<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>economy Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/economy/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/economy/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Wed, 15 Apr 2026 13:51:19 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>economy Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/economy/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பிரித்தானிய பொருளாதாரத்திற்கு பேரிடி &#8211; IMF கடும் எச்சரிக்கை</title>
		<link>https://oruvan.com/disaster-for-the-british-economy-imf-warns/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Wed, 15 Apr 2026 13:51:19 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[British]]></category>
		<category><![CDATA[Disaster]]></category>
		<category><![CDATA[economy]]></category>
		<category><![CDATA[IMF]]></category>
		<category><![CDATA[warns]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48421</guid>

					<description><![CDATA[<p>உலக போர் அதிர்வால் G7 நாடுகளில் பிரித்தானியாவுக்கு பின்வரிசை உலக அரசியல் பதற்றங்களின் நிழலில், பொருளாதார முன்னேற்றப் பாதை மேலும் சவாலாக மாறி வருவதை புதிய கணிப்புகள் வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக, ஈரானை மையமாகக் கொண்ட மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அதன் தாக்கம் உலக பொருளாதாரத்தின் மீது மட்டுமின்றி, முன்னணி நாடுகளின் வளர்ச்சிக் கணிப்புகளிலும் தெளிவாக பிரதிபலிக்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் அண்மைய அறிக்கையின்படி, பிரித்தானியாவின் இந்த ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு ஜனவரியில் கணிக்கப்பட்ட 1.3% இலிருந்து [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/disaster-for-the-british-economy-imf-warns/">பிரித்தானிய பொருளாதாரத்திற்கு பேரிடி &#8211; IMF கடும் எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><strong>உலக போர் அதிர்வால் G7 நாடுகளில் பிரித்தானியாவுக்கு பின்வரிசை</strong></p>
<p>உலக அரசியல் பதற்றங்களின் நிழலில், பொருளாதார முன்னேற்றப் பாதை மேலும் சவாலாக மாறி வருவதை புதிய கணிப்புகள் வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக, ஈரானை மையமாகக் கொண்ட மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அதன் தாக்கம் உலக பொருளாதாரத்தின் மீது மட்டுமின்றி, முன்னணி நாடுகளின் வளர்ச்சிக் கணிப்புகளிலும் தெளிவாக பிரதிபலிக்கிறது.</p>
<p>சர்வதேச நாணய நிதியத்தின் அண்மைய அறிக்கையின்படி, பிரித்தானியாவின் இந்த ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு ஜனவரியில் கணிக்கப்பட்ட 1.3% இலிருந்து 0.8% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. வளர்ந்த பொருளாதார நாடுகளில் பதிவான மிகப்பெரிய வீழ்ச்சியாக இது கருதப்படுகிறது. இதனால், ஜி7 நாடுகளில் பிரித்தானியா தற்போது இறுதி இடத்தில் உள்ளது.</p>
<p>அடுத்த ஆண்டிற்கான வளர்ச்சியும் 1.3% ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், இது முந்தைய கணிப்புகளை விட மேலும் குறைவாகும். இந்த பலவீனமான வளர்ச்சிக்கான முக்கிய காரணங்களாக, நீடிக்கும் மோதலின் தாக்கம், எதிர்பார்க்கப்பட்ட வட்டி விகிதக் குறைப்புகளில் தாமதம் மற்றும் எரிசக்தி விலைகள் நீண்டகாலமாக உயர்ந்த நிலையில் தொடர்கின்றமை போன்றன சுட்டிக்காட்டப்படுகின்றன.</p>
<p>இதனுடன், உலகளாவிய பொருளாதாரம் தனது இயல்பான முன்னேற்றப் பாதையிலிருந்து விலகும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த மோதல் நீடித்தால், உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலையைத் தூண்டும் சூழ்நிலை உருவாகக்கூடும். பணவீக்க அழுத்தங்கள் தொடரும் நிலையில், மத்திய வங்கிகள் தங்கள் பணக்கொள்கைகளை மேலும் கடுமையாக்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகலாம் எனக் கூறப்படுகிறது.</p>
<p>பணவீக்கம் தொடர்பிலும் கவலைகள் அதிகரித்துள்ளன. பிரித்தானியாவில் இந்த ஆண்டில் 3.2% என்ற உயர்ந்த பணவீக்க விகிதம் பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளதுடன், அது 2027ஆம் ஆண்டின் இறுதிக்குள் 2% இலக்கை அடையும் முன், 04% ஐ தாண்டும் சாத்தியமும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p><img fetchpriority="high" decoding="async" class="alignnone size-full wp-image-48423" src="https://oruvan.com/wp-content/uploads/2026/04/WhatsApp-Image-2026-04-15-at-16.07.46.jpeg" alt="" width="634" height="454" /></p>
<p>இதற்கு மாறாக, பிற முக்கிய பொருளாதாரங்களான ரஷ்யா, ஸ்பெயின், தென்னாப்பிரிக்கா, நைஜீரியா போன்ற நாடுகள் ஒப்பீட்டளவில் குறைவான பாதிப்புகளைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. யூரோ மண்டல நாடுகளிலும் வளர்ச்சி மந்தமாகவே நீடிக்கிறது. ஜெர்மன் மற்றும் இத்தாலி போன்ற நாடுகள் குறைந்த அளவிலான வளர்ச்சியையே பதிவு செய்யும் எனக் கூறப்படுகிறது.</p>
<p>மேலும் சர்வதேச நாணய நிதியம் தனது கணிப்புகள் குறுகிய கால மோதலை அடிப்படையாகக் கொண்டவை எனத் தெரிவித்துள்ளதுடன், இந்த மோதல் நீடித்தால் எரிவாயு விலைகள் மும்மடங்காகவும், எண்ணெய் விலைகள் இருமடங்காகவும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது.</p>
<p>இந்நிலையிலான பொருளாதாரச் சவால்கள், பிரித்தானிய அரசாங்கத்தின் நிதிக் கொள்கைகளின் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. பாதுகாப்புச் செலவினங்கள், நலத்திட்ட நிதி ஒதுக்கீடுகள் மற்றும் சந்தை நம்பிக்கையைப் பேணுதல் ஆகியவற்றுக்கிடையில் சமநிலையை பேண வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பும், பிரித்தானியா குறைந்த வளர்ச்சியும் அதிக பணவீக்கமும் கொண்ட நாடுகளில் ஒன்றாக இருக்கும் என முன்கூட்டியே சுட்டிக்காட்டியுள்ளது.</p>
<p>பொருளாதார வல்லுநர்கள், அரசுகள் தங்களது நிதி பாதுகாப்பு இருப்புகளை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றனர். இதற்காக வரி உயர்வுகள் அல்லது செலவினக் குறைப்புகள் போன்ற கடினமான தீர்மானங்கள் எதிர்காலத்தில் அவசியமாகலாம். அதேவேளை, புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான மாற்றம் அவசியமானதாயினும், அது உடனடி தீர்வாக அமையாது என்பதும் குறிப்பிடப்படுகிறது.</p>
<p>இதனுடன் இணைந்து, பாதுகாப்புச் செலவினங்களை விரைவாகவும் பெரிதாகவும் அதிகரிக்க வேண்டும் என்ற வாதமும் மேற்கு அரசியல் வட்டாரங்களில் வலுப்பெற்று வருகிறது.</p>
<p>முன்னாள் நேட்டோ பொதுச்செயலாளர் லார்ட் ராபர்ட்சன் உள்ளிட்ட சிலர், தற்போதைய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ள சூழலில், பாதுகாப்பு செலவினங்களை துரிதமாக உயர்த்துவது அவசியம் என வலியுறுத்துகின்றனர். ஆனால், பொருளாதாரம் ஏற்கனவே பல ஆண்டுகளாக மந்தநிலையிலேயே இருப்பதால், கூடுதல் பாதுகாப்புச் செலவினங்களை எதிர்கொள்ளும் அழுத்தத்திற்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.</p>
<p>பிரித்தானிய நிதி அமைச்சரின் நிலைப்பாடு இந்த முரண்பாட்டை தெளிவாக வெளிப்படுத்துகிறது. “தி மிரர்” பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் தனது விரக்தியை வெளிப்படுத்தியிருந்தார்.</p>
<p>“இது நாம் தொடங்காத ஒரு போர். நாம் விரும்பாத ஒரு போர். தெளிவான வெளியேறும் திட்டம் இல்லாமல், அமெரிக்கா இந்தப் போரில் இறங்கியுள்ளது என்பது எனக்கு மிகுந்த விரக்தியையும் கோபத்தையும் அளிக்கிறது” என்றார்.</p>
<p>மொத்தத்தில், உலக அரசியல் மோதல்களின் தாக்கம் இப்போது வெறும் பாதுகாப்பு எல்லையைத் தாண்டி, நேரடியாக பொருளாதார கொள்கை வடிவமைப்பை பாதிக்கும் நிலையை எட்டியுள்ளது. பொருளாதார மந்தம், பாதுகாப்பு அழுத்தம், மற்றும் அரசியல் நம்பிக்கை ஆகியவை இணைந்து, மேற்கத்திய பொருளாதாரங்களுக்கு ஒரு புதிய சிக்கலான கட்டத்தை உருவாக்கியுள்ளன.</p>
<p>பாலகணேஷ் டிலுக்ஷா</p>
<p>The post <a href="https://oruvan.com/disaster-for-the-british-economy-imf-warns/">பிரித்தானிய பொருளாதாரத்திற்கு பேரிடி &#8211; IMF கடும் எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மாபெரும் சீற்றத்தின் நிழல் &#8211; உலக பொருளாதாரத்தை அதிர வைத்த ஹார்முஸ் முட்டுக்கட்டை</title>
		<link>https://oruvan.com/the-hormuz-standoff-has-shaken-the-global-economy/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Mon, 30 Mar 2026 10:22:49 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[economy]]></category>
		<category><![CDATA[global]]></category>
		<category><![CDATA[Hormuz]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[இஸ்ரேல்]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[போர்]]></category>
		<category><![CDATA[ஹார்முஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=47663</guid>

					<description><![CDATA[<p>&#8220;அதிர்ச்சி மற்றும் அச்சம்&#8221; உத்தி தோல்வி – ஈரான் ஒன்றுபட்டது, எதிர்பார்த்த அரசியல் வீழ்ச்சி ஏற்படவில்லை. ஹார்முஸ் நீரிணை மூடல் – எண்ணெய் விலைகள் விண்ணை முட்டும் உயர்வில் &#8211; உலக பொருளாதாரத்தில் அவசரநிலை. ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ – அமெரிக்க நியாயம், அணு ஆயுத அச்சுறுத்தலையும் தாண்டி பரபரப்பான பிராந்திய சவாலை உருவாக்கியது. உலகம் தற்போது ஈரான் போரால் உருவான மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. எரிசக்தி பாதைகள் முடக்கம், எண்ணெய் விலை உயர்வு, மற்றும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-hormuz-standoff-has-shaken-the-global-economy/">மாபெரும் சீற்றத்தின் நிழல் &#8211; உலக பொருளாதாரத்தை அதிர வைத்த ஹார்முஸ் முட்டுக்கட்டை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><strong>&#8220;அதிர்ச்சி மற்றும் அச்சம்&#8221; உத்தி தோல்வி – ஈரான் ஒன்றுபட்டது, எதிர்பார்த்த அரசியல் வீழ்ச்சி ஏற்படவில்லை.</strong></p>
<p><strong>ஹார்முஸ் நீரிணை மூடல் – எண்ணெய் விலைகள் விண்ணை முட்டும் உயர்வில் &#8211; உலக பொருளாதாரத்தில் அவசரநிலை.</strong></p>
<p><strong>‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ – அமெரிக்க நியாயம், அணு ஆயுத அச்சுறுத்தலையும் தாண்டி பரபரப்பான பிராந்திய சவாலை உருவாக்கியது.</strong></p>
<p>உலகம் தற்போது ஈரான் போரால் உருவான மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. எரிசக்தி பாதைகள் முடக்கம், எண்ணெய் விலை உயர்வு, மற்றும் வல்லரசு போட்டி ஆகியவை உலக நிலைத்தன்மையை அச்சுறுத்துகின்றன. பாரம்பரிய சக்திகள் திணறிக் கொண்டிருக்கும் வேளையில், இலங்கை போன்ற அணிசேரா நாடுகள் மீண்டும் மத்தியஸ்த வினையூக்கியாக உருவெடுக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.</p>
<p>2026 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி உலக அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான மற்றும் அதிர்ச்சியூட்டும் திருப்புமுனையாக பதிவாகியுள்ளது. அன்றைய தினம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட மாபெரும் சீற்றம் என குறியிடப்பட்ட இராணுவ நடவடிக்கை, மத்திய கிழக்கு பிராந்தியத்தின் சமநிலையை மட்டுமின்றி, உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புகளையும் ஆழமாக பாதித்துள்ளது.</p>
<p>இந்த தாக்குதலின் முக்கிய விளைவாக, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனியின் உயிரிழப்பு மற்றும் அதன் இராணுவத்<br />
தலைமை கடுமையாக சீர்குலைந்துள்ளது, இந்த நடவடிக்கை ஒரு விரைவான மற்றும் துல்லியமான ஆட்சி மாற்றத்தை நோக்கமாகக்<br />
கொண்டதாக கருதப்பட்டாலும், அதன் விளைவுகள் முற்றிலும் எதிர்பாராத வகையில் பிராந்திய மோதலாக மாறியுள்ளது.</p>
<p><strong>மாபெரும் உத்தியும்  தவறான கணிப்புகளும்</strong></p>
<p>அமெரிக்காவின் “அதிர்ச்சி மற்றும் அச்சம்” என்ற இராணுவ உத்தி, ஈரானின் அரசியல் அமைப்பை உடைத்து உள்நாட்டு குழப்பத்தை<br />
உருவாக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால், இந்த கணிப்பு முற்றிலும் தவறானதாக மாறியுள்ளது. பல்வேறு உள்நாட்டு பிரிவினைகள்<br />
இருந்தபோதிலும், ஈரான் தற்போது தேசிய பாதுகாப்பு மற்றும் மத அடையாளம் என்ற சக்திவாய்ந்த அடையாளங்களின் கீழ் ஒன்றுபட்டுள்ளது.</p>
<p>கமெனியின் மரணம், அரசியல் வெற்றிடத்தை உருவாக்கவில்லை. மாறாக, அவர் ஒரு தியாகியாக மாறி,<br />
மக்களின் எதிர்ப்புத் தூண்டுதலை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இதன் மூலம், அமெரிக்கா எதிர்பார்த்த அரசியல்<br />
வீழ்ச்சி நிகழவில்லை என்பது தெளிவாகியுள்ளது.</p>
<p><strong>பொருளாதார விளிம்பு &#8211; ஹார்முஸ் முட்டுக்கட்டை</strong></p>
<p>இந்த மோதலின் மிக தீவிரமான மற்றும் உடனடி தாக்கம் உலகளாவிய எரிசக்தி துறையில் வெளிப்பட்டுள்ளது.<br />
உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தக நரம்பு எனக் கருதப்படும் ஹார்முஸ் நீரிணை, செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.</p>
<p>உலகின் சுமார் 20 சதவீத எண்ணெய் மற்றும் எரிவாயு இந்த கடல் பாதை வழியாகச் செல்லும் நிலையில்,<br />
அதன் முடக்கம் உலக பொருளாதாரத்திற்கு நேரடி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தைகளில்<br />
எண்ணெய் விலை பீப்பாயொன்றுக்கு 200 அமெரிக்க டொலரை எட்டும் என பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.<br />
இதன் விளைவாக, உலகளாவிய பணவீக்கம் கட்டுக்கடங்காத அளவிற்கு உயர்ந்து, ஐரோப்பாவில் வீட்டு வெப்பமூட்டல் செலவுகள் அதிகரித்துள்ளன. ஆசிய நாடுகளில் உற்பத்தி துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் வளர்ந்து வரும் நாடுகள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றன.</p>
<p>இந்த இராணுவ நடவடிக்கையின் பின்னணி வெறும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தாண்டி, ஒரு விரிவான<br />
புவிசார் அரசியல் வியூகத்தின் பகுதியாகவே பார்க்கப்படுகிறது. டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம்,<br />
இந்த தாக்குதலின் மூலம் சீனாவின் எரிசக்தி ஆதாரங்களை கட்டுப்படுத்தவும், மத்திய கிழக்கில் புதிய அரசியல் ஒழுங்கை உருவாக்கவும், மேலும் இஸ்ரேலின் பிராந்திய ஆதிக்கத்தை உறுதி செய்யவும் முயன்றதாக மதிப்பிடப்படுகிறது.<br />
ஆனால், இந்த வியூக இலக்குகள் பல முக்கிய தவறான கணிப்புகளின் அடிப்படையில் அமைந்திருந்தன. குறிப்பாக, ஈரானின் புவியியல் அமைப்பு மலைப்பகுதிகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு கட்டமைப்புகள் ஒரு நேரடி தரைபடையெடுப்பை மிகவும் கடினமாக்குகின்றன. மேலும், ஈரான் தனது உள்நாட்டு இராணுவ திறன்களைப் பயன்படுத்தி நீண்டகால மோதலை தாங்கக்கூடிய நிலையிலும் உள்ளது.</p>
<p>இராணுவ ரீதியாக பார்க்கும்போது, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேம்பட்ட தொழில்நுட்ப ஆயுதங்களை கொண்டிருந்தாலும், ஈரானின் பலம் அதன் பொறுமை மற்றும் நீடித்த போர்திறனில் இருக்கிறது. சுமார் 45,000 ஏவுகணைகள், விரிவடைந்த ட்ரோன் உற்பத்தி திறன், மற்றும் நீண்டகால போரை தாங்கும் உள்நாட்டு அமைப்பு ஆகியவை, இந்த மோதலை ஒரு விரைவான வெற்றியாக மாற்றாமல், நீண்டகால சோர்வு போராக மாற்றும் அபாயத்தை உருவாக்குகின்றன. இதன் காரணமாக, எந்த தரப்பும் விரைவில் தீர்மானமிக்க வெற்றியைப் பெற முடியாத ஒரு முட்டுக்கட்டை நிலை உருவாகியுள்ளது.</p>
<p><strong>பாரம்பரிய கூட்டணிகளின் தோல்வி</strong></p>
<p>இந்த சூழலில், சர்வதேச கூட்டணிகளின் நிலைப்பாடு கூட அமெரிக்காவிற்கு எதிர்பாராத சவாலாக மாறியுள்ளது.<br />
நேட்டோ நாடுகள் உட்பட பல பாரம்பரிய நட்பு நாடுகள், நேரடி இராணுவ தலையீட்டைத் தவிர்க்க முனைந்துள்ளன.<br />
குறிப்பாக, ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாகத் திறக்க கடற்படைகளை அனுப்புவதில் அவர்கள் காட்டும் தயக்கம்,<br />
மேற்கத்திய கூட்டணிகளில் உள்ள ஆழமான பிளவுகளை வெளிப்படுத்துகிறது.<br />
ஐரோப்பிய நாடுகள், ஏற்கனவே எரிசக்தி விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பொருளாதார சுமையை ஏற்கத் தயங்குகின்றன.</p>
<p>இதேவேளை, இந்த மோதல் உலக வல்லரசுகளின் மறைமுக மோதலாகவும் மாறியுள்ளது. சீனாவும் ரஷ்யாவும், ஈரானுக்கு பல்வேறு வடிவங்களில் ஆதரவை வழங்கி வருகின்றன. செயற்கைக்கோள் உளவு தகவல்கள், மின்னணு போர் உதவிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவுகள் மூலம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொழில்நுட்ப முன்னிலை குறைக்கப்படுகின்றது எனக் கூறப்படுகிறது.<br />
இதன் மூலம், இந்த மோதல் ஒரு பிராந்தியப் போரிலிருந்து, உலகளாவிய சக்தி போட்டியின் ஒரு முக்கிய மேடையாக மாறியுள்ளது.</p>
<p>இந்த அனைத்துப் பரிமாணங்களையும் கருத்தில் கொண்டால், உலக பொருளாதாரம் மிகவும் ஆபத்தான நிலையை எட்டியுள்ளது.<br />
எரிசக்தி விலை உயர்வு, உலகளாவிய பணவீக்கம், வர்த்தக சங்கிலி சிதைவு, மற்றும் நாணய மதிப்பிழப்பு ஆகியவை ஒன்றோடொன்று இணைந்து, ஒரு பெரிய நிதி நெருக்கடியை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன.<br />
இந்நிலையில் இந்தப் போர் நீடித்தால், உலக நிதி அமைப்பே சீர்குலையும் அபாயம் உள்ளது என பல நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.</p>
<p><img decoding="async" class="alignnone size-full wp-image-47665" src="https://oruvan.com/wp-content/uploads/2026/03/russia.png" alt="" width="908" height="513" /></p>
<p><strong>பதற்றத்தைத் தணிப்பதற்கான ஒரே தீர்வு</strong></p>
<p>இந்த சூழலில், மோதலை முடிவுக்குக் கொண்டுவர ஒரு விரிவான மற்றும் சமநிலையான மாபெரும் உடன்படிக்கை அவசியமாகியுள்ளது.<br />
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய மூன்று முக்கிய தரப்புகளும், தங்களது அடிப்படை பாதுகாப்பு கவலைகளைத் தீர்க்கும் வகையில்<br />
பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது, பாதுகாப்பு உத்தரவாதங்கள் வழங்குவது, மற்றும் இராணுவ நடவடிக்கைகளை குறைப்பது போன்ற அம்சங்கள் இந்த உடன்படிக்கையின் மையமாக இருக்க வேண்டும்.</p>
<p><strong>இந்திய மற்றும் இலங்கை தலையீட்டிற்கான வாதம்</strong></p>
<p>இந்த நெருக்கடியான தருணத்தில், இந்தியா ஒரு முக்கிய மத்தியஸ்த சக்தியாக உருவெடுக்கக்கூடிய நிலையில் உள்ளது.<br />
இஸ்ரேலுடன் வலுவான பாதுகாப்பு உறவுகளையும், ஈரானுடன் நீண்டகால வரலாற்று மற்றும் எரிசக்தி தொடர்புகளையும் பேணும் இந்தியா,<br />
ஒரு சமநிலையான அணுகுமுறையை வழங்கக்கூடிய நாடாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, எண்ணெய் விலை உயர்வு இந்தியாவின்<br />
பொருளாதார வளர்ச்சியை நேரடியாக பாதிக்கும் நிலையில், இந்த மோதலை தணிக்க இந்தியா முன்வருவது அதன் தேசிய நலனுக்கும் இணங்குகிறது.</p>
<p>அதேபோன்று, இலங்கை தனது அணிசேரா வெளிநாட்டு கொள்கை மரபின் அடிப்படையில், நடுநிலை மத்தியஸ்த முயற்சிகளில் பங்கேற்கக்கூடிய திறனை கொண்டுள்ளது. ஜே.ஆர். ஜெயவர்தன மற்றும் சிறிமாவோ பண்டாரநாயக்க காலங்களில்,<br />
இலங்கை சர்வதேச இராஜதந்திரத்தில் முக்கிய பங்காற்றியதன் வரலாறு உள்ளது. ஆனால், தற்போதைய சூழலில் அந்த திறனை மீண்டும் உருவாக்குவது ஒரு சவாலாகவே உள்ளது. இதற்கு வலுவான தலைமைத்துவம், நுண்ணறிவு மற்றும் உலக அரசியல் பற்றிய ஆழமான புரிதல் அவசியமாகிறது.</p>
<p>முடிவாக , 2026 ஈரான் போர் ஒரு சாதாரண பிராந்திய மோதலைத் தாண்டி, உலகளாவிய அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை மாற்றக்கூடிய சக்தியாக மாறியுள்ளது.எனவே, உடனடி பேச்சுவார்த்தை, சமரசம் மற்றும் சர்வதேச மத்தியஸ்தம் மட்டுமே இந்த ஆபத்தான நிலையை கட்டுப்படுத்தக்கூடிய ஒரே வழியாக பார்க்கப்படுகிறது.</p>
<p>பாலகணேஷ் டிலுக்ஷா</p>
<p>The post <a href="https://oruvan.com/the-hormuz-standoff-has-shaken-the-global-economy/">மாபெரும் சீற்றத்தின் நிழல் &#8211; உலக பொருளாதாரத்தை அதிர வைத்த ஹார்முஸ் முட்டுக்கட்டை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>2025ஆம் ஆண்டின் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 11 பில்லியன் டொலரை கடந்தது</title>
		<link>https://oruvan.com/sri-lankas-export-earnings-in-2025-exceeded-11-billion/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Sep 2025 10:56:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[economy]]></category>
		<category><![CDATA[Economy of Sri Lanka]]></category>
		<category><![CDATA[ஏற்றுமதி வருமானம்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=33361</guid>

					<description><![CDATA[<p>இந்த ஆண்டின் (2025) முதல் எட்டு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 11 பில்லியன் டொலர்களை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த ஆண்டின் (2025) முதல் எட்டு மாதங்களில் மொத்த ஏற்றுமதி வருவாய் 11,554.32 மில்லியன் டொலர்களாகும். இது கடந்த ஆண்டின் (2024) இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 6.61 சதவீத அதிகரிப்பாகும். இதன் விளைவாக, இந்த ஆண்டின் (2025) முதல் எட்டு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித் துறை நேர்மறையான நிலை மற்றும் நிலையான முன்னேற்றத்தை கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lankas-export-earnings-in-2025-exceeded-11-billion/">2025ஆம் ஆண்டின் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 11 பில்லியன் டொலரை கடந்தது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்த ஆண்டின் (2025) முதல் எட்டு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 11 பில்லியன் டொலர்களை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன்படி, இந்த ஆண்டின் (2025) முதல் எட்டு மாதங்களில் மொத்த ஏற்றுமதி வருவாய் 11,554.32 மில்லியன் டொலர்களாகும்.</p>
<p>இது கடந்த ஆண்டின் (2024) இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 6.61 சதவீத அதிகரிப்பாகும்.</p>
<p>இதன் விளைவாக, இந்த ஆண்டின் (2025) முதல் எட்டு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித் துறை நேர்மறையான நிலை மற்றும் நிலையான முன்னேற்றத்தை கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இது தொடர்பாக ஏற்றுமதி மேம்பாட்டு திணைக்களத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மங்கள விஜேசிங்க கருத்து வெளியிடுகையில்,</p>
<p>“இந்த வளர்ச்சி, உலகளாவிய வர்த்தகத்தில் இலங்கையின் அதிக ஒருங்கிணைப்பையும், சந்தை வாய்ப்புகளை பல்வகைப்படுத்துவதன் மூலம் ஏற்றுமதி போட்டித்தன்மையை வலுப்படுத்தும் அதன் முயற்சிகளின் வெற்றியையும் எடுத்துக்காட்டுகிறது.</p>
<p>மாறிவரும் உலகளாவிய சந்தைக்கும் அவர்களின் மீள்தன்மைக்கும் நமது ஏற்றுமதியாளர்கள் எவ்வாறு தகவமைத்துக் கொள்கிறார்கள் என்பதையும் இது மீண்டும் ஒருமுறை காட்டுகிறது.’என்றார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lankas-export-earnings-in-2025-exceeded-11-billion/">2025ஆம் ஆண்டின் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 11 பில்லியன் டொலரை கடந்தது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வளர்ச்சியைப் பதிவு செய்த இலங்கை பொருளாதாரம்</title>
		<link>https://oruvan.com/sri-lankan-economy-records-growth/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 15 Sep 2025 13:46:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[economy]]></category>
		<category><![CDATA[growth]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Records]]></category>
		<category><![CDATA[Sri Lankan]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=32715</guid>

					<description><![CDATA[<p>இலங்கைப் பொருளாதாரம் 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 4.9 சதவீத நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இன்று (15) வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக எட்டாவது ஆண்டாகப் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த நேர்மறையான பொருளாதார வளர்ச்சி, பொருளாதார மந்தநிலையிலிருந்து தொடர்ந்து மீள்வதை எடுத்துக்காட்டுகிறது. ஒப்பீட்டளவில் குறைந்த வட்டி விகிதங்களுடன் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம், பயணிகள் போக்குவரத்து&#8217;, &#8216;நிதி சேவை நடவடிக்கைகள்&#8217;, பொருட்கள் மற்றும் சேவைகள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lankan-economy-records-growth/">வளர்ச்சியைப் பதிவு செய்த இலங்கை பொருளாதாரம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கைப் பொருளாதாரம் 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 4.9 சதவீத நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.</p>
<p>தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இன்று (15) வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>தொடர்ச்சியாக எட்டாவது ஆண்டாகப் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த நேர்மறையான பொருளாதார வளர்ச்சி, பொருளாதார மந்தநிலையிலிருந்து தொடர்ந்து மீள்வதை எடுத்துக்காட்டுகிறது.</p>
<p>ஒப்பீட்டளவில் குறைந்த வட்டி விகிதங்களுடன் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம், பயணிகள் போக்குவரத்து&#8217;, &#8216;நிதி சேவை நடவடிக்கைகள்&#8217;, பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிகள் போன்ற முக்கிய பொருளாதார நடவடிக்கைகளே பொருளாதாரம் வளர்ச்சிக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lankan-economy-records-growth/">வளர்ச்சியைப் பதிவு செய்த இலங்கை பொருளாதாரம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பாஜக தலைமையிலான மத்திய அரசு, நாட்டின் பொருளாதாரத்தை முற்றிலும் அழித்துவிட்டது &#8211; ராகுல் காந்தி</title>
		<link>https://oruvan.com/bjp-led-central-government-has-completely-destroyed-the-countrys-economy-rahul-gandhi/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Fri, 01 Aug 2025 13:03:06 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[BJP]]></category>
		<category><![CDATA[central]]></category>
		<category><![CDATA[economy]]></category>
		<category><![CDATA[Gandhi]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[Rahul]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=28214</guid>

					<description><![CDATA[<p>இந்தியப் பொருளாதாரம் இறந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதபிதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்த நிலையில் அந்த கூற்று உண்மையென மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான குறிப்பிட்ட காலவகாசத்துக்குள் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாததை தொடர்ந்து இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார். மேலும், ரஷ்யாவிடமிருந்து இராணுவ தளவாடங்கள், மசகு எண்ணெய் கொள்வனவு செய்தால் அபராதமும் விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்திருந்தார். ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/bjp-led-central-government-has-completely-destroyed-the-countrys-economy-rahul-gandhi/">பாஜக தலைமையிலான மத்திய அரசு, நாட்டின் பொருளாதாரத்தை முற்றிலும் அழித்துவிட்டது &#8211; ராகுல் காந்தி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியப் பொருளாதாரம் இறந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதபிதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்த நிலையில் அந்த கூற்று உண்மையென மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.</p>
<p>அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான குறிப்பிட்ட காலவகாசத்துக்குள் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாததை தொடர்ந்து இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.<br />
மேலும், ரஷ்யாவிடமிருந்து இராணுவ தளவாடங்கள், மசகு எண்ணெய் கொள்வனவு செய்தால் அபராதமும் விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.</p>
<p>ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவு குறித்து தனக்கு கவலை<br />
இல்லையெனவும் அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா விதிக்கும் வரிகள் உலகிலேயே மிக அதிகமானது எனவும் ட்ரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.</p>
<p>அதன்காரணமாகவே அவர்களுடன் ஒப்பீட்டளவில் குறைந்தளவான வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.</p>
<p>இந்நிலையில் பாஜக தலைமையிலான மத்திய அரசு நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை முற்றிலும் அழித்துவிட்டது எனவும் இந்த உண்மையை ட்ரம்ப் கூறியதில் எனக்கு மகிழ்ச்சி எனவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.</p>
<p>தொழிலதிபர் கௌதம்  அதானிக்கு உதவுவதற்காக பாஜக இந்திய பொருளாதாரத்தையே அழித்துவிட்டது என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/bjp-led-central-government-has-completely-destroyed-the-countrys-economy-rahul-gandhi/">பாஜக தலைமையிலான மத்திய அரசு, நாட்டின் பொருளாதாரத்தை முற்றிலும் அழித்துவிட்டது &#8211; ராகுல் காந்தி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தேசியப் பொருளாதாரத்திற்கான பெண்களின் பங்களிப்பை அதிகரித்தல் அவசியம் &#8211; பிரதமர்</title>
		<link>https://oruvan.com/it-is-necessary-to-increase-womens-contribution-to-the-national-economy-prime-minister/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 19 Mar 2025 11:45:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[economy]]></category>
		<category><![CDATA[Minister]]></category>
		<category><![CDATA[national]]></category>
		<category><![CDATA[Prime]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=15088</guid>

					<description><![CDATA[<p>உலகளாவிய ரீதியிலும் தேசிய ரீதியிலும் பொருளாதாரத் துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான வலுவான தேவை உள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து ஏற்பாடு செய்த பெண் தொழில்முயற்சியாளர் நிதிக் குறியீடு வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை அறிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், “பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் ஆண்களின் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/it-is-necessary-to-increase-womens-contribution-to-the-national-economy-prime-minister/">தேசியப் பொருளாதாரத்திற்கான பெண்களின் பங்களிப்பை அதிகரித்தல் அவசியம் &#8211; பிரதமர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>உலகளாவிய ரீதியிலும் தேசிய ரீதியிலும் பொருளாதாரத் துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான வலுவான தேவை உள்ளதாக<br />
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.</p>
<p>கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து ஏற்பாடு செய்த பெண் தொழில்முயற்சியாளர் நிதிக் குறியீடு வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை அறிவித்தார்.</p>
<p>இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,</p>
<p>“பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் ஆண்களின் சதவீதம் உலகளவில் 72% மற்றும் உள்நாட்டில் 71% ஆகும். ஆனால் அதனுடன் ஒப்பிடுகையில், பெண் பங்கேற்பு சதவீதம் முறையே 47% மற்றும் 32% வீதமாகும், பாலின வேறுபாடு தொழிற்படை பங்கேற்பில் வலுவான தாக்கத்தை கொண்டுள்ளது என்பதை இது தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.</p>
<p>பெண்கள் தொழில்முயற்சியாளர்களாக முன்னேறுவதைத் தடுக்கும் நிதி அணுகல், சந்தை, தொழிலாளர் பயிற்சி மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றில் தற்போதுள்ள கட்டமைப்புத் தடைகளை நீக்குவது மிகவும் முக்கியமானதாகும்.</p>
<p>பொதுப் போக்குவரத்து மற்றும் வேலைத்தளங்களில் உள்ள பாதுகாப்பின்மையினால் மாத்திரமன்றி, சமூக-கலாசார நியதிகளால் உருவாக்கப்பட்ட பெண்கள் மீது வீட்டுப் பொறுப்புகளை பெருமளவில் சுமத்துவதன் காரணமாகவும் இலங்கையில் பெண்கள் மேலதிக சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.</p>
<p>உலகளவில், முறைசார் நுண், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 5.2 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களும் முறைசாரா நுண், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 2.9 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்கள் உலகளாவிய நிதி இடைவெளி காணப்படுகிறது.</p>
<p>நுண், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்களைப் பொறுத்தவரை, இலங்கையின் நிதி இடைவெளி சுமார் 17 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 21% ஆகும், இதற்கு முக்கியக் காரணம் பெண்களால் நடத்தப்படும் நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகங்கள் சமமற்ற முறையில் அழுத்தங்களுக்கு உள்ளாவதாகும்.</p>
<p>பெண் தொழில்முயற்சியாளர்களுக்கான நிதி இடைவெளியை நீக்குவதன் மூலம், உலகப் பொருளாதார பெறுமதியில் 5-6 ட்ரில்லியன் அமெரிக்க டொலர் மேலதிக பொருளாதார வளர்ச்சியை அடைந்துகொள்ள முடியும்.</p>
<p>தலைமைத்துவம், செயல் முனைப்பு மற்றும் தரவு அடிப்படையிலான அணுகுமுறைகள் மூலம் பெண் தொழில்முயற்சியாளருக்கான பொருளாதார அபிவிருத்திக்கான பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் உலகளவில் செயற்படும் பெண் தொழில்முயற்சியாளர்களின் நிதி இலக்கு பற்றியும் பிரதமர் இங்கு கருத்து தெரிவித்தார்.</p>
<p>ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) ஆதரவுடன் இதனை நடைமுறைப்படுத்திய முதல் 24 நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளதுடன், 2024 ஒகஸ்ட் மாதம், பெண்கள் தலைமையிலான தொழில் முயற்சி நிறுவனங்களுக்கான தேசிய வரையறைகளை தயாரிக்கும் பணி வெற்றிகரமாக சாத்தியமானதாகவும் பிரதமர் தெரிவித்தார்.</p>
<p>இது தரவு சேகரிப்பு மற்றும் அறிக்கையிடலை மேம்படுத்தி மேலும் பயனுள்ள கொள்கை உருவாக்கத்திற்கு வழிவகுப்பதாகவும், கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நிதி உதவி மற்றும் கொள்கை ஆலோசனைகள் உட்பட ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய ஆதரவைப் பாராட்டிய பிரதமர், பெண்களை பொருளாதார ரீதியாக வலுவூட்டுவதற்கும், நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளை மேம்படுத்துவதற்கும் தேசிய கூட்டமைப்பை நிறுவுவதற்கும் அரசாங்கம் ஆதரவளிக்கும் என்று வலியுறுத்தினார்.</p>
<p>இந்நிகழ்வில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/it-is-necessary-to-increase-womens-contribution-to-the-national-economy-prime-minister/">தேசியப் பொருளாதாரத்திற்கான பெண்களின் பங்களிப்பை அதிகரித்தல் அவசியம் &#8211; பிரதமர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அரசாங்கம் சரியான திசையில் பயணிக்கிறதா? பேராசிரியர் விளக்கம்</title>
		<link>https://oruvan.com/budget-2025-to-see-reforms-at-further-stabilising-economy/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Jan 2025 07:28:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[2025]]></category>
		<category><![CDATA[Budget]]></category>
		<category><![CDATA[economy]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[stabilising]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=5208</guid>

					<description><![CDATA[<p>ஊழல், மோசடி மற்றும் தவறான நிர்வாகத்தினால் 76 வருடங்களாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டை “க்ளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் சரியான திசையில் வழிநடத்த அரசாங்கம் செயற்பட்டு வருவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பேராசிரியர் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் பொருளாதாரத்தை மேலும் ஸ்திரப்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/budget-2025-to-see-reforms-at-further-stabilising-economy/">அரசாங்கம் சரியான திசையில் பயணிக்கிறதா? பேராசிரியர் விளக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஊழல், மோசடி மற்றும் தவறான நிர்வாகத்தினால் 76 வருடங்களாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டை “க்ளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் சரியான திசையில் வழிநடத்த அரசாங்கம் செயற்பட்டு வருவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.</p>
<p>2025 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பேராசிரியர் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் பொருளாதாரத்தை மேலும் ஸ்திரப்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.</p>
<p>மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது,</p>
<p>“கடந்த 76 ஆண்டுகளாக, இலங்கை ஊழல், மோசடி மற்றும் திறமையின்மையின் கீழ் இயங்கி, நமது பொருளாதாரத்தையும் சமூகத்தையும் சரியான திசையில் இட்டுச் செல்வதைத் தடுத்தது.</p>
<p>இதனால், நெருக்கடிக்குள் தள்ளப்பட்டோம். இருப்பினும், 2024 ஆம் ஆண்டில், மீண்டெழுவதற்கான அடித்தளத்தை இட்டுள்ளோம். 5 வீத பொருளாதார வளர்ச்சியையும், தொழில்துறையில் சுமார் 10 வீத வளர்ச்சியையும் எட்டுவது சாதகமான நிலை.</p>
<p>பணவீக்கத்தைக் கணிசமாகக் கட்டுப்படுத்துவதும், வணிகச் சமூகத்தை ஊக்குவிக்கும் வகையில் வட்டி விகிதங்களைக் கொண்டுவருவதும் குறிப்பிடத்தக்க சாதனைகளாகும்” என்றார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/budget-2025-to-see-reforms-at-further-stabilising-economy/">அரசாங்கம் சரியான திசையில் பயணிக்கிறதா? பேராசிரியர் விளக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
