<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Gotabaya Rajapaksa Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/gotabaya-rajapaksa/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/gotabaya-rajapaksa/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Thu, 11 Dec 2025 03:07:43 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Gotabaya Rajapaksa Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/gotabaya-rajapaksa/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>யாழ்ப்பாணம் வர அச்சம் ஏன்? கோட்டாபயவிடம் நீதிமன்றம் கேள்வி</title>
		<link>https://oruvan.com/why-are-you-afraid-to-come-to-jaffna-court-questions-gotabaya/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 11 Dec 2025 03:01:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Court News]]></category>
		<category><![CDATA[Gotabaya Rajapaksa]]></category>
		<category><![CDATA[Jaffna Court]]></category>
		<category><![CDATA[Lalith and Kugan Case]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=40397</guid>

					<description><![CDATA[<p>கடந்த 2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோரின் வழக்கு விசாரணையில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அவர்கள் யாழ்ப்பாணம் வருவதில் உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து நியாயமான காரணங்களுடன் சத்தியக் கடதாசியை மன்றில் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று புதன் கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, கோட்டாபய ராஜபக்ச தனது சட்டத்தரணிகள் ஊடாக நிகழ்நிலை ஊடாகத் தோன்றி சாட்சியம் அளிக்க விண்ணப்பம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/why-are-you-afraid-to-come-to-jaffna-court-questions-gotabaya/">யாழ்ப்பாணம் வர அச்சம் ஏன்? கோட்டாபயவிடம் நீதிமன்றம் கேள்வி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கடந்த 2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோரின் வழக்கு விசாரணையில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அவர்கள் யாழ்ப்பாணம் வருவதில் உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து நியாயமான காரணங்களுடன் சத்தியக் கடதாசியை மன்றில் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>
<p>நேற்று புதன் கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, கோட்டாபய ராஜபக்ச தனது சட்டத்தரணிகள் ஊடாக நிகழ்நிலை ஊடாகத் தோன்றி சாட்சியம் அளிக்க விண்ணப்பம் செய்தார்.</p>
<p>இந்த விண்ணப்பத்தை அடுத்து, நீதவான், யாழ்ப்பாணம் வருகை தருவதில் உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் என்ன? என்பதனைத் தெளிவுபடுத்தும் சத்தியக் கடதாசியை மன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.</p>
<p>மேலும், வழக்கு விசாரணை எதிர்வரும் பெப்ரவரி 06ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p>
<p>2011 டிசம்பர் 10 அன்று யாழ்ப்பாணத்தில் நடத்தவிருந்த போராட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த லலித் மற்றும் குகன், அதற்கு முதல் நாள் ஆவரங்கால் பகுதியில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டனர்.</p>
<p>இவர்களின் உறவினர்கள் 2012இல் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தனர்.</p>
<p>கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், இந்தச் சம்பவம் தொடர்பான சாட்சிகளை விசாரிக்கும் பணி 2012 செப்டெம்பர் 19ஆம் திகதி யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் ஆரம்பமானது.</p>
<p>2017ஆம் ஆண்டு இந்த வழக்கின் சாட்சியாளர்கள் பட்டியலில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் பெயர் இணைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மன்றில் தோன்றி சாட்சியமளிக்குமாறு நீதிமன்று அவருக்கு உத்தரவிட்டது.</p>
<p>எனினும், பாதுகாப்புக் காரணங்களால் தன்னால் யாழ்ப்பாணம் வர முடியாது என கோட்டாபய ராஜபக்ச தொடர்ச்சியாகத் தெரிவித்து வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/why-are-you-afraid-to-come-to-jaffna-court-questions-gotabaya/">யாழ்ப்பாணம் வர அச்சம் ஏன்? கோட்டாபயவிடம் நீதிமன்றம் கேள்வி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தேசிய மக்கள் சக்தியால் ஏமாற்றப்பட்டதாக பலர் வருத்தப்படுகின்றனர் &#8211; நாமல் எம்.பி</title>
		<link>https://oruvan.com/many-people-regret-being-deceived-by-the-national-peoples-power-namal-mp/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 10 Jul 2025 08:19:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Gotabaya Rajapaksa]]></category>
		<category><![CDATA[Namal Rajapaksa]]></category>
		<category><![CDATA[NPP]]></category>
		<category><![CDATA[SLPP]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=26190</guid>

					<description><![CDATA[<p>தாம் ஆட்சியில் இருந்தபோது இருந்ததை விட இன்று மக்கள் அதிகமாக துன்பப்படுகிறார்கள் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜூலை ஒன்பதாம் திகதியை நினைவுகூர்ந்து நேற்று (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி நீக்கம் செய்யப்பட்டு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறுவப்பட்டதன் மூலம் தாங்கள் &#8216;ஏமாற்றப்பட்டதாக&#8217; வருத்தப்படுபவர்கள் பலர் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்படி, இளைஞர்கள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/many-people-regret-being-deceived-by-the-national-peoples-power-namal-mp/">தேசிய மக்கள் சக்தியால் ஏமாற்றப்பட்டதாக பலர் வருத்தப்படுகின்றனர் &#8211; நாமல் எம்.பி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தாம் ஆட்சியில் இருந்தபோது இருந்ததை விட இன்று மக்கள் அதிகமாக துன்பப்படுகிறார்கள் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p>
<p>ஜூலை ஒன்பதாம் திகதியை நினைவுகூர்ந்து நேற்று (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.</p>
<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி நீக்கம் செய்யப்பட்டு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறுவப்பட்டதன் மூலம் தாங்கள் &#8216;ஏமாற்றப்பட்டதாக&#8217; வருத்தப்படுபவர்கள் பலர் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>இதன்படி, இளைஞர்கள் நேர்மையான போராட்டங்களை நடத்தி இந்த நாட்டில் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்று நம்புவதாகக் கூறிய அவர், 88/89 காலத்தில் இருந்த அமைப்பைப் போன்ற, அதை விட பழமைவாதமான ஒரு அரசாங்கம் நிறுவப்பட்டதாகக் கூறினார்.</p>
<p>சர்வதேச நாணய நிதியத்திடம் &#8216;ஆம் ஐயா&#8217; என்று சொல்வதன் மூலம் தற்போதைய அரசாங்கம் எதையும் ஒப்புக்கொள்ளும் சூழ்நிலை இருப்பதாக நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/many-people-regret-being-deceived-by-the-national-peoples-power-namal-mp/">தேசிய மக்கள் சக்தியால் ஏமாற்றப்பட்டதாக பலர் வருத்தப்படுகின்றனர் &#8211; நாமல் எம்.பி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மறைந்த நடிகை மாலினி பொன்சேகாவுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த இறுதி அஞ்சலி</title>
		<link>https://oruvan.com/former-president-mahinda-rajapaksa-pays-last-respects-to-late-actress-malini-fonseka/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 25 May 2025 07:54:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Gotabaya Rajapaksa]]></category>
		<category><![CDATA[Mahinda Rajapaksa]]></category>
		<category><![CDATA[Malini Fonseka]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=21282</guid>

					<description><![CDATA[<p>மறைந்த பிரபல நடிகை மாலினி பொன்சேகாவுக்கு முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபய ராஜபக்ச ஆகியோர் இன்று (25) தங்களது இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரங்கணி மண்டபத்தில், மாலினி பொன்சேகாவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதிகள் இறுதி அஞ்சலி செலுத்தினர். மறைந்த மாலினி பொன்சேகாவின் உடல் இன்று (25) காலை பொது மக்களின் அஞ்சலிக்காக தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரங்கனி மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டது. [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/former-president-mahinda-rajapaksa-pays-last-respects-to-late-actress-malini-fonseka/">மறைந்த நடிகை மாலினி பொன்சேகாவுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த இறுதி அஞ்சலி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மறைந்த பிரபல நடிகை மாலினி பொன்சேகாவுக்கு முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபய ராஜபக்ச ஆகியோர் இன்று (25) தங்களது இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்</p>
<p>தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரங்கணி மண்டபத்தில், மாலினி பொன்சேகாவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதிகள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.</p>
<p>மறைந்த மாலினி பொன்சேகாவின் உடல் இன்று (25) காலை பொது மக்களின் அஞ்சலிக்காக தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரங்கனி மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டது.</p>
<p>மாலினி பொன்சேகாவின் இறுதிச் சடங்குகள் நாளை (26) பிற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அரசு மரியாதையுடன் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/former-president-mahinda-rajapaksa-pays-last-respects-to-late-actress-malini-fonseka/">மறைந்த நடிகை மாலினி பொன்சேகாவுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த இறுதி அஞ்சலி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அரசாங்கத்திடம் வாகனங்களை மீள கைளித்த முன்னாள் ஜனாதிபதிகள்</title>
		<link>https://oruvan.com/former-presidents-who-returned-vehicles-to-the-government/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 30 Apr 2025 04:23:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[Gotabaya Rajapaksa]]></category>
		<category><![CDATA[Mahinda Rajapaksa]]></category>
		<category><![CDATA[Ranil Wickremesinghe]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=18928</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதிகள் ஐந்து பேரில் நான்கு பேர் தற்போது தங்களது மேலதிக வாகனங்களை ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைத்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவைத் தவிர, மற்ற அனைத்து முன்னாள் ஜனாதிபதிகளும் வாகனங்களை ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைத்துள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் மூத்த செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தால் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட மூன்று வாகனங்களில் ஒன்றைத் திருப்பித் தருமாறு ஜனாதிபதியின் செயலாளரின் எழுத்துப்பூர்வ அறிவிப்பின்படி இந்த வாகனங்கள் முன்னாள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/former-presidents-who-returned-vehicles-to-the-government/">அரசாங்கத்திடம் வாகனங்களை மீள கைளித்த முன்னாள் ஜனாதிபதிகள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதிகள் ஐந்து பேரில் நான்கு பேர் தற்போது தங்களது மேலதிக வாகனங்களை ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைத்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவைத் தவிர, மற்ற அனைத்து முன்னாள் ஜனாதிபதிகளும் வாகனங்களை ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைத்துள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் மூத்த செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.</p>
<p>ஜனாதிபதி செயலகத்தால் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட மூன்று வாகனங்களில் ஒன்றைத் திருப்பித் தருமாறு ஜனாதிபதியின் செயலாளரின் எழுத்துப்பூர்வ அறிவிப்பின்படி இந்த வாகனங்கள் முன்னாள் ஜனாதிபதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p>
<p>ஏப்ரல் 23 ஆம் திகதிக்கு முன்னர் சம்பந்தப்பட்ட வாகனத்தை ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று ஏப்ரல் 19 ஆம் திகதி ஜனாதிபதி செயலாளர் கடிதம் அனுப்பியிருந்தார்.</p>
<p>முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக் ச மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு ஜனாதிபதி செயலாளரினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.</p>
<p>இதன்படி, மகிந்த ராஜபக்ச பயன்படுத்திய லேண்ட் க்ரஷர் V8 கார் 28 ஆம் திகதியும், மைத்திரிபால சிறிசேன பயன்படுத்திய லெக்ஸஸ் டிஃபென்டர் 24 ஆம் திகதியும், கோட்டாபய ராஜபக்ச பயன்படுத்திய லேண்ட் ரோவர் ஜீப் 23 ஆம் திகதியும், ரணில் விக்ரமசிங்க பயன்படுத்திய லேண்ட் க்ரஷர் பிராடோ 28 ஆம் திகதியும் ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக ஜனாதிபதி செயலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.</p>
<p>ஜனாதிபதி செயலகத்தின் மூத்த செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், முன்னாள் ஜனாதிபதிகள் வைத்திருக்கும் வாகனங்களின் எண்ணிக்கையும் இரண்டாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.</p>
<p>ஜனாதிபதி செயலகம் முன்னர் ஒரு அமைச்சரவை அமைச்சர் பயன்படுத்தக்கூடிய அரசு வாகனங்களின் எண்ணிக்கையை இரண்டாகக் கட்டுப்படுத்தும் சுற்றறிக்கையை வெளியிட்டிருந்தது.</p>
<p>The post <a href="https://oruvan.com/former-presidents-who-returned-vehicles-to-the-government/">அரசாங்கத்திடம் வாகனங்களை மீள கைளித்த முன்னாள் ஜனாதிபதிகள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஒன்றரை மணித்தியாலத்தின் பின் சிஐடியில் இருந்து வெளியேறினார் கோட்டாபய ராஜபக்ஷ</title>
		<link>https://oruvan.com/gotabaya-rajapaksa-left-the-cid-after-an-hour-and-a-half/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Jan 2025 09:17:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[after an hour]]></category>
		<category><![CDATA[and a half.]]></category>
		<category><![CDATA[Gotabaya Rajapaksa]]></category>
		<category><![CDATA[left the CID]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=7254</guid>

					<description><![CDATA[<p>இன்று முற்பகல் (17) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர்  அங்கிருந்து வௌியேறியுள்ளார். கதிர்காமம் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்திருந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி இன்று காலை திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார். இதன்போது, சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>The post <a href="https://oruvan.com/gotabaya-rajapaksa-left-the-cid-after-an-hour-and-a-half/">ஒன்றரை மணித்தியாலத்தின் பின் சிஐடியில் இருந்து வெளியேறினார் கோட்டாபய ராஜபக்ஷ</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இன்று முற்பகல் (17) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர்  அங்கிருந்து வௌியேறியுள்ளார்.</p>
<p>கதிர்காமம் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்திருந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி இன்று காலை திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார்.</p>
<p>இதன்போது, சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>The post <a href="https://oruvan.com/gotabaya-rajapaksa-left-the-cid-after-an-hour-and-a-half/">ஒன்றரை மணித்தியாலத்தின் பின் சிஐடியில் இருந்து வெளியேறினார் கோட்டாபய ராஜபக்ஷ</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
