<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>IPL News Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/ipl-news/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/ipl-news/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Mon, 06 Apr 2026 11:31:13 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>IPL News Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/ipl-news/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>சென்னை அணியின் தொடர் தோல்வி &#8211; கடுமையாக எதிர்வினையாற்றிய அஸ்வின்</title>
		<link>https://oruvan.com/chennai-teams-consecutive-defeat-ashwin-reacts-strongly/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Apr 2026 11:31:13 +0000</pubDate>
				<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Chennai Super Kings]]></category>
		<category><![CDATA[CSK]]></category>
		<category><![CDATA[IPL 2026]]></category>
		<category><![CDATA[IPL News]]></category>
		<category><![CDATA[MS DHONI]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48055</guid>

					<description><![CDATA[<p>நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சந்தித்துவரும் அவலநிலைகள் குறித்து அந்த அணியின் முன்னாள் வீரர் ரவி அஸ்வின் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார். நேற்று ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்கு எதிராக அணி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அஸ்வின் இவ்வாறு கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார். சென்னை அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வுபெறும் முடிவு தனக்கு மிகுந்த வேதனையை அளித்ததாக அஸ்வின் இதன் போது குறிப்பிட்டுள்ளார். &#8220;நான் மனதளவில் மிகுந்த சிரமத்தில் இருந்தேன். என்னால் இன்னும் அதிகமாக விளையாடியிருக்க [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/chennai-teams-consecutive-defeat-ashwin-reacts-strongly/">சென்னை அணியின் தொடர் தோல்வி &#8211; கடுமையாக எதிர்வினையாற்றிய அஸ்வின்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சந்தித்துவரும் அவலநிலைகள் குறித்து அந்த அணியின் முன்னாள் வீரர் ரவி அஸ்வின் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.</p>
<p>நேற்று ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்கு எதிராக அணி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அஸ்வின் இவ்வாறு கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.</p>
<p>சென்னை அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வுபெறும் முடிவு தனக்கு மிகுந்த வேதனையை அளித்ததாக அஸ்வின் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>&#8220;நான் மனதளவில் மிகுந்த சிரமத்தில் இருந்தேன். என்னால் இன்னும் அதிகமாக விளையாடியிருக்க முடியும், ஆனால் அதற்கான ஆற்றல் என்னிடம் இல்லை. நான் சென்னையில் தொடங்கி சென்னையிலேயே முடிப்பேன் என்று நினைத்தேன்.</p>
<p>என்னை அணியில் வைத்திருப்பதா அல்லது விடுவிப்பதா என்ற தலைவலியை நிர்வாகத்திற்குக் கொடுக்க விரும்பாததால், நான் ஓய்வு பெற முடிவு செய்தேன்.</p>
<p>அது அவர்களுக்கு 10 கோடி ரூபாயை சேமிக்க உதவியது என்று அஸ்வின் கூறினார்.</p>
<p>கடந்த ஆண்டு அணியில் நடந்தவை குறித்து அதிகம் பேச விரும்பாத அஸ்வின், அது இன்னும் தன்னை பாதிப்பதாகக் கூறினார்.<br />
அனுபவமிக்க வீரர்களை விலக்கிவிட்டு இளம் வீரர்களை உள்ளே கொண்டுவரும் சென்னை அணியின் உத்தியையும் அஸ்வின் கேள்விக்குள்ளாக்கினார்.</p>
<p>இளம் வீரர்களுக்கு முறையான பயிற்சியையும் சூழலையும் வழங்குவதில் அணி தவறி வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.<br />
அவர்கள் துடுப்பாட்ட வீரர்கள் பலத்தைப் புரிந்து கொள்ளாமல் பந்து வீசுகிறார்கள்.</p>
<p>அன்ஷுல் கம்போஜ் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோர் தங்களுடைய பாணிக்கு மாறான &#8216;வைட் யோர்க்கர்களை&#8217; வீசியதுதான், டிம் டேவிட் மற்றும் ஏனைய வீரர்கள் சென்னை அணியை வீழ்த்தியதற்கு காரணம் என்றும் அஸ்வின் விமர்சித்தார்.</p>
<p>இந்த பருவத்தில் முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்த சென்னை அணி, புள்ளிப் பட்டியலில் பின்தங்கியுள்ளது. அந்த அணியால் தற்போது ஒரு முறையான ஆடும் பதினொருவர் அணியை கூட அமைக்க முடியவில்லை.</p>
<p>நேற்றையப் போட்டியில் பெங்களூருவிடம் அடைந்த தோல்வியும் அணியின் நம்பிக்கையைப் பாதித்துள்ளது.</p>
<p>பெங்களூரு அணி நல்ல நிலையில் இருப்பதாகவும், அவர்கள் மற்ற அணிகளுக்கு ஒரு பெரிய எச்சரிக்கையை விடுத்து வருவதாகவும் அஸ்வின் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/chennai-teams-consecutive-defeat-ashwin-reacts-strongly/">சென்னை அணியின் தொடர் தோல்வி &#8211; கடுமையாக எதிர்வினையாற்றிய அஸ்வின்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தோனி விளையாடும் கடைசிப் போட்டி &#8211; திருவிழா போல் கொண்டாடுமாறு ரசிகர்களிடம் கோரிக்கை</title>
		<link>https://oruvan.com/mohammad-kaif-has-urged-the-fans-to-celebrate-the-gujarat-titans-vs-chennai-super-kings-ipl-2025-match-like-a-festival/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 25 May 2025 07:42:07 +0000</pubDate>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[CSK]]></category>
		<category><![CDATA[IPL]]></category>
		<category><![CDATA[IPL 2025]]></category>
		<category><![CDATA[IPL News]]></category>
		<category><![CDATA[MS DHONI]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=21275</guid>

					<description><![CDATA[<p>நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இறுதி லீக் போட்டியில் சென்னை அணி இன்று விளையாடவுள்ள நிலையில், இந்தப் போட்டியை திருவிழா போல கொண்டாடுமாறு முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் ரசிகர்களை வலியுறுத்தியுள்ளார். ஏனெனில், ஒரு தலைவராகவும், அணியின் வீரராகவும் தோனியின் கடைசிப் போட்டியாக இது இருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று பகல் இடம்பெறவுள்ள சென்னை அணியின் கடைசி லீக் போட்டியை 43 வயதான தோனி வழிநடத்தவுள்ளார். தொடரின் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/mohammad-kaif-has-urged-the-fans-to-celebrate-the-gujarat-titans-vs-chennai-super-kings-ipl-2025-match-like-a-festival/">தோனி விளையாடும் கடைசிப் போட்டி &#8211; திருவிழா போல் கொண்டாடுமாறு ரசிகர்களிடம் கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இறுதி லீக் போட்டியில் சென்னை அணி இன்று விளையாடவுள்ள நிலையில், இந்தப் போட்டியை திருவிழா போல கொண்டாடுமாறு முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் ரசிகர்களை வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>ஏனெனில், ஒரு தலைவராகவும், அணியின் வீரராகவும் தோனியின் கடைசிப் போட்டியாக இது இருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று பகல் இடம்பெறவுள்ள சென்னை அணியின் கடைசி லீக் போட்டியை 43 வயதான தோனி வழிநடத்தவுள்ளார்.</p>
<p>தொடரின் ஆரம்பத்தில் சென்னை அணியின் தலைவராக ருதுராஜ் கெய்க்வாட் செயற்பட்டார். ஆனால் முழங்கை எலும்பு முறிவு காரணமாக அவர் தொடரின் பாதியிலேயே வெளியேறினார்.</p>
<p>இதனையடுத்து அணி நிர்வாகம் தலைமைப் பதவியை தோனியிடம் ஒப்படைத்தது. எனினும், சென்னை அணியின் தோல்வியை அவராலும் தடுக்க முடியவில்லை. துடுப்பாட்டம், பந்துவீச்சு என அனைத்து துறையிலும், சென்னை அணி பலவீனமாக காணப்படுகின்றது.</p>
<p>இந்நிலையில், தோனி இந்த தொடருடன் ஓய்வு பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இது குறித்து தோனி வெளிப்படையாக பேசவில்லை. தற்போது அடுத்த பதிப்பிற்கான அணியை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.</p>
<p>இந்நிலையில், குஜராத் அணியுடன் சென்னை அணி இன்று பகல் மோதவுள்ளது. இந்தப் போட்டியை ரசிகர்கள் ஒரு திருவிழா போல கொண்டாட வேண்டும், ஏனெனில் இது தோனியின் கடைசி போட்டியாக இருக்கலாம்.</p>
<p>அவர் ஒரு தலைவராகவும், வீரராகவும் கடைசியாக ஒரு முறை மைதானத்தில் நுழைவார். அவருக்கு அன்பைக் கொடுத்து மைதானத்தை மஞ்சள் வண்ணம் தீட்ட வேண்டும்,&#8221; என்று முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.</p>
<p>&#8220;அவர் கடைசி போட்டியில் வெற்றி பெற விரும்புகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் தான் தோனி, தோனி தான் சென்னை சூப்பர் கிங்ஸ்.</p>
<p>எட்டு மாதங்கள் கிரிக்கெட்டிலிருந்து விலகியிருந்த பின்னர் மூன்று மாதங்கள் விளையாடுவது கடினம். இந்த ஆண்டு தோனி அதைப் புரிந்துகொண்டார்,&#8221; என்று முகமது கைஃப் மேலும் கூறினார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/mohammad-kaif-has-urged-the-fans-to-celebrate-the-gujarat-titans-vs-chennai-super-kings-ipl-2025-match-like-a-festival/">தோனி விளையாடும் கடைசிப் போட்டி &#8211; திருவிழா போல் கொண்டாடுமாறு ரசிகர்களிடம் கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மிகப்பெரிய வாய்ப்பு &#8211; ஆனால், தோனி விடுவாரா?</title>
		<link>https://oruvan.com/gurjat-team-has-a-chance-to-top-the-ipl-points-table/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 25 May 2025 07:17:08 +0000</pubDate>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[CSK]]></category>
		<category><![CDATA[Gujarat Titans]]></category>
		<category><![CDATA[IPL]]></category>
		<category><![CDATA[IPL 2025]]></category>
		<category><![CDATA[IPL Cricket]]></category>
		<category><![CDATA[IPL News]]></category>
		<category><![CDATA[MS DHONI]]></category>
		<category><![CDATA[Shubman Gill]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=21272</guid>

					<description><![CDATA[<p>ஐபிஎல் 2025 தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் &#8211; குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் குஜராத் அணி ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்துக்கு செல்லும். இதன் மூலம் ஐபிஎல் குவாலிபயர் 1 போட்டிகளை குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடும். இப்படியான ஒரு மிகப்பெரிய வாய்ப்பு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கிடைத்திருக்கிறது. நேற்று நடைபெற்ற டெல்லி கேப்பிட்டல் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியதால் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/gurjat-team-has-a-chance-to-top-the-ipl-points-table/">குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மிகப்பெரிய வாய்ப்பு &#8211; ஆனால், தோனி விடுவாரா?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஐபிஎல் 2025 தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் &#8211; குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் குஜராத் அணி ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்துக்கு செல்லும்.</p>
<p>இதன் மூலம் ஐபிஎல் குவாலிபயர் 1 போட்டிகளை குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடும். இப்படியான ஒரு மிகப்பெரிய வாய்ப்பு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கிடைத்திருக்கிறது.</p>
<p>நேற்று நடைபெற்ற டெல்லி கேப்பிட்டல் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியதால் இந்த வாய்ப்பு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கிடைத்திருக்கிறது.</p>
<p>ஒருவேளை பஞ்சாப் கிங்ஸ் அணி நேற்றைய போட்டியில் வெற்றி பெற்று அந்த அணி கடைசியாக விளையாடும் போட்டியிலும் வெற்றி பெற்று இருந்தால் ஐபிஎல் 2025 தொடரின் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றிருக்க முடியும்.</p>
<p>அந்த வாய்ப்பை பஞ்சாப் கிங்ஸ் அணி இப்போது இழந்திருக்கிறது. இப்போது இந்த வாய்ப்பு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கிடைத்திருக்கிறது.</p>
<p>இன்று இரவு நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றால் 18 புள்ளிகளுடன் இருக்கும் அந்த அணி 20 புள்ளிகளைப் பெற்று ஐபிஎல் 2025 புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும்.</p>
<p>ஆனால் குஜராத் அணியின் இந்த கனவு அவ்வளவு எளிதாக நிறைவேறி விட வாய்ப்பு இல்லை.</p>
<p>ஏனென்றால் எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இப்போட்டியில் வெற்றி பெற்று ஐபிஎல் 2025 தொடரை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறது.</p>
<p>அப்படியான சூழலில் குஜராத் டைட்டன்ஸ் அணி இப்போட்டியை அவ்வளவு எளிதாக வென்று விட வாய்ப்பு இல்லை.</p>
<p>குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இருக்கும் ஒரே ஒரு சாதகமான விஷயம் என்னவென்றால் இந்த போட்டி குஜராத் அணியின் சொந்த மைதானமான அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது.</p>
<p>சூழல் சாதகமாக இருப்பதை பயன்படுத்திக் கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது அந்த அணி ஆதிக்கம் செலுத்தலாம். ஆனால் சிஎஸ்கே அணியை பொறுத்தவரை இப்போட்டியை வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கிறது.</p>
<p>13 போட்டியில் விளையாடி இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது ஒரு வேளை இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் நான்காவது வெற்றியாக அந்த அணிக்கு இருக்கும்.</p>
<p>அத்துடன் இந்த ஐபிஎல் போட்டியில் மிகக் குறைந்த வெற்றிகளை பெற்றிருக்கும் ராஜஸ்தான் அணிக்கு நிகரான வெற்றி பெற்று இருக்கிறோம் என்ற ஆறுதலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் பெற்றுக் கொள்ள முடியும்.</p>
<p>இதற்காகவாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற கடினமாக முயற்சிக்கும்.</p>
<p>குஜராத் டைட்டன்ஸ் அணி இப் போட்டியில் தோற்றால், ஐபிஎல் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிப்பதற்காக பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி ஆகிய அணிகளின் கடைசி ஆட்டங்களின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும்.</p>
<p>ஏனென்றால் குஜராத் டைட்டன்ஸ் அணி இன்றைய போட்டியில் தோற்று, பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி அணிகள் முறையே தங்களது கடைசி போட்டிகளில் வெற்றி பெற்றால் அந்த இரு அணிகளும் ஐபிஎல் புள்ளி பட்டியலில் முதல் 2 இடத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது.</p>
<p>குவாலிஃபயர் முதல் சுற்றில் விளையாட வேண்டும் என்றால் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இன்றைய போட்டி வெற்றி மிக மிக முக்கியமானது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/gurjat-team-has-a-chance-to-top-the-ipl-points-table/">குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மிகப்பெரிய வாய்ப்பு &#8211; ஆனால், தோனி விடுவாரா?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இடைநிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மே 17 முதல் ஆரம்பம்</title>
		<link>https://oruvan.com/suspended-ipl-matches-to-resume-from-may-17/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 13 May 2025 10:19:53 +0000</pubDate>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[IPL]]></category>
		<category><![CDATA[IPL 2025]]></category>
		<category><![CDATA[IPL Cricket]]></category>
		<category><![CDATA[IPL News]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=20195</guid>

					<description><![CDATA[<p>இந்திய – பாகிஸ்தான் போர் காரணமாக இடைநிறுத்தப்பட்ட 18ஆவது ஐபிஎல் தொடர் மே 17ஆம் திகதி முதல் மீளவும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கைவிடப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஜெய்பூரில் மே 24ஆம் திகதி மீளவும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள லீக் போட்டிகள் யாவும் ஆறு மைதானங்களில் நடத்தி முடிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பெங்களூரு, ஜெய்பூர், டெல்லி, லக்னோ, மும்பை மற்றும் அஹமதாபாத் ஆகிய மைதானங்களில் போட்டிகளை நடத்த [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/suspended-ipl-matches-to-resume-from-may-17/">இடைநிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மே 17 முதல் ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்திய – பாகிஸ்தான் போர் காரணமாக இடைநிறுத்தப்பட்ட 18ஆவது ஐபிஎல் தொடர் மே 17ஆம் திகதி முதல் மீளவும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>கைவிடப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஜெய்பூரில் மே 24ஆம் திகதி மீளவும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>எஞ்சியுள்ள லீக் போட்டிகள் யாவும் ஆறு மைதானங்களில் நடத்தி முடிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன்படி, பெங்களூரு, ஜெய்பூர், டெல்லி, லக்னோ, மும்பை மற்றும் அஹமதாபாத் ஆகிய மைதானங்களில் போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தீர்மானித்துள்ளது.</p>
<p>ஞாயிற்றுக்கிழமைகளில் தலா இரண்டு போட்டிகள் நடைபெறும். ப்ளே ஓவ் போட்டிகள் எங்கெங்கு நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும். ஆனால் அவற்றுக்கான திகதிகள் வெளியிடப்பட்டுள்ளது.</p>
<p>முதலாவது தகுதிகாண் போட்டி மே 29ஆம் திகதியும் நீக்கல் போட்டி மே 30ஆம் திகதியும் இரண்டாவது தகுதிகாண் போட்டி ஜூன் 1ஆம் திகதியும், இறுதிப் போட்டி ஜூன் 3ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.</p>
<p>The post <a href="https://oruvan.com/suspended-ipl-matches-to-resume-from-may-17/">இடைநிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மே 17 முதல் ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தொடர் தோல்வியின் எதிரொலி &#8211; முக்கிய வீரர்களை அணியில் இருந்து நீக்கும் சிஎஸ்கே</title>
		<link>https://oruvan.com/csk-to-drop-key-players-after-series-of-defeats/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 04 May 2025 07:54:33 +0000</pubDate>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Chennai Super Kings]]></category>
		<category><![CDATA[CSK]]></category>
		<category><![CDATA[IPL]]></category>
		<category><![CDATA[IPL 2025]]></category>
		<category><![CDATA[IPL Cricket]]></category>
		<category><![CDATA[IPL News]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=19318</guid>

					<description><![CDATA[<p>நடப்பு ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் தடுமாறி வருகின்றது. இதுவரை 11 போட்டிகளில் விளையாடி வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்று தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறியுள்ளது. ஐந்து முறை ஐ.பி.எல் கிண்ணத்தை கைப்பற்றியுள்ள சென்னை அணி, 18 வருட ஐ.பி.எல் வரலாற்றில் பிளே ஓப் சுற்றுக்கு தகுதி பெறாமல் முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறிய முதல் சந்தரப்பம் இதுவாகும். இந்நிலையில், அடுத்த ஆண்டு தொடருக்கான ஏற்பாடுகளை இப்போது இருந்தே [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/csk-to-drop-key-players-after-series-of-defeats/">தொடர் தோல்வியின் எதிரொலி &#8211; முக்கிய வீரர்களை அணியில் இருந்து நீக்கும் சிஎஸ்கே</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நடப்பு ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் தடுமாறி வருகின்றது. இதுவரை 11 போட்டிகளில் விளையாடி வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்று தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறியுள்ளது.</p>
<p>ஐந்து முறை ஐ.பி.எல் கிண்ணத்தை கைப்பற்றியுள்ள சென்னை அணி, 18 வருட ஐ.பி.எல் வரலாற்றில் பிளே ஓப் சுற்றுக்கு தகுதி பெறாமல் முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறிய முதல் சந்தரப்பம் இதுவாகும்.</p>
<p>இந்நிலையில், அடுத்த ஆண்டு தொடருக்கான ஏற்பாடுகளை இப்போது இருந்தே செய்ய வேண்டி பெரும் நெருக்கடி அந்த அணிக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அணியில் பல மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
<p>பல இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருவதால் அவர்களுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகவும், சிறப்பாக விளையாடாத சில வீரர்களை அணியில் இருந்து நீக்க சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
<p>இதன்படி, 2026 மினி ஏலத்திற்கு முக்கிய ஐந்து வீரர்களை நீக்க முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
<p><strong>விஜய் சங்கர்</strong></p>
<p>2025 ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 1.20 கோடிக்கு வாங்கப்பட்டார் விஜய் சங்கர். மத்திய வரிசையில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதுவுமே செய்யவில்லை.</p>
<p>ஒரு அரை சதம் அடித்திருந்தாலும் அந்த போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியை தழுவியது. இதனால் விஜய் சங்கர் அணியில் இருந்து நீக்கப்படலாம்.</p>
<p><strong>டேவான் கான்வே</strong></p>
<p>கடந்த சில சீசன்களாக சென்னை அணிக்கு துவக்க வீரராக இருந்து வருகிறார் டேவான் கான்வே. 2023ல் கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தாலும் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை.</p>
<p>இருப்பிடம் இந்த சீசனில் அவரை ஏலத்தில் எடுத்தது சென்னை. ஆனால் அவர் சரியான ஃபார்மல் இல்லாததால் ரன்கள் அடிக்க சிரமப்பட்டு வருகிறார். இவரையும் சென்னை அணி கழட்டி விடலாம்.</p>
<p><strong>ராகுல் திருப்பாதி</strong></p>
<p>ராகுல் திருப்பாதி இந்த ஆண்டு ஏலத்தில் கிட்டத்தட்ட 3.40 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். தொடர்ந்து பல வாய்ப்புகள் கொடுத்தபோதிலும் அவர் ரன்கள் அடிக்க மிகவும் சிரமப்பட்டு வருகிறார் எனவே நிச்சயம் இவரை சென்னை அணி தக்க வைக்காது.</p>
<p><strong>தீபக் ஹூடா</strong></p>
<p>ராகுல் திருப்பாதி போலவே தீபக் ஹூடாவிற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அதிக வாய்ப்பு கொடுத்துள்ளது. ஆனாலும் 5 போட்டிகளில் விளையாடி வெறும் 31 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். 1.70 கோடிக்கு இவரை ஏலத்தில் எடுத்தும் எந்தவித உபயோகமும் இல்லை.</p>
<p><strong>ரவிச்சந்திரன் அஸ்வின்</strong></p>
<p>கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அஸ்வினை சென்னை அணி ஏலத்தில் எடுத்தது. ஆனால் அவரால் சென்னை மைதானத்திலேயே விக்கெட்களை எடுக்க முடியவில்லை.</p>
<p>இதனால் கடந்த சில போட்டிகளில் அவருக்கு பிளேயிங் லெவனிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே அஸ்வினை ஏலத்தில் விட்டு சிறிய தொகைக்கு மீண்டும் எடுக்கலாம் எடுக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/csk-to-drop-key-players-after-series-of-defeats/">தொடர் தோல்வியின் எதிரொலி &#8211; முக்கிய வீரர்களை அணியில் இருந்து நீக்கும் சிஎஸ்கே</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஐபிஎல் 2025 &#8211; பிளே ஓப் வாய்ப்பை 90 வீதம் உறுதி செய்துள்ள நான்கு அணிகள்</title>
		<link>https://oruvan.com/ipl-2025-four-teams-with-90-chance-of-making-the-playoffs/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 29 Apr 2025 03:35:32 +0000</pubDate>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Chennai Super Kings]]></category>
		<category><![CDATA[Delhi Capitals]]></category>
		<category><![CDATA[IPL]]></category>
		<category><![CDATA[IPL 2025]]></category>
		<category><![CDATA[IPL Cricket]]></category>
		<category><![CDATA[IPL News]]></category>
		<category><![CDATA[Royal Challengers Bengaluru]]></category>
		<category><![CDATA[sunr]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=18801</guid>

					<description><![CDATA[<p>நடப்பு ஐபிஎல் தொடர் மிகவும் விருவிருப்பாக நடந்து வருகின்றது. தற்போது பிளே ஓப் வாய்ப்பை உறுதி செய்ய ஒவ்வொரு அணிகளும் மிகவும் தீவிரமான செயற்பட்டு வரும் நிலையில், பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தற்போதைய நிலையில், நான்கு அணிகள் தங்களின் பிளே ஓப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளனர். கடந்த காலங்களில் மிகவும் ஆதிக்கம் செலுத்தின் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட அணிகள் நடப்பு தொடரில் மிகவும் மோசமாக விளையாடி வருகின்றது. குறிப்பாக சென்னை அணி இம்முறை புள்ளிப்பட்டியலில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ipl-2025-four-teams-with-90-chance-of-making-the-playoffs/">ஐபிஎல் 2025 &#8211; பிளே ஓப் வாய்ப்பை 90 வீதம் உறுதி செய்துள்ள நான்கு அணிகள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நடப்பு ஐபிஎல் தொடர் மிகவும் விருவிருப்பாக நடந்து வருகின்றது. தற்போது பிளே ஓப் வாய்ப்பை உறுதி செய்ய ஒவ்வொரு அணிகளும் மிகவும் தீவிரமான செயற்பட்டு வரும் நிலையில், பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.</p>
<p>தற்போதைய நிலையில், நான்கு அணிகள் தங்களின் பிளே ஓப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளனர். கடந்த காலங்களில் மிகவும் ஆதிக்கம் செலுத்தின் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட அணிகள் நடப்பு தொடரில் மிகவும் மோசமாக விளையாடி வருகின்றது.</p>
<p>குறிப்பாக சென்னை அணி இம்முறை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளமை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணி கடைசி இடத்தில் இருப்பது இதுவே முதல் முறையாகும்.</p>
<p>ஐந்து முறை சம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடி ஒன்பது போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றிபெற்று வெறும் நான்கு புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.</p>
<p>அதேபோல் மிகவும் துடுப்பாட்ட பலம்வாய்ந்த அணிகளான ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகளும் இம்முறை மோசமாக விளையாடி வருகின்றது.</p>
<p>இந்த மூன்று அணிகளும் புள்ளிப் பட்டியலில் தற்போது கடைசி மூன்று இடங்களில் உள்ளன.</p>
<p>எனினும், கடந்த ஆண்டில் மிகவும் மோசமாக விளையாடிய டெல்லி, பஞ்சா மற்றும் குஜராத் போன்ற அணிகள் இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக செயற்பட்டு புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் உள்ளன.</p>
<p>இதன்படி, நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை ஐபிஎல் கிண்ணத்தை வெல்லாத மூன்று அணிகள் பிளே ஆப் ரேஸில் இடம் பிடித்துள்ளன. ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.</p>
<p>சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ரோயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தவிர மீதமுள்ள ஆறு அணிகளில் நான்கு அணிகள் தங்களது பிளே ஆப் வாய்ப்பை 90 சதவீதம் உறுதி செய்துள்ளனர்.</p>
<p><strong>ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்</strong></p>
<p>தற்போது புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பெங்களூர்அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 7 வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.</p>
<p>கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவுடன் முதலிடத்தை பிடித்துள்ளனர். இன்னும் அவர்களுக்கு நான்கு போட்டிகள் மீதமுள்ள நிலையில் அதில் இரண்டில் வெற்றி பெற்றால் கூட போதும்.</p>
<p><strong>குஜராத் டைட்டன்ஸ்</strong></p>
<p>சுப்மான் கில் தலைமையில் கடந்த ஆண்டு மோசமாக விளையாடிய குஜராத் அணி, இந்த ஆண்டு சிறப்பாக விளையாடி இதுவரை விளையாடிய ஒன்பது போட்டிகளில் ஆறில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.</p>
<p>மேலும் அவர்களுக்கு நெட் ரன் ரேட் நல்ல விதத்தில் இருப்பதால் கிட்டத்தட்ட தங்களது பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்துள்ளனர்.</p>
<p><strong>மும்பை இந்தியன்ஸ்</strong></p>
<p>மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் சில தொடர் தோல்விகளை சந்தித்தாலும், தொடர்ந்து ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் தற்போது புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.</p>
<p>இதுவரை 10 போட்டிகளில் விளையாடி அதில் ஆறில் வெற்றி பெற்று மும்பை, மீதமுள்ள நான்கு போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றால் கூட போதுமானதாக இருக்கும்.</p>
<p><strong>h</strong></p>
<p>அக்சர் படேல் தலைமையில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி அசைக்க முடியாத ஒரு அணியாக இருந்து வருகிறது. இதுவரை விளையாடிய ஒன்பது போட்டிகளில் ஆறில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளனர்.</p>
<p>இன்னும் 5 போட்டிகள் மீதம் உள்ள நிலையில் அதில் இரண்டு அல்லது மூன்றில் வெற்றி பெற்றால் கூட பிளே ஆப்பிற்கு தகுதி பெறலாம்.</p>
<p>எனினும், பஞ்சாப் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிக்கும் இன்னும் பிளே ஆப் செல்ல சிறிது வாய்ப்புள்ளது அடுத்தடுத்த போட்டிகளில் அபார வெற்றி பெறும் பட்சத்தில் ரன் ரேட் அடிப்படையில் தகுதி பெறலாம்.</p>
<p>The post <a href="https://oruvan.com/ipl-2025-four-teams-with-90-chance-of-making-the-playoffs/">ஐபிஎல் 2025 &#8211; பிளே ஓப் வாய்ப்பை 90 வீதம் உறுதி செய்துள்ள நான்கு அணிகள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>விராட் கோலி சீக்கிரமே ஓய்வு பெற்றுவிட்டார் &#8211; ரெய்னா கவலை</title>
		<link>https://oruvan.com/raina-worried-about-virat-kohli-retiring-from-t20-cricket-too-soon/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Apr 2025 06:39:21 +0000</pubDate>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[IPL]]></category>
		<category><![CDATA[IPL 2025]]></category>
		<category><![CDATA[IPL Cricket]]></category>
		<category><![CDATA[IPL News]]></category>
		<category><![CDATA[Suresh Raina]]></category>
		<category><![CDATA[Virat Kohli]]></category>
		<category><![CDATA[விராட் கோலி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=18393</guid>

					<description><![CDATA[<p>விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து சீக்கிரமே ஓய்வு பெற்றுவிட்டதாக இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். விராட் கோலி 2026ஆம் ஆண்டு வரை விளையாடும் திறன் கொண்டவர் என்று ரெய்னா சுட்டிக்காட்டியுள்ளார். 2024 ஆம் ஆண்டு இந்தியா டி20 உலகக் கிண்ணத்தை வென்ற பிறகு விராட் கோலி டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார். அவருடன், ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் ஓய்வை அறிவித்தனர். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/raina-worried-about-virat-kohli-retiring-from-t20-cricket-too-soon/">விராட் கோலி சீக்கிரமே ஓய்வு பெற்றுவிட்டார் &#8211; ரெய்னா கவலை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து சீக்கிரமே ஓய்வு பெற்றுவிட்டதாக இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.</p>
<p>விராட் கோலி 2026ஆம் ஆண்டு வரை விளையாடும் திறன் கொண்டவர் என்று ரெய்னா சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>2024 ஆம் ஆண்டு இந்தியா டி20 உலகக் கிண்ணத்தை வென்ற பிறகு விராட் கோலி டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார். அவருடன், ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் ஓய்வை அறிவித்தனர்.</p>
<p>இந்நிலையில், விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து சீக்கிரமாகவே ஓய்வு பெற்றுவிட்டார் என்று தான் நினைப்பதாக ரெய்னா தெரிவித்துள்ளார்</p>
<p>தற்போது அவர் விளையாடி வரும் வேகத்தையும், 2025 சாம்பியன்ஸ் டிராபியில் அவர் காட்டிய வேகத்தையும் கருத்தில் கொண்டு, அவர் 2026 வரை விளையாட முடியும்.</p>
<p>&#8220;விராட் தனது உடற்தகுதியை பராமரித்து வரும் விதத்தைப் பார்க்கும்போது, ​​அவர் இன்னும் உச்ச ஃபார்மில் இருக்கிறார் என்று கருதலாம்&#8221; என்று ரெய்னா கூறினார்.</p>
<p>கடந்த சீசனில் ஆரஞ்சு தொப்பியை வென்ற விராட் கோலி, இந்த சீசனிலும் பெங்களூரு அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி இதுவரை ஒன்பது போட்டிகளில் இருந்து 65.33 சராசரியுடன் 392 ஓட்டங்களை குவித்துள்ளார்.</p>
<p>விராட் மற்றும் பிற மூத்த வீரர்கள் ஓய்வு பெற்ற பிறகு, இந்திய கிரிக்கெட் சபை இளைய தலைமுறையினர் தலைமையில் ஒரு டி20 அணியை உருவாக்கி வருகின்றது.</p>
<p>தற்போது மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் இளம் இந்திய அணியினர், அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள டி20 உலகக் கிண்ண தொடருக்கு தயாராகி வருகிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/raina-worried-about-virat-kohli-retiring-from-t20-cricket-too-soon/">விராட் கோலி சீக்கிரமே ஓய்வு பெற்றுவிட்டார் &#8211; ரெய்னா கவலை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சென்னை அணியின் தொடர்ச்சியான தோல்வி &#8211; காரணம் கூறும் ஸ்டீபன் பிளெமிங்</title>
		<link>https://oruvan.com/stephen-fleming-explains-the-reason-behind-chennai-teams-continuous-defeat/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 09 Apr 2025 07:21:22 +0000</pubDate>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Chennai Super Kings]]></category>
		<category><![CDATA[CSK]]></category>
		<category><![CDATA[CSK vs PBSK]]></category>
		<category><![CDATA[IPL]]></category>
		<category><![CDATA[IPL 2025]]></category>
		<category><![CDATA[IPL Cricket]]></category>
		<category><![CDATA[IPL News]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=17187</guid>

					<description><![CDATA[<p>போட்டியின் நடுவில் நாங்கள் சிறப்பாக செயல்படாதது தோல்விக்கு காரணமாகும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை தெரிவித்துள்ளார். நேற்றையப் போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்திருந்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு இது நான்காவது தொடர்ச்சியான தோல்வியாகும். இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. நேற்றைய போட்டியின் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/stephen-fleming-explains-the-reason-behind-chennai-teams-continuous-defeat/">சென்னை அணியின் தொடர்ச்சியான தோல்வி &#8211; காரணம் கூறும் ஸ்டீபன் பிளெமிங்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>போட்டியின் நடுவில் நாங்கள் சிறப்பாக செயல்படாதது தோல்விக்கு காரணமாகும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.</p>
<p>பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை தெரிவித்துள்ளார். நேற்றையப் போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்திருந்தது.</p>
<p>நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு இது நான்காவது தொடர்ச்சியான தோல்வியாகும். இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.</p>
<p>நேற்றைய போட்டியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,</p>
<p>நேற்றைய போட்டியை பொறுத்தவரை களத்தடுப்பில் நாங்கள் பெரிய தவறுகள் செய்தோம். சில நேரங்களில் அழுத்ததின் கீழ் எப்படி செயல்பட வேண்டும் என்கிற துல்லியம் இல்லை.</p>
<p>பஞ்சாப் வீரர் பிரியன்ஷ் ஆர்யாவின் சிறப்பான இன்னிங்சால் நாங்கள் அழுத்தத்திற்கு உள்ளானோம். அவரைக் கட்டுப்படுத்த நாங்கள் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும்.</p>
<p>அங்குதான் ஆட்டம் எங்களிடமிருந்து விலகிச் சென்றது. நீங்கள் ஐ.பி.எல் தொடரை வெல்ல வேண்டுமானால் பெரும்பாலான ஓட்டங்களை பெறுவதற்கு முதல் மூன்று வீரர்கள் கட்டாயம் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம்.</p>
<p>நாங்கள் அதைச் செய்யவில்லை. இருப்பினும் நேற்றைய போட்டியில் ஓரளவு நன்றாக செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. போட்டியின் நடுவில் எங்களால் அதே வேகத்தில் விளையாட முடியவில்லை.</p>
<p>காரணம் எதிரணியின் சிறப்பான பந்துவீச்சாக கூட இருந்திருக்கலாம். போட்டியின் நடுவில் நாங்கள் சிறப்பாக செயல்படாதது தோல்விக்கு காரணமாகும்.” என்றார்.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/stephen-fleming-explains-the-reason-behind-chennai-teams-continuous-defeat/">சென்னை அணியின் தொடர்ச்சியான தோல்வி &#8211; காரணம் கூறும் ஸ்டீபன் பிளெமிங்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சம்பியன்ஸ் கிண்ண தொடரில் இருந்து நீக்கப்பட்டதை தாங்கிக்கொள்ள முடியவில்லை &#8211; சிராஜ்</title>
		<link>https://oruvan.com/couldnt-bear-being-eliminated-from-champions-trophy-siraj/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 07 Apr 2025 07:36:44 +0000</pubDate>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Gujarat Titans]]></category>
		<category><![CDATA[icc]]></category>
		<category><![CDATA[ICC Champions Trophy]]></category>
		<category><![CDATA[Indian Premier League]]></category>
		<category><![CDATA[IPL]]></category>
		<category><![CDATA[IPL 2025]]></category>
		<category><![CDATA[IPL Cricket]]></category>
		<category><![CDATA[IPL News]]></category>
		<category><![CDATA[Mohammed Siraj]]></category>
		<category><![CDATA[SRH]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=17022</guid>

					<description><![CDATA[<p>அண்மையில் நடந்து முடிந்த ஐசிசி சம்பியன் கிண்ண தொடரில் தான் அணியில் சேர்க்கப்படாதது ஏற்றுக்கொள்ள முடியவில்லை என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஜ் தெரிவித்துள்ளார். இதனால் சில நாட்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை எனவும், ஆனால் தனது குறைகளை சரிசெய்துகொள்ள இந்த இடைவெளி பெரிதும் உதவியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்றைய போட்டியின் பின்னர் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நேற்றையப் போட்டியில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/couldnt-bear-being-eliminated-from-champions-trophy-siraj/">சம்பியன்ஸ் கிண்ண தொடரில் இருந்து நீக்கப்பட்டதை தாங்கிக்கொள்ள முடியவில்லை &#8211; சிராஜ்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அண்மையில் நடந்து முடிந்த ஐசிசி சம்பியன் கிண்ண தொடரில் தான் அணியில் சேர்க்கப்படாதது ஏற்றுக்கொள்ள முடியவில்லை என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஜ் தெரிவித்துள்ளார்.</p>
<p>இதனால் சில நாட்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை எனவும், ஆனால் தனது குறைகளை சரிசெய்துகொள்ள இந்த இடைவெளி பெரிதும் உதவியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்றைய போட்டியின் பின்னர் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>நேற்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி சிறப்பான வெற்றியைப் பெற்றது. இந்தப் போட்டியில் டைட்டன்ஸ் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p>
<p>சன்ரைசர்ஸ் நிர்ணயித்த 153 ஓட்டங்கள் என்ற இலக்கை டைட்டன்ஸ் அணி 20 பந்துகள் மீதமிருந்த நிலையில் அடைந்திருந்தது. இந்த் போட்டியில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய மொஹமட் து சிராஜ், சன்ரைசர்ஸ் துடுப்பாட்ட வீரர்களை கட்டுக்குள் வைத்திருந்தார்.</p>
<p>நான்கு ஓவர்களில் வெறும் 17 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய சிராஜ் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். சிராஜ் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்ட நாயகன் விருதை வென்றார்.</p>
<p>ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான கடைசிப் போட்டியிலும் அவர் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.</p>
<p>சமீபத்தில் நடந்து முடிந்த சம்பியன்ஸ் கிண்ணத்தை வென்ற இந்திய அணியில் இடம் பெறாமல் போன பிறகு, சிராஜ் ஐபிஎல் தொடரில் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.</p>
<p>இந்நிலையில், நேற்றையப் போட்டிக்கு பின்னர் சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படாதது குறித்து சிராஜ் பேசியிருந்தார்.</p>
<p>தான் அணியில் இணைத்துக்கொள்ள முடியாததைஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று அவர் கூறினார். தனது பந்துவீச்சு, உடற்தகுதி மற்றும் மன வலிமையை மேம்படுத்துவதன் மூலம் மீண்டும் அணிக்கு திரும்ப முடிந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.</p>
<p>&#8220;சொந்த மண்ணில் விக்கெட்டுகள் வீழ்த்தியது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.&#8221; என் குடும்பத்தினர் ஆட்டத்தைப் பார்க்க இங்கு வந்திருந்தார்கள். அவர்களுக்கு முன்னால் நன்றாக பந்து வீசியது எனக்கு நம்பிக்கையைத் தந்தது.</p>
<p>சம்பியன்ஸ் கிண்ண தொடரில் விளையாட நிலையில் ஓய்வு நேரத்தில், எனது பந்துவீச்சு, உடற்தகுதி மற்றும் மன வலிமை ஆகியவற்றை நான் மேம்படுத்திக்கொண்டேன்.</p>
<p>சில நாட்களுக்கு என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் என் குறைபாடுகளை சரிசெய்து உதவ என்னைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தேன். &#8220;நான் தொடர்ந்து விளையாடுவதால் என் தவறுகளில் கவனம் செலுத்த முடியவில்லை.</p>
<p>ஆனால் ஒரு இடைவெளி எனக்கு உதவியாக இருந்தது,&#8221; என்று சிராஜ் மேலும் தெரிவித்திருந்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/couldnt-bear-being-eliminated-from-champions-trophy-siraj/">சம்பியன்ஸ் கிண்ண தொடரில் இருந்து நீக்கப்பட்டதை தாங்கிக்கொள்ள முடியவில்லை &#8211; சிராஜ்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தோனி மரியாதையை இழந்து வருகின்றார் &#8211; மனோஜ் திவாரி</title>
		<link>https://oruvan.com/dhoni-is-losing-respect-manoj-tiwary/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 06 Apr 2025 04:01:16 +0000</pubDate>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Chennai Super Kings]]></category>
		<category><![CDATA[CSK]]></category>
		<category><![CDATA[IPL]]></category>
		<category><![CDATA[IPL 2025]]></category>
		<category><![CDATA[IPL Cricket]]></category>
		<category><![CDATA[IPL News]]></category>
		<category><![CDATA[Manoj Tiwary]]></category>
		<category><![CDATA[MS DHONI]]></category>
		<category><![CDATA[எம்.எஸ் தோனி]]></category>
		<category><![CDATA[ஐபிஎல்]]></category>
		<category><![CDATA[தோனி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=16966</guid>

					<description><![CDATA[<p>2023 ஐபிஎல் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் வெற்றிபெற்ற போது எம்.எஸ் தோனி ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்றும், இப்போது ரசிகர்களின் மரியாதையை இழந்து வருவதாகவும் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கூறியுள்ளார். சென்னை அணியில் தொடர்ந்து முக்கிய வீரராக இருக்கும் தோனி, இந்த சீசனில் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டார், சென்னை அணி லீக்கில் தடுமாறி வருகிறது. இதுவரை விளையாடிய 4 போட்டிகளில், தோனி 76 ஓட்டங்களை மட்டுமே எடுத்துள்ளார், இதனால், ரசிகர்களும் நிபுணர்களும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/dhoni-is-losing-respect-manoj-tiwary/">தோனி மரியாதையை இழந்து வருகின்றார் &#8211; மனோஜ் திவாரி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>2023 ஐபிஎல் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் வெற்றிபெற்ற போது எம்.எஸ் தோனி ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்றும், இப்போது ரசிகர்களின் மரியாதையை இழந்து வருவதாகவும் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கூறியுள்ளார்.</p>
<p>சென்னை அணியில் தொடர்ந்து முக்கிய வீரராக இருக்கும் தோனி, இந்த சீசனில் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டார், சென்னை அணி லீக்கில் தடுமாறி வருகிறது.</p>
<p>இதுவரை விளையாடிய 4 போட்டிகளில், தோனி 76 ஓட்டங்களை மட்டுமே எடுத்துள்ளார், இதனால், ரசிகர்களும் நிபுணர்களும் அவரது துடுப்பாட்ட நிலையை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.</p>
<p>டெல்லி அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற லீக் போட்டியில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்திருந்தது. தோனி 26 பந்துகளில் வெறும் 30 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்தார்.</p>
<p>இந்நிலையில், கிரிக்பஸிடம் பேசிய மனோஜ் திவாரி, 2023 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிதான் தோனி ஓய்வு பெற சரியான நேரம் என்று கருதியதாக குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>சென்னை அணியின் ரசிகர்கள் தோனி மீது ஆதங்கப்பட தொடங்கியுள்ளனர், இது தோனியின் மாயாஜாலம் வேலை செய்யவில்லை என்பதற்கான அறிகுறி எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>&#8220;அவர் ஓய்வு பெற சரியான நேரம் 2023 ஆம் ஆண்டு, அவர் ஐபிஎல் கிண்ணத்தை வென்றபோதுதான் என்று நான் நினைக்கிறேன். அப்போதே அவர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.</p>
<p>கிரிக்கெட்டில் அவர் சம்பாதித்த புகழ், பெயர் மற்றும் மரியாதை கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் விளையாடும் விதத்தால் அது நழுவி வருவதாக நான் உணர்கிறேன்.&#8221; &#8220;ரசிகர்களால் அவரை இப்படிப் பார்ப்பதை தாங்க முடியவில்லை.</p>
<p>சென்னை ரசிகர்களின் இதயங்களில் அவர் உருவாக்கிய நம்பிக்கை, ரசிகர்கள் வீதிகளில் அவருக்கு எதிராக பேசும் விதம், அவரின் மாயாஜாலம் வேலை செய்யவில்லை என்பதற்கான அறிகுறியாக இருந்திருக்க வேண்டும்,&#8221; என்று திவாரி மேலும் கூறினார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/dhoni-is-losing-respect-manoj-tiwary/">தோனி மரியாதையை இழந்து வருகின்றார் &#8211; மனோஜ் திவாரி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
