<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Easter Sunday Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/easter-sunday/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/easter-sunday/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sun, 20 Jul 2025 03:37:50 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Easter Sunday Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/easter-sunday/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் &#8211; நிலந்த ஜயவர்தன சேவையிலிருந்து நீக்கம்</title>
		<link>https://oruvan.com/easter-sunday-attack-incident-nilantha-jayawardena-removed-from-service/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 20 Jul 2025 03:37:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[attack]]></category>
		<category><![CDATA[Easter Sunday]]></category>
		<category><![CDATA[Jayawardena]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Nilantha]]></category>
		<category><![CDATA[removed]]></category>
		<category><![CDATA[service]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=27095</guid>

					<description><![CDATA[<p>கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் நிலந்த ஜயவர்தன உடன் அமுலாகும் வகையில் பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் லலித் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் நிலந்த ஜயவர்தன அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளராக [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/easter-sunday-attack-incident-nilantha-jayawardena-removed-from-service/">உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் &#8211; நிலந்த ஜயவர்தன சேவையிலிருந்து நீக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் நிலந்த ஜயவர்தன உடன் அமுலாகும் வகையில் பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.</p>
<p>தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் லலித் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.</p>
<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் நிலந்த ஜயவர்தன அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளராக செயற்பட்டிருந்தார்.</p>
<p>இந்த தாக்குதல் தொடர்பில் புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதிலும் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அவருக்கு எதிரான நடவடிக்கைகளை உள்ளடக்கிய சில பரிந்துரைகளை முன்வைத்திருந்தது.</p>
<p>அதற்கமைய முன்னெடுக்கப்பட்ட ஒழுக்காற்று விசாரணையில் அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டமையால் நிலந்த ஜயவர்தன சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் லலித் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/easter-sunday-attack-incident-nilantha-jayawardena-removed-from-service/">உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் &#8211; நிலந்த ஜயவர்தன சேவையிலிருந்து நீக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>யாழ் . பெரிய கோவிலில் ஈஸ்டர் நினைவேந்தல்</title>
		<link>https://oruvan.com/easter-commemoration-at-the-big-temple-in-jaffna/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 21 Apr 2025 06:13:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Easter attack]]></category>
		<category><![CDATA[Easter Sunday]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=17810</guid>

					<description><![CDATA[<p>ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் பெரிய கோவிலில் இடம்பெற்றது. யாழ்ப்பாண மறை மாவட்ட பங்குத்தந்தை கலாநிதி ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்வில் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் அவயவங்களை இழந்தவர்களுக்கான பிரார்த்தனைகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து மெளன அஞ்சலி, பொது சுடரேற்றி, மெழுகுவர்த்திகளும் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் பங்குத் தந்தைகள், பாதிரியார்கள், பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அதேவேளை தேவாலய சூழலில் பொலிஸ் விசேட [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/easter-commemoration-at-the-big-temple-in-jaffna/">யாழ் . பெரிய கோவிலில் ஈஸ்டர் நினைவேந்தல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் பெரிய கோவிலில் இடம்பெற்றது.</p>
<p>யாழ்ப்பாண மறை மாவட்ட பங்குத்தந்தை கலாநிதி ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்வில் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் அவயவங்களை இழந்தவர்களுக்கான பிரார்த்தனைகள் இடம்பெற்றன.</p>
<p>அதனைத் தொடர்ந்து மெளன அஞ்சலி, பொது சுடரேற்றி, மெழுகுவர்த்திகளும் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.</p>
<p>நிகழ்வில் பங்குத் தந்தைகள், பாதிரியார்கள், பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
<p>அதேவேளை தேவாலய சூழலில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிசார் குவிக்கப்பட்டு , பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.</p>
<p>The post <a href="https://oruvan.com/easter-commemoration-at-the-big-temple-in-jaffna/">யாழ் . பெரிய கோவிலில் ஈஸ்டர் நினைவேந்தல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை சிஐடி வசம் &#8211; விசாரணைக்கு சிறப்பு குழு நியமிப்பு</title>
		<link>https://oruvan.com/cid-receives-report-of-presidential-commission-on-easter-sunday-attacks-special-committee-appointed-to-investigate/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 20 Apr 2025 08:58:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CID]]></category>
		<category><![CDATA[Easter attack]]></category>
		<category><![CDATA[Easter Sunday]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=17761</guid>

					<description><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை விசாரிக்க குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்னதாக இன்று காலை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் குற்றப் புலனாய்வுத் துறைக்கு கையளிக்கப்பட்டது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் ஆவணங்கள் அடங்கிய தொகுதிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/cid-receives-report-of-presidential-commission-on-easter-sunday-attacks-special-committee-appointed-to-investigate/">உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை சிஐடி வசம் &#8211; விசாரணைக்கு சிறப்பு குழு நியமிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை விசாரிக்க குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>முன்னதாக இன்று காலை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் குற்றப் புலனாய்வுத் துறைக்கு கையளிக்கப்பட்டது.</p>
<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் ஆவணங்கள் அடங்கிய தொகுதிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் இன்று (20) குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன.</p>
<p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன், ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில், உயிர்த்த தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் துரிதமாகவும் புதிய திசையிலும் முன்னெடுக்கப்பட்டன.</p>
<p>அதன்படி, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் ஆறாவது ஆண்டு நிறைவில், இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் குறித்து சுயாதீனமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்வதில் அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p>
<p>இந்தக் குற்றத்தை கால ஓட்டத்தில் மறைந்து விடாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என்று உத்தரவாதத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/cid-receives-report-of-presidential-commission-on-easter-sunday-attacks-special-committee-appointed-to-investigate/">உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை சிஐடி வசம் &#8211; விசாரணைக்கு சிறப்பு குழு நியமிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மட்டக்களப்பில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உயித்த ஞாயிறு விசேட ஆராதனைகள்</title>
		<link>https://oruvan.com/special-easter-sunday-services-held-amid-tight-security-in-batticaloa/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 20 Apr 2025 05:32:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[batticaloa]]></category>
		<category><![CDATA[Batticaloa News]]></category>
		<category><![CDATA[Easter Sunday]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=17731</guid>

					<description><![CDATA[<p>மட்டக்களப்பில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) காலையில் இடம்பெற்றுள்ளன. இன்று உயிர்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு மாவட்டதிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் இடம்பெற்றிருந்தன. இதனையடுத்து தேவாலயங்களில் பொலிஸார் இராணுவத்தினர் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் கடந்த 2019 ஏப்பில் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தில் சியோன் தேவாலயங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்மை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/special-easter-sunday-services-held-amid-tight-security-in-batticaloa/">மட்டக்களப்பில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உயித்த ஞாயிறு விசேட ஆராதனைகள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மட்டக்களப்பில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) காலையில் இடம்பெற்றுள்ளன.</p>
<p>இன்று உயிர்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு மாவட்டதிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் இடம்பெற்றிருந்தன.</p>
<p>இதனையடுத்து தேவாலயங்களில் பொலிஸார் இராணுவத்தினர் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்</p>
<p>கடந்த 2019 ஏப்பில் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தில் சியோன் தேவாலயங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்மை குறிப்பிடத்தக்கது.</p>
<p>இதேவேளை, உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் கிளிநொச்சி மாவட்டத்தில் பல தேவாலயங்களில் நடைபெற்றன.</p>
<p>இதன்படி, முறிகண்டி தென்னிந்திய திருச்சபையில் சிறப்பு வழிபாடு முன்னெடுக்கப்பட்டது.</p>
<p>உயிர்ப்பின் செய்தியை தாங்கிய சாட்சி பவணயைத் தொடர்ந்து வழிபாடு ஆரம்பமானது.</p>
<p>திருச்சபையின் சிரேஸ்ட குருவாகிய வண பிதா எஸ்.குகனேஸ்வரன் திருப்பலியை ஒப்புக் கொடுத்து ஆசி வழங்கினார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/special-easter-sunday-services-held-amid-tight-security-in-batticaloa/">மட்டக்களப்பில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உயித்த ஞாயிறு விசேட ஆராதனைகள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
