<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>IRIS Dena Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/iris-dena/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/iris-dena/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Thu, 23 Apr 2026 07:34:23 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>IRIS Dena Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/iris-dena/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>லங்கை மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி வாயிலாக உரையாடல்</title>
		<link>https://oruvan.com/the-foreign-ministers-of-sri-lanka-and-iran-spoke-by-telephone/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Apr 2026 07:34:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Iran War]]></category>
		<category><![CDATA[IRIS Dena]]></category>
		<category><![CDATA[Vijitha Herath]]></category>
		<category><![CDATA[ஈரான் போர்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48746</guid>

					<description><![CDATA[<p>மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடித்துள்ள நிலையில், இலங்கை மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளனர். இலங்கைக்கு அண்மித்த கடற்பரப்பில் ஈரானிய கடற்படைக் கப்பலான ஐரிஸ் தேனா மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து அதிகரித்துள்ள பதட்டங்களுக்கு மத்தியில் இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தின் போது இலங்கை அரசாங்கம் எடுத்திருந்த நடவடிக்கைகளுக்கு ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி நன்றி தெரிவித்திருந்தார். இலங்கையில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்ட அறிக்கையின்படி , ஐரிஸ் தேனா [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-foreign-ministers-of-sri-lanka-and-iran-spoke-by-telephone/">லங்கை மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி வாயிலாக உரையாடல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடித்துள்ள நிலையில், இலங்கை மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளனர்.</p>
<p>இலங்கைக்கு அண்மித்த கடற்பரப்பில் ஈரானிய கடற்படைக் கப்பலான ஐரிஸ் தேனா மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து அதிகரித்துள்ள பதட்டங்களுக்கு மத்தியில் இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது.</p>
<p>இந்த சம்பவத்தின் போது இலங்கை அரசாங்கம் எடுத்திருந்த நடவடிக்கைகளுக்கு ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி நன்றி தெரிவித்திருந்தார்.</p>
<p>இலங்கையில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்ட அறிக்கையின்படி , ஐரிஸ் தேனா கப்பல் மீதான தாக்குதலை அமெரிக்காவால் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றம் என்று விவரித்து, அமைச்சர் அரக்சி  கண்டித்துள்ளார்.</p>
<p>சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் 1949ம் ஆண்டு ஜெனீவா உடன்படிக்கைகளின் கடுமையான மீறலாக அமைந்த இந்தத் தாக்குதலை ஈரான் ஒருபோதும் மறக்காது என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.</p>
<p>குற்றவாளிகளைப் பொறுப்பேற்கச் செய்ய, ஈரான் அனைத்து சட்ட மற்றும் அரசியல் வழிகளையும் பின்பற்றும் என்று அவர் உறுதியளித்தார்.</p>
<p>பிராந்திய மற்றும் சர்வதேச சவால்களை எதிர்கொள்வதில் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, ஈரான் மற்றும் இலங்கை இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வழிகள் குறித்தும் இரு அமைச்சர்களும் கலந்துரையாடியதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p><strong> </strong></p>
<p>The post <a href="https://oruvan.com/the-foreign-ministers-of-sri-lanka-and-iran-spoke-by-telephone/">லங்கை மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி வாயிலாக உரையாடல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பழிதீர்க்க ஈரான் தயார் &#8211; கடற்படைத் தளபதி எச்சரிக்கை</title>
		<link>https://oruvan.com/iran-ready-to-retaliate-for-us-attack-navy-commander-warns/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Mar 2026 08:59:19 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[IRIS Dena]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=46948</guid>

					<description><![CDATA[<p>இலங்கை கடற்பரப்பில் அமெரிக்காவின் டார்பிடோ தாக்குதலால் பலியான 87 ஈரானிய மாலுமிகளின் மரணத்திற்குப் பழிவாங்கப்படும் என ஈரான் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் ஷஹ்ராம் இரானிஎச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த மார்ச் 4 ஆம் திகதி, இலங்கையின் காலி கடற்பரப்பிற்கு அப்பால் சர்வதேச கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ஈரானிய கடற்படையின் IRIS Dena போர்க்கப்பல், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஏவப்பட்ட டார்பிடோ மூலம் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் குறைந்தது 87 மாலுமிகள் கொல்லப்பட்டனர். 32 பேர் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/iran-ready-to-retaliate-for-us-attack-navy-commander-warns/">அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பழிதீர்க்க ஈரான் தயார் &#8211; கடற்படைத் தளபதி எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கை கடற்பரப்பில் அமெரிக்காவின் டார்பிடோ தாக்குதலால் பலியான 87 ஈரானிய மாலுமிகளின் மரணத்திற்குப் பழிவாங்கப்படும் என ஈரான் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் ஷஹ்ராம் இரானிஎச்சரிக்கை விடுத்துள்ளார்.</p>
<p>கடந்த மார்ச் 4 ஆம் திகதி, இலங்கையின் காலி கடற்பரப்பிற்கு அப்பால் சர்வதேச கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ஈரானிய கடற்படையின் IRIS Dena போர்க்கப்பல், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஏவப்பட்ட டார்பிடோ மூலம் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.</p>
<p>இந்தத் தாக்குதலில் குறைந்தது 87 மாலுமிகள் கொல்லப்பட்டனர். 32 பேர் மீட்கப்பட்ட நிலையில், இன்னும் பலர் காணாமல் போயுள்ளனர்.</p>
<p>இந்தியாவுடன் இணைந்து நடத்தப்பட்ட கூட்டு கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றுவிட்டு ஈரான் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்தக் கப்பல் இலக்கு வைக்கப்பட்டுள்ளது.</p>
<p>“எதிரியின் இந்தக் குற்றத்தை நாங்கள் மறக்க மாட்டோம். எமது மாவீரர்களின் இரத்தத்திற்குப் பழிவாங்குவோம். எதிரி சற்றும் எதிர்பார்க்காத இடத்தில் இருந்து அவர்களைத் தண்டிப்போம்” என ஷஹ்ராம் இரானி தெரிவித்துள்ளார்.</p>
<p>கொல்லப்பட்ட மாலுமிகளுக்கான இறுதிச் சடங்குகள் நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளன. இன்று (செவ்வாய்க்கிழமை) அஞ்சலி நிகழ்வுகள் மற்றும் கௌரவிப்பு வைபவங்கள் இடம்பெற்று வருகின்றன.</p>
<p>The post <a href="https://oruvan.com/iran-ready-to-retaliate-for-us-attack-navy-commander-warns/">அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பழிதீர்க்க ஈரான் தயார் &#8211; கடற்படைத் தளபதி எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஈரானிய மாலுமிகளின் சடலங்களை ஏற்றிய விமானம் மத்தளவிலிருந்து தெஹரான் நோக்கி சென்றது </title>
		<link>https://oruvan.com/the-plane-carrying-the-bodies-of-iranian-sailors-departed-from-mattala-for-tehran/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 14 Mar 2026 04:07:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[IRIS Dena]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=46757</guid>

					<description><![CDATA[<p>இலங்கைக்கு தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்கு உள்ளான &#8216;IRIS DENA&#8217; கப்பலில் பலியான 84 ஈரான் மாலுமிகளின் சடலங்களை ஏற்றிய விமானம் ஈரான் நோக்கிப் புறப்பட்டு சென்றுள்ளது. மத்தள விமான நிலையத்திலிருந்து நேற்று இரவு 09.29 மணியளவில் இந்த விமானம் புறப்பட்டு சென்றதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையிலுள்ள ஈரான் தூதரகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், உயிரிழந்த மாலுமிகளின் உடல்களை அந்நாட்டுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. கடந்த மார்ச் மாதம் 04ஆம் திகதி காலி துறைமுகத்திலிருந்து 40 [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-plane-carrying-the-bodies-of-iranian-sailors-departed-from-mattala-for-tehran/">ஈரானிய மாலுமிகளின் சடலங்களை ஏற்றிய விமானம் மத்தளவிலிருந்து தெஹரான் நோக்கி சென்றது </a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கைக்கு தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்கு உள்ளான &#8216;IRIS DENA&#8217; கப்பலில் பலியான 84 ஈரான் மாலுமிகளின் சடலங்களை ஏற்றிய விமானம் ஈரான் நோக்கிப் புறப்பட்டு சென்றுள்ளது.</p>
<p>மத்தள விமான நிலையத்திலிருந்து நேற்று இரவு 09.29 மணியளவில் இந்த விமானம் புறப்பட்டு சென்றதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.</p>
<p>இலங்கையிலுள்ள ஈரான் தூதரகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், உயிரிழந்த மாலுமிகளின் உடல்களை அந்நாட்டுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.</p>
<p>கடந்த மார்ச் மாதம் 04ஆம் திகதி காலி துறைமுகத்திலிருந்து 40 கடல் மைல் தொலைவில் இந்த ஈரான் கப்பல் அமெரிக்காவின் தாக்குதல் காரணமாக விபத்துக்குள்ளானது.</p>
<p>அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட டொர்பிடோ (Torpedo) ரக ஏவுகணை மூலம் ஈரான் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட்டர் ஹெக்செத் தெரிவித்திருந்திருந்தார்.</p>
<p>சம்பவத்தில் உயிரிழந்த ஈரானிய மாலுமிகளின் உடல்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருந்த நிலையில், அவற்றை அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த விமானம் மத்தள விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது சென்றுள்ளது.</p>
<p>சுமார் 180 பேர் இந்தக் கப்பலில் இருந்ததாக ஈரான் அரசாங்கம் கூறியிருந்த நிலையில், 35 பேர்  மாத்திரமே இலங்கை கடற்படையால் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்கள் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டனர்.</p>
<p>அத்துடன், சடலங்களாக மீட்கப்பட்டவர்களின் உடல்களே நேற்று இரவு  ஈரான் நோக்கி கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் பயணித்த பெரும்பாலானவர்கள் நீரில் மூழ்கி இருக்கலாம் என நம்பப்படுகிறது</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/the-plane-carrying-the-bodies-of-iranian-sailors-departed-from-mattala-for-tehran/">ஈரானிய மாலுமிகளின் சடலங்களை ஏற்றிய விமானம் மத்தளவிலிருந்து தெஹரான் நோக்கி சென்றது </a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஐரிஸ் தேனா மீதான் தாக்குதல் &#8211; இலங்கையில் இருந்து ஈரானுக்கு அனுப்படும் சடலங்கள்</title>
		<link>https://oruvan.com/the-bodies-of-84-iranian-sailors-killed-in-iris-dena-cheduled-to-be-repatriated-to-iran-today/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Mar 2026 08:06:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Iran War]]></category>
		<category><![CDATA[IRIS Dena]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=46591</guid>

					<description><![CDATA[<p>இலங்கை அருகாமையில் வைத்து ஈரானின் ஐரிஸ் தேனா போர்க்கப்பல் அமெரிக்காவினால் தாக்கப்பட்டதில் உயிரிழந்த ஈரானிய படையினரின் உடல்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இதன்படி, 84 பேரின் உடல்கள் இன்று மத்தள சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் சிறப்பு விமானம் மூலம் ஈரானுக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கையிலுள்ள ஈரான் தூதரகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், உயிரிழந்த கடற்படை வீரர்களின் உடல்களை அனுப்பி வைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-bodies-of-84-iranian-sailors-killed-in-iris-dena-cheduled-to-be-repatriated-to-iran-today/">ஐரிஸ் தேனா மீதான் தாக்குதல் &#8211; இலங்கையில் இருந்து ஈரானுக்கு அனுப்படும் சடலங்கள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கை அருகாமையில் வைத்து ஈரானின் ஐரிஸ் தேனா போர்க்கப்பல் அமெரிக்காவினால் தாக்கப்பட்டதில் உயிரிழந்த ஈரானிய படையினரின் உடல்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.</p>
<p>இதன்படி, 84 பேரின் உடல்கள் இன்று மத்தள சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் சிறப்பு விமானம் மூலம் ஈரானுக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p>
<p>இலங்கையிலுள்ள ஈரான் தூதரகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், உயிரிழந்த கடற்படை வீரர்களின் உடல்களை அனுப்பி வைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.</p>
<p>கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து ஈரான் நோக்கி சென்று கொண்டிருந்த ஈரானின் ஐரிஸ் தேனா போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருந்து.</p>
<p>காலியில் இருந்து 40 கடல் மைல் தொலைவில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. குறித்த கப்பலில் 180 பேர் வரையில் இருந்தாகவும், தெரிவிக்கப்பட்டிருந்தது.</p>
<p>எவ்வாறாயினும், இந்த தாக்குதலின் பின்னர் இலங்கை கடற்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து 32 பேரை மீட்டிருந்தது. அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டனர்.</p>
<p>மேலும், இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட 84 பேரி சடலங்கள் மீட்கப்பட்டிருந்தது.</p>
<p>இந்நிலையில், காலி தேசிய வைத்தியசாலையில் இரண்டு நடமாடும் குளிர்பதன சேமிப்புப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை இலங்கையில் உள்ள ஈரான் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.</p>
<p>கடந்த 11ஆம் திகதி காலி தலைமை நீதவான் சமீர தொடங்கொட இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.</p>
<p>இதற்கிடையில், தற்போது இலங்கையின் பராமரிப்பில் உள்ள ஈரானிய மாலுமிகள் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அரசாங்க அதிகாரிகளுக்கும் இலங்கையில் உள்ள ஈரானிய தூதரக அதிகாரிகளுக்கும் இடையே கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.</p>
<p>காலி கடற்பரப்பில் அமெரிக்காவால் தாக்கப்பட்ட ஐரிஸ் தேனா தேனா கப்பலில் இருந்து மொத்தம் 32 மாலுமிகள் மீட்கப்பட்டனர், மேலும் ஐரிஸ் தேனா புஷேர் கப்பலில் இருந்து 204 மாலுமிகள் மீட்கப்பட்டு தற்போது இலங்கையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான மோதலுக்கு மத்தியில், ஈரானிய மாலுமிகள் தொடர்பாக இலங்கை அதிகாரிகள் எடுக்கும் முடிவுகள் குறித்து குறிப்பிடத்தக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p>
<p>இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, மனிதாபிமான அடிப்படையில் ஈரானிய மாலுமிகளுக்கு அரசாங்கம் ஒரு மாத இலவச விசாக்களை வழங்கும் என்றும் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/the-bodies-of-84-iranian-sailors-killed-in-iris-dena-cheduled-to-be-repatriated-to-iran-today/">ஐரிஸ் தேனா மீதான் தாக்குதல் &#8211; இலங்கையில் இருந்து ஈரானுக்கு அனுப்படும் சடலங்கள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கொழும்பு துறைமுகத்தை நெருங்கும் மற்றொரு ஈரானிய கப்பல்</title>
		<link>https://oruvan.com/another-iranian-ship-approaching-colombo-port/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Mar 2026 07:42:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Iran War]]></category>
		<category><![CDATA[IRIS Dena]]></category>
		<category><![CDATA[Sajith Premadasa]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=46194</guid>

					<description><![CDATA[<p>கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் மற்றொரு ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக திர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்நிலையில், குறித்த கப்பல் தொடர்பில் அரசாங்கம் அறிந்திருக்கிறதா என்பதை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகங்களும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளரும் நேற்று வெளியிட்ட அறிக்கைகளும் ஈரானிய கப்பல் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் மூழ்கடிக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. இந்த நிலையில், இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அப்படி ஒரு தாக்குதல் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/another-iranian-ship-approaching-colombo-port/">கொழும்பு துறைமுகத்தை நெருங்கும் மற்றொரு ஈரானிய கப்பல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் மற்றொரு ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக திர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்நிலையில், குறித்த கப்பல் தொடர்பில் அரசாங்கம் அறிந்திருக்கிறதா என்பதை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p>
<p>நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p>
<p>சர்வதேச ஊடகங்களும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளரும் நேற்று வெளியிட்ட அறிக்கைகளும் ஈரானிய கப்பல் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் மூழ்கடிக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.</p>
<p>இந்த நிலையில், இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அப்படி ஒரு தாக்குதல் நடக்கவில்லை என்று கூறியிருப்பது சிக்கலானது என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அரசாங்கம் உடனடியாக அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.</p>
<p>இலங்கை கடற்படை மேற்கொண்ட உயிர்காக்கும் நடவடிக்கைக்கு அவர் தனது பாராட்டுகளையும் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/another-iranian-ship-approaching-colombo-port/">கொழும்பு துறைமுகத்தை நெருங்கும் மற்றொரு ஈரானிய கப்பல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கைக்கு அருகே மூழ்கடிக்கப்பட்ட ஈரானின் ஐரிஸ் தேனா!!! உலகளாவிய கடல்சார் போராக மாறும் அபாயம்</title>
		<link>https://oruvan.com/irans-iris-dena-sunk-near-sri-lanka/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Mar 2026 05:58:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Iran War]]></category>
		<category><![CDATA[IRIS Dena]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=46183</guid>

					<description><![CDATA[<p>இலங்கை கடற்பரப்பில் பயணித்துக்கொண்டிருந்த ஈரானிய போர்க்கப்பலான ஐரிஸ் தேனா மீதான அமெரிக்காவின் தாக்குதல், போரின் தன்மையையும் நோக்கத்தையும் முற்றிலுமாக மாற்றியுள்ளது. நேற்று (04) வரை பாரசீக வளைகுடா பகுதி மற்றும் ஹார்முஸ் நீரிணை பகுதிகளில் மட்டுமே இருந்த நேரடி இராணுவ மோதல்கள், இப்போது இந்தியப் பெருங்கடல் மற்றும் இலங்கைக்கு அருகிலுள்ள கடல்களுக்கும் பரவியுள்ளன. இந்தப் போர் தற்போது பிராந்திய மோதலாக இல்லாமல் உலகளாவிய கடல்சார் போராக மாறியுள்ளது. இலங்கைக்கு அருகில் மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல் காரணமாக மத்திய கிழக்கிலிருந்து [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/irans-iris-dena-sunk-near-sri-lanka/">இலங்கைக்கு அருகே மூழ்கடிக்கப்பட்ட ஈரானின் ஐரிஸ் தேனா!!! உலகளாவிய கடல்சார் போராக மாறும் அபாயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கை கடற்பரப்பில் பயணித்துக்கொண்டிருந்த ஈரானிய போர்க்கப்பலான ஐரிஸ் தேனா மீதான அமெரிக்காவின் தாக்குதல், போரின் தன்மையையும் நோக்கத்தையும் முற்றிலுமாக மாற்றியுள்ளது.</p>
<p>நேற்று (04) வரை பாரசீக வளைகுடா பகுதி மற்றும் ஹார்முஸ் நீரிணை பகுதிகளில் மட்டுமே இருந்த நேரடி இராணுவ மோதல்கள், இப்போது இந்தியப் பெருங்கடல் மற்றும் இலங்கைக்கு அருகிலுள்ள கடல்களுக்கும் பரவியுள்ளன.</p>
<p>இந்தப் போர் தற்போது பிராந்திய மோதலாக இல்லாமல் உலகளாவிய கடல்சார் போராக மாறியுள்ளது.</p>
<p>இலங்கைக்கு அருகில் மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல் காரணமாக மத்திய கிழக்கிலிருந்து இந்தியா, ஜப்பான் மற்றும் இந்தோனேசியா போன்ற ஆசிய நாடுகளுக்கான எண்ணெய் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.</p>
<p>ஆசிய நாடுகள் தங்கள் எண்ணெய் விநியோகத்தில் 60 சதவீதத்தை மத்திய கிழக்கு பிராந்தியத்திலிருந்தே பெறுகின்றன. இந்நிலையில் மாற்றுவழிகளை ஆசிய நாடுகள் தேடுகின்றன.</p>
<p>இந்தியாவின் முக்கிய சுத்திகரிப்பு நிலையங்களான மங்களூர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பெட்ரோநெட் LNG ஆகியவை பாதுகாப்பு அபாய மதிப்பீட்டிற்குப் பின்னர் தங்கள் உற்பத்தி நடவடிக்கைகளை மட்டுப்படுத்த ஏற்கனவே முடிவு செய்துள்ளன.</p>
<p>இந்தியாவும் ரஷ்யாவிலிருந்து அதிக எண்ணெய் வாங்க எதிர்பார்க்கிறது. இந்தோனேசியாவும் ஜப்பானும் அமெரிக்காவிலிருந்து அதிக எண்ணெயைப் பெற முயற்சிக்கின்றன.</p>
<p>இந்த சூழ்நிலையில், இலங்கை மாறிவரும் உலகளாவிய சூழ்நிலையால் நேரடியாக பாதிக்கப்படும் அபாயத்தில் இருக்கின்றது.</p>
<p><strong>ஐரிஸ் தேனா தாக்கப்பட்டதன் பின்னர்</strong></p>
<p>நேற்றைய தாக்குதல் ஈரானை அதன் நடவடிக்கைகளை மேலும் தீவிரமடைய செய்துள்ளது. ஹார்முஸ் நீரிணையின் மூடப்பட்டு தற்போது ஐந்து நாட்கள் ஆகின்றன.</p>
<p>இதனால் மத்திய கிழக்கிலிருந்து வரும் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளன.</p>
<p>இலங்கைக்கு அருகில் நடந்த தாக்குதல்களின் நேரடி விளைவாக கடல்சார் காப்பீட்டு திட்டங்கள் 500 வீததத்தல் அதிகரித்துள்ளன.</p>
<p>காப்பீட்டு நிறுவனங்கள் பொதுவாக கப்பல் பயணிக்கும் பாதையின் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு தங்கள் திட்டங்களை நிர்ணயிக்கின்றன.</p>
<p>முன்னர் பாதுகாப்பாகக் கருதப்பட்ட இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு அருகில் ஒரு போர்க்கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, காப்பீட்டாளர்கள் முழுப் பகுதியையும் &#8220;அதிக ஆபத்து மண்டலமாக&#8221; குறிப்பிட்டுள்ளனர்.</p>
<p>ஹார்முஸ் நீரிணை வழியாக விநியோகத்தில் ஏற்பட்ட தடங்கலால் உலகளாவிய எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. உலகின் எண்ணெய் விநியோகத்தில் 20 வீதம் ஹார்முஸ் நீரிணை வழியாகவே முன்னெடுக்கப்படுகின்றனது.</p>
<p>இதனால், அங்கு ஏற்படும் எந்தவொரு இடையூறும் உலகளாவிய எண்ணெய் விலைகளில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.</p>
<p>எவ்வாறாயினும், இலங்கைக்கு அருகில் நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல் எரிபொருள் விலை அதிகரிப்பில் பாரிய தாக்கத்தை செலுத்தியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.</p>
<p><strong>எரிபொருள் விநியோகங்கள் மீது ஈரானிய தாக்குதல்கள்</strong></p>
<p>சனிக்கிழமை முதல் ஹார்முஸ் நீரிணை பகுதியில் குறைந்தது எட்டு கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன, அவற்றில் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) மற்றும் கச்சா எண்ணெயை ஏற்றிச் செல்லும் கப்பல்களும் அடங்கும்.</p>
<p>மோல்டா கொடியுடன் கூடிய சஃபீன் பிரெஸ்டீஜ் கப்பல் புதன்கிழமை தாக்கப்பட்டதாகவும், அதன் குழுவினர் கப்பலை கைவிட்டதாகவும் இங்கிலாந்து கடல்சார் போக்குவரத்து அலுவலகம் (UKMTO) தெரிவித்துள்ளது.</p>
<p>ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள புஜைரா துறைமுகத்திற்கு அருகில் லிப்ரா டிரேடர் மற்றும் கோல்ட் ஓக் கப்பல்களும் சிறிய சேதத்தை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>சஃபீன் பிரெஸ்டீஜ் போன்ற வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் கப்பல் பயணங்களை ரத்து செய்யத் தூண்டியுள்ளன.</p>
<p>இந்த தாக்குதல்களால் ஈராக், சவுதி அரேபியா மற்றும் குவைத் போன்ற முக்கிய எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளன.</p>
<p>கத்தாரின் எரிசக்தி உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் எரிவாயு உற்பத்தியையும் முற்றிலுமாக பாதித்துள்ளது. சவுதி அரேபியாவின் முக்கிய ஏற்றுமதி முனையமான ராஸ் தனுராவும் புதன்கிழமை தாக்கப்பட்டது.</p>
<p>கத்தார் புதன்கிழமை முதல் அதன் எரிவாயு உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்துவதாகவும், இயல்புநிலை திரும்ப குறைந்தது ஒரு மாதமாவது ஆகும் என்றும் ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.</p>
<p>ஈராக் தனது எரிபொருள் உற்பத்தியைக் குறைத்துள்ளது, மேலும் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத் ஆகிய நாடுகளும் தங்கள் எரிபொருளை ஏற்றுமதி செய்ய முடியாமல் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன.</p>
<p>ரொய்ட்டர்ஸ் மற்றும் மரைன் டிராஃபிக் தரவுகளின்படி, எரிபொருள் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) டேங்கர்கள் உட்பட சுமார் 200 கப்பல்கள் தற்போது ஈராக், சவுதி அரேபியா மற்றும் கத்தார் போன்ற முக்கிய வளைகுடா உற்பத்தியாளர்களின் கடற்கரையிலிருந்து திறந்த கடல்களில் நங்கூரமிடப்பட்டுள்ளன.</p>
<p>கடல்சார் தரவுகளின்படி, ஹார்முஸ் நீரிணைக்கு வெளியே நூற்றுக்கணக்கான கப்பல்கள் உள்ளே நுழைய முடியாமல் சிக்கித் தவிக்கின்றன.</p>
<p>உலகின் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகங்களில் ஐந்தில் ஒரு பங்கு இந்த முக்கியமான கடல் பாதை வழியாகவே முன்னெடுக்கப்படுகின்றன.</p>
<p><strong>அமெரிக்காவால் மட்டும் சாத்தியமாகுமா?</strong></p>
<p>இந்நிலையில், &#8220;உலகிற்கு எரிசக்தி ஓட்டத்தை உறுதி செய்ய அமெரிக்கா எந்த நடவடிக்கையும் எடுக்கும்,&#8221; என்று அந்நாட்டு ஜனாதிபதி டொனாலட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.</p>
<p>இந்த அறிவிப்பின் பின்னரே இலங்கைக்கு அருகே ஈரானிய போர்க்கப்பலை அமெரிக்கா தாக்கியது. இதனால் நிலைமை தற்போது கடுமையாக மாறியுள்ளது.</p>
<p>கடல்சார் காப்பீட்டுக்கான செலவு ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதுடன், அமெரிக்க கடற்படை உலகளாவிய போரில் ஒன்றில் நுழைந்து நிலைமையை சிக்கலாக்கியுள்ளது.</p>
<p>ட்ரம்ப் சொல்வது போல், மத்திய கிழக்கிலிருந்து வரும் அனைத்து கப்பல்களுக்கும் அமெரிக்கா மட்டுமே பாதுகாப்பை வழங்குவது நடைமுறையில் சாத்தியமற்றது.</p>
<p>தற்போது அச்சுறுத்தலுக்கு உள்ளான பிராந்தியத்தில் இயங்கும் அனைத்து கப்பல்களுக்கும் அமெரிக்கா பாதுகாப்பை வழங்கும் என்று எதிர்பார்ப்பது டைமுறைக்கு மாறான ஒன்று என உலகின் முன்னணி கப்பல் சங்கங்களில் ஒன்றான BIMCOஇன் பாதுகாப்பு அதிகாரி ஜேக்கப் லார்சன் தெரிவித்துள்ளார்.</p>
<p>ஹார்முஸ் நீரிணை வழியாக தினமும் ஏராளமான கப்பல்கள் செல்கின்றன. இவை அனைத்தையும் பாதுகாக்க, அமெரிக்க கடற்படை இந்தப் பகுதியில் அதிக எண்ணிக்கையிலான போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை பராமரிக்க வேண்டும்.</p>
<p>அத்தகைய நடவடிக்கைக்காக அமெரிக்க அரசாங்கத்திற்கு ஏற்படும் செலவு பல மடங்காக அதிகரிக்கும்.</p>
<p>நாள் ஒன்றுக்கு போர்க்கப்பல் ஒன்றை இயக்குவதற்கு லட்சக்கணக்கான டொலர்கள் செலவாகும். சில நேரங்களில், அந்த செலவு மில்லியன் டொலர்களாக அதிகரிக்கும்.</p>
<p>இதில் ஏவுகணைகள் மற்றும் வெடிபொருட்களின் விலைகளையும் கணக்கிட வேண்டும்.</p>
<p>இவ்வாறு அமெரிக்க வரி செலுத்துவோரின் பணத்தை வெளிநாட்டுப் போருக்கு செலவிடுவது தொடர்பாக அமெரிக்காவிற்குள் ஒரு அரசியல் நெருக்கடியை உருவாக்கக்கூடும்.</p>
<p>ஆகவே இந்த விடயத்தில் அமெரிக்கா தனித்து செயற்பட முடியாது.</p>
<p>அவர்கள் தங்கள் நட்பு நாடுகளான (பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் அரபு நாடுகளின்) ஆதரவைப் பெற்று, ஓரளவிற்கு &#8216;கடற்படை கூட்டணியாக&#8217; நடவடிக்கைகளைத் தொடங்கலாம் என்றாலும், இன்றுவரை இது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை.</p>
<p>இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டால், இந்த நெருக்கடி நீடித்த உலகப் போராக மாற வாய்ப்புள்ளது என்பதையும் நாம் மறுத்துவிட முடியாது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/irans-iris-dena-sunk-near-sri-lanka/">இலங்கைக்கு அருகே மூழ்கடிக்கப்பட்ட ஈரானின் ஐரிஸ் தேனா!!! உலகளாவிய கடல்சார் போராக மாறும் அபாயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அமெரிக்க தாக்குதலில் மூழ்கிய ஈரானிய கப்பலில் இருந்து 84 உடல்களை இலங்கை மீட்டது</title>
		<link>https://oruvan.com/sri-lanka-recovers-84-bodies-from-iranian-ship-sunk-in-us-attack/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Mar 2026 05:13:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Iran War]]></category>
		<category><![CDATA[IRIS Dena]]></category>
		<category><![CDATA[usa]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=46174</guid>

					<description><![CDATA[<p>இலங்கைக்கு அண்மித்த தெற்கு கடற்பரப்பில் அமெரிக்க தாக்குதலுக்குப் பின்னர் மூழ்கிய ஈரானிய போர் கப்பலில் இருந்த 84 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. அதன்படி, காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது. ஈரானின் கடற்படையைச் சேர்ந்த ஐரிஸ் தேனா என்ற கப்பல் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்ட பின்னர் இலங்கையின் தெற்கே ஆழ்கடலில் மூழ்கியது. 180 பேர் கொண்ட அந்தக் கப்பல், இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடந்த சர்வதேச கடற்படை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lanka-recovers-84-bodies-from-iranian-ship-sunk-in-us-attack/">அமெரிக்க தாக்குதலில் மூழ்கிய ஈரானிய கப்பலில் இருந்து 84 உடல்களை இலங்கை மீட்டது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கைக்கு அண்மித்த தெற்கு கடற்பரப்பில் அமெரிக்க தாக்குதலுக்குப் பின்னர் மூழ்கிய ஈரானிய போர் கப்பலில் இருந்த 84 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.</p>
<p>அதன்படி, காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.</p>
<p>ஈரானின் கடற்படையைச் சேர்ந்த ஐரிஸ் தேனா என்ற கப்பல் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்ட பின்னர் இலங்கையின் தெற்கே ஆழ்கடலில் மூழ்கியது.</p>
<p>180 பேர் கொண்ட அந்தக் கப்பல், இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடந்த சர்வதேச கடற்படை ஆய்வு மற்றும் இராணுவப் பயிற்சியில் பங்கேற்று, ஈரானுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.</p>
<p>அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் நேற்று இந்தியப் பெருங்கடலில் &#8220;சர்வதேச நீரில் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்த ஈரானிய போர்க்கப்பலை&#8221; அமெரிக்கா மூழ்கடித்ததை உறுதிப்படுத்தினார்.</p>
<p>நேற்று அதிகாலை ஈரானிய கடற்படைக் கப்பலான “ஐரிஸ் தேனா”விலிருந்து ஒரு பேரிடர் அழைப்பு வந்த பின்னர், 32 பேரை மீட்டதாக இலங்கை கடற்படை முன்னதாக உறுதிப்படுத்தியது. அவர்கள் காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.</p>
<p>சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் பேசிய கடற்படை ஊடக செய்தித் தொடர்பாளர் கமாண்டர் புத்திக சம்பத், இந்த நடவடிக்கையின் முதன்மை கவனம் உயிர்களைக் காப்பாற்றுவதாகும் என்று கூறினார்.</p>
<p>கப்பலின் ஆவணங்களின்படி 180 பேர் கப்பலில் இருந்ததாக நம்பப்படுகிறது, இருப்பினும் காணாமல் போனவர்களின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.</p>
<p>மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கிய நேரத்தில் அவர்கள் கப்பலைப் பார்க்கவில்லை, ஆனால் தண்ணீரில் எண்ணெய்த் திட்டுகளையும் மிதக்கும் உயிர்காக்கும் படகுகளையும் பார்த்ததாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lanka-recovers-84-bodies-from-iranian-ship-sunk-in-us-attack/">அமெரிக்க தாக்குதலில் மூழ்கிய ஈரானிய கப்பலில் இருந்து 84 உடல்களை இலங்கை மீட்டது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கை அருகே ஈரானிய போர் கப்பல் மீது நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் &#8211; 100க்கும் மேற்பட்டவர்கள் மாயம்</title>
		<link>https://oruvan.com/submarine-attacks-iranian-warship-near-sri-lanka/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 04 Mar 2026 10:28:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Galle port]]></category>
		<category><![CDATA[Iranian ship]]></category>
		<category><![CDATA[IRIS Dena]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=46142</guid>

					<description><![CDATA[<p>இலங்கையை அண்மித்த கடலில் மூழ்கிய ஈரானிய கப்பல், நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றினால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்மட்ட பாதுகாப்பு தரப்புகளை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பலில் 180 பேர் வரையில் இருந்ததாகவும், 78 மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 101 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கை கடல் எல்லைக்கு அண்மித்து காலியில் இருந்து 40 மைல் தொலைவில் இன்று அதிகாலை ஈரானிய போர்க்கப்பல் விபத்துக்குள்ளாகியிருந்தது. [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/submarine-attacks-iranian-warship-near-sri-lanka/">இலங்கை அருகே ஈரானிய போர் கப்பல் மீது நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் &#8211; 100க்கும் மேற்பட்டவர்கள் மாயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையை அண்மித்த கடலில் மூழ்கிய ஈரானிய கப்பல், நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றினால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>உயர்மட்ட பாதுகாப்பு தரப்புகளை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>குறித்த கப்பலில் 180 பேர் வரையில் இருந்ததாகவும், 78 மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 101 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதேவேளை, இலங்கை கடல் எல்லைக்கு அண்மித்து காலியில் இருந்து 40 மைல் தொலைவில் இன்று அதிகாலை ஈரானிய போர்க்கப்பல் விபத்துக்குள்ளாகியிருந்தது.</p>
<p>இந்த விடயம் குறித்து நாடாளுமன்றத்தில் தனது கருத்துக்களைத் தெரிவித்த அமைச்சர், கப்பல் விபத்துக்குள்ளான பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள விமானப்படை கண்காணிப்பு விமானம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>ஈரானிய கடற்படைக் கப்பலின் பணியாளர்கள் இப்போது இலங்கை கடற்படையின் மீட்புக் குழுக்களால் கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.</p>
<p>சம்பந்தப்பட்ட கப்பல் இலங்கை கடற்பரப்பில் இல்லை என்றாலும், உயிர்களைக் காப்பாற்றுவது ஒரு பொறுப்பு என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும், இந்த விவகாரம் சர்வதேச மரபுகளின்படி கையாளப்படுகிறது என்றும் கூறினார்.</p>
<p>இன்று காலை 5.08 மணியளவில் கடற்படைக்குக் கிடைத்த தகவலை தொடர்ந்து, மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/submarine-attacks-iranian-warship-near-sri-lanka/">இலங்கை அருகே ஈரானிய போர் கப்பல் மீது நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் &#8211; 100க்கும் மேற்பட்டவர்கள் மாயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
