<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Indigo Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/indigo/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/indigo/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Wed, 09 Jul 2025 05:22:26 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Indigo Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/indigo/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>நடுவானில் இண்டிகோ விமானம் மீது பறவை மோதியது &#8211; பட்னாவில் அவசரமாக தரையிறக்கம்</title>
		<link>https://oruvan.com/bird-hits-indigo-flight-in-mid-air-emergency-landing-in-patna/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 09 Jul 2025 05:22:26 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Indigo]]></category>
		<category><![CDATA[IndiGo Flight]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=26044</guid>

					<description><![CDATA[<p>பட்னாவிலிருந்து டெல்லிக்குச் சென்ற இண்டிகோ விமானம் நடுவானில் பறவை மோதியதால் பட்னா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் 169 பயணிகள் இருந்தனர், அவர்கள் அனைவரும் எந்த காயமும் இல்லாமல் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பறவை மோதியதால் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து விமானம் தற்போது பழுதுபார்க்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அண்மையில் ராஞ்சிக்குச் சென்ற இண்டிகோ விமானம் மீதும் பறவை மோதியது. இதனால் குறித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டிருந்தது. அந்த விமானத்தில் 175 பயணிகள் இருந்தனர். குறித்த [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/bird-hits-indigo-flight-in-mid-air-emergency-landing-in-patna/">நடுவானில் இண்டிகோ விமானம் மீது பறவை மோதியது &#8211; பட்னாவில் அவசரமாக தரையிறக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பட்னாவிலிருந்து டெல்லிக்குச் சென்ற இண்டிகோ விமானம் நடுவானில் பறவை மோதியதால் பட்னா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.</p>
<p>விமானத்தில் 169 பயணிகள் இருந்தனர், அவர்கள் அனைவரும் எந்த காயமும் இல்லாமல் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.</p>
<p>பறவை மோதியதால் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து விமானம் தற்போது பழுதுபார்க்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதனிடையே, அண்மையில் ராஞ்சிக்குச் சென்ற இண்டிகோ விமானம் மீதும் பறவை மோதியது. இதனால் குறித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டிருந்தது.</p>
<p>அந்த விமானத்தில் 175 பயணிகள் இருந்தனர். குறித்த விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது, மேலும் அனைத்து பயணிகளும் காயமின்றி தப்பினர் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.</p>
<p>குறித்த இண்டிகோ விமானம் சுமார் 4,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, ​​கழுகு மோதியதில் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>
<p>&#8220;ராஞ்சி அருகே குறித்த இண்டிகோ விமானம் மீது பறவை மோதியது. சம்பவம் நடந்தபோது குறித்த விமானம் சுமார் 10 முதல் 12 கடல் மைல்கள் தொலைவில் 3,000 முதல் 4,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதேவேளை, பறவை மோதியதாக சந்தேகிக்கப்படும் காரணத்தால், திருவனந்தபுரத்திலிருந்து டெல்லிக்கு பயணிக்கவிருந்த ஏர் இந்தியா விமானம் தனது திட்டமிடப்பட்ட பயணத்தை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.</p>
<p>கடந்த ஞாயிற்றுக்கிழமை திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் AI 2455 ரத்து செய்யப்பட்டது.</p>
<p>டெல்லியில் இருந்து திருவனந்தபுரத்திற்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் AI 2454 தரையிறங்கும் போது பறவை மோதியதாக சந்தேகிக்கப்படும் முறைப்பாட்டை தொடர்ந்து ரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/bird-hits-indigo-flight-in-mid-air-emergency-landing-in-patna/">நடுவானில் இண்டிகோ விமானம் மீது பறவை மோதியது &#8211; பட்னாவில் அவசரமாக தரையிறக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பல கோடி ரூபா மதிப்புள்ள போதைப் பொருளுடன் இந்திய பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது</title>
		<link>https://oruvan.com/indian-woman-arrested-at-katunayake-airport-with-drugs-worth-crores-of-rupees/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 06 Apr 2025 11:28:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[bandaranaike international airport]]></category>
		<category><![CDATA[BIA]]></category>
		<category><![CDATA[Indigo]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=17000</guid>

					<description><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 65.76 மில்லியன் ரூபா மதிப்புள்ள கோகைன் போதைப்பொருள் கையிருப்புடன் இந்தியப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் இன்று (06) காலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 29 வயதான இந்த இந்திய நாட்டவர் இன்று அதிகாலை 2.14 மணிக்கு சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த புலனாய்வுத் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/indian-woman-arrested-at-katunayake-airport-with-drugs-worth-crores-of-rupees/">பல கோடி ரூபா மதிப்புள்ள போதைப் பொருளுடன் இந்திய பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 65.76 மில்லியன் ரூபா மதிப்புள்ள கோகைன் போதைப்பொருள் கையிருப்புடன் இந்தியப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>குறித்த பெண் இன்று (06) காலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.</p>
<p>29 வயதான இந்த இந்திய நாட்டவர் இன்று அதிகாலை 2.14 மணிக்கு சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.</p>
<p>பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டது.</p>
<p>மேலும் அவர் எடுத்துச் சென்ற சூட்கேஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கிலோகிராம் 644 கிராம் கோகோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.</p>
<p>கைது செய்யப்பட்ட பெண் அளித்த தகவலின் அடிப்படையில், கொழும்பின் கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில், போதைப்பொருளை ஏற்கத் தயாராக இருந்த உள்ளூர் ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>கைது செய்யப்பட்ட நபர் மாலபே பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் இன்று (06) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர், மேலும் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி பெறப்பட உள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/indian-woman-arrested-at-katunayake-airport-with-drugs-worth-crores-of-rupees/">பல கோடி ரூபா மதிப்புள்ள போதைப் பொருளுடன் இந்திய பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>யாழ்ப்பாணம் &#8211; திருச்சி விமான சேவை ஆரம்பம்</title>
		<link>https://oruvan.com/jaffna-trichy-flight-service-begins/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 30 Mar 2025 10:22:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Indigo]]></category>
		<category><![CDATA[Jaffna - Trichy flight service]]></category>
		<category><![CDATA[Jaffna airport]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=16353</guid>

					<description><![CDATA[<p>யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும், திருச்சி விமான நிலையத்திற்கும் இடையிலான விமான சேவைகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளது. திருச்சியில் இருந்து மதியம் புறப்பட்ட விமானம், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததுடன் குறித்த விமானத்திற்கு விமான நிலையத்தில் வரவேற்பளிக்கப்பட்டது. நிகழ்வில் இந்திய துணைத்தூதரகர் சாய் முரளி உள்ளிட்ட தூதராக அதிகாரிகள் , விமான நிலைய அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். குறித்த விமான சேவையானது தினசரி மதியம் 1.25 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு  [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/jaffna-trichy-flight-service-begins/">யாழ்ப்பாணம் &#8211; திருச்சி விமான சேவை ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும், திருச்சி விமான நிலையத்திற்கும் இடையிலான விமான சேவைகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளது.</p>
<p>திருச்சியில் இருந்து மதியம் புறப்பட்ட விமானம், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததுடன் குறித்த விமானத்திற்கு விமான நிலையத்தில் வரவேற்பளிக்கப்பட்டது.</p>
<p>நிகழ்வில் இந்திய துணைத்தூதரகர் சாய் முரளி உள்ளிட்ட தூதராக அதிகாரிகள் , விமான நிலைய அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
<p>குறித்த விமான சேவையானது தினசரி மதியம் 1.25 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு  2.25 மணியளவில் யாழ்ப்பாணத்தை வந்தடையும். யாழ்ப்பாணத்தில் இருந்து மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு , திருச்சியை மாலை 4 மணியளவில் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அதேவேளை யாழ்ப்பாணத்தில் இருந்து சிங்கப்பூர் பயணிக்க விரும்புவோர், திருச்சி சென்று அங்கிருந்து சிங்கப்பூர் பயணிக்க கூடியவாறான விமான சேவை திட்டமிடப்பட்டுள்ளது.</p>
<p>இதனால், கொழும்பு சென்று சிங்கப்பூர் செல்வதற்கான நேர விரயம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>47 ஆண்டுகளுக்குப் பின்னர் திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமான சேவை இயக்கப்படுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.</p>
<p>இதுவரை திருச்சியில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்குதான் நாள்தோறும் 2 விமானங்கள் இயக்கப்பட்டன. திருச்சியில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு செல்வோர் இந்த விமான சேவைகளை பயன்படுத்ததி வந்தனர்.</p>
<p>இதற்கு அதிகமான கட்டணமும் செலுத்தி வந்தனர். தற்போது யாழ்ப்பாணத்துக்கு திருச்சியில் இருந்து விமானம் இயக்கப்படுவதால் குறைவான கட்டணத்தில் இலங்கையை சென்றடைய வாய்ப்புகள் அதிகம்.</p>
<p>அதேபோல தமிழ்நாட்டில் இருந்து உணவுப் பொருட்களை இலங்கை தமிழர்கள் வாழும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு விரைவாக கொண்டு சேர்க்கவும் முடியும் என்பதும் எதிர்பார்ப்பு.</p>
<p>திருச்சி- யாழ்ப்பாணம் இடையேயான விமான கட்டணமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து யாழ்ப்பாணம் செல்ல மட்டும் 5,900 ரூபா முதல் 6,400 ரூபா வரை மட்டுமே.</p>
<p>இன்றையதினம் சரியாக பிற்பகல் 02.02 மணிக்கு பலாலி விமான நிலையத்தை வந்தடைந்த விமானத்தில் 27 பணிகள் வருகை தந்தனர். பலாலியிலிருந்து மீண்டும் 36 பயணிகளுடன் 3.00 மணியளவில் விமானம் திருச்சியை நோக்கிப் புறப்பட்டது.</p>
<p>இதன் போது யாழ்ப்பாண இந்திய துணை தூதுவர் சாய் முரளி தலையிலான குழுவினர் கேக் வெட்டி விமானிகளுடன் புதிய விமான பயணத்தினை கொண்டாடினர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/jaffna-trichy-flight-service-begins/">யாழ்ப்பாணம் &#8211; திருச்சி விமான சேவை ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
