<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Manipur Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/manipur/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/manipur/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sat, 13 Sep 2025 11:23:06 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Manipur Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/manipur/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மணிப்பூர் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது &#8211; மோடி</title>
		<link>https://oruvan.com/indian-government-is-taking-all-necessary-steps-to-improve-the-lives-of-the-people-of-manipur-modi/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 13 Sep 2025 11:23:06 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[Indian]]></category>
		<category><![CDATA[Manipur]]></category>
		<category><![CDATA[modi]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=32527</guid>

					<description><![CDATA[<p>மணிப்பூர் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அம்மாநிலத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தைரியம் மற்றும் உறுதிப்பாட்டின் நிலம் மணிப்பூர். இங்குள்ள மலைகள் இயற்கையின் விலைமதிப்பற்ற பரிசு. இவை, உங்கள் தொடர்ச்சியான கடின உழைப்பைக் குறிக்கின்றன. மணிப்பூர் மக்களின் உத்வேகத்துக்கு நான் தலைவணங்குகிறேன். மணிப்பூரில் வளர்ச்சியைக் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/indian-government-is-taking-all-necessary-steps-to-improve-the-lives-of-the-people-of-manipur-modi/">மணிப்பூர் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது &#8211; மோடி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மணிப்பூர் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.</p>
<p>அம்மாநிலத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.</p>
<p>இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,</p>
<p>தைரியம் மற்றும் உறுதிப்பாட்டின் நிலம் மணிப்பூர். இங்குள்ள மலைகள் இயற்கையின் விலைமதிப்பற்ற பரிசு. இவை, உங்கள் தொடர்ச்சியான கடின உழைப்பைக் குறிக்கின்றன.</p>
<p>மணிப்பூர் மக்களின் உத்வேகத்துக்கு நான் தலைவணங்குகிறேன். மணிப்பூரில் வளர்ச்சியைக் கொண்டுவர மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.</p>
<p>இதனை கருத்தில் கொண்டு தற்போது 7,000 கோடி ரூபா மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இது மணிப்பூர் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும்.</p>
<p>மணிப்பூர் சர்வதேச எல்லையைக் கொண்ட ஒரு மாநிலம். போக்குவரத்து இங்க ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது. மோசமான வீதிகள் காரணமாக நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நான் அறிவேன்.</p>
<p>2014 ஆம் அண்டுக்குப் பிறகு மணிப்பூரின் போக்குவரத்து கட்டமைப்பை வலுப்படுத்த நான் பணியாற்றினேன். மேலும், மணிப்பூரின் ரயில் மற்றும் சாலை இணைப்பை மேம்படுத்த கவனம் செலுத்தியுள்ளோம்.</p>
<p>மணிப்பூரில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மணிப்பூர் மலைகளில் வாழும் பழங்குடி சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்தும். மணிப்பூர் மக்கள் அனைவருக்கும் சுகாதாரம் மற்றும் கல்விக்கான புதிய வசதிகளை வழங்கும்.</p>
<p>மணிப்பூரில் பணிபுரியும் பெண்களுக்காக நாங்கள் பெண்கள் விடுதியைக் கட்டி வருகிறோம். உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் மேம்பாட்டுக்காக 500 கோடி ரூபா சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p>
<p>நமது பழங்குடி இளைஞர்களின் விருப்பங்களை நிவர்த்தி செய்ய முயற்சிக்கிறோம். உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்த முயற்சிக்கிறோம். மணிப்பூரின் கலாச்சாரம் பெண்களின் வலிமையை ஊக்குவிக்கிறது.</p>
<p>மணிப்பூரை அமைதி மற்றும் செழிப்பின் அடையாளமாக மாற்ற விரும்புகிறோம். இடம்பெயர்ந்த மக்களுக்கான மறுவாழ்வை உறுதிப்படுத்தவும் அமைதியை ஏற்படுத்தவும் மத்திய அரசு, மணிப்பூர் அரசுக்கு தொடர்ந்து உதவும்” என்றார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/indian-government-is-taking-all-necessary-steps-to-improve-the-lives-of-the-people-of-manipur-modi/">மணிப்பூர் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது &#8211; மோடி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் மோடி  இன்று விஜயம்</title>
		<link>https://oruvan.com/pm-modi-to-visit-communal-riot-hit-manipur-today/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 13 Sep 2025 04:44:43 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[communal]]></category>
		<category><![CDATA[Manipur]]></category>
		<category><![CDATA[modi]]></category>
		<category><![CDATA[PM]]></category>
		<category><![CDATA[today]]></category>
		<category><![CDATA[visit]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=32473</guid>

					<description><![CDATA[<p>இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று செல்லவுள்ளார். அத்துடன் அங்கு 7,300 கோடி ரூபா மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் குகி &#8211; மைத்தேயி மக்கள் இடையே கடந்த 2023 மே மாதத்தில் மோதல் ஏற்பட்டது. இம்பால் போன்ற சமதளப் பகுதிகளில் வசிக்கும் மைத்தேயி மக்கள் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என்று நீண்டநாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மலைப் பகுதிகளில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/pm-modi-to-visit-communal-riot-hit-manipur-today/">இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் மோடி  இன்று விஜயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று செல்லவுள்ளார்.</p>
<p>அத்துடன் அங்கு 7,300 கோடி ரூபா மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.</p>
<p>வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் குகி &#8211; மைத்தேயி மக்கள் இடையே கடந்த 2023 மே மாதத்தில் மோதல் ஏற்பட்டது.</p>
<p>இம்பால் போன்ற சமதளப் பகுதிகளில் வசிக்கும் மைத்தேயி மக்கள் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என்று நீண்டநாட்களாக வலியுறுத்தி வருகின்றனர்.</p>
<p>அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மலைப் பகுதிகளில் வசிக்கும் குகி பழங்குடியின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, வன்முறையாக மாறியது.</p>
<p>இந்த மோதலில் 260 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் அண்டை மாநிலங்களில் தஞ்சம் அடைந்தனர். பலர் இடம்பெயர்ந்துள்ளனர்.</p>
<p>இரு பிரிவுகளையும் சேர்ந்த மூத்த தலைவர்களுடன் மத்திய, மாநில அரசுகள் அமைதி பேச்சுவார்த்தை நடத்தின.</p>
<p>தற்போது இயல்புநிலை திரும்பி வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.</p>
<p>இந்நிலையில், இனக் கலவரத்துக்கு பிறகு முதன்முறையாக பிரதமர் மோடி இன்று மணிப்பூர் செல்கிறார்.</p>
<p>இதுகுறித்து தலைநகர் இம்பாலில் மாநில தலைமைச் செயலர் புனித்குமார் கோயல் நேற்று கூறியதாவது,</p>
<p>மிசோரம் மாநிலத்தில் பைரபி &#8211; சாய்ரங் ரயில் பாதை திட்டத்தை பிரதமர் மோடி 13 ஆம் திகதி தொடங்கி வைக்கிறார். பின்னர் பிற்பகல் 12.30 மணிக்கு மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூர் மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொள்கிறார்.</p>
<p>அங்கு குகி &#8211; மைத்தேயி கலவரத்தால் இடம்பெயர்ந்த மக்களிடம் உரையாடுவார்.</p>
<p>பின்னர், 7,300 கோடி ரூபா பெறுமதியான நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அமைதி மைதானத்தில் நடைபெறும் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.</p>
<p>தொடர்ந்து தலைநகர் இம்பாலுக்கு பிரதமர் மோடி செல்கிறார். அங்கு பிற்பகல் 2.30 அளவில்1,200 கோடி ரூபா மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பிரதமரின் வருகை, மணிப்பூரில் முழு அமைதி ஏற்படவும், இயல்புநிலை திரும்பவும், மாநிலத்தின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்” என்றார்.</p>
<p>இதேவேளை, ‘பிரதமர் மணிப்பூர் செல்வது வரவேற்கத்தக்கது’ என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.</p>
<p>மேலும் பிரதமர் வருகையை முன்னிட்டு மணிப்பூர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.</p>
<p>The post <a href="https://oruvan.com/pm-modi-to-visit-communal-riot-hit-manipur-today/">இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் மோடி  இன்று விஜயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
