<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Deputy Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/deputy/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/deputy/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Tue, 17 Feb 2026 05:31:21 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Deputy Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/deputy/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பிரித்தானிய துணைப் பிரதமர் நாட்டை வந்தடைந்தார்</title>
		<link>https://oruvan.com/british-deputy-prime-minister-to-visit-the-country-today/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Feb 2026 04:55:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[Deputy]]></category>
		<category><![CDATA[Minister]]></category>
		<category><![CDATA[Prime]]></category>
		<category><![CDATA[today]]></category>
		<category><![CDATA[UK]]></category>
		<category><![CDATA[visit]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=45202</guid>

					<description><![CDATA[<p>பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லம்மி (David Lammy) மற்றும் அவரது  அலுவலகத்தைச் சேர்ந்த 07 மூத்த அதிகாரிகள் கொண்ட குழு இன்று  காலை நாட்டை வந்தடைந்தது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிருஷாந்த அபேசேன மற்றும் சிலர் அவர்களை வரவேற்றனர். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருடன் கலந்துரையாடலில் ஈடுபடுவார் என்றும் பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை்கு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/british-deputy-prime-minister-to-visit-the-country-today/">பிரித்தானிய துணைப் பிரதமர் நாட்டை வந்தடைந்தார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லம்மி (David Lammy) மற்றும் அவரது  அலுவலகத்தைச் சேர்ந்த 07 மூத்த அதிகாரிகள் கொண்ட குழு இன்று  காலை நாட்டை வந்தடைந்தது.</p>
<p>அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிருஷாந்த அபேசேன மற்றும் சிலர் அவர்களை வரவேற்றனர்.</p>
<p>ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருடன் கலந்துரையாடலில் ஈடுபடுவார் என்றும் பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.</p>
<p>வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை்கு பிரித்தானியா பல்வேறு மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ள நிலையில்<br />
பாதிக்கப்பட்ட சமூகங்களைப் பார்வையிட்டு குழந்தைகள் பாதுகாப்புக்கான உலகளாவிய வணிக ஒப்பந்ததிலும் அவர் கையெழுத்திடுவார் என கூறப்படுகிறது</p>
<p>இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் இன்று இதற்கான விழா (17) நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/british-deputy-prime-minister-to-visit-the-country-today/">பிரித்தானிய துணைப் பிரதமர் நாட்டை வந்தடைந்தார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மத்திய வங்கிக்கு இரண்டு புதிய துணை ஆளுநர்கள் நியமனம்</title>
		<link>https://oruvan.com/two-new-deputy-governors-appointed-to-the-central-bank/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Oct 2025 06:49:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[appointed]]></category>
		<category><![CDATA[Central Bank]]></category>
		<category><![CDATA[Deputy]]></category>
		<category><![CDATA[governors]]></category>
		<category><![CDATA[New]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[Two]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=36614</guid>

					<description><![CDATA[<p>இலங்கை மத்திய வங்கி இரண்டு புதிய துணை ஆளுநர்களை நியமித்துள்ளது. நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார். மத்திய வங்கியின் முன்னாள் உதவி ஆளுநரான டாக்டர் சி. அமரசேகர, 2025 ஒக்டோபர் 24 முதல்  அமுலுக்கு வரும் வகையில் துணை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாார். முன்னாள் உதவி ஆளுநரான கே.ஜி.பி. சிறிகுமார, 2025 நவம்பர் 3 ஆம் திகதி பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்கள், நிறுவனத்திற்குள் தலைமைத்துவத்தையும் மேற்பார்வையையும் வலுப்படுத்த மத்திய வங்கியின் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/two-new-deputy-governors-appointed-to-the-central-bank/">மத்திய வங்கிக்கு இரண்டு புதிய துணை ஆளுநர்கள் நியமனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கை மத்திய வங்கி இரண்டு புதிய துணை ஆளுநர்களை நியமித்துள்ளது.</p>
<p>நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.</p>
<p>மத்திய வங்கியின் முன்னாள் உதவி ஆளுநரான டாக்டர் சி. அமரசேகர, 2025 ஒக்டோபர் 24 முதல்  அமுலுக்கு வரும் வகையில் துணை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாார்.</p>
<p>முன்னாள் உதவி ஆளுநரான கே.ஜி.பி. சிறிகுமார, 2025 நவம்பர் 3 ஆம் திகதி பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த நியமனங்கள், நிறுவனத்திற்குள் தலைமைத்துவத்தையும் மேற்பார்வையையும் வலுப்படுத்த மத்திய வங்கியின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியென தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/two-new-deputy-governors-appointed-to-the-central-bank/">மத்திய வங்கிக்கு இரண்டு புதிய துணை ஆளுநர்கள் நியமனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இத்தாலிய பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி நாளை நாட்டிற்கு வருகை</title>
		<link>https://oruvan.com/italian-deputy-minister-maria-tripodi-to-visit-the-country-tomorrow/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Sep 2025 06:02:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[country]]></category>
		<category><![CDATA[Deputy]]></category>
		<category><![CDATA[Italian]]></category>
		<category><![CDATA[Maria]]></category>
		<category><![CDATA[Minister]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[tomorrow]]></category>
		<category><![CDATA[Tripodi]]></category>
		<category><![CDATA[visit]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=31375</guid>

					<description><![CDATA[<p>இத்தாலியின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி நாளை புதன்கிழமை இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார். சுமார் ஒரு தசாப்தத்தில், இத்தாலியில் இருந்து இலங்கைக்கு மேற்கொள்ளப்படும் அதி உயர்மட்ட விஜயம் இதுவென தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, நாளை முதல் அவர் எதிர்வரும் 05 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது. அவர் தனது விஜயத்தின்போது, இலங்கை – இத்தாலி அரசியல் ஆலோசனைகளின் ஆரம்ப அமர்வில், வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/italian-deputy-minister-maria-tripodi-to-visit-the-country-tomorrow/">இத்தாலிய பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி நாளை நாட்டிற்கு வருகை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இத்தாலியின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி நாளை புதன்கிழமை இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார்.</p>
<p>சுமார் ஒரு தசாப்தத்தில், இத்தாலியில் இருந்து இலங்கைக்கு மேற்கொள்ளப்படும் அதி உயர்மட்ட விஜயம் இதுவென தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>இதன்படி, நாளை முதல் அவர் எதிர்வரும் 05 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>அவர் தனது விஜயத்தின்போது, இலங்கை – இத்தாலி அரசியல் ஆலோசனைகளின் ஆரம்ப அமர்வில், வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவுடன் இணை தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>மேலும் அரசியல் ஆலோசனைப் பொறிமுறையை நிறுவுவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இது இரு நாடுகளுக்கும் இடையிலான உரையாடலுக்கான கட்டமைக்கப்பட்ட செயற்பாட்டுச் சட்டகத்தை வழங்குகிறது.<br />
இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் 1952 இல் நிறுவப்பட்டன.</p>
<p>மரியா த்ரிபோடி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்திப்பதுடன், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்துடன் கலந்துரையாடல்களில் ஈடுபடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/italian-deputy-minister-maria-tripodi-to-visit-the-country-tomorrow/">இத்தாலிய பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி நாளை நாட்டிற்கு வருகை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் கைது</title>
		<link>https://oruvan.com/deputy-inspector-general-of-police-in-charge-of-colombo-division-arrested/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 25 Aug 2025 04:45:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#police]]></category>
		<category><![CDATA[arrested]]></category>
		<category><![CDATA[charge]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[Deputy]]></category>
		<category><![CDATA[Division]]></category>
		<category><![CDATA[General]]></category>
		<category><![CDATA[inspector]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=30580</guid>

					<description><![CDATA[<p>கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் உதித்த லியனகே குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால்  இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரவஸ்திபுராவின் திபிரிகடவல பகுதியில் புதையல் தோண்டுதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அவரது மனைவி மீதான விசாரணையுடன் தொடர்புடைய கைது என தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரவஸ்திபுராவின் திபிரிகடவல பகுதியில் கோவிலொன்றுக்கு அருகில் அமைந்துள்ள  நிலத்தில் புதையல் தோண்டியதாகக் கூறப்படும்  உதித்த லியனகேவின் மனைவி உட்பட 08 பேரை அனுராதபுரம் பொலிஸார் அண்மையில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/deputy-inspector-general-of-police-in-charge-of-colombo-division-arrested/">கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் உதித்த லியனகே குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால்  இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>ஸ்ரவஸ்திபுராவின் திபிரிகடவல பகுதியில் புதையல் தோண்டுதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அவரது மனைவி மீதான விசாரணையுடன் தொடர்புடைய கைது என தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>ஸ்ரவஸ்திபுராவின் திபிரிகடவல பகுதியில் கோவிலொன்றுக்கு அருகில் அமைந்துள்ள  நிலத்தில் புதையல் தோண்டியதாகக் கூறப்படும்  உதித்த லியனகேவின் மனைவி உட்பட 08 பேரை அனுராதபுரம் பொலிஸார் அண்மையில் கைது செய்தனர்.</p>
<p>கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விடுவிக்குமாறு கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் உதித்த லியனகே தொலைபேசி மூலம் சோதனை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்த சம்பவம் குறித்தும் தகவல் அளிக்கப்பட்டது.</p>
<p>இந்த உண்மைகளை வெளிக்கொணரும் வகையில், அனைத்து தொலைபேசி நிறுவனங்களும் சந்தேக நபர்களின் தொலைபேசி எண்கள் தொடர்பான பகுப்பாய்வு அறிக்கைகளை உடனடியாக பொலிஸாருக்கு வழங்க வேண்டும் என அனுராதபுரம் பதில் நீதவான் சந்தன வீரக்கோன் முன்னர் உத்தரவிட்டிருந்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/deputy-inspector-general-of-police-in-charge-of-colombo-division-arrested/">கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் சபாநாயகரின் விசேட அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/speakers-special-announcement-regarding-the-no-confidence-motion-against-the-deputy-minister-of-defense/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 19 Aug 2025 06:30:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[announcement]]></category>
		<category><![CDATA[Defense]]></category>
		<category><![CDATA[Deputy]]></category>
		<category><![CDATA[Minister]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[regarding]]></category>
		<category><![CDATA[Speaker's]]></category>
		<category><![CDATA[Special]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=29904</guid>

					<description><![CDATA[<p>பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சி சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணை தனக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயகர் இன்று செவ்வாயக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதன்படி, நம்பிக்கையில்லாப் பிரேரணையின் உண்மைகளை ஆராய்ந்து, எதிர்காலத்தில் தனது முடிவை நாடாளுமன்றத்திற்கு அறிவிப்பதாக சபாநாயகர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒகஸ்ட் 12 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட 31 எதிர்க்கட்சி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/speakers-special-announcement-regarding-the-no-confidence-motion-against-the-deputy-minister-of-defense/">பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் சபாநாயகரின் விசேட அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சி சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணை தனக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயகர் இன்று செவ்வாயக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.</p>
<p>அதன்படி, நம்பிக்கையில்லாப் பிரேரணையின் உண்மைகளை ஆராய்ந்து, எதிர்காலத்தில் தனது முடிவை நாடாளுமன்றத்திற்கு அறிவிப்பதாக சபாநாயகர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.</p>
<p>பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒகஸ்ட் 12 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட 31 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/speakers-special-announcement-regarding-the-no-confidence-motion-against-the-deputy-minister-of-defense/">பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் சபாநாயகரின் விசேட அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்கள முன்னாள் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட இருவருக்குப் பிணை</title>
		<link>https://oruvan.com/two-people-including-former-deputy-commissioner-of-the-department-of-motor-vehicles-granted-bail/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 14 Jul 2025 10:44:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[bail]]></category>
		<category><![CDATA[Commissioner]]></category>
		<category><![CDATA[Deputy]]></category>
		<category><![CDATA[Former]]></category>
		<category><![CDATA[Motor]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[Two people]]></category>
		<category><![CDATA[vehicles]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=26509</guid>

					<description><![CDATA[<p>இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் மற்றும் திணைக்களத்தின் இரண்டு உதவி முகாமையாளர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்கவின் உத்தியோகபூர்வ அறையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், தங்கள் கட்சிக்காரர்களை பிணையில் விடுவிக்குமாறு நீதிவானிடம் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும், இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதவானிடம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/two-people-including-former-deputy-commissioner-of-the-department-of-motor-vehicles-granted-bail/">மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்கள முன்னாள் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட இருவருக்குப் பிணை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் மற்றும் திணைக்களத்தின் இரண்டு உதவி முகாமையாளர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>அவர்கள் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்கவின் உத்தியோகபூர்வ அறையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.</p>
<p>இதன்போது, சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், தங்கள் கட்சிக்காரர்களை பிணையில் விடுவிக்குமாறு நீதிவானிடம் கோரிக்கை விடுத்தனர்.</p>
<p>இருப்பினும், இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதவானிடம் தெரிவித்தனர்.</p>
<p>முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களைக் கருத்திற்கொண்டு, சந்தேகநபர்கள் ஒவ்வொருவரும் தலா இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டதோடு, அவர்களுக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதித்து தீர்ப்பளித்துள்ளார் .</p>
<p>மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட வாகனத்திற்கு இலக்கத் தகடு வழங்குவதற்கு அனுமதி அளித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/two-people-including-former-deputy-commissioner-of-the-department-of-motor-vehicles-granted-bail/">மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்கள முன்னாள் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட இருவருக்குப் பிணை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநர் நாட்டிற்கு வருகை</title>
		<link>https://oruvan.com/deputy-managing-director-of-the-international-monetary-fund-visits-the-country/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Jun 2025 08:28:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Deputy]]></category>
		<category><![CDATA[Director]]></category>
		<category><![CDATA[Fund]]></category>
		<category><![CDATA[International]]></category>
		<category><![CDATA[Monetary]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=23004</guid>

					<description><![CDATA[<p>சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநர் கலாநிதி கீதா கோபிநாத், எதிர்வரும் 15 ஆம் திகதி நாட்டிற்கு வருகைத் தரவுள்ளார். 2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தில் பணிபுரியும் துணை நிர்வாக இயக்குநர் ஒருவர் இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதன்முறை என்பதால் இது மிகவும் சிறப்பு வாய்ந்த விஜயம் என்று அவர்கள் கூறுகின்றனர். எதிர்வரும் 16 ஆம் திகதி நிதி அமைச்சகம், இலங்கை மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/deputy-managing-director-of-the-international-monetary-fund-visits-the-country/">சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநர் நாட்டிற்கு வருகை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநர் கலாநிதி கீதா கோபிநாத், எதிர்வரும் 15 ஆம் திகதி நாட்டிற்கு வருகைத் தரவுள்ளார்.</p>
<p>2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தில் பணிபுரியும் துணை நிர்வாக இயக்குநர் ஒருவர் இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதன்முறை என்பதால் இது மிகவும் சிறப்பு வாய்ந்த விஜயம் என்று அவர்கள் கூறுகின்றனர்.</p>
<p>எதிர்வரும் 16 ஆம் திகதி நிதி அமைச்சகம், இலங்கை மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள “இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது : கடன் மற்றும் ஆளுகை” எனும் மாநாட்டில் சிறப்பு விருந்தினராகவும் அவர் கலந்து கொள்கிறார்.</p>
<p>இலங்கையின் பொருளாதார நிலைமைகள், IMF இன் நிதி உதவி திட்டங்கள், மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான சீர்திருத்தங்கள் குறித்து கலந்துரையாடல்களை மேற்கொள்வதே இந்த விஜயத்தின் நோக்கமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>இந்த விஜயத்தின் போது, கீதா கோபிநாத் இலங்கை அரசாங்க அதிகாரிகள், மத்திய வங்கி ஆளுநர், மற்றும் பிற பங்குதாரர்களை சந்தித்து IMF இன் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி மற்றும் இலங்கையின் பொருளாதார சீர்திருத்த முன்னேற்றங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/deputy-managing-director-of-the-international-monetary-fund-visits-the-country/">சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநர் நாட்டிற்கு வருகை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அவுஸ்திரேலிய பிரதி பிரதமர் இன்று நாட்டிற்கு வருகை</title>
		<link>https://oruvan.com/australian-deputy-prime-minister-to-visit-the-country-today/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Jun 2025 00:30:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Australian]]></category>
		<category><![CDATA[Deputy]]></category>
		<category><![CDATA[Minister]]></category>
		<category><![CDATA[Prime]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=22181</guid>

					<description><![CDATA[<p>அவுஸ்திரேலிய பிரதி பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சட் மார்லஸ் இன்று செவ்வாய்க்கிழமை நாட்டிற்கு வருகைத்தரவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய பிரதி பிரதமர் இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்திக்க உள்ளார். அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சட் மார்லஸ், பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகரவுடன் இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/australian-deputy-prime-minister-to-visit-the-country-today/">அவுஸ்திரேலிய பிரதி பிரதமர் இன்று நாட்டிற்கு வருகை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அவுஸ்திரேலிய பிரதி பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சட் மார்லஸ் இன்று செவ்வாய்க்கிழமை நாட்டிற்கு வருகைத்தரவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.</p>
<p>அவுஸ்திரேலிய பிரதி பிரதமர் இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்திக்க உள்ளார்.</p>
<p>அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சட் மார்லஸ், பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகரவுடன் இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.</p>
<p>இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதும், ஒத்துழைப்பை மேம்படுத்துவதுமே இந்தப் பயணத்தின் நோக்கமாகும் என் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மேலும் பிரதிப் பிரதமரின் விஜயத்தில் அவுஸ்திரேலிய பிரதமர் அலுவலகம், பாதுகாப்புத் துறை மற்றும் வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/australian-deputy-prime-minister-to-visit-the-country-today/">அவுஸ்திரேலிய பிரதி பிரதமர் இன்று நாட்டிற்கு வருகை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அவுஸ்திரேலிய பிரதி பிரதமர் நாட்டிற்கு வருகை</title>
		<link>https://oruvan.com/australian-deputy-prime-minister-visits-the-country/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 02 Jun 2025 10:18:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Australian]]></category>
		<category><![CDATA[country]]></category>
		<category><![CDATA[Deputy]]></category>
		<category><![CDATA[Minister]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Prime]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[visits]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=22170</guid>

					<description><![CDATA[<p>அவுஸ்திரேலிய பிரதி பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சட் மார்லஸ் நாளை செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய பிரதி பிரதமர் இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்திக்க உள்ளார். அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சட் மார்லஸ், பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகரவுடன் இருதரப்பு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/australian-deputy-prime-minister-visits-the-country/">அவுஸ்திரேலிய பிரதி பிரதமர் நாட்டிற்கு வருகை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அவுஸ்திரேலிய பிரதி பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சட் மார்லஸ் நாளை செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.</p>
<p>அவுஸ்திரேலிய பிரதி பிரதமர் இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்திக்க உள்ளார்.</p>
<p>அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சட் மார்லஸ், பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகரவுடன் இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.</p>
<p>இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதும், ஒத்துழைப்பை மேம்படுத்துவதுமே இந்தப் பயணத்தின் நோக்கமாகும் என் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மேலும் பிரதிப் பிரதமரின் விஜயத்தில் அவுஸ்திரேலிய பிரதமர் அலுவலகம், பாதுகாப்புத் துறை மற்றும் வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/australian-deputy-prime-minister-visits-the-country/">அவுஸ்திரேலிய பிரதி பிரதமர் நாட்டிற்கு வருகை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திற்கு கடற்றொழில் பிரதியமைச்சர் விஜயம்</title>
		<link>https://oruvan.com/deputy-minister-of-fisheries-visits-mirissa-fishing-port/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Sun, 02 Feb 2025 07:21:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[Deputy]]></category>
		<category><![CDATA[Fisheries]]></category>
		<category><![CDATA[Fishing]]></category>
		<category><![CDATA[Minister]]></category>
		<category><![CDATA[Mirissa]]></category>
		<category><![CDATA[Port]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=9042</guid>

					<description><![CDATA[<p>மாத்தறை மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திற்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதியமைச்சர் ரத்ன கமகே நேற்று சனிக்கிழமை கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இதன்போது திமிங்கிலங்களை பார்வையிடல் மையத்தை அவர் பார்வையிட்டதுடன், அங்கு நிலவும் குறைபாடுகள் தொடர்பில் கலந்துரையாடினார். இங்கு சுற்றுலா பயணிகள் அதிகரித்து வருவதால், அதிக வருமானம் ஈட்டப்பட்டு வருகின்றது. குறிப்பாக, டொலர் வருவாயை அதிகரிக்கும் முக்கியமான அம்சமாக இது விளங்குவதால், சுற்றுலா பயணிகளை மேலும் ஈர்ப்பதற்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதன் அவசியம் குறித்து [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/deputy-minister-of-fisheries-visits-mirissa-fishing-port/">மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திற்கு கடற்றொழில் பிரதியமைச்சர் விஜயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மாத்தறை மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திற்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதியமைச்சர் ரத்ன கமகே<br />
நேற்று சனிக்கிழமை கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.</p>
<p>இதன்போது திமிங்கிலங்களை பார்வையிடல் மையத்தை அவர் பார்வையிட்டதுடன், அங்கு நிலவும் குறைபாடுகள் தொடர்பில் கலந்துரையாடினார்.</p>
<p>இங்கு சுற்றுலா பயணிகள் அதிகரித்து வருவதால், அதிக வருமானம் ஈட்டப்பட்டு வருகின்றது. குறிப்பாக, டொலர் வருவாயை அதிகரிக்கும் முக்கியமான அம்சமாக இது விளங்குவதால், சுற்றுலா பயணிகளை மேலும் ஈர்ப்பதற்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதன் அவசியம் குறித்து இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டது.</p>
<p>மேலும், மிரிஸ்ஸ மீனவ துறைமுகத்தினூடாக அதிக மீனவ படகுகள் செயற்படுவதனால், அங்கு நிலவும் சிக்கல்கள் குறித்தும் மீனவர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.</p>
<p>இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்கம் இல்யாஸ், அமைச்சின் மாத்தறை மாவட்ட இணைப்பாளர் யூ. கே. சமரநாயக்க, கபில பமுனு ஆரச்சி உட்பட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/deputy-minister-of-fisheries-visits-mirissa-fishing-port/">மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திற்கு கடற்றொழில் பிரதியமைச்சர் விஜயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
