<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Hormuz Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/hormuz/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/hormuz/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Mon, 30 Mar 2026 10:23:20 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Hormuz Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/hormuz/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மாபெரும் சீற்றத்தின் நிழல் &#8211; உலக பொருளாதாரத்தை அதிர வைத்த ஹார்முஸ் முட்டுக்கட்டை</title>
		<link>https://oruvan.com/the-hormuz-standoff-has-shaken-the-global-economy/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Mon, 30 Mar 2026 10:22:49 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[economy]]></category>
		<category><![CDATA[global]]></category>
		<category><![CDATA[Hormuz]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[இஸ்ரேல்]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[போர்]]></category>
		<category><![CDATA[ஹார்முஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=47663</guid>

					<description><![CDATA[<p>&#8220;அதிர்ச்சி மற்றும் அச்சம்&#8221; உத்தி தோல்வி – ஈரான் ஒன்றுபட்டது, எதிர்பார்த்த அரசியல் வீழ்ச்சி ஏற்படவில்லை. ஹார்முஸ் நீரிணை மூடல் – எண்ணெய் விலைகள் விண்ணை முட்டும் உயர்வில் &#8211; உலக பொருளாதாரத்தில் அவசரநிலை. ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ – அமெரிக்க நியாயம், அணு ஆயுத அச்சுறுத்தலையும் தாண்டி பரபரப்பான பிராந்திய சவாலை உருவாக்கியது. உலகம் தற்போது ஈரான் போரால் உருவான மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. எரிசக்தி பாதைகள் முடக்கம், எண்ணெய் விலை உயர்வு, மற்றும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-hormuz-standoff-has-shaken-the-global-economy/">மாபெரும் சீற்றத்தின் நிழல் &#8211; உலக பொருளாதாரத்தை அதிர வைத்த ஹார்முஸ் முட்டுக்கட்டை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><strong>&#8220;அதிர்ச்சி மற்றும் அச்சம்&#8221; உத்தி தோல்வி – ஈரான் ஒன்றுபட்டது, எதிர்பார்த்த அரசியல் வீழ்ச்சி ஏற்படவில்லை.</strong></p>
<p><strong>ஹார்முஸ் நீரிணை மூடல் – எண்ணெய் விலைகள் விண்ணை முட்டும் உயர்வில் &#8211; உலக பொருளாதாரத்தில் அவசரநிலை.</strong></p>
<p><strong>‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ – அமெரிக்க நியாயம், அணு ஆயுத அச்சுறுத்தலையும் தாண்டி பரபரப்பான பிராந்திய சவாலை உருவாக்கியது.</strong></p>
<p>உலகம் தற்போது ஈரான் போரால் உருவான மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. எரிசக்தி பாதைகள் முடக்கம், எண்ணெய் விலை உயர்வு, மற்றும் வல்லரசு போட்டி ஆகியவை உலக நிலைத்தன்மையை அச்சுறுத்துகின்றன. பாரம்பரிய சக்திகள் திணறிக் கொண்டிருக்கும் வேளையில், இலங்கை போன்ற அணிசேரா நாடுகள் மீண்டும் மத்தியஸ்த வினையூக்கியாக உருவெடுக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.</p>
<p>2026 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி உலக அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான மற்றும் அதிர்ச்சியூட்டும் திருப்புமுனையாக பதிவாகியுள்ளது. அன்றைய தினம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட மாபெரும் சீற்றம் என குறியிடப்பட்ட இராணுவ நடவடிக்கை, மத்திய கிழக்கு பிராந்தியத்தின் சமநிலையை மட்டுமின்றி, உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புகளையும் ஆழமாக பாதித்துள்ளது.</p>
<p>இந்த தாக்குதலின் முக்கிய விளைவாக, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனியின் உயிரிழப்பு மற்றும் அதன் இராணுவத்<br />
தலைமை கடுமையாக சீர்குலைந்துள்ளது, இந்த நடவடிக்கை ஒரு விரைவான மற்றும் துல்லியமான ஆட்சி மாற்றத்தை நோக்கமாகக்<br />
கொண்டதாக கருதப்பட்டாலும், அதன் விளைவுகள் முற்றிலும் எதிர்பாராத வகையில் பிராந்திய மோதலாக மாறியுள்ளது.</p>
<p><strong>மாபெரும் உத்தியும்  தவறான கணிப்புகளும்</strong></p>
<p>அமெரிக்காவின் “அதிர்ச்சி மற்றும் அச்சம்” என்ற இராணுவ உத்தி, ஈரானின் அரசியல் அமைப்பை உடைத்து உள்நாட்டு குழப்பத்தை<br />
உருவாக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால், இந்த கணிப்பு முற்றிலும் தவறானதாக மாறியுள்ளது. பல்வேறு உள்நாட்டு பிரிவினைகள்<br />
இருந்தபோதிலும், ஈரான் தற்போது தேசிய பாதுகாப்பு மற்றும் மத அடையாளம் என்ற சக்திவாய்ந்த அடையாளங்களின் கீழ் ஒன்றுபட்டுள்ளது.</p>
<p>கமெனியின் மரணம், அரசியல் வெற்றிடத்தை உருவாக்கவில்லை. மாறாக, அவர் ஒரு தியாகியாக மாறி,<br />
மக்களின் எதிர்ப்புத் தூண்டுதலை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இதன் மூலம், அமெரிக்கா எதிர்பார்த்த அரசியல்<br />
வீழ்ச்சி நிகழவில்லை என்பது தெளிவாகியுள்ளது.</p>
<p><strong>பொருளாதார விளிம்பு &#8211; ஹார்முஸ் முட்டுக்கட்டை</strong></p>
<p>இந்த மோதலின் மிக தீவிரமான மற்றும் உடனடி தாக்கம் உலகளாவிய எரிசக்தி துறையில் வெளிப்பட்டுள்ளது.<br />
உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தக நரம்பு எனக் கருதப்படும் ஹார்முஸ் நீரிணை, செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.</p>
<p>உலகின் சுமார் 20 சதவீத எண்ணெய் மற்றும் எரிவாயு இந்த கடல் பாதை வழியாகச் செல்லும் நிலையில்,<br />
அதன் முடக்கம் உலக பொருளாதாரத்திற்கு நேரடி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தைகளில்<br />
எண்ணெய் விலை பீப்பாயொன்றுக்கு 200 அமெரிக்க டொலரை எட்டும் என பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.<br />
இதன் விளைவாக, உலகளாவிய பணவீக்கம் கட்டுக்கடங்காத அளவிற்கு உயர்ந்து, ஐரோப்பாவில் வீட்டு வெப்பமூட்டல் செலவுகள் அதிகரித்துள்ளன. ஆசிய நாடுகளில் உற்பத்தி துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் வளர்ந்து வரும் நாடுகள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றன.</p>
<p>இந்த இராணுவ நடவடிக்கையின் பின்னணி வெறும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தாண்டி, ஒரு விரிவான<br />
புவிசார் அரசியல் வியூகத்தின் பகுதியாகவே பார்க்கப்படுகிறது. டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம்,<br />
இந்த தாக்குதலின் மூலம் சீனாவின் எரிசக்தி ஆதாரங்களை கட்டுப்படுத்தவும், மத்திய கிழக்கில் புதிய அரசியல் ஒழுங்கை உருவாக்கவும், மேலும் இஸ்ரேலின் பிராந்திய ஆதிக்கத்தை உறுதி செய்யவும் முயன்றதாக மதிப்பிடப்படுகிறது.<br />
ஆனால், இந்த வியூக இலக்குகள் பல முக்கிய தவறான கணிப்புகளின் அடிப்படையில் அமைந்திருந்தன. குறிப்பாக, ஈரானின் புவியியல் அமைப்பு மலைப்பகுதிகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு கட்டமைப்புகள் ஒரு நேரடி தரைபடையெடுப்பை மிகவும் கடினமாக்குகின்றன. மேலும், ஈரான் தனது உள்நாட்டு இராணுவ திறன்களைப் பயன்படுத்தி நீண்டகால மோதலை தாங்கக்கூடிய நிலையிலும் உள்ளது.</p>
<p>இராணுவ ரீதியாக பார்க்கும்போது, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேம்பட்ட தொழில்நுட்ப ஆயுதங்களை கொண்டிருந்தாலும், ஈரானின் பலம் அதன் பொறுமை மற்றும் நீடித்த போர்திறனில் இருக்கிறது. சுமார் 45,000 ஏவுகணைகள், விரிவடைந்த ட்ரோன் உற்பத்தி திறன், மற்றும் நீண்டகால போரை தாங்கும் உள்நாட்டு அமைப்பு ஆகியவை, இந்த மோதலை ஒரு விரைவான வெற்றியாக மாற்றாமல், நீண்டகால சோர்வு போராக மாற்றும் அபாயத்தை உருவாக்குகின்றன. இதன் காரணமாக, எந்த தரப்பும் விரைவில் தீர்மானமிக்க வெற்றியைப் பெற முடியாத ஒரு முட்டுக்கட்டை நிலை உருவாகியுள்ளது.</p>
<p><strong>பாரம்பரிய கூட்டணிகளின் தோல்வி</strong></p>
<p>இந்த சூழலில், சர்வதேச கூட்டணிகளின் நிலைப்பாடு கூட அமெரிக்காவிற்கு எதிர்பாராத சவாலாக மாறியுள்ளது.<br />
நேட்டோ நாடுகள் உட்பட பல பாரம்பரிய நட்பு நாடுகள், நேரடி இராணுவ தலையீட்டைத் தவிர்க்க முனைந்துள்ளன.<br />
குறிப்பாக, ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாகத் திறக்க கடற்படைகளை அனுப்புவதில் அவர்கள் காட்டும் தயக்கம்,<br />
மேற்கத்திய கூட்டணிகளில் உள்ள ஆழமான பிளவுகளை வெளிப்படுத்துகிறது.<br />
ஐரோப்பிய நாடுகள், ஏற்கனவே எரிசக்தி விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பொருளாதார சுமையை ஏற்கத் தயங்குகின்றன.</p>
<p>இதேவேளை, இந்த மோதல் உலக வல்லரசுகளின் மறைமுக மோதலாகவும் மாறியுள்ளது. சீனாவும் ரஷ்யாவும், ஈரானுக்கு பல்வேறு வடிவங்களில் ஆதரவை வழங்கி வருகின்றன. செயற்கைக்கோள் உளவு தகவல்கள், மின்னணு போர் உதவிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவுகள் மூலம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொழில்நுட்ப முன்னிலை குறைக்கப்படுகின்றது எனக் கூறப்படுகிறது.<br />
இதன் மூலம், இந்த மோதல் ஒரு பிராந்தியப் போரிலிருந்து, உலகளாவிய சக்தி போட்டியின் ஒரு முக்கிய மேடையாக மாறியுள்ளது.</p>
<p>இந்த அனைத்துப் பரிமாணங்களையும் கருத்தில் கொண்டால், உலக பொருளாதாரம் மிகவும் ஆபத்தான நிலையை எட்டியுள்ளது.<br />
எரிசக்தி விலை உயர்வு, உலகளாவிய பணவீக்கம், வர்த்தக சங்கிலி சிதைவு, மற்றும் நாணய மதிப்பிழப்பு ஆகியவை ஒன்றோடொன்று இணைந்து, ஒரு பெரிய நிதி நெருக்கடியை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன.<br />
இந்நிலையில் இந்தப் போர் நீடித்தால், உலக நிதி அமைப்பே சீர்குலையும் அபாயம் உள்ளது என பல நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.</p>
<p><img fetchpriority="high" decoding="async" class="alignnone size-full wp-image-47665" src="https://oruvan.com/wp-content/uploads/2026/03/russia.png" alt="" width="908" height="513" /></p>
<p><strong>பதற்றத்தைத் தணிப்பதற்கான ஒரே தீர்வு</strong></p>
<p>இந்த சூழலில், மோதலை முடிவுக்குக் கொண்டுவர ஒரு விரிவான மற்றும் சமநிலையான மாபெரும் உடன்படிக்கை அவசியமாகியுள்ளது.<br />
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய மூன்று முக்கிய தரப்புகளும், தங்களது அடிப்படை பாதுகாப்பு கவலைகளைத் தீர்க்கும் வகையில்<br />
பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது, பாதுகாப்பு உத்தரவாதங்கள் வழங்குவது, மற்றும் இராணுவ நடவடிக்கைகளை குறைப்பது போன்ற அம்சங்கள் இந்த உடன்படிக்கையின் மையமாக இருக்க வேண்டும்.</p>
<p><strong>இந்திய மற்றும் இலங்கை தலையீட்டிற்கான வாதம்</strong></p>
<p>இந்த நெருக்கடியான தருணத்தில், இந்தியா ஒரு முக்கிய மத்தியஸ்த சக்தியாக உருவெடுக்கக்கூடிய நிலையில் உள்ளது.<br />
இஸ்ரேலுடன் வலுவான பாதுகாப்பு உறவுகளையும், ஈரானுடன் நீண்டகால வரலாற்று மற்றும் எரிசக்தி தொடர்புகளையும் பேணும் இந்தியா,<br />
ஒரு சமநிலையான அணுகுமுறையை வழங்கக்கூடிய நாடாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, எண்ணெய் விலை உயர்வு இந்தியாவின்<br />
பொருளாதார வளர்ச்சியை நேரடியாக பாதிக்கும் நிலையில், இந்த மோதலை தணிக்க இந்தியா முன்வருவது அதன் தேசிய நலனுக்கும் இணங்குகிறது.</p>
<p>அதேபோன்று, இலங்கை தனது அணிசேரா வெளிநாட்டு கொள்கை மரபின் அடிப்படையில், நடுநிலை மத்தியஸ்த முயற்சிகளில் பங்கேற்கக்கூடிய திறனை கொண்டுள்ளது. ஜே.ஆர். ஜெயவர்தன மற்றும் சிறிமாவோ பண்டாரநாயக்க காலங்களில்,<br />
இலங்கை சர்வதேச இராஜதந்திரத்தில் முக்கிய பங்காற்றியதன் வரலாறு உள்ளது. ஆனால், தற்போதைய சூழலில் அந்த திறனை மீண்டும் உருவாக்குவது ஒரு சவாலாகவே உள்ளது. இதற்கு வலுவான தலைமைத்துவம், நுண்ணறிவு மற்றும் உலக அரசியல் பற்றிய ஆழமான புரிதல் அவசியமாகிறது.</p>
<p>முடிவாக , 2026 ஈரான் போர் ஒரு சாதாரண பிராந்திய மோதலைத் தாண்டி, உலகளாவிய அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை மாற்றக்கூடிய சக்தியாக மாறியுள்ளது.எனவே, உடனடி பேச்சுவார்த்தை, சமரசம் மற்றும் சர்வதேச மத்தியஸ்தம் மட்டுமே இந்த ஆபத்தான நிலையை கட்டுப்படுத்தக்கூடிய ஒரே வழியாக பார்க்கப்படுகிறது.</p>
<p>பாலகணேஷ் டிலுக்ஷா</p>
<p>The post <a href="https://oruvan.com/the-hormuz-standoff-has-shaken-the-global-economy/">மாபெரும் சீற்றத்தின் நிழல் &#8211; உலக பொருளாதாரத்தை அதிர வைத்த ஹார்முஸ் முட்டுக்கட்டை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ட்ரம்ப் – ஸ்டார்மர் இடையே ஹார்முஸ் நீரிணை குறித்து முக்கிய கலந்துரையாடல்</title>
		<link>https://oruvan.com/trump-starmer-hold-key-discussion-on-strait-of-hormuz/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Mon, 23 Mar 2026 07:57:21 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[Discussion]]></category>
		<category><![CDATA[Hormuz]]></category>
		<category><![CDATA[Starmer]]></category>
		<category><![CDATA[Trump]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=47271</guid>

					<description><![CDATA[<p>பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடையே ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு தலைவர்களும் மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமை குறித்து விரிவாக தொலைபேசியில் உரையாடியதாக டவுனிங் ஸ்டீரிட் அறிவித்துள்ளது. குறிப்பாக, உலகளாவிய கப்பல் போக்குவரத்தை சீராக மீண்டும் முன்னெடுக்க ஹார்முஸ் நீரிணையை திறந்துவைப்பதன் அவசியம் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த ஹார்முஸ் நீரிணையின் செயல்பாடு மிக முக்கியம் என்பதை இருவரும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/trump-starmer-hold-key-discussion-on-strait-of-hormuz/">ட்ரம்ப் – ஸ்டார்மர் இடையே ஹார்முஸ் நீரிணை குறித்து முக்கிய கலந்துரையாடல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடையே ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
<p>இரு தலைவர்களும் மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமை குறித்து விரிவாக தொலைபேசியில் உரையாடியதாக<br />
டவுனிங் ஸ்டீரிட் அறிவித்துள்ளது.</p>
<p>குறிப்பாக, உலகளாவிய கப்பல் போக்குவரத்தை சீராக மீண்டும் முன்னெடுக்க ஹார்முஸ் நீரிணையை திறந்துவைப்பதன் அவசியம் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மேலும், உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த ஹார்முஸ் நீரிணையின் செயல்பாடு மிக முக்கியம் என்பதை இருவரும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.</p>
<p>எதிர்காலத்தில் இந்த விடயம் தொடர்பாக மீண்டும் கலந்துரையாடவும் அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/trump-starmer-hold-key-discussion-on-strait-of-hormuz/">ட்ரம்ப் – ஸ்டார்மர் இடையே ஹார்முஸ் நீரிணை குறித்து முக்கிய கலந்துரையாடல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்கள் ஹர்முஸ் நீரிணை வழியாக ஈரான் அனுமதி?</title>
		<link>https://oruvan.com/will-iran-allow-indian-flagged-ships-to-pass-through-the-strait-of-hormuz/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 12 Mar 2026 08:37:22 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Hormuz]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[Iran War]]></category>
		<category><![CDATA[Strait of Hormuz]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=46534</guid>

					<description><![CDATA[<p>இந்தியக் கொடியுடன் எரிபொருள் ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு ஹர்முஸ் நீரிணை ஊடாக பயணிப்பதற்கு ஈரான் அனுமதி வழங்கியுள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்த வெளியிட்டுள்ளது. இந்திய தகவல்களை மேற்கோள் காட்டி ரொயிட்டஸ் செய்தி வெளியிட்டுள்ளது. எவ்வாறாயினும், வெளியே உள்ள ஈரானிய ஆதாரங்கள்அத்தகைய ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை என்று மறுத்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சகமும், டில்லியில் உள்ள ஈரானிய தூதரகமும் இந்த விடயம் தொடர்பில் உடனடியாக பதிலளிக்கவில்லை. மேலும், ஊடகங்களுடன் பேசுவதற்கு அங்கீகாரம் இல்லாததைக் காரணம் காட்டி, [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/will-iran-allow-indian-flagged-ships-to-pass-through-the-strait-of-hormuz/">இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்கள் ஹர்முஸ் நீரிணை வழியாக ஈரான் அனுமதி?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியக் கொடியுடன் எரிபொருள் ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு ஹர்முஸ் நீரிணை ஊடாக பயணிப்பதற்கு ஈரான் அனுமதி வழங்கியுள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்த வெளியிட்டுள்ளது.</p>
<p>இந்திய தகவல்களை மேற்கோள் காட்டி ரொயிட்டஸ் செய்தி வெளியிட்டுள்ளது.</p>
<p>எவ்வாறாயினும், வெளியே உள்ள ஈரானிய ஆதாரங்கள்அத்தகைய ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை என்று மறுத்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்திய வெளியுறவு அமைச்சகமும், டில்லியில் உள்ள ஈரானிய தூதரகமும் இந்த விடயம் தொடர்பில் உடனடியாக பதிலளிக்கவில்லை.</p>
<p>மேலும், ஊடகங்களுடன் பேசுவதற்கு அங்கீகாரம் இல்லாததைக் காரணம் காட்டி, இந்திய வட்டாரம் பெயர் குறிப்பிட மறுத்துள்ளதாக ரொயிட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மேற்கு இந்தியாவில் உள்ள காண்ட்லா துறைமுகத்திற்குச் சென்ற தாய்லாந்து கப்பல் நேற்று புதன்கிழமை ஹர்முஸ் நீரிணைப் பகுதியில் தாக்கப்பட்டது.</p>
<p>இந்த தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டம் தெரிவித்திருந்தது.</p>
<p>இந்த தாக்குதலை தொடர்ந்து வணிகக் கப்பல் போக்குவரத்து இராணுவத் தாக்குதல்களுக்கு இலக்காகக் கொள்ளப்படுவதை இந்தியா கண்டிக்கிறது&#8221; என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.</p>
<p>&#8220;மோதலின் ஆரம்ப கட்டத்தில் இதுபோன்ற பல தாக்குதல்களில் இந்திய குடிமக்கள் உட்பட விலைமதிப்பற்ற உயிர்கள் ஏற்கனவே இழக்கப்பட்டுள்ளன.</p>
<p>மேலும் தாக்குதல்களின் தீவிரமும் உயிரிழப்பும் அதிகரித்து வருவதாக&#8221; வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டிருந்தது.</p>
<p>பெப்ரவரி 28ஆம் திகதி முதல் இஸ்ரேலும் அமெரிக்காவும் போரை தொடங்கியதிலிருந்து, ஈரான் ஹர்முஸ் நீரிணை வழியாக பயணித்த 16 கப்பல்களைத் தாக்கியுள்ளது.</p>
<p>ஹர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதாலும், ஈரானின் தாக்குதல்கள் காரணமாகவும் கச்சா எண்ணெய் விலைகள் பீப்பாய்க்கு 200 டொலராக உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த விலை அதிகரிப்பானது தற்போதைய விலையை விட சுமார் இரு மடங்கு அதிகமாகும் என பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/will-iran-allow-indian-flagged-ships-to-pass-through-the-strait-of-hormuz/">இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்கள் ஹர்முஸ் நீரிணை வழியாக ஈரான் அனுமதி?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
