<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Kataragama Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/kataragama/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/kataragama/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Thu, 29 May 2025 03:16:32 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Kataragama Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/kataragama/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>23 பேரை பலியெடுத்த கொத்மலை விபத்து &#8211; காரணம் வெளியானது</title>
		<link>https://oruvan.com/gerandi-ella-bus-accident-that-killed-23-people-cause-revealed/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 29 May 2025 03:16:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CTB]]></category>
		<category><![CDATA[Gerandi Ella bus accident]]></category>
		<category><![CDATA[Kataragama]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=21670</guid>

					<description><![CDATA[<p>அண்மையில் கொத்மலை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்திற்கு கதிர்காமம் பிராந்திய போக்குவரத்துச் சபை மற்றம் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியவை பொறுப்பேற்க வேண்டும் என விசாரணை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் கொத்மலை &#8211; கெரண்டியெல்ல பகுதியில் அரச பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்ததுடன், 40க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தனர். விபத்துக்கு முக்கிய காரணம் சாரதியின் ஓய்வின்மை என்றும், அதுவே அவர் நித்திரைக்கொள்ள [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/gerandi-ella-bus-accident-that-killed-23-people-cause-revealed/">23 பேரை பலியெடுத்த கொத்மலை விபத்து &#8211; காரணம் வெளியானது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அண்மையில் கொத்மலை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்திற்கு கதிர்காமம் பிராந்திய போக்குவரத்துச் சபை மற்றம் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியவை பொறுப்பேற்க வேண்டும் என விசாரணை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.</p>
<p>மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அண்மையில் கொத்மலை &#8211; கெரண்டியெல்ல பகுதியில் அரச பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்ததுடன், 40க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தனர்.</p>
<p>விபத்துக்கு முக்கிய காரணம் சாரதியின் ஓய்வின்மை என்றும், அதுவே அவர் நித்திரைக்கொள்ள காரணம் என்றும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இருப்பினும், சாரதியின் ஓய்வின்மை விபத்துக்கு முக்கிய காரணம் என்று விசாரணை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>
<p>எவ்வாறாயினும், அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களைப் பயன்படுத்தி கதிர்காமம் பிராந்திய போக்குவரத்துச் சபை பேருந்தை முறையாக பராமரிக்கவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.</p>
<p>குறித்த கடைசியாக பேருந்து 2023ஆம் ஆண்டு பழுதுபார்க்கப்பட்டாலும், பேருந்தின் சட்டகத்தின் தூண்கள் தேய்ந்து போயிருந்தன, ஆனால் அவை அகற்றப்படவில்லை மற்றும் புதிய தகடுகள் பயன்படுத்தப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.</p>
<p>எனவே, விபத்து பேருந்திற்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியதாக விசாரணை அறிக்கை கூறுகிறது.</p>
<p>2022 ஆம் ஆண்டு விபத்து நடந்த இடத்தின் இருபுறமும் இரண்டு மரக் கடைகள் கட்டுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை வணிகர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.</p>
<p>எனினும், வாடிக்கையாளர்களின் வசதிக்காக வணிகர்கள் பெரிய மரங்களை வெட்டி விபத்து நடந்த இடத்தில் தரையை சமன் செய்ததாகவும் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் சிறப்பு விசாரணை நடத்த பொலிஸாரினால் ஒரு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/gerandi-ella-bus-accident-that-killed-23-people-cause-revealed/">23 பேரை பலியெடுத்த கொத்மலை விபத்து &#8211; காரணம் வெளியானது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கெரண்டிஎல்ல பேருந்து விபத்து &#8211; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரிப்பு</title>
		<link>https://oruvan.com/gerandi-ella-bus-accident-death-toll-rises-to-23/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 12 May 2025 05:46:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[death]]></category>
		<category><![CDATA[Gerandi Ella bus accident]]></category>
		<category><![CDATA[Kataragama]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=20072</guid>

					<description><![CDATA[<p>ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது. நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று நேற்று (11) காலை பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருநாகல் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளது. நேற்று வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக இருந்த நிலையில், தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/gerandi-ella-bus-accident-death-toll-rises-to-23/">கெரண்டிஎல்ல பேருந்து விபத்து &#8211; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது.</p>
<p>நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று நேற்று (11) காலை பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.</p>
<p>கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருநாகல் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளது.</p>
<p>நேற்று வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக இருந்த நிலையில், தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதேவேளை, குறித்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.</p>
<p>அதற்கமைய, விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பங்களுக்கும் தலா ஒரு மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.</p>
<p>விபத்தில் படுகாயமடைந்தவர்களை மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு அழைத்து வர இரண்டு ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.</p>
<p>இதன்படி, இரத்மலானை விமானப்படை தளத்தில் இந்த இரண்டு ஹெலிகொப்டர்களையும் விமானப்படை தயார் நிலையில் வைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.</p>
<p>இந்நடவடிக்க இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான இரண்டு பெல் 412 ரக ஹெலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/gerandi-ella-bus-accident-death-toll-rises-to-23/">கெரண்டிஎல்ல பேருந்து விபத்து &#8211; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
