<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Education Ministry Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/education-ministry/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/education-ministry/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Wed, 11 Feb 2026 04:36:28 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Education Ministry Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/education-ministry/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>கல்வி அமைச்சின் புதிய புலமைப்பரிசில் திட்டம்</title>
		<link>https://oruvan.com/ministry-of-educations-new-scholarship-program/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 11 Feb 2026 04:36:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Education Ministry]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=44846</guid>

					<description><![CDATA[<p>உயர்தரப் பரீட்சையில் அதிக Z-புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள், சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் தமக்கு விருப்பமான பட்டப்படிப்புகளைத் தொடர கல்வி அமைச்சு புதிய புலமைப்பரிசில் திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 200 வெளிநாட்டுப் பல்கலைக்கழகப் புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். இதன் முதற்கட்டமாக 32 மாணவர்கள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், திறமையான மாணவர்களுக்கு இதுவொரு அரிய வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>The post <a href="https://oruvan.com/ministry-of-educations-new-scholarship-program/">கல்வி அமைச்சின் புதிய புலமைப்பரிசில் திட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>உயர்தரப் பரீட்சையில் அதிக Z-புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள், சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் தமக்கு விருப்பமான பட்டப்படிப்புகளைத் தொடர கல்வி அமைச்சு புதிய புலமைப்பரிசில் திட்டத்தை அறிவித்துள்ளது.</p>
<p>இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 200 வெளிநாட்டுப் பல்கலைக்கழகப் புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.</p>
<p>இதன் முதற்கட்டமாக 32 மாணவர்கள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், திறமையான மாணவர்களுக்கு இதுவொரு அரிய வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>The post <a href="https://oruvan.com/ministry-of-educations-new-scholarship-program/">கல்வி அமைச்சின் புதிய புலமைப்பரிசில் திட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கல்விச் சீர்திருத்தங்கள் எக்காரணம் கொண்டும் கைவிடப்படாது – அமைச்சர் திட்டவட்டம்</title>
		<link>https://oruvan.com/education-reforms-will-not-be-abandoned-for-any-reason-ministers-plan/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 19 Jan 2026 03:13:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Education Ministry]]></category>
		<category><![CDATA[New education reform]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=43334</guid>

					<description><![CDATA[<p>நாட்டில் திட்டமிடப்பட்டுள்ள கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இருந்து அரசு எக்காரணத்தைக் கொண்டும் பின்வாங்கப் போவதில்லை என்று கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார். கல்வி முறையில் மாற்றங்களை ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயம் என்பதில் அரசு உறுதியாக இருப்பதை அவரது கருத்துக்கள் வெளிப்படுத்தியுள்ளன. நேற்று (18) கிரிபத்கொடவில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் (NPP) மக்கள் ஒருங்கிணைப்பு அலுவலக வளாகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/education-reforms-will-not-be-abandoned-for-any-reason-ministers-plan/">கல்விச் சீர்திருத்தங்கள் எக்காரணம் கொண்டும் கைவிடப்படாது – அமைச்சர் திட்டவட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாட்டில் திட்டமிடப்பட்டுள்ள கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இருந்து அரசு எக்காரணத்தைக் கொண்டும் பின்வாங்கப் போவதில்லை என்று கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.</p>
<p>கல்வி முறையில் மாற்றங்களை ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயம் என்பதில் அரசு உறுதியாக இருப்பதை அவரது கருத்துக்கள் வெளிப்படுத்தியுள்ளன.</p>
<p>நேற்று (18) கிரிபத்கொடவில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் (NPP) மக்கள் ஒருங்கிணைப்பு அலுவலக வளாகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.</p>
<p>இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்லும் போது ஏற்படும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகள் மற்றும் தடைகள் அடையாளம் காணப்பட்டு, அவை முறையாக நிவர்த்தி செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.</p>
<p>கல்வித் துறையில் நவீன மாற்றங்களை உட்புகுத்துவதன் மூலம் மாணவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்த முடியும் என நம்பும் அரசாங்கம், அந்த இலக்கை நோக்கித் தொடர்ந்து பயணிக்கும் என அவர் தனது பேட்டியின் போது வலியுறுத்திக் கூறினார்</p>
<p>The post <a href="https://oruvan.com/education-reforms-will-not-be-abandoned-for-any-reason-ministers-plan/">கல்விச் சீர்திருத்தங்கள் எக்காரணம் கொண்டும் கைவிடப்படாது – அமைச்சர் திட்டவட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கல்விச் சீர்திருத்தங்களை சீர்குலைக்க சதி? ஆறாம் வகுப்பு பாடப்புத்தக விவகாரத்தில் சி.ஐ.டி விசாரணை</title>
		<link>https://oruvan.com/conspiracy-to-disrupt-education-reforms-cid-probes-sixth-standard-textbook-issue/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 31 Dec 2025 08:14:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[CID]]></category>
		<category><![CDATA[Education Ministry]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=42066</guid>

					<description><![CDATA[<p>கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட ஆறாம் வகுப்பு ஆங்கிலப் பாடப்புத்தகத் தொகுதியில் (Module), உள்ளடக்கப்படக்கூடாத இணையதளப் பெயர் ஒன்று அச்சிடப்பட்டுள்ளமை தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவ அவர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்துள்ளார். இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட உள்வாரி விசாரணைகளின் மூலம் இவ்வாறான ஒரு பொருத்தமற்ற இணையதளப் பெயர் பாடப்புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். கல்விச் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்பாக கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினரால் அடிப்படையற்ற [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/conspiracy-to-disrupt-education-reforms-cid-probes-sixth-standard-textbook-issue/">கல்விச் சீர்திருத்தங்களை சீர்குலைக்க சதி? ஆறாம் வகுப்பு பாடப்புத்தக விவகாரத்தில் சி.ஐ.டி விசாரணை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட ஆறாம் வகுப்பு ஆங்கிலப் பாடப்புத்தகத் தொகுதியில் (Module), உள்ளடக்கப்படக்கூடாத இணையதளப் பெயர் ஒன்று அச்சிடப்பட்டுள்ளமை தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவ அவர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்துள்ளார்.</p>
<p>இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,</p>
<p>அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட உள்வாரி விசாரணைகளின் மூலம் இவ்வாறான ஒரு பொருத்தமற்ற இணையதளப் பெயர் பாடப்புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.</p>
<p>கல்விச் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்பாக கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினரால் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றிருப்பது திட்டமிட்ட ஒரு சதி நடவடிக்கையாக இருக்குமோ என்ற பலமான சந்தேகம் அமைச்சிற்கு எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.</p>
<p>ஒரு பாடப்புத்தகமானது அச்சிடுவதற்கு முன்பதாக பல கட்டங்களில் பரிசோதிக்கப்பட்டு, திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே இறுதி நிலையை அடையும் என்பதால், இவ்வளவு கண்காணிப்புகளையும் மீறி இந்தத் தவறு எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.</p>
<p>இது வெறும் கவனக்குறைவால் ஏற்பட்ட தற்செயலான தவறா அல்லது கல்விச் சீர்திருத்தங்களை சீர்குலைப்பதற்காக யாராவது வேண்டுமென்றே செய்த சதித் திட்டமா என்பதைக் கண்டறியுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>அமைச்சின் மட்டத்தில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு மேலதிகமாக, வெளித்தரப்பு தலையீடுகள் ஏதேனும் உள்ளனவா என்பது குறித்தும் முறையான விசாரணை அவசியம் என அவர் தெரிவித்தார்.</p>
<p>இதேவேளை, ஏனைய பாடப்புத்தகத் தொகுதிகளும் தற்போது தீவிரமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே விநியோகிக்கப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/conspiracy-to-disrupt-education-reforms-cid-probes-sixth-standard-textbook-issue/">கல்விச் சீர்திருத்தங்களை சீர்குலைக்க சதி? ஆறாம் வகுப்பு பாடப்புத்தக விவகாரத்தில் சி.ஐ.டி விசாரணை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
