<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>G.C.E. Ordinary Level examination Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/g-c-e-ordinary-level-examination/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/g-c-e-ordinary-level-examination/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Mon, 23 Feb 2026 11:44:09 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>G.C.E. Ordinary Level examination Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/g-c-e-ordinary-level-examination/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>கணித பரீட்சை எழுதிய 81 வயது முதியவர்! ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்களுக்கு சவால்</title>
		<link>https://oruvan.com/81-year-old-man-who-wrote-math-exam-challenges-the-president-prime-minister-and-others/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 23 Feb 2026 11:44:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[G.C.E. Ordinary Level examination]]></category>
		<category><![CDATA[O/L examination]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=45606</guid>

					<description><![CDATA[<p>கிரிபெரியா பகுதியைச் சேர்ந்த 81 வயதான நிமல் சில்வா, க.பொ.த சாதாரண தர (சா/த) கணிதப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார். தனிப்பட்ட சாதனைக்கு அல்லாமல் இலங்கையின், தேசிய கல்வி முறையின் நிலை குறித்து அரசாங்கத்திற்கு தெளிவுப்படுத்தும் நோக்கில் அவர் க.பொ.த சாதாரண தர (சா/த) கணிதப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், 2025 ஆம் ஆண்டுக்கான கணித வினாத்தாள் பாரிய பிழைகளைக் கொண்டுள்ளதாகக் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வினாத்தாளில் ஒரேயொரு உண்மையான எண்கணித கேள்வி மட்டுமே [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/81-year-old-man-who-wrote-math-exam-challenges-the-president-prime-minister-and-others/">கணித பரீட்சை எழுதிய 81 வயது முதியவர்! ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்களுக்கு சவால்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கிரிபெரியா பகுதியைச் சேர்ந்த 81 வயதான நிமல் சில்வா, க.பொ.த சாதாரண தர (சா/த) கணிதப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.</p>
<p>தனிப்பட்ட சாதனைக்கு அல்லாமல் இலங்கையின், தேசிய கல்வி முறையின் நிலை குறித்து அரசாங்கத்திற்கு தெளிவுப்படுத்தும் நோக்கில் அவர் க.பொ.த சாதாரண தர (சா/த) கணிதப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.</p>
<p>இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், 2025 ஆம் ஆண்டுக்கான கணித வினாத்தாள் பாரிய பிழைகளைக் கொண்டுள்ளதாகக் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>இந்த வினாத்தாளில் ஒரேயொரு உண்மையான எண்கணித கேள்வி மட்டுமே இருந்ததாகவும், ஏனைய கேள்விகள் பிழைகளால் நிறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இந்த வினாத்தாள் மாணவர்களின் அறிவைச் சோதிப்பதை விட, அவர்களைத் தோல்வியடையச் செய்யும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கல்வி உயர் அதிகாரிகளுக்கு நான் சவால் விடுகிறேன். உங்களால் இந்த வினாத்தாளுக்கு விடையளிக்க முடியுமா எனப் பாருங்கள் எனவும் அவர் சவால் விடுத்துள்ளார்.</p>
<p>கடந்த காலங்களில் இருந்ததைப் போல எண்கணிதம், இயற்கணிதம் மற்றும் வடிவியல் போன்ற பாடங்கள் தனித்தனியாக ஆழமாகக் கற்பிக்கப்படுவதில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.</p>
<p>கணித அறிவின் வீழ்ச்சியானது மாணவர்களிடையே தர்க்கரீதியான சிந்தனையைக் குறைப்பதாகவும், இதுவே நாட்டில் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் பாவனை அதிகரிக்கக் காரணம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>இளம் பிள்ளைகள் மீதான கல்வி அழுத்தத்தைக் குறைக்க ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை ரத்து செய்ய வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக ஒழுக்க விழுமியங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p>
<p>கிராமப்புற பாடசாலைகளில் நவீன ஆய்வுகூட வசதிகளை மேம்படுத்துவதுடன், ஆசிரியர் நியமனங்களில் கடுமையான தரக்கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>2025 ஆம் ஆண்டு கணித வினாத்தாளில் தான் கண்டறிந்த தொழில்நுட்ப ரீதியான பிழைகள் குறித்த விரிவான அறிக்கை ஒன்றைத் தயாரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.</p>
<p>இந்நிலையில், அதனை பரீட்சை திணைக்களம் மற்றும் பிரதமரின் அலுவலகத்திற்குச் சமர்ப்பிக்க உள்ளதாகவும் நிமல் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/81-year-old-man-who-wrote-math-exam-challenges-the-president-prime-minister-and-others/">கணித பரீட்சை எழுதிய 81 வயது முதியவர்! ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்களுக்கு சவால்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் &#8211; 13,392 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் &#8216;ஏ&#8217; சித்தி</title>
		<link>https://oruvan.com/ordinary-level-examination-results-13392-students-secured-a-in-all-nine-subjects/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 11 Jul 2025 04:40:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[G.C.E. Ordinary Level (O/L) examination]]></category>
		<category><![CDATA[G.C.E. Ordinary Level examination]]></category>
		<category><![CDATA[Indika Kumari Liyanage]]></category>
		<category><![CDATA[O/L examination]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=26255</guid>

					<description><![CDATA[<p>2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகளின்படி, 237,026 மாணவர்கள் உயர் தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் தொடர்பாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தில் இன்று (11) காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். இந்த ஆண்டு பரீட்சை எழுதிய மாணவர்களில் 73.45 வீதம் பேர் உயர் தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர். அனைத்துப் பாடங்களிலும் 9 [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ordinary-level-examination-results-13392-students-secured-a-in-all-nine-subjects/">சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் &#8211; 13,392 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் &#8216;ஏ&#8217; சித்தி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகளின்படி, 237,026 மாணவர்கள் உயர் தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.</p>
<p>சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் தொடர்பாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தில் இன்று (11) காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.</p>
<p>இந்த ஆண்டு பரீட்சை எழுதிய மாணவர்களில் 73.45 வீதம் பேர் உயர் தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர். அனைத்துப் பாடங்களிலும் 9 ஏ சித்திகளையும் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 13,392 எனவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.</p>
<p>இது மொத்த தேர்ச்சி சதவீதத்தில் 4.15 வீதம் ஆகும். அனைத்துப் பாடங்களிலும் சித்திபெறாத மாணவர்களில் 2.34 சதவீதம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>இதற்கிடையில், மாகாண ரீதியில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களின் அடிப்படையில் தென் மாகாணம் முதலிடம் பிடித்துள்ளதாகவும், அங்கு தேர்ச்சி வீதம் 75.64 ஆக பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>மாகாண வாரியாக மாணவர்கள் தேர்ச்சி பெற்ற சதவீதம்</p>
<p>மேற்கு &#8211; 74.47 வீதம்</p>
<p>மத்திய &#8211; 73.91 வீதம்</p>
<p>தெற்கு &#8211; 75.64 வீதம்</p>
<p>வடக்கு &#8211; 69.86 வீதம்</p>
<p>கிழக்கு &#8211; 74.26 வீதம்</p>
<p>வடமேற்கு &#8211; 71.47 வீதம்</p>
<p>வட மத்திய &#8211; 70.24 வீதம்</p>
<p>ஊவா &#8211; 73.14 வீதம்</p>
<p>சபரகமுவ &#8211; 73.44 வீதம்</p>
<p>இதே நேரத்தில், கணித பாடத்தில் 69.07 வீத மாணவர்களும், அறிவியல் பாடத்தில் 71.06 வீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.</p>
<p>73.82 வீத மாணவர்கள் ஆங்கில பாடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>பாடங்களின் அடிப்படையில் தேர்ச்சி சதவீதம்</p>
<p>பௌத்தம் 83.21 வீதம்</p>
<p>சைவநெறி 82.96 வீதம்</p>
<p>கத்தோலிக்கம் 90.22 வீதம்</p>
<p>கிறிஸ்தவம் 91.49 வீதம்</p>
<p>இஸ்லாமியம் 85.45 வீதம்</p>
<p>ஆங்கிலம் 73.82 வீதம்</p>
<p>சிங்கள மொழி மற்றும் இலக்கியம் 87.73 வீதம்</p>
<p>தமிழ் மொழி மற்றும் இலக்கியம் 87.03 வீதம்</p>
<p>வரலாறு 82.17 வீதம்</p>
<p>அறிவியல் 71.06 வீதம்</p>
<p>கணிதம் 69.07 வீதம்</p>
<p>The post <a href="https://oruvan.com/ordinary-level-examination-results-13392-students-secured-a-in-all-nine-subjects/">சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் &#8211; 13,392 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் &#8216;ஏ&#8217; சித்தி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நாளை சாதாரண தரப் பரீட்சைகள் ஆரம்பம் &#8211; பரீட்சைகள் ஆணையாளரின் விசேட அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/ordinary-level-examinations-to-commence-tomorrow-special-announcement-from-the-commissioner-of-examinations/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 16 Mar 2025 10:27:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Examination]]></category>
		<category><![CDATA[G.C.E. Ordinary Level (O/L) examination]]></category>
		<category><![CDATA[G.C.E. Ordinary Level examination]]></category>
		<category><![CDATA[O/L examination]]></category>
		<category><![CDATA[Ordinary Level Examinations]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=14713</guid>

					<description><![CDATA[<p>நாளை ஆரம்பமாகவுள்ள 2024 (2025) க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு 474,147 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார். இவ்வாறு விண்ணப்பதாரர்களில் 398,182பாடசாலை பரீட்சார்த்திகளும் 75,968 தனியார் பரீட்சார்த்திகளும் உள்ளடங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்படி, பரீட்சை மண்டபத்திற்கு முன்கூட்டியே வருகை தருமாறும், தேவையற்ற பொருட்களை கொண்டு வருவதைத் தவிர்க்குமாறு பரீட்சார்த்திகளிடம் அவர் சிறப்பு வேண்டுகோள் விடுத்தார். இந்த அறிவுறுத்தல்களை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ordinary-level-examinations-to-commence-tomorrow-special-announcement-from-the-commissioner-of-examinations/">நாளை சாதாரண தரப் பரீட்சைகள் ஆரம்பம் &#8211; பரீட்சைகள் ஆணையாளரின் விசேட அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாளை ஆரம்பமாகவுள்ள 2024 (2025) க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு 474,147 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார்.</p>
<p>இவ்வாறு விண்ணப்பதாரர்களில் 398,182பாடசாலை பரீட்சார்த்திகளும் 75,968 தனியார் பரீட்சார்த்திகளும் உள்ளடங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>இன்று (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இதன்படி, பரீட்சை மண்டபத்திற்கு முன்கூட்டியே வருகை தருமாறும், தேவையற்ற பொருட்களை கொண்டு வருவதைத் தவிர்க்குமாறு பரீட்சார்த்திகளிடம் அவர் சிறப்பு வேண்டுகோள் விடுத்தார்.</p>
<p>இந்த அறிவுறுத்தல்களை மீறுவது பரீட்சை குற்றமாகக் கருதப்படும் என்றும், ஐந்து ஆண்டுகள் வரை பரீட்சைகள் எழுதுவதில் இருந்து தடை விதிக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p>
<p>“வடக்குப் பகுதிகள் உட்பட நாடு முழுவதும் 3,663 பரீட்சை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஒவ்வொரு பரீட்சார்த்தியும் தங்கள் பரீட்சை மையத்தை எளிதாக அணுக முடியும் என்பதை உறுதி செய்துள்ளோம்.</p>
<p>மாணவர்களின் வசதிக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.</p>
<p>இரத்மலானை, தங்காலை, மாத்தறை, சிலாபம் மற்றும் சிறப்பு கல்வி பாடசாலைகளில் சிறப்பு பரீட்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>கூடுதலாக, கொழும்பில் உள்ள புதிய மெகசின் சிறைச்சாலை மற்றும் வட்டரேகாவில் உள்ள சுனீதா வித்யாலயம் ஆகியவற்றில் கைதிகள் மற்றும் மறுவாழ்வு பெறும் பரீட்சாத்திகளுக்கு பரீட்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.</p>
<p>மேலும், மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையிலும் ஒரு பரீட்சை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.”</p>
<p>நாளை தேர்வு நடைபெற உள்ளதாகவும், பரீட்சைகள் திணைக்களம் இன்று திருத்தங்களுக்காக திறந்திருப்பதால், மாணவர்கள் தங்கள் நுழைவுச் சீட்டுகளை மதிப்பாய்வு செய்து ஏதேனும் சிக்கல்களை நிவர்த்தி செய்யுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>தனியார் பரீட்சாத்திகள் நுழைவுச் சீட்டில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இணங்கத் தவறினால் தேர்வு மையத்தில் சிக்கல்கள் ஏற்படலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.</p>
<p>&#8220;கூடுதலாக, ஒவ்வொரு தேர்வரும் தேர்வு மையத்தில் செல்லுபடியாகும் அடையாள ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும். ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்களில் தேசிய அடையாள அட்டை (NIC), கடவுச்சீட்டு அல்லது செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம் ஆகியவை அடங்கும்.</p>
<p>பரீட்சாத்திகளிடம் இந்த அடையாள ஆவணங்களில் ஒன்று இல்லையென்றால், அவர்கள் தேர்வு கண்காணிப்பாளர்களைத் தொடர்பு கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் வழிகாட்டுதல்களை வழங்குமாறு நாங்கள் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.</p>
<p>இருப்பினும், தேவையான அடையாள சரிபார்ப்பை முடித்த பின்னரே முடிவுகள் வெளியிடப்படும்,&#8221; என்று அவர் மேலும் கூறினார். அத்தியாவசியப் பொருட்களைத் தவிர வேறு எந்தப் பொருட்களையும் பரீட்சை மையங்களுக்கு கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.</p>
<p>பரீட்சாத்திகள் பேனா, பென்சில் மற்றும் தண்ணீர் போத்தல் மட்டுமே கொண்டு வர அனுமதிக்கப்படுகிறார்கள். கையடக்க தொலைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளன.</p>
<p>மேலும் அவற்றை வைத்திருப்பது கடுமையான நடவடிக்கைக்கு வழிவகுக்கும், இவ்வாறு சாதனங்களை கொண்டு வரும் நபர்கள் ஐந்து ஆண்டுகள் பரீட்சைகள் எழுதுவதில் இருந்து தடை விதிக்கப்படலாம்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/ordinary-level-examinations-to-commence-tomorrow-special-announcement-from-the-commissioner-of-examinations/">நாளை சாதாரண தரப் பரீட்சைகள் ஆரம்பம் &#8211; பரீட்சைகள் ஆணையாளரின் விசேட அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
