<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Colombo Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/colombo/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/colombo/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Thu, 23 Apr 2026 07:57:04 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Colombo Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/colombo/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இலங்கையின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5,000 அமெரிக்க டொலர் உயர்வு</title>
		<link>https://oruvan.com/sri-lankas-gdp-per-capita-rises-by-us5000/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Apr 2026 07:57:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[CBSL]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[GDP]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48765</guid>

					<description><![CDATA[<p>இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக, தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5,000 அமெரிக்க டொலர் என்ற அளவைத் தாண்டியுள்ளது என இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டபோது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2025ஆம் ஆண்டில் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5,003 டொலர் ஆகும். 2024ம் ஆண்டில் 4,546 டொலராக இருந்த தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஓராண்டில் 457 டொலர் அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய அதிகபட்ச தனிநபர் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lankas-gdp-per-capita-rises-by-us5000/">இலங்கையின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5,000 அமெரிக்க டொலர் உயர்வு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக, தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5,000 அமெரிக்க டொலர் என்ற அளவைத் தாண்டியுள்ளது என இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.</p>
<p>2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டபோது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன்படி, 2025ஆம் ஆண்டில் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5,003 டொலர் ஆகும்.</p>
<p>2024ம் ஆண்டில் 4,546 டொலராக இருந்த தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஓராண்டில் 457 டொலர் அதிகரித்துள்ளது.</p>
<p>இதற்கு முந்தைய அதிகபட்ச தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2018ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டது. அப்போது 4,372 அமெரிக்க டொலராக பதிவாகியிருந்தது.</p>
<p>2022ம் ஆண்டு இலங்கை அதிகாரப்பூர்வமாகப் பொருளாதார ரீதியாகத் திவாலான நாடாக அறிவிக்கப்பட்டபோது, ​​அதன் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3,464 டொலராக பதிவாகியிருந்தது.</p>
<p>தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு நாட்டின் மொத்தப் பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பை, அந்நாட்டின் மக்கள்தொகையால் வகுக்கக் கிடைப்பதாகும்.</p>
<p>இது ஒரு நாட்டின் பொருளாதார வலிமை மற்றும் உற்பத்தித் திறனை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு அளவீடு ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lankas-gdp-per-capita-rises-by-us5000/">இலங்கையின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5,000 அமெரிக்க டொலர் உயர்வு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கையர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு</title>
		<link>https://oruvan.com/increase-in-life-expectancy-of-sri-lankans/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Apr 2026 07:46:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48762</guid>

					<description><![CDATA[<p>தேசிய தடுப்பூசி திட்டத்தின் மூலம் கடந்த 15 ஆண்டுகளில் இந்நாட்டு மக்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் பிரதான தொற்றுநோய் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் பாலித கருணாபேம இதனை தெரிவித்துள்ளார். தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஊடாக குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் பல நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு வைத்தியர் பாலித கருணாபேம இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். நோய் எதிர்ப்புத் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/increase-in-life-expectancy-of-sri-lankans/">இலங்கையர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தேசிய தடுப்பூசி திட்டத்தின் மூலம் கடந்த 15 ஆண்டுகளில் இந்நாட்டு மக்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.</p>
<p>தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் பிரதான தொற்றுநோய் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் பாலித கருணாபேம இதனை தெரிவித்துள்ளார்.</p>
<p>தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஊடாக குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் பல நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு வைத்தியர் பாலித கருணாபேம இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.</p>
<p>நோய் எதிர்ப்புத் தன்மையில் இலங்கை மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது. 1978 ஆம் ஆண்டு முதல் எமது நாட்டில் தேசிய தடுப்பூசி திட்டம் நடைமுறையில் உள்ளது.</p>
<p>இதன் காரணமாக தடுப்பூசிகள் மூலம் குழந்தைகள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். போலியோ, ருபெல்லா போன்ற நோய்களை இலங்கையிலிருந்து ஒழிக்க முடிந்தது.</p>
<p>தடுப்பூசிகள் காரணமாக ஏனைய நோய்களைத் தடுத்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.</p>
<p>இதன்காரணமாக, கடந்த 15 ஆண்டுகளில் ஆயுட்காலம் அதிகரிக்கவும், குழந்தை இறப்பு வீதம் குறையவும் தேசிய தடுப்பூசி திட்டம் முக்கியமானதாக அமைந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/increase-in-life-expectancy-of-sri-lankans/">இலங்கையர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கொழும்பில் நடந்த மனிதாபிமானமற்ற செயல் &#8211; போதைப் பொருளுடன் சந்தேகநபர் கைது</title>
		<link>https://oruvan.com/inhumane-act-in-colombo-suspect-arrested-with-drugs/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Apr 2026 05:23:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#police]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[Dehiwala]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48579</guid>

					<description><![CDATA[<p>தெஹிவளையில் முதியவர் ஒருவரை தள்ளி கீழே வீழ்த்தி பணம் பறித்த சந்தேக நபர் “ஐஸ்” போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட காணொளியில் காணப்பட்ட, தெஹிவளை பகுதியில் ஒரு முதியவரை தள்ளி கீழே வீழ்த்தி பணம் பறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தெஹிவளை பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 17ஆம் திகதி தெஹிவளை வைத்தியசாலை வீதியில் நடந்து சென்ற 74 வயதுடைய ஒருவரை தள்ளி கீழே வீழ்த்தி, [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/inhumane-act-in-colombo-suspect-arrested-with-drugs/">கொழும்பில் நடந்த மனிதாபிமானமற்ற செயல் &#8211; போதைப் பொருளுடன் சந்தேகநபர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தெஹிவளையில் முதியவர் ஒருவரை தள்ளி கீழே வீழ்த்தி பணம் பறித்த சந்தேக நபர் “ஐஸ்” போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட காணொளியில் காணப்பட்ட, தெஹிவளை பகுதியில் ஒரு முதியவரை தள்ளி கீழே வீழ்த்தி பணம் பறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தெஹிவளை பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>கடந்த ஏப்ரல் 17ஆம் திகதி தெஹிவளை வைத்தியசாலை வீதியில் நடந்து சென்ற 74 வயதுடைய ஒருவரை தள்ளி கீழே வீழ்த்தி, அவரது சட்டைப் பையில் இருந்த ரூபாய் 2100 பணத்தை பறித்து சந்தேக நபர் தப்பிச் சென்றிருந்தார்.</p>
<p>மனிதாபிமானமற்ற செயல் இடம்பெற்ற காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, பொலிஸார் விரிவான விசாரணையை ஆரம்பித்தனர்.</p>
<p>தெஹிவளை பொலிஸ் குற்றப்பிரிவு மேற்கொண்ட நடவடிக்கையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன், அவர் வைத்திருந்த ஐஸ் போதைப்பொருள் 5200 மில்லிகிராம் அளவும் பொலிசார் கைபஓபற்றியுள்ளனர்.</p>
<p>சந்தேக நபர் 23 வயதுடையவர், தெஹிவளை ஓபன் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.</p>
<p>கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று கல்கிசை கௌரவ நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார். இச் சம்பவம் தொடர்பாக தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/inhumane-act-in-colombo-suspect-arrested-with-drugs/">கொழும்பில் நடந்த மனிதாபிமானமற்ற செயல் &#8211; போதைப் பொருளுடன் சந்தேகநபர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அரசாங்க அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும்</title>
		<link>https://oruvan.com/government-offices-will-operate-as-usual/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 15 Apr 2026 04:46:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[Tamil News]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48364</guid>

					<description><![CDATA[<p>அரசாங்க அலுவலகங்கள் இன்று (15), நாளை (16) மற்றும் நாளை மறுநாள் (17) வழக்கம் போல் செயல்படும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. தமிழ மற்றும் சிங்கள புத்தாண்டு காரணமாக, அரசாங்க ஊழியர்களுக்கு திங்கட்கிழமை மற்றும் நேற்று (14) மட்டுமே விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், புத்தாண்டுக்காக தங்கள் கிராமங்களுக்குச் சென்ற பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், இன்று (15) முதல் பேருந்துகளை இயக்கத் தொடங்குவதாக தேசியப் போக்குவரத்து [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/government-offices-will-operate-as-usual/">அரசாங்க அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அரசாங்க அலுவலகங்கள் இன்று (15), நாளை (16) மற்றும் நாளை மறுநாள் (17) வழக்கம் போல் செயல்படும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.</p>
<p>தமிழ மற்றும் சிங்கள புத்தாண்டு காரணமாக, அரசாங்க ஊழியர்களுக்கு திங்கட்கிழமை மற்றும் நேற்று (14) மட்டுமே விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதற்கிடையில், புத்தாண்டுக்காக தங்கள் கிராமங்களுக்குச் சென்ற பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், இன்று (15) முதல் பேருந்துகளை இயக்கத் தொடங்குவதாக தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p>
<p>இதற்கான தேவையான அறிவுறுத்தல்கள் அனைத்து மாகாணப் போக்குவரத்து அதிகாரசபைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக அதன் செயல்திட்டப் பணிப்பாளர் ஷெரீன் அதுகொரலா தெரிவித்தார்.</p>
<p>எவ்வாறாயினும், இன்று ஒரு வழக்கமான அலுவலக நாள் என்பதால், அலுவலக இரயில் சேவைகள் வழக்கம் போல் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக இரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.</p>
<p>பயணிகளின் தேவையின் அடிப்படையில் உரிய இரயில்கள் சேவையில் இணைக்கபட்டுள்ளதாக இரயில்வே திணைக்களத்தின் போக்குவரத்து கண்காணிப்பாளர் அசங்க சமரசிங்க தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/government-offices-will-operate-as-usual/">அரசாங்க அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>எரிவாயு விலை அதிகரிப்பு &#8211; ஆறு மில்லியன் குடும்பங்கள் நேரடியாக பாதிப்பு</title>
		<link>https://oruvan.com/gas-price-hike-six-million-families-directly-affected/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Apr 2026 04:22:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[Gas Cylinder]]></category>
		<category><![CDATA[gas price]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48061</guid>

					<description><![CDATA[<p>எரிவாயு விலை உயர்வால், நாட்டில் எரிவாயுவைப் பயன்படுத்தும் குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் சுமார் ஆறு மில்லியன் (61,11,315) குடும்பங்களின் வாழ்க்கை நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் நடைமுறைக்கு வரும் வகையில் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 லிட்டர் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 775 ரூபா அதிகரித்து, அதன் புதிய விலை 4765 ஆக பதிவாகியுள்ளது. 5.0 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 308 ரூபா அதிகரித்து, அதன் புதிய விலை 1910 ரூபாவாக [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/gas-price-hike-six-million-families-directly-affected/">எரிவாயு விலை அதிகரிப்பு &#8211; ஆறு மில்லியன் குடும்பங்கள் நேரடியாக பாதிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>எரிவாயு விலை உயர்வால், நாட்டில் எரிவாயுவைப் பயன்படுத்தும் குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் சுமார் ஆறு மில்லியன் (61,11,315) குடும்பங்களின் வாழ்க்கை நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளது.</p>
<p>நேற்று முன் தினம் நடைமுறைக்கு வரும் வகையில் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 லிட்டர் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 775 ரூபா அதிகரித்து, அதன் புதிய விலை 4765 ஆக பதிவாகியுள்ளது.</p>
<p>5.0 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 308 ரூபா அதிகரித்து, அதன் புதிய விலை 1910 ரூபாவாக உயர்ந்துள்ளது. 2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 140 ரூபா அதிகரித்து, அதன் புதிய விலை 890 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p>
<p>அதேபோல் லாஃப் நிறுவனத்தின் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 1070 ரூபா அதிகரித்து, அதன் புதிய விலை 5700 ரூபாவாக பதிவாகியுள்ளது. ஐந்து கிலோ சிலிண்டரின் விலை 418 ரூபா அதிகரித்து, அதன் புதிய விலை 2280 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p>
<p>மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, கொழும்பு மாவட்டத்தில் உள்ள மொத்த 661,822 குடும்ப அலகுகளில் 85.5 சதவீதம் சமையலுக்கு எரிவாயுவைப் பயன்படுத்துகின்றன.</p>
<p>அதே வேளையில், கம்பஹா மாவட்டத்தில் உள்ள மொத்தக் குடும்பங்களில் 66.9 சதவீதம் சமையலுக்கு எரிவாயுவைப் பயன்படுத்துகின்றன. களுத்துறை மாவட்டத்தில், மொத்தக் குடும்பங்களின் எண்ணிக்கையில் 55.9 சதவீதம் பேர் எரிவாயுவை பயன்படுத்துகின்றன.</p>
<p>மொனராகலை மாவட்டத்தில் சமையலுக்கு எரிவாயுவைப் பயன்படுத்தும் வீடுகளின் சதவீதம் மிகக் குறைவாக உள்ளது. அங்கு 15.3 சதவீத வீடுகள் எரிவாயுவைப் பயன்படுத்துகின்றன.</p>
<p>இருப்பினும், நாட்டில் உள்ள வீடுகளில் 55.3 சதவீதம், சமையலுக்கான முக்கிய ஆற்றல் மூலமாக விறகைப் பயன்படுத்துவதாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மொனராகலை மாவட்டத்தில் சமையலுக்கு விறகைப் பயன்படுத்தும் வீடுகளின் சதவீதம் மிக அதிகமாக பதிவாகியுள்ளது. அங்கு 83.6 சதவீத வீடுகளில் விறகை பயன்படுத்துகின்றன.</p>
<p>பதுளை மாவட்டத்தில் சமையலுக்கு எரிவாயுவைப் பயன்படுத்தும் வீடுகளின் சதவீதம் மிக அதிகமாக உள்ளது, அங்கு 80.6 சதவீதம் வீடுகள் பயன்படுத்துகின்றன.</p>
<p>இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் விரிவான தரவு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஷியாமலி கருணாரத்ன தெரிவித்துள்ளார்.</p>
<p>இதற்கிடையில், எரிவாயு விலை உயர்வு காரணமாக, உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில் பலவகை உணவுகளின் விலைகளை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.</p>
<p>இதற்கிடையில், பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜெயவர்தன, எரிவாயு விலை அதிகரித்தாலும் பேக்கரிப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்படாது என்று கூறினார்.</p>
<p>சந்தையில் பேக்கரிப் பொருட்களின் விலைகள் ஏற்கனவே அதிகமாக இருப்பதாகவும், விலைகள் மேலும் உயர்த்தப்பட்டால், பேக்கரி உற்பத்தி பொருட்களை விற்க முடியாத நிலை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.</p>
<p>எரிவாயு விலை உயர்வால் பேக்கரிப் பொருட்களில் பாதிப்பு ஏற்பட்டாலும், தற்சமயம் பேக்கரிப் பொருட்களின் விலையை உயர்த்துவதை விட, அந்தச் செலவை பேக்கரி உரிமையாளர்களே ஏற்றுக்கொள்வதே மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று ஜெயவர்தன மேலும் தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/gas-price-hike-six-million-families-directly-affected/">எரிவாயு விலை அதிகரிப்பு &#8211; ஆறு மில்லியன் குடும்பங்கள் நேரடியாக பாதிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கையின் முன்னணி வங்கி ஒன்றில் 1300 கோடி ரூபா மோசடி</title>
		<link>https://oruvan.com/massive-financial-fraud-worth-rs-13-2-billion-at-ndb-bank/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Apr 2026 08:58:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[NDB]]></category>
		<category><![CDATA[NDB Fraud]]></category>
		<category><![CDATA[தேசிய அபிவிருத்தி வங்கி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48040</guid>

					<description><![CDATA[<p>இலங்கையின் முன்னணி வங்கிகளில் ஒன்றான தேசிய அபிவிருத்தி வங்கி (NDB) ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்ட சுமார் 13.2 பில்லியன் ரூபாய் அளவிலான பாரிய நிதி மோசடி தொடர்பில் அதன் பணிப்பாளர் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியானதை அடுத்து, கொழும்பு பங்குச் சந்தையில் அந்த வங்கியின் பங்குப்பரிமாற்றங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. ஆரம்பத்தில் இந்த மோசடியின் அளவு குறைவாக மதிப்பிடப்பட்டிருந்தாலும், வங்கியின் உள்ளக விசாரணைகளின் மூலம் இது 13.2 பில்லியன் ரூபாய் அதாவது 1300 கோடி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/massive-financial-fraud-worth-rs-13-2-billion-at-ndb-bank/">இலங்கையின் முன்னணி வங்கி ஒன்றில் 1300 கோடி ரூபா மோசடி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையின் முன்னணி வங்கிகளில் ஒன்றான தேசிய அபிவிருத்தி வங்கி (NDB) ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்ட சுமார் 13.2 பில்லியன் ரூபாய் அளவிலான பாரிய நிதி மோசடி தொடர்பில் அதன் பணிப்பாளர் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.</p>
<p>இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியானதை அடுத்து, கொழும்பு பங்குச் சந்தையில் அந்த வங்கியின் பங்குப்பரிமாற்றங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.</p>
<p>ஆரம்பத்தில் இந்த மோசடியின் அளவு குறைவாக மதிப்பிடப்பட்டிருந்தாலும், வங்கியின் உள்ளக விசாரணைகளின் மூலம் இது 13.2 பில்லியன் ரூபாய் அதாவது 1300 கோடி ரூபாய் என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p>
<p>இந்த மோசடியுடன் தொடர்புடைய அனைத்து ஊழியர்களும் உடனடியாகப் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களின் கணினி அணுகல் வசதிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.</p>
<p>அத்துடன், சட்ட அமலாக்கத்துறையினரின் உதவியுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>பாதிக்கப்பட்ட செயல்பாட்டுப் பிரிவு, புதிய பணியாளர்கள் மற்றும் திருத்தப்பட்ட அறிக்கையிடல் வழிமுறைகளுடன் தனி மேற்பார்வையின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.</p>
<p>அத்துடன், வங்கியின் செயல்பாடுகள் முழுவதும் கூடுதல் அணுகல் கட்டுப்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.</p>
<p>இவ்வளவு பெரிய தொகை மோசடி செய்யப்பட்டிருந்தாலும், வங்கியின் வாடிக்கையாளர்களின் வைப்புப்பணம் மற்றும் மீதிகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்றும், அவை பாதுகாப்பாக இருப்பதாகவும் வங்கி நிர்வாகம் மிகத்தெளிவாக உறுதியளித்துள்ளது.</p>
<p>இந்த நிதியிழப்பு காரணமாக 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வங்கிக்கு சுமார் 4.0 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>வங்கியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 990 பில்லியன் ரூபா எனவும், மொத்த சொத்து மதிப்புடன் ஒப்பிடுகையில் இது 0.7 சதவீதமே என்பதால், வங்கியின் நிதி ஸ்திரத்தன்மைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இலங்கை மத்திய வங்கி இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டுள்ளதுடன், பங்குதாரர்களுக்கு வழங்கப்படவிருந்த ரொக்க லாபப்பங்கீடுகளை (Cash Dividends) உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.</p>
<p>மேலும், வங்கியின் கிளைகளை விரிவாக்கம் செய்வதற்கும், ஏனைய தேவையற்ற செலவுகளை மேற்கொள்வதற்கும் மத்திய வங்கி தற்காலிகத் தடையை விதித்துள்ளது.</p>
<p>மோசடி, அதன் காரணங்கள் மற்றும் வங்கியின் அமைப்புகள் மற்றும் செயல்முறைகளின் போதுமான தன்மை ஆகியவற்றை முழுமையாகவும் பாரபட்சமின்றியும் ஆய்வு செய்வதற்காக, வாரியம் ஒரு சுயாதீன தடயவியல் தணிக்கையாளரையும் நியமித்துள்ளது.</p>
<p>அந்த ஆய்வின் நோக்கம் மற்றும் முடிவுகள் உரிய நேரத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்குத் தெரிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>வங்கியின் அன்றாட நடவடிக்கைகள் எவ்வித தடையுமின்றி தொடர்வதுடன், இழந்த நிதியை மீட்டெடுப்பதற்கான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.</p>
<p>The post <a href="https://oruvan.com/massive-financial-fraud-worth-rs-13-2-billion-at-ndb-bank/">இலங்கையின் முன்னணி வங்கி ஒன்றில் 1300 கோடி ரூபா மோசடி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை முதல் நீர்வெட்டு நேரம் குறைப்பு</title>
		<link>https://oruvan.com/water-cut-hours-reduced-in-some-areas-of-colombo-district-from-tomorrow/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Sat, 04 Apr 2026 15:20:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[cut]]></category>
		<category><![CDATA[District]]></category>
		<category><![CDATA[hours]]></category>
		<category><![CDATA[reduced]]></category>
		<category><![CDATA[tomorrow]]></category>
		<category><![CDATA[water]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=47950</guid>

					<description><![CDATA[<p>கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை ( 05) முதல் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் கால அளவைக் குறைக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது. பாதுக்கை, ஹோமாகம, பெலன்வத்த மற்றும் பன்னிபிட்டிய ஆகிய பகுதிகளுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது அமுலில் உள்ள நீர்வெட்டு நேரம் நாளை முதல் தினசரி 08 முதல் 12 மணித்தியாலங்களால் குறைக்கப்படும் என சபை குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும், சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 11 ஆம் திகதி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/water-cut-hours-reduced-in-some-areas-of-colombo-district-from-tomorrow/">கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை முதல் நீர்வெட்டு நேரம் குறைப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை ( 05) முதல் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் கால அளவைக் குறைக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது.</p>
<p>பாதுக்கை, ஹோமாகம, பெலன்வத்த மற்றும் பன்னிபிட்டிய ஆகிய பகுதிகளுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.</p>
<p>தற்போது அமுலில் உள்ள நீர்வெட்டு நேரம் நாளை முதல் தினசரி 08 முதல் 12 மணித்தியாலங்களால் குறைக்கப்படும் என சபை குறிப்பிட்டுள்ளது.</p>
<p>எவ்வாறாயினும், சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை எந்தவொரு பிரதேசத்திலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/water-cut-hours-reduced-in-some-areas-of-colombo-district-from-tomorrow/">கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை முதல் நீர்வெட்டு நேரம் குறைப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஷமிந்திர ராஜபக்சவிற்கு திறந்த பிடியாணை</title>
		<link>https://oruvan.com/open-arrest-warrant-issued-for-shamindra-rajapaksa/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Apr 2026 05:54:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[Court]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=47824</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகன் ஷமிந்திர ராஜபக்ச உள்ளிட்டவர்களுக்கு திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏர்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்தது தொடர்பான கையூட்டுச் சம்பவம் ஒன்றில் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள ஷமிந்திர ராஜபக்ஷ மற்றும் கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோரைக் கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவுகளை கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று பிறப்பித்தார். இலங்கையில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் இந்த உத்தரவை அறிவிக்குமானு நீதிபதி மேலும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/open-arrest-warrant-issued-for-shamindra-rajapaksa/">ஷமிந்திர ராஜபக்சவிற்கு திறந்த பிடியாணை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகன் ஷமிந்திர ராஜபக்ச உள்ளிட்டவர்களுக்கு திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p>
<p>ஏர்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்தது தொடர்பான கையூட்டுச் சம்பவம் ஒன்றில் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள ஷமிந்திர ராஜபக்ஷ மற்றும் கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோரைக் கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவுகளை கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று பிறப்பித்தார்.</p>
<p>இலங்கையில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் இந்த உத்தரவை அறிவிக்குமானு நீதிபதி மேலும் உத்தரவிட்டார்.</p>
<p>மேலும், சந்தேக நபர்கள் நாட்டிற்குள் வந்தவுடன் அவர்களைக் கைது செய்யவும், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்குத் தகவல் தெரிவிக்கவும் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.</p>
<p>The post <a href="https://oruvan.com/open-arrest-warrant-issued-for-shamindra-rajapaksa/">ஷமிந்திர ராஜபக்சவிற்கு திறந்த பிடியாணை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சுரேஷ் சலே, திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி</title>
		<link>https://oruvan.com/suresh-saleh-admitted-to-colombo-national-hospital-due-to-sudden-illness/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Wed, 25 Mar 2026 12:21:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[admitted]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[hospital]]></category>
		<category><![CDATA[national]]></category>
		<category><![CDATA[Saleh]]></category>
		<category><![CDATA[Suresh]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=47408</guid>

					<description><![CDATA[<p>தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பொறுப்பில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். அவரது உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காகக் குடும்ப உறுப்பினர்கள் அனுமதி கோரியிருந்த போதிலும், அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது. அவரது உடல்நிலை குறித்து அறிவிக்கப்பட்டதன் பின்னர், நீதவான் அவரைப் பார்வையிட்டதுடன், பின்னர் வைத்தியரிடம் ஆற்றுப்படுத்தியுள்ளார். அங்கு, வைத்திய ஆலோசனையின்படி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/suresh-saleh-admitted-to-colombo-national-hospital-due-to-sudden-illness/">சுரேஷ் சலே, திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p>
<p>அவர் தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பொறுப்பில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.</p>
<p>அவரது உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காகக் குடும்ப உறுப்பினர்கள் அனுமதி கோரியிருந்த போதிலும், அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.</p>
<p>அவரது உடல்நிலை குறித்து அறிவிக்கப்பட்டதன் பின்னர், நீதவான் அவரைப் பார்வையிட்டதுடன், பின்னர் வைத்தியரிடம் ஆற்றுப்படுத்தியுள்ளார்.</p>
<p>அங்கு, வைத்திய ஆலோசனையின்படி அவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/suresh-saleh-admitted-to-colombo-national-hospital-due-to-sudden-illness/">சுரேஷ் சலே, திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வாகனத் தரிப்பிடக் கட்டணங்களை இன்று முதல் மீளவும் அமுல்</title>
		<link>https://oruvan.com/parking-fees-to-be-reimposed-from-today/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 23 Mar 2026 07:07:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[CMC]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=47258</guid>

					<description><![CDATA[<p>கொழும்பு நகரில் வாகனத் தரிப்பிடக் கட்டணங்களை இன்று முதல் மீளவும் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையின் மாநகர ஆணையாளர் இதனை தெரிவித்துள்ளார். இன்று காலை 6.00 மணி முதல் வழமை போன்று வாகனத் தரிப்பிட முகாமைத்துவம் மற்றும் கட்டண அறவீட்டு நடைமுறைகளை முன்னெடுப்பதற்கு, கொழும்பு மாநகர சபையின் நிதிக் குழு தீர்மானித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் நிலவிய வாகன வரிசைகள் மற்றும் எரிபொருள் பெற வந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/parking-fees-to-be-reimposed-from-today/">வாகனத் தரிப்பிடக் கட்டணங்களை இன்று முதல் மீளவும் அமுல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கொழும்பு நகரில் வாகனத் தரிப்பிடக் கட்டணங்களை இன்று முதல் மீளவும் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>கொழும்பு மாநகர சபையின் மாநகர ஆணையாளர் இதனை தெரிவித்துள்ளார்.</p>
<p>இன்று காலை 6.00 மணி முதல் வழமை போன்று வாகனத் தரிப்பிட முகாமைத்துவம் மற்றும் கட்டண அறவீட்டு நடைமுறைகளை முன்னெடுப்பதற்கு, கொழும்பு மாநகர சபையின் நிதிக் குழு தீர்மானித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் நிலவிய வாகன வரிசைகள் மற்றும் எரிபொருள் பெற வந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், கடந்த 18ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை வாகனத் தரிப்பிடக் கட்டண அறவீடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.</p>
<p>எனினும், எரிபொருள் விநியோகத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட QR முறைமை மற்றும் ஒற்றை/இரட்டை இலக்க முறைமை ஊடாக எரிபொருள் வரிசைகள் குறைந்துள்ளன.</p>
<p>இதனைக் கருத்திற்கொண்டு, மீண்டும் கட்டணங்களை அறவிடுவது குறித்து கொழும்பு மாநகர சபை அவதானம் செலுத்தியிருந்தது.</p>
<p>இதன்படி, இன்று முதல் வாகனத் தரிப்பிட முகாமைத்துவமும் கட்டண அறவீடும் வழமை போன்று இடம்பெறும் என கொழும்பு மாநகர ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p><strong> </strong></p>
<p>The post <a href="https://oruvan.com/parking-fees-to-be-reimposed-from-today/">வாகனத் தரிப்பிடக் கட்டணங்களை இன்று முதல் மீளவும் அமுல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
