<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Dubai Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/dubai/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/dubai/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Mon, 16 Mar 2026 04:39:16 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Dubai Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/dubai/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>துபாய் விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல் &#8211; விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்</title>
		<link>https://oruvan.com/drone-attack-near-dubai-airport-flight-services-temporarily-suspended/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 16 Mar 2026 04:39:16 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dubai]]></category>
		<category><![CDATA[Dubai AirPort]]></category>
		<category><![CDATA[Iran War]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=46870</guid>

					<description><![CDATA[<p>துபாய் விமான நிலையத்திற்கு அருகே ட்ரோன் தாக்குதலால் ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், விமான நிலையத்திற்கு செல்லும் விமானங்கள் வேறு இடங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக துபாய் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. துபாய் அதிகாரிகளின் கூற்றுப்படி, விமான நிலையத்தில் உள்ள எரிபொருள் தொட்டியை குறிவைத்து ஒரு ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை துபாய் விமான நிலையத்திற்குச் செல்லும் விமானங்கள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/drone-attack-near-dubai-airport-flight-services-temporarily-suspended/">துபாய் விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல் &#8211; விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>துபாய் விமான நிலையத்திற்கு அருகே ட்ரோன் தாக்குதலால் ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், விமான நிலையத்திற்கு செல்லும் விமானங்கள் வேறு இடங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்நிலையில், குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக துபாய் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.</p>
<p>துபாய் அதிகாரிகளின் கூற்றுப்படி, விமான நிலையத்தில் உள்ள எரிபொருள் தொட்டியை குறிவைத்து ஒரு ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை</p>
<p>துபாய் விமான நிலையத்திற்குச் செல்லும் விமானங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன. அதே நேரத்தில் துபாய்க்கு செல்லும் விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.</p>
<p><a href="https://x.com/SriLankaTweet/status/2033365298108309933?s=20">https://x.com/SriLankaTweet/status/2033365298108309933?s=20</a></p>
<p>உலகளாவிய விமான கண்காணிப்பு வலைத்தளம் விமான விவரங்களை வெளியிட்டது.</p>
<p>முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துபாய் விமான நிலையத்திலிருந்து விமானங்களை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக துபாய் அரச அலுவலகம் தெரிவித்துள்ளது.</p>
<p>விமான அட்டவணைகளுக்கு பயணிகள் தொடர்புடைய விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும், நிலைமை மேம்படும் வரை விமானங்கள் நிறுத்தப்படுவது தொடரும் என்றும் துபாய் அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>
<p>துபாய் விமான நிலையத்திற்கு பயணிக்க வேண்டாம் என்று விமான நிறுவனங்கள் பயணிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது, விமானங்கள் குறித்த கூடுதல் புதுப்பிப்புகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>துபாய் மற்றும் தோஹாவின் குறிப்பிட்ட பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று ஈரான் முன்னர் எச்சரிக்கை விடுத்திருந்தது.</p>
<p>தாக்குதல்கள் காரணமாக துபாய் மற்றும் தோஹாவின் சில பகுதிகளில் வசிப்பவர்கள் அடுத்த சில மணிநேரங்களில் வெளியேற வேண்டும் என்று ஈரானின் ஊடக செயல்பாட்டு மையம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/drone-attack-near-dubai-airport-flight-services-temporarily-suspended/">துபாய் விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல் &#8211; விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>துபாயில் கைது செய்யப்பட்ட குற்றக் கும்பலை சேர்தவர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்</title>
		<link>https://oruvan.com/members-of-a-criminal-gang-arrested-in-dubai-brought-back-to-the-country/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 16 Jan 2026 04:56:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#police]]></category>
		<category><![CDATA[BIA]]></category>
		<category><![CDATA[Dubai]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=43239</guid>

					<description><![CDATA[<p>துபாயில் தலைமறைவாக இருந்த நிலையில், கைது செய்யப்பட்ட இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளும், பணமோசடி வழக்கு விசாரணைக்காகத் தேடப்பட்ட ஒரு பெண்ணும் சிறப்பு காவல்துறை அதிகாரிகளால் இன்று (16) அதிகாலை கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இன்று அதிகாலை 5.20 மணியளவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-226 மூலம் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அவர்கள் அழைத்து வரப்பட்டனர். இவர்களில் எல்பிட்டிய, ஊரகஹா பகுதியைச் சேர்ந்த புஞ்சா என [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/members-of-a-criminal-gang-arrested-in-dubai-brought-back-to-the-country/">துபாயில் கைது செய்யப்பட்ட குற்றக் கும்பலை சேர்தவர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>துபாயில் தலைமறைவாக இருந்த நிலையில், கைது செய்யப்பட்ட இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளும், பணமோசடி வழக்கு விசாரணைக்காகத் தேடப்பட்ட ஒரு பெண்ணும் சிறப்பு காவல்துறை அதிகாரிகளால் இன்று (16) அதிகாலை கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.</p>
<p>இன்று அதிகாலை 5.20 மணியளவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-226 மூலம் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அவர்கள் அழைத்து வரப்பட்டனர்.</p>
<p>இவர்களில் எல்பிட்டிய, ஊரகஹா பகுதியைச் சேர்ந்த புஞ்சா என அழைக்கப்படும் 52 வயதான ரவின் சமிந்த வீரசிங்க மற்றும் கந்தானை பகுதியைச் சேர்ந்த கிரில்தெனியகே டொன் ரசிக சஞ்சீவ குமார என்ற 30 வயதுடைய சுட்டி மல்லி ஆகியோர் அடங்குவர்.</p>
<p>அவர்கள் இருவரும் போதைப்பொருள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், கொள்ளை மற்றும் கொலை ஆகிய குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>மேலும், அரசாங்க பண மோசடி வழக்கு தொடர்பான பொலிஸ் விசாரணைகளுக்கு தேடப்பட்டு வந்த ரத்மலானையைச் சேர்ந்த 56 வயதுடைய நிஷாமணி டி சில்வா என்ற பெண்ணும் கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.</p>
<p>இன்று காலை 06.50 மணிக்கு புஞ்சா என்கிற ரவீன் சமிந்தவை மேற்கு வடக்கு பேலியகொட பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கும், ரசிக சஞ்சீவ என்கிற சுட்டி மல்லியையும் எல்பிட்டிய பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கும், நிஷாமணி டி சில்வாவை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையக அலுவலகத்திற்கும் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/members-of-a-criminal-gang-arrested-in-dubai-brought-back-to-the-country/">துபாயில் கைது செய்யப்பட்ட குற்றக் கும்பலை சேர்தவர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நாடு கடத்தப்பட்ட ஸ்ரீதரன் நிரஞ்சன் விமான நிலையத்தில் கைது</title>
		<link>https://oruvan.com/deported-sridharan-niranjan-arrested-at-the-airport/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Oct 2025 06:09:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[BIA]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[Dubai]]></category>
		<category><![CDATA[Peliyagoda]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=34061</guid>

					<description><![CDATA[<p>துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட சந்தேக நபரான ஸ்ரீதரன் நிரஞ்சன் என்ற &#8216;டிங்கர்&#8217; கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் சந்தேநபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பேலியகொட பொலிஸ் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 36 வயதான சந்தேகநபர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/deported-sridharan-niranjan-arrested-at-the-airport/">நாடு கடத்தப்பட்ட ஸ்ரீதரன் நிரஞ்சன் விமான நிலையத்தில் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட சந்தேக நபரான ஸ்ரீதரன் நிரஞ்சன் என்ற &#8216;டிங்கர்&#8217; கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் சந்தேநபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பேலியகொட பொலிஸ் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p>
<p>கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 36 வயதான சந்தேகநபர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மேலும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான &#8220;கொச்சிக்கடை ஷிரான்&#8221; இன் சீடராகவும் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p>
<p>கிரேண்ட்பாஸ் &#8211; மஹவத்த பொது மயானத்திற்கு அருகில் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றத்துடன் சந்தேகநபருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மேலும், கடந்த மாதம் பேலியகொட ஸ்ரீ ஞானரத்ன மாவத்தையில் ஒருவரை சுட்டுக் கொலை குற்றத்தைச் செய்யத் தேவையான துப்பாக்கிகளை கொண்டு சென்றதற்காகவும் சந்தேகநபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p>
<p>எவ்வாறாயினும், சந்தேகநபருக்கு பயணத் தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும் அவர் கடந்த ஓகஸ்ட் 19ஆம் திகதி நாட்டை விட்டு தப்பிச் சென்றிருந்தமை தெரியவந்துள்ளது.</p>
<p>இந்நிலையில், துபாயில் இருந்து அவர் நாடு கடத்தப்பட்ட நிலையில் இன்று அதிகாலை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/deported-sridharan-niranjan-arrested-at-the-airport/">நாடு கடத்தப்பட்ட ஸ்ரீதரன் நிரஞ்சன் விமான நிலையத்தில் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மித்தெனிய முக்கொலைச் சம்பவம் &#8211; துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்ற ஒருவர் கைது</title>
		<link>https://oruvan.com/middeniya-triple-murder-incident-man-arrested-for-trying-to-flee-to-dubai/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Mar 2025 02:56:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[arrested]]></category>
		<category><![CDATA[bandaranaike international airport]]></category>
		<category><![CDATA[BIA]]></category>
		<category><![CDATA[Dubai]]></category>
		<category><![CDATA[Middeniya shooting incident]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=14426</guid>

					<description><![CDATA[<p>மித்தெனிய பகுதியில் நடந்த மூன்று கொலை சம்பவத்தின் முக்கிய சந்தேக நபர் ஒருவர் நேற்று இரவு துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நாட்டை விட்டு வெளியேறும் முயற்சியாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) வந்திருந்த போது குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலைச் சம்பவம் கடந்த மாதம் 18ஆம் திகதி மித்தெனியவில் பதிவாகியுள்ளன. சந்தேக நபர் கட்டுவான, அகுலந்தெனிய பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இன்று [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/middeniya-triple-murder-incident-man-arrested-for-trying-to-flee-to-dubai/">மித்தெனிய முக்கொலைச் சம்பவம் &#8211; துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்ற ஒருவர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மித்தெனிய பகுதியில் நடந்த மூன்று கொலை சம்பவத்தின் முக்கிய சந்தேக நபர் ஒருவர் நேற்று இரவு துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>சந்தேகநபர் நாட்டை விட்டு வெளியேறும் முயற்சியாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) வந்திருந்த போது குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>இந்த படுகொலைச் சம்பவம் கடந்த மாதம் 18ஆம் திகதி மித்தெனியவில் பதிவாகியுள்ளன. சந்தேக நபர் கட்டுவான, அகுலந்தெனிய பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p>
<p>இன்று காலை 8:15 மணிக்கு துபாய்க்கு புறப்பட்ட எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் EK-653 விமானத்தில் ஏறுவதற்காக அவர் விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.</p>
<p>விமான நிலைய குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்ட பின்னர், மித்தெனிய பொலிஸ் சிறப்பு அதிகாரிகள் குழு விமான நிலையத்திற்கு வந்து மேலதிக விசாரணைகளுக்காக அவரைக் காவலில் எடுத்துள்ளது.</p>
<p>சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/middeniya-triple-murder-incident-man-arrested-for-trying-to-flee-to-dubai/">மித்தெனிய முக்கொலைச் சம்பவம் &#8211; துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்ற ஒருவர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>துப்பாக்கியுடன் துபாய்க்குத் தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் &#8211; காதலியிடம் விசாரணை</title>
		<link>https://oruvan.com/police-constable-who-fled-to-dubai-with-gun-girlfriend-questioned/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Feb 2025 02:12:12 +0000</pubDate>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[#police]]></category>
		<category><![CDATA[Dubai]]></category>
		<category><![CDATA[Investcation]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=10358</guid>

					<description><![CDATA[<p>T-56 துப்பாக்கியுடன் துபாய்க்குத் தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிளின் காதலி எனக் கூறும் நடன ஆசிரியை ஒருவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்தனர். எஹெலியகொடவில் உள்ள நடன ஆசிரியரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே துபாய்க்கு தப்பிச் சென்றுள்ள பொலிஸ் கான்ஸ்டபிள், துபாய்க்குச் செல்வதற்கு முன்பு எஹெலியகொட பகுதியில் நடன ஆசிரியரைச் சந்தித்து, பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து நாட்டை விட்டு வெளியேறியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், கல்கிசை பிரிவுக்குப் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/police-constable-who-fled-to-dubai-with-gun-girlfriend-questioned/">துப்பாக்கியுடன் துபாய்க்குத் தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் &#8211; காதலியிடம் விசாரணை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>T-56 துப்பாக்கியுடன் துபாய்க்குத் தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிளின் காதலி எனக் கூறும் நடன ஆசிரியை ஒருவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>எஹெலியகொடவில் உள்ள நடன ஆசிரியரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p>
<p>ஏற்கனவே துபாய்க்கு தப்பிச் சென்றுள்ள பொலிஸ் கான்ஸ்டபிள், துபாய்க்குச் செல்வதற்கு முன்பு எஹெலியகொட பகுதியில் நடன ஆசிரியரைச் சந்தித்து, பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து நாட்டை விட்டு வெளியேறியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p>
<p>இந்நிலையில், கல்கிசை பிரிவுக்குப் பொறுப்பான மூத்த காவல்துறை கண்காணிப்பாளரின் அறிவுறுத்தலின் பேரில், கல்கிசை பொலிஸ் தலைமையகத்தால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p>
<p>The post <a href="https://oruvan.com/police-constable-who-fled-to-dubai-with-gun-girlfriend-questioned/">துப்பாக்கியுடன் துபாய்க்குத் தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் &#8211; காதலியிடம் விசாரணை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>உயிரிழந்த மகளையும், உயிருக்கு போராடும் மகளையும் விரைந்து மீட்டு தாருங்கள் &#8211; ஜனாதிபதியிடம் உருக்கமான கோரிக்கை</title>
		<link>https://oruvan.com/please-quickly-rescue-the-deceased-daughter-and-the-daughter-who-is-fighting-for-her-life/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Jan 2025 06:01:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dubai]]></category>
		<category><![CDATA[Oman]]></category>
		<category><![CDATA[பணிப் பெண்]]></category>
		<category><![CDATA[வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்]]></category>
		<category><![CDATA[ஹம்பாந்தோட்டை]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=5149</guid>

					<description><![CDATA[<p>பணிப்பெண்ணாக வெளிநாடு சென்ற நிலையில், உயிரிழந்த தனது இளைய மகளனி உடலை கொண்டுவரவும், உயிருக்கு போராடும் மூத்த மகளையும் நாட்டிற்கு அழைத்துவரவும் அவர்களின் பெற்றோர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஹம்பாந்தோட்டை பிரதேசத்தின் சுசி கிராமத்தை சேர்ந்த பெற்றோரே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்களின் இரு மகள்கள் வெளிநாட்டிற்கு பணிப்பெண்ணாகச் சென்ற நிலையில் அவர்களில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் உள்ள சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரின் தலையீட்டினால் இவர்கள் இருவரும் ஓமானுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/please-quickly-rescue-the-deceased-daughter-and-the-daughter-who-is-fighting-for-her-life/">உயிரிழந்த மகளையும், உயிருக்கு போராடும் மகளையும் விரைந்து மீட்டு தாருங்கள் &#8211; ஜனாதிபதியிடம் உருக்கமான கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பணிப்பெண்ணாக வெளிநாடு சென்ற நிலையில், உயிரிழந்த தனது இளைய மகளனி உடலை கொண்டுவரவும், உயிருக்கு போராடும் மூத்த மகளையும் நாட்டிற்கு அழைத்துவரவும் அவர்களின் பெற்றோர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
<p>ஹம்பாந்தோட்டை பிரதேசத்தின் சுசி கிராமத்தை சேர்ந்த பெற்றோரே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
<p>இவர்களின் இரு மகள்கள் வெளிநாட்டிற்கு பணிப்பெண்ணாகச் சென்ற நிலையில் அவர்களில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் உள்ள சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரின் தலையீட்டினால் இவர்கள் இருவரும் ஓமானுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.</p>
<p>இதில் 22 வயதான யுவதி ஓமானில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். உயிரிழந்த யுவதியின் 24 வயதான மூத்த சகோதரி துபாயில் பணிபுரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>வெளிநாட்டில் பணிப்புரியும் இந்த இரண்டு யுவதிகளும் கடுமையாக துன்புறுத்தப்பட்டதாகவும், ஊதியம் வழங்காம் தனித் தனி வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.</p>
<p>இரண்டு யுவதிகளும் இலங்கையில் உள்ள தங்கள் பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறி, தங்களை மீட்குமாறு கேட்டுக் கொண்டனர்.</p>
<p>அதன்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்ய அவர்களது பெற்றோர் சென்றிருந்த போதிலும், முறைப்பாட்டை ஏற்க பணியகம் மறுத்துள்ளதாக கூறப்படுகின்றது.</p>
<p>மகள்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு சுமார் எட்டு லட்சம் வரை செலவாகும் என பணியகத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாக பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர். பின்னர், இந்த சம்பவம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்தனர்.</p>
<p>இபெற்றோர்கள் வெளிவிவகார அமைச்சுக்கு முறைப்பாடு செய்ய வந்த போது சமுர்த்தி உத்தியோகத்தர் வீட்டிற்கு வந்து ஏன் இவ்வாறு முறைப்பாடு செய்தீர்கள் என வினவியதுடன் அவர்களை அச்சுறுத்தியுள்ளார்.</p>
<p>எவ்வாறாயினும், குறித்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஹம்பாந்தோட்டை நிர்வாக வளாகத்தில் கடமையாற்றும் நபர் எனவும், சில காலமாக துபாய், ஓமன், போன்ற நாடுகளுக்கு மனித கடத்தலில் ஈடுபட்டு வந்தவர் எனவும் மேலதிக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.</p>
<p>தனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து வெளிவிவகார அமைச்சில் முறைப்பாடு செய்ததன் பேரில், தனது மகள் கொல்லப்பட்டிருக்கலாம் என, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட யுவதியின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.</p>
<p>இந்நிலையில், 24 வயதான மூத்த மகள் தன்னை விரைந்து மீட்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக யுவதியின் தாய் தெரிவித்துள்ளார்.</p>
<p>ஹம்பாந்தோட்டை சுசி கிராமத்தில் தகரங்களால் ஆன சிறிய வீட்டில் குடும்பம் வாழ்ந்து வருவதாகவும், உயிரிழந்த மகளின் சடலத்தை நாட்டிற்கு கொண்டு வர முடியவில்லை என பெற்றோர்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.</p>
<p>பத்து குழந்தைகளைக் கொண்ட இந்தக் குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் இருப்பதும், அவர்கள் தகரக் கொட்டகையில் வசித்து வருவதும் தெரியவந்தது.</p>
<p>குறித்த குடும்பத்தின் தந்தை தற்போது சுகவீனமடைந்துள்ளதாகவும், குறித்த யுவதிகள் இருவரும் வீடு கட்டும் நம்பிக்கையிலும் தந்தைக்கு சிகிச்சை அளிக்கும் நம்பிக்கையிலும் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>இது தொடர்பில் ஹம்பாந்தோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்ய சென்றதாகவும், ஆனால் பொலிஸார் முறைப்பாட்டினை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/please-quickly-rescue-the-deceased-daughter-and-the-daughter-who-is-fighting-for-her-life/">உயிரிழந்த மகளையும், உயிருக்கு போராடும் மகளையும் விரைந்து மீட்டு தாருங்கள் &#8211; ஜனாதிபதியிடம் உருக்கமான கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
