<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Karur Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/karur/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/karur/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sat, 11 Oct 2025 08:20:08 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Karur Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/karur/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>அடுத்த வாரம் கரூர் செல்லும் விஜய்</title>
		<link>https://oruvan.com/vijay-to-visit-karur-next-week/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 11 Oct 2025 08:20:08 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Karur]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[vijay]]></category>
		<category><![CDATA[visit]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=35039</guid>

					<description><![CDATA[<p>தமிழகத்தின் கரூர் வேலுசாமிபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதற்காக த.வெ.க. தலைவர் விஜய் எதிர்வரும் 17 ஆம் திகதி செல்வதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வேலுசாமிபுரம் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்திக்க தீரமானித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியையும் அவர் நேரில் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தின் கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் கடந்த 27 ஆம் திகதி ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/vijay-to-visit-karur-next-week/">அடுத்த வாரம் கரூர் செல்லும் விஜய்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழகத்தின் கரூர் வேலுசாமிபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதற்காக த.வெ.க. தலைவர் விஜய் எதிர்வரும்<br />
17 ஆம் திகதி செல்வதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
<p>வேலுசாமிபுரம் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்திக்க தீரமானித்துள்ளதாக<br />
இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.</p>
<p>பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியையும் அவர் நேரில் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>தமிழகத்தின் கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் கடந்த 27 ஆம் திகதி ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் உலகையெ அதிர்ச்சியில் ஆழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/vijay-to-visit-karur-next-week/">அடுத்த வாரம் கரூர் செல்லும் விஜய்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கரூரில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் சந்திக்க வேண்டும் &#8211; பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை</title>
		<link>https://oruvan.com/premalatha-vijayakanth-demands-that-vijay-should-meet-the-affected-people-in-karur-in-person/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Oct 2025 06:17:38 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Karur]]></category>
		<category><![CDATA[Karur stampede]]></category>
		<category><![CDATA[tvk]]></category>
		<category><![CDATA[TVK Vijay]]></category>
		<category><![CDATA[கரூர்]]></category>
		<category><![CDATA[கரூர் கூட்டம்]]></category>
		<category><![CDATA[டிவகே]]></category>
		<category><![CDATA[தவெக]]></category>
		<category><![CDATA[விஜயின் கரூர் கூட்டம்]]></category>
		<category><![CDATA[விஜய்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=34536</guid>

					<description><![CDATA[<p>கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தமிழக் வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேரில் சந்திக்க வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் நேற்று இடம்பெற்ற பொது மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். கரூரில் பாதுகாப்பு கொடுக்க தவறியதால் 41 பேர் உயிர் இழந்துள்ளனர். மக்களை சந்திக்க தாமதமாக வந்ததே விஜய் செய்த மிகப் பெரிய தவறு. விஜய் கடமை உணர்வை தவறிவிட்டதாகவும் அவர் குற்றம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/premalatha-vijayakanth-demands-that-vijay-should-meet-the-affected-people-in-karur-in-person/">கரூரில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் சந்திக்க வேண்டும் &#8211; பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தமிழக் வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேரில் சந்திக்க வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.</p>
<p>கிருஷ்ணகிரியில் நேற்று இடம்பெற்ற பொது மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.</p>
<p>கரூரில் பாதுகாப்பு கொடுக்க தவறியதால் 41 பேர் உயிர் இழந்துள்ளனர். மக்களை சந்திக்க தாமதமாக வந்ததே விஜய் செய்த மிகப் பெரிய தவறு. விஜய் கடமை உணர்வை தவறிவிட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.</p>
<p>கரூர் சம்பவத்தில் இரு பக்கமும் தவறுகள் உள்ளன. பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அரசும் தவறி விட்டது. தொண்டர்களை பத்திரமாக பாதுகாக்க வேண்டிய விஜய்யும் தவறு செய்து விட்டார். இதில் மாற்று கருத்து இல்லை.</p>
<p>விஜயகாந்த்தை அண்ணன் என்று கூறும் விஜய், அண்ணன் என்ன செய்தார் என்பதை பார்த்து செயல்பட வேண்டும் எனவும் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
<p>கரூர் பிரசார கூட்டம் நடந்த இடத்தில் மின் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதே நேரத்தில் தொண்டர்களுக்கு தண்ணீர், உணவு கொடுக்க வேண்டும்.</p>
<p>தலைவர் என்பவர் எப்போதும் வாகனத்தில் உள்ளேயே அமர்ந்து இருக்க கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>இந்நிலையில், கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் நேரில் சந்திக்க வேண்டும். நிதியுதவியையும் நேரில் கொடுக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/premalatha-vijayakanth-demands-that-vijay-should-meet-the-affected-people-in-karur-in-person/">கரூரில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் சந்திக்க வேண்டும் &#8211; பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கரூர் சம்பவம் &#8211; முதல்முறையாக மௌனம் கலைந்தார் விஜய்</title>
		<link>https://oruvan.com/karur-stampede-vijay-breaks-his-silence-for-the-first-time/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Sep 2025 10:42:04 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Karur]]></category>
		<category><![CDATA[Karur stampede]]></category>
		<category><![CDATA[TVK Vijay]]></category>
		<category><![CDATA[கரூர்]]></category>
		<category><![CDATA[கரூர் கூட்டம்]]></category>
		<category><![CDATA[தவெக]]></category>
		<category><![CDATA[விஜய்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=34001</guid>

					<description><![CDATA[<p>தனது அரசியல் பயணம் இன்னும் வலிமையாக தொடரும் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பதற்றமான சூழலை தவிர்க்கவே கரூர் செல்லவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். கரூர் சம்பவத்திற்கு பின்னர் முதல் முறையாக பேசியுள்ள விஜய் இவ்வாறு தெரிவித்துள்ளார். கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த 27ஆம் திகதி தமிழக் வெற்றிக் கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பரப்புரைக்கு வருகை தந்தார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/karur-stampede-vijay-breaks-his-silence-for-the-first-time/">கரூர் சம்பவம் &#8211; முதல்முறையாக மௌனம் கலைந்தார் விஜய்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தனது அரசியல் பயணம் இன்னும் வலிமையாக தொடரும் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்நிலையில், பதற்றமான சூழலை தவிர்க்கவே கரூர் செல்லவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>கரூர் சம்பவத்திற்கு பின்னர் முதல் முறையாக பேசியுள்ள விஜய் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த 27ஆம் திகதி தமிழக் வெற்றிக் கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பரப்புரைக்கு வருகை தந்தார்.<br />
அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவர்களில் 41 பேர் உயிரிழந்தனர்.<br />
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.</p>
<p>இந்தச் சம்பவம் தொடர்பிலர் தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்பட தவெக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.</p>
<p>ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையமும் விசாரணையை தொடங்கியுள்ளது.</p>
<p>பரப்புரைக் கூட்டம் நடைபெற்ற இடம், கரூர் அரச வைத்தியசாலை, உயிரிழந்தவர்களின் வீடுகள் ஆகியவற்றுக்குச் சென்று அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தியுள்ளார்.</p>
<p>அதேநேரத்தில், சி.பி.ஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றில் தமிழக் வெற்றிக் கழகம் தரப்பில் முறையிடப்பட்டுள்ளது.</p>
<p>விஜய் பிரசாரம் செய்ய தடை விதிக்குமாறு கோரியும் ஒரு தரப்பு நீதிமன்றை நாடியுள்ளது. இந்நிலையில் கரூர் துயர சம்பவம் தொடர்பாக விஜய் தனது எக்ஸ் வலைதளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p>
<p>“என் வாழ்க்கையில் இப்படி ஒரு வலி மிகுந்த நேரத்தை சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. நடக்கக்கூடாதது நடந்துவிட்டது. மனது முழுக்க வலி.. கரூரில் தவெக எந்த தவறும் செய்யவில்லை.</p>
<p>தொண்டர்கள் மீது கை வைக்காதீர்கள். என்னை பழிவாங்க நினைத்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். வீட்டில் அல்லது அலுவலகத்தில்தான் இருப்பேன். .</p>
<p>இனி மக்கள் பாதுகாப்பே முக்கியம். இனி பாதுகாப்பான இடங்களையே கேட்போம். எனது அரசியல் பயணம் இன்னும் வலிமையாக தொடரும்.</p>
<p>என்னுடைய வலிகளை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், மற்ற கட்சி தலைவர்கள் ஒத்துழைக்க வேண்டும்.5 மாவட்டங்களில் பிரசாரம் செய்தேன். கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது?</p>
<p>பதற்றமான சூழலை தவிர்க்கவே கரூர் செல்லவில்லை. சூழலை புரிந்து கொண்டு எங்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கு நன்றி.</p>
<p>விரைவில் அனைத்து உண்மையும் வெளிவரும். பாதிக்கப்பட்டவர்களை விரைவில் சந்திப்பேன்.” என மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/karur-stampede-vijay-breaks-his-silence-for-the-first-time/">கரூர் சம்பவம் &#8211; முதல்முறையாக மௌனம் கலைந்தார் விஜய்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கரூர் சம்பவம் &#8211; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு</title>
		<link>https://oruvan.com/karur-incident-death-toll-rises-to-40/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 28 Sep 2025 08:53:02 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[death]]></category>
		<category><![CDATA[incident]]></category>
		<category><![CDATA[Karur]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=33783</guid>

					<description><![CDATA[<p>தமிழகத்தின் கரூரில் நடை​பெற்ற தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரத்​தின்​போது கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. கரூர் வேலு​சாமிபுரத்​தில் தவெக தலை​வர் விஜய் , நேற்று இரவு தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டார். முன்​ன​தாக, காலை 10.30 மணிக்கு விஜய் பிரச்​சா​ரம் செய்ய பொலிஸ் தரப்​பில் அனு​மதி அளிக்​கப்​பட்​டிருந்​தது. ஆனால், நாமக்​கல்​லில் பிரச்​சா​ரம் செய்​து​விட்டு பிற்​பகல் 03 மணிக்​குப் பிறகு​தான் விஜய் புறப்பட்டார். இதனிடையே, கரூர் வேலு​சாமிபுரத்​தில் பகல் 12 மணி முதல் தொண்​டர்​கள், இரசிகர்​கள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/karur-incident-death-toll-rises-to-40/">கரூர் சம்பவம் &#8211; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழகத்தின் கரூரில் நடை​பெற்ற தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரத்​தின்​போது கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.</p>
<p>கரூர் வேலு​சாமிபுரத்​தில் தவெக தலை​வர் விஜய் , நேற்று இரவு தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டார்.</p>
<p>முன்​ன​தாக, காலை 10.30 மணிக்கு விஜய் பிரச்​சா​ரம் செய்ய பொலிஸ் தரப்​பில் அனு​மதி அளிக்​கப்​பட்​டிருந்​தது. ஆனால், நாமக்​கல்​லில் பிரச்​சா​ரம் செய்​து​விட்டு பிற்​பகல் 03 மணிக்​குப் பிறகு​தான் விஜய் புறப்பட்டார்.</p>
<p>இதனிடையே, கரூர் வேலு​சாமிபுரத்​தில் பகல் 12 மணி முதல் தொண்​டர்​கள், இரசிகர்​கள் கூடினர்.</p>
<p>கரூர் மாவட்ட எல்​லை​யான வேலா​யுதம்​பாளை​யத்​தில் இருந்தே கூட்​டம் அதி​க​மாக இருந்​த​தால் பிரச்​சா​ரப் பேருந்து மிக​வும் மெது​வாக நகர்ந்​தது. இதனால் இரவு 7.15 மணிக்​கு​தான் பிரச்​சார இடத்துக்கு விஜய் வர முடிந்தது.</p>
<p>அங்கு விஜய் பேச ஆரம்​பித்​த​போது, அவரது மைக் வேலை செய்​ய​வில்​லை. அவரது பேச்​சைக் கேட்​ப​தற்​காக பின்​னால் இருப்​பவர்​கள் நெருங்​கியடித்​த​படி பிரச்​சா​ரப் பேருந்தை நோக்கி வந்​தனர். இதனால் முன்​னால் காத்​திருந்​தவர்​கள் நெரிசலில் சிக்​குண்டனர்.</p>
<p>விஜய் பேசிக் கொண்​டிருந்​த​போதே மூச்​சுத் திணறி பலர் அடுத்​தடுத்து மயங்கி விழத் தொடங்​கினர். மேலும், அந்த ​பகு​தி​யில் இருந்த மரக்​கிளை உடைந்து விழுந்​த​தி​லும் சிலர் காயமடைந்​தனர். விஜய் பிரச்​சாரத்தை முடித்து கிளம்​பிய பின்​னரே அவர்​களை மீட்க முடிந்​தது.</p>
<p>இதன்போது ஆம்​புலன்ஸ் மூலம் மீட்​கப்​பட்ட பெண்​கள், குழந்​தைகள் உள்​ளிட்​டோர் கரூர் காந்தி கிராமத்​தில் உள்ள அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்துவமனை மற்றும் அருகிலுள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டனர்.</p>
<p>இவர்​களில் குழந்​தைகள், பெண்​கள் உட்பட 40 பேர் பரிதாபமாக உயி​ரிழந்​தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/karur-incident-death-toll-rises-to-40/">கரூர் சம்பவம் &#8211; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கரூர் சம்பவம் &#8211;  உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 20 லட்சம் ரூபா நிதியுதவி அறிவித்த விஜய்</title>
		<link>https://oruvan.com/karur-incident-vijay-announces-financial-assistance-of-rs-20-lakh-each-to-the-families-of-the-deceased/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 28 Sep 2025 06:47:05 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[announces]]></category>
		<category><![CDATA[financial]]></category>
		<category><![CDATA[incident]]></category>
		<category><![CDATA[Karur]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[vijay]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=33774</guid>

					<description><![CDATA[<p>தமிழகத்தின் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபா நிவாரணத்தை அறிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய். மேலும், “இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சனிக்கிழமை கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். பலர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், விஜய் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/karur-incident-vijay-announces-financial-assistance-of-rs-20-lakh-each-to-the-families-of-the-deceased/">கரூர் சம்பவம் &#8211;  உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 20 லட்சம் ரூபா நிதியுதவி அறிவித்த விஜய்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழகத்தின் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபா நிவாரணத்தை அறிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய்.</p>
<p>மேலும், “இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சனிக்கிழமை கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.</p>
<p>அப்போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். பலர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>இந்நிலையில், விஜய் வெளியிட்ட அறிக்கையில், “என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல்.</p>
<p>நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன். நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது.</p>
<p>என் சொந்தங்களே… நம் உயிரனைய உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிற அதே வேளையில், இப்பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்து கொள்கிறேன்.</p>
<p>நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான். இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 02 லட்ச ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன்.</p>
<p>அதேபோல, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் நம் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகச் செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம்” என்று விஜய் தெரிவித்துள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/karur-incident-vijay-announces-financial-assistance-of-rs-20-lakh-each-to-the-families-of-the-deceased/">கரூர் சம்பவம் &#8211;  உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 20 லட்சம் ரூபா நிதியுதவி அறிவித்த விஜய்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
