<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Fuel distributors Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/fuel-distributors/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/fuel-distributors/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Mon, 02 Mar 2026 11:51:34 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Fuel distributors Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/fuel-distributors/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>எரிபொருள் வரிசை தொடர்ந்தால் மீளவும் QR குறியீடு அறிமுகப்படுத்த கட்டாயம் ஏற்படும் &#8211; அரசாங்கம் எச்சரிக்கை</title>
		<link>https://oruvan.com/if-fuel-queues-continue-qr-codes-will-have-to-be-reintroduced-government-warns/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 02 Mar 2026 07:07:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Fuel crisis In Sri Lanka]]></category>
		<category><![CDATA[Fuel distributors]]></category>
		<category><![CDATA[Iran War]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=46010</guid>

					<description><![CDATA[<p>அச்சம் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொது மக்கள் வரிசையில் நின்று எரிபொருள் வாங்கும் செயற்பாடு தொடர்ந்தால் மீளவும் QR குறியீடு அறிமுகப்படுத்த கட்டாயம் ஏற்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. எரிசக்தி பிரதி அமைச்சர் அக்ரம் இலியாஸ் இதனை தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருள் பெற்று வருகின்றனர். இதனால் செயற்கையாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நிலை நீடித்தால் மீளவும் QR [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/if-fuel-queues-continue-qr-codes-will-have-to-be-reintroduced-government-warns/">எரிபொருள் வரிசை தொடர்ந்தால் மீளவும் QR குறியீடு அறிமுகப்படுத்த கட்டாயம் ஏற்படும் &#8211; அரசாங்கம் எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அச்சம் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொது மக்கள் வரிசையில் நின்று எரிபொருள் வாங்கும் செயற்பாடு தொடர்ந்தால் மீளவும் QR குறியீடு அறிமுகப்படுத்த கட்டாயம் ஏற்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p>
<p>எரிசக்தி பிரதி அமைச்சர் அக்ரம் இலியாஸ் இதனை தெரிவித்துள்ளார்.</p>
<p>கடந்த இரண்டு நாட்களாக நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருள் பெற்று வருகின்றனர்.</p>
<p>இதனால் செயற்கையாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நிலை நீடித்தால் மீளவும் QR குறியீடு அறிமுகப்படுத்த கட்டாயம் ஏற்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>இலங்கை தனது எரிபொருளை முதன்மையாக மத்திய கிழக்கு பிராந்தியங்களிலிருந்து அல்லாமல் சிங்கப்பூர், இந்தியா, மலேசியா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளிலிருந்து பெறுகிறது என்று அமைச்சர் விளக்கியுள்ளார்.</p>
<p>தொடர்ந்து பீதியுடன் எரிபொருட்களை வாங்குவது பவுசர் லொரிகள் மூலம் மேற்கொள்ளப்படும் விநியோக செயல்முறையை சீர்குலைக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.</p>
<p>மேலும் சீரான விநியோகத்தை உறுதி செய்ய அரசாங்கத்திற்கு ஒத்துழைக்குமாறு பொதுமக்களிடம்  அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p>
<p>இதற்கிடையில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) இன்று போயா விடுமுறை நாளாக இருந்தபோதிலும், அதன் வழக்கமான செயற்பாடுகளில் இருந்து விலகி, எரிபொருள் வழங்குவதாக அறிவித்தது.</p>
<p>தற்போதைய தேவை அதிகரிப்பு காரணமாக எரிபொருள் நிலையங்களில் அவற்றின் இருப்பு தீர்ந்து மூடப்பட்டால், எரிபொருள் பற்றாக்குறை என்ற தவறான எண்ணம் உருவாகும்.</p>
<p>இதனால் ஏற்படும் பீதியை தடுத்து நிலைமையை சீர் செய்ய இந்த முடிவும் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/if-fuel-queues-continue-qr-codes-will-have-to-be-reintroduced-government-warns/">எரிபொருள் வரிசை தொடர்ந்தால் மீளவும் QR குறியீடு அறிமுகப்படுத்த கட்டாயம் ஏற்படும் &#8211; அரசாங்கம் எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>புதிய சூத்திரத்துடன் எரிபொருள் விநியோகஸ்தர்கள் உடன்பாடு &#8211; அமைச்சரவை தீர்மானம்</title>
		<link>https://oruvan.com/fuel-distributors-agree-to-new-formula-cabinet-resolution/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Mar 2025 07:11:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[agree to new formula]]></category>
		<category><![CDATA[Cabinet resolution]]></category>
		<category><![CDATA[Fuel distributors]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=13128</guid>

					<description><![CDATA[<p>இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் முன்வைத்த புதிய சூத்திரத்துடன் எரிபொருள் விநியோகஸ்தர்கள் தங்கள் உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (04) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற அவர், புதிய சூத்திரம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், விநியோகஸ்தர்களின் முன்மொழிவு குறித்து கலந்துரையாட 18 ஆம் திகதி மற்றொரு கலந்துரையாடல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, &#8220;பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிமுகப்படுத்திய சூத்திரத்தை செயல்படுத்த [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/fuel-distributors-agree-to-new-formula-cabinet-resolution/">புதிய சூத்திரத்துடன் எரிபொருள் விநியோகஸ்தர்கள் உடன்பாடு &#8211; அமைச்சரவை தீர்மானம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் முன்வைத்த புதிய சூத்திரத்துடன் எரிபொருள் விநியோகஸ்தர்கள் தங்கள் உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p>
<p>இன்று (04) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற அவர், புதிய சூத்திரம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், விநியோகஸ்தர்களின் முன்மொழிவு குறித்து கலந்துரையாட 18 ஆம் திகதி மற்றொரு கலந்துரையாடல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.</p>
<p>இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,</p>
<p>&#8220;பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிமுகப்படுத்திய சூத்திரத்தை செயல்படுத்த ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.</p>
<p>அந்த ஒப்பந்தத்தின்படி பணிகள் தொடரும்.</p>
<p>இதற்கிடையில், எரிபொருள் வாங்குபவர்களும் தங்களுக்கு பொருத்தமான பல பிரச்சினைகளை முன்வைத்துள்ளனர்.</p>
<p>அந்தப் பிரச்சினைகளைப் பற்றி கலந்துரையாட, புதிய சூத்திரம் செயல்படுத்தப்படும் போது விநியோகஸ்தர்களின் முன்மொழிவுகளைக் கேட்க 18 ஆம் திகதி காலை மீண்டும் ஒரு கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. எனவே, எரிபொருள் பிரச்சினை இல்லை.&#8221; என தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/fuel-distributors-agree-to-new-formula-cabinet-resolution/">புதிய சூத்திரத்துடன் எரிபொருள் விநியோகஸ்தர்கள் உடன்பாடு &#8211; அமைச்சரவை தீர்மானம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
