடு சம்பவம் -இராணுவ சிப்பாய் உள்ளிட்ட மூவர் கைது</title>
		<link>https://oruvan.com/mannar-shooting-incident-three-people-including-an-army-soldier-arrested/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 19 Jan 2025 11:26:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[arrest]]></category>
		<category><![CDATA[Gun Shooting]]></category>
		<category><![CDATA[Mannar]]></category>
		<category><![CDATA[Mannar Court]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=7461</guid>

					<description><![CDATA[<p>மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த வியாழன் (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தில் பணியாற்றும் சிப்பாய் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராணுவத்தில் பணியாற்றும் சிப்பாய் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி நடுக்குடா கடற்கரை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் கடந்த 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை வியாழக்கிழமை (16) [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/mannar-shooting-incident-three-people-including-an-army-soldier-arrested/">மன்னார் துப்பாக்கி சூடு சம்பவம் -இராணுவ சிப்பாய் உள்ளிட்ட மூவர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த வியாழன் (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தில் பணியாற்றும் சிப்பாய் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>இராணுவத்தில் பணியாற்றும் சிப்பாய் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி நடுக்குடா கடற்கரை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.<br />
அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் கடந்த 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை வியாழக்கிழமை (16) மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவிருந்த நிலையில் விசாரணைகளுக்காக சென்ற சந்தேகநபர்கள் மூவர் உள்ளிட்ட நான்கு நபர்கள் மீது நீதிமன்றத்திற்கு முன் வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.</p>
<p>இதன் போது இருவர் உயிரிழந்ததுடன் , மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.</p>
<p>இந்த நிலையில் பொலிஸார் விசேட தேடுதல்களை மேற்கொண்ட நிலையில் சந்தேக நபரான இராணுவ சிப்பாய் பேசாலை நடுக்குடா பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.</p>
<p>துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் என கருதப்படும் குறித்த இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டு பேசாலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணைகள் முன் னெடுக்கப்பட்ட நிலையில் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>மேலதிக விசாரணைகளை மன்னார் மற்றும் பேசாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p>
<p>(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)</p>
<p>The post <a href="https://oruvan.com/mannar-shooting-incident-three-people-including-an-army-soldier-arrested/">மன்னார் துப்பாக்கி சூடு சம்பவம் -இராணுவ சிப்பாய் உள்ளிட்ட மூவர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பொலிஸாரே பொறுப்பு கூற வேண்டும் &#8211; செல்வம் எம்.பி</title>
		<link>https://oruvan.com/police-should-be-held-responsible-for-mannar-shooting-incident-selvam-mp/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Jan 2025 02:22:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[Mannar]]></category>
		<category><![CDATA[Mannar Court]]></category>
		<category><![CDATA[செல்வம் அடைக்கலநாதன்]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிச் சூடு]]></category>
		<category><![CDATA[மன்னார்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=7167</guid>

					<description><![CDATA[<p>மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் நேற்று (16) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பொலிஸார் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மன்னார் நீதிமன்றத்திற்கு முன் நடைபெற்ற துப்பாக்கி பிரயோகம் உண்மையிலேயே கண்டிக்கத்தக்க ஒரு விடயம் என்பதுடன், காட்டு மிராண்டித்தனமான ஒரு விடயமாகும். இந்த மிலேச்சத்தனமான செயலுக்கு மன்னாரில் உள்ள பொலிஸார் முழுப்பொறுப்பையும் எடுக்க வேண்டும். நொச்சிகுளம் மக்கள் தொடர்ந்து [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/police-should-be-held-responsible-for-mannar-shooting-incident-selvam-mp/">மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பொலிஸாரே பொறுப்பு கூற வேண்டும் &#8211; செல்வம் எம்.பி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் நேற்று (16) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பொலிஸார் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.</p>
<p>அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>மன்னார் நீதிமன்றத்திற்கு முன் நடைபெற்ற துப்பாக்கி பிரயோகம் உண்மையிலேயே கண்டிக்கத்தக்க ஒரு விடயம் என்பதுடன், காட்டு மிராண்டித்தனமான ஒரு விடயமாகும்.</p>
<p>இந்த மிலேச்சத்தனமான செயலுக்கு மன்னாரில் உள்ள பொலிஸார் முழுப்பொறுப்பையும் எடுக்க வேண்டும்.</p>
<p>நொச்சிகுளம் மக்கள் தொடர்ந்து பழிவாங்கப்படுகிறார்கள். இன்றும் தொடர்ச்சியாக  நொச்சிகுளம் கிராமத்தின் மக்கள் படிப்படியாக படுகொலை செய்யப்படுகின்ற சூழல் காணப்படுகிறது .</p>
<p>இந்த விடயத்தை கடந்த அரசாங்கத்தில் மக்கள் பாதுகாப்பு தொடர்பாடல் அமைச்சரோடு நான் நேரடியாக பேசியிருந்தேன். காரணம் துப்பாக்கி பாவிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஏ.கே 47 பாவிக்கப்பட்டுள்ளது .</p>
<p>இப்பொழுது எந்த வகையான துப்பாக்கி பாவிக்கப்பட்டுள்ளது என்பது தெரியப் படவில்லை. இந்த துப்பாக்கி பிரயோகம் நொச்சிகுளம் மக்களை பார்த்து தான் பிரயோகிக்கப்படுகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.</p>
<p>மன்னார் பொலிஸாருடைய மெத்தனப் போக்கும் இதில் அடங்கியிருக்கிறது. அந்த கிராமத்து மக்கள் அச்சத்தோடு வாழும் சூழலிலே மீண்டும் மன்னார் நீதி மன்றத்திற்கு முன் இந்த படுகொலைகள் நடைபெற்றிருக்கிறது. ஆகவே இது கண்டிக்கத்தக்கது.</p>
<p>இவ்விடயம் சம்பந்தமாக ஜனாதிபதி அவர்களினதும் கவனத்திற்கும், நாடாளுமன்ற கவனத்திற்கும் முக்கியமான விடயமாக கொண்டு வரவுள்ளேன். ஏனென்றால் இது தொடர்ச்சியாக நடைபெறுகிற விடயமாக இருக்கிறது.</p>
<p>போன உயிர்களை மீளப் பெற முடியாது. துப்பாக்கி பிரயோகத்தால் உயிர் நீத்த குடும்பங்கள் பல அந்த கிராம மக்கள் அச்சத்தோடு வாழுகின்ற நிலைமை தொடர்கின்றது.</p>
<p>ஆகவே இதன் முழுப்பொறுப்பையும் பொலிஸார் எடுக்க வேண்டும் .இந்த சம்பவத்திற்கு காரணம் பொலிஸாருடைய கவனயீனம் அசமந்தப்போக்கு என்பதை இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன்.</p>
<p>முப்படைகள் அங்கே பாதுகாப்பு நடவடிக்கையில் இருக்கும் போது இவ்வாறான விடயங்கள் நடைபெறுவது கேள்விக்குறியாகவே இருக்கிறது. அந்த வகையில் இவ்வாறான சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டிய விடயங்களாகும்.</p>
<p>சம்மந்தப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்ட வேண்டும். இதற்கான குழு அடங்கிய புலனாய்வு துறை நடவடிக்கைகளை பொலிஸார் உடனடியாக ஆரம்பித்து செயலில் இறங்க வேண்டும்.</p>
<p>மன்னாரில் உள்ள பொலிஸாரை மட்டும் வைத்து இதற்குரிய நடவடிக்கைகளை செய்து கொள்வது முடியாத காரியமாகும். எனவே கொழும்பில் இருந்து விசேட குழு அடங்கிய பொலிஸார் வரவழைக்கப்பட்ட வேண்டும்.</p>
<p>பொலிஸார் அதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டுவதுடன் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே எனது கோரிக்கை என அவர்  தனது அறிக்கையில் கூறியுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/police-should-be-held-responsible-for-mannar-shooting-incident-selvam-mp/">மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பொலிஸாரே பொறுப்பு கூற வேண்டும் &#8211; செல்வம் எம்.பி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
