<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>immigration Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/immigration/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/immigration/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sun, 14 Sep 2025 06:12:23 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>immigration Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/immigration/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>குடியேற்றத்திற்கு எதிராக லண்டனில் மாபெரும் பேரணி &#8211; எலான் மஸ்க் ஆதரவு</title>
		<link>https://oruvan.com/huge-rally-in-london-against-immigration-elon-musk-supports/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 14 Sep 2025 06:12:23 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[against]]></category>
		<category><![CDATA[Elon]]></category>
		<category><![CDATA[huge]]></category>
		<category><![CDATA[immigration]]></category>
		<category><![CDATA[london]]></category>
		<category><![CDATA[Musk]]></category>
		<category><![CDATA[Rally]]></category>
		<category><![CDATA[supports]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=32569</guid>

					<description><![CDATA[<p>பிரித்தானியாவின் லண்டனில் புலம்பெயர்வோருக்கு எதிராக மிகப்பெரிய பேரணி நடத்தப்பட்டது. தீவிர வலதுசாரி ஆர்வலர் Tommy Robinson ஏற்பாடு செய்த லண்டன் பேரணியில் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 26 பொலிஸார் காயமடைந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து 25 பேரை பொலிஸார்கைது செய்தனர். லண்டனில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட மிகப்பெரிய பேரணிக்கு உலக பெரும் பணக்காரரான [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/huge-rally-in-london-against-immigration-elon-musk-supports/">குடியேற்றத்திற்கு எதிராக லண்டனில் மாபெரும் பேரணி &#8211; எலான் மஸ்க் ஆதரவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பிரித்தானியாவின் லண்டனில் புலம்பெயர்வோருக்கு எதிராக மிகப்பெரிய பேரணி நடத்தப்பட்டது.</p>
<p>தீவிர வலதுசாரி ஆர்வலர் Tommy Robinson ஏற்பாடு செய்த லண்டன் பேரணியில் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.</p>
<p>இந்த பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.</p>
<p>இந்த மோதலில் 26 பொலிஸார் காயமடைந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.</p>
<p>இதனையடுத்து 25 பேரை பொலிஸார்கைது செய்தனர்.</p>
<p>லண்டனில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட மிகப்பெரிய பேரணிக்கு உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளார்.</p>
<p>இதுதொடர்பில் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில்,</p>
<p>&#8220;வாக்காளர்களை இறக்குமதி செய்கிறார்கள். தங்கள் நாட்டில் உள்ளவர்கள் தங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று தெரிந்தவுடன் அவர்கள் ஏனைய நாடுகளிலிருந்து மக்களை இறக்குமதி செய்து தங்களுக்கு வாக்களிக்கச் செய்வார்கள்.</p>
<p>இது வெற்றி பெறுவதற்கான ஒரு உத்தி. இதை நிறுத்தவேண்டும்&#8221; என்று தெரிவித்துள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/huge-rally-in-london-against-immigration-elon-musk-supports/">குடியேற்றத்திற்கு எதிராக லண்டனில் மாபெரும் பேரணி &#8211; எலான் மஸ்க் ஆதரவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு, குடியகல்வு அலுவலகம்</title>
		<link>https://oruvan.com/new-immigration-and-emigration-office-in-jaffna/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Fri, 29 Aug 2025 13:44:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Emigration]]></category>
		<category><![CDATA[immigration]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[New]]></category>
		<category><![CDATA[office]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=31072</guid>

					<description><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு, குடியகல்வு அலுவலகம் எதிர்வரும் முதலாம் திகதி திறந்துவைக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். வட மாகாண மக்கள் கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வசதியை ஏற்படுத்தும் வகையில் இந்த அலுவலகம் திறக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். தற்போது வவுனியா, மாத்தறை, குருநாகல் ஆகிய பகுதிகளில் குடிவரவு, குடியகல்வு அலுவலகங்கள் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/new-immigration-and-emigration-office-in-jaffna/">யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு, குடியகல்வு அலுவலகம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு, குடியகல்வு அலுவலகம் எதிர்வரும் முதலாம் திகதி திறந்துவைக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.</p>
<p>வட மாகாண மக்கள் கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வசதியை ஏற்படுத்தும் வகையில் இந்த அலுவலகம் திறக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.</p>
<p>தற்போது வவுனியா, மாத்தறை, குருநாகல் ஆகிய பகுதிகளில் குடிவரவு, குடியகல்வு அலுவலகங்கள் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/new-immigration-and-emigration-office-in-jaffna/">யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு, குடியகல்வு அலுவலகம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>குடிவரவு மற்றும் குடியகல்வு விதிமுறைகளை மீறிய 15 இந்தியர்கள் மீண்டும் சென்னைக்கு அனுப்பி வைப்பு</title>
		<link>https://oruvan.com/fifteen-indian-nationals-deported-for-volating-immigration-laws/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 09 Mar 2025 12:17:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[immigration]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=13941</guid>

					<description><![CDATA[<p>நாட்டின் குடிவரவு மற்றும் குடியகல்வு விதிமுறைகளை மீறி சுற்றுலா விசாக்களின் கீழ் நாட்டிற்கு வருகைதந்துள்ள 15 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். குறித்த இந்திய பிரஜைகள் குழு, யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள ஒரு மதக் குழுவிற்கான பிரசாரப் பணியிலும், தளபாடங்களில் சிற்ப வேலைப்பாடு செய்பவர்களாகவும் பணியாற்றி வந்துள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தால் இலவசமாக வழங்கப்பட்ட சுற்றுலா விசாக்களின் கீழ் நாட்டிற்கு வந்திருந்தனர். இவர்களில் இருவர் யாழ்ப்பாணம் பிரதேசத்தில் 5 மற்றும் 7 ஆம் தேதிகளில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/fifteen-indian-nationals-deported-for-volating-immigration-laws/">குடிவரவு மற்றும் குடியகல்வு விதிமுறைகளை மீறிய 15 இந்தியர்கள் மீண்டும் சென்னைக்கு அனுப்பி வைப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாட்டின் குடிவரவு மற்றும் குடியகல்வு விதிமுறைகளை மீறி சுற்றுலா விசாக்களின் கீழ் நாட்டிற்கு வருகைதந்துள்ள<br />
15 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.</p>
<p>குறித்த இந்திய பிரஜைகள் குழு, யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள ஒரு மதக் குழுவிற்கான பிரசாரப் பணியிலும்,<br />
தளபாடங்களில் சிற்ப வேலைப்பாடு செய்பவர்களாகவும் பணியாற்றி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.</p>
<p>குறித்த அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தால் இலவசமாக வழங்கப்பட்ட சுற்றுலா விசாக்களின் கீழ் நாட்டிற்கு வந்திருந்தனர்.</p>
<p>இவர்களில் இருவர் யாழ்ப்பாணம் பிரதேசத்தில் 5 மற்றும் 7 ஆம் தேதிகளில் நோய் குணமாக்கும் மத சேவையை<br />
நடத்தத் தயாராகி வந்திருந்த நிலையில், இதற்கு எதிராக இந்து தேசியவாத அமைப்புகள் போராட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானித்திருந்தன.</p>
<p>இந்நிலையில், கைது செய்யப்பட்ட இரண்டு மத குருமார்களையும் நேற்று சனிக்கிழமை (08) அதிகாலை இந்தியாவின் சென்னைக்கு<br />
நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p>
<p>மேலும், யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள ஒரு தளபாடங்கள் செய்யுமிடத்தில் சிற்ப வேலை செய்து கொண்டிருந்த மேலும்<br />
08 இந்தியப் பிரஜைகளும், உணவகங்களில் பணிபுரிந்த 5 இந்தியப் பிரஜைகளும் நேற்று கைது செய்யப்பட்டு பலாலி<br />
விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கு நாடு கடத்தப்பட்டனர்.</p>
<h1 class="inner_header mmfpmf"></h1>
<p>The post <a href="https://oruvan.com/fifteen-indian-nationals-deported-for-volating-immigration-laws/">குடிவரவு மற்றும் குடியகல்வு விதிமுறைகளை மீறிய 15 இந்தியர்கள் மீண்டும் சென்னைக்கு அனுப்பி வைப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
