<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Karuna Amman Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/karuna-amman/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/karuna-amman/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Fri, 02 May 2025 03:28:26 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Karuna Amman Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/karuna-amman/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பிள்ளையானை பற்றி பேசாவிட்டால் களுவாஞ்சிக்குடி அஷ்ரப்பிற்கு தூக்கம் வராது &#8211; கருணா</title>
		<link>https://oruvan.com/kaluvanchikudi-ashrap-wont-be-able-to-sleep-if-we-dont-talk-about-pillaiyaan-karuna/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 02 May 2025 03:28:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Karuna Amman]]></category>
		<category><![CDATA[Pillayan]]></category>
		<category><![CDATA[கருணா]]></category>
		<category><![CDATA[பிள்ளையான்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=19061</guid>

					<description><![CDATA[<p>களுவாஞ்சிக்குடி அஷ்ரப்பிற்கு பிள்ளையானைப் பற்றிப் பேசாவிட்டால் அவருக்கு நித்திரை வருவதில்லை என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னனியின் தலைவர் கருணா அம்மான் தெரிவித்துள்ளார். வாழைச்சேனையில் இடம்பெற்ற கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் மே தின கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொது செயலாளர் பூ.பிரசாந்தன் மற்றும் அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் த.தஜீவரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இதன்போது கருத்துத் தெரிவித்த கருணா அம்மான். களுவாஞ்சிக்குடி அஷ்ரப்பின் வாயில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/kaluvanchikudi-ashrap-wont-be-able-to-sleep-if-we-dont-talk-about-pillaiyaan-karuna/">பிள்ளையானை பற்றி பேசாவிட்டால் களுவாஞ்சிக்குடி அஷ்ரப்பிற்கு தூக்கம் வராது &#8211; கருணா</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>களுவாஞ்சிக்குடி அஷ்ரப்பிற்கு பிள்ளையானைப் பற்றிப் பேசாவிட்டால் அவருக்கு நித்திரை வருவதில்லை என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னனியின் தலைவர் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.</p>
<p>வாழைச்சேனையில் இடம்பெற்ற கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் மே தின கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொது செயலாளர் பூ.பிரசாந்தன் மற்றும் அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் த.தஜீவரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.</p>
<p>இதன்போது கருத்துத் தெரிவித்த கருணா அம்மான்.</p>
<p>களுவாஞ்சிக்குடி அஷ்ரப்பின் வாயில் வரும் வார்த்தை பிள்ளையான் பிள்ளையான், பிள்ளையான பற்றி பேசாவிட்டால் அவருக்கு நித்திரை வருவதில்லை என தெரிவித்தார்.</p>
<p>அரசியல் பழிவாங்கலினால் திட்டமிட்டு பிள்ளையானை கைது செய்து செய்தார்கள். இந்த உலகம் முழுவதும் பிள்ளையான் பிள்ளையான் என கத்துகின்றனர்” என்றார்.</p>
<p>இதன்போது பிள்ளையான தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொது செயலாளர் பூ.பிரசாந்தன் கருத்து தெரிவிக்கையில்,</p>
<p>கடந்த 72 வருடங்களுக்கு மேலாக வீட்டு சின்னத்திற்கு வாக்களித்து வாக்களித்து வீடு கூட இல்லாமல் தமிழ் மக்களை நடுத்தெருவிற்கு கொண்டு வந்தவர்கள்தான் தமிழரசுக்கட்சியினர்.</p>
<p>போராளிகளின் புதை குழிகளில் நின்று கேவலமாக வாக்கு கேட்கும் நீங்கள் போராளிகளின் குடும்பங்களை பாதுகாக்க முடியாமல் நிற்கின்றார்கள்” என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/kaluvanchikudi-ashrap-wont-be-able-to-sleep-if-we-dont-talk-about-pillaiyaan-karuna/">பிள்ளையானை பற்றி பேசாவிட்டால் களுவாஞ்சிக்குடி அஷ்ரப்பிற்கு தூக்கம் வராது &#8211; கருணா</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>புலம்பெயர் தமிழர்களை திருப்திபடுத்தவே பிரித்தானியா தடை விதித்துள்ளது &#8211; மகிந்த விசேட அறிக்கை</title>
		<link>https://oruvan.com/britain-has-imposed-the-ban-to-appease-the-tamil-diaspora-mahinda-special-report/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Mar 2025 09:56:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Karuna Amman]]></category>
		<category><![CDATA[Mahinda Rajapaksa]]></category>
		<category><![CDATA[UK sanctions]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=15904</guid>

					<description><![CDATA[<p>இலங்கையின் மூத்த இராணுவ தளபதிகள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள தடையானது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழ் புலம்பெயர்ந்தோரை திருப்திப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பது தெளிவாகிறதென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கை ஆயுதப்படைகளின் முன்னாள் தலைவர் சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜகத் ஜயசூர்ய மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் இராணுவத் தளபதி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/britain-has-imposed-the-ban-to-appease-the-tamil-diaspora-mahinda-special-report/">புலம்பெயர் தமிழர்களை திருப்திபடுத்தவே பிரித்தானியா தடை விதித்துள்ளது &#8211; மகிந்த விசேட அறிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையின் மூத்த இராணுவ தளபதிகள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள தடையானது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழ் புலம்பெயர்ந்தோரை திருப்திப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பது தெளிவாகிறதென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p>
<p>விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இலங்கை ஆயுதப்படைகளின் முன்னாள் தலைவர் சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜகத் ஜயசூர்ய மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் இராணுவத் தளபதி விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு எதிராக பிரித்தானியா அண்மையில் தடை விதித்திருந்தது.</p>
<p>இலங்கையில் உள்நாட்டு போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தெரிவித்து இவர்களுக்கு எதிரான தடை விதிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன்படி, அவர்கள் பிரித்தானிவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், சொத்துகள் வாங்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>இந்த விடயம் தொடர்பில் மகிந்த ராஜபக்ச தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,</p>
<p>பிரித்தானியா, முன்னாள் இராணுவத் தளபதிகளுக்கு எதிரான முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் எங்கும் நிரூபிக்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.</p>
<p>விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போர் தொடுக்க முடிவு செய்தது அப்போதைய இலங்கையின் நிர்வாகத் தலைவராக இருந்த நான்தான். அந்த முடிவையே இலங்கை ஆயுதப் படைகள் செயல்படுத்தின&#8221; என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>&#8220;மூன்று தசாப்த கால புலிகளின் பயங்கரவாதம் 27,965 ஆயுதப்படைகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் உயிரை மட்டுமல்ல, அரசியல் தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்களையும் கொன்றுள்ளது.</p>
<p>2008ஆம் ஆண்டில் அமெரிக்க FBIஆல் உலகின் மிகவும் ஆபத்தான பயங்கரவாத அமைப்பாக அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பு 2009 இல் தோற்கடிக்கப்பட்டது.</p>
<p>பல்வேறு தரப்பினரின் சட்டரீதியான துன்புறுத்தல்களிலிருந்து அதன் ஆயுதப்படைகளைப் பாதுகாக்க பிரித்தானியா அரசாங்கம் 2021 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் சிறப்புச் சட்டத்தை இயற்றியது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.&#8221;</p>
<p>&#8220;எனவே, இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தங்கள் கடமைகளைச் செய்த ஆயுதப் படை வீரர்களை குறிவைத்து வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் அமைப்புகளால் நடத்தப்படும் துன்புறுத்தலுக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் நேரடியாக நிற்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.&#8221;</p>
<p>போர் முடிவடைந்த சில மாதங்களுக்குப் பிறகு, போர்க்கால இராணுவத் தளபதி 2010 ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக நின்றபோது, ​​தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2010 ஜனவரி ஆறாம் திகதி அவருக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களைக் கேட்டுக்கொண்டு ஒரு அறிக்கையை வெளியிட்டது.</p>
<p>இதன்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பதிவான வாக்குகளில் 60 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை அந்த வேட்பாளர் பெற்றார். &#8220;இது பிரித்தானியா அரசாங்கத்தின் கருத்தையும் மறுக்கிறது.&#8221;</p>
<p>&#8220;2004 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறி பின்னர் ஜனநாயக அரசியலில் நுழைந்த விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா அம்மான் மீது தடைகள் விதிக்கப்பட்டிருப்பது, விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமிழர்களைத் தண்டிப்பதன் மூலம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழ் புலம்பெயர்ந்தோரை திருப்திப்படுத்த எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை என்பது தெளிவாகிறது.&#8221; என அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/britain-has-imposed-the-ban-to-appease-the-tamil-diaspora-mahinda-special-report/">புலம்பெயர் தமிழர்களை திருப்திபடுத்தவே பிரித்தானியா தடை விதித்துள்ளது &#8211; மகிந்த விசேட அறிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கைக்கு எதிராக தடைகள் விதிக்கப்படும் அபாயம் &#8211; கலாநிதி பிரதிபா மஹாநாம எச்சரிக்கை</title>
		<link>https://oruvan.com/dr-prathibha-mahanamahewa-warns-of-the-risk-of-sanctions-being-imposed-against-sri-lanka/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Mar 2025 03:56:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dr. Prathibha Mahanamahewa]]></category>
		<category><![CDATA[Karuna Amman]]></category>
		<category><![CDATA[Shavendra Silva]]></category>
		<category><![CDATA[UK sanctions]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=15806</guid>

					<description><![CDATA[<p>எதிர்காலத்தில் இலங்கைக்கு எதிராக தடைகள் விதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கலாநிதி பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார். பல தனி நபர்களுக்கு எதிராக தடைகள் விதிக்கப்படுவதன் மூலம் இந்நிலைமை ஏற்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் மூத்த படை தளபதிகள் மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு எதிராக பிரித்தானியா அண்மையில் தடைவிதித்திருந்தது. இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட கலாநிதி பிரதிபா மஹாநாம ஹேவா [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/dr-prathibha-mahanamahewa-warns-of-the-risk-of-sanctions-being-imposed-against-sri-lanka/">இலங்கைக்கு எதிராக தடைகள் விதிக்கப்படும் அபாயம் &#8211; கலாநிதி பிரதிபா மஹாநாம எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>எதிர்காலத்தில் இலங்கைக்கு எதிராக தடைகள் விதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கலாநிதி பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.</p>
<p>பல தனி நபர்களுக்கு எதிராக தடைகள் விதிக்கப்படுவதன் மூலம் இந்நிலைமை ஏற்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>இலங்கையின் மூத்த படை தளபதிகள் மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு எதிராக பிரித்தானியா அண்மையில் தடைவிதித்திருந்தது.</p>
<p>இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட கலாநிதி பிரதிபா மஹாநாம ஹேவா இவ்வாறு கூறியுள்ளார்.</p>
<p>இலங்கையே இந்த நிலையை ஏற்படுத்திக்கொண்டாக குற்றம் சுமத்தியுள்ள அவர், அதற்கு பல காரணங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.</p>
<p>இதன்படி, பல ஆணையங்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும், அவற்றின் பரிந்துரைகள் எதையும் எந்த அரசாங்கமும் செயல்படுத்தவில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>இலங்கை ஆயுதப்படைகளின் முன்னாள் தலைவர் சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜகத் ஜயசூர்ய மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் இராணுவத் தளபதி விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு எதிராக பிரித்தானியா அண்மையில் தடை விதித்திருந்தது.</p>
<p>இலங்கையில் உள்நாட்டு போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தெரிவித்து இவர்களுக்கு எதிரான தடை விதிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன்படி, அவர்கள் பிரித்தானிவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், சொத்துகள் வாங்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/dr-prathibha-mahanamahewa-warns-of-the-risk-of-sanctions-being-imposed-against-sri-lanka/">இலங்கைக்கு எதிராக தடைகள் விதிக்கப்படும் அபாயம் &#8211; கலாநிதி பிரதிபா மஹாநாம எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சவேந்திர சில்வா, கருணா உள்ளிட்டவர்களுக்கு பிரித்தானியா தடை &#8211; நாமல் எம்.பி ஆதங்கம்</title>
		<link>https://oruvan.com/britain-bans-shavendra-silva-karuna-and-others-namal-mp-fears/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Mar 2025 08:54:47 +0000</pubDate>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[Karuna Amman]]></category>
		<category><![CDATA[Namal Rajapaksa]]></category>
		<category><![CDATA[UK sanctions]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=15733</guid>

					<description><![CDATA[<p>வெளிநாட்டு சக்திகள் இலக்கு வைக்கும் முன்னாள் இராணுவ தளபதிளை அரசாங்கம் பாதுகாக்குமா என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பினார். மூத்த இராணுவத் தளபதிகள் மற்றும் முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரும், முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு எதிராக பிரித்தானியா நேற்று தடை விதித்துள்ளது. இலங்கை ஆயுதப்படைகளின் முன்னாள் தலைவர் சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/britain-bans-shavendra-silva-karuna-and-others-namal-mp-fears/">சவேந்திர சில்வா, கருணா உள்ளிட்டவர்களுக்கு பிரித்தானியா தடை &#8211; நாமல் எம்.பி ஆதங்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>வெளிநாட்டு சக்திகள் இலக்கு வைக்கும் முன்னாள் இராணுவ தளபதிளை அரசாங்கம் பாதுகாக்குமா என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பினார்.</p>
<p>மூத்த இராணுவத் தளபதிகள் மற்றும் முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரும், முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு எதிராக பிரித்தானியா நேற்று தடை விதித்துள்ளது.</p>
<p>இலங்கை ஆயுதப்படைகளின் முன்னாள் தலைவர் சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜகத் ஜயசூர்ய மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் இராணுவத் தளபதி விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு எதிராக தடை விதிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்நிலையில், தனது எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் &#8220;எங்கள் போர் வீரர்களை நாங்கள் என்றென்றும் பாதுகாப்போம் எனவும், அவர்களின் மரபை யாரும் குறைமதிப்பிற்கு உட்படுத்த நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்&#8221; என்று தெரிவித்துள்ளார்.</p>
<p>அவர் தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது,</p>
<p>பயங்கரவாதத்தை முற்றிலுமாக தோற்கடித்த முதல் நாடு இலங்கை, ஆனால் மேற்குலகம் நமது போர் வீரர்களை தொடர்ந்தும் குறிவைத்து வருகிறது, அதே நேரத்தில் விடுதலைப் புலிகளின் கொடூரத்திற்கு நிதியளித்து நியாயப்படுத்தியவர்களை புறக்கணிக்கிறது.</p>
<p>பிரித்தானிய அரசாங்கம் நேற்று வித்துள்ள தடைகள் மனித உரிமைகள் பற்றியவை அல்ல, மாறாக விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்களின் தொடர்ச்சியான அழுத்தத்தின் விளைவாகும்.</p>
<p>இது நீதி அல்ல என்றும், மாறாக சில மேற்கத்திய அரசியல்வாதிகள் பணத்தின் மூலம் செல்வாக்கு செலுத்தி சலுகைகளை அனுபவிப்பதன் மூலம் நமது தேசத்தின் நல்லிணக்கத்தை ஆபத்தில் ஆழ்த்துகிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p>
<p>இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம் கடுமையான முடிவுகளின் மூலம் பெறப்பட்டது என்பதை வடக்கு மற்றும் தெற்கு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ச கூறினார்.</p>
<p>இந்தத் தடைகள் நமது துருப்புக்களின் மன உறுதியைக் குறைக்கும் என்றும், இதுபோன்ற மற்றொரு நெருக்கடி ஏற்பட்டால், துருப்புக்களுக்குப் போராட தைரியம் இல்லாமல் போகலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>இந்தத் தடைகளுக்குப் பின்னால் உள்ளவர்கள் தமிழ் சமூகத்தின் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று நாமல் ராஜபக்ச மேலும் சுட்டிக்காட்டுகிறார்.</p>
<p>இங்கு, சில சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் மூலம் சமூகங்களுக்கிடையில் பிளவுகளை உருவாக்க சலுகைகளை நாடும் சில தமிழ் அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு தமிழ் சமூகம் இரையாக வேண்டாம் என்று அவர் வலியுறுத்துகிறார்.</p>
<p>போர் பயங்கரவாதத்திற்கு எதிரானது, அது எந்த இனக்குழுவிற்கும் எதிரானது அல்ல. நமது இராணுவத்தின் தியாகங்களை எப்போதும் குறைமதிப்பிற்கு உட்படுத்தியவர்களின் ஆதரவுடன் உங்கள் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.</p>
<p>இந்நிலையில், இலங்கைக்கு அமைதியை நிலைநாட்டியவர்களை வெளிநாட்டு சக்திகள் குறிவைக்கும் போது அவர்களைப் பாதுகாப்பீர்களா, அல்லது அமைதியாக இருப்பீர்களா? எனவும் அவர் அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பியுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/britain-bans-shavendra-silva-karuna-and-others-namal-mp-fears/">சவேந்திர சில்வா, கருணா உள்ளிட்டவர்களுக்கு பிரித்தானியா தடை &#8211; நாமல் எம்.பி ஆதங்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கருணா, சவேந்திர சில்வா உள்ளிட்டவர்களுக்கு பிரித்தானியாவில் தடை விதிப்பு</title>
		<link>https://oruvan.com/karuna-amman-shavendra-silva-and-others-banned-in-britain/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Mar 2025 02:34:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Karuna Amman]]></category>
		<category><![CDATA[Shavendra Silva]]></category>
		<category><![CDATA[UK sanctions]]></category>
		<category><![CDATA[Wasantha Karannagoda]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=15670</guid>

					<description><![CDATA[<p>இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் நான்கு பேருக்கு பிரித்தானியா அரசாங்கம் தடைகளை விதித்துள்ளது. மூத்த இராணுவத் தளபதிகள் மற்றும் முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரும், முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு எதிராக இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கை ஆயுதப்படைகளின் முன்னாள் தலைவர் சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, இலங்கை இராணுவத்தின் முன்னாள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/karuna-amman-shavendra-silva-and-others-banned-in-britain/">கருணா, சவேந்திர சில்வா உள்ளிட்டவர்களுக்கு பிரித்தானியாவில் தடை விதிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் நான்கு பேருக்கு பிரித்தானியா அரசாங்கம் தடைகளை விதித்துள்ளது.</p>
<p>மூத்த இராணுவத் தளபதிகள் மற்றும் முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரும், முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு எதிராக இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன்படி, இலங்கை ஆயுதப்படைகளின் முன்னாள் தலைவர் சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜகத் ஜயசூர்ய மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் இராணுவத் தளபதி விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு எதிராக தடை விதிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன்படி, உள்நாட்டுப் போரின் போது நீதிக்குப் புறம்பான கொலைகள், பல்வேறு மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்குப் பொறுப்பான நபர்களுக்கு எதிரான பயணத் தடைகள் மற்றும் சொத்து முடக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.</p>
<p>இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு விவகாரங்களுக்கான வெளியுறவுச் செயலாளர் டேவிட் லாம்மி, இலங்கையில் மனித உரிமைகளுக்கு இங்கிலாந்து அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றார்.</p>
<p>இதில் உள்நாட்டுப் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்குப் பொறுப்புக்கூறல் கோருவதும் அடங்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>குற்றத்திற்கு பொறுப்பாளர்கள் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் உறுதியளித்தேன்.</p>
<p>இதன்படி, கடந்த கால மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்குப் பொறுப்பானவர்கள் பொறுப்புக்கூறப்படுவதை இந்த முடிவு உறுதி செய்கிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக புதிய இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற இங்கிலாந்து அரசாங்கம் ஆவலுடன் காத்திருக்கிறது, மேலும் தேசிய ஒற்றுமைக்கான அவர்களின் உறுதிப்பாடுகளை வரவேற்கிறது.</p>
<p>ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்த இந்தோ-பசிபிக் அமைச்சர் கேத்தரின் வெஸ்ட் எம்.பி., பிரதமர், வெளியுறவு அமைச்சர், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இலங்கையின் வடக்கில் உள்ள அரசியல் தலைவர்களுடன் மனித உரிமைகள் குறித்து ஆக்கபூர்வமான விவாதங்களை நடத்தினார்.</p>
<p>சமூகங்கள் ஒன்றாக முன்னேற, கடந்த கால தவறுகளை ஒப்புக்கொள்வதும் பொறுப்புக்கூறுவதும் இருக்க வேண்டும், இதை இன்று அறிமுகப்படுத்தப்பட்ட தடைகள் பட்டியல்கள் ஆதரிக்கும். அனைத்து இலங்கை சமூகங்களும் வளர்ந்து செழிக்க முடியும் என்று நாங்கள் விரும்புகிறோம்.</p>
<p>மனித உரிமைகள் மேம்பாடுகள், பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை உள்ளிட்ட அவர்களின் பரந்த சீர்திருத்த நிகழ்ச்சி நிரலில் இலங்கை அரசாங்கத்துடன் ஆக்கபூர்வமாக பணியாற்ற இங்கிலாந்து உறுதிபூண்டுள்ளது.</p>
<p>மாற்றத்திற்கான எங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக, வெளிநாடுகளில் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவது நமது தேசிய பாதுகாப்பிற்கு நல்லது என்பதை இங்கிலாந்து அங்கீகரிக்கிறது.” என்று தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/karuna-amman-shavendra-silva-and-others-banned-in-britain/">கருணா, சவேந்திர சில்வா உள்ளிட்டவர்களுக்கு பிரித்தானியாவில் தடை விதிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
