<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Letter Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/letter/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/letter/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Tue, 21 Apr 2026 06:06:00 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Letter Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/letter/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மக்களின் நலன்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்துள்ளேன் &#8211; விஜய்</title>
		<link>https://oruvan.com/i-have-entered-politics-only-for-the-welfare-of-the-people-vijays-heartfelt-letter/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Apr 2026 06:04:25 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[heartfelt]]></category>
		<category><![CDATA[Letter]]></category>
		<category><![CDATA[Vijay's]]></category>
		<category><![CDATA[இன்றுடன்]]></category>
		<category><![CDATA[சட்டமன்றத் தேர்தல்]]></category>
		<category><![CDATA[தவெக தலைவர்]]></category>
		<category><![CDATA[நிறைவு]]></category>
		<category><![CDATA[பிரச்சாரம்]]></category>
		<category><![CDATA[விஜய்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48638</guid>

					<description><![CDATA[<p>மக்களின் நலன்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்துள்ளேன் என தெரிவித்து மக்களிடம் வாக்கு கோரி தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் தமிழகத்தில் நிறைவடையும் நிலையில், வாக்கு கோரி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது, &#8220;ஆசையோடும் அன்போடும் எனக்காக எல்லாவற்றையும் அள்ளி அள்ளித் தந்த உங்களோடு உங்கள் விஜய் மனம்விட்டுப் பேசவே இக்கடிதம். எனக்கு எல்லாமும் தந்த என் சொந்தங்களான தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றிக்கடன் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/i-have-entered-politics-only-for-the-welfare-of-the-people-vijays-heartfelt-letter/">மக்களின் நலன்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்துள்ளேன் &#8211; விஜய்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மக்களின் நலன்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்துள்ளேன் என தெரிவித்து மக்களிடம் வாக்கு கோரி தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.</p>
<p>சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் தமிழகத்தில் நிறைவடையும் நிலையில், வாக்கு கோரி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.</p>
<p>அந்தக் கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது,</p>
<p>&#8220;ஆசையோடும் அன்போடும் எனக்காக எல்லாவற்றையும் அள்ளி அள்ளித் தந்த உங்களோடு உங்கள் விஜய் மனம்விட்டுப் பேசவே இக்கடிதம். எனக்கு எல்லாமும் தந்த என் சொந்தங்களான தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே அரசியலுக்கு வந்த நாள்முதல் சொல்லொணா நெருக்கடிகளையும் நிர்பந்தங்களையும் சொல்லவியலா வேதனைகளையும் இதுவரை நமக்கு விளைவித்தே வந்தவர்கள் வேறு யார்?</p>
<p>நமது அரசியல் எதிரியான மக்கள் விரோத தீயசக்தி திமுகவும் கொள்கை எதிரியான மற்றும் பலருடன் களம் காணும் பிளவுவாத சக்தியான பாஜகவும் என்று மக்களே அறிவர். மக்களுக்காக அவர்தம் நலன்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்த இந்த விஜய், பாசிச மனநிலை கொண்ட ஜனவிரோதக் கட்சிகளின் அழுத்தங்களுக்கா அடிபணிவான்? திசைதிருப்பல் முதலீட்டுக் கழகங்களின் நெருக்கடிகளுக்கும் நிர்பந்தங்களுக்கும் குனிந்து கூழைக் கும்பிடா போடுவான்? ஆதாயங்களைக் காட்டி உங்கள் மகனை அடக்கிவிடவும் முடியாது. அதிகாரங்களை ஏவி உங்கள் சகோதரனை மிரட்டி விடவும் இயலாது.</p>
<p>இறைவன் அருளால் இயற்கையின் துணையுடன் மாபெரும் பெண்கள் சக்தி, மாபெரும் இளைஞர் சக்தி, மாபெரும் மக்கள் சக்தியுடன் உலகெங்கும் உள்ள நமது தோழர்களின் பேராதரவுடன் முதன்மை அரசியல் சக்தியாகக் களத்திற்கு வந்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தமிழக மக்கள் நலன் சார்ந்த நோக்கத்தையும் அதன் தாக்கத்தையும் எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது என்பதை வரும் தேர்தலில் நம் மக்களே அவர்களுக்கு சரியான பாடம் புகட்டி உணர்த்துவர்.</p>
<p>நம்மை எள்ளி நகையாடியக் கூட்டம் மட்டுமன்று, இந்த நாடே அறியும்,அளக்கமுடியாத ஆழ்கடல் &#8211; விலக்க முடியாத விரிவானம் த.வெ.க என்று.நேர்மையின் நெருப்புக்கோளம் &#8211; மக்களின் நெஞ்சில் நீக்கமறக் குடியிருப்பது த.வெ.க என்று. சமூகநீதிக் காவலரண் &#8211; ஜனநாயகப் பேரரண் த.வெ.க என்று.</p>
<p>இப்படிப்பட்ட த.வெ.கவை ஊழல் விஷ சக்திகளாலா வீழ்த்த முடியும்? பாசிச சக்திகளாலா பகைவெல்ல முடியும்? மக்களே… மீண்டும் சொல்கிறேன். இத்தனை நெருக்கடிகளையும் இத்தனை நிர்பந்தங்களையும் இத்தனை வேதனைகளையும் உங்கள் விஜய் தாங்கிக்கொண்டு நிற்க ஒரே ஒரு காரணம்தான் உண்டு. அது உங்களின் உயர்தனி உள்ளன்பு மட்டும்தான்.</p>
<p>எந்த அரசியல் கட்சி முன்புலமோ பின்புலமோ இன்றி அரசியலுக்கு வந்த என்னை ‘நீ வாப்பா’… ‘நீ வா தம்பி’… ‘நீ வாண்ணா’… ‘நீ வா நண்பா’… ‘நீ வா தோழா’… ‘நாங்க பாத்துக்கறோம்’… என்ற உங்களின் பேரன்பும் பேராதரவும் மட்டுமே என்னை இயக்கும் மாபெரும் உந்துசக்தி என்பதே உண்மை.<br />
இப்போதும் சொல்வேன். எப்போதும் சொல்வேன். உங்களையும் என்னையும் இந்த உலகத்தில் எந்த அதிகார சக்தியாலும் எந்த அராஜக சக்தியாலும் எந்த தீயசக்தியாலும் எந்த பாசிச சக்தியாலும் எந்த ‘மற்றும் பலர்’ சக்தியாலும் பிரிக்கவே இயலாது.</p>
<p>அப்படிப் பிரிக்க நினைக்கும் அனைத்து சக்திகளையும் மக்கள் அக்குவேறு ஆணிவேறாகத் தனித்தனியாகப் பிரித்து, தூக்கி வீசி எறியப் போவது உறுதி. பணத்தை மட்டுமே நம்பி தத்தம் சுயலாபங்களுக்காக அரசியல் களமாடும், எதிர்வரும் நம் தலைமுறையின் கனவுகளை அடகு வைக்கத் துடிக்கும் அடிமை அரசியல் சூதாடிகளின் வேறு எந்தச் சின்னத்திற்கு நீங்கள் வாக்களித்தாலும், பிளவுவாத சக்திகளுக்கான மறைமுக அல்லது நேரடி ஆதரவாக மட்டுமே அது மாறும்.&#8221; என்று கூறி தவெகவுக்கு வாக்கு கோரியுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/i-have-entered-politics-only-for-the-welfare-of-the-people-vijays-heartfelt-letter/">மக்களின் நலன்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்துள்ளேன் &#8211; விஜய்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கு சட்டத்தரணிகள் சங்கம் அனுப்பிய கடிதம்</title>
		<link>https://oruvan.com/letter-sent-by-the-bar-association-to-representatives-of-parliament/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Wed, 11 Dec 2024 05:35:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#local]]></category>
		<category><![CDATA[Anurakumara dissanayaka]]></category>
		<category><![CDATA[Bar Association]]></category>
		<category><![CDATA[current]]></category>
		<category><![CDATA[Letter]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[of Parliament]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[Policians]]></category>
		<category><![CDATA[representatives]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=2029</guid>

					<description><![CDATA[<p>நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குதல் உள்ளிட்ட நாட்டின் அரசியலமைப்பு மற்றும் நீதித் துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்த்திருத்தங்கள் தொடர்பிலான தமது நிலைப்பாட்டை விளக்கி சட்டத்தரணிகள் சங்கம், புதிய அமைச்சரவை உள்ளிட்ட நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்குதல், நிகழ்நிலை காப்புச் சட்டத்தை இரத்து செய்தல் மற்றும் ஆட்சிமுறை தொடர்பில் தற்போது அவதானிக்கப்படும் சிக்கல்கள் குறித்து அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழக அமைப்பின் சுயாட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்காக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/letter-sent-by-the-bar-association-to-representatives-of-parliament/">நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கு சட்டத்தரணிகள் சங்கம் அனுப்பிய கடிதம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குதல் உள்ளிட்ட நாட்டின் அரசியலமைப்பு மற்றும் நீதித் துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்த்திருத்தங்கள் தொடர்பிலான தமது நிலைப்பாட்டை விளக்கி சட்டத்தரணிகள் சங்கம், புதிய அமைச்சரவை உள்ளிட்ட நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.</p>
<p>பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்குதல், நிகழ்நிலை காப்புச் சட்டத்தை இரத்து செய்தல் மற்றும் ஆட்சிமுறை தொடர்பில் தற்போது அவதானிக்கப்படும் சிக்கல்கள் குறித்து அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p>
<p>பல்கலைக்கழக அமைப்பின் சுயாட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்காக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள சட்டத்தரணிகள் சங்கம், அரச பல்கலைக்கழகங்களை சுதந்திரமாகவும் வலுவாகவும் மாற்றும் சீர்திருத்தங்களைக் கருத்தில் கொள்ளுமாறு சட்டவாக்க சபையை வலியுறுத்துகிறது.</p>
<p>ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, பேராசிரியர் சாவித்திரி குணசேகர, ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரத்தினம், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், பேராசிரியர் தீபிகா உடகம, பேராசிரியர் கமினா குணரத்ன, சட்டத்தரணி கே.டபள்யூ ஜனரஞ்சன, சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரோரா, சட்டத்தரணி அர்மிசா டீகல், சட்டத்தரணி தர்ஸன குருப்பு ஆகியோர் கையெழுத்திட்டனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/letter-sent-by-the-bar-association-to-representatives-of-parliament/">நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கு சட்டத்தரணிகள் சங்கம் அனுப்பிய கடிதம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
