<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>International Criminal Court Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/international-criminal-court/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/international-criminal-court/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Tue, 11 Mar 2025 04:50:43 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>International Criminal Court Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/international-criminal-court/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டே கைது</title>
		<link>https://oruvan.com/former-philippine-president-rodrigo-duterte-arrested/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 11 Mar 2025 04:50:43 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[International Criminal Court]]></category>
		<category><![CDATA[Manila airport]]></category>
		<category><![CDATA[Philippines]]></category>
		<category><![CDATA[Rodrigo Duterte]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=14045</guid>

					<description><![CDATA[<p>பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டே மணிலா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டேவை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக கைது உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து, பிலிப்பைன்ஸ் பொலிஸார் அவரை கைது செய்துள்ளது. ஹொங்காங்கிலிருந்து வந்த சிறிது நேரத்திலேயே மணிலா விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2016 முதல் 2022 வரை தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியான [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/former-philippine-president-rodrigo-duterte-arrested/">பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டே கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டே மணிலா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டேவை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக கைது உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து, பிலிப்பைன்ஸ் பொலிஸார் அவரை கைது செய்துள்ளது.</p>
<p>ஹொங்காங்கிலிருந்து வந்த சிறிது நேரத்திலேயே மணிலா விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>2016 முதல் 2022 வரை தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியான இருந்தபோது டுடெர்ட்டே மேற்கொண்ட கொடூரமான போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.</p>
<p>79 வயதான அவர் கைது செய்யப்படலாம் என்ற செய்திகள் முன்னதாக வெளியாகியிருந்த போது அது குறித்து பதலளிக்கையில், ​​சிறைக்குச் செல்லத் தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.</p>
<p>இந்நிலையில், பிலிப்பைன்ஸில் உள்ள மனித உரிமைகளுக்கான சர்வதேச கூட்டணி இந்த கைது நடவடிக்கையை &#8220;வரலாற்று தருணம்&#8221; என்று அழைத்தது.</p>
<p>எவ்வாறாயினும், இந்த கைது நடவடிக்கையை டுடெர்ட்டேவின் முன்னாள் ஜனாதிபதி செய்தித் தொடர்பாளர் சால்வடார் பனெலோ, கடுமையாக சாடியுள்ளார், ஏனெனில் பிலிப்பைன்ஸ் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இருந்து விலகியுள்ளதாகவும் இது &#8220;சட்டவிரோதமானது&#8221; என்றும் அவர் கூறியுள்ளார்.</p>
<p>போதைப்பொருட்களுக்கு எதிரான போர்&#8217;</p>
<p>நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றின் முன்னாள் மேயரான டுடெர்ட்டே, குற்றங்களுக்கு எதிராக பரவலான ஒடுக்குமுறையை உறுதிமொழியாகக் கொண்டு ஆட்சிக்கு வந்தார்.</p>
<p>கடுமையான வார்த்தைஜாலங்களுடன், போதைப்பொருள் சந்தேக நபர்களைச் சுட்டுக் கொல்ல பாதுகாப்புப் படைகளைத் திரட்டினார்.</p>
<p>பிரச்சாரத்தின் போது 6,000க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸாரால் அல்லது தெரியாத தாக்குதல் நடத்தியவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர், ஆனால் உரிமைக் குழுக்கள் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று கூறுகின்றன.</p>
<p>&#8220;ஹிட்லர் மூன்று மில்லியன் யூதர்களைக் கொன்று குவித்தார். இப்போது [பிலிப்பைன்ஸில்] மூன்று மில்லியன் போதைக்கு அடிமையானவர்கள் உள்ளனர். அவர்களைக் கொன்று குவிப்பதில் நான் மகிழ்ச்சியடைவேன்,&#8221; என்று அவர் பதவியேற்ற சில மாதங்களில் கூறினார்.</p>
<p>ஆனால் அவரது &#8220;போதைப்பொருட்களுக்கு எதிரான போர்&#8221; பொலிஸ் துஷ்பிரயோகத்திற்கு வழிவகுத்தது என்றும், போதைப்பொருள் சந்தேக நபர்கள் பலர் உடனடியாக தூக்கிலிடப்பட்டனர் என்றும் விமர்சகர்கள் தெரிவித்தனர்.</p>
<p>எனினும், குற்றச்சாட்டுகளை டுடெர்ட்டே மறுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/former-philippine-president-rodrigo-duterte-arrested/">பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டே கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கைக்குள் நுழைந்த இஸ்ரேலிய  &#8220;டெர்மினேட்டர்&#8221; &#8211; நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நெருக்கடி</title>
		<link>https://oruvan.com/israeli-terminator-enters-sri-lanka-crisis-of-leaving-the-country/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Dec 2024 04:02:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Gal Ferenbook]]></category>
		<category><![CDATA[International Criminal Court]]></category>
		<category><![CDATA[Terminator]]></category>
		<category><![CDATA[The Hind Rajab Foundation]]></category>
		<category><![CDATA[கால் ஃபெரன்புக்]]></category>
		<category><![CDATA[டெர்மினேட்டர்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=3284</guid>

					<description><![CDATA[<p>இலங்கைக்கு வருகை தந்த &#8220;டெர்மினேட்டர்&#8221; என்று அடையாளம் காணப்பட்ட இஸ்ரேலிய சிப்பாய் ஒருவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டியுள்ளதாக சேனல் 12 செய்தி வெளியிட்டுள்ளது. காசாவில் பாலஸ்தீன குடிமகன் ஒருவரை கொடூரமாக கொலை செய்த குற்றச்சாட்டிற்காக &#8220;டெர்மினேட்டர்&#8221; எனப்படும் கால் ஃபெரன்புக் என்ற சிப்பாயை கைது செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த சிப்பாயின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஹிந்த் ரஜப் அறக்கட்டளை, (The Hind Rajab Foundation) அவரை கைது செய்யுமாறு இலங்கை அதிகாரிகள், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/israeli-terminator-enters-sri-lanka-crisis-of-leaving-the-country/">இலங்கைக்குள் நுழைந்த இஸ்ரேலிய  &#8220;டெர்மினேட்டர்&#8221; &#8211; நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நெருக்கடி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கைக்கு வருகை தந்த &#8220;டெர்மினேட்டர்&#8221; என்று அடையாளம் காணப்பட்ட இஸ்ரேலிய சிப்பாய் ஒருவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டியுள்ளதாக சேனல் 12 செய்தி வெளியிட்டுள்ளது.</p>
<p>காசாவில் பாலஸ்தீன குடிமகன் ஒருவரை கொடூரமாக கொலை செய்த குற்றச்சாட்டிற்காக &#8220;டெர்மினேட்டர்&#8221; எனப்படும் கால் ஃபெரன்புக் என்ற சிப்பாயை கைது செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>குறித்த சிப்பாயின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஹிந்த் ரஜப் அறக்கட்டளை, (The Hind Rajab Foundation) அவரை கைது செய்யுமாறு இலங்கை அதிகாரிகள், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சர்வதேச பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளது.</p>
<p>“ஃபெரன்புக் கடந்த ஓகஸ்ட் ஒன்பதாம் திகதி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பாலஸ்தீன குடிமகளை கொன்று, அதுகுறித்து பெருமையுடன் சிரித்துப் பேசும் காணொளியை வெளியிட்டுள்ளார்” என்று ஹிந்த் ரஜப் குறிப்பிட்டுள்ளது.</p>
<p>மேலும், உயிரிழந்த ஒருவரின் கண்ணியத்தையும், சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறியதாகவும் ஃபெரன்புக் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், அவர் கொடூரமானவர் எனவும் ஹிந்த் ரஜப் மேலும் தெரிவித்துள்ளது.</p>
<p>இந்நிலையிலேயு, கைது செய்யப்படுவதற்கு முன்பு கொழும்பை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேலிய அதிகாரிகளிடமிருந்து ஃபெரன்புக்கிற்கு அவசர அழைப்பு வந்ததாக சேனல் 12 தெரிவித்துள்ளது.</p>
<p>&#8220;தன்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தனது படைவீரர்களைப் பாதுகாக்க கிடைக்கக்கூடிய அனைத்து வழிகளையும் பயன்படுத்துவதாக&#8221; இஸ்ரேலிய பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.</p>
<p>இஸ்ரேலுக்குத் திரும்பியதும் ஃபெரன்புக் ஒழுங்கு நடவடிக்கை அல்லது குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடுமா? என்பதைக் குறிப்பிட இராணுவம் மறுத்துள்ளது.</p>
<p>எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க, வெளிவிவகார அமைச்சிடம் இருந்து இவ்வாறான அறிவிப்பு எதுவும் கிடைக்கவில்லை என தெரிவித்திருந்தார்.</p>
<p>வெளிநாட்டவர் ஒருவர் பிறநாட்டில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நிலையில் எமது நாட்டிற்குள் நுழைந்தால் அவரை கைது செய்ய வெளிவிவகார அமைச்சு ஊடக பொலிஸாருக்கு அறிவித்தல் கிடைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/israeli-terminator-enters-sri-lanka-crisis-of-leaving-the-country/">இலங்கைக்குள் நுழைந்த இஸ்ரேலிய  &#8220;டெர்மினேட்டர்&#8221; &#8211; நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நெருக்கடி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
