<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>lka Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/lka/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/lka/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Fri, 31 Oct 2025 05:35:00 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>lka Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/lka/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தெற்காசியாவில் வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த இரண்டாவது நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது</title>
		<link>https://oruvan.com/sri-lanka-named-second-most-expensive-country-to-live-in-south-asia/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 31 Oct 2025 05:34:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[Cost of living]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[ஒருவன்]]></category>
		<category><![CDATA[வாழ்க்கைச் செலவு]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=36943</guid>

					<description><![CDATA[<p>தெற்காசியாவில் வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த இரண்டாவது நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவு புள்ளிவிவர வலைத்தளமான Numbeo வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தனிநபரின் வாழ்க்கைச் செலவு 506 டொலர் அல்லது வாடகையைத் தவிர்த்து 153,899 ரூபாய் செலவாகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. வலைத்தளத்தின்படி, கொழும்பு நகரில் வசிக்கும் நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்று வசதியாக வாழ்வதற்கான வாடகையைத் தவிர்த்து மாதாந்திர செலவுகள் 570,997 ரூபாய் ஆகும். இதில் குழந்தை பராமரிப்பு, மளிகைப் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lanka-named-second-most-expensive-country-to-live-in-south-asia/">தெற்காசியாவில் வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த இரண்டாவது நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தெற்காசியாவில் வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த இரண்டாவது நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.</p>
<p>வாழ்க்கைச் செலவு புள்ளிவிவர வலைத்தளமான Numbeo வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன்படி, தனிநபரின் வாழ்க்கைச் செலவு 506 டொலர் அல்லது வாடகையைத் தவிர்த்து 153,899 ரூபாய் செலவாகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..</p>
<p>வலைத்தளத்தின்படி, கொழும்பு நகரில் வசிக்கும் நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்று வசதியாக வாழ்வதற்கான வாடகையைத் தவிர்த்து மாதாந்திர செலவுகள் 570,997 ரூபாய் ஆகும்.</p>
<p>இதில் குழந்தை பராமரிப்பு, மளிகைப் பொருட்கள், சுற்றுலா, உணவு, பாடசாலைக் கட்டணம், வீட்டுச் செலவுகள், வாகனச் செலவுகள் போன்றவை அடங்கும் என தெரிவிக்கப்பட்டுளு்ளது.</p>
<p>Numbeo உலகின் மிகப்பெரிய வாழ்க்கைச் செலவு பற்றிய தகவல்களை வழங்கும் தரவுத்தளமாகும், இது வாழ்க்கைச் செலவு பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகிறது.</p>
<p>இந்த தளத்தின்படி, மாலைத்தீவுகள் ஒரு நபருக்கு 840.4 டொலர் செலவில் வசதியாக வாழ்வதற்கு மிகவும் விலையுயர்ந்த தெற்சாசிய நாடாகக் பெயரிடப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lanka-named-second-most-expensive-country-to-live-in-south-asia/">தெற்காசியாவில் வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த இரண்டாவது நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பாதாள உலகக் குழு உறுப்பினர்களுடன் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு? நாடு முழுவதும் சிறப்பு விசாரணை</title>
		<link>https://oruvan.com/politicians-linked-to-underworld-gang-members/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Oct 2025 08:03:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[#police]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[Under world Gang]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=36633</guid>

					<description><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படும் அரசியல்வாதிகளை அடையாளம் காண, அரசாங்க புலனாய்வு அமைப்புகள் நாடு முழுவதும் இரகசிய விசாரணை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன. சிங்கள் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் மீதும் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது. பாதாள உலகக் குழுக்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட நான்கு அரசியல்வாதிகள் தொடர்பான குறிப்பிட்ட தகவல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளதாகவும், அவர்கள் உன்னிப்பாகக் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/politicians-linked-to-underworld-gang-members/">பாதாள உலகக் குழு உறுப்பினர்களுடன் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு? நாடு முழுவதும் சிறப்பு விசாரணை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படும் அரசியல்வாதிகளை அடையாளம் காண, அரசாங்க புலனாய்வு அமைப்புகள் நாடு முழுவதும் இரகசிய விசாரணை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன.</p>
<p>சிங்கள் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த நடவடிக்கையானது, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் மீதும் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது.</p>
<p>பாதாள உலகக் குழுக்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட நான்கு அரசியல்வாதிகள் தொடர்பான குறிப்பிட்ட தகவல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளதாகவும், அவர்கள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுவதாகவும் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.</p>
<p>சமீபத்தில் கைது செய்யப்பட்ட பல முக்கிய பாதாள உலகத் தலைவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது இந்த முக்கியமான தகவல் கிடைத்ததாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>அரசியல்வாதிகளுக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த தகவல்களை குற்றப் புலனாய்வுத் துறை உறுதிப்படுத்தியவுடன், அவர்களின் கையடக்க தொலைபேசி தரவை ஆய்வு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன் மூலம் பாதாள உலகக் குழுக்களுடனான தொடர்புகள், பணப் பரிமாற்றங்கள் மற்றும் பிற முக்கிய பரிவர்த்தனைகள் பற்றிய விரிவான தகவல்கள் வெளிப்படும் என்று புலனாய்வாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/politicians-linked-to-underworld-gang-members/">பாதாள உலகக் குழு உறுப்பினர்களுடன் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு? நாடு முழுவதும் சிறப்பு விசாரணை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>2024இல் இலங்கையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் &#8211; 61 பேர் உயிரிழப்பு, 47 பேர் படுகாயம்</title>
		<link>https://oruvan.com/shooting-incidents-in-sri-lanka-in-2024-61-people-killed-47-seriously-injured/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 05 Jan 2025 06:34:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[இலங்கைச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஒருவன்]]></category>
		<category><![CDATA[ஒருவன் செய்திகள்]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிச் சூடு]]></category>
		<category><![CDATA[புத்திக மனதுங்க]]></category>
		<category><![CDATA[பொலிஸார்]]></category>
		<category><![CDATA[விசாரணை]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=5463</guid>

					<description><![CDATA[<p>கடந்த ஆண்டு 100க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 61 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 47 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2024 ஆம் ஆண்டில் நடந்த பெரும்பாலான துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு இடையிலான மோதல்கள் காரணமாக இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த ஆண்டு பதிவான 103 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 56 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடையவை எனவும் இதில் 45 பேர் உயிரிழந்துள்ளமை தங்கள் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 16 [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/shooting-incidents-in-sri-lanka-in-2024-61-people-killed-47-seriously-injured/">2024இல் இலங்கையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் &#8211; 61 பேர் உயிரிழப்பு, 47 பேர் படுகாயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கடந்த ஆண்டு 100க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 61 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 47 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>2024 ஆம் ஆண்டில் நடந்த பெரும்பாலான துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு இடையிலான மோதல்கள் காரணமாக இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p>
<p>கடந்த ஆண்டு பதிவான 103 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 56 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடையவை எனவும் இதில் 45 பேர் உயிரிழந்துள்ளமை தங்கள் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p>
<p>16 பேர் கொல்லப்பட்ட மற்ற 47 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் வெவ்வேறு காரணங்களால் குறிப்பாக தனிப்பட்ட தகராறுகளால் நிகழ்ந்தவை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p>
<p>2024 ஆம் ஆண்டில் பதிவான கடைசி துப்பாக்கிச் சூடு சம்பவம் டிசம்பர் 28 ஆம் திகதி மாலையில் பதிவாகியிருந்தது. சீதுவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் காரில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.</p>
<p>இதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் காயமடைந்தனர். தந்தை மற்றும் அவரது இரண்டு மகன்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் விவரித்துள்ளனர்.</p>
<p>2024 ஆம் ஆண்டில் பல பெரிய துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளன. சில பட்டப்பகலில் நடந்தன, துப்பாக்கி ஏந்தியவர்கள் பொது மக்கள் முன்னிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளன.</p>
<p>கடந்த ஆண்டு ஜனவரி 22 அன்று தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த வெளியேறும் இடத்திற்கு அருகில் ஐந்து பேர் கொல்லப்பட்ட சம்பவம் மிகவும் பாராதூரமான ஒன்றாகும் இந்த சம்பவத்தில் நமது மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சமன் பெரேராவும் கொல்லப்பட்டார்.</p>
<p>மேலும், ஜூலை 8 ஆம் திகதி, அதுருகிரியவில் ஒரு அழகு நிலையம் திறப்பு விழாவில் தொழிலதிபர் சுரேந்திர வசந்த பெரேரா என்று அழைக்கப்படும் &#8220;கிளப் வசந்த&#8221; உட்பட இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.</p>
<p>இந்த சம்பவத்தில் பிரபல பாடகர் கே. சுஜீவா உட்பட நான்கு பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு ஆளானார்கள். இவ்வாறான சில துப்பாக்கிச் சூடுகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p>
<p>பெரும்பாலான துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்து கைது செய்வதில் பொலிஸார் வெற்றி பெற்றுள்ளதாக, பொலிஸ் செய்தித் தொடர்பாளர் கே. புத்திக மனதுங்க வலியுறுத்தினார்.</p>
<p>கடந்த ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக 50க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார். ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>2024ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் மட்டும் இதுபோன்ற துப்பாக்கிச் சூடுகளுக்குப் பயன்படுத்தப்பட்ட மூன்று டி-56 தாக்குதல் துப்பாக்கிகளை மீட்டுள்ளதாகவும், ஒட்டுமொத்தமாக, கடந்த ஆண்டு 20 டி-56 துப்பாக்கிகளை மீட்டெடுக்க முடிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்’’</p>
<p>2024 ஆம் ஆண்டில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விடக் குறைவாக பதிவாகியிருந்ததாகவும், 2023 ஆம் ஆண்டில், 120 துப்பாக்கிச் சூடுகளில் 54 பேர் கொல்லப்பட்டதுடன், 65 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/shooting-incidents-in-sri-lanka-in-2024-61-people-killed-47-seriously-injured/">2024இல் இலங்கையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் &#8211; 61 பேர் உயிரிழப்பு, 47 பேர் படுகாயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மனுஷ நாணயக்காரவின் சகோதரருக்கு விளக்கமறியல்</title>
		<link>https://oruvan.com/manusha-nanayakkaras-brother-remanded-in-custody/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 29 Dec 2024 10:22:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[Sri Lanka News]]></category>
		<category><![CDATA[இலங்கை செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஒருவன் செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழ் செய்திகள்]]></category>
		<category><![CDATA[மனுஷ நாணயக்கார]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=4469</guid>

					<description><![CDATA[<p>நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் எதிர்வரும் ஆறாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது. சந்தேநபர் இன்று கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், எதிர்வரும் ஜனவரி ஆறாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர இரோஷன நாணயக்கார, நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (சிஐடி) நேற்று சனிக்கிழமை (28) கைது செய்யப்பட்டார். பிபிலே [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/manusha-nanayakkaras-brother-remanded-in-custody/">மனுஷ நாணயக்காரவின் சகோதரருக்கு விளக்கமறியல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் எதிர்வரும் ஆறாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது.</p>
<p>சந்தேநபர் இன்று கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், எதிர்வரும் ஜனவரி ஆறாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.</p>
<p>முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர இரோஷன நாணயக்கார, நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (சிஐடி) நேற்று சனிக்கிழமை (28) கைது செய்யப்பட்டார்.</p>
<p>பிபிலே பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>கைது செய்யப்பட்ட சந்தேக நபரான திசர இரோஷன நாணயக்கார, பின்லாந்தில் வேலை வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி தனிநபர்களிடமிருந்து சுமார் 3 மில்லியன் ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.</p>
<p>The post <a href="https://oruvan.com/manusha-nanayakkaras-brother-remanded-in-custody/">மனுஷ நாணயக்காரவின் சகோதரருக்கு விளக்கமறியல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>யாழ்ப்பாணத்தில் இலங்கை வங்கியின் முன்னாள் முகாமையாளர் ஒருவர் கைது</title>
		<link>https://oruvan.com/former-bank-of-ceylon-manager-arrested-in-jaffna/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 29 Dec 2024 06:28:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Jaffna News]]></category>
		<category><![CDATA[Jaffna Tamil News]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[Sri Lanka Tamil News]]></category>
		<category><![CDATA[Tamil News]]></category>
		<category><![CDATA[இலங்கை தமிழ் செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கைச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஒருவன்]]></category>
		<category><![CDATA[ஒருவன் செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணச் செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=4440</guid>

					<description><![CDATA[<p>இலங்கை வங்கியின் முன்னாள் முகாமையாளர் ஒருவர், பெருந்தொகை பணமோசடியில் ஈடுபட்டமைக்காக யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார். வங்கியில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து 15 லட்சம் ரூபாவை ஒருவரிடம் இருந்து மோசடி செய்ததாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரிடம் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்தே அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தான் பெற்றுக்கொண்ட பணத்துக்காக சந்தேகநபர் காசோலை வழங்கிய போதிலும், குறித்த காசோலை திரும்பியதைத் தொடர்ந்தே அவர் மீதான முறைப்பாடு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/former-bank-of-ceylon-manager-arrested-in-jaffna/">யாழ்ப்பாணத்தில் இலங்கை வங்கியின் முன்னாள் முகாமையாளர் ஒருவர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கை வங்கியின் முன்னாள் முகாமையாளர் ஒருவர், பெருந்தொகை பணமோசடியில் ஈடுபட்டமைக்காக யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>வங்கியில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து 15 லட்சம் ரூபாவை ஒருவரிடம் இருந்து மோசடி செய்ததாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரிடம் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்தே அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>தான் பெற்றுக்கொண்ட பணத்துக்காக சந்தேகநபர் காசோலை வழங்கிய போதிலும், குறித்த காசோலை திரும்பியதைத் தொடர்ந்தே அவர் மீதான முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.</p>
<p>சந்தேகநபர் தலைமறைவாக இருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/former-bank-of-ceylon-manager-arrested-in-jaffna/">யாழ்ப்பாணத்தில் இலங்கை வங்கியின் முன்னாள் முகாமையாளர் ஒருவர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சொத்து விபரங்களை சமர்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/notice-to-members-of-parliament-to-submit-asset-details/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 29 Dec 2024 05:55:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[LK]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[Parliament News]]></category>
		<category><![CDATA[Sri Lanka News]]></category>
		<category><![CDATA[sri lanka parliament]]></category>
		<category><![CDATA[Sri Lanka Tamil News]]></category>
		<category><![CDATA[Tamil News]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=4432</guid>

					<description><![CDATA[<p>அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் 2025 பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் தமது சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி குஷானி ரோஹனதீர இதனைத் தெரிவித்துள்ளார். புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் 82 (ஏ) பிரிவின்படி, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவியேற்ற மூன்று மாதங்களுக்குள் தங்களது சொத்துக்கள் மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும்.</p>
<p>The post <a href="https://oruvan.com/notice-to-members-of-parliament-to-submit-asset-details/">சொத்து விபரங்களை சமர்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் 2025 பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் தமது சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி குஷானி ரோஹனதீர இதனைத் தெரிவித்துள்ளார்.</p>
<p>புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் 82 (ஏ) பிரிவின்படி, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவியேற்ற மூன்று மாதங்களுக்குள் தங்களது சொத்துக்கள் மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும்.</p>
<p>The post <a href="https://oruvan.com/notice-to-members-of-parliament-to-submit-asset-details/">சொத்து விபரங்களை சமர்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>புதுப்பிக்கப்படும் ரயில் டிக்கெட்</title>
		<link>https://oruvan.com/renewed-train-ticket/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 25 Dec 2024 06:27:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[LK]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[Sri Lanka News]]></category>
		<category><![CDATA[Tamil News]]></category>
		<category><![CDATA[இலங்கைச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழ் செய்திகள்]]></category>
		<category><![CDATA[ரயில்வே திணைக்களம்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=3869</guid>

					<description><![CDATA[<p>தற்போது பயன்படுத்தப்படும் ரயில் டிக்கெட்டுக்கு பதிலாக முன்பணம் செலுத்திய ரயில் பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்காக தனியார் நிறுவனத்துடன் இணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்க முடியும் எனவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் புதிய அட்டை அறிமுகம் செய்யப்பட உள்ளது. அந்த அட்டைகளைப் பயன்படுத்துபவர்கள் ஒவ்வொரு நிலையத்திலிருந்தும் அணுகுவதற்குத் தேவையான தொழில்நுட்பக் கருவிகளும் நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/renewed-train-ticket/">புதுப்பிக்கப்படும் ரயில் டிக்கெட்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தற்போது பயன்படுத்தப்படும் ரயில் டிக்கெட்டுக்கு பதிலாக முன்பணம் செலுத்திய ரயில் பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.</p>
<p>இதற்காக தனியார் நிறுவனத்துடன் இணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்க முடியும் எனவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p>
<p>எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் புதிய அட்டை அறிமுகம் செய்யப்பட உள்ளது.</p>
<p>அந்த அட்டைகளைப் பயன்படுத்துபவர்கள் ஒவ்வொரு நிலையத்திலிருந்தும் அணுகுவதற்குத் தேவையான தொழில்நுட்பக் கருவிகளும் நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அதேநேரம், தற்போது பயன்பாட்டில் உள்ள ரயில்வே டிக்கெட்டுக்கு பதிலாக, முன்பணம் செலுத்திய ரயில்வே டிக்கெட்டை சரிபார்க்க, அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/renewed-train-ticket/">புதுப்பிக்கப்படும் ரயில் டிக்கெட்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அதிக கடனை அரசாங்கம் பெறவில்லை &#8211; வெரிட்டே ரிசர்ச்</title>
		<link>https://oruvan.com/the-government-has-not-taken-on-much-debt-verite-research/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Dec 2024 04:46:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[much debt -]]></category>
		<category><![CDATA[oruvannews]]></category>
		<category><![CDATA[Verite Research]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=2815</guid>

					<description><![CDATA[<p>இந்த ஆண்டு வரவு செலவு திட்ட வரம்புகளுக்கு மேல் அரசாங்கம் கடன் பெற்றுக்கொள்ளவில்லை என வெரிட்டே ரிசர்ச் சமீபத்திய ஆய்வில் வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி, அரசாங்கம் உள்ளூர் அளவில் பெற்றுக் கொள்ளும் மொத்த கடன் தொகை குறிப்பிடப்பட்டுள்ள வரம்பிற்குள் உள்ளதாக வெரிட்டே ரிசர்ச் கூறுகிறது. இவ்வாண்டின் வரவு செலவு திட்ட மதிப்பீடுகளுக்கு அரசாங்கம் நிர்ணயித்த வரம்பு 3,670 பில்லியன் ரூபாய் என நிதியமைச்சின் தரவு அறிக்கை தெரிவிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் தொடக்கம் செப்டெம்பர் மாதம் வரை அரசாங்கம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-government-has-not-taken-on-much-debt-verite-research/">அதிக கடனை அரசாங்கம் பெறவில்லை &#8211; வெரிட்டே ரிசர்ச்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்த ஆண்டு வரவு செலவு திட்ட வரம்புகளுக்கு மேல் அரசாங்கம் கடன் பெற்றுக்கொள்ளவில்லை என வெரிட்டே ரிசர்ச் சமீபத்திய ஆய்வில் வெளிப்படுத்தியுள்ளது.</p>
<p>அதன்படி, அரசாங்கம் உள்ளூர் அளவில் பெற்றுக் கொள்ளும் மொத்த கடன் தொகை குறிப்பிடப்பட்டுள்ள வரம்பிற்குள் உள்ளதாக வெரிட்டே ரிசர்ச் கூறுகிறது.</p>
<p>இவ்வாண்டின் வரவு செலவு திட்ட மதிப்பீடுகளுக்கு அரசாங்கம் நிர்ணயித்த வரம்பு 3,670 பில்லியன் ரூபாய் என நிதியமைச்சின் தரவு அறிக்கை தெரிவிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>
<p>ஜனவரி மாதம் தொடக்கம் செப்டெம்பர் மாதம் வரை அரசாங்கம் எடுத்த கடன் தொகை 1,903 பில்லியன் ரூபா என்றும் மேலும், 1,766 பில்லியன் ரூபாவை அரசாங்கம் கடனாகப் பெற முடியும் எனவும் வெரிட்டே ரிசர்ச் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது.</p>
<p>குறித்த தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டில் வரம்புக்கு மேலதிகமாக கடன் பெறும் அபாயமான நிலையில் அரசாங்கம் இல்லை என வெரிட்டே ரிசர்ச் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/the-government-has-not-taken-on-much-debt-verite-research/">அதிக கடனை அரசாங்கம் பெறவில்லை &#8211; வெரிட்டே ரிசர்ச்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமைகளை கோரும் ஆஷூ மாரசிங்க</title>
		<link>https://oruvan.com/ashu-marasinghe-demands-educational-qualifications-of-225-mps/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Mon, 16 Dec 2024 09:32:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[225 MPs]]></category>
		<category><![CDATA[Ashu Marasinghe]]></category>
		<category><![CDATA[current]]></category>
		<category><![CDATA[demands]]></category>
		<category><![CDATA[educational]]></category>
		<category><![CDATA[LK]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[oruvannews]]></category>
		<category><![CDATA[qualifications]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=2742</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க, இம்முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமைகள், தொழில் மற்றும் சொத்து அறிக்கைகளை கோரி தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மூன்று விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் பொதுச்செயலாளர், ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோரிடம் ஆஷூ மாரசிங்க இந்த தகவல்களை கோரியுள்ளார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமை, [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ashu-marasinghe-demands-educational-qualifications-of-225-mps/">225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமைகளை கோரும் ஆஷூ மாரசிங்க</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க, இம்முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமைகள், தொழில் மற்றும் சொத்து அறிக்கைகளை கோரி தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மூன்று விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளார்.</p>
<p>இலங்கை நாடாளுமன்றத்தில் பொதுச்செயலாளர், ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோரிடம் ஆஷூ மாரசிங்க இந்த தகவல்களை கோரியுள்ளார்.</p>
<p>2024 நாடாளுமன்றத் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமை, வேலை வாய்ப்பு மற்றும் சொத்துப் பொறுப்பு அறிக்கைகளை வழங்க வேண்டும் என தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஆஷு மாரசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/ashu-marasinghe-demands-educational-qualifications-of-225-mps/">225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமைகளை கோரும் ஆஷூ மாரசிங்க</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
