<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Field Marshal Sarath Fonseka Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/field-marshal-sarath-fonseka/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/field-marshal-sarath-fonseka/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Thu, 19 Feb 2026 04:15:35 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Field Marshal Sarath Fonseka Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/field-marshal-sarath-fonseka/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>விடுதலைப் புலிகளின் தலைவர்களை சரணடைய வைக்க ராஜபக்ச முயற்சி &#8211; பொன்சேகா குற்றச்சாட்டு</title>
		<link>https://oruvan.com/rajapaksa-trying-to-force-ltte-leaders-to-surrender-fonseka-alleges/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 19 Feb 2026 04:15:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Field Marshal Sarath Fonseka]]></category>
		<category><![CDATA[LTTE]]></category>
		<category><![CDATA[Sarath Fonseka]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=45374</guid>

					<description><![CDATA[<p>ராஜபக்சக்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்களை சரணடைய அனுமதித்ததாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார் எவ்வாறாயினும், இராணுவம் அவர்களை அழிக்க விரும்பியதாகவும், அவர்கள் சரணடைந்திருந்தால், பிரபாகரன் இப்போது வடக்கின் முதலமைச்சராக இருந்திருப்பார் என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர்கள் மத்தியில் நேற்று உரையாற்றிய அவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைய வாய்ப்பளிக்கும் வகையில், [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/rajapaksa-trying-to-force-ltte-leaders-to-surrender-fonseka-alleges/">விடுதலைப் புலிகளின் தலைவர்களை சரணடைய வைக்க ராஜபக்ச முயற்சி &#8211; பொன்சேகா குற்றச்சாட்டு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ராஜபக்சக்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்களை சரணடைய அனுமதித்ததாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்</p>
<p>எவ்வாறாயினும், இராணுவம் அவர்களை அழிக்க விரும்பியதாகவும், அவர்கள் சரணடைந்திருந்தால், பிரபாகரன் இப்போது வடக்கின் முதலமைச்சராக இருந்திருப்பார் என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>ஊடகவியலாளர்கள் மத்தியில் நேற்று உரையாற்றிய அவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.</p>
<p>விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைய வாய்ப்பளிக்கும் வகையில், மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதியுடன் மே 17, 2009 அன்று காலை கலந்துரையாடியதாக பொன்சேகா கூறினார்.</p>
<p>விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைய அனுமதிப்பது குறித்து, மே 17, 2009 அன்று மாலையில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளருக்கும் சவேந்திர சில்வாவிற்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் ஒரு தொலைபேசி உரையாடலின் காணொளியையும் அவர் இதன் போது வெளியிட்டிருந்தார்.</p>
<p>தொலைபேசி உரையாடலை விளக்கிய பொன்சேகா, ராஜபக்சக்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை ஊடாக விடுதலைப் புலிகளின் தலைவர்களை சரணடைய அனுமதிக்க கலந்துரையாடினர்.</p>
<p>எனினும், விடுதலைப் புலிகளின் தலைவர்கள் இராணுவத்திடம் சரணடைய மறுத்ததாகவும், ஆனால் மூன்றாம் தரப்பினரிடம் சரணடைய விரும்பியதாகவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டிருந்தார்.</p>
<p>எனினும், ராஜபக்சக்கள் விடுதலைப் புலிகள் மூன்றாம் தரப்பினரிடம் சரணடைவதை எதிர்த்ததாகவும், அவர்கள் ராணுவத்திடம் சரணடைய வேண்டும் என்றும் விரும்பியதாகவும் பொன்சேகா குறிப்பிட்டார்.</p>
<p>இருப்பினும், விடுதலைப் புலிகள் இராணுவத்திடம் சரணடைய மறுத்ததால் அந்த திட்டம் தோல்வியடைந்தன.</p>
<p>விடுதலைப் புலிகள் தலைவர்கள் இராணுவத்திடம் சரணடைய ஒப்புக்கொண்டிருந்தால், பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்கள் இன்னும் உயிருடன் இருந்திருப்பார்கள். பிரபாகரன் வடக்கின் முதலமைச்சராக இருந்திருப்பார்.</p>
<p>குறிப்பிட்ட நாளில் தான் சீனாவில் இருந்ததாகவும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் அசர்வதேச மன்னிப்புச் சபை உடனாக மேற்படி பேச்சுவார்த்தைகள் குறித்து தனக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும், பொக்சேகா குறிப்பிட்டார்.</p>
<p>மே 17, 2009 அன்று கலந்துரையாடல் நடந்தபோது, ​​விடுதலைப் புலிகளின் தலைவர்கள் 400 மீட்டர் பரப்பளவில் சுற்றிவளைக்கப்பட்டனர்.</p>
<p>அடுத்த சில மணி நேரங்களுக்குள் தாம் உயிரிழந்துவிடுவோம் என்பது விடுதலைப் புலிகளுக்குத் தெரியும் என்றும் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>இராணுவம் விடுதலைப் புலிகளின் தலைவர்களைக் காப்பாற்ற விரும்பவில்லை, மாறாக அவர்களை அழிக்கத் திட்டமிட்டிருந்தது என்று பொன்சேகா கூறினார்.</p>
<p>ராஜபக்‌சவின் கோரிக்கையை ஏற்க மறுத்ததால், மே 19, 2009 அன்று இராணுவத்தால் விடுதலைப் புலிகளை முற்றிலுமாக ஒழிக்க முடிந்தது என்று சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/rajapaksa-trying-to-force-ltte-leaders-to-surrender-fonseka-alleges/">விடுதலைப் புலிகளின் தலைவர்களை சரணடைய வைக்க ராஜபக்ச முயற்சி &#8211; பொன்சேகா குற்றச்சாட்டு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>யாராலும் அற்புதங்களை செய்ய முடியாது!! எதிர்க்கட்சியின் நடவடிக்கை அபத்தமானது என்கிறார் பொன்சேகா</title>
		<link>https://oruvan.com/no-one-can-perform-miracles-the-oppositions-actions-are-absurd-says-fonseka/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 04 Dec 2025 11:21:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[Field Marshal Sarath Fonseka]]></category>
		<category><![CDATA[Sarath Fonseka]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=39963</guid>

					<description><![CDATA[<p>பேரழிவைத் தடுக்கத் தவறியதற்காக அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடர எதிர்க்கட்சியின் நடவடிக்கை அபத்தமானது என்றும், முந்தைய ஆட்சியாளர்கள் ஆட்சியில் இருந்தாலும் நிலைமை அப்படியே இருக்கும் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறினார். கடந்த காலங்களில் வெள்ளம் ஏற்பட்டதாகவும், யார் ஆட்சியில் இருந்தாலும் இறுதி முடிவு ஒன்றுதான் என்றும் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இந்த முறை மழையும் வெள்ளமும் அதிகமாக இருந்ததால், பேரழிவு கடுமையாக இருந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். &#8220;முந்தைய ஆட்சியாளர்கள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/no-one-can-perform-miracles-the-oppositions-actions-are-absurd-says-fonseka/">யாராலும் அற்புதங்களை செய்ய முடியாது!! எதிர்க்கட்சியின் நடவடிக்கை அபத்தமானது என்கிறார் பொன்சேகா</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பேரழிவைத் தடுக்கத் தவறியதற்காக அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடர எதிர்க்கட்சியின் நடவடிக்கை அபத்தமானது என்றும், முந்தைய ஆட்சியாளர்கள் ஆட்சியில் இருந்தாலும் நிலைமை அப்படியே இருக்கும் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறினார்.</p>
<p>கடந்த காலங்களில் வெள்ளம் ஏற்பட்டதாகவும், யார் ஆட்சியில் இருந்தாலும் இறுதி முடிவு ஒன்றுதான் என்றும் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.</p>
<p>இந்த முறை மழையும் வெள்ளமும் அதிகமாக இருந்ததால், பேரழிவு கடுமையாக இருந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். &#8220;முந்தைய ஆட்சியாளர்கள் ஆட்சியில் இருந்திருந்தால் நிலைமை இப்படித்தான் இருந்திருக்கும்&#8221; என்று அவர் கூறினார்.</p>
<p>இலங்கையில் வளங்கள், உபகரணங்கள் மற்றும் மனிதவளம் குறைவாக இருப்பதால் யாராலும் அற்புதங்களைச் செய்ய முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>&#8220;கிடைக்கக்கூடிய வளங்கள், உபகரணங்கள் மற்றும் மனிதவளத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் அதிகபட்சமாகச் செய்ய வேண்டும். யாராவது அதிகமாகச் செய்ய விரும்பினால், அது இங்கே சாத்தியமில்லை. நாம் ஒரு ஏழை நாடு,&#8221; என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/no-one-can-perform-miracles-the-oppositions-actions-are-absurd-says-fonseka/">யாராலும் அற்புதங்களை செய்ய முடியாது!! எதிர்க்கட்சியின் நடவடிக்கை அபத்தமானது என்கிறார் பொன்சேகா</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்த மகிந்த தரப்பு &#8211; சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்</title>
		<link>https://oruvan.com/mahindas-faction-gave-money-to-the-ltte-information-released-by-sarath-fonseka/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 12 Oct 2025 08:49:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Field Marshal Sarath Fonseka]]></category>
		<category><![CDATA[Sarath Fonseka]]></category>
		<category><![CDATA[சரத் பொன்சேகா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=35127</guid>

					<description><![CDATA[<p>விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்ததாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தன்னிடம் கூறியதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த செய்தியாளர் சந்திப்பில் ஓய்வு பெற்ற இராணுவ உத்தியோகஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். தொடந்தும்பேசிய அவர், 2008ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆகும் போது சீனாவில் இருந்து துப்பாக்கி ரவைகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. அப்போது கோட்டபாய ராஜபக்ச நேரில் என்னை அழைத்துப் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/mahindas-faction-gave-money-to-the-ltte-information-released-by-sarath-fonseka/">விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்த மகிந்த தரப்பு &#8211; சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்ததாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தன்னிடம் கூறியதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.</p>
<p>கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த செய்தியாளர் சந்திப்பில் ஓய்வு பெற்ற இராணுவ உத்தியோகஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.</p>
<p>தொடந்தும்பேசிய அவர்,</p>
<p>2008ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆகும் போது சீனாவில் இருந்து துப்பாக்கி ரவைகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. அப்போது கோட்டபாய ராஜபக்ச நேரில் என்னை அழைத்துப் பேசினார்.</p>
<p>“பொன்சேகா நாம் கடனுக்கு அல்லவா சீனாவிடம் இருந்து பெற்றுக்கொண்டு வருகின்றோம். சீனாவில் இருந்து அனுப்பப்படாவிட்டால் எனக்கு எதனையும் செய்ய முடியாது என்றார்.</p>
<p>நான் அப்படியே பசில் ராஜபக்சவின் அலுவலகத்திற்குச் சென்றேன். இதன்போது பசில் ராஜபக்ச தொலைபேசியூடாக பி.பி.ஜயசுந்தரவிடம் கூறினார். 100 மில்லியன் டொலர்களை வழங்குமாறு கூறினார்.</p>
<p>அந்த சந்தரப்பத்தில் பசிலுடன் ஒரு மணி நேரம் கதைத்துக்கொண்டிருந்தேன். 2005ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்த கதையை அவர் என்னிடம் கூறினார்.</p>
<p>“நாம் இவ்வாறானதொரு வேலையை செய்தோம். தமிழ் மக்கள் வாக்களிப்பதை நிறுத்துவதாக விடுதலைப் புலிகள் வாக்குறுதி அளித்தனர்.</p>
<p>கடற்புலிகளின் பயன்பாட்டிற்காக முன்பதிவு செய்த டோரா படகுகள் மலோசியாவில் உள்ளன. அதற்கு பணம் வழங்க வேண்டும். அதற்காக இரண்டு மில்லியன் டொலர்கள் தேவைப்படுகின்றது என்றனர்.</p>
<p>அதில் எந்நதப் பிரச்சினையும் இல்லையென நாம் அதனை ஏற்றுக்கொண்டோம். அயல் நாடுகளில் இருந்து தேர்தல் தேவைகளுக்கு பயன்படுத்துவதற்காக இரண்டு மில்லியன் டொலர் எமக்கு கிடைத்தது.</p>
<p>கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு கிளிநொச்சியில் பிரபாகரனிடம் வழங்கியதாக” பசில் ராஜபக்ச என்னிடம் கூறினார். அவ்வாறு பணம் வழங்கும் போது மலையக அரசியல்வாதிகள் இருந்ததாகவும் பசில் கூறினார்.</p>
<p>அந்த டோரா படகுகளை பயன்படுத்தியே விடுதலைப் புலிகள் யுத்த காலத்தில் கடற்படையின் 10 டோரா படகுகளை மூழ்கடித்தனர். அதில் 150 கடற்படையினர் உயிரிழந்தனர்.</p>
<p>மகிந்த ராஜபக்ச தன் மகனை கடற்படையில் இணைத்தார். ஆனால் மகன் கடலுக்கு செல்லவில்லை, கொழும்பில் இருந்துகொண்டு ரக்பி விளையாடினார். கார் பந்தயத்தில் கார் ஓட்டினார்.</p>
<p>2009ஆம் ஆண்டு நாங்கள் யுத்த களத்தில் இருந்தோம். ஜனவரி 27ஆம் திகதி கோட்டபாய என்னிடம் அன்பாக கதைத்தார்.</p>
<p>“சரத் நீங்கள் இரண்டரை வரும் நன்றாக யுத்தம் செய்தீர்கள் அல்லவா. நீங்கள் களைப்படைந்திருப்பீர்கள் அல்லவா. அதனால் ஜகத் ஜயசூரிய என்ற ஒருவர் உள்ளார் அல்லவா. அவரிடம் பொறுப்பை வழங்கிவிட்டு நீங்கள் சற்று ஓய்வு எடுங்கள்” என கூறினார்.</p>
<p>நான் அவரிடம் பொறுப்பை வழங்க மாட்டேன் என கூறினேன். மறுநாள் ஜனவரி 28ஆம் திகதி மகிந்த என்னை தொடர்புகொண்டார். ஜனவரி 31 மற்றும் பெப்ரவரி முதலாம் திகதி தற்காலிக போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு உத்தரவிட்டார்.</p>
<p>நான் இல்லையென்றேன். ஆனாலும் எங்களுக்கு அந்த உத்தரவை மீற முடியாத நிலை காணப்பட்டது. ஆனால் எதிரிகள் ஜனவரி 31ஆம் திகதி நந்திக்கடல் ஊடக வந்து பாரிய தாக்குதலை நடத்தினர்.</p>
<p>மார்ச் நடுப்பகுதியில் முடியவேண்டிய யுத்தம் மே மாதம் நடுப்பகுதி வரை கொண்டுச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. கோடிக்கணக்கான ஆயுதங்களை நாம் இழந்தோம்.</p>
<p>இதன் போது ஏற்பட்ட அனைத்து இழப்புகளுக்கும் மகிந்த ராஜபக்ச பொறுப்பு கூற வேண்டும். நான் இந்த அரசாங்கம் மீது நம்பிக்கை வைத்துள்ளேன்.</p>
<p>மேற்கூறிய சம்பவங்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு நான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றேன்.</p>
<p>யுத்தம் நிறைவடையவிருந்த சந்தரப்பத்தில் யுத்தத்தை நிறுத்த கோட்டபாய தரப்பினர் முயற்சி செய்தனர். முக்கிய தளபதிகளை யுத்த களத்தில் இருந்து மீள அழைத்தனர்.</p>
<p>போர் முடிய வேண்டும் என இந்த நாட்டு மக்கள் அனைவரும் ஆசைப்பட்ட நேரத்தில் யாராவது இப்படியொரு வேலைகளில் ஈடுபடுவார்களா?</p>
<p>“2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் ஆருகில் வருகின்றது அல்லவா, அந்த தேர்தலில் வெற்றிபெற பிரபாகரன் உயிருடன் இருக்க வேண்டும்.</p>
<p>பிரபாகரனை உயிருடன் காப்பாற்றி தமிழ் மக்கள் கோபமடையாதவாறு யுத்தத்தினை நிறுத்தி தமிழ் மக்களை கவர்வதற்கே மகிந்த ராஜபக்ச இவ்வாறு செய்தார் என பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>இதேவேளை, வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பில் காணொளி ஒன்று உள்ளது. அதனை விரைவில் வெளியிடுவேன் எனவும் சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/mahindas-faction-gave-money-to-the-ltte-information-released-by-sarath-fonseka/">விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்த மகிந்த தரப்பு &#8211; சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>என்.பி.பி அரசாங்கம் ஆயிரம் மடங்கு சிறந்தது &#8211; ராஜபக்சர்களை குற்றம் சாட்டுகின்றார் சரத் பொன்சேகா</title>
		<link>https://oruvan.com/the-npp-government-is-a-thousand-times-better-sarath-fonseka-accuses-the-rajapaksas/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Oct 2025 07:11:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Field Marshal Sarath Fonseka]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=34544</guid>

					<description><![CDATA[<p>கடந்த கால அரசாங்கங்களை விட தற்போதை அரசாஙம் ஆயிரம் மடங்கு சிறந்தது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஊழல் செய்பவர்களைப் பாதுகாக்காமல் இருக்க தற்போதைய அரசாங்கம் முதுகெலும்பாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ராஜபக்சக்கள் ஊழல் வலையமைப்பை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்று கட்டுப்படுத்தி வருவதாகவும், இதன் விளைவாக, நாட்டில் ஊழல் எல்லைகளை உடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சிறிய குறைபாடுகள் இருந்தபோதிலும், இந்த [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-npp-government-is-a-thousand-times-better-sarath-fonseka-accuses-the-rajapaksas/">என்.பி.பி அரசாங்கம் ஆயிரம் மடங்கு சிறந்தது &#8211; ராஜபக்சர்களை குற்றம் சாட்டுகின்றார் சரத் பொன்சேகா</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கடந்த கால அரசாங்கங்களை விட தற்போதை அரசாஙம் ஆயிரம் மடங்கு சிறந்தது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.</p>
<p>ஊழல் செய்பவர்களைப் பாதுகாக்காமல் இருக்க தற்போதைய அரசாங்கம் முதுகெலும்பாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>ராஜபக்சக்கள் ஊழல் வலையமைப்பை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்று கட்டுப்படுத்தி வருவதாகவும், இதன் விளைவாக, நாட்டில் ஊழல் எல்லைகளை உடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p>
<p>சிறிய குறைபாடுகள் இருந்தபோதிலும், இந்த அரசாங்கம் முந்தைய அரசாங்கங்களை விட ஆயிரம் மடங்கு சிறந்தது என்று நான் முழு மனதுடன் கூறுகிறேன்.</p>
<p>ஊழல் செய்பவர்களைப் பாதுகாக்காமல் இருக்க இந்த அரசாங்கம் முதுகெலும்பாக இருப்பதால், முந்தைய எந்தவொரு அரசாங்கத்தையும் விட தற்போதைய அரசாங்கம் சிறந்தது.</p>
<p>ஒரு திருடன் கடந்த காலத்தில் ஏதேனும் குற்றம் செய்திருந்தால், அவனிடம் பணம் இருந்தால், அவனிடம் குண்டர் சக்தி இருந்தால், பின் கதவு வழியாக அதிலிருந்து தப்பிக்க முடியும். எந்தவொரு மோசடியிலிருந்தும் அவன் தப்பிக்க முடியும்.</p>
<p>எனினும், மோசடி செய்பவர்கள் பின் கதவு வழியாக தப்பிக்கும் வாய்ப்பை இந்த அரசாங்கம் குறைந்தபட்சம் தடுத்து நிறுத்தியுள்ளது. சட்டத்தை செயல்படுத்தவும் தற்போதைய அரசாங்கம் முயற்சிக்கின்றது.</p>
<p>இது நூறு வீதம் வெற்றிபெறவில்லை என்றாலும், முந்தைய அரசாங்கங்களை விட ஆயிரம் மடங்கு சிறந்தது என்று நான் அச்சமின்றி சொல்ல முடியும்.</p>
<p>இந்த ஊழல் வலையமைப்பை இந்த நாட்டில் ராஜபக்சேக்கள் சர்வதேச அளவில் முன்னெடுத்துச் சென்று கட்டுப்படுத்தி வருகின்றனர்.</p>
<p>சகோதரர்கள், சகோதரிகள், தந்தைகள், மாமாக்கள் மற்றும் மகன்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த ஊழல் வலையமைப்பை முழுமையாகக் கட்டுப்படுத்துகிறார்கள்.</p>
<p>அதனால்தான் இந்த நாட்டில் ஊழல் வேலிகளை உடைத்தெறிந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/the-npp-government-is-a-thousand-times-better-sarath-fonseka-accuses-the-rajapaksas/">என்.பி.பி அரசாங்கம் ஆயிரம் மடங்கு சிறந்தது &#8211; ராஜபக்சர்களை குற்றம் சாட்டுகின்றார் சரத் பொன்சேகா</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மகிந்த ராஜபக்சவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும்: பீல்ட் மார்ஷல் பொன்சேகா</title>
		<link>https://oruvan.com/mahinda-rajapaksa-should-be-imprisoned-for-400-years/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Sep 2025 07:09:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Field Marshal Sarath Fonseka]]></category>
		<category><![CDATA[Mahinda Rajapaksa]]></category>
		<category><![CDATA[மகிந்த ராஜபக்ச]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=31402</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கைது செய்யப்பட்டு 400 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தின் போது நடந்த கடுமையான ஊழல்கள் காரணமாக மகிந்தவை இவ்வாறு கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டார். சீனாவிற்கு 2010 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச மேற்கொண்ட பயணத்தின் போது 65 பேர் ஸ்ரீலங்கன் விமானசேவை விமானத்தில் அதிகாரபூர்வமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/mahinda-rajapaksa-should-be-imprisoned-for-400-years/">மகிந்த ராஜபக்சவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும்: பீல்ட் மார்ஷல் பொன்சேகா</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கைது செய்யப்பட்டு 400 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.</p>
<p>கடந்த 2010ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தின் போது நடந்த கடுமையான ஊழல்கள் காரணமாக மகிந்தவை இவ்வாறு கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.</p>
<p>சீனாவிற்கு 2010 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச மேற்கொண்ட பயணத்தின் போது 65 பேர் ஸ்ரீலங்கன் விமானசேவை விமானத்தில் அதிகாரபூர்வமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.</p>
<p>ரணில் விக்ரமசிங்க விடயத்தில் அரசாங்கம் நடந்து கொண்ட முறையை நான் நான் வரவேற்கின்றேன். ரணில் விக்ரமசிங்க செய்தது சரி என்று நான் கூறவில்லை.</p>
<p>அவரது நிலையைப் பார்க்க எனக்கு வருத்தமாக இருக்கிறது. அவர்தான் என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தவர். இந்த வழக்கில், இந்த அரசாங்கம் அமைத்த முன்னுதாரணத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.</p>
<p>அந்த முன்னுதாரணத்தின் அடிப்படையில், மகிந்த ராஜபக்ச போன்றவருக்கு சுமார் 400 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>மேலும், ஜெனரல்கள், பிரிகேடியர்கள், மேஜர்கள் மற்றும் கேணல்கள் உட்பட 35 மூத்த இராணுவ அதிகாரிகளை ஓய்வூதியம் இல்லாமல் இராணுவ சேவையிலிருந்து மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வெளியேற்றியது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.</p>
<p>எவ்வாறாயினும், இலங்கையின் தலைவர்களுக்கு தேசிய வளர்ச்சிக்கான தொலைநோக்கு பார்வை இல்லை என்று சரத் பொன்சேகா விமர்சித்தார்.</p>
<p>ஊழலுக்கு எதிராக வலுவான நிலைப்பாடுகளை எடுத்த சிங்கப்பூரின் லீ குவான் யூ, மலேசியாவின் மகாதீர் முகமது மற்றும் ருவாண்டாவின் ஜெனரல் ஜுவெனல் ஹப்யரிமனா போன்ற சர்வதேசத் தலைவர்களையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/mahinda-rajapaksa-should-be-imprisoned-for-400-years/">மகிந்த ராஜபக்சவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும்: பீல்ட் மார்ஷல் பொன்சேகா</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பிரபாகரனை தப்பிக்க வைக்க மகிந்த முயற்சி செய்தார் &#8211; சரத் பொன்சேகா</title>
		<link>https://oruvan.com/mahinda-tried-to-make-prabhakaran-escape-sarath-fonseka/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Sep 2025 04:54:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Field Marshal Sarath Fonseka]]></category>
		<category><![CDATA[Mahinda Rajapaksa]]></category>
		<category><![CDATA[சரத் பொன்சேகா]]></category>
		<category><![CDATA[பிரபாகரன்]]></category>
		<category><![CDATA[விடுதலைப் புலிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=31366</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவசர கால போர் நிறுத்தத்தை அறிவித்து, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை தப்பிக்க அனுமதித்ததாக முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பாதுகாப்பு பேரவையின் கருத்தைக் கருத்தில் கொள்ளாமல் மகிந்த ராஜபக்ச இந்த போர்நிறுத்தத்தை அறிவித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், போர்நிறுத்தத்தை அறிவித்தமைக்காக காரணத்தை மகிந்த விளக்க வேண்டும் எனவும் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார். மினுவங்கொடையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/mahinda-tried-to-make-prabhakaran-escape-sarath-fonseka/">பிரபாகரனை தப்பிக்க வைக்க மகிந்த முயற்சி செய்தார் &#8211; சரத் பொன்சேகா</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவசர கால போர் நிறுத்தத்தை அறிவித்து, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை தப்பிக்க அனுமதித்ததாக முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.</p>
<p>பாதுகாப்பு பேரவையின் கருத்தைக் கருத்தில் கொள்ளாமல் மகிந்த ராஜபக்ச இந்த போர்நிறுத்தத்தை அறிவித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>இந்நிலையில், போர்நிறுத்தத்தை அறிவித்தமைக்காக காரணத்தை மகிந்த விளக்க வேண்டும் எனவும் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>மினுவங்கொடையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,</p>
<p>ராஜபக்சக்கள் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததாக அடிக்கடி கூறினாலும், போர் எவ்வாறு முடிவுக்கு வந்தது என்பதை தெளிவாகக் கூறுமாறு மகிந்த ராஜபக்சவுக்கு சவால் விடுகின்றேன்.</p>
<p>மகிந்த ராஜபக்ச ஜனவரி 31 மற்றும் பெப்ரவரி முதலாம் திகதிகளில் போர் நிறுத்தத்தை அறிவித்தார். பாதுகாப்பு பேரவையில் நாங்கள் வேண்டாம் என்று சொன்னோம்.</p>
<p>எனினும், எங்களின் பேச்சை மீறி 48 மணி நேர போர் நிறுத்தத்தை அறிவித்தார். அந்த போர் நிறுத்தத்தின் போது, ​​விடுதலைப் புலிகள் எங்களை ஒழுங்கமைத்து தாக்கினர்.</p>
<p>எமது இராணுவம் நான்கு முதல் ஐந்து கிலோமீட்டர் பின்வாங்கியது. சுமார் ஐநூறு வீரர்கள் கொல்லப்பட்டனர்.</p>
<p>அந்த போர் நிறுத்தம் பிரபாகரன் உள்ளிட்டவர்கள் தப்பி ஓடக் கொடுக்கப்பட்டது. பின்னர் அவர்கள் சோல்ஹெய்ம் போன்றவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.</p>
<p>இருப்பினும், தப்பி ஓடுவதற்குப் பதிலாக, பிரபாகரன் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்திக் கொண்டு பாதுகாப்புப் படைகளைத் தாக்கினார்.</p>
<p>ராஜபக்சக்கள் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததாக அடிக்கடி கூறினாலும், போர் எவ்வாறு முடிவுக்கு வந்தது என்பதை மகிந்த தெளிவாகக் கூறு வேண்டும் சவால் விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/mahinda-tried-to-make-prabhakaran-escape-sarath-fonseka/">பிரபாகரனை தப்பிக்க வைக்க மகிந்த முயற்சி செய்தார் &#8211; சரத் பொன்சேகா</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சரத் பொன்சேகாவை படுகொலை செய்ய முயற்சி &#8211; வழக்கு விசாரணை ஒத்திவைப்பு</title>
		<link>https://oruvan.com/attempt-to-assassinate-sarath-fonseka-trial-adjourned/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 16 Jul 2025 06:14:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Field Marshal Sarath Fonseka]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=26720</guid>

					<description><![CDATA[<p>கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தி அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்ய முயன்றதாகக் கூறப்படும் மூன்று பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கை கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (16) ஒத்திவைத்தது. இந்த வழக்கு இன்று கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று சாட்சியமளிக்க திட்டமிடப்பட்டிருந்த சாட்சி நீதிமன்றத்தில் முன்னிலையாகததால், இந்த வழக்கில் சாட்சியங்களை ஆய்வு செய்வதற்கு மற்றொரு திகதியை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/attempt-to-assassinate-sarath-fonseka-trial-adjourned/">சரத் பொன்சேகாவை படுகொலை செய்ய முயற்சி &#8211; வழக்கு விசாரணை ஒத்திவைப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தி அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்ய முயன்றதாகக் கூறப்படும் மூன்று பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கை கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (16) ஒத்திவைத்தது.</p>
<p>இந்த வழக்கு இன்று கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இன்று சாட்சியமளிக்க திட்டமிடப்பட்டிருந்த சாட்சி நீதிமன்றத்தில் முன்னிலையாகததால், இந்த வழக்கில் சாட்சியங்களை ஆய்வு செய்வதற்கு மற்றொரு திகதியை வழங்குமாறு அரசு தரப்பு சார்பில் முன்னிலையான துணை சொலிசிட்டர் ஜெனரல் லக்மாலி கருணாநாயக்க நீதிமன்றத்தை கோரினார்.</p>
<p>இந்த கோரிக்கையை கருத்தில் கொண்டு, வழக்கை ஒகஸ்ட் நான்காம் திகதி வரை ஒத்திவைக்க நீதிபதி உத்தரவிட்டார்.</p>
<p>2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி, அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்யும் நோக்கில் கொழும்பு இராணுவத் தலைமையகத்தின் நுழைவாயிலுக்கு அருகில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.</p>
<p>இந்த தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலில் சரத் பொன்சேகா படுகாயமடைந்தார், மேலும் அவரைப் பாதுகாக்க நியமிக்கப்பட்ட ஒரு இராணுவ சார்ஜென்ட் மற்றும் மூன்று கார்போரல்கள் உட்பட பல வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.</p>
<p>இந்நிலையில், குறித்த தாக்குதலுக்கு உதவியமை மற்றும் உடந்தையாக இருந்தமை உட்பட, முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் எனக் கூறப்படும் மூன்று பிரதிவாதிகள் மீது சட்டமா அதிபர் வழக்குப் பதிவு செய்தார்.</p>
<p>பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட விதிமுறைகளின் கீழ் 27 குற்றச்சாட்டுகளின் கீழ் மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.</p>
<p>இதில் அவரை படுகொலை செய்ய சதி செய்தல், கொலைக்கு உதவி செய்தல் மற்றும் உடந்தையாக இருத்தல் ஆகியவை அடங்கும்.</p>
<p>The post <a href="https://oruvan.com/attempt-to-assassinate-sarath-fonseka-trial-adjourned/">சரத் பொன்சேகாவை படுகொலை செய்ய முயற்சி &#8211; வழக்கு விசாரணை ஒத்திவைப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அரசாங்கத்தை விமர்ச்சிக்க வேண்டாம் &#8211; சரத் பொன்சேகா கோரிக்கை</title>
		<link>https://oruvan.com/dont-criticize-the-government-sarath-fonseka-requests/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Jun 2025 03:11:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Field Marshal Sarath Fonseka]]></category>
		<category><![CDATA[Sarath Fonseka]]></category>
		<category><![CDATA[சரத் பொன்சேகா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=23725</guid>

					<description><![CDATA[<p>உலகில் உள்ள 147 நாடுகளில், உலகின் மகிழ்ச்சியான மக்களைக் கொண்ட நாடுகளில் இலங்கை 133வது இடத்திற்குச் சரிந்துள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறுகிறார். சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டை ஆட்சி செய்த எந்தத் தலைவருக்கும் நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்லும் தொலைநோக்குப் பார்வை இல்லை என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். நாட்டிற்கு உரம், எண்ணெய், மருந்துகள் மற்றும் நிலக்கரி இறக்குமதி செய்வதை தீர்மானிக்கும் ஊழல் வலையமைப்பினால் நாடு கட்டுப்படுத்தப்படுகிறது என்றும் சரத் பொன்சேகா கூறுகிறார். இந்த ஊழல் வலையமைப்பின் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/dont-criticize-the-government-sarath-fonseka-requests/">அரசாங்கத்தை விமர்ச்சிக்க வேண்டாம் &#8211; சரத் பொன்சேகா கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>உலகில் உள்ள 147 நாடுகளில், உலகின் மகிழ்ச்சியான மக்களைக் கொண்ட நாடுகளில் இலங்கை 133வது இடத்திற்குச் சரிந்துள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறுகிறார்.</p>
<p>சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டை ஆட்சி செய்த எந்தத் தலைவருக்கும் நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்லும் தொலைநோக்குப் பார்வை இல்லை என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.</p>
<p>நாட்டிற்கு உரம், எண்ணெய், மருந்துகள் மற்றும் நிலக்கரி இறக்குமதி செய்வதை தீர்மானிக்கும் ஊழல் வலையமைப்பினால் நாடு கட்டுப்படுத்தப்படுகிறது என்றும் சரத் பொன்சேகா கூறுகிறார்.</p>
<p>இந்த ஊழல் வலையமைப்பின் நிறுவனர்கள் ராஜபக்ச குடும்பத்தினரும் அவர்களின் பணக்கார நண்பர்களும் என்பதையும் அவர் வலியுறுத்துகிறார்.</p>
<p>எனவே, இந்த நேரத்தில் சில விமர்சனங்கள் இருந்தாலும், தற்போதைய அரசாங்கத்தை விமர்சிக்கவே கூடாது என்றும், அதன் பலன்கள் பழைய ஊழல் வலையமைப்பிற்கு மட்டுமே செல்லும் என்றும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டுகிறார்.</p>
<p>மீண்டும் தலைதூக்க முயற்சிக்கும் பழைய ஊழல் நிறைந்த அரசியல் குழுக்களை முதலில் துடைத்தெறிவதும், அரசாங்கத்திடம் பலவீனங்கள் இருந்தால் அதை விமர்சிப்பதும்தான் முதலில் செய்ய வேண்டிய விடயம் என்று அவர் மேலும் கூறுகிறார்.</p>
<p>களுத்துறையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/dont-criticize-the-government-sarath-fonseka-requests/">அரசாங்கத்தை விமர்ச்சிக்க வேண்டாம் &#8211; சரத் பொன்சேகா கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அமைதிக்காக போராடவில்லை &#8211; சரத் பொன்சேகா</title>
		<link>https://oruvan.com/ltte-leader-prabhakaran-did-not-fight-for-peace-sarath-fonseka/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 29 May 2025 09:26:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura Kumara]]></category>
		<category><![CDATA[Anura Kumara Dissanayake]]></category>
		<category><![CDATA[Field Marshal Sarath Fonseka]]></category>
		<category><![CDATA[Sarath Fonseka]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=21731</guid>

					<description><![CDATA[<p>இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது அனைத்து தரப்பினரும் அமைதிக்காகப் போராடினர் என்ற ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கூற்றுடன் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உடன்படவில்லை என்று கூறுகிறார். இந்த மாதம் நடைபெற்ற தேசிய போர்வீரர்கள் தின நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றும் போது ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை தெரிவித்தார். இந்நிலையில், உள்ளூர் ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் அளித்தபோது பேசிய சரத் பொன்சேகா, ஜனாதிபதியின் கருத்துடன் உடன்படவில்லை என்றும், மறைந்த விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ltte-leader-prabhakaran-did-not-fight-for-peace-sarath-fonseka/">விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அமைதிக்காக போராடவில்லை &#8211; சரத் பொன்சேகா</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது அனைத்து தரப்பினரும் அமைதிக்காகப் போராடினர் என்ற ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கூற்றுடன் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உடன்படவில்லை என்று கூறுகிறார்.</p>
<p>இந்த மாதம் நடைபெற்ற தேசிய போர்வீரர்கள் தின நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றும் போது ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.</p>
<p>இந்நிலையில், உள்ளூர் ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் அளித்தபோது பேசிய சரத் பொன்சேகா,</p>
<p>ஜனாதிபதியின் கருத்துடன் உடன்படவில்லை என்றும், மறைந்த விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் நடவடிக்கைகள் அமைதிக்காகச் செய்யப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.</p>
<p>&#8220;நீங்கள் அமைதிக்காகப் போராடினால், ஸ்ரீ மகா போதி அல்லது தலதா மாளிகையின் புனித தலங்களைத் தாக்க மாட்டீர்கள்&#8221; என்று அவர் சுட்டிக்காட்டினார்.</p>
<p>வடக்கில் நினைவேந்தல் நிகழ்வை அனுஷ்டிக்கலுவும் அனுமதிப்பதற்கும் தான் உடன்படவில்லை என்றும் சரத் பொன்சேகா மேலும் கூறினார், அண்மையில் வெள்ளவத்தையிலும் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.</p>
<p>இது போராளிகள் மீண்டும் தலைதூக்குவதற்கான வாய்ப்புகளைத் திறக்கும் என்று கூறிய அவர், அதிகாரிகள் விழிப்புடன் இல்லாவிட்டால், நாட்டில் பயங்கரவாதம் மீண்டும் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/ltte-leader-prabhakaran-did-not-fight-for-peace-sarath-fonseka/">விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அமைதிக்காக போராடவில்லை &#8211; சரத் பொன்சேகா</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சவேந்திர சில்வா மீதான பிரித்தானியாவின் தடை நியாயமற்றது &#8211; சரத் பொன்சேகா</title>
		<link>https://oruvan.com/britains-ban-on-shavendra-silva-is-unjustified-sarath-fonseka/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 31 Mar 2025 10:16:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Field Marshal]]></category>
		<category><![CDATA[Field Marshal Sarath Fonseka]]></category>
		<category><![CDATA[Sarath Fonseka]]></category>
		<category><![CDATA[Shavendra Silva]]></category>
		<category><![CDATA[UK sanctions]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=16414</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள தடை நியாயமற்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சவேந்திர சில்வா மீதான தடைகளுக்கு எதிராகப் பேசிய சரத் பொன்சேகா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரியா குறித்து வேறுபட்ட நிலைப்பாட்டை கொண்டுள்ளார். &#8220;இந்த நபர்கள் குறித்து நான் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளேன். இந்த அதிகாரிகள் போரின் போது முன்னணியில் இல்லை, மேலும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/britains-ban-on-shavendra-silva-is-unjustified-sarath-fonseka/">சவேந்திர சில்வா மீதான பிரித்தானியாவின் தடை நியாயமற்றது &#8211; சரத் பொன்சேகா</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள தடை நியாயமற்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.</p>
<p>சவேந்திர சில்வா மீதான தடைகளுக்கு எதிராகப் பேசிய சரத் பொன்சேகா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரியா குறித்து வேறுபட்ட நிலைப்பாட்டை கொண்டுள்ளார்.</p>
<p>&#8220;இந்த நபர்கள் குறித்து நான் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளேன். இந்த அதிகாரிகள் போரின் போது முன்னணியில் இல்லை, மேலும் அதிகார துஷ்பிரயோகத்தில் அவர்கள் ஈடுபட்டதற்கான கணிசமான ஆதாரங்கள் உள்ளன,&#8221; என்று அவர் கூறினார்.</p>
<p>ஒரு பொது நிகழ்வில் பேசிய பொன்சேகா, உள்ளூர் அல்லது சர்வதேச சட்டங்களை மீறியதாக நிரூபிக்கப்பட்ட எவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.</p>
<p>தவறு செய்ததாகக் கண்டறியப்பட்ட இராணுவ வீரர்கள் மீது இலங்கை முன்னர் வழக்குத் தொடர்ந்துள்ளது என்பதை அவர் வலியுறுத்தினார்.</p>
<p>&#8220;அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த ஆயுதப்படை உறுப்பினர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் உள்ளன.</p>
<p>தவறான நடத்தையில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டவர்கள் பொறுப்புக்கூறப்பட வேண்டும்.</p>
<p>உதாரணமாக, முன்னாள் இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்க, நேரில் கண்ட சாட்சி ஒருவரை தவறாக சுட்டுக் கொன்றதைக் கண்ட பின்னர், பல குடும்ப உறுப்பினர்களைக் கொன்றதற்காக குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார்.</p>
<p>போர் வீரர்களைப் பாதுகாப்பது என்ற சாக்குப்போக்கின் கீழ் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவால் பின்னர் அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது.</p>
<p>இதேபோல், கரண்ணகொட இளைஞர்களைக் கடத்தி, கப்பம் கோரி, திருகோணமலை முகாமில் தடுத்து வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p>
<p>இந்தத் தடுப்புக்காவல்கள் பற்றி முன்னாள் கடற்படைத் தளபதி ஒருவர் கூட அறிந்திருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார்,&#8221; என்று பொன்சேகா மேலும் கூறினார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/britains-ban-on-shavendra-silva-is-unjustified-sarath-fonseka/">சவேந்திர சில்வா மீதான பிரித்தானியாவின் தடை நியாயமற்றது &#8211; சரத் பொன்சேகா</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
