<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Diaspora News Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/diaspora-news/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/diaspora-news/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Fri, 28 Mar 2025 03:13:44 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Diaspora News Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/diaspora-news/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தமிழ் இன அழிப்பு அறிவூட்டல் வாரத்திற்கு எதிரான வழக்கு கனேடிய உச்ச நீதிமன்றத்தால் நிராகரிப்பு</title>
		<link>https://oruvan.com/supreme-court-of-canada-has-dismissed-the-appeal-made-by-tamil-genocide-deniers-against-bill-104/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Mar 2025 03:13:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Diaspora News]]></category>
		<category><![CDATA[Supreme Court of Canada]]></category>
		<category><![CDATA[Tamil Diaspora News]]></category>
		<category><![CDATA[Vijay Thanigasalam]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=16066</guid>

					<description><![CDATA[<p>தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரம் எனப்படும் Bill 104க்கு எதிராக தொடரப்பட்ட மேன்முறையீடு, கனேடிய உச்ச நீதிமன்றத்தால் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது. கனேடிய உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த முடிவு தொடர்பில், Bill 104 எனப்படும் தமிழினப்படுகொலை அறிவூட்டல் வார சட்டமூலத்தை அறிமுகம்செய்த ஒன்றாரியோ மாகாணத்தின் துணை அமைச்சர் விஜய் தணிகாசலம் தெளிவுப்படுத்தியுள்ளார். இந்த வியடம் தொடர்பில் தொடர்ந்தும் பேசியுள்ள விஜய் தணிகாசலம், “இது தமிழ் மக்களுக்கு கிடைத்த மாபெறும் வெற்றியென்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்காக அயராது [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/supreme-court-of-canada-has-dismissed-the-appeal-made-by-tamil-genocide-deniers-against-bill-104/">தமிழ் இன அழிப்பு அறிவூட்டல் வாரத்திற்கு எதிரான வழக்கு கனேடிய உச்ச நீதிமன்றத்தால் நிராகரிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரம் எனப்படும் Bill 104க்கு எதிராக தொடரப்பட்ட மேன்முறையீடு, கனேடிய உச்ச நீதிமன்றத்தால் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.</p>
<p>கனேடிய உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த முடிவு தொடர்பில், Bill 104 எனப்படும் தமிழினப்படுகொலை அறிவூட்டல் வார சட்டமூலத்தை அறிமுகம்செய்த ஒன்றாரியோ மாகாணத்தின் துணை அமைச்சர் விஜய் தணிகாசலம் தெளிவுப்படுத்தியுள்ளார்.</p>
<p>இந்த வியடம் தொடர்பில் தொடர்ந்தும் பேசியுள்ள விஜய் தணிகாசலம், “இது தமிழ் மக்களுக்கு கிடைத்த மாபெறும் வெற்றியென்றும் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இதற்காக அயராது பாடுபட்ட அனைவருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். 2019ஆம் ஆண்டு இந்த சட்டமூலம் கொண்டுவரப்பட்ட போது பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன.</p>
<p>இலங்கை அரசாங்கம் இதற்கு எதிராக பல வழக்குகளை தாக்கல் செய்திருந்தது. எனினும், இங்கிருக்கும் அனைத்துக் கட்சிகளும் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கூறி ஏகமனதாக குறித்த சட்ட மூலத்தை நிறைவேற்றின.</p>
<p>இந்த சட்ட மூலத்திற்கு எதிராக இரண்டு வழக்குகள் போடப்பட்டிருந்த போதிலும், அவை இரண்டிலும் ஒன்றாரியோ அரசாங்கமும், தமிழ் மக்களும் வெற்றிபெற்றிருந்தனர்.</p>
<p>எவ்வாறாயினும், இந்த வழக்கு மூன்றாவது முறையாக கனேடிய உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டுச் செல்லப்பட்ட நிலையில், இன்று குறித்த வழக்கை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இது தமிழ் மக்களுக்கு கிடைத்த நீதியாகவே பார்க்கின்றேன்.” என்றார்.</p>
<p>இதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மூத்த இராணுவத் தளபதிகள் மூவருக்கு எதிராக பிரித்தானியா இந்த வாரம் தடைகளை விதித்திருந்தது.</p>
<p>அத்துடன், விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரும், முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா அம்மானுக்கு எதிராகவும் பிரித்தானியா அரசாங்கம் தடை விதித்திருந்தது.</p>
<p>இந்நிலையில், தற்போது தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரம் எனப்படும் Bill 104க்கு எதிராக தொடரப்பட்ட மேன்முறையீடு, கனேடிய உச்ச நீதிமன்றத்தால் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/supreme-court-of-canada-has-dismissed-the-appeal-made-by-tamil-genocide-deniers-against-bill-104/">தமிழ் இன அழிப்பு அறிவூட்டல் வாரத்திற்கு எதிரான வழக்கு கனேடிய உச்ச நீதிமன்றத்தால் நிராகரிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>புலிகளின் தலைவரின் வீரச்சாவை அறிவித்தவர்கள் மீது சீற்றம்</title>
		<link>https://oruvan.com/outrage-over-those-who-announced-the-heroic-death-of-the-ltte-leader/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 12 Mar 2025 03:51:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Diaspora]]></category>
		<category><![CDATA[Diaspora News]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=14221</guid>

					<description><![CDATA[<p>தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீரச்சாவை அறிவித்தவர்கள் இறுதி போரில் மக்களை சுட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடியவர்களே என பொன் சுதன் தெரிவித்துள்ளார் வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள சமூகமாற்றத்திற்கான ஊடக மையத்தில் வைத்தே மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிக்கட்ட போரில் உயிரிழந்து விட்டதாக கூறி அவருக்கான வீரச்சாவு அறிவித்தலை புலம்பெயர் தேசத்தில் உள்ள அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது. இத்தனை வருடங்களாக அமைதியாக [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/outrage-over-those-who-announced-the-heroic-death-of-the-ltte-leader/">புலிகளின் தலைவரின் வீரச்சாவை அறிவித்தவர்கள் மீது சீற்றம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீரச்சாவை அறிவித்தவர்கள் இறுதி போரில் மக்களை சுட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடியவர்களே என பொன் சுதன் தெரிவித்துள்ளார்</p>
<p>வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள சமூகமாற்றத்திற்கான ஊடக மையத்தில் வைத்தே மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,</p>
<p>தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிக்கட்ட போரில் உயிரிழந்து விட்டதாக கூறி அவருக்கான வீரச்சாவு அறிவித்தலை புலம்பெயர் தேசத்தில் உள்ள அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது.</p>
<p>இத்தனை வருடங்களாக அமைதியாக இருந்த இவர்களை தற்போது யார் தூண்டி விட்டது? இவர்களுக்கு தலைவர் இருக்கிறாரா? இல்லையா?என அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன?</p>
<p>இவர்கள் எல்லோரும் முன்னாள் போராளிகள் இல்லை. இவர்கள் கொண்ட கொள்கையை மறந்து இறுதி போரில் தாங்கள் தப்பிப்பதற்காக மக்களை சுட்டுவிட்டு சென்றவர்கள்.</p>
<p>தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக ஒன்று சேரும் போதெல்லாம் போலி அறிவிப்புக்களை வெளியிட்டு மக்களை திசை திருப்புகிறார்கள்.</p>
<p>இலக்கில் இருந்து அவர்களை அகற்றுகிறார்கள், இவர்கள் அனைவரும் இந்திய புலனாய்வுத்துறையான&#8221; றோ&#8221; அமைப்பின் நிகழ்ச்சி நிரலின் கீழ் இயங்குபவர்கள்.</p>
<p>இரண்டு அணிகளாக பிரிந்து போலி அறிவிப்புகளை செய்து மக்களை நம்பவைத்து பணம் சேர்க்கும் தந்திரத்தில் இதுபோன்ற புலம்பெயர் அமைப்புக்கள் சிலர் செயற்பட்டு வருகிறார்கள்.</p>
<p>ஒரு அணியினர் துவாரகா இருக்கிறார் என்றும், இன்னொரு  அணியினர் தலைவர் பிரபாகரன் இல்லை என்றும் பிரச்சாரம் செய்து பணம் சேர்க்கிறார்கள். இந்த இரண்டு அணியினரும் ஒரே நிகழ்ச்சி நிரலின்கீழ் செயற்படுகிறவர்கள்.</p>
<p>முன்னாள் போராளிகள் என வெளி நாடுகளில் இருந்து இதுபோன்ற அறிக்கைகளை விடுபவர்கள் உண்மையான போராளிகள் இல்லை, உயிருக்கு பயந்து காக்க வேண்டிய மக்களை சுட்டுவிட்டு தப்பி ஓடியவர்கள்.</p>
<p>இவர்கள் தற்போது புலிகளின் பணத்தை சுருட்டியவர்களுடன் இணைந்து இவ்வாறான போலி அறிவிப்புக்களை விடுகின்றனர்.</p>
<p>இது தொடர்பில் புலம்பெயர் தமிழர்களும், இலங்கை தமிழர்களும் அவதானமாக இருப்பதுடன் இவர்களை எமது தேசிய ரீதியான பயணத்தில் இருந்து அகற்ற வேண்டுமெனவும் தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/outrage-over-those-who-announced-the-heroic-death-of-the-ltte-leader/">புலிகளின் தலைவரின் வீரச்சாவை அறிவித்தவர்கள் மீது சீற்றம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
