<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Deshabandu Tennakoon Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/deshabandu-tennakoon/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/deshabandu-tennakoon/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Mon, 17 Mar 2025 06:05:03 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Deshabandu Tennakoon Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/deshabandu-tennakoon/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தேசபந்து தென்னகோனின் மனுவை தள்ளுபடி செய்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்</title>
		<link>https://oruvan.com/the-court-of-appeal-dismissed-deshabandhu-tennakoons-petition/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 17 Mar 2025 05:45:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Court]]></category>
		<category><![CDATA[Deshabandhu Tennakoon]]></category>
		<category><![CDATA[Deshabandu Tennakoon]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=14738</guid>

					<description><![CDATA[<p>தன்னை கைது செய்யும் உத்தரவை இடைக்கால தடை விதிக்கக் கோரி தேசபந்து தென்னகோன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம டபிள்யூ. 15 ஆவது விருந்தகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட எட்டுப் பேரைக் கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் பெப்ரவரி மாதம் 27ஆம் திகதியன்று உத்தரவிட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-court-of-appeal-dismissed-deshabandhu-tennakoons-petition/">தேசபந்து தென்னகோனின் மனுவை தள்ளுபடி செய்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தன்னை கைது செய்யும் உத்தரவை இடைக்கால தடை விதிக்கக் கோரி தேசபந்து தென்னகோன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.</p>
<p>கடந்த 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம டபிள்யூ. 15 ஆவது விருந்தகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட எட்டுப் பேரைக் கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் பெப்ரவரி மாதம் 27ஆம் திகதியன்று உத்தரவிட்டது.</p>
<p>இந்த துப்பாக்கிச் சூட்டில் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் உயிரிழந்ததுடன், இரண்டு பேர் படுகாயமடைந்திருந்தனர்.</p>
<p>நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தேசபந்து தென்னகோன் தலைமறைவாகவுள்ளார். அவரை கைது செய்ய ஆறு மேற்பட்ட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்நிலையில், தம்மை கைது செய்ய மாத்தறை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இடைநிறுத்தி இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தேசபந்து தென்னகோன் தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார்.</p>
<p>இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தற்போது குறித்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.</p>
<p>இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஆறு சந்தேக நபர்களும் தங்களை கைது செய்வதைத் தடுக்கக் கோரி ரிட் மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு நேற்று அறிவித்துள்ளது.</p>
<p>அதன்படி, முதற்கட்ட விசாரணைகள் முடியும் வரை ஆறு நபர்களையும் கைது செய்ய வேண்டாம் என்று சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.</p>
<p>பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் கடந்துவிட்ட போதிலும், முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.</p>
<p>அவரைக் கண்டுபிடிக்க ஆறு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன, மேலும் குற்றப் புலனாய்வுத் துறை சமீபத்தில் தேசபந்து தென்னகோனின் மனைவியிடமிருந்து வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/the-court-of-appeal-dismissed-deshabandhu-tennakoons-petition/">தேசபந்து தென்னகோனின் மனுவை தள்ளுபடி செய்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தேசபந்து தென்னகோன் சட்டத்திற்கு பயந்து ஓடி ஒளிந்து கொள்வது சோகமானது &#8211; அரசாங்கம்</title>
		<link>https://oruvan.com/it-is-sad-that-deshabandhu-tennakoon-is-running-away-and-hiding-due-to-fear-of-the-law/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Mar 2025 08:44:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Deshabandhu Tennakoon]]></category>
		<category><![CDATA[Deshabandu]]></category>
		<category><![CDATA[Deshabandu Tennakoon]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=14469</guid>

					<description><![CDATA[<p>தற்போது தலைமறைவாக உள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் விரைவில் நீதியின் முன் நிறுத்தப்படுவார் என்று கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் பேராசிரியர் உபாலி பன்னிலகே நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தேசபந்து தென்னகோனை கைது செய்ய பல குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், எந்த வகையிலும், விசாரணைகளை தாமதப்படுத்த அரசாங்கம் எந்த விருப்பமும் கொண்டிருக்கவில்லை என்று அமைச்சர் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/it-is-sad-that-deshabandhu-tennakoon-is-running-away-and-hiding-due-to-fear-of-the-law/">தேசபந்து தென்னகோன் சட்டத்திற்கு பயந்து ஓடி ஒளிந்து கொள்வது சோகமானது &#8211; அரசாங்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தற்போது தலைமறைவாக உள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் விரைவில் நீதியின் முன் நிறுத்தப்படுவார் என்று கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் பேராசிரியர் உபாலி பன்னிலகே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.</p>
<p>கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>தேசபந்து தென்னகோனை கைது செய்ய பல குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>மேலும், எந்த வகையிலும், விசாரணைகளை தாமதப்படுத்த அரசாங்கம் எந்த விருப்பமும் கொண்டிருக்கவில்லை என்று அமைச்சர் உபாலி பன்னிலகே சுட்டிக்காட்டியிருந்தார்.</p>
<p>சட்டத்திற்கு பயந்து தேசபந்து தென்னகோன் மறைந்திருப்பது ஒரு சோகமான சம்பவம் எனவும், அவரை கைது செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறியுள்ளார்.</p>
<p>2023 டிசம்பர் 31ஆம் திகதி வெலிகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னகோன் உள்ளிட்டவர்கை கைது செய்து முன்னிலைப்படுத்த மாத்தறை நீதவான நீதிமன்றம் கடந்த 28ஆம் திகதி உத்தரவு பிறப்பித்திருந்தது.</p>
<p>எனினும், தேசபந்து தென்னகோன் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கையில் பொலிஸ் குழுக்கள் ஈடுபட்டுள்ளனர்.</p>
<p>மேலும், தான் கைது செய்யப்படுவதை தடுக்க கோரி தேசபந்து தென்னகோன் தனது சட்டத்தரணிகள் ஊடகாக மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்னை தாக்கல் செய்துள்ளார்.</p>
<p>இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், கோரிக்கை தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 17 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>
<p>எவ்வாறாயினும், முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் திறந்த பிடியாணையைப் பிறப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/it-is-sad-that-deshabandhu-tennakoon-is-running-away-and-hiding-due-to-fear-of-the-law/">தேசபந்து தென்னகோன் சட்டத்திற்கு பயந்து ஓடி ஒளிந்து கொள்வது சோகமானது &#8211; அரசாங்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தேசபந்து தென்னகோன் பெரும் அரசியல் புள்ளியின் வீட்டில் மறைந்திருக்கின்றார்?</title>
		<link>https://oruvan.com/is-deshabandu-tennakoon-hiding-in-the-house-of-a-major-political-figure/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 09 Mar 2025 11:32:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Deshabandu Tennakoon]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=13931</guid>

					<description><![CDATA[<p>பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஒரு பெரிய அரசியல்வாதியின் வீட்டில் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். ஊடங்களுக்கு இன்று கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கை வரலாற்றில் பொலிஸாருக்கு பயந்து ஒரு பொலிஸ்மா அதிபர் ஓடி ஒளிந்து கொள்வது இதுவே முதல் முறை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், ஷானி அபேசேகர ஒரு திறமையான நபர் என்பதால், மறைந்திருக்கும் பொலிஸ்மா அதிபரை கைது [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/is-deshabandu-tennakoon-hiding-in-the-house-of-a-major-political-figure/">தேசபந்து தென்னகோன் பெரும் அரசியல் புள்ளியின் வீட்டில் மறைந்திருக்கின்றார்?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஒரு பெரிய அரசியல்வாதியின் வீட்டில் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.</p>
<p>ஊடங்களுக்கு இன்று கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.</p>
<p>இலங்கை வரலாற்றில் பொலிஸாருக்கு பயந்து ஒரு பொலிஸ்மா அதிபர் ஓடி ஒளிந்து கொள்வது இதுவே முதல் முறை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இந்நிலையில், ஷானி அபேசேகர ஒரு திறமையான நபர் என்பதால், மறைந்திருக்கும் பொலிஸ்மா அதிபரை கைது செய்வார் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.</p>
<p>இதேவேளை, 76 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த கட்சியினருக்கு (தேசிய மக்கள் சக்தி) ஆட்சி அமைக்கும் அதிகாரம் கிடைத்துள்ளது. ஆகையினால் அவர்களுக்கு மூன்று நான்கு ஆண்டுகள் அவகாசம் வழங்க வேண்டும்.</p>
<p>நாட்டிற்கு நல்லது செய்வார்கள் என்று நம்புகின்றேன். தற்போது அரசாங்கம் நல்ல பாதையில் செல்கின்றது என நம்புகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/is-deshabandu-tennakoon-hiding-in-the-house-of-a-major-political-figure/">தேசபந்து தென்னகோன் பெரும் அரசியல் புள்ளியின் வீட்டில் மறைந்திருக்கின்றார்?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தேசபந்து தென்னகோனின் சொத்துகள் முடக்கப்படும் &#8211; அரசாங்கம் அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/igp-deshabandu-tennakoons-assets-will-be-frozen/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 09 Mar 2025 08:24:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Deshabandu Tennakoon]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=13897</guid>

					<description><![CDATA[<p>தற்போது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருக்கும் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்ந்து நீதிமன்றத்தைத் தவிர்த்து வந்தால், சட்ட விதிகளின்படி அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, அவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் சட்ட விதிகளின்படி முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மோதரையில் இன்று (09) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசிய பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், &#8220;அவர் வெளியே [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/igp-deshabandu-tennakoons-assets-will-be-frozen/">தேசபந்து தென்னகோனின் சொத்துகள் முடக்கப்படும் &#8211; அரசாங்கம் அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தற்போது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருக்கும் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்ந்து நீதிமன்றத்தைத் தவிர்த்து வந்தால், சட்ட விதிகளின்படி அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.</p>
<p>இதன்படி, அவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் சட்ட விதிகளின்படி முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மோதரையில் இன்று (09) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசிய பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,</p>
<p>&#8220;அவர் வெளியே வரவில்லை என்றால், நாங்கள் மேலும் நடவடிக்கை எடுப்போம்.&#8221;</p>
<p>தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஏற்கனவே வெளியிட்ட சுற்றறிக்கையின் கீழ் சொத்துக்களை முடக்க முடியும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>தேசபந்து தென்னகோனை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 10 நாட்கள் கடந்தும், அவர் தொடர்பான எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை.</p>
<p>இந்நிலையில், முன்னதாக, பொலிஸ் மா அதிபர் தென்னகோனை கைது செய்வதைத் தவிர்க்க உதவியதாகக் கண்டறியப்பட்ட எவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>தென்னகோனை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது, மேலும் அவருக்கு உதவிய எந்தவொரு நபரும் சட்டரீதியான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.</p>
<p>இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தென்னகோன் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்பதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை, மேலும் அவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/igp-deshabandu-tennakoons-assets-will-be-frozen/">தேசபந்து தென்னகோனின் சொத்துகள் முடக்கப்படும் &#8211; அரசாங்கம் அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
