<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Efforts Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/efforts/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/efforts/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sun, 30 Mar 2025 10:29:48 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Efforts Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/efforts/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மியன்மார் நிலநடுக்கம் &#8211; 1700 பலி, மீட்பு பணிகள் தீவிரம்</title>
		<link>https://oruvan.com/fresh-tremors-in-myanmar-complicate-rescue-efforts-as-quake-death-toll-rises/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 30 Mar 2025 10:29:48 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[complicate]]></category>
		<category><![CDATA[death]]></category>
		<category><![CDATA[Efforts]]></category>
		<category><![CDATA[Myanmar]]></category>
		<category><![CDATA[quake]]></category>
		<category><![CDATA[rescue]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=16357</guid>

					<description><![CDATA[<p>மியன்மாரில் பதிவான நிலநடுக்கம் காரணமாக 1700 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு இராணுவத் தலைவரை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. மண்டலே நகரத்திலிருந்து சுமார் 17.2 கிலோ மீற்றர் தொலைவில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இந்த நிலஅதிர்வு பதிவானது. தாய்லாந்திலும் இந்த நிலஅதிர்வு உணரப்பட்ட நிலையில் பேங்கொக்கில் உயரமான கட்டிடமொன்று இடிந்து வீழ்ந்ததில் கட்டுமானத் தொழிலாளர்கள் காணாமற் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் மண்டலே நகரிற்கு அருகே 5.1 ரிக்டர் அளவில் புதிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மியான்மாரின் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/fresh-tremors-in-myanmar-complicate-rescue-efforts-as-quake-death-toll-rises/">மியன்மார் நிலநடுக்கம் &#8211; 1700 பலி, மீட்பு பணிகள் தீவிரம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மியன்மாரில் பதிவான நிலநடுக்கம் காரணமாக 1700 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு இராணுவத் தலைவரை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
<p>மண்டலே நகரத்திலிருந்து சுமார் 17.2 கிலோ மீற்றர் தொலைவில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இந்த நிலஅதிர்வு பதிவானது.</p>
<p>தாய்லாந்திலும் இந்த நிலஅதிர்வு உணரப்பட்ட நிலையில் பேங்கொக்கில் உயரமான கட்டிடமொன்று இடிந்து வீழ்ந்ததில் கட்டுமானத் தொழிலாளர்கள் காணாமற்<br />
போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.</p>
<p>மேலும் மண்டலே நகரிற்கு அருகே 5.1 ரிக்டர் அளவில் புதிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>மியான்மாரின் ஒரு நூற்றாண்டில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் ஒன்றான 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் வெள்ளிக்கிழமை தென்கிழக்கு ஆசிய நாட்டை உலுக்கியது.</p>
<p>இதன்காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 3,408 பேர் காயமடைந்துள்ளனர்.</p>
<p>மியன்மாரில் பாலங்கள், நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள் மற்றும் ரயில்வே உள்ளிட்ட முக்கியமான உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக<br />
தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>மியான்மார் மற்றும் தாய்லாந்தில் மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் பேரழிவைத் தடுப்பதில் மருத்துவப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறை தடையாக இருப்பதாக ஐ.நா எச்சரித்துள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/fresh-tremors-in-myanmar-complicate-rescue-efforts-as-quake-death-toll-rises/">மியன்மார் நிலநடுக்கம் &#8211; 1700 பலி, மீட்பு பணிகள் தீவிரம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>யூனை கைது செய்வதற்கான முயற்சிகள் தீவிரம்</title>
		<link>https://oruvan.com/efforts-to-arrest-yun-intensify/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Jan 2025 12:52:19 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[arrest]]></category>
		<category><![CDATA[Efforts]]></category>
		<category><![CDATA[intensify]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[Yun]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=6065</guid>

					<description><![CDATA[<p>பதவி நீக்கம் செய்யப்பட்ட தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோலைக் கைது செய்வதற்கு மீண்டும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்பட்டமை தொடர்பிலான குற்றச்சாட்டுகளின் கீழ் யூனை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் கைதாவதைத் தடுக்கும் வகையில் ஆதரவாளர்களும் திரண்டிருக்கின்றனர். கூட்டத்தைக் கலைத்து யூனைக் கைது செய்யப்போவதாக தென்கொரியாவின் முன்னணி விசாரணை அதிகாரி ஒருவர் உறுதியளித்துள்ளார். அண்மையில் முன்னாள் தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோலைக் கைது செய்ய முடியாமல் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/efforts-to-arrest-yun-intensify/">யூனை கைது செய்வதற்கான முயற்சிகள் தீவிரம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பதவி நீக்கம் செய்யப்பட்ட தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோலைக் கைது செய்வதற்கு மீண்டும்<br />
முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்பட்டமை தொடர்பிலான குற்றச்சாட்டுகளின் கீழ் யூனை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>அவர் கைதாவதைத் தடுக்கும் வகையில் ஆதரவாளர்களும் திரண்டிருக்கின்றனர்.</p>
<p>கூட்டத்தைக் கலைத்து யூனைக் கைது செய்யப்போவதாக தென்கொரியாவின் முன்னணி விசாரணை அதிகாரி ஒருவர் உறுதியளித்துள்ளார்.</p>
<p>அண்மையில் முன்னாள் தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோலைக் கைது செய்ய முடியாமல் அதிகாரிகள் திரும்பினர்.</p>
<p>யூனைக் கைது செய்ய அவரது வீட்டுக்குச் சென்ற அதிகாரிகளை அவரது பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியதாக சர்வதேச செய்திகள்<br />
தெரிவித்தன.</p>
<p>குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோலைக் கைது செய்ய அந்நாட்டின் ஊழல் புலனாய்வுத்துறை அதிகாரிகள்அவரது வீட்டிற்குச் சென்ற போது யூனின் வீட்டுக்கு வெளியே நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் கூடியிருந்தனர்.</p>
<p>ஜனாதிபதி யூனை உயிர் கொடுத்து காப்போம்,” என ஆதரவாளர்கள் கோஷமிட்டதுடன் அதிகாரிகள் யூனின் வீட்டு வளாகத்துக்குள் செல்ல எடுத்த முயற்சிகளும் தோல்வியுற்றன.</p>
<p>இதற்கு முன்பும் யூனின் வீட்டிற்கு அதிகாரிகள் சென்றபோது அவர்களை உள்ளே அனுமதிக்க அவரின் பாதுகாப்புப் படையினர் மறுத்துவிட்டனர்.</p>
<p>கடந்த மாதம் 3 ஆம் திகதி தென்கொரியாவில் இராணுவ ஆட்சியை அமுல்படுத்தியதால் யூன் பாரிய விளைவுகளை எதிர்கொண்டுள்ளார்.</p>
<p>அவர் அந்த சட்டத்தை மீளப்பெற்ற போதிலும் பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/efforts-to-arrest-yun-intensify/">யூனை கைது செய்வதற்கான முயற்சிகள் தீவிரம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
