<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>clarification Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/clarification/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/clarification/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sat, 24 May 2025 07:49:38 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>clarification Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/clarification/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பாகிஸ்தானுக்கு நிதி விடுவித்தமை தொடர்பில் ஐ.எம்.எப் விளக்கம்</title>
		<link>https://oruvan.com/mf-clarification-on-release-of-funds-to-pakistan/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 24 May 2025 07:49:38 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[clarification]]></category>
		<category><![CDATA[funds]]></category>
		<category><![CDATA[IMF]]></category>
		<category><![CDATA[pakistan]]></category>
		<category><![CDATA[release]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=21173</guid>

					<description><![CDATA[<p>பஹல்காம் தாக்குதலுக்கும், பாகிஸ்தானுக்கும் தொடர்பு காணப்படுவதாக இந்தியா குற்றம் சுமத்தி வந்த நிலையில், சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிலான நிதி உதவியை சர்வதேச நிதியம் பாகிஸ்தானுக்கு வழங்கியிருந்தது. இதற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், தற்போது சர்வதேச நாணய நிதியம் விளக்கமளித்துள்ளது. அனைத்து நிபந்தனைகளையும் பாகிஸ்தான் பூர்த்தி செய்ததைத் தொடர்ந்து நிதியை விடுவித்ததாக சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் துறையின் பணிப்பாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் &#8220;பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்குவது [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/mf-clarification-on-release-of-funds-to-pakistan/">பாகிஸ்தானுக்கு நிதி விடுவித்தமை தொடர்பில் ஐ.எம்.எப் விளக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பஹல்காம் தாக்குதலுக்கும், பாகிஸ்தானுக்கும் தொடர்பு காணப்படுவதாக இந்தியா குற்றம் சுமத்தி வந்த நிலையில், சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிலான நிதி உதவியை சர்வதேச நிதியம் பாகிஸ்தானுக்கு வழங்கியிருந்தது.</p>
<p>இதற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், தற்போது சர்வதேச நாணய நிதியம் விளக்கமளித்துள்ளது.</p>
<p>அனைத்து நிபந்தனைகளையும் பாகிஸ்தான் பூர்த்தி செய்ததைத் தொடர்ந்து நிதியை விடுவித்ததாக சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் துறையின் பணிப்பாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார்.</p>
<p>அவர் மேலும் தெரிவிக்கையில்</p>
<p>&#8220;பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்குவது என்று எடுக்கப்பட்டிருந்த முடிவை, கடந்த ஆண்டு செப்டம்பரில் நாங்கள் மீளாய்வு செய்திருந்தோம்.</p>
<p>அதன் அடிப்படையில் மே 9 ஆம் திகதி இரண்டாவது கட்டமாக அந்நாட்டுக்கு நிதி விடுவிக்கப்பட்டது. மீளாய்வின்போது, திட்டம் சரியான பாதையில் செல்கிறதா,<br />
திட்டத்தின் கீழ் உள்ள நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா, திட்டத்தை மீண்டும் சரியான பாதையில் கொண்டு வர ஏதேனும் கொள்கை மாற்றங்கள் தேவையா என்பதை நாங்கள் ஆய்வு செய்தோம்.</p>
<p>பாகிஸ்தான் அனைத்து நிபந்தனைகளும் பூர்த்தி செய்திருக்கிறது. சில சீர்திருத்த நடவடிக்கைகளிலும் அது முன்னேற்றம் அடைந்திருக்கிறது. எனவேதான் நாங்கள் அடுத்தக்கட்ட நிதியை விடுவித்தோம். நாங்கள் இதற்கு முன்னர் கொடுத்த நிதி அனைத்தும் அந்நாட்டின் மத்திய வங்கி கணக்கில் சரியாக வரவு வைக்கப்பட்டிருக்கிறது&#8221; என்று கூறியுள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/mf-clarification-on-release-of-funds-to-pakistan/">பாகிஸ்தானுக்கு நிதி விடுவித்தமை தொடர்பில் ஐ.எம்.எப் விளக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஜனாதிபதி நிதியத்திலிருந்து பாரியளவான தொகை பெறப்பட்டதன் நோக்கம் என்ன &#8211; தயாசிறி கேள்வி</title>
		<link>https://oruvan.com/presidents-fund-dayasiri-gives-clarification/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Dec 2024 11:48:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[clarification]]></category>
		<category><![CDATA[Dayasiri]]></category>
		<category><![CDATA[Fund]]></category>
		<category><![CDATA[President's]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=3422</guid>

					<description><![CDATA[<p>2005 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கிடையில் ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பயனடைந்த அரசியல்வாதிகளில் பெயர் அண்மையில் நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கருத்து வெளியிட்டுள்ளார். ஊடகங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட எவரும் ஜனாதிபதி நிதியத்திற்கு விண்ணப்பித்து நிதியை பெற்றுக்கொள்ள முடியும். 2019 ஆம் ஆண்டு இருதய சத்திரசிகிச்சைக்காக சுமார் 4 லட்சம் ரூபாவைப் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/presidents-fund-dayasiri-gives-clarification/">ஜனாதிபதி நிதியத்திலிருந்து பாரியளவான தொகை பெறப்பட்டதன் நோக்கம் என்ன &#8211; தயாசிறி கேள்வி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>2005 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கிடையில் ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பயனடைந்த அரசியல்வாதிகளில் பெயர் அண்மையில் நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கருத்து வெளியிட்டுள்ளார்.</p>
<p>ஊடகங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p>
<p>இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,</p>
<p>“பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட எவரும் ஜனாதிபதி நிதியத்திற்கு விண்ணப்பித்து நிதியை பெற்றுக்கொள்ள முடியும்.</p>
<p>2019 ஆம் ஆண்டு இருதய சத்திரசிகிச்சைக்காக சுமார் 4 லட்சம் ரூபாவைப் பெற்றுக் கொண்டேன். அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நிதியுதவிக்கு அனுமதியளித்திருந்தார்.</p>
<p>ஜனாதிபதி நிதியத்தினூடாக முழுத் தொகையையும் பெற்றுக்கொள்ளவில்லை. ஏனைய செலவிற்கு தனிப்பட்ட நிதியையே பயன்படுத்தினேன்.</p>
<p>ஜனாதிபதி நிதியைப் பயன்படுத்தி பல்வேறு அரசியல்வாதிகளுக்கு எதிரான தவறான பிரசாரங்கள் தடுக்கப்பட வேண்டும். தவறான கூற்றுக்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.</p>
<p>அரசியல்வாதிகள் ஜனாதிபதி நிதியத்தில் பணம் பெறுவது தவறு என்றால், நிதி தொடர்பான விதிமுறைகளில் தேவையான திருத்தங்களை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்” என்றார்.</p>
<p>மேலும் ஜனாதிபதி நிதியத்திலிருந்து மருத்துவ காரணங்களுக்காக பணம் கோரப்பட்டுள்ளதாக கூறிய அவர் பாரியளவான தொகைகள் எந்த நோக்கத்திற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட என்றும் கேள்வி எழுப்பினார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/presidents-fund-dayasiri-gives-clarification/">ஜனாதிபதி நிதியத்திலிருந்து பாரியளவான தொகை பெறப்பட்டதன் நோக்கம் என்ன &#8211; தயாசிறி கேள்வி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
