<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Fuel crisis In Sri Lanka Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/fuel-crisis-in-sri-lanka/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/fuel-crisis-in-sri-lanka/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Wed, 01 Apr 2026 10:05:06 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Fuel crisis In Sri Lanka Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/fuel-crisis-in-sri-lanka/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ரஷ்யாவிலிருந்து எரிபொருள் விநியோகம் உறுதியானது &#8211; பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/fuel-supply-from-russia-confirmed-petroleum-corporation-announces/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Apr 2026 10:05:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CPC]]></category>
		<category><![CDATA[Fuel crisis]]></category>
		<category><![CDATA[Fuel crisis In Sri Lanka]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=47798</guid>

					<description><![CDATA[<p>ரஷ்யாவிலிருந்து எரிபொருள் விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாட்டின் இரு எரிபொருள் இறக்கும் இடங்களிலும் பணிச்சுமை அதிகமாக இருப்பதால், கப்பல்களைக் கொண்டு வருவதில் தாமதம் ஏற்படுவதாக அதன் நிர்வாக இயக்குனர் மயூர நெத்திகுமார தெரிவித்தார். நாங்கள் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தற்போதைய நிலையில், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான எண்ணெய் கப்பல்கள் பெரும்பாலும் உறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும், இலங்கையில் எண்ணெய் இறக்குவதற்கு இரண்டு முக்கிய இடங்கள் மட்டுமே உள்ளன. ரஷ்ய நிறுவனம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/fuel-supply-from-russia-confirmed-petroleum-corporation-announces/">ரஷ்யாவிலிருந்து எரிபொருள் விநியோகம் உறுதியானது &#8211; பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ரஷ்யாவிலிருந்து எரிபொருள் விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.</p>
<p>நாட்டின் இரு எரிபொருள் இறக்கும் இடங்களிலும் பணிச்சுமை அதிகமாக இருப்பதால், கப்பல்களைக் கொண்டு வருவதில் தாமதம் ஏற்படுவதாக அதன் நிர்வாக இயக்குனர் மயூர நெத்திகுமார தெரிவித்தார்.</p>
<p>நாங்கள் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தற்போதைய நிலையில், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான எண்ணெய் கப்பல்கள் பெரும்பாலும் உறுதி செய்யப்பட்டுள்ளன.</p>
<p>மேலும், இலங்கையில் எண்ணெய் இறக்குவதற்கு இரண்டு முக்கிய இடங்கள் மட்டுமே உள்ளன.</p>
<p>ரஷ்ய நிறுவனம் வழங்கும் எண்ணெய் கப்பல் ஒன்று அத்தகைய இடத்திற்கு வந்து சேர்வதற்கான திகதிகள் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள் குறித்து தற்போது விவாதிக்கப்பட்டு வருகிறது.</p>
<p>ஆனால், எரிபொருள் கொள்வனவு செய்ய முடியும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>மேலும் ஒரு டீசல் கப்பல் நாளை இலங்கைக்கு வரவிருக்கிறது. அது 32,000 மெட்ரிக் தொன் டீசலையும் 5,000 மெட்ரிக் தொன் விமான எரிபொருளையும் ஏற்றி வரும்.</p>
<p>ஆறு மற்றும் ஏழாம் திகதிகளில் மேலும் இரண்டு டீசல் கப்பல்கள் வரவிருக்கின்றன. இதன் மூலம், ஏப்ரல் முதல் வாரத்தில் இலங்கைக்கு வரும் என நாம் எதிர்பார்த்திருந்த அனைத்துக் கப்பல்களும் வந்து சேரும்.</p>
<p>இதன் மூலம் மே மாதம் இறுதி வரை போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது. இருப்பினும், எரிபொருள் விலை அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் அதை கவனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/fuel-supply-from-russia-confirmed-petroleum-corporation-announces/">ரஷ்யாவிலிருந்து எரிபொருள் விநியோகம் உறுதியானது &#8211; பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>திருகோணமலை எண்ணெய் குதங்களை துரிதமாகப் புனரமைக்க தீர்மானம்</title>
		<link>https://oruvan.com/resolution-to-expedite-reconstruction-of-trincomalee-oil-fields/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 23 Mar 2026 07:00:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Fuel crisis]]></category>
		<category><![CDATA[Fuel crisis In Sri Lanka]]></category>
		<category><![CDATA[Trincomale]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=47252</guid>

					<description><![CDATA[<p>இலங்கையின் தற்போதைய எரிசக்தி நெருக்கடிக்கு நீண்டகால தீர்வாக, திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஒத்துழைப்புடன் துரிதமாகப் புனரமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது குறித்து &#8216;த இந்து&#8217; நாளிதழுக்கு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கருத்து வெளியிட்டுள்ளார். திருகோணமலையை ஒரு பிராந்திய எரிசக்தி மையமாக மாற்றுவதன் மூலம், நாட்டின் எரிபொருள் விநியோகச் சவால்களுக்கு நிரந்தர தீர்வை எட்ட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2025 ஏப்ரலில் இலங்கை, இந்தியா மற்றும் ஐக்கிய [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/resolution-to-expedite-reconstruction-of-trincomalee-oil-fields/">திருகோணமலை எண்ணெய் குதங்களை துரிதமாகப் புனரமைக்க தீர்மானம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையின் தற்போதைய எரிசக்தி நெருக்கடிக்கு நீண்டகால தீர்வாக, திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஒத்துழைப்புடன் துரிதமாகப் புனரமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.</p>
<p>இது குறித்து &#8216;த இந்து&#8217; நாளிதழுக்கு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கருத்து வெளியிட்டுள்ளார்.</p>
<p>திருகோணமலையை ஒரு பிராந்திய எரிசக்தி மையமாக மாற்றுவதன் மூலம், நாட்டின் எரிபொருள் விநியோகச் சவால்களுக்கு நிரந்தர தீர்வை எட்ட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>கடந்த 2025 ஏப்ரலில் இலங்கை, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கிடையே கையெழுத்திடப்பட்ட முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.</p>
<p>முன்னர் இத்திட்டத்தில் இந்தியத் தலையீட்டைத் தேசிய மக்கள் சக்தி எதிர்த்து வந்த போதிலும், தற்போதைய உலகளாவிய போர்ச் சூழல் மற்றும் விநியோகப் பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, இந்த விவகாரத்தில் கொள்கை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>தற்போது எரிசக்தி அமைச்சினால் இதற்கான தொழில்நுட்ப அம்சங்கள் மீளாய்வு செய்யப்பட்டு வருவதுடன், விரைவில் கேள்விப்பத்திரங்கள் கோரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>The post <a href="https://oruvan.com/resolution-to-expedite-reconstruction-of-trincomalee-oil-fields/">திருகோணமலை எண்ணெய் குதங்களை துரிதமாகப் புனரமைக்க தீர்மானம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சேவையில் இருந்து விலகிய பேருந்து சங்கங்கள்</title>
		<link>https://oruvan.com/bus-associations-that-have-withdrawn-from-service/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 23 Mar 2026 06:56:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Fuel crisis In Sri Lanka]]></category>
		<category><![CDATA[Fuel QR]]></category>
		<category><![CDATA[Fuel shortage -]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=47250</guid>

					<description><![CDATA[<p>எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, பேருந்து கட்டணத் திருத்தம் கோரி சில தனியார் பேருந்து சங்கங்கள் இன்று காலை முதல் சேவையிலிருந்து விலகியுள்ளன. இதனால் இன்று காலை பிரதான பேருந்து நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டதோடு, அலுவலகம் செல்வோர் உள்ளிட்ட பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். கடந்த 21ஆம் திகதி நள்ளிரவு முதல் டீசல் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில், அதற்கேற்ப பேருந்து கட்டணங்களை உயர்த்துமாறு சங்கங்கள் விடுத்த கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. எவ்வாறாயினும், எரிபொருள் விலை உயர்வு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/bus-associations-that-have-withdrawn-from-service/">சேவையில் இருந்து விலகிய பேருந்து சங்கங்கள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, பேருந்து கட்டணத் திருத்தம் கோரி சில தனியார் பேருந்து சங்கங்கள் இன்று காலை முதல் சேவையிலிருந்து விலகியுள்ளன.</p>
<p>இதனால் இன்று காலை பிரதான பேருந்து நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டதோடு, அலுவலகம் செல்வோர் உள்ளிட்ட பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.</p>
<p>கடந்த 21ஆம் திகதி நள்ளிரவு முதல் டீசல் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில், அதற்கேற்ப பேருந்து கட்டணங்களை உயர்த்துமாறு சங்கங்கள் விடுத்த கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.</p>
<p>எவ்வாறாயினும், எரிபொருள் விலை உயர்வு காரணமாக பேருந்து கட்டண சூத்திரத்தின்படி, தற்போதைய கட்டணத்தில் 10 சதவீதத்திற்கும் அதிகமான தாக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.</p>
<p>இதற்கான அமைச்சரவைப் பத்திரம் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், புதிய கட்டணங்கள் இன்று மாலைக்குள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.</p>
<p>இருப்பினும், உத்தியோகபூர்வ அறிவிப்பு வரும் வரை பேருந்துகளை இயக்கப் போவதில்லை எனவும், பழைய கட்டணத்தில் எரிபொருள் மற்றும் பராமரிப்புச் செலவுகளை ஈடுகட்ட முடியாது எனவும் பேருந்து சங்கப் பிரதிநிதிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.</p>
<p>இதேவேளை, முச்சக்கர வண்டிகளின் முதல் கிலோமீற்றருக்கான கட்டணத்தை 20 ரூபாவினால் அதிகரிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.</p>
<p>Uber மற்றும் PickMe ஆகிய நிறுவனங்களும் தமது சேவைகளைப் பராமரிக்க விசேட எரிபொருள் ஒதுக்கீடு அவசியம் என அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன.</p>
<p>அமைச்சரவையின் இன்றைய தீர்மானத்தைத் தொடர்ந்தே, நாட்டின் போக்குவரத்துத் துறையின் அடுத்தகட்ட நகர்வுகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>The post <a href="https://oruvan.com/bus-associations-that-have-withdrawn-from-service/">சேவையில் இருந்து விலகிய பேருந்து சங்கங்கள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நாளை மற்றும் நாளை மறுநாள் எரிபொருள் விநியோகம் தொடர்பான அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/announcement-regarding-fuel-supply-for-tomorrow-and-the-day-after-tomorrow/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Mar 2026 08:17:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CPC]]></category>
		<category><![CDATA[cpc fuel prices]]></category>
		<category><![CDATA[Fuel crisis]]></category>
		<category><![CDATA[Fuel crisis In Sri Lanka]]></category>
		<category><![CDATA[Iran War]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=47109</guid>

					<description><![CDATA[<p>நாளை மற்றும் நாளை மறுதினம் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் விநியோகம் வழக்கம் போல் நடைபெறாது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மே மாதம் வரை எரிபொருள் கையிருப்பு இருப்பதாக  கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குனர் மயூர நெத்திகுமரகே தெரிவித்துள்ளார், நுகர்வோருக்குத் தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகம் செய்வதற்காகப் போதுமான இருப்புகளை கொள்முதல் செய்வதன் மூலம், எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் செயல்பாட்டை எளிதாக்கும் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதன்படி, காசோலைகளை முதல் நாளே முன்பதிவு செய்யும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/announcement-regarding-fuel-supply-for-tomorrow-and-the-day-after-tomorrow/">நாளை மற்றும் நாளை மறுநாள் எரிபொருள் விநியோகம் தொடர்பான அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாளை மற்றும் நாளை மறுதினம் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் விநியோகம் வழக்கம் போல் நடைபெறாது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.</p>
<p>இந்நிலையில், மே மாதம் வரை எரிபொருள் கையிருப்பு இருப்பதாக  கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குனர் மயூர நெத்திகுமரகே தெரிவித்துள்ளார்,</p>
<p>நுகர்வோருக்குத் தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகம் செய்வதற்காகப் போதுமான இருப்புகளை கொள்முதல் செய்வதன் மூலம், எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் செயல்பாட்டை எளிதாக்கும் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.</p>
<p>இதன்படி, காசோலைகளை முதல் நாளே முன்பதிவு செய்யும் பிரிவிற்கோ அல்லது மொத்த முனையத்திற்கோ வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், எரிபொருள் பெற்றுக்கொள்வதில் ஏற்படக்கூடிய தாமதங்களைத் தவிர்க்க முடியும் என கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.</p>
<p>இதேவேளை, தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமையில் இடம்பெற்றுள்ள பாரிய அளவிலான QR குறியீடு மோசடிகள் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p>
<p>டிஜிட்டல் பொருளாதார அமைச்சால் உத்தியோகபூர்வமாக இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p>
<p>நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை தொடர்ந்து கடந்த 15ஆம் திகதி முதல் QR குறியீடு முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டது.</p>
<p>QR முறைமையில் மேற்கொள்ளப்பட்ட அண்மைக்கால இற்றைப்படுத்தல்களைப் பயன்படுத்தி, முறையற்ற வகையில் QR குறியீடுகளை உருவாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/announcement-regarding-fuel-supply-for-tomorrow-and-the-day-after-tomorrow/">நாளை மற்றும் நாளை மறுநாள் எரிபொருள் விநியோகம் தொடர்பான அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>எரிபொருளுக்காக பயன்பாட்டில் இல்லாத வாகனங்கள் கியூஆர் குறியீடுகளைப் பயன்படுத்துமா?</title>
		<link>https://oruvan.com/will-vehicles-that-are-not-in-use-for-fuel-use-qr-codes/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 18 Mar 2026 04:49:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Fuel crisis]]></category>
		<category><![CDATA[Fuel crisis In Sri Lanka]]></category>
		<category><![CDATA[Iran War]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=46977</guid>

					<description><![CDATA[<p>2022ஆம் ஆண்டில் கியூஆர் (QR) திட்டத்தின் கீழ் எரிபொருள் பெறுவதற்காக 65 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், நாட்டில் பதிவுசெய்யப்பட்ட 84 லட்சம் வாகனங்களில் 57 லட்சம் வாகனங்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன என்று மோட்டார் வாகனத் துறை தெரிவித்துள்ளது. கியூஆர் திட்டத்தின் கீழ் எரிபொருள் பெறுவதற்காக ஐந்து முதல் பத்து லட்சம் பேர் வரை போலியான தரவுகளின் அடிப்படையில் கியூஆர் ஒதுக்கீட்டைப் பெற்று வருவதாகச் சந்தேகம் நிலவுவதாக மோட்டார் வாகனத் திணைக்களத்தின் மூத்த அதிகாரி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/will-vehicles-that-are-not-in-use-for-fuel-use-qr-codes/">எரிபொருளுக்காக பயன்பாட்டில் இல்லாத வாகனங்கள் கியூஆர் குறியீடுகளைப் பயன்படுத்துமா?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>2022ஆம் ஆண்டில் கியூஆர் (QR) திட்டத்தின் கீழ் எரிபொருள் பெறுவதற்காக 65 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், நாட்டில் பதிவுசெய்யப்பட்ட 84 லட்சம் வாகனங்களில் 57 லட்சம் வாகனங்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன என்று மோட்டார் வாகனத் துறை தெரிவித்துள்ளது.</p>
<p>கியூஆர் திட்டத்தின் கீழ் எரிபொருள் பெறுவதற்காக ஐந்து முதல் பத்து லட்சம் பேர் வரை போலியான தரவுகளின் அடிப்படையில் கியூஆர் ஒதுக்கீட்டைப் பெற்று வருவதாகச் சந்தேகம் நிலவுவதாக மோட்டார் வாகனத் திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>இதன்படி, இயக்கத்தில் இல்லாத சுமார் எட்டு லட்சம் வாகனங்கள் எரிபொருள் பெறுவதற்காகப் போலி கியூஆர் குறியீடுகளைப் பெற்று வருவதாகச் சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.</p>
<p>தற்போது, ​​இந்த நாட்டில் மின்சார மோட்டார் சைக்கிள்கள் உட்பட சுமார் 100,000 வாகனங்கள் சாலையில் இயங்கி வருகின்றன.</p>
<p>2022 ஆம் ஆண்டு அறிக்கைகளின்படி, கியூஆர் அமைப்பு மூலம் எரிபொருள் நிரப்புவதற்காக 65 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டன, ஆனால் இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.</p>
<p>ஓகஸ்ட் 2022 எரிபொருள் ஒதுக்கீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்ட இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள், பத்து லட்சம் வாகன உரிமையாளர்கள் பதிவு செய்திருந்தனர்.</p>
<p>கியூஆர் அமைப்பு, ஆகஸ்ட் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை 13 மாதங்களுக்குச் செயல்படுத்தப்பட்டது.</p>
<p>மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழ்நிலை காரணமாக, கடந்த திங்கட்கிழமை (16ஆம் தேதி) காலை 6 மணி முதல் கியூஆர் முறை தொடங்கப்பட்டது.</p>
<p>அதன்படி, 2022ல் பெறப்பட்ட கியூஆர் அனுமதியை மீண்டும் செயல்படுத்தப்பட்டது.</p>
<p>தங்களின் பழைய வாகனத்தை மற்றொரு தரப்பினருக்கு விற்றவர்கள், புதிய வாகனம் வாங்கியவர்கள் மற்றும் தொலைபேசி எண்களை மாற்றியவர்கள் கியூஆர் ஒதுக்கீட்டைப் பெற முடியவில்லை.</p>
<p>இலங்கையில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 4,045 மெட்ரிக் தொன் பெட்ரோலும், 4,800 மெட்ரிக் தொன் டீசலும் எரிபொருள் நுகரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>எவ்வாறாயினும், கியூஆர் ஒதுக்கீட்டின் கீழ் தினசரி எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தி, எரிபொருள் கையிருப்பைப் பாதுகாப்பதே அரசின் திட்டமாகும்.</p>
<p>The post <a href="https://oruvan.com/will-vehicles-that-are-not-in-use-for-fuel-use-qr-codes/">எரிபொருளுக்காக பயன்பாட்டில் இல்லாத வாகனங்கள் கியூஆர் குறியீடுகளைப் பயன்படுத்துமா?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>எரிபொருளை பெற்றுக்கொள்ள சர்வதேச மட்டத்தில் இராஜதந்திர தலையீடுகள்</title>
		<link>https://oruvan.com/diplomatic-interventions-at-the-international-level-to-obtain-fuel/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Mar 2026 07:11:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Fuel crisis]]></category>
		<category><![CDATA[Fuel crisis In Sri Lanka]]></category>
		<category><![CDATA[Iran War]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=46927</guid>

					<description><![CDATA[<p>தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் நாட்டின் எரிபொருள் விநியோகம் சவாலானதாக இருக்கலாம் என்ற கருத்துக்களை அரசாங்கம் நிராகரித்துள்ளுது. இந்நிலையில், சர்வதேச மட்டத்தில் இராஜதந்திர தலையீடுகள் மூலம் தொடர்ந்து எரிபொருள் இருப்புகளைப் பெறுவதற்கு அரசாங்கம் செயல்பட்டு வருவதாக நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு எரிபொருள் கப்பல்கள் வந்து சேரும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எனவும் அறிவிக்கப்படவில்லை. எனினும், எரிபொருள் விநியோகச் சங்கிலி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/diplomatic-interventions-at-the-international-level-to-obtain-fuel/">எரிபொருளை பெற்றுக்கொள்ள சர்வதேச மட்டத்தில் இராஜதந்திர தலையீடுகள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் நாட்டின் எரிபொருள் விநியோகம் சவாலானதாக இருக்கலாம் என்ற கருத்துக்களை அரசாங்கம் நிராகரித்துள்ளுது.</p>
<p>இந்நிலையில், சர்வதேச மட்டத்தில் இராஜதந்திர தலையீடுகள் மூலம் தொடர்ந்து எரிபொருள் இருப்புகளைப் பெறுவதற்கு அரசாங்கம் செயல்பட்டு வருவதாக நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.</p>
<p>இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு எரிபொருள் கப்பல்கள் வந்து சேரும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எனவும் அறிவிக்கப்படவில்லை.</p>
<p>எனினும், எரிபொருள் விநியோகச் சங்கிலி துண்டிக்கப்பட அனுமதிக்கப்படாது என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>எரிபொருள் விநியோக பிரச்சனைகளை நிவர்த்தி செய்ய ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுடன் நேரடி இராஜதந்திர கலந்துரையாடல்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>தற்போதைய சூழ்நிலையில், கச்சா எண்ணெய் மற்றும் டீசலை மொத்தமாகப் பெறுவதற்குத் தேவையான ஒப்பந்தங்களை எட்டுவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகவுள்ளது.</p>
<p>சில நாடுகள் தங்கள் சொந்த பாதுகாப்பிற்காக ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தியிருந்தாலும், இலங்கை அந்த நாடுகளுடன் மிகவும் இராஜதந்திர மட்டத்தில் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.</p>
<p>நேரடி கொள்முதல் செய்யப்பட வேண்டுமானால், அதற்குத் தேவைப்படும் கொள்முதல் செயல்முறை குறித்து தேசிய கொள்முதல் குழுவுடன் தற்போது கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p><strong> </strong></p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/diplomatic-interventions-at-the-international-level-to-obtain-fuel/">எரிபொருளை பெற்றுக்கொள்ள சர்வதேச மட்டத்தில் இராஜதந்திர தலையீடுகள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இன்றும் சீரான முறையில் எரிபொருள் விநியோகம் – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/fuel-supply-to-remain-stable-today-ceylon-petroleum-corporation-announcement/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Mar 2026 08:43:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CPC]]></category>
		<category><![CDATA[Fuel crisis In Sri Lanka]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=46086</guid>

					<description><![CDATA[<p>இன்றைய தினமும் எரிபொருள் விநியோகம் சீரான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத் தாபனம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று காலை ஆறு மணி முதல் எரிபொருள் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத் தாபனத்தின்  நிர்வாகப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நெருக்கடி ஏற்படாமல் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருளை வழங்குவதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. எனவே தேவையற்ற முறையில் எரிபொருளை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/fuel-supply-to-remain-stable-today-ceylon-petroleum-corporation-announcement/">இன்றும் சீரான முறையில் எரிபொருள் விநியோகம் – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இன்றைய தினமும் எரிபொருள் விநியோகம் சீரான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத் தாபனம் தெரிவித்துள்ளது.</p>
<p>இதன்படி, இன்று காலை ஆறு மணி முதல் எரிபொருள் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத் தாபனத்தின்  நிர்வாகப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.</p>
<p>ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>நெருக்கடி ஏற்படாமல் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருளை வழங்குவதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>எனவே தேவையற்ற முறையில் எரிபொருளை சேமித்து வைப்பதையும், வரிசையில் காத்திருப்பதை தவிர்க்குமாறு பொது மக்களை கேட்டுக்கொண்டார்.</p>
<p>மேலும், இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் தென் கொரியாவில் இருந்து எரிபொருளை ஏற்றிவரும் கப்பல்கள் திட்டமிட்ட திகதியில் நாட்டை வந்தடையும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>எவ்வாறாயினும், நேற்றைய தினம் 8400 மெட்ரிக் தொன் பெட்ரோல் மற்றும் 8600 மெட்ரிக் தொன் டீசல் விநியோகிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இதனிடையே, ஹார்முஸ் நீரிணை மூடப்படுவதால் நாட்டின் எரிபொருள் மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/fuel-supply-to-remain-stable-today-ceylon-petroleum-corporation-announcement/">இன்றும் சீரான முறையில் எரிபொருள் விநியோகம் – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>எரிபொருள் வரிசை தொடர்ந்தால் மீளவும் QR குறியீடு அறிமுகப்படுத்த கட்டாயம் ஏற்படும் &#8211; அரசாங்கம் எச்சரிக்கை</title>
		<link>https://oruvan.com/if-fuel-queues-continue-qr-codes-will-have-to-be-reintroduced-government-warns/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 02 Mar 2026 07:07:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Fuel crisis In Sri Lanka]]></category>
		<category><![CDATA[Fuel distributors]]></category>
		<category><![CDATA[Iran War]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=46010</guid>

					<description><![CDATA[<p>அச்சம் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொது மக்கள் வரிசையில் நின்று எரிபொருள் வாங்கும் செயற்பாடு தொடர்ந்தால் மீளவும் QR குறியீடு அறிமுகப்படுத்த கட்டாயம் ஏற்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. எரிசக்தி பிரதி அமைச்சர் அக்ரம் இலியாஸ் இதனை தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருள் பெற்று வருகின்றனர். இதனால் செயற்கையாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நிலை நீடித்தால் மீளவும் QR [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/if-fuel-queues-continue-qr-codes-will-have-to-be-reintroduced-government-warns/">எரிபொருள் வரிசை தொடர்ந்தால் மீளவும் QR குறியீடு அறிமுகப்படுத்த கட்டாயம் ஏற்படும் &#8211; அரசாங்கம் எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அச்சம் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொது மக்கள் வரிசையில் நின்று எரிபொருள் வாங்கும் செயற்பாடு தொடர்ந்தால் மீளவும் QR குறியீடு அறிமுகப்படுத்த கட்டாயம் ஏற்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p>
<p>எரிசக்தி பிரதி அமைச்சர் அக்ரம் இலியாஸ் இதனை தெரிவித்துள்ளார்.</p>
<p>கடந்த இரண்டு நாட்களாக நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருள் பெற்று வருகின்றனர்.</p>
<p>இதனால் செயற்கையாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நிலை நீடித்தால் மீளவும் QR குறியீடு அறிமுகப்படுத்த கட்டாயம் ஏற்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>இலங்கை தனது எரிபொருளை முதன்மையாக மத்திய கிழக்கு பிராந்தியங்களிலிருந்து அல்லாமல் சிங்கப்பூர், இந்தியா, மலேசியா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளிலிருந்து பெறுகிறது என்று அமைச்சர் விளக்கியுள்ளார்.</p>
<p>தொடர்ந்து பீதியுடன் எரிபொருட்களை வாங்குவது பவுசர் லொரிகள் மூலம் மேற்கொள்ளப்படும் விநியோக செயல்முறையை சீர்குலைக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.</p>
<p>மேலும் சீரான விநியோகத்தை உறுதி செய்ய அரசாங்கத்திற்கு ஒத்துழைக்குமாறு பொதுமக்களிடம்  அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p>
<p>இதற்கிடையில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) இன்று போயா விடுமுறை நாளாக இருந்தபோதிலும், அதன் வழக்கமான செயற்பாடுகளில் இருந்து விலகி, எரிபொருள் வழங்குவதாக அறிவித்தது.</p>
<p>தற்போதைய தேவை அதிகரிப்பு காரணமாக எரிபொருள் நிலையங்களில் அவற்றின் இருப்பு தீர்ந்து மூடப்பட்டால், எரிபொருள் பற்றாக்குறை என்ற தவறான எண்ணம் உருவாகும்.</p>
<p>இதனால் ஏற்படும் பீதியை தடுத்து நிலைமையை சீர் செய்ய இந்த முடிவும் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/if-fuel-queues-continue-qr-codes-will-have-to-be-reintroduced-government-warns/">எரிபொருள் வரிசை தொடர்ந்தால் மீளவும் QR குறியீடு அறிமுகப்படுத்த கட்டாயம் ஏற்படும் &#8211; அரசாங்கம் எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது &#8211; இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்</title>
		<link>https://oruvan.com/there-will-be-no-fuel-shortage-sri-lanka-petroleum-corporation/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 25 Jun 2025 02:46:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Fuel crisis]]></category>
		<category><![CDATA[Fuel crisis In Sri Lanka]]></category>
		<category><![CDATA[Fuel Price]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=24531</guid>

					<description><![CDATA[<p>நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இருக்காது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) உறுதியளித்துள்ளது. இதன்படி, அடுத்த இரண்டு மாத காலத்திற்குத் தேவையான எரிபொருள் முன்பதிவுகள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், &#8220;எந்த பிரச்சனையும் இல்லாமல் இன்னும் இரண்டு மாதங்களுக்கு எரிபொருளை முன்பதிவு செய்துள்ளோம் என்பதை பொதுமக்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன். அந்த முன்பதிவுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. எந்த காரணத்தாலும் இந்த [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/there-will-be-no-fuel-shortage-sri-lanka-petroleum-corporation/">எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது &#8211; இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இருக்காது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) உறுதியளித்துள்ளது.</p>
<p>இதன்படி, அடுத்த இரண்டு மாத காலத்திற்குத் தேவையான எரிபொருள் முன்பதிவுகள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார்.</p>
<p>இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,</p>
<p>&#8220;எந்த பிரச்சனையும் இல்லாமல் இன்னும் இரண்டு மாதங்களுக்கு எரிபொருளை முன்பதிவு செய்துள்ளோம் என்பதை பொதுமக்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன். அந்த முன்பதிவுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.</p>
<p>எந்த காரணத்தாலும் இந்த நாட்டில் இன்னும் இரண்டு மாதங்களுக்கு எரிபொருள் பற்றாக்குறை இருக்காது. இரண்டு மாதங்களின் பின்னர் எங்கிருந்து எரிபொருள் பெறுவது என்பதுதான் பிரச்சினை.</p>
<p>தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி வைப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/there-will-be-no-fuel-shortage-sri-lanka-petroleum-corporation/">எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது &#8211; இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>எரிபொருள் நெருக்கடி &#8211; அரசாங்கம் மீது சந்தேகம்</title>
		<link>https://oruvan.com/fuel-crisis-doubts-over-the-government/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Mar 2025 02:46:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CPC]]></category>
		<category><![CDATA[Fuel crisis]]></category>
		<category><![CDATA[Fuel crisis In Sri Lanka]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=12984</guid>

					<description><![CDATA[<p>இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாற்ற அரசாங்கம் முயற்சிப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்காக அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அதன் துணைத் தலைவர் குசும் சதநாயகே தெரிவித்தார். இதற்கிடையில்,இன்று (03) காலை ஜனாதிபதி செயலகத்திற்குச் சென்று பெற்றோல் நிலைய உரிமையாளர்களின் மூன்று சதவீத கமிஷன் குறைப்பு தொடர்பான மகஜர் ஒன்றை கையளிக்கவுள்ளதாக தெரிவித்தார். இதனிடையே, லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின் விநியோகஸ்தர்களும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/fuel-crisis-doubts-over-the-government/">எரிபொருள் நெருக்கடி &#8211; அரசாங்கம் மீது சந்தேகம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாற்ற அரசாங்கம் முயற்சிப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</p>
<p>இதற்காக அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அதன் துணைத் தலைவர் குசும் சதநாயகே தெரிவித்தார்.</p>
<p>இதற்கிடையில்,இன்று (03) காலை ஜனாதிபதி செயலகத்திற்குச் சென்று பெற்றோல் நிலைய உரிமையாளர்களின் மூன்று சதவீத கமிஷன் குறைப்பு தொடர்பான மகஜர் ஒன்றை கையளிக்கவுள்ளதாக தெரிவித்தார்.</p>
<p>இதனிடையே, லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின் விநியோகஸ்தர்களும் எரிபொருள் முன்பதிவுகளை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளனர்.</p>
<p>பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் செல்வாக்கு காரணமாக, ஒரு ஆர்டருக்கு 35,000 நட்டம் ஏற்படுவதாக அதன் தலைவர் கோசல விதானராச்சி தெரிவித்தார்.</p>
<p>எவ்வாறாயினும், நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு இருப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.</p>
<p>எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரை எரிபொருள் கையிருப்பு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று 1,500க்கும் மேற்பட்ட எரிபொருள் பதிவுகள் பெறப்பட்டன.</p>
<p>இந்நிலையில், பெற்றோலிய இருப்புக்கள் விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்ககப்பட்டுள்ளது.</p>
<p>தற்போதுள்ள பிரச்சினைகள் குறித்து எரிபொருள் விநியோகஸ்தர்கள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகளுக்கு இடையே நாளை கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.</p>
<p>இதன்படி, படி நாளை காலை 9.00 மணிக்கு கலந்துரையாடலில் பங்கேற்பதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/fuel-crisis-doubts-over-the-government/">எரிபொருள் நெருக்கடி &#8211; அரசாங்கம் மீது சந்தேகம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
