<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Cricket News Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/cricket-news/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/cricket-news/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Thu, 30 Apr 2026 06:19:21 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Cricket News Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/cricket-news/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>சனத்தின் 18 ஆண்டுகால சாதனையை முறியடித்த ரிகெல்டன்</title>
		<link>https://oruvan.com/rickelton-breaks-sanath-jayasuriyas-18-year-record/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Apr 2026 06:19:21 +0000</pubDate>
				<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Cricket News]]></category>
		<category><![CDATA[IPL]]></category>
		<category><![CDATA[IPL 2026]]></category>
		<category><![CDATA[Ryan Rickelton]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49244</guid>

					<description><![CDATA[<p>ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை ரியான் ரிகெல்டன் படைத்துள்ளார். வெறும் 44 பந்துகளில் அவர் சதம் அடித்திருந்தார். இதன் மூலம் சனத் ஜயசூரியவின் 18 ஆண்டு கால சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. சனத் ஜயசூரிய 2008ம் ஆண்டு மும்மை அணி சார்பில் 45 பந்துகளில் சதம் அடித்து இந்தச் சாதனையை நிகழ்த்தினார். எனினும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இந்தப் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/rickelton-breaks-sanath-jayasuriyas-18-year-record/">சனத்தின் 18 ஆண்டுகால சாதனையை முறியடித்த ரிகெல்டன்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை ரியான் ரிகெல்டன் படைத்துள்ளார்.</p>
<p>வெறும் 44 பந்துகளில் அவர் சதம் அடித்திருந்தார். இதன் மூலம் சனத் ஜயசூரியவின் 18 ஆண்டு கால சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.</p>
<p>சனத் ஜயசூரிய 2008ம் ஆண்டு மும்மை அணி சார்பில் 45 பந்துகளில் சதம் அடித்து இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.</p>
<p>எனினும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 243 ஓட்டங்களை குவித்திருந்தது.</p>
<p>தென்னாப்பிரிக்க துடுப்பாட்ட வீரர் ரியான் ரிகெல்டன் 44 பந்துகளில் தனது சதத்தை நிறைவுசெய்து, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆட்டமிழக்காமல் 123 ஓட்டங்களை குவித்தார்.</p>
<p>இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அடிக்கப்பட்ட அதிவேக சதம் மற்றும் அந்த அணியின் வரலாற்றில் அதிகபட்ச தனிநபர் ஓட்டம் ஆகிய சாதனைகளை அவர் முறியடித்தார்.</p>
<p>எவ்வாறாயினும், இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/rickelton-breaks-sanath-jayasuriyas-18-year-record/">சனத்தின் 18 ஆண்டுகால சாதனையை முறியடித்த ரிகெல்டன்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>டி20 கிரிக்கெட் தொடர்களுக்காக இரண்டு அணிகளை உருவாக்க இந்திய கிரிக்கெட் சபை முடிவு – 35 வீரர்களுக்கு குறித்த பரிசீலனை</title>
		<link>https://oruvan.com/indian-cricket-board-decides-to-form-two-teams-for-t20-cricket-series-35-players-to-be-considered/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Apr 2026 08:48:14 +0000</pubDate>
				<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[BCCI]]></category>
		<category><![CDATA[Cricket News]]></category>
		<category><![CDATA[IPL 2026]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48663</guid>

					<description><![CDATA[<p>டி20 கிரிக்கெட் தொடர்களுக்காக 30 முதல் 35 வீரர்களை கொண்ட அணி ஒன்றை தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் தொடர் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி உள்ளிட்ட ஏராளமான வீரர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அடுத்ததாக இந்திய அணி விளையாடவுள்ள இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடர்களில் புதிய வீரர்களை இணைத்துக்கொள்வது உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் இளம் வீரர்கள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/indian-cricket-board-decides-to-form-two-teams-for-t20-cricket-series-35-players-to-be-considered/">டி20 கிரிக்கெட் தொடர்களுக்காக இரண்டு அணிகளை உருவாக்க இந்திய கிரிக்கெட் சபை முடிவு – 35 வீரர்களுக்கு குறித்த பரிசீலனை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>டி20 கிரிக்கெட் தொடர்களுக்காக 30 முதல் 35 வீரர்களை கொண்ட அணி ஒன்றை தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
<p>ஐபிஎல் தொடர் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி உள்ளிட்ட ஏராளமான வீரர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.</p>
<p>இந்நிலையில், அடுத்ததாக இந்திய அணி விளையாடவுள்ள இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடர்களில் புதிய வீரர்களை இணைத்துக்கொள்வது உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>ஐபிஎல் தொடரில் இளம் வீரர்கள் பலரும் தங்களின் அபார திறமையை வெளிப்படுத்தியுள்ள நிலையில், புதிய வீரர்களை தெரிவு செய்வதில் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.</p>
<p>இதனால் புதிய திட்டம் ஒன்றை இந்திய கிரிக்கெட் சபை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>இதன்படி, 30 முதல் 35 வீரர்களை கொண்ட அணி ஒன்றை தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த வீரர்களை இரண்டு அணிகளாக பிரித்து விளையாட வைப்பதே நோக்கமாகும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஒரே நேரத்தில் பல போட்டிகள் வரவிருப்பதையொட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த ஆண்டு ஏராளமாக டி20 கிரிக்கெட் தொடர்கள் இடம்பெறவுள்ள நிலையில், இந்த திட்டத்தின் மூலம் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p>
<p>புதிய அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயரை தலைவராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது சிறந்த 35 வீரர்களை இந்திய கிரிக்கெட் சபை பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/indian-cricket-board-decides-to-form-two-teams-for-t20-cricket-series-35-players-to-be-considered/">டி20 கிரிக்கெட் தொடர்களுக்காக இரண்டு அணிகளை உருவாக்க இந்திய கிரிக்கெட் சபை முடிவு – 35 வீரர்களுக்கு குறித்த பரிசீலனை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>உலக கிரிக்கெட்டை கட்டுப்படுத்துவதாக இந்தியா &#8211; விஸ்டன் இதழ் எச்சரிக்கை</title>
		<link>https://oruvan.com/india-is-controlling-world-cricket-wisden-magazine-warns/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 15 Apr 2026 07:51:55 +0000</pubDate>
				<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[BCCI]]></category>
		<category><![CDATA[Cricket News]]></category>
		<category><![CDATA[icc]]></category>
		<category><![CDATA[International Cricket Council]]></category>
		<category><![CDATA[Lawrence Booth]]></category>
		<category><![CDATA[Wisden Cricketers’ Almanack]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48397</guid>

					<description><![CDATA[<p>கிரிக்கெட்டின் பைபிள் என்று அழைக்கப்படும் விஸ்டன் கிரிக்கெட்டர்ஸ் அல்மனாக், கிரிக்கெட் உலகில் அதிகரித்து வரும் இந்திய அரசியல் செல்வாக்கை விமர்சித்துள்ளதுடன், விளையாட்டின் நிர்வாகத்தில் அதிகரித்து வரும் சீரழிவு குறித்தும் எச்சரித்துள்ளது. விஸ்டன் இதழின் 2026 பதிப்பில், உலக கிரிக்கெட் நிர்வாகத்தில் இந்தியா ஆரோக்கியமற்ற ஆதிக்கத்தைக் கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவை தலைமையிடமாகக் கொண்ட, 1864ஆம் ஆண்டு முதல் வெளிவந்துகொண்டிருக்கும் விஸ்டன் கிரிக்கெட்டர்ஸ் அல்மனாக், உலகெங்கிலும் உள்ள அனைத்து முக்கிய கிரிக்கெட் போட்டிகளின் வருடாந்திரப் பதிவாகும். மேலும் கிரிக்கெட் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/india-is-controlling-world-cricket-wisden-magazine-warns/">உலக கிரிக்கெட்டை கட்டுப்படுத்துவதாக இந்தியா &#8211; விஸ்டன் இதழ் எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கிரிக்கெட்டின் பைபிள் என்று அழைக்கப்படும் விஸ்டன் கிரிக்கெட்டர்ஸ் அல்மனாக், கிரிக்கெட் உலகில் அதிகரித்து வரும் இந்திய அரசியல் செல்வாக்கை விமர்சித்துள்ளதுடன், விளையாட்டின் நிர்வாகத்தில் அதிகரித்து வரும் சீரழிவு குறித்தும் எச்சரித்துள்ளது.</p>
<p>விஸ்டன் இதழின் 2026 பதிப்பில், உலக கிரிக்கெட் நிர்வாகத்தில் இந்தியா ஆரோக்கியமற்ற ஆதிக்கத்தைக் கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>பிரித்தானியாவை தலைமையிடமாகக் கொண்ட, 1864ஆம் ஆண்டு முதல் வெளிவந்துகொண்டிருக்கும் விஸ்டன் கிரிக்கெட்டர்ஸ் அல்மனாக், உலகெங்கிலும் உள்ள அனைத்து முக்கிய கிரிக்கெட் போட்டிகளின் வருடாந்திரப் பதிவாகும்.</p>
<p>மேலும் கிரிக்கெட் விளையாட்டின் “பைபிள்” என்று கருதப்படுகிறது.</p>
<p>இந்நிலையில், அதன் 163வது ஆண்டுப் பதிப்பில், உலகளாவிய கிரிக்கெட்டில் இந்தியாவின் ஆரோக்கியமற்ற மற்றும் அரசியல்மயமாக்கப்பட்ட ஆதிக்கத்தை இதழின் ஆசிரியர் லோரன்ஸ் பூத் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>தற்போது தலைவராகப் பணியாற்றும் ஜெய் ஷா உள்ளிட்ட, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் முக்கிய தலைமைப் பதவிகளில் இந்திய அதிகாரிகள் உள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>ஜெய் ஷா, இந்தியாவின் உள்துறை அமைச்சரும் பிரதமர் நரேந்திர மோடியின் நீண்டகால கூட்டாளியுமான அமித் ஷாவின் மகன் ஆவார்.</p>
<p>சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பொறுப்பை ஏற்பதற்கு முன்பு ஷா தலைமை தாங்கிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையை &#8220;இந்தியாவின் ஆளும் பாஜகவின் விளையாட்டுத் துணை அமைப்பு&#8221; என்று விஸ்டன் விவரித்துள்ளது.</p>
<p>விஸ்டன் இதழில் வெளியான கட்டுரை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதா கட்சியுடன் நெருங்கிய தொடர்புடையது என்றும் விவரித்திருந்தது.</p>
<p>மேலும், கிரிக்கெட் நிர்வாகத்தில் அதிகரித்து வரும் அரசியல் தலையீடு குறித்த கவலைகளையும் லோரன்ஸ் பூத் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு குறுகிய காலப் போர் நடந்த பின்னணியில் நடைபெற்ற 2025 ஆசியக் கிண்ண தொடரில் அரசியல் எவ்வாறு தலையிட்டது என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இதன் விளைவாக இரு அணிகளும் மோதிக்கொண்ட போட்டிகளில் அணியின் வீரர்கள் கைகுலுக்க மறுத்ததையும் பூத் சுட்டிக்காட்டினார்.</p>
<p>பங்களாதேஷில் ஏற்பட்ட அரசியல் வன்முறையின் போது இந்துக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது.</p>
<p>இந்த இராஜதந்திரப் பதட்டங்களுக்கு மத்தியில் பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசூர் ரஹ்மான் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்)ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்டது உள்ளிட்ட உதாரணங்களையும் அவர் அடிக்கோடிட்டுள்ளார்.</p>
<p>முஸ்தாபிசூர் ரஹ்மான் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது, பங்களாதேஷ்அரசாங்கம் அவர்களை இந்தியாவிற்குப் பயணிக்க அனுமதிக்க மறுத்தது உள்ளிட்ட காரணங்களால் இந்த ஆண்டுக்கான டி20 உலகக் கிண்ண தொடரில் இருந்து அந்நாடு நீக்கப்பட்டது.</p>
<p>2025ஆம் ஆண்டு இதேபோன்ற ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டபோது, ​​சாம்பியன்ஸ் டிராபிக்காக பாகிஸ்தானுக்குச் செல்ல இந்தியா மறுத்ததுடன், தங்களது அனைத்து போட்டிகளையும் துபாய்க்கு மாற்ற கோரியிருந்தது.</p>
<p>இதற்கு அனுமதி வழங்கியிருந்த சர்வதேச கிரிக்கெட் பேரவை, டி20 உலகக் கிண்ண தொடரின் தங்கள் விளையும் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்ற பங்களாதேஷின் கோரிக்கையை நிராகரித்திருந்தது.</p>
<p>இந்த சமத்துவமற்ற நிலையையும் லோரன்ஸ் பூத் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>இந்நிலையில், கிரிக்கெட்டின் அதிகரித்து வரும் அரசியல்மயமாக்கல், ஆட்டத்தின் நிர்வாகத்தைச் சீர்குலைத்து வருவதாக விஸ்டன் இதழ் எச்சரித்துள்ளது.</p>
<p>இந்தியாவின் செல்வாக்கு மற்றும் அரசியல் காரணிகளால் உலக கிரிக்கெட் களம் அதிகளவில் வடிவமைக்கப்பட்டு வருகிறது என்றும் விஸ்டன் இதழ் மேலும் தெரிவித்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/india-is-controlling-world-cricket-wisden-magazine-warns/">உலக கிரிக்கெட்டை கட்டுப்படுத்துவதாக இந்தியா &#8211; விஸ்டன் இதழ் எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் RCB அணிகள் பெரும் தொகைக்கு விற்பனையானது</title>
		<link>https://oruvan.com/rajasthan-royals-and-rcb-teams-sold-for-huge-sums/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 25 Mar 2026 04:28:52 +0000</pubDate>
				<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Cricket News]]></category>
		<category><![CDATA[IPL 2026]]></category>
		<category><![CDATA[Rajasthan Royals]]></category>
		<category><![CDATA[RCB]]></category>
		<category><![CDATA[Royal Challengers Bengaluru]]></category>
		<category><![CDATA[Virat Kohli]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=47358</guid>

					<description><![CDATA[<p>ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிகவும் பிரபலமான அணிகளான ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் கல் சோமானி வாங்கியுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேபோல் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ஆதித்ய பிர்லா குழுமம் தலைமையிலான கூட்டமைப்பு 1.78 பில்லியன் அமெரிக்க டொலருக்கு முழுமையாக வாங்கியுள்ளது. இந்த கூட்டமைப்பில், டைம்ஸ் ஒஃப் இந்தியா [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/rajasthan-royals-and-rcb-teams-sold-for-huge-sums/">ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் RCB அணிகள் பெரும் தொகைக்கு விற்பனையானது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிகவும் பிரபலமான அணிகளான ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>இதன்படி, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் கல் சோமானி வாங்கியுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>அதேபோல் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ஆதித்ய பிர்லா குழுமம் தலைமையிலான கூட்டமைப்பு 1.78 பில்லியன் அமெரிக்க டொலருக்கு முழுமையாக வாங்கியுள்ளது.</p>
<p>இந்த கூட்டமைப்பில், டைம்ஸ் ஒஃப் இந்தியா குழுமம், போல்ட் வென்ச்சர்ஸ், மற்றும் பிளாக்ஸ்டோனின் பெர்ப்பெச்சுவல் பிரைவேட் ஈக்விட்டி&#8221; முதலீட்டு நிறுவனம் ஆகியவையும் இணைந்துள்ளன.</p>
<p>எனினும், ஆதித்ய பிர்லா குழுமமே இதற்குத் தலைமை தாங்குகிறது.</p>
<p>இந்த விற்பனையில்ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆண்களுக்கான அணி மற்றும் டபிள்யூ.பி.எல். பெண்களுக்கான அணி ஆகிய இரண்டும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>பெங்களூரு அணியின் புதிய தலைவராக, ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லாவின் மகன் ஆர்யமன் பிர்லா நியமிக்கப்படுவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
<p>இதனிடையே, அமெரிக்க தொழிலதிபர் கல் சோமணி தலைமையிலான கூட்டமைப்பு, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் 100 சதவீத பங்குகளை சுமார் 15,286 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.</p>
<p>இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் மதிப்புமிக்க அணியாக ராஜஸ்தான் ரோயல்ஸ் உருவெடுத்துள்ளது.</p>
<p>ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய தொகைக்கு ஒரு அணி விற்கப்பட்டிருப்பது கிரிக்கெட் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.</p>
<p>கல் சோமணி, 2021ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் சிறு பங்கை தனது வசம் வைத்திருந்தார்.</p>
<p>எவ்வாறாயினும், கல் சோமணி ஐபிஎல் 2026 பருவத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை தன்வசப்படுத்த முடியாது எனவும், 2026 பருவத்திற்கு பின்னர் அணிக்கு உரிமையாளராக மாற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அணி விற்பனை செய்யப்பட்ட போதிலும், அணியின் பயிற்சி ஊழியர்களிலோ அல்லது உயர் கிரிக்கெட் நிர்வாகத்திலோ எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் இயக்குநராக செயற்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/rajasthan-royals-and-rcb-teams-sold-for-huge-sums/">ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் RCB அணிகள் பெரும் தொகைக்கு விற்பனையானது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>டி20 உலகக் கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/sri-lanka-squad-announced-for-t20-world-cup/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 02 Feb 2026 11:41:39 +0000</pubDate>
				<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Cricket News]]></category>
		<category><![CDATA[T20 Wold Cup]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=44311</guid>

					<description><![CDATA[<p>டி20 உலகக் கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அணியின் தலைவராக தசுன் ஷானக அறிவிக்கப்பட்டுள்ளார். பத்துதம் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, சரித் அசலங்க, கமில் மிஷாரா, பவன் ரத்நாயக்க, ஜனித் லியனகே, தசுன் ஷானக (தலைவர்), கமிந்து மெண்டிஸ், துஷ்மந்த சமீர, மதிஷா பதீரனா, எஷான் மலிங்க, வனிந்து ஹசரங்க, மஹிஷ் தீக்ஷனா, துனித் வெல்லலகே ஆகியோர் உள்ளடங்கிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் தேர்வுக் குழுவால் மத்திய வரிசையை வலுப்படுத்த [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lanka-squad-announced-for-t20-world-cup/">டி20 உலகக் கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>டி20 உலகக் கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன்படி அணியின் தலைவராக தசுன் ஷானக அறிவிக்கப்பட்டுள்ளார்.</p>
<p>பத்துதம் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, சரித் அசலங்க, கமில் மிஷாரா, பவன் ரத்நாயக்க, ஜனித் லியனகே, தசுன் ஷானக (தலைவர்), கமிந்து மெண்டிஸ், துஷ்மந்த சமீர, மதிஷா பதீரனா, எஷான் மலிங்க, வனிந்து ஹசரங்க, மஹிஷ் தீக்ஷனா, துனித் வெல்லலகே ஆகியோர் உள்ளடங்கிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>ஆரம்பத்தில் தேர்வுக் குழுவால் மத்திய வரிசையை வலுப்படுத்த முன்மொழியப்பட்ட தனஞ்சய டி சில்வா அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.<br />
எனினும், கமிந்து மெண்டிஸ் அணிக்கு மீளவும் அழைக்கப்பட்டுள்ளார்.</p>
<p>இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடருக்கு பவன் ரத்நாயக்க அழைக்கப்பட்டது கடைசி நிமிட முடிவாகக் கருதப்படுகிறது. பிரமோத் மதுஷனுக்குப் பதிலாக அவர் அழைக்கப்படுகிறார்.</p>
<p>நேற்றைய போட்டியில் காயமடைந்து மைதானத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளான எஷான் மலிங்கா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.</p>
<p>துனித் வெல்லலகே, வனிந்து ஹசரங்க மற்றும் மஹிஷ் தீக்ஷனா ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர்களாக அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>டி20 உலகக் கிண்ண தொடரில் குழு பீ இல் இடம்பெற்றுள்ள இலங்கை அணி எதிர்வரும் எட்டாம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடவுள்ளது.</p>
<p>16ஆம் திகதி அவுஸ்திரேலியா அணியை இலங்கை அணி எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lanka-squad-announced-for-t20-world-cup/">டி20 உலகக் கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கை அணி அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/sri-lanka-squad-announced-for-odi-series-against-england/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 21 Jan 2026 08:12:53 +0000</pubDate>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Cricket News]]></category>
		<category><![CDATA[ODI]]></category>
		<category><![CDATA[Sri Lanka Cricket]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=43489</guid>

					<description><![CDATA[<p>இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றுப் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் தலைவரான சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தொடரின் முதல் போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச மைதனத்தில் நாளை இடம்பெறவுள்ளது. இரண்டாவது போட்டி 24ஆம் திகதியும், மூன்றாவது போட்டி 27ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது. அணி விபரம் சரித் அசலங்க (தலைவர்) பெதும் நிசங்க கமில் மிஷாரா குசால் மெண்டிஸ் சதீர சமரவிக்ரம பவன் ரத்நாயக்க தனஞ்சய டி சில்வா ஜனித் லியனகே [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lanka-squad-announced-for-odi-series-against-england/">இலங்கை அணி அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றுப் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அணியின் தலைவரான சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார்.</p>
<p>இந்த தொடரின் முதல் போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச மைதனத்தில் நாளை இடம்பெறவுள்ளது.</p>
<p>இரண்டாவது போட்டி 24ஆம் திகதியும், மூன்றாவது போட்டி 27ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது.</p>
<p>அணி விபரம்</p>
<p>சரித் அசலங்க (தலைவர்)<br />
பெதும் நிசங்க<br />
கமில் மிஷாரா<br />
குசால் மெண்டிஸ்<br />
சதீர சமரவிக்ரம<br />
பவன் ரத்நாயக்க<br />
தனஞ்சய டி சில்வா<br />
ஜனித் லியனகே<br />
கமிந்து மெண்டிஸ்<br />
துனித் வெல்லாலகே<br />
வனிந்து ஹசரங்கா<br />
ஜெஃப்ரி வாண்டேஸ்<br />
மகீஷ் தீக்ஷனா<br />
மிலன் ரத்நாயக்க<br />
அசிதா பெர்னாண்டோ<br />
பிரமோத் மதுஷன்<br />
ஈஷான் மலிங்கா</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lanka-squad-announced-for-odi-series-against-england/">இலங்கை அணி அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சதம் அடித்து புதிய சாதனை படைத்தார் விராட் கோலி</title>
		<link>https://oruvan.com/virat-kohli-sets-new-record-by-scoring-century/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 19 Jan 2026 09:20:40 +0000</pubDate>
				<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Cricket News]]></category>
		<category><![CDATA[Virat Kohli]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=43359</guid>

					<description><![CDATA[<p>இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி தனது 54வது ஒருநாள் சதத்தை பதிவு செய்துள்ளார். இந்தூரில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். 91 பந்துகளில் எட்டு நான்கு ஓட்டங்கள் மற்றும் இரண்டு ஆறு ஓட்டங்களுடன் தனது சதத்தை எட்டினார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் நியூசிலாந்துக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையை விராட் படைத்துள்ளார். அவுஸ்திரேலியா அணியின் ஜாம்பவான் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/virat-kohli-sets-new-record-by-scoring-century/">சதம் அடித்து புதிய சாதனை படைத்தார் விராட் கோலி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி தனது 54வது ஒருநாள் சதத்தை பதிவு செய்துள்ளார்.</p>
<p>இந்தூரில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார்.</p>
<p>91 பந்துகளில் எட்டு நான்கு ஓட்டங்கள் மற்றும் இரண்டு ஆறு ஓட்டங்களுடன் தனது சதத்தை எட்டினார்.</p>
<p>இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் நியூசிலாந்துக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையை விராட் படைத்துள்ளார்.</p>
<p>அவுஸ்திரேலியா அணியின் ஜாம்பவான் துடுப்பாட்ட வீரரான ரிக்கி பாண்டிங்கிடம் இருந்த சாதனையை விராட் முறியத்துள்ளார்.</p>
<p>ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் நியூசிலாந்துக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.<br />
நியூசிலாந்து அணிக்கு எதிரான விராட்டின் ஏழாவது சதமாகும்.</p>
<p>ரிக்கி பாண்டிங் மற்றும் வீரேந்தர் சேவாக் ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்துக்கு எதிராக தலா ஆறு சதங்களை அடித்தனர், ஆனால் விராட் இப்போது அவர்கள் அனைவரையும் முறியடித்துள்ளார்.</p>
<p>விராட் கோலி &#8211; 7 சதங்கள்<br />
ரிக்கி பாண்டிங் &#8211; 6 சதங்கள்<br />
வீரேந்தர் சேவாக் &#8211; 6 சதங்கள்<br />
சச்சின் டெண்டுல்கர் &#8211; 5 சதங்கள்<br />
சனத் ஜெயசூர்யா – 5 சதங்கள்</p>
<p>விராட் கோலி ஐந்து நாடுகளுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் ஏழு அல்லது அதற்கு மேற்பட்ட சதங்களை அடித்துள்ளார்.</p>
<p>இலங்கை, மேற்கிந்திய தீவுகள், அவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளு்கு எதிராக ஏழு சதங்களை அடித்துள்ளார்.</p>
<p>எவ்வாறாயினும், இலங்கை அணிக்கு எதிரான 10 சதங்களை அடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>விராட் கோலி இதுவரையில் சர்வதேச போட்டிகளில் 85 சதங்களை அடித்துள்ளார்.</p>
<p>அதிக சதங்கள் அடித்த வீரர்களில் சச்சின் டெண்டுல்கரை (100) முந்திச் செல்வதற்கு அவருக்கு 15 சதங்கள் தேவைப்படுகின்றது.</p>
<p>நியூசிலாந்து அணிக்கு எதிரான அவரின் இந்த சதம் இந்திய மண்ணில் கோலியின் 41வது சதமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/virat-kohli-sets-new-record-by-scoring-century/">சதம் அடித்து புதிய சாதனை படைத்தார் விராட் கோலி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நான்கு ஆண்டுகளின் பின்னர் முதலிடம் பிடித்தார் கோலி</title>
		<link>https://oruvan.com/kohli-regains-top-spot-after-four-years/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 14 Jan 2026 10:19:02 +0000</pubDate>
				<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Cricket News]]></category>
		<category><![CDATA[ICC ODI ranking]]></category>
		<category><![CDATA[Virat Kohli]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=43193</guid>

					<description><![CDATA[<p>இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி மீண்டும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 93 ஓட்டங்களை குவித்ததன் மூலம், விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக செயற்பட்டு வரும் அவர், கடைசியாக விளையாடி ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக ஐம்பதுக்கும் மேற்பட்ட ஓட்டங்களை குவித்துள்ளார். 1,404 நாட்கள் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, கோலி மீண்டும் சர்வதேச கிரிக்கெட் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/kohli-regains-top-spot-after-four-years/">நான்கு ஆண்டுகளின் பின்னர் முதலிடம் பிடித்தார் கோலி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி மீண்டும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.</p>
<p>நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 93 ஓட்டங்களை குவித்ததன் மூலம், விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.</p>
<p>ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக செயற்பட்டு வரும் அவர், கடைசியாக விளையாடி ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக ஐம்பதுக்கும் மேற்பட்ட ஓட்டங்களை குவித்துள்ளார்.</p>
<p>1,404 நாட்கள் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, கோலி மீண்டும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.</p>
<p>உலகின் மிகச்சிறந்த ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் கோலி 2021ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பாபர் அசாமிடம் முதலிடத்தை பறிகொடுத்தார்.</p>
<p>இந்நிலையில், நான்கு ஆண்டுகளின் பின்னர் தற்போது முதலிடத்தை பிடித்துள்ளார். முதலிடத்தை பிடிப்பதற்கு நியூசிலாந்தின் டேரில் மிட்செலுடன் கடுமையான போட்டியை எதிர்கொண்டார்.</p>
<p>இறுதியில் 785 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தை 784 புள்ளிகளுடன் டேரில் மிட்செல் பிடித்துள்ளார்.</p>
<p>ரோகித் சர்மா இரண்டு இடங்கள் பின் தங்கி 775 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.</p>
<p>நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 28,000 ஓட்டங்களை கடந்துள்ளார்.</p>
<p>சச்சின் டெண்டுல்கர் மற்றும் குமார் சங்கக்காரவுக்குப் பின்னர் சர்வதேச கிரிக்கெட்டில் 28,000 ஓட்டங்களை கடந்த உலகின் மூன்றாவது துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையை கோலி படைத்துள்ளார்.</p>
<p>கோலி 624 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை நிகழ்த்தினார், இதன் மூலம் வேகமாக இந்த சாதனையை நிகழ்த்திய வீரர் என்ற பெருமையையும் கோலி படைத்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/kohli-regains-top-spot-after-four-years/">நான்கு ஆண்டுகளின் பின்னர் முதலிடம் பிடித்தார் கோலி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கடவுளையும், தோனியையும் நினைவு கூர்ந்த கோலி!</title>
		<link>https://oruvan.com/kohli-remembers-god-and-dhoni/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 12 Jan 2026 05:41:33 +0000</pubDate>
				<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Cricket News]]></category>
		<category><![CDATA[Virat Kohli]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=42982</guid>

					<description><![CDATA[<p>நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றியை பதிவு செய்துள்ளது. நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி 93 ஓட்டங்களை குவித்திருந்த நிலையில், போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் அவர் தட்டிச் சென்றிருந்தார். இந்த வெற்றியின் மூலம், இந்தியா தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. வெற்றியைத் தொடர்ந்து, விராட் கோலி ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். இது அவரது 45வது ஒருநாள் போட்டிக்கான ஆட்டநாயகன் விருது. விருதை பெற்றுக்கொண்ட பின்னர் கருத்து வெளியிட்ட கோலி், [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/kohli-remembers-god-and-dhoni/">கடவுளையும், தோனியையும் நினைவு கூர்ந்த கோலி!</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றியை பதிவு செய்துள்ளது.</p>
<p>நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி 93 ஓட்டங்களை குவித்திருந்த நிலையில், போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் அவர் தட்டிச் சென்றிருந்தார்.</p>
<p>இந்த வெற்றியின் மூலம், இந்தியா தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. வெற்றியைத் தொடர்ந்து, விராட் கோலி ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.</p>
<p>இது அவரது 45வது ஒருநாள் போட்டிக்கான ஆட்டநாயகன் விருது. விருதை பெற்றுக்கொண்ட பின்னர் கருத்து வெளியிட்ட கோலி்,</p>
<p>உங்களிடம் எத்தனை ஆட்டநாயகன் விருதுகள் உள்ளன என்று கேட்டபோது, &#8220;உண்மையைச் சொல்லப் போனால், எனக்கு எதுவும் தெரியாது.</p>
<p>நான் அவற்றை குர்கானில் உள்ள என் அம்மாவுக்கு அனுப்புகிறேன், அவர் அவற்றைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்.</p>
<p>எனது முழு பயணத்தையும் திரும்பிப் பார்த்தால், இது எனக்கு ஒரு கனவு நனவாகும் என்பதைத் தவிர வேறில்லை.</p>
<p>எனக்கு எப்போதும் எனது திறமை பற்றி தெரியும், நான் இன்று இருக்கும் நிலையை அடைய மிகவும் கடினமாக உழைத்தேன்.</p>
<p>கடவுள் எனக்கு நிறைய ஆசீர்வதித்துள்ளார், என் இதயத்தில் மிகுந்த நன்றியுணர்வை வைத்திருக்கிறேன், மேலும் நான் பெருமைப்படுகிறேன்&#8221; என்றார்.</p>
<p>&#8220;நான் சாதனைகளைப் பற்றி யோசிக்கவில்லை, நாங்கள் முதலில் துடுப்பெடுத்தாடியிருந்தால் செய்திருந்தால் முழு பலத்துடன் விளையாடியிருப்பேன், அனுபவம் முக்கியம்.</p>
<p>இலக்கைத் துரத்தும்போது அணியை நல்ல நிலையில் வைப்பதுதான் ஒரே விஷயம்.</p>
<p>அடிப்படை யோசனை என்னவென்றால், நான் மூன்றாவது இடத்தில் துடுப்பெடுத்தாடுகின்றேன். எதிர் தாக்குதல் நடத்துவதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. என்றார்.</p>
<p>விராட் கோலிக்கு முன்பாக துடுப்பாட்ட வீரர் ஒருவர் ஆட்டமிழக்கும் போதெல்லாம் கைதட்டல் அதிகமாக வருவது குறித்து பேசிய கோலி,</p>
<p>&#8220;உண்மையைச் சொன்னால், எனக்கு அது பிடிக்கவில்லை. தோனி துடுப்பெடுத்தாட வரும் போது இவ்வாறு நடப்பதை நான் பார்த்திருக்கிறேன். பார்வையாளர்கள் உற்சாகமடைவதை நான் புரிந்துகொள்கிறேன்.</p>
<p>நான் விளையாட்டில் கவனம் செலுத்த முயற்சிக்கிறேன். மக்கள் போட்டிகளைப் பார்க்க வருகிறார்கள் என்பதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.</p>
<p>இது ஒரு ஆசீர்வாதம். மக்களின் முகத்தில் புன்னகையைப் பார்ப்பது எனக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது&#8221; என கோலி மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p><strong>ஒருநாள் போட்டிகளில் அதிக ஆட்டநாயகன் விருது பெற்ற வீரர்கள்</strong></p>
<p>62 &#8211; சச்சின் டெண்டுல்கர்<br />
48 &#8211; சனத் ஜெயசூர்யா<br />
45 &#8211; விராட் கோலி*<br />
32 &#8211; ஜாக் காலிஸ்<br />
32 &#8211; ரிக்கி பாண்டிங்<br />
32 &#8211; ஷாஹித் அஃப்ரிடி</p>
<p>The post <a href="https://oruvan.com/kohli-remembers-god-and-dhoni/">கடவுளையும், தோனியையும் நினைவு கூர்ந்த கோலி!</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இங்கிலாந்து அணி வீரருக்கு அபராதம்!</title>
		<link>https://oruvan.com/england-player-fined/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 08 Jan 2026 10:27:57 +0000</pubDate>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Cricket News]]></category>
		<category><![CDATA[England Cricket]]></category>
		<category><![CDATA[Harry Brook]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=42697</guid>

					<description><![CDATA[<p>ஆஷஸ் தொடருக்கு முன்னதாக நியூசிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் போது, இங்கிலாந்து அணியின் வீரர் ஹரி புரூக் (Harry Brook) இரவு விடுதி ஒன்றின் பவுன்சருடன் (Bouncer) வாக்குவாதத்தில் ஈடுபட்டது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த அக்டோபர் 31ஆம் திகதி வெலிங்டனில் உள்ள இரவு விடுதிக்குச் சென்ற புரூக், அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்ததாகக் கூறி உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளார். இதனால் அங்குள்ள பவுன்சருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், புரூக் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து புரூக் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/england-player-fined/">இங்கிலாந்து அணி வீரருக்கு அபராதம்!</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஆஷஸ் தொடருக்கு முன்னதாக நியூசிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் போது, இங்கிலாந்து அணியின் வீரர் ஹரி புரூக் (Harry Brook) இரவு விடுதி ஒன்றின் பவுன்சருடன் (Bouncer) வாக்குவாதத்தில் ஈடுபட்டது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p>
<p>கடந்த அக்டோபர் 31ஆம் திகதி வெலிங்டனில் உள்ள இரவு விடுதிக்குச் சென்ற புரூக், அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்ததாகக் கூறி உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளார்.</p>
<p>இதனால் அங்குள்ள பவுன்சருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், புரூக் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து புரூக் உடனடியாக அணியின் பாதுகாப்பு அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.</p>
<p>இந்த விவகாரத்தை விசாரித்த இங்கிலாந்து கிரிக்கெட் சபை, புரூக்கின் நடத்தை நாட்டின் கௌரவத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கருதி, அவருக்கு அதிகபட்ச அபராதத் தொகையான 30,000 பவுண்ட் விதித்துள்ளது.</p>
<p>இருப்பினும், அவர் தலைவர் பதவியில் நீடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மன்னிப்புக் கோரியுள்ள ஹரி புரூக், &#8221; தனது செயல் இங்கிலாந்து அணிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிட்டது.</p>
<p>இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு எதிர்காலத்தில் பொறுப்புடன் நடப்பேன்&#8221; எனத் தெரிவித்துள்ளார்.</p>
<p>ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி 4 -1 என்ற கணக்கில் படுதோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், வீரர்களின் இத்தகைய களத்திற்கு வெளியிலான செயல்பாடுகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன.</p>
<p>இங்கிலாந்து வீரர்கள் தொடரின் போது தொடர்ந்து மது அருந்தும் பழக்கத்தைக் கொண்டிருந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.</p>
<p>ஆஷஸ் முடிந்து நாடு திரும்பும் புரூக், வரும் ஜனவரி 19ஆம் திகதி இலங்கைத் தொடருக்கான ஆயத்தங்களை மேற்கொள்ளவுள்ளார்.</p>
<p>தலைவராக அவர் எதிர்கொள்ளும் முதல் பெரிய தொடராக பெப்ரவரியில் நடைபெறவுள்ள டி20 கிண்ணம் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/england-player-fined/">இங்கிலாந்து அணி வீரருக்கு அபராதம்!</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
