<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Disaster Death toll Rises Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/disaster-death-toll-rises/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/disaster-death-toll-rises/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Mon, 05 Jan 2026 04:08:54 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Disaster Death toll Rises Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/disaster-death-toll-rises/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இயல்பு நிலைக்கு திரும்பிய பாடசாலைகள்!</title>
		<link>https://oruvan.com/schools-back-to-normal/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 05 Jan 2026 04:08:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Badulla]]></category>
		<category><![CDATA[Cyclone Ditwah]]></category>
		<category><![CDATA[Disaster Damage]]></category>
		<category><![CDATA[Disaster Death toll Rises]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=42364</guid>

					<description><![CDATA[<p>சீரற்ற வானிலை மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட பதுளை மாவட்டத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும், புதிய கல்வி ஆண்டின் முதலாம் தவணைக்காக இன்றுமுதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மாவட்டச் செயலாளர் பிரபாத் அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக நிலவிய கடும் மழை மற்றும் நிலச்சரிவு அபாயம் காரணமாக இந்தப் பாடசாலைகள் மூடப்பட்டிருந்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கான தற்காலிகத் தங்குமிடங்களாகவும் சில பாடசாலைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது நிலைமை சீரடைந்துள்ளதால், அனைத்துப் பாடசாலைகளையும் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் தயார்படுத்தியுள்ளதாக [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/schools-back-to-normal/">இயல்பு நிலைக்கு திரும்பிய பாடசாலைகள்!</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சீரற்ற வானிலை மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட பதுளை மாவட்டத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும், புதிய கல்வி ஆண்டின் முதலாம் தவணைக்காக இன்றுமுதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.</p>
<p>மாவட்டச் செயலாளர் பிரபாத் அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார்.</p>
<p>கடந்த சில நாட்களாக நிலவிய கடும் மழை மற்றும் நிலச்சரிவு அபாயம் காரணமாக இந்தப் பாடசாலைகள் மூடப்பட்டிருந்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கான தற்காலிகத் தங்குமிடங்களாகவும் சில பாடசாலைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன.</p>
<p>தற்போது நிலைமை சீரடைந்துள்ளதால், அனைத்துப் பாடசாலைகளையும் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் தயார்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>அதேபோல், அனர்த்த நிலைமையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மத்திய மாகாணத்திலும் பாடசாலைகளைத் திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p>
<p>மத்திய மாகாணத்திலுள்ள மொத்தமான 1,507 பாடசாலைகளில், 1,494 பாடசாலைகளை நாளை முதல் வழமைப்போல் இயக்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாகாணக் கல்வி அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.</p>
<p>எஞ்சிய சில பாடசாலைகளில் மட்டும் துப்புரவுப் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p>
<p>மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே பாடசாலைகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>
<p>எனினும், நிலச்சரிவு அபாயம் இன்னும் முழுமையாக நீங்காத பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p>
<p>நீண்ட இடைவேளைக்குப் பிறகு இன்று மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படுவதால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது</p>
<p>The post <a href="https://oruvan.com/schools-back-to-normal/">இயல்பு நிலைக்கு திரும்பிய பாடசாலைகள்!</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட சேதங்கள் &#8211; 266 குள நீர்வழிப் பாதைகளை மதிப்பிடும் பணிகள் ஆரம்பம்</title>
		<link>https://oruvan.com/flood-damage-assessment-work-begins-for-266-pond-waterways/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Dec 2025 04:34:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Cyclone Ditwah]]></category>
		<category><![CDATA[Disaster Damage]]></category>
		<category><![CDATA[Disaster Death toll Rises]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=41840</guid>

					<description><![CDATA[<p>சமீபத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட சேதங்களைத் தொடர்ந்து, 266 குள நீர்வழிப் பாதைகளை மதிப்பிடும் ஆய்வை மேற்கொள்ள நீர்ப்பாசனத் திணைக்களம் ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளது. நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் மேலாண்மை இயக்குநர், கூறுகையில், ஆய்வுத் திட்டம் அடுத்த மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். துறையின் கீழ் உள்ள முக்கிய நதிப் படுகைகள், நடுத்தர அளவிலான ஆறுகள் மற்றும் சேமிப்புத் தொட்டிகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும். விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள தேவையான இடங்களில் தேசிய [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/flood-damage-assessment-work-begins-for-266-pond-waterways/">வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட சேதங்கள் &#8211; 266 குள நீர்வழிப் பாதைகளை மதிப்பிடும் பணிகள் ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சமீபத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட சேதங்களைத் தொடர்ந்து, 266 குள நீர்வழிப் பாதைகளை மதிப்பிடும் ஆய்வை மேற்கொள்ள நீர்ப்பாசனத் திணைக்களம் ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளது.</p>
<p>நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் மேலாண்மை இயக்குநர், கூறுகையில், ஆய்வுத் திட்டம் அடுத்த மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.</p>
<p>துறையின் கீழ் உள்ள முக்கிய நதிப் படுகைகள், நடுத்தர அளவிலான ஆறுகள் மற்றும் சேமிப்புத் தொட்டிகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும்.</p>
<p>விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள தேவையான இடங்களில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம்(NBRO) மற்றும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் உதவியைப் பெற முடியும் என்றும் அவர் கூறினார்.</p>
<p>வெள்ளப்பெருக்கு காரணமாக பல சிறிய நீர்த்தேக்கங்கள் மணலால் நிரம்பியுள்ளதாகவும், சரியான நிலை மதிப்பீடுகள் முடிந்த பின்னரே மணல் அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.</p>
<p>பிரதான நீர்த்தேக்கங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் காணப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.</p>
<p>வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட 218 நதி நீர்த்தேக்கங்கள் மற்றும் குளக் கரைகளுக்கு ஏற்பட்ட சேதங்களை நீர்ப்பாசனத் திணைக்களம் ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளது.</p>
<p>மேலும் மறுசீரமைப்புப் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.</p>
<p>சேதமடைந்த பிரதான ஆறுகள் மற்றும் குளக் கரைகளை பழுதுபார்ப்பதற்காக அரசாங்கம் 23 பில்லியன் ரூபாவிற்கு அதிகமாக ஒதுக்கியுள்ளது.</p>
<p>வரவிருக்கும் பெரும்போகத்திற்கு சரியான நேரத்தில் தண்ணீர் திறந்துவிடப்படுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/flood-damage-assessment-work-begins-for-266-pond-waterways/">வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட சேதங்கள் &#8211; 266 குள நீர்வழிப் பாதைகளை மதிப்பிடும் பணிகள் ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்ட அரசாங்கம் திட்டம்</title>
		<link>https://oruvan.com/government-plans-to-convene-international-donor-conference/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 15 Dec 2025 05:31:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cyclone Ditwah]]></category>
		<category><![CDATA[Disaster Death toll Rises]]></category>
		<category><![CDATA[Ditwah]]></category>
		<category><![CDATA[Vijitha Herath]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=40643</guid>

					<description><![CDATA[<p>பேரிரை தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான உதவியைப் பெறுவதற்காக சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்ட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இதனை தெரிவித்துள்ளார். உலக வங்கி மற்றும் தொடர்புடைய அரசு நிறுவனங்களால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மதிப்பீடுகள் முடிந்த பின்னர் இந்த மாநாடு நடத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார். கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட பேரிடரில் இதுவரை 600க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், பலர் காணாமல் போயுள்ளனர். மேலும், நெடுஞ்சாலைகள், மின் இணைப்புகள், நீர்ப்பாசன [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/government-plans-to-convene-international-donor-conference/">சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்ட அரசாங்கம் திட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பேரிரை தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான உதவியைப் பெறுவதற்காக சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்ட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.</p>
<p>வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.</p>
<p>உலக வங்கி மற்றும் தொடர்புடைய அரசு நிறுவனங்களால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மதிப்பீடுகள் முடிந்த பின்னர் இந்த மாநாடு நடத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.</p>
<p>கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட பேரிடரில் இதுவரை 600க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், பலர் காணாமல் போயுள்ளனர்.</p>
<p>மேலும், நெடுஞ்சாலைகள், மின் இணைப்புகள், நீர்ப்பாசன குளங்கள் மற்றும் கால்வாய்கள் மற்றும் கட்டிடங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டிருந்தது.</p>
<p>சுமார் ஆறு முதல் ஏழு பில்லியன் டொலர் வரையான சேதம் ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையர் மதிப்பிட்டுள்ளார்.</p>
<p>மறுகட்டமைப்புக்கான நிதி ஆதாரங்களைத் திரட்டுவதற்காக, அரசாங்கம் ஏற்கனவே இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் நிதியத்தை நிறுவியுள்ளது. அந்த நிதியத்திற்கு இதுவரை 3.4 பில்லியன் ரூபா நன்கொடையாக கிடைத்துள்ளது.</p>
<p>பேரிடரின் போது, இந்தியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், ரஷ்யா, சீனா, ஐக்கிய இராச்சியம், மாலைத்தீவுகள், பங்களாதேஷ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உதவிகளை வழங்கியிருந்தன.</p>
<p>இந்நிலையில், சர்வதேச கொடையாளர் மாநாட்டை நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/government-plans-to-convene-international-donor-conference/">சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்ட அரசாங்கம் திட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பேரிடரில் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடரும்</title>
		<link>https://oruvan.com/search-operations-to-continue-for-those-missing-in-the-disaster/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 11 Dec 2025 05:45:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cyclone Ditwah]]></category>
		<category><![CDATA[Damage caused by Cyclone Ditwah in Sri Lanka]]></category>
		<category><![CDATA[Disaster Damage Details]]></category>
		<category><![CDATA[Disaster Death toll Rises]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=40411</guid>

					<description><![CDATA[<p>பேரிடரில் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவினர்கள் வேறுவிதமாகக் கோராவிட்டால் அல்லது அரசாங்கம் அவற்றை நிறுத்துவதற்கு கொள்கை முடிவை எடுக்காவிட்டால், மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் தேடுதல் நடவடிக்கைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 4.00 மணி வரை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கையின்படி, 193 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் 639 பேர் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டது. நவம்பர் 28 அன்று டித்வா சூறாவளி பாரிய மண் சரிவை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/search-operations-to-continue-for-those-missing-in-the-disaster/">பேரிடரில் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடரும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பேரிடரில் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவினர்கள் வேறுவிதமாகக் கோராவிட்டால் அல்லது அரசாங்கம் அவற்றை நிறுத்துவதற்கு கொள்கை முடிவை எடுக்காவிட்டால், மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் தேடுதல் நடவடிக்கைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>நேற்று மாலை 4.00 மணி வரை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கையின்படி, 193 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் 639 பேர் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டது.</p>
<p>நவம்பர் 28 அன்று டித்வா சூறாவளி பாரிய மண் சரிவை ஏற்படுத்தியது, இதனால், நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள், மின் இணைப்புகள், நீர்ப்பாசன குளங்கள் மற்றும் கால்வாய்கள் உள்ளிட்ட நாட்டின் உள்கட்டமைப்பு கடும் சேதத்தை சந்தித்தது.</p>
<p>மலைப்பாங்கான மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புக் குழுவினர் இன்னும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
<p>காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவினர்கள் அவர்களை கைவிடுமாறு கோராவிட்டால், அவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தொடரும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.</p>
<p>தேடுதல் நடவடிக்கைகள் பகல் நேரத்தில் நடத்தப்படுகின்றன. இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த மீட்புக் குழுவினர், மோப்ப நாய்களுடன், இந்த முயற்சிகளுக்கு உதவுவி வருகின்றனர்.</p>
<p>மழை தொடர்ந்தால் மீட்புப் பணிகளில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.</p>
<p>ஏற்கனவே, நாடு முழுவதும் ஏற்பட்ட மோசமான வானிலையால் 1.8 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>இந்நிலையில் மீட்பு பணிகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள சுற்றுச்சூழல் அமைச்சர் கலாநிதி தம்மிக படபெந்தி, சில நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் தேடுதல் நடவடிக்கைகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.</p>
<p>&#8220;சில இடங்களில், நிலச்சரிவுகள் இன்னும் தீவிரமாக உள்ளன. தேடுதல் நடவடிக்கைகளுக்காக அந்த இடங்களை அடைவது ஆபத்தானது. உதாரணமாக, துல்ஹிரியாவில் மக்களை மீட்க விரைந்த மூன்று பேர் மீது மண் மேடு சரிந்து விழுந்து உயிருடன் புதைந்தனர்.</p>
<p>மேலும், சில இடங்களில், தேடல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன, ஏனெனில் அந்த பணியை தொடர்வது மிகவும் கடினமாக உள்ளது,&#8221; என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>எவ்வாறாயினும், தேடுதல் நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து அரசாங்கம் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/search-operations-to-continue-for-those-missing-in-the-disaster/">பேரிடரில் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடரும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>85,000க்கும் மேற்பட்டோர் இன்னும் தங்குமிடங்களில்!!</title>
		<link>https://oruvan.com/more-than-85000-people-still-in-shelters/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 11 Dec 2025 05:10:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Cyclone Ditwah]]></category>
		<category><![CDATA[Disaster Damage Details]]></category>
		<category><![CDATA[Disaster Death toll Rises]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=40405</guid>

					<description><![CDATA[<p>நவம்பர் 16 ஆம் திகதி முதல் இன்று (11) வரை நாட்டைப் பாதித்த மோசமான வானிலை காரணமாக 85,000 க்கும் மேற்பட்டோர் இன்னும் தற்காலிக தங்குமிடங்களில் வசித்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இன்று (11) காலை 6 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய ஒட்டுமொத்த பேரிடர் அறிக்கையின்படி, 25 மாவட்டங்களில் 524,678 குடும்பங்களைச் சேர்ந்த 1,814,421 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், பேரிடர் காரணமாக 639 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 193 பேர் காணாமல் போயுள்ளதாகவும், அதிகபட்சமாக [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/more-than-85000-people-still-in-shelters/">85,000க்கும் மேற்பட்டோர் இன்னும் தங்குமிடங்களில்!!</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நவம்பர் 16 ஆம் திகதி முதல் இன்று (11) வரை நாட்டைப் பாதித்த மோசமான வானிலை காரணமாக 85,000 க்கும் மேற்பட்டோர் இன்னும் தற்காலிக தங்குமிடங்களில் வசித்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.</p>
<p>இன்று (11) காலை 6 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய ஒட்டுமொத்த பேரிடர் அறிக்கையின்படி, 25 மாவட்டங்களில் 524,678 குடும்பங்களைச் சேர்ந்த 1,814,421 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>இதற்கிடையில், பேரிடர் காரணமாக 639 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 193 பேர் காணாமல் போயுள்ளதாகவும், அதிகபட்சமாக கண்டி மாவட்டத்தில் 234 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.</p>
<p>மேலும், டிட்வா சூறாவளியின் தாக்கத்தால் 5,346 வீடுகள் முழுமையாகவும், 86,245 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.</p>
<p>அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 26,841 குடும்பங்களைச் சேர்ந்த 85,351 பேர் இன்னும் 873 முகாம்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/more-than-85000-people-still-in-shelters/">85,000க்கும் மேற்பட்டோர் இன்னும் தங்குமிடங்களில்!!</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>யாழில் 893 வீடுகளுக்கு பதிலாக 1,216 வீடுகளுக்கு நிதி ஒதுக்கீடு &#8211; பேரிடர் இழப்பீட்டில் ஊழலா?</title>
		<link>https://oruvan.com/funding-allocated-for-1216-houses-instead-of-893-in-jaffna-is-this-a-disaster-compensation-scam/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Dec 2025 10:54:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cyclone Ditwah]]></category>
		<category><![CDATA[Disaster Death toll Rises]]></category>
		<category><![CDATA[Jaffna District]]></category>
		<category><![CDATA[Udaya Gammanpila]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=40381</guid>

					<description><![CDATA[<p>யாழ்ப்பாண மாவட்டத்தில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை சீரமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விநியோகிப்பதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார். நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் தற்போதுள்ள 893 வீடுகளுக்குப் பதிலாக 1,216 வீடுகளை சுத்தம் செய்வதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். டித்வா சூறாவளியின் தாக்கம் யாழ்ப்பாண மாவட்டத்திலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது, இதனால் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/funding-allocated-for-1216-houses-instead-of-893-in-jaffna-is-this-a-disaster-compensation-scam/">யாழில் 893 வீடுகளுக்கு பதிலாக 1,216 வீடுகளுக்கு நிதி ஒதுக்கீடு &#8211; பேரிடர் இழப்பீட்டில் ஊழலா?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>யாழ்ப்பாண மாவட்டத்தில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை சீரமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விநியோகிப்பதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார்.</p>
<p>நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் தற்போதுள்ள 893 வீடுகளுக்குப் பதிலாக 1,216 வீடுகளை சுத்தம் செய்வதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p>
<p>டித்வா சூறாவளியின் தாக்கம் யாழ்ப்பாண மாவட்டத்திலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது, இதனால் அந்த மாவட்டத்தில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>யாழ்ப்பாண மாவட்டத்தில் 16,312 குடும்பங்களைச் சேர்ந்த 51,879 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இரண்டு வீடுகள் முழுமையாகவும் 322 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.</p>
<p>இந்த சூழலில், அரசாங்கம் சமீபத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை சீரமைப்பதற்காக 25,000 ரூபா ஒதுக்கியுள்ளது. இதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை 361,475,000 ரூபாய் ஆகும்.</p>
<p>இதில், 1216 வீடுகளுக்கு நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவுக்கு 30,400,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.</p>
<p>இருப்பினும், 2024 மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவர அறிக்கையின்படி, நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள வீட்டு அலகுகளின் எண்ணிக்கை 893 ஆகும்.</p>
<p>The post <a href="https://oruvan.com/funding-allocated-for-1216-houses-instead-of-893-in-jaffna-is-this-a-disaster-compensation-scam/">யாழில் 893 வீடுகளுக்கு பதிலாக 1,216 வீடுகளுக்கு நிதி ஒதுக்கீடு &#8211; பேரிடர் இழப்பீட்டில் ஊழலா?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கையில் பேரிடர் உயிரிழப்பு 486ஆக உயர்வு</title>
		<link>https://oruvan.com/disaster-death-toll-in-sri-lanka-rises-to-486/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Dec 2025 05:25:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cyclone Ditwah]]></category>
		<category><![CDATA[Damage caused by Cyclone Ditwah in Sri Lanka]]></category>
		<category><![CDATA[Disaster Damage Details]]></category>
		<category><![CDATA[Disaster Death toll Rises]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=39968</guid>

					<description><![CDATA[<p>இலங்கையில் ஏற்பட்ட பேரிடரில் ஒன்று தசம் எட்டு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மோசமான இந்த பேரழிவின் போது மாவட்டங்களில் 519,842 குடும்பங்களைச் சேர்ந்த 1,844,055 பேர் கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். பேரிடர் குறித்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரிடரால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 486ஆக அதிகரித்துள்ளதுடன், 341 பேர் காணாமல் போயுள்ளனர், ஆயிரக்கணக்கான மக்கள்  இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/disaster-death-toll-in-sri-lanka-rises-to-486/">இலங்கையில் பேரிடர் உயிரிழப்பு 486ஆக உயர்வு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையில் ஏற்பட்ட பேரிடரில் ஒன்று தசம் எட்டு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.</p>
<p>மோசமான இந்த பேரழிவின் போது மாவட்டங்களில் 519,842 குடும்பங்களைச் சேர்ந்த 1,844,055 பேர் கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>பேரிடர் குறித்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>பேரிடரால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 486ஆக அதிகரித்துள்ளதுடன், 341 பேர் காணாமல் போயுள்ளனர், ஆயிரக்கணக்கான மக்கள்  இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>கண்டி மாவட்டதில் அதிகபட்சமாக 118 பேர் உயிரிழந்துள்ளனர், நுவரெலியா மாவட்டத்தில் 89 பேரும், பதுளை மாவட்டத்தில் 83 பேரும் கேகாலை மாவட்டத்தில் 30 பேரும், குருநாகலில் 56 பேர் உயிரிழந்துள்ளனர்.</p>
<p>இந்த மோசமான பேரிடரில் சிக்கி இதுவரை 341 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் கண்டி மற்றும் நுவரெலியாவைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>உள்கட்டமைப்பு சேதம் திகைக்க வைப்பதாகவும் 2,303க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அதே நேரத்தில் 52,489 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.</p>
<p>இந்நிலையில், பேரடரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 1,231 பாதுகாப்பு மையங்களில் 51,023 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>மொத்தம் 171,778 பேர் பாதுகாப்பு மையங்களில் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>கொழும்பு 306,585 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், கம்பஹா மாவட்டத்தில் 322,342 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 322,976 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>வடக்கு மாகாணத்தில்  மன்னார் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.  அங்குள்ள 124,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.</p>
<p>இந்நிலையில், உணவு, மருத்துவ உதவி மற்றும் தற்காலிக தங்குமிடம் வழங்க அவசரகால மீட்புக் குழுக்கள் 24 மணி நேரமும் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/disaster-death-toll-in-sri-lanka-rises-to-486/">இலங்கையில் பேரிடர் உயிரிழப்பு 486ஆக உயர்வு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கையை தாக்கிய டித்வா புயல் &#8211; அதிர்ச்சியூட்டும் சேத விபரங்கள்</title>
		<link>https://oruvan.com/cyclone-ditwah-hits-sri-lanka-shocking-damage-details/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 04 Dec 2025 03:36:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[Cyclone Ditwah]]></category>
		<category><![CDATA[Disaster]]></category>
		<category><![CDATA[Disaster Death toll Rises]]></category>
		<category><![CDATA[Natural Disaster]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=39922</guid>

					<description><![CDATA[<p>அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரிடரினால் இலங்கையின் 1,593 கிலோமீட்டர் ரயில் வலையமைப்பில் 478 கிலோமீட்டர் மட்டுமே தற்போது பயன்படுத்த முடியுமானதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் ஆணையர் ஜெனரல் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி இதனை தெரிவித்துள்ளார். பல மாவட்டங்களில் போக்குவரத்து, விவசாயம், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு ஆகியவற்றை புயல் கடுமையாக பாதித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் நோயாளிகள் தவறவிட்ட மருத்துவ வருகைகள், சிகிச்சை அமர்வுகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகளை மறுசீரமைக்குமாறும், நிலைமைகள் மேம்பட்டவுடன் முன்னுரிமை அளிக்கப்பட [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/cyclone-ditwah-hits-sri-lanka-shocking-damage-details/">இலங்கையை தாக்கிய டித்வா புயல் &#8211; அதிர்ச்சியூட்டும் சேத விபரங்கள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரிடரினால் இலங்கையின் 1,593 கிலோமீட்டர் ரயில் வலையமைப்பில் 478 கிலோமீட்டர் மட்டுமே தற்போது பயன்படுத்த முடியுமானதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அத்தியாவசிய சேவைகள் ஆணையர் ஜெனரல் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி இதனை தெரிவித்துள்ளார்.</p>
<p>பல மாவட்டங்களில் போக்குவரத்து, விவசாயம், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு ஆகியவற்றை புயல் கடுமையாக பாதித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>பாதிக்கப்பட்ட பகுதிகளில் நோயாளிகள் தவறவிட்ட மருத்துவ வருகைகள், சிகிச்சை அமர்வுகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகளை மறுசீரமைக்குமாறும், நிலைமைகள் மேம்பட்டவுடன் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் சுகாதார அமைச்சகம் வைத்தியசாலைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.</p>
<p>விவசாய சேவைகள் திணைக்களத்தின் அறிக்கையின்படி, 1,777 குளங்கள், 483 அணைகள், 1,936 கால்வாய்கள் மற்றும் 328 விவசாய சாலைகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>சுமார் 137,265 ஏக்கர் விளைநிலங்கள் மற்றும் 305 சிறு நீர்ப்பாசன கால்வாய்களும் அழிக்கப்பட்டுள்ளன.</p>
<p>வீதி அபிவிருத்தி அதிகாரசபை தடைபட்ட 246 வீதிகளை மீளவும் திறந்துள்ளது. எவ்வாறாயினும் நாடு முழுவதும் 22 பாலங்கள் அழிக்கப்பட்டுள்ளன.</p>
<p>ஊவா மாகாணத்தில் ஆறு பாலங்கள், வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் தலா நான்கு பாலங்கள், மேற்கு மாகாணத்தில் மூன்று பாலங்கள், மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் தலா இரண்டு பாலங்கள் மற்றும் வடமத்திய மாகாணத்தில் ஒன்று பாலம் சேதமடைந்துள்ளன.</p>
<p>தொலைத்தொடர்பு மீட்பு நடவடிக்கை 91 சதவீதமாக உள்ளது, எனினும் நுவரெலியா மாவட்டத்தில் மறுசீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p>
<p>பாதிக்கப்பட்ட 16,178 மின் துணை மின் நிலையங்களில் 11,315 மீண்டும் இயக்கப்பட்ட பின்னர், பாதிக்கப்பட்ட 3,531,841 இணைப்புகளில் 72 சதவீதமான 2,526,264 நுகர்வோருக்கு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/cyclone-ditwah-hits-sri-lanka-shocking-damage-details/">இலங்கையை தாக்கிய டித்வா புயல் &#8211; அதிர்ச்சியூட்டும் சேத விபரங்கள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பேரிடரால் கண்டி மாவட்டத்தில் அதிக உயிரிழப்பு</title>
		<link>https://oruvan.com/kandy-district-suffers-highest-death-toll-due-to-disaster/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 04 Dec 2025 03:07:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[Cyclone Ditwah]]></category>
		<category><![CDATA[Disaster Death toll Rises]]></category>
		<category><![CDATA[kandy]]></category>
		<category><![CDATA[Natural Disaster]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=39919</guid>

					<description><![CDATA[<p>நாடு முழுவதும் ஏற்பட்ட பேரிடர் காரணமாக கண்டி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் மற்றும் காணாமல் போனோர் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (04) வரை கிடைத்த தகவல்களின்படி, கண்டி மாவட்டத்தில் 185 பேர் உயிரிழந்துள்ளதுடன், 229 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கண்டி மாவட்ட உதவி இயக்குநர் இந்திக ரணவீர இதனை தெரிவித்துள்ளார். கண்டி மாவட்டத்தில் இன்று (04) 32,987 குடும்பங்களைச் சேர்ந்த 1,05,427 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/kandy-district-suffers-highest-death-toll-due-to-disaster/">பேரிடரால் கண்டி மாவட்டத்தில் அதிக உயிரிழப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாடு முழுவதும் ஏற்பட்ட பேரிடர் காரணமாக கண்டி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் மற்றும் காணாமல் போனோர் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இன்று (04) வரை கிடைத்த தகவல்களின்படி, கண்டி மாவட்டத்தில் 185 பேர் உயிரிழந்துள்ளதுடன், 229 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கண்டி மாவட்ட உதவி இயக்குநர் இந்திக ரணவீர இதனை தெரிவித்துள்ளார்.</p>
<p>கண்டி மாவட்டத்தில் இன்று (04) 32,987 குடும்பங்களைச் சேர்ந்த 1,05,427 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இதற்கு மேலதிகமாக, 20,000 குடும்பங்களைச் சேர்ந்த 67,921 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும், 8,471 குடும்பங்களைச் சேர்ந்த 29,257 பேர் 319 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>பேரிடர் காரணமாக கண்டி மாவட்டத்தில், 1259 வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன, மேலும் 10,014 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட செயலகங்களின் உதவியுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/kandy-district-suffers-highest-death-toll-due-to-disaster/">பேரிடரால் கண்டி மாவட்டத்தில் அதிக உயிரிழப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பேரிடர் உயிரிழப்பு 474ஆக அதிகரிப்பு &#8211; 356 பேரை காணவில்லை</title>
		<link>https://oruvan.com/sri-lanka-disaster-death-toll-rises-to-474/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 03 Dec 2025 08:50:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cyclone Ditwah]]></category>
		<category><![CDATA[Disaster Death toll Rises]]></category>
		<category><![CDATA[kandy]]></category>
		<category><![CDATA[Natural Disaster]]></category>
		<category><![CDATA[Nuwara eliya]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=39876</guid>

					<description><![CDATA[<p>நாட்டில் 25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடர் நிலைமை காரணமாக ஏற்பட்ட அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 474 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (03) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, 356 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 448,817 குடும்பங்களைச் சேர்ந்த 1,586,329 பேர் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கண்டி மாவட்டத்தில் அதிகபட்சமாக 118  உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் 89 பேரும், பதுளை மாவட்டத்தில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lanka-disaster-death-toll-rises-to-474/">பேரிடர் உயிரிழப்பு 474ஆக அதிகரிப்பு &#8211; 356 பேரை காணவில்லை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாட்டில் 25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடர் நிலைமை காரணமாக ஏற்பட்ட அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 474 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.</p>
<p>இன்று (03) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, 356 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>448,817 குடும்பங்களைச் சேர்ந்த 1,586,329 பேர் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கண்டி மாவட்டத்தில் அதிகபட்சமாக 118  உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.</p>
<p>நுவரெலியா மாவட்டத்தில் 89 பேரும், பதுளை மாவட்டத்தில் 83 பேரும், குருநாகலையில் 53 பேரும், கேகாலை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் 29 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 28 பேரும் உயிரிழந்துள்ளனர்.</p>
<p>இதற்கிடையில், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 171 பேரும், நுவரெலியாவைச் சேர்ந்த 73 பேரும், கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த 43 பேரும், பதுளையைச் சேர்ந்த 28 பேரும், குருநாகலைச் சேர்ந்த 27 பேரும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lanka-disaster-death-toll-rises-to-474/">பேரிடர் உயிரிழப்பு 474ஆக அதிகரிப்பு &#8211; 356 பேரை காணவில்லை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
