<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Mahinda Rajapaksa Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/mahinda-rajapaksa/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/mahinda-rajapaksa/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Thu, 19 Feb 2026 10:57:41 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Mahinda Rajapaksa Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/mahinda-rajapaksa/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மகிந்த ராஜபக்ச கொலை செய்ய விரும்பும் ஆட்சியாளர் அல்ல &#8211; நாமல் எம்.பி</title>
		<link>https://oruvan.com/mahinda-rajapaksa-is-not-a-ruler-who-wants-to-kill-namal-mp/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 19 Feb 2026 10:57:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Mahinda Rajapaksa]]></category>
		<category><![CDATA[Namal Rajapaksa]]></category>
		<category><![CDATA[Sarath Fonseka]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=45443</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொலை செய்ய விரும்பும் இரத்தவெறி கொண்ட ஆட்சியாளர் அல்ல என்பதை சரத் பொன்சேகாவின் கூற்று உறுதிப்படுத்தியுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது சரத் பொன்சேகா முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். சரத் ​​பொன்சேகா பல்வேறு சந்தர்ப்பங்களில் முரண்பட்ட கருத்துக்களைத் தெரிவித்திருப்பதைச் சுட்டிக்காட்டிய நாமல் ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச வெள்ளைக் கொடி ஏந்திய ஒரு குழுவைச் சுட [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/mahinda-rajapaksa-is-not-a-ruler-who-wants-to-kill-namal-mp/">மகிந்த ராஜபக்ச கொலை செய்ய விரும்பும் ஆட்சியாளர் அல்ல &#8211; நாமல் எம்.பி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொலை செய்ய விரும்பும் இரத்தவெறி கொண்ட ஆட்சியாளர் அல்ல என்பதை சரத் பொன்சேகாவின் கூற்று உறுதிப்படுத்தியுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p>
<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது சரத் பொன்சேகா முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.</p>
<p>சரத் ​​பொன்சேகா பல்வேறு சந்தர்ப்பங்களில் முரண்பட்ட கருத்துக்களைத் தெரிவித்திருப்பதைச் சுட்டிக்காட்டிய நாமல் ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச வெள்ளைக் கொடி ஏந்திய ஒரு குழுவைச் சுட உத்தரவிட்டதாக சரத் பொன்சேகா கூறியதாகவும், ஆனால் அவர்கள் தப்பிப்பதற்கான வழியையும் தயார் செய்ததாகவும் கூறுவது நகைப்புக்குரியது என்றும் கூறினார்.</p>
<p>மேலும், தனது தந்தை இந்த நாட்டின் தமிழ் மக்களுடன் போராடவில்லை, மாறாக விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்துடன் போராடினார் என்பதை தெளிவாகக் கூற வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.</p>
<p>புலம்பெயர் சமூகத்தினரும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் கூறும் இரத்தவெறி பிடித்த குணம் மகிந்த ராஜபக்சவிடம் இல்லை என்றும், இன்று நாட்டில் அனைவரும் அனுபவிக்கும் சுதந்திரம் மகிந்த ராஜபக்சவும் போர்வீரர்களும் இணைந்து வென்றது என்றும் அவர் வலியுறுத்தினார்.</p>
<p>அதன்படி, இன்று பல்வேறு வழிகளில் போராடுபவர்கள் கூட அந்த சுதந்திரத்தில் வாழ்கிறார்கள் என்று நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/mahinda-rajapaksa-is-not-a-ruler-who-wants-to-kill-namal-mp/">மகிந்த ராஜபக்ச கொலை செய்ய விரும்பும் ஆட்சியாளர் அல்ல &#8211; நாமல் எம்.பி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகும் ஷிராந்தி</title>
		<link>https://oruvan.com/shiranthi-rajapaksa-ordered-to-appear-before-fcid/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Feb 2026 03:34:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CID]]></category>
		<category><![CDATA[FCID]]></category>
		<category><![CDATA[Mahinda Rajapaksa]]></category>
		<category><![CDATA[Mahinda Rajapaksa Wife]]></category>
		<category><![CDATA[Namal Rajapaksa]]></category>
		<category><![CDATA[Shiranthi Rajapaksa]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=44326</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச இன்று (03) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறு அழைக்கப்பட்டுள்ளார். சிரிலிய சவிய அறக்கட்டளையின் நிதி விவகாரங்களில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளுக்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அறக்கட்டளைக்கு கிடைத்த சில மானியங்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் மூலம் செய்யப்பட்ட நிதி பரிவர்த்தனைகள் குறித்து அவரிடம் குறிப்பாக விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த 27 ஆம் திகதி இந்த விசாரணைகள் தொடர்பாக [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/shiranthi-rajapaksa-ordered-to-appear-before-fcid/">நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகும் ஷிராந்தி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச இன்று (03) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறு அழைக்கப்பட்டுள்ளார்.</p>
<p>சிரிலிய சவிய அறக்கட்டளையின் நிதி விவகாரங்களில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளுக்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>அறக்கட்டளைக்கு கிடைத்த சில மானியங்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் மூலம் செய்யப்பட்ட நிதி பரிவர்த்தனைகள் குறித்து அவரிடம் குறிப்பாக விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p>
<p>முன்னதாக, கடந்த 27 ஆம் திகதி இந்த விசாரணைகள் தொடர்பாக முன்னிலையாகுமாறு ஷிரந்தி ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.</p>
<p>எனினும், தனிப்பட்ட காரணங்களால் தான் முன்னிலையாக முடியவில்லை என்று அவர தெரிவித்திருந்தார்.</p>
<p>அதன்படி, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக மேலும் இரண்டு வாரங்கள் அவகாசம் அளிக்குமாறு ஷிரந்தி ராஜபக்ச கோரியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, இன்றைய தினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதற்கு முன்னரும் நாமல் ராஜபக்சவுக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.</p>
<p>எனினும், அவர் நாட்டில் இல்லாத காரணத்தினால் பிறிதொரு திகதியை வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு அமையவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>The post <a href="https://oruvan.com/shiranthi-rajapaksa-ordered-to-appear-before-fcid/">நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகும் ஷிராந்தி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நுகேகொடை எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்ளப் போவதில்லை &#8211; காரணம் கூறும் மகிந்த</title>
		<link>https://oruvan.com/mahinda-explains-why-he-will-not-attend-the-nugegoda-anti-rally/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 11 Nov 2025 10:17:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[Mahinda Rajapaksa]]></category>
		<category><![CDATA[Nugegoda]]></category>
		<category><![CDATA[SLPP]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=37978</guid>

					<description><![CDATA[<p>இரு வேறு காரணங்களுக்கான எதிர்வரும் 21ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிரான எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள நுகேகொடை எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்ளப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலுமிருந்து தங்காலைக்கு தன்னைப் பார்க்க வரும் மக்களைத் தவறவிட முடியாது எனவும், தங்காலையிலிருந்து நுகேகொடைக்கு பயணிக்க கூடுதல் நேரத்தை செலவிட வேண்டியிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் நுகேகொடை எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/mahinda-explains-why-he-will-not-attend-the-nugegoda-anti-rally/">நுகேகொடை எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்ளப் போவதில்லை &#8211; காரணம் கூறும் மகிந்த</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இரு வேறு காரணங்களுக்கான எதிர்வரும் 21ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிரான எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள நுகேகொடை எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்ளப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p>
<p>நாடு முழுவதிலுமிருந்து தங்காலைக்கு தன்னைப் பார்க்க வரும் மக்களைத் தவறவிட முடியாது எனவும், தங்காலையிலிருந்து நுகேகொடைக்கு பயணிக்க கூடுதல் நேரத்தை செலவிட வேண்டியிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>இதனால் நுகேகொடை எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள போராட்டப் பேரணியில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த நிகழ்வில் நான் பங்கேற்காததை சிலர் தவறாகப் புரிந்து கொள்ளலாம்.</p>
<p>ஆனால், இரண்டு காரணங்களுக்காக அந்தப் பேரணியில் கலந்துகொள்ள முடியாது.</p>
<p>இதேவேளை, அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டம் தண்ணீர் போத்தல் போன்றது. போதைப்பொருள் சோதனைகளை நடத்தும்போது அரசாங்கம் எங்களை நோக்கி விரல் நீட்டியது.</p>
<p>ஆனால் இப்போது நாங்கள் சொல்வது சரி என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/mahinda-explains-why-he-will-not-attend-the-nugegoda-anti-rally/">நுகேகொடை எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்ளப் போவதில்லை &#8211; காரணம் கூறும் மகிந்த</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மகிந்தவை பார்த்தது புத்தரை நேரில் கண்டதை போல் உணர்ந்தேன் &#8211; குமாரி முனசிங்க</title>
		<link>https://oruvan.com/seeing-mahinda-felt-like-seeing-buddha-in-person-kumari-munasinghe/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Oct 2025 06:25:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[Mahinda Rajapaksa]]></category>
		<category><![CDATA[ஒருவன் செய்தி]]></category>
		<category><![CDATA[ஒருவன் செய்திகள்]]></category>
		<category><![CDATA[குமாரி முனசிங்க]]></category>
		<category><![CDATA[மகிந்த ராஜபக்ச]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=36040</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பார்த்த போது, புத்தரை நேரில் கண்டதைப் போல் உணர்ந்ததாக மறைந்த நடிகரும் பாடகருமான ஜாக்சன் அந்தோனியின் மனைவி குமாரி முனசிங்க தெரிவித்துள்ளார். தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நேரில் சந்தித்தப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை ரத்து செய்யும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர், கொழும்பில் தங்கியிருந்த மகிந்த ராஜபக்ச கடந்த மாதம் 11ஆம் திகதி தனது [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/seeing-mahinda-felt-like-seeing-buddha-in-person-kumari-munasinghe/">மகிந்தவை பார்த்தது புத்தரை நேரில் கண்டதை போல் உணர்ந்தேன் &#8211; குமாரி முனசிங்க</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பார்த்த போது, புத்தரை நேரில் கண்டதைப் போல் உணர்ந்ததாக மறைந்த நடிகரும் பாடகருமான ஜாக்சன் அந்தோனியின் மனைவி குமாரி முனசிங்க தெரிவித்துள்ளார்.</p>
<p>தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நேரில் சந்தித்தப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.</p>
<p>முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை ரத்து செய்யும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர், கொழும்பில் தங்கியிருந்த மகிந்த ராஜபக்ச கடந்த மாதம் 11ஆம் திகதி தனது சொந்த ஊரான தங்காலைக்கு குடிபெயர்ந்தார்.</p>
<p>தங்காலை கார்ல்டன் இல்லத்தில் தங்கியிருக்கும் அவரை முன்னணி அரசியல் தலைவர்கள், இராஜந்திரிகள், வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் நாளாந்தம் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்து வருகின்றனர்.</p>
<p>இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கலைஞர்கள் குழுவொன்று சந்தித்திருந்தது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட குமாரி முனசிங்க இவ்வாறு கூறியிருந்தார்,</p>
<p>&#8220;நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் இங்கு வந்தேன், இந்தப் பயணத்தில் அவர் மீண்டும் மீண்டும் வருவார் என்று காத்திருந்தேன். அவர் செய்த மற்றும் சொன்னவற்றின் நன்மைகளை உண்மையிலேயே சிந்திக்க நான் இங்கு வந்தேன். நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.</p>
<p>நாங்கள் உண்மையில் மகிந்தவை பார்த்தபோது, ​​எங்கள் இதயங்களில் இருந்த தீப்பிழம்புகள் அணைந்தன, புத்தரைக் கண்டது போல் நிம்மதி அடைந்தோம்.” என்றார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/seeing-mahinda-felt-like-seeing-buddha-in-person-kumari-munasinghe/">மகிந்தவை பார்த்தது புத்தரை நேரில் கண்டதை போல் உணர்ந்தேன் &#8211; குமாரி முனசிங்க</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மகிந்தவை சந்தித்தது சீன வர்த்தகர்கள் குழு</title>
		<link>https://oruvan.com/a-group-of-chinese-businessmen-met-with-mahinda/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Oct 2025 07:31:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[home]]></category>
		<category><![CDATA[Mahinda Rajapaksa]]></category>
		<category><![CDATA[Wijerama House]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=35692</guid>

					<description><![CDATA[<p>சீன வர்த்தகர்கள் குழு ஒன்று நேற்று (16) தங்காலையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட இல்லத்தில் அவரைச் சந்தித்தது. இந்த விஜயத்தின் போது முன்னாள் ஜனாதிபதிக்கு பரிசுகளை வழங்கிய குழுவினர், அவரது நலம் விசாரித்தனர். கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறி தங்காலையில் குடியேறிய பின்னர், முன்னாள் ஜனாதிபதியை சந்திக்க வந்த முதல் சீன வர்த்தகர்கள் குழு இதுவாகும். தேயிலை ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள இந்தக் குழு, வெலிகம மற்றும் நுவரெலியாவுக்குச் செல்லும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/a-group-of-chinese-businessmen-met-with-mahinda/">மகிந்தவை சந்தித்தது சீன வர்த்தகர்கள் குழு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சீன வர்த்தகர்கள் குழு ஒன்று நேற்று (16) தங்காலையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட இல்லத்தில் அவரைச் சந்தித்தது.</p>
<p>இந்த விஜயத்தின் போது முன்னாள் ஜனாதிபதிக்கு பரிசுகளை வழங்கிய குழுவினர், அவரது நலம் விசாரித்தனர்.</p>
<p>கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறி தங்காலையில் குடியேறிய பின்னர், முன்னாள் ஜனாதிபதியை சந்திக்க வந்த முதல் சீன வர்த்தகர்கள் குழு இதுவாகும்.</p>
<p>தேயிலை ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள இந்தக் குழு, வெலிகம மற்றும் நுவரெலியாவுக்குச் செல்லும் வழியில் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/a-group-of-chinese-businessmen-met-with-mahinda/">மகிந்தவை சந்தித்தது சீன வர்த்தகர்கள் குழு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மகிந்தவின் பாதுகாப்பு அதிகாரிக்கு மீண்டும் விளக்கமறியல்</title>
		<link>https://oruvan.com/mahindas-security-officer-remanded-again/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Oct 2025 05:50:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Court]]></category>
		<category><![CDATA[Mahinda Rajapaksa]]></category>
		<category><![CDATA[Neville Wanniarachchi]]></category>
		<category><![CDATA[நெவில் வன்னியாராச்சி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=35664</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியின் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 31ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 28 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை முறைக்கேடாக ஈட்டியதாக சந்தேகத்தின் பேரில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை  கைது செய்யபட்டார். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/mahindas-security-officer-remanded-again/">மகிந்தவின் பாதுகாப்பு அதிகாரிக்கு மீண்டும் விளக்கமறியல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியின் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன்படி, எதிர்வரும் 31ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>
<p>28 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை முறைக்கேடாக ஈட்டியதாக சந்தேகத்தின் பேரில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை  கைது செய்யபட்டார்.</p>
<p>இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.</p>
<p>இந்த விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு எதிர்வரும் நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கும் நீதவான் உத்தரவிட்டார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/mahindas-security-officer-remanded-again/">மகிந்தவின் பாதுகாப்பு அதிகாரிக்கு மீண்டும் விளக்கமறியல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மகிந்த மற்றும் மைத்திரிக்கு குண்டு துளைக்காக வாகனங்களை மீள வழங்குவது குறித்து பரிசீலனை – அமைச்சர் ஆனந்த விஜேபால தகவல்</title>
		<link>https://oruvan.com/consideration-to-return-vehicles-to-mahinda-and-maithri-for-bulletproof-vests-minister-ananda-wijepala-informs/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 13 Oct 2025 05:27:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Mahinda Rajapaksa]]></category>
		<category><![CDATA[குண்டு துளைக்காத வாகனம்]]></category>
		<category><![CDATA[மகிந்த ராஜபக்ச]]></category>
		<category><![CDATA[மைத்திரிபால சிறிசேன]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=35194</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதிகளான மந்தத ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு முன்னர் ஒதுக்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனங்களை திருப்பித் தருமாறு விடுத்த கோரிக்கைகளை பொது பாதுகாப்பு அமைச்சகம் மறுபரிசீலனை செய்து வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பு ஊடகம் ஒன்றிடம் பேசிய அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் உரிமைகள் ரத்து செய்தல் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 2025 ஒக்டோபர் தொடக்கத்தில், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட சலுகைகளை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/consideration-to-return-vehicles-to-mahinda-and-maithri-for-bulletproof-vests-minister-ananda-wijepala-informs/">மகிந்த மற்றும் மைத்திரிக்கு குண்டு துளைக்காக வாகனங்களை மீள வழங்குவது குறித்து பரிசீலனை – அமைச்சர் ஆனந்த விஜேபால தகவல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><strong>மு</strong>ன்னாள் ஜனாதிபதிகளான மந்தத ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு முன்னர் ஒதுக்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனங்களை திருப்பித் தருமாறு விடுத்த கோரிக்கைகளை பொது பாதுகாப்பு அமைச்சகம் மறுபரிசீலனை செய்து வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.</p>
<p>கொழும்பு ஊடகம் ஒன்றிடம் பேசிய அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை தெரிவித்துள்ளார்.</p>
<p>ஜனாதிபதியின் உரிமைகள் ரத்து செய்தல் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>2025 ஒக்டோபர் தொடக்கத்தில், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட சலுகைகளை மீண்டும் பெறுவதற்கான அரசாங்கத்தின் உத்தரவுக்கு இணங்க, மகிந்த ராஜபக்ச தனது குண்டு துளைக்காத வாகனத்தை திருப்பித் தந்தார்.</p>
<p>முன்னாள் ஜனாதிபதிகள் இருவரும் வாகனங்களைத் திருப்பித் தருமாறு கோரியதாக அமைச்சர் விஜேபால தெரிவித்துள்ளார்.</p>
<p>மைத்திரிபால சிறிசேன வாய்மொழியாக இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாகவும், அதே நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எழுத்துப்பூர்வ கோரிக்கையை சமர்ப்பித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>இந்தக் கோரிக்கைகள் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபர் போன்ற மூத்த அதிகாரிகள் அடங்கிய மதிப்பீட்டுக் குழுவிற்கு பரிந்துரைக்கப்படும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.</p>
<p>&#8220;வாகனங்களை மீளப் பெற்றமை அவர்களின் பாதுகாப்பை எந்த வகையிலும் பாதித்தால், வாகனங்களை அவர்களுக்கு மீள கையளிப்பதற்கான வாய்ப்பு உள்ளது,&#8221; என்று அமைச்சர் கூறியுள்ளார்.</p>
<p>குழுவின் முடிவின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்கு ஆபத்து இருந்தால், அத்தகைய வாகனங்களை மீள அவர்களுக்கு கையளிப்பதற்கு சட்டம் அனுமதிக்கிறது என்று அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/consideration-to-return-vehicles-to-mahinda-and-maithri-for-bulletproof-vests-minister-ananda-wijepala-informs/">மகிந்த மற்றும் மைத்திரிக்கு குண்டு துளைக்காக வாகனங்களை மீள வழங்குவது குறித்து பரிசீலனை – அமைச்சர் ஆனந்த விஜேபால தகவல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நீக்கப்பட்ட பாதுகாப்பை ஏன் மீண்டும் வழங்க முயற்சிக்கின்றார்கள்? மகிந்த கேள்வி</title>
		<link>https://oruvan.com/why-are-they-trying-to-restore-the-security-that-was-removed-mahinda-questions/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 12 Oct 2025 11:15:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Mahinda Rajapaksa]]></category>
		<category><![CDATA[மகிந்த ராஜபக்ச]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=35152</guid>

					<description><![CDATA[<p>தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு காவலர்களை நீக்கிய தற்போதைய அரசாங்கம், மீண்டும் தனக்கு பாதுகாப்பை வழங்க முடிவு செய்தது ஏன் என்பது ஒரு கேள்வி என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதிகளிடமிருந்து நீக்கப்பட்ட பாதுகாப்பை அரசாங்கம் மீட்டெடுக்க விரும்பினால், அதை மறுக்க தனக்கு விருப்பமில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி கூறினார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்பு தேவை என்று எந்தவொரு குழந்தையும் கூட உணரும் என்றும், அந்தப் பாதுகாப்பை நீக்கி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/why-are-they-trying-to-restore-the-security-that-was-removed-mahinda-questions/">நீக்கப்பட்ட பாதுகாப்பை ஏன் மீண்டும் வழங்க முயற்சிக்கின்றார்கள்? மகிந்த கேள்வி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு காவலர்களை நீக்கிய தற்போதைய அரசாங்கம், மீண்டும் தனக்கு பாதுகாப்பை வழங்க முடிவு செய்தது ஏன் என்பது ஒரு கேள்வி என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.</p>
<p>முன்னாள் ஜனாதிபதிகளிடமிருந்து நீக்கப்பட்ட பாதுகாப்பை அரசாங்கம் மீட்டெடுக்க விரும்பினால், அதை மறுக்க தனக்கு விருப்பமில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி கூறினார்.</p>
<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்பு தேவை என்று எந்தவொரு குழந்தையும் கூட உணரும் என்றும், அந்தப் பாதுகாப்பை நீக்கி மீண்டும் நிலைநிறுத்துவது குறித்து தான் கவனத்தை ஈர்த்ததாகவும் கூறினார்.</p>
<p>மேலும், &#8220;எங்களுக்கு மீண்டும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றால், எங்கள் பாதுகாப்பு ஏன் நீக்கப்பட்டது? அதுவும் எங்களுக்கு ஒரு பிரச்சனை.</p>
<p>மீண்டும் பாதுகாப்பு வழங்கப்பட்டால், நாங்கள் வேண்டாம் என்று சொல்ல மாட்டோம்&#8221; என்று அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்பு தேவை என்பதை இப்போது அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். ஒரு குழந்தை கூட அதைப் புரிந்து கொள்ளும்.</p>
<p>The post <a href="https://oruvan.com/why-are-they-trying-to-restore-the-security-that-was-removed-mahinda-questions/">நீக்கப்பட்ட பாதுகாப்பை ஏன் மீண்டும் வழங்க முயற்சிக்கின்றார்கள்? மகிந்த கேள்வி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பிரிவினைவாத தமிழர்கள் வாழும் வரை ராஜபக்சர்களுக்கு துன்பமே &#8211; ஞானசார தேரர்</title>
		<link>https://oruvan.com/as-long-as-separatist-tamils-live-rajapaksa-will-suffer-venerable-gnanasara-thero/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Oct 2025 03:11:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Galagoda Aththe Gnanasara]]></category>
		<category><![CDATA[Mahinda Rajapaksa]]></category>
		<category><![CDATA[கலகொட அத்தே ஞானசார தேரர்]]></category>
		<category><![CDATA[கார்ல்டன் இல்லம்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=34906</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நலம் விசாரிக்க கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட குழு தங்காலை கார்ல்டன் இல்லத்திற்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது இரு தரப்பினர்களும் சுமுகமான உரையாடலில் ஈடுபட்டனர். இந்த சந்திப்பின் பின்னர் ஊடங்களுக்கு கருத்து வெளியிட்ட ஞானசார தேரர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஒருபோதும் மறக்க முடியாத அரச தலைவர் என குறிப்பிட்டுள்ளார். நாம் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்தாலும், அவர் நம் வாழ்வில் நாம் கண்ட ஒரு மாவீரர். அதற்கு ஒரு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/as-long-as-separatist-tamils-live-rajapaksa-will-suffer-venerable-gnanasara-thero/">பிரிவினைவாத தமிழர்கள் வாழும் வரை ராஜபக்சர்களுக்கு துன்பமே &#8211; ஞானசார தேரர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நலம் விசாரிக்க கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட குழு தங்காலை கார்ல்டன் இல்லத்திற்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>இதன்போது இரு தரப்பினர்களும் சுமுகமான உரையாடலில் ஈடுபட்டனர்.</p>
<p>இந்த சந்திப்பின் பின்னர் ஊடங்களுக்கு கருத்து வெளியிட்ட ஞானசார தேரர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஒருபோதும் மறக்க முடியாத அரச தலைவர் என குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>நாம் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்தாலும், அவர் நம் வாழ்வில் நாம் கண்ட ஒரு மாவீரர். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நமது முழு இளைஞர்களும் போரினால் பாதிக்கப்பட்டனர்.</p>
<p>போர் மற்றும் மரண பயமாக இருந்த ஒரு காலத்தில், துட்டுகேமுனு மன்னரைப் போன்று நாட்டை மீட்ட ஒருவராவார்.</p>
<p>போர் மனநிலையைக் கொண்டிருந்த மற்றும் நாட்டைப் பிரிக்க முயன்ற சக்திகள், சுமார் 30 ஆண்டுகளாக நாட்டை அச்சுறுத்தி வந்த விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டனர்.</p>
<p>இந்நிலையில், நாடு பிரிக்கப்பட வேண்டும் என்று நினைக்கும் சில தமிழ்ப் பிரிவுகள் இந்த உலகில் வாழும் வரை, ராஜபக்சக்கள் துன்பத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/as-long-as-separatist-tamils-live-rajapaksa-will-suffer-venerable-gnanasara-thero/">பிரிவினைவாத தமிழர்கள் வாழும் வரை ராஜபக்சர்களுக்கு துன்பமே &#8211; ஞானசார தேரர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஏழு லட்சம் ரூபாய் நிலுவை!! மகிந்த வசித்த வீட்டிற்கு மின் மற்றும் நீரை துண்டிக்க நடவடிக்கை</title>
		<link>https://oruvan.com/seven-lakh-rupees-outstanding-action-taken-to-cut-off-electricity-and-water-to-the-house-where-mahinda-lived/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Oct 2025 06:12:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CEB]]></category>
		<category><![CDATA[EB Bill]]></category>
		<category><![CDATA[Mahinda Rajapaksa]]></category>
		<category><![CDATA[Water Bill]]></category>
		<category><![CDATA[Water Board]]></category>
		<category><![CDATA[Wijerama House]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=34837</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வசித்து வந்த கொழும்பு &#8211; விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள வீட்டின் மின்சாரம் மற்றும் நீர் விநியோக இணைப்புகள் துண்டிக்கப்படவிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை அதிகாரிகள் நீர் இணைப்பை துண்டிக்க விஜேராம இல்லத்திற்கு சென்றிருந்தனர். அத்துடன், ஒரு லட்சம் ரூபாய் நிலுவைத் தொகை இருந்ததால் மின்சார சபை ஊழியர்களும் மின்சார இணைப்பை துண்டிக்க அங்கு சென்றிருந்தனர். விஜேராம இல்லத்தில் தற்போது பாதுகாப்புப் பணியாளர்கள் மட்டுமே இருப்பதன் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/seven-lakh-rupees-outstanding-action-taken-to-cut-off-electricity-and-water-to-the-house-where-mahinda-lived/">ஏழு லட்சம் ரூபாய் நிலுவை!! மகிந்த வசித்த வீட்டிற்கு மின் மற்றும் நீரை துண்டிக்க நடவடிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வசித்து வந்த கொழும்பு &#8211; விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள வீட்டின் மின்சாரம் மற்றும் நீர் விநியோக இணைப்புகள் துண்டிக்கப்படவிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை அதிகாரிகள் நீர் இணைப்பை துண்டிக்க விஜேராம இல்லத்திற்கு சென்றிருந்தனர்.</p>
<p>அத்துடன், ஒரு லட்சம் ரூபாய் நிலுவைத் தொகை இருந்ததால் மின்சார சபை ஊழியர்களும் மின்சார இணைப்பை துண்டிக்க அங்கு சென்றிருந்தனர்.</p>
<p>விஜேராம இல்லத்தில் தற்போது பாதுகாப்புப் பணியாளர்கள் மட்டுமே இருப்பதன் காரணமாக, அதிகாரிகள் திரும்பி வந்ததாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>இந்த விடயம் குறித்து கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வினவிய போது,</p>
<p>விஜேராம இல்லத்தில் ஆறு லட்சம் ரூபாய் நிலுவைத் தொகை இருப்பதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபையின் தலைவர்சந்தன பண்டார தெரிவித்தார்.</p>
<p>நிலுவைத் தொகை தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கான வழக்கமான நடைமுறையின்படி, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள வீட்டிற்கு நீர் விநியோகத்தை துண்டிக்க அதிகாரிகள் சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.</p>
<p>வீட்டில் நிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள், நீர் கட்டணம் குறித்து பொறுப்பான நபர்களுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>இதனால், விஜேராம இல்லத்திற்கு நீர் விநியோகத்தை துண்டிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள வீடு இன்னும் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படவில்லை.</p>
<p>அரசாங்க சொத்து ஆய்வாளர்கள் பொருட்களை வரிசைப்படுத்தி மகிந்த ராஜபக்ஷவுக்குச் சொந்தமான பொருட்களை பிரித்த பின்னர, வீடு அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படும் என்று மகிந்த ராஜபக்ச தரப்பு கூறுகிறது.</p>
<p>இந்த வீட்டில் ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் பொது நிர்வாக அமைச்சகத்திற்குச் சொந்தமான பொருட்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.</p>
<p>ஜனாதிபதி செயலக அதிகாரிகள் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான பொருட்களைப் பட்டியலிட்டுள்ளதாகவும் மகிந்த தரப்பு தெரிவித்துள்ளது.</p>
<p>மகிந்த ராஜபக்ச இந்த வீட்டை விட்டு வெளியேறியிருந்தாலும், வீடு இன்னும் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படவில்லை.</p>
<p>எனவே, மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களையும் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கும் திகதியில் செலுத்த வேண்டும்.</p>
<p>எனவே, இந்த வீட்டை விரைவில் கையகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகிந்த தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/seven-lakh-rupees-outstanding-action-taken-to-cut-off-electricity-and-water-to-the-house-where-mahinda-lived/">ஏழு லட்சம் ரூபாய் நிலுவை!! மகிந்த வசித்த வீட்டிற்கு மின் மற்றும் நீரை துண்டிக்க நடவடிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
