<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>immediately Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/immediately/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/immediately/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Wed, 08 Apr 2026 07:04:35 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>immediately Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/immediately/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>உடனடி வெளியேற்ற உத்தரவு &#8211; லெபனான் டைர் நகருக்கு இஸ்ரேல் எச்சரிக்கை</title>
		<link>https://oruvan.com/israel-tells-people-in-lebanese-city-to-evacuate-immediately/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Apr 2026 07:04:35 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[evacuate]]></category>
		<category><![CDATA[immediately]]></category>
		<category><![CDATA[Israel]]></category>
		<category><![CDATA[Lebanese]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48155</guid>

					<description><![CDATA[<p>லெபனானின் தெற்கில் உள்ள டைர் (Tyre) நகரில் வசிக்கும் மக்களுக்கு இஸ்ரேலிய இராணுவம் அவசர வெளியேற்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. பாதுகாப்பை உறுதி செய்ய, உடனடியாக வீடுகளிலிருந்து வெளியேறி ஜஹ்ரானி நதிக்கு வடக்கே செல்லுமாறும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் முன்னதாக போர்நிறுத்தத்தை ஆதரிப்பதாக கூறியிருந்தாலும், லெபனானை உள்ளடக்கவில்லை என விளக்கமளித்துள்ளது. ஆனாலும், ஈரான் மற்றும் இந்த பேச்சுவார்த்தைக்கு உதவிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர், அந்த ஒப்பந்தம் லெபனானையும் உள்ளடக்கியது என தெரிவித்துள்ளனர். குறிப்பாக, [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/israel-tells-people-in-lebanese-city-to-evacuate-immediately/">உடனடி வெளியேற்ற உத்தரவு &#8211; லெபனான் டைர் நகருக்கு இஸ்ரேல் எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>லெபனானின் தெற்கில் உள்ள டைர் (Tyre) நகரில் வசிக்கும் மக்களுக்கு இஸ்ரேலிய இராணுவம் அவசர வெளியேற்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.</p>
<p>பாதுகாப்பை உறுதி செய்ய, உடனடியாக வீடுகளிலிருந்து வெளியேறி ஜஹ்ரானி நதிக்கு வடக்கே செல்லுமாறும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>
<p>இந்நிலையில், இஸ்ரேல் முன்னதாக போர்நிறுத்தத்தை ஆதரிப்பதாக கூறியிருந்தாலும், லெபனானை உள்ளடக்கவில்லை என விளக்கமளித்துள்ளது.</p>
<p>ஆனாலும், ஈரான் மற்றும் இந்த பேச்சுவார்த்தைக்கு உதவிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர்,<br />
அந்த ஒப்பந்தம் லெபனானையும் உள்ளடக்கியது என தெரிவித்துள்ளனர்.</p>
<p>குறிப்பாக, லெபனானில் இஸ்ரேல், ஈரானுடன் தொடர்புடைய ஹிஸ்புல்லா அமைப்புடன் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/israel-tells-people-in-lebanese-city-to-evacuate-immediately/">உடனடி வெளியேற்ற உத்தரவு &#8211; லெபனான் டைர் நகருக்கு இஸ்ரேல் எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஈரானிய தூதுவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அவுஸ்திரேலிய அரசாங்கம் உத்தரவு</title>
		<link>https://oruvan.com/australian-government-orders-iranian-ambassador-to-leave-the-country-immediately/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 27 Aug 2025 05:33:45 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Ambassador]]></category>
		<category><![CDATA[Australian]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[immediately]]></category>
		<category><![CDATA[Iranian]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[world]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=30790</guid>

					<description><![CDATA[<p>ஈரானிய தூதரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற அவுஸ்திரேலியா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஈரானிய தூதர் அஹ்மத் சதேகி மற்றும் மூன்று அதிகாரிகள் அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளனர், மேலும் அவுஸ்திரேலிய அரசாங்கம் தனது தூதர்களை தெஹ்ரானில் இருந்து மீள அழைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபரில் சிட்னி மற்றும் மெல்போர்னில் நடந்த இரண்டு யூத எதிர்ப்பு தாக்குதல்களில் ஈரான் ஈடுபட்டதை அவுஸ்திரேலிய உளவுத்துறை அமைப்புகள் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு சம்பவங்களும் சமூக ஒற்றுமையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/australian-government-orders-iranian-ambassador-to-leave-the-country-immediately/">ஈரானிய தூதுவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அவுஸ்திரேலிய அரசாங்கம் உத்தரவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஈரானிய தூதரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற அவுஸ்திரேலியா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.</p>
<p>ஈரானிய தூதர் அஹ்மத் சதேகி மற்றும் மூன்று அதிகாரிகள் அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளனர், மேலும் அவுஸ்திரேலிய அரசாங்கம் தனது தூதர்களை தெஹ்ரானில் இருந்து மீள அழைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.</p>
<p>கடந்த ஆண்டு ஒக்டோபரில் சிட்னி மற்றும் மெல்போர்னில் நடந்த இரண்டு யூத எதிர்ப்பு தாக்குதல்களில் ஈரான் ஈடுபட்டதை அவுஸ்திரேலிய உளவுத்துறை அமைப்புகள் உறுதிப்படுத்தியுள்ளது.</p>
<p>இந்த இரண்டு சம்பவங்களும் சமூக ஒற்றுமையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தி சமூகத்தில் முரண்பாடுகளை விதைக்கும் முயற்சி என்று அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்நிலையிலேயே, ஈரானிய தூதரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற அவுஸ்திரேலியா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>இதன்படி, ஈரானிய தூதருக்கு நாட்டை விட்டு வெளியேற அவுஸ்திரேலியா அரசாங்கம் ஏழு நாட்கள் அவகாசம் அளித்துள்ளதாகவும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>எவ்வாறாயினும், அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் இந்தக் குற்றச்சாட்டுகளை ஈரான் முற்றிலுமாக மறுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் தெரிவிக்கின்றன.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/australian-government-orders-iranian-ambassador-to-leave-the-country-immediately/">ஈரானிய தூதுவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அவுஸ்திரேலிய அரசாங்கம் உத்தரவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அரிசி தட்டுப்பாட்டை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் &#8211; ஜனாதிபதியிடம் கோரிக்கை</title>
		<link>https://oruvan.com/rice-shortage-should-be-addressed-immediately-request-to-the-president/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Jan 2025 14:18:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[addressed]]></category>
		<category><![CDATA[immediately]]></category>
		<category><![CDATA[Request]]></category>
		<category><![CDATA[Rice shortage]]></category>
		<category><![CDATA[should be]]></category>
		<category><![CDATA[to the President]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=6410</guid>

					<description><![CDATA[<p>அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அக்கரப்பத்தனை மன்றாசி நகரில் வர்த்தகர்கள் இன்று (10) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அக்கரப்பத்தனை, மன்றாசி நகர வர்த்தகர்கள் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போது, நகர வர்த்தகர்களும், பொது மக்களும் கலந்துக் கொண்டு சுலோகங்களை ஏந்தியவாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ளதால் அதனை உரிய வகையில் நுகர்வோருக்கு விற்க முடியாத [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/rice-shortage-should-be-addressed-immediately-request-to-the-president/">அரிசி தட்டுப்பாட்டை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் &#8211; ஜனாதிபதியிடம் கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அக்கரப்பத்தனை மன்றாசி நகரில் வர்த்தகர்கள் இன்று (10) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.</p>
<p>அக்கரப்பத்தனை, மன்றாசி நகர வர்த்தகர்கள் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போது, நகர வர்த்தகர்களும், பொது மக்களும் கலந்துக் கொண்டு சுலோகங்களை ஏந்தியவாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.</p>
<p>அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ளதால் அதனை உரிய வகையில் நுகர்வோருக்கு விற்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதாகவும், இதனால் சிறு வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.</p>
<p>மேலும் கருத்து தெரிவித்த போராட்டகாரர்கள்,</p>
<p>“நாட்டில் தைப்பொங்கல் வருகின்றது. இதற்கு பொங்கல் பொங்குவதற்கு சிவப்பு அரிசி உள்ளிட்ட அரிசி வகைகள் தேவைப்படுகின்றது. எனினும், அரிசி தட்டுப்பாடு நிலவுகின்றது.</p>
<p>கட்டுப்பாட்டு விலைக்கு தான் எங்களுக்கு அரிசி வழங்கப்படுகின்றது. அவ்வாறு கட்டுப்பாட்டு விலையை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.</p>
<p>எனவே, கட்டுப்பாட்டு விலைக்கு விற்கமுடியாத சூழ்நிலை இருக்கின்றது. ஆகவே, கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கும், அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/rice-shortage-should-be-addressed-immediately-request-to-the-president/">அரிசி தட்டுப்பாட்டை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் &#8211; ஜனாதிபதியிடம் கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
