<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Chemmani Mass Graves Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/chemmani-mass-graves/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/chemmani-mass-graves/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sun, 31 Aug 2025 08:22:02 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Chemmani Mass Graves Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/chemmani-mass-graves/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>செம்மணியில் இன்று மதியம் வரையில் 12 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன</title>
		<link>https://oruvan.com/12-skeletons-identified-in-chemmani-as-of-this-afternoon/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 31 Aug 2025 08:22:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Chemmani Mass Graves]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[Jaffna News]]></category>
		<category><![CDATA[செம்மணி]]></category>
		<category><![CDATA[செம்மணி புதைகுழி]]></category>
		<category><![CDATA[மனித எலும்பு கூடுகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம“]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=31201</guid>

					<description><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மதியம் வரையில் புதிதாக 10 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 12 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 07ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்றைய [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/12-skeletons-identified-in-chemmani-as-of-this-afternoon/">செம்மணியில் இன்று மதியம் வரையில் 12 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மதியம் வரையில் புதிதாக 10 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 12 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது</p>
<p>செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 07ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.</p>
<p>செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 39 ஆவது நாளாக அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது.</p>
<p>அதேவேளை கட்டம் கட்டமாக இதுவரையில் 48 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 10 எலும்புக்கூட்டு தொகுதியுடன் இதுவரையில் 191 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>அதேவேளை இதுவரையில் 209 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மதியத்துடன் அகழ்வு பணிகள் நிறைவடைந்த நிலையில் , நாளைய தினம் திங்கட்கிழமை காலை மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பமாகவுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/12-skeletons-identified-in-chemmani-as-of-this-afternoon/">செம்மணியில் இன்று மதியம் வரையில் 12 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி லண்டனில் பாரிய போராட்டம்</title>
		<link>https://oruvan.com/massive-protest-in-london-demanding-justice-for-the-chemmani-mass-grave/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 31 Aug 2025 07:15:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Chemmani Mass Graves]]></category>
		<category><![CDATA[Chemmani News]]></category>
		<category><![CDATA[london]]></category>
		<category><![CDATA[Protest]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=31184</guid>

					<description><![CDATA[<p>“செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணையே ஒரே தீர்வு. பாதிக்கப்பட்ட தரப்பாக தமிழர்களுக்கு சர்வதேச விசாரணையொன்று இங்கு இடம்பெறுவதன் ஊடாகவே நீதியை பெற முடியும். இந்த விடயத்தில் மனித உரிமைகளை நிலைநாட்ட பிரித்தானிய அரசாங்கம் தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும்” என பிரித்தானியாவாழ் புலம்பெயர் தமிழர்கள் தெரிவித்துள்ளனர். சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை லண்டன் டவுனிங் ஸ்ட்ரீட்டில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. &#8216;இரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு, கண்ணீரால் நினைவுக்கூரப்படும் உயிர்கள்&#8217; என்ற தொனிப்பொருளில் இந்த [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/massive-protest-in-london-demanding-justice-for-the-chemmani-mass-grave/">செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி லண்டனில் பாரிய போராட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>“செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணையே ஒரே தீர்வு. பாதிக்கப்பட்ட தரப்பாக தமிழர்களுக்கு சர்வதேச விசாரணையொன்று இங்கு இடம்பெறுவதன் ஊடாகவே நீதியை பெற முடியும்.</p>
<p>இந்த விடயத்தில் மனித உரிமைகளை நிலைநாட்ட பிரித்தானிய அரசாங்கம் தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும்” என பிரித்தானியாவாழ் புலம்பெயர் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.</p>
<p>சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை லண்டன் டவுனிங் ஸ்ட்ரீட்டில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.</p>
<p>&#8216;இரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு, கண்ணீரால் நினைவுக்கூரப்படும் உயிர்கள்&#8217; என்ற தொனிப்பொருளில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p>
<p>நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உட்பட பல்வேறு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.</p>
<p>ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றதுடன், இலங்கையில் காணாமலாக்கப்பட்டோருக்கு சர்வதேச விசாரணையின் ஊடாகவே நீதியை வழங்க முடியும் என வலியுறுத்தினர்.</p>
<p>செம்மணி மனித புதைகுழியில் பல 50 இற்கும் அதிகமான எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.</p>
<p>எனவே, காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் சர்வதேச விசாரணை இடம்பெறுவதன் ஊடாகவே செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் தென்பகுதிகளில் கண்டுபிடிக்கப்படும் மனித புதைகுழிகளுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முடியும்.</p>
<p>பிரித்தானிய அரசாங்கம் இந்த விவகாரத்தில் சர்வதேச விசாரணை முன்னெடுக்க இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட புலம்பெயர் தமிழர்கள் வலியுறுத்தினர்.</p>
<p><img fetchpriority="high" decoding="async" class="alignnone size-full wp-image-31185" src="https://oruvan.com/wp-content/uploads/2025/08/33-1.jpg" alt="" width="620" height="452" srcset="https://oruvan.com/wp-content/uploads/2025/08/33-1.jpg 620w, https://oruvan.com/wp-content/uploads/2025/08/33-1-400x292.jpg 400w, https://oruvan.com/wp-content/uploads/2025/08/33-1-250x182.jpg 250w, https://oruvan.com/wp-content/uploads/2025/08/33-1-150x109.jpg 150w, https://oruvan.com/wp-content/uploads/2025/08/33-1-50x36.jpg 50w, https://oruvan.com/wp-content/uploads/2025/08/33-1-100x73.jpg 100w, https://oruvan.com/wp-content/uploads/2025/08/33-1-200x146.jpg 200w, https://oruvan.com/wp-content/uploads/2025/08/33-1-300x219.jpg 300w, https://oruvan.com/wp-content/uploads/2025/08/33-1-350x255.jpg 350w, https://oruvan.com/wp-content/uploads/2025/08/33-1-450x328.jpg 450w, https://oruvan.com/wp-content/uploads/2025/08/33-1-500x365.jpg 500w, https://oruvan.com/wp-content/uploads/2025/08/33-1-550x401.jpg 550w" sizes="(max-width: 620px) 100vw, 620px" /></p>
<p><img decoding="async" class="alignnone size-full wp-image-31186" src="https://oruvan.com/wp-content/uploads/2025/08/london.jpg" alt="" width="1022" height="701" srcset="https://oruvan.com/wp-content/uploads/2025/08/london.jpg 1022w, https://oruvan.com/wp-content/uploads/2025/08/london-400x274.jpg 400w, https://oruvan.com/wp-content/uploads/2025/08/london-650x446.jpg 650w, https://oruvan.com/wp-content/uploads/2025/08/london-250x171.jpg 250w, https://oruvan.com/wp-content/uploads/2025/08/london-768x527.jpg 768w, https://oruvan.com/wp-content/uploads/2025/08/london-150x103.jpg 150w, https://oruvan.com/wp-content/uploads/2025/08/london-50x34.jpg 50w, https://oruvan.com/wp-content/uploads/2025/08/london-100x69.jpg 100w, https://oruvan.com/wp-content/uploads/2025/08/london-200x137.jpg 200w, https://oruvan.com/wp-content/uploads/2025/08/london-300x206.jpg 300w, https://oruvan.com/wp-content/uploads/2025/08/london-350x240.jpg 350w, https://oruvan.com/wp-content/uploads/2025/08/london-450x309.jpg 450w, https://oruvan.com/wp-content/uploads/2025/08/london-500x343.jpg 500w, https://oruvan.com/wp-content/uploads/2025/08/london-550x377.jpg 550w, https://oruvan.com/wp-content/uploads/2025/08/london-800x549.jpg 800w" sizes="(max-width: 1022px) 100vw, 1022px" /></p>
<p>The post <a href="https://oruvan.com/massive-protest-in-london-demanding-justice-for-the-chemmani-mass-grave/">செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி லண்டனில் பாரிய போராட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் மீளவும் ஆரம்பம்</title>
		<link>https://oruvan.com/excavation-work-at-chemmani-mass-grave-resumes/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 15 Aug 2025 03:05:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Chemmani Mass Graves]]></category>
		<category><![CDATA[Chemmani News]]></category>
		<category><![CDATA[M. A. Sumanthiran]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=29507</guid>

					<description><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழி தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. வழக்கு முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி புதைகுழி விவகாரம் நீதிமன்றத்திலே கூப்பிடபட்டது. அந்த வேளையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஒரு அறிக்கையையும் பேராசிரிரியர் ஒரு அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளார்கள். இதில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/excavation-work-at-chemmani-mass-grave-resumes/">செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் மீளவும் ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>செம்மணி மனித புதைகுழி தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.</p>
<p>வழக்கு முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்தார்.</p>
<p>அவர் மேலும் தெரிவிக்கையில்,</p>
<p>செம்மணி புதைகுழி விவகாரம் நீதிமன்றத்திலே கூப்பிடபட்டது. அந்த வேளையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஒரு அறிக்கையையும் பேராசிரிரியர் ஒரு அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளார்கள்.</p>
<p>இதில் பேராசிரியருடைய அறிக்கையிலே ஸ்கானர் பாவிக்கப்பட்டதற்கு பின்னர் இன்னமும் குறைந்தது எட்டு வாரகாலத்திற்கு மேலதிக அகழ்வுகள் செய்ய வேண்டிய தேவை இருப்பதாக அறிவித்திருக்கிறார்.</p>
<p>அது சம்பந்தமாக நீதிவான் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இதற்குரிய ஒழுங்குகள் செய்யுமாறும் கட்டளையிட்டிருக்கிறார்.</p>
<p>யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கம் நீதிமன்ற அனுமதியை கோரி இங்கே மேற்பார்வையை செய்வதற்கு அனுமதி பெற்றிருந்தது.</p>
<p>அந்த வகையிலே இரண்டு தடவைகள் நான் அங்கே சென்றிருந்தேன். அதனடிப்படையிலே மன்றிலே இன்றைக்கு சில விடயங்களை மன்றினுடைய கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறேன்.</p>
<p>இதில் முதலாவதாக இந்த அகழ்வு ஒரு மரண விசாரணையில் தான் இது நிகழ்கிறது. குற்றவியல் நடவடிக்கையிலும் இப்படியான விடயத்திற்கு என்று சட்ட ஏற்பாடுகள் எதுவும் கிடையாது.</p>
<p>ஆகையினாலே ஒரு உடல் எங்காவது கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக ஒரு மரண விசாரணையாகத் தான் அது மாறுகிறது. அதனால் தான் நீதிவான் அந்த மரண விசாரணையை நடாத்துகிறார்.</p>
<p>எந்த மரண விசாரணையிலும் மிக முக்கியமான ஒரு விடயம் அந்த உடல் யாருடையது என்ற அடையாளப்படுத்துதல். அவ்வாறு அடையாளப்படுத்துவது தான் பிரதான நோக்கமாகும் இருக்கிறது.</p>
<p>ஆகவே அகழ்வுப் பணிகள் நடைபெறுகிறதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இதனை அடையாளப்படுத்துவது எப்படி என்ற கேள்வி எழுகிறது.</p>
<p>இவ்வாறான நிலைமைகளுக்கு மத்தியில் சட்ட வைத்திய அதிகாரி இன்னுமொரு விடயத்தையும் மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.<br />
இங்கிருப்பவர்களுக்கு நிபுணத்துவம் இல்லை என்றெல்லாம் போலியான செய்திகள் ஊடகங்களில் பரப்பபடுகிறது என்றெல்லாம் சொல்லப்பட்டது. அதைப் பற்றிய முறைப்பாடுகள் நேரடியாக எழுத்து மூலமாக செய்யுமாறும் பணிக்கப்பட்டுள்ளார்.</p>
<p>ஆனால் அகழ்வுப் பணியில் நிபுணத்துவம் இருந்தாலும் அடையாளப்படுத்தலிலே இந்த நாட்டில் நிபுணத்துவம் இல்லை என்பது எல்லோருக்கும் எல்லாருக்கும் தெரிந்த விடயம் என்கின்ற சமர்ப்பணத்தை நான் முதலிலே செய்தேன்.</p>
<p>அதற்கு சான்றாக மன்னார், மாத்தளை போன்ற விடங்களிலும் சான்று பொருட்கள் முதலில் வெளியே அனுப்பப்பட்டன.</p>
<p>கடந்த 1999 ஆம் ஆண்டு செம்மணியிலே கண்டெடுக்கப்பட்ட 15 எலும்புக்கூட்டு தொகுதி சான்றுப் பொருட்களும் முதலிலே கைதராபாத் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பப்பட்டு அங்கேயும் அதற்கான நிபுணத்துவம் இல்லையென்று திருப்பி கொண்டுவரப்பட்டு அது பின்னர் லாஸ்கோ பல்கலைக் கழகத்திற்கு அனுப்பப்பட்டு அந்த சான்று பொருட்கள் தற்போது லங்க சேய பல்கலைக்கழகத்தில் இருப்பதாக நாங்கள் அறிகிறோம் என்ற தகவலை மன்றுக்கு நான் கொடுத்திருக்கிறேன்.</p>
<p>அந்த வேளையிலே சோமரட்ன ராஜபக்ச என்கின்ற ஒரு மரண தண்டனைக் கைதி மரண தண்டனை விதிக்கிற போது மேல் நீதிமன்றத்திலே செய்த கூற்றின் அடிப்படையிலே தான் அந்த அகழ்வு நடத்தப்பட்டது.</p>
<p>ஆனால் 15 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மட்டும் தான் கண்டெடுக்கப்பட்டன. அது அகழ்வதற்கு முன்னதாக அவர் செய்த கூற்றிலே 300 தொடக்கம் 400 வரையான என்று அவர் சொல்லியிருக்கிறார்.</p>
<p>ஆனாலும் அந்த வேளையில் செய்த அகழ்வுப் பணியிலே 15 மட்டும் தான் கண்டுபிடிக்கப்பட்டது. இப்பொழுது ஏற்கனவே 150 எலும்புக்கூட்டு தொகுதிகள் இங்கே கண்டெடுக்கப்பட்டிருக்கிற காரணத்தினாலே அவர் காண்பித்த இடத்திற்கு மிக அருகாமையிலே இருப்பதால் இதைத்தான் அவர் சொல்லியிருக்க வேண்டும்.</p>
<p>26 வருடங்களுக்கு பிறகு இது தற்செயலாக கண்டெடுக்கப்பட்டதாக இருந்தாலும் இப்படி இங்கே நூற்றுக் கணக்கான உடல்கள் புதைக்கப்பட்டதென்று அவர் 26 வருடங்களுக்கு முன்னர் சொன்னது சரியானதாக இப்பொழுது நிரூபணமாகிறது என்ற அடிப்படையிலே அந்த விடயத்தோடு இந்த விடயமும் தொடர்புபட்டது என்பது கண்கூடாகக் தெரிகிறது என்ற சமர்ப்பணத்தையும் செய்தேன்.</p>
<p>அந்த விடயத்திலே B2899 என்கின்ற வழக்கு யாழ் நீதிவான் நீதிமன்றத்திலே ஆரம்பிக்கப்பட்டு பல இரானுவ வீரர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் முதலில் வைக்கப்பட்டு பின்னர் சட்டமா அதிபரின் ஆலோசனையின் அடிப்படையில் சிலர் விடுவிக்கப்பட்டு பின்னர் ஐந்து பேர் பிணையில் செல்லவும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.</p>
<p>அந்த வழக்கு அவர்களுடைய பாதுகாப்பின் நிமித்தமாக முதலிலே அனுராதபுரத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு அதன் பிறகு அது இப்பொழுது கொழும்பிலே பிரதான நீதவான் நீதிமன்றத்திலே இருக்கிறது என்கிற தகவல் எங்களுக்கு கிடைத்திருக்கிறது.</p>
<p>அதையும் நான் மன்றுக்கு சொல்லி B2899 என்கின்ற யாழ் நீதவான் நீதிமன்ற வழக்கேட்டில் இருந்து அனுப்பப்பட்ட அந்த வழக்கை மீளவும் இந்த நீதிமன்றத்திற்கே பாரப்படுத்துமாறு ஒரு கோரிக்கையை நீதவான் செய்ய வேண்டுமெனக் கேட்டிருந்தேன்.</p>
<p>அவர் இந்த விடயத்திலே அப்படியாக இந்த இரண்டும் தொடர்புபட்டதா என்பதை முதலிலே பரிசீலித்து அவ்வாறு தொடர்புபட்டதாயின் அதனை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணித்திருக்கிறார்.</p>
<p>அதேபோல் சோமரட்ன ராஜபக்ச எந்தக் காலப் பகுதியிலே இங்கு உடல்கள் புதைக்கப்பட்டது என்று சொன்னாரோ அதே 1999 ஆண்டு அந்தக் காலப் பகுதியிலே இந்தப் பிரதேசத்திலே பிரதானமாக பலர் காணாமல் ஆக்கப்பட்ட முறைப்பாடுகள் இலங்கை மனித உரிமை சங்கத்திற்கு கொடுக்கப்பட்டு இருந்ததன் காரணமாக கலாநிதி தெவநேசன் நேசையாவின் தலைமையிலே இன்னும் மூவரடங்கிய விசாரணைகுழு நியமிக்கப்பட்டு அவர்கள் 2003ஆம் ஆண்டு ஒக்ரோபர் 28 ஆம் திகதி தங்களுடைய விசாரணை அறிக்கையை சமர்ப்பித்து அது அந்த நேரமே பிரசுரிக்கப்பட்டு இருக்கிறது.</p>
<p>210 பக்கங்கள் அடங்கிய அந்த அறிக்கையொன்றின் பிரதியை நான் மன்றுக்கு சமர்ப்பித்து இருக்கிறேன். அந்த அறிக்கையிலே காணாமல் ஆக்கப்பட்ட வர்கள் அரியாலை, சாவகச்சேரி நாவற்குழி யாழ்பாண நகர் மற்றும் நகரை அண்மித்த பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் இதில் 300 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் இருந்தாலும் 200 இற்கும் மேற்பட்டவைக்கு படைத்தரப்பினரே பொறுப்பானவர்கள் என்றும் திட்டவட்டமாக அதிலே சொல்லப்பட்டிருக்கிறது.</p>
<p>அதில் பல விபரங்களும் சொல்லப்பட்டு இருக்கின்றன. அந்தப் படைத்தரப்பினர் யார் எந்தெந்த முகாம்களில் யார் யார் இருந்தார்கள் என்று பெயர்கள் அதிலே கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த முகாம்களுக்கு பொறுப்பாக இருந்தவர்கள் யார் என்ற விபரங்கள் எல்லாம் அதிலே கொடுக்கப்பட்டிருக்கிறது.</p>
<p>ஆகையினாலே இந்த விபரங்களை இப்பொழுது மன்றிலே சமர்ப்பிக்கிற பொழுது இதற்கு பொறுப்பாக இருந்திருக்க கூடியவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு சந்தர்ப்பம் கூடுதலாக இருக்கிற காரணத்தினாலே இது சம்பந்தமாக உரிய உத்தரவு கொடுக்க வேண்டுமென நான் கோரியிருக்கிறேன்.</p>
<p>அப்படியான ஒரு உத்தரவையும் மன்று செய்யவில்லை. ஆனால் அது சம்பந்தமாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அதனை அறிந்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூறப்பட்டிருக்கிறது.</p>
<p>குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைப் பொறுத்த வரையிலே இந்த விடயங்கள் சம்பந்தமாக அவர்கள் இப்பொழுது புலன் விசாரணை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.</p>
<p>சாதாரணமாக மரண விசாரணை முடிவடைந்த பிறகு தான் புலன் விசாரணை ஆரம்பமாகும். ஆனால் சமாந்தரமாக ஒரு புலன் விசாரணை தேவை என்று பொலிஸ்மா அதிபர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்கள் செய்கிறார்கள்.</p>
<p>ஆரம்பத்திலே அதற்கு எதிர்ப்பு எதுவும் இல்லையென்றாலும் இன்றையதினம் நானும் சட்டத்தரணி மணிவண்ணன் அவர்களும் சட்டத்தரணி குருபரன் அவர்களும் சிலரை வாக்கு மூலம் பெறுவதற்கு வரவழைத்து அவர்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் பயமுறுத்திய ஆண்கள் என்ற முறைப்பாட்டை முன்வைத்திருக்கிறோம்.</p>
<p>அதனடிப்படையிலே வாக்குமூலம் கொடுக்க எவரும் முன்வருகிற போது அங்கேயே இந்த மயானத்திலேயே அந்தப் பிரதேசத்திலேயே அனைவரும் காணக்கூடிய இடத்திலேயே வாக்கு மூலங்களை பதிவு செய்வது உசிதமானது என்று நீதவான் உத்தரவிட்டிருக்கிறார்.</p>
<p>நான் விசேடமாக என்னுடைய விண்ணப்பத்திலே குற்றப் புலனாய்வு திணைக்களத்தை இந்த விடயத்திலிருந்து அகற்றுமாறு ஒரு கோரிக்கையை முன்வைத்திருக்கிறேன். இந்த வேளையிலே அவர்கள் இதிலே ஈடுபடத் தேவையில்லை. அவர்களை இங்கே இருந்து அகற்றுமாறு ஒரு கோரிக்கையை முன்வைத்திருக்கிறேன்.</p>
<p>அதுமட்டுமல்ல சான்றுப் பொருட்களும் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுக்கு அனுப்பப்படுவதாக இருந்தால் அந்தப் பல்கலைக்கழக ஆய்வு கூடங்களிலே இதைச் செய்யப் போகிறவர்கள் இப்பொழுது ரத்து இதனை மேற்பார்வை செய்ய வேண்டும்.</p>
<p>ஏனென்றால் யாருடைய கட்டுக்காவலில் இந்த சான்றுப் பொருட்கள் எப்படியாக கைமாறுகின்றன என்பது ஒரு முக்கியமான விடயம்.</p>
<p>ஆகையினாலே இதனையும் செய்ய வேண்டுமென நான் விடுத்த கோரிக்கைக்கு நீதவான் அவர்கள் சட்டவைத்திய அதிகாரியிடத்தே இதை ஆராயுமாறு ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார்.</p>
<p>இதை ஆராய்ந்து எப்படியான பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப முடியுமென்று அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறார். சட்ட வைத்திய அதிகாரி இன்னுமொருவிடயத்தை மன்றுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.</p>
<p>அதாவது யாழ்ப்பாண பல்கலைக் கழகத்திலே DNA பரிசோதனை செய்வதற்கான ஒரு ஆய்வு கூடம் நிறுவப்பட்டுக் கொண்டு இருப்பதாகவும் அதற்குத் தேவையான உபகரணங்கள் வந்து சேர்ந்து விட்டது என்றும் வெகு விரைவிலே தங்களாலே இதனைச் செய்ய முடியுமென்றும் சொல்லியிருந்தார்.</p>
<p>ஆனால் முதன் முதலிலே செய்யப்படுகிற பரிசோதனை இந்தப் பரிசோதனையில் இருப்பது உசிதமல்ல என்கின்ற விடயத்தை நான் மன்றுக்கு தெரியப்படுத்தி இருக்கிறேன்.</p>
<p>இந்த விடயங்களிலே தெளிவாக நிபுணத்துவம் வாய்ந்தது என்பது மட்டுமல்ல அனுபவமுள்ள ஒரு ஆய்வுகூடம் அல்லது பல்கலைக்கழகம் இதைச் செய்வது உசிதம் என்ற கருத்தையும் நான் முன்வைத்திருக்கிறேன்.</p>
<p>ஆகவே அது குறித்த தீர்மானம் பின்னர் எடுக்கப்படும். எட்டு வாரங்களுக்கு இதனை ஆய்வு செய்கிற ஒழுங்குகள் விசேடமாக அதற்கான நிதி ஒதுக்கீடுகள் சம்பந்தமான விடயங்கள் செய்யப்பட வேண்டும் என்கின்ற உத்தரவும் தற்பொழுது கொடுக்கப்பட்டிருக்கிறது.</p>
<p>மேலும் 20 ஆம் திகதி இந்த இடம் மீள் சுத்தப்படுத்தபடுவதாகவும் அதற்குப் பின்னர் 22 ஆம் திகதி மீண்டும் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகும் என்றும் நீதவான் கூறியிருக்கிறார்- என்றார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/excavation-work-at-chemmani-mass-grave-resumes/">செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் மீளவும் ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>செம்மணி மனித புதைகுழிக்கு நீதிகோரி தமிழகத்தில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு</title>
		<link>https://oruvan.com/call-for-a-massive-protest-in-tamil-nadu-demanding-justice-for-the-chemmani-mass-grave/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 13 Aug 2025 05:59:18 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Chemmani]]></category>
		<category><![CDATA[Chemmani Mass Graves]]></category>
		<category><![CDATA[Tamil Nadu]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=29304</guid>

					<description><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழி விவகாரத்தில் நீதியான விசாரணை செய்யுமாறு வலியுறுத்தி தமிழகத்தில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 19ஆம் திகதி, சென்னை சிவானந்தா சாலையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. செம்மணி புதைகுழி விடயத்தில் ஐநா மற்றம் நீதியான விசாரணை நடத்த வேண்டும் எனவும், ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த சட்டமன்றதில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/call-for-a-massive-protest-in-tamil-nadu-demanding-justice-for-the-chemmani-mass-grave/">செம்மணி மனித புதைகுழிக்கு நீதிகோரி தமிழகத்தில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழி விவகாரத்தில் நீதியான விசாரணை செய்யுமாறு வலியுறுத்தி தமிழகத்தில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>எதிர்வரும் 19ஆம் திகதி, சென்னை சிவானந்தா சாலையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.</p>
<p>செம்மணி புதைகுழி விடயத்தில் ஐநா மற்றம் நீதியான விசாரணை நடத்த வேண்டும் எனவும், ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த சட்டமன்றதில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p><img decoding="async" class="alignnone size-full wp-image-29305" src="https://oruvan.com/wp-content/uploads/2025/08/tamilnadu.jpg" alt="" width="1134" height="1600" srcset="https://oruvan.com/wp-content/uploads/2025/08/tamilnadu.jpg 1134w, https://oruvan.com/wp-content/uploads/2025/08/tamilnadu-400x564.jpg 400w, https://oruvan.com/wp-content/uploads/2025/08/tamilnadu-650x917.jpg 650w, https://oruvan.com/wp-content/uploads/2025/08/tamilnadu-250x353.jpg 250w, https://oruvan.com/wp-content/uploads/2025/08/tamilnadu-768x1084.jpg 768w, https://oruvan.com/wp-content/uploads/2025/08/tamilnadu-1089x1536.jpg 1089w, https://oruvan.com/wp-content/uploads/2025/08/tamilnadu-150x212.jpg 150w, https://oruvan.com/wp-content/uploads/2025/08/tamilnadu-50x71.jpg 50w, https://oruvan.com/wp-content/uploads/2025/08/tamilnadu-100x141.jpg 100w, https://oruvan.com/wp-content/uploads/2025/08/tamilnadu-200x282.jpg 200w, https://oruvan.com/wp-content/uploads/2025/08/tamilnadu-300x423.jpg 300w, https://oruvan.com/wp-content/uploads/2025/08/tamilnadu-350x494.jpg 350w, https://oruvan.com/wp-content/uploads/2025/08/tamilnadu-450x635.jpg 450w, https://oruvan.com/wp-content/uploads/2025/08/tamilnadu-500x705.jpg 500w, https://oruvan.com/wp-content/uploads/2025/08/tamilnadu-550x776.jpg 550w, https://oruvan.com/wp-content/uploads/2025/08/tamilnadu-800x1129.jpg 800w" sizes="(max-width: 1134px) 100vw, 1134px" /></p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/call-for-a-massive-protest-in-tamil-nadu-demanding-justice-for-the-chemmani-mass-grave/">செம்மணி மனித புதைகுழிக்கு நீதிகோரி தமிழகத்தில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>செம்மணி மனித புதைகுழி &#8211; நீதி கேட்டு தமிழகத்தில் ஆர்பாட்டம்</title>
		<link>https://oruvan.com/chemmani-human-grave-protest-in-tamil-nadu-demanding-justice/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 11 Aug 2025 09:00:25 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Chemmani]]></category>
		<category><![CDATA[Chemmani Mass Graves]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=29041</guid>

					<description><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள செம்மணி மனித புதைகுழி விவகாரத்தில் நீதிகோரி தமிழகத்தில் நேற்று முன்தினம் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. கோவை BSNL அலுவலகம் முன்பு இந்த போராட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன் தலைமை தாங்கினார். தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் வெ. ஆறுச்சாமி அவர்களும், ஆதித்தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் அவர்களும், திராவிடர் தமிழர் கட்சியின் தலைவர் வெண்மனி அவர்களும் இந்தப் போராட்டத்தில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/chemmani-human-grave-protest-in-tamil-nadu-demanding-justice/">செம்மணி மனித புதைகுழி &#8211; நீதி கேட்டு தமிழகத்தில் ஆர்பாட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள செம்மணி மனித புதைகுழி விவகாரத்தில் நீதிகோரி தமிழகத்தில் நேற்று முன்தினம் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.</p>
<p>கோவை BSNL அலுவலகம் முன்பு இந்த போராட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன் தலைமை தாங்கினார்.</p>
<p>தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் வெ. ஆறுச்சாமி அவர்களும், ஆதித்தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் அவர்களும், திராவிடர் தமிழர் கட்சியின் தலைவர் வெண்மனி அவர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.</p>
<p>மேலும், தமிழ்நாடு திராவிடர் சுயமரியாதை கழகத்தின் தலைவர் நேருதாஸ், புரட்சிகர் இளைஞர் முண்ணனியின் மாவட்ட செயலாளர் மலரவன், சி‌.பி.எம்.ரெட் ஸ்டாரின் மாவட்ட பொறுப்பாளர் இனியவன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் தங்கராசு உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டு கண்டனம் தெரிவித்தனர்.</p>
<div style="width: 1280px;" class="wp-video"><video class="wp-video-shortcode" id="video-29041-1" width="1280" height="720" preload="metadata" controls="controls"><source type="video/mp4" src="https://oruvan.com/wp-content/uploads/2025/08/chemmani.mp4?_=1" /><a href="https://oruvan.com/wp-content/uploads/2025/08/chemmani.mp4">https://oruvan.com/wp-content/uploads/2025/08/chemmani.mp4</a></video></div>
<p>The post <a href="https://oruvan.com/chemmani-human-grave-protest-in-tamil-nadu-demanding-justice/">செம்மணி மனித புதைகுழி &#8211; நீதி கேட்டு தமிழகத்தில் ஆர்பாட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		<enclosure url="https://oruvan.com/wp-content/uploads/2025/08/chemmani.mp4" length="86286307" type="video/mp4" />

			</item>
		<item>
		<title>இலங்கையில் நிலத்துக்கீழ் தான் பல உண்மைகள் புதைக்கப்பட்டுள்ளன – எம்.ஏ. சுமந்திரன்</title>
		<link>https://oruvan.com/many-truths-are-buried-underground-in-sri-lanka-m-a-sumanthiran/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 05 Aug 2025 09:01:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Chemmani Mass Graves]]></category>
		<category><![CDATA[Chemmani News]]></category>
		<category><![CDATA[M. A. Sumanthiran]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=28456</guid>

					<description><![CDATA[<p>இலங்கையில் நிலத்திற்கு கீழ் தான் உண்மைகள் பலவும் புதைக்கப்பட்டு இருக்கின்றன என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வு இடம்பெறுவதை நேற்று திங்கட்கிழமை (04) நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், செம்மணி மனிதப் புதைகுழி ஆய்வு நடைபெறுகிற இடத்திலே ஸ்கேனர் கருவி இன்றைக்கு பாவிக்கப்பட்டிருக்கிறது. அதனை பாவிப்பதன் மூலமாக நிலத்திற்கு அடியிலே ஏதாவது அசாதாரணமான விடயங்கள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/many-truths-are-buried-underground-in-sri-lanka-m-a-sumanthiran/">இலங்கையில் நிலத்துக்கீழ் தான் பல உண்மைகள் புதைக்கப்பட்டுள்ளன – எம்.ஏ. சுமந்திரன்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையில் நிலத்திற்கு கீழ் தான் உண்மைகள் பலவும் புதைக்கப்பட்டு இருக்கின்றன என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.</p>
<p>யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வு இடம்பெறுவதை நேற்று திங்கட்கிழமை (04) நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.</p>
<p>தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,</p>
<p>செம்மணி மனிதப் புதைகுழி ஆய்வு நடைபெறுகிற இடத்திலே ஸ்கேனர் கருவி இன்றைக்கு பாவிக்கப்பட்டிருக்கிறது.</p>
<p>அதனை பாவிப்பதன் மூலமாக நிலத்திற்கு அடியிலே ஏதாவது அசாதாரணமான விடயங்கள் காணப்பட்டால் அல்லது அசைவுகள் இருந்தால் இந்த இயந்திரம் அதனை வெளிக்கொண்டு வரும் எனச் சொல்கிறார்கள்.</p>
<p>இந்த மனிதப் புதைகுழியில் இப்பொழுது 130 இற்கும் மேற்பட்ட எலும்புத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டு இருக்கின்றன. இவ்வாறு ஒவ்வொருநாளும் இங்கு எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்படுகின்றன.</p>
<p>இதனுடைய பின்னணியை நாங்கள் பார்ப்போமாக இருந்தால் 1999 ஆம் ஆண்டு சோமரட்ன ராஜபக்ஷ நீதிமன்றத்தில் சொன்ன கூற்றின் பிரகாரம் அக்கால பகுதியில் 15 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டன.</p>
<p>அதைத் தொடர்ந்து தற்போது தற்செயலாக கண்டெடுக்கப்பட்ட எலும்புகூட்டினால் தொடரும் அகழ்வு பணியில் நூற்றுக்கணக்கான எலும்புக் கூட்டுத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p>
<p>இவ்வாறு இப்போது கண்டெடுக்கப்படுகின்றவை அந்த வேளையில் சோமரட்ன ராஜபக்ஷ சொன்ன கருத்துக்களுடன் ஒத்துப் போகிறது.</p>
<p>அவர் 300 தொடக்கம் 400 வரையான உடல்கள் புதைக்கப்பட்டன என்றும் அதிலே இராணுவ மிக உயர் அதிகாரிகள் பங்காளர்களாக இருந்திருக்கிறார்கள் என்றும் நீதிமன்றத்தில் அப்போது சொன்ன விடயம் கால் நூற்றாண்டுக்கு மேலாக அதாவது, 25 வருடங்களுக்கு பின்னர் இப்போது அதனுடைய உண்மைத்தன்மை வெளிப்படுகிறது.</p>
<p>நான் பல தடவைகள் முன்னரே சொல்லி இருந்ததைப் போல உண்மை கண்டறியப்படுகிற பொறிமுறைமை குறித்து நாங்கள் பேசுகின்ற போது, இலங்கையிலே நிலத்திற்கு கீழ் தான் இந்த உண்மைகள் பல புதைக்கப்பட்டு இருக்கின்றன.</p>
<p>ஆகவே இந்த மனிதப் புதைகுழிகள் தோண்டப்படுகிற விடயம், உண்மை கண்டறியப்படுகிற செயன்முறையிலே மிகவும் முக்கியமான ஒரு பங்களிப்பைச் செலுத்துகிறது.</p>
<p>பலருக்கு பலவிதமான சந்தேகங்கள் இருக்கின்றன. இது மூடி மறைக்கப்படும் அல்லது அப்பொழுது செம்மணியிலே செய்துவிட்டு கைவிட்டது போல அப்படியே இதுவும் கைவிடப்படுமா அல்லது மன்னாரில், கொக்குத்தொடுவாய் மற்றும் மாத்தறையில் நடந்ததை போல இருக்குமா என்று பலவிதமான சந்தேகங்கள், கேள்விகள் பலருக்கு இருக்கிறது.</p>
<p>வேண்டுமென்றே தமிழ் மக்கள் ஒரு இனப் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டதற்கு தற்கால சான்றுகள் இங்கே இருந்து ஆரம்பமாகிறது போலவும் தோன்றுகிறது.</p>
<p>ஆகவே இதற்கான சான்றுகளை சேகரிக்கிற பொறிமுறைகள் விசேடமாக ஜக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிலே தற்பொழுது ஒஸ்லெப் என்ற பொறிமுறை இருக்கிறது. அதாவது சான்று பதிவு செய்வதும் பாதுகாப்பதுமான பொறிமுறை. அவை எல்லாம் வரவழைக்கப்பட்டு இங்கே நடந்த விடயங்கள் முழுமையாக வெளிப்படுத்தப்பட வேண்டும்.</p>
<p>ஆகவே அரசாங்கத்திற்கு நாங்கள் சொல்வது இதிலே முழுமையான வெளிப்படைத் தன்மையோடும் சர்வதேச மேற்பார்வையோடும் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். ஆகையினாலே திரும்பவும் ஒரு சர்வதேச பொறிமுறை இதற்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.</p>
<p>மேலும் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்திலே நிலுவையில் இருக்கும் செம்மணி வழக்கை இங்கே இடமாற்ற வேண்டும்.</p>
<p>இங்கே இருந்த வழக்கை அப்பொழுது சந்தேக நபர்களாக இருந்த இராணுவத்தினர் இங்கே பாதுகாப்பு போதாதென்று கூறி அனுராதபுரத்திற்கு மாற்றி பின்னர் கொழும்பிற்கு மாற்றப்பட்டு அங்கே வழக்கு நடைபெற்று வருகிறது.</p>
<p>ஆகையினாலே அந்த வழக்கு இங்கே திரும்பவும் கொண்டுவரப்பட்டு இந்த வழக்கோடு சேர்ந்து விசாரிக்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/many-truths-are-buried-underground-in-sri-lanka-m-a-sumanthiran/">இலங்கையில் நிலத்துக்கீழ் தான் பல உண்மைகள் புதைக்கப்பட்டுள்ளன – எம்.ஏ. சுமந்திரன்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>செம்மணியில் ஸ்கேன் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்</title>
		<link>https://oruvan.com/scanning-activities-begin-today-in-chemmani/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 04 Aug 2025 07:06:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Chemmani Mass Graves]]></category>
		<category><![CDATA[Chemmani News]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=28369</guid>

					<description><![CDATA[<p>செம்மணி பகுதியில் தற்போது அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு மனித புதைகுழிகளுக்கு மேலதிகமாக அப்பகுதியில் வேறு மனித புதைகுழிகளும் காணப்படுகின்றனவா என்பதனை கண்டறியும் நோக்குடன் ஸ்கான் நடவடிக்கைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது. ஜி.பி.ஆர். ஸ்கானர் (தரையை ஊடுருவும் ராடர்) மூலம், பரந்துபட்ட ஸ்கான் நடவடிக்கைகளை முன்னெடுக்க பாதுகாப்பு அமைச்சின் அனுமதிகள் கிடைக்கப்பெறவில்லை அந்நிலையில், ஶ்ரீஜெயவர்வத்தன புர பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்கானர் கருவியை யாழ் பல்கலைகழகம் ஊடாக பெற்று அதனை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்நடவடிக்கையை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/scanning-activities-begin-today-in-chemmani/">செம்மணியில் ஸ்கேன் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>செம்மணி பகுதியில் தற்போது அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு மனித புதைகுழிகளுக்கு மேலதிகமாக அப்பகுதியில் வேறு மனித புதைகுழிகளும் காணப்படுகின்றனவா என்பதனை கண்டறியும் நோக்குடன் ஸ்கான் நடவடிக்கைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது.</p>
<p>ஜி.பி.ஆர். ஸ்கானர் (தரையை ஊடுருவும் ராடர்) மூலம், பரந்துபட்ட ஸ்கான் நடவடிக்கைகளை முன்னெடுக்க பாதுகாப்பு அமைச்சின் அனுமதிகள் கிடைக்கப்பெறவில்லை</p>
<p>அந்நிலையில், ஶ்ரீஜெயவர்வத்தன புர பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்கானர் கருவியை யாழ் பல்கலைகழகம் ஊடாக பெற்று அதனை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p>
<p>அந்நடவடிக்கையை அடுத்து , இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த ஸ்கானரை பயன்படுத்தி ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.</p>
<p>அதேவேளை செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களான ஆடைகள் மற்றும் பிற பொருட்களை பொதுமக்கள் அடையாளம் காட்டும் வகையில் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை செம்மணி சிந்துபாத்தி இந்து மயானத்தில் மதியம் 1.30 மணி முதல் , மாலை 5 மணி வரையில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>சான்று பொருட்களை பார்வையிட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/scanning-activities-begin-today-in-chemmani/">செம்மணியில் ஸ்கேன் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்டது மனித உரிமைகள் ஆணைக்குழு</title>
		<link>https://oruvan.com/human-rights-commission-of-sri-lanka-visits-chemmani-mass-grave/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 04 Aug 2025 06:24:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Chemmani Mass Graves]]></category>
		<category><![CDATA[Chemmani News]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=28366</guid>

					<description><![CDATA[<p>யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அமைந்துள்ள மனித புதைகுழி அமைந்துள்ள பகுதியை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் பார்வையிட்டிருந்தனர். இன்று காலை 10 மணிக்கு குறித்த பகுதிக்கு சென்ற மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் செம்மணி சிந்துபாத் மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிட்டது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்கள் மற்றும் இரண்டு பணிப்பாளர்களுடன் யாழ்ப்பாண பிராந்திய அலுவலர்கள் அடங்கிய குழுவினரே இவ்வாறு மனித புதைகுழியை பார்வையிட்டிருந்தனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/human-rights-commission-of-sri-lanka-visits-chemmani-mass-grave/">செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்டது மனித உரிமைகள் ஆணைக்குழு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அமைந்துள்ள மனித புதைகுழி அமைந்துள்ள பகுதியை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் பார்வையிட்டிருந்தனர்.</p>
<p>இன்று காலை 10 மணிக்கு குறித்த பகுதிக்கு சென்ற மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் செம்மணி சிந்துபாத் மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிட்டது</p>
<p>இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்கள் மற்றும் இரண்டு பணிப்பாளர்களுடன் யாழ்ப்பாண பிராந்திய அலுவலர்கள் அடங்கிய குழுவினரே இவ்வாறு மனித புதைகுழியை பார்வையிட்டிருந்தனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/human-rights-commission-of-sri-lanka-visits-chemmani-mass-grave/">செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்டது மனித உரிமைகள் ஆணைக்குழு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மேலும் எழும்புக் கூட்டு தொகுதிகள் மீட்பு</title>
		<link>https://oruvan.com/more-burial-mounds-recovered-from-semmani-human-graves/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 03 Aug 2025 11:19:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Chemmani Mass Graves]]></category>
		<category><![CDATA[Chemmani News]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=28340</guid>

					<description><![CDATA[<p>யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை, புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் மூன்று முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடந்த 14 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில், 55 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது செம்மணி பகுதியில் &#8220;தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல &#8211; 01&#8221; மற்றும் &#8220;தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/more-burial-mounds-recovered-from-semmani-human-graves/">செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மேலும் எழும்புக் கூட்டு தொகுதிகள் மீட்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை, புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் மூன்று முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>அதன் அடிப்படையில் கடந்த 14 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில், 55 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது</p>
<p>செம்மணி பகுதியில் &#8220;தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல &#8211; 01&#8221; மற்றும் &#8220;தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல &#8211; 02&#8221; என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p>
<p>இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் 29 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது</p>
<p>இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி கடந்த 14 நாட்களாக முன்னெடுக்கப்படும் நிலையில் இன்றைய தினம் வரையில் 55 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 38 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p>
<p>அதன் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 03 எலும்பு கூட்டு தொகுதியுடனுமாக 120 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 130 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>அதேவேளை நாளைய தினம் திங்கட்கிழமை மேலும் செம்மணியில் தற்போதுள்ள 2 மனித புதைகுழிகளை விட அயலில் மேலும் மனித புதைகுழிகள் உள்ளனவா என்பதனை ஆராயும் நோக்கில், ஸ்கான் நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படவுள்ளது.</p>
<p>அத்துடன் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களை அடையாளம் காணும் வகையில் அவற்றை மக்களுக்கு காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/more-burial-mounds-recovered-from-semmani-human-graves/">செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மேலும் எழும்புக் கூட்டு தொகுதிகள் மீட்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>செம்மணிக்கு 11.7 மில்லின் ரூபாய் ஒதுக்கீடு, புதைகுழியில் 72வது எலும்புக்கூடு கண்டறியப்பட்டது</title>
		<link>https://oruvan.com/11-7-million-rupees-allocated-for-the-chemmani-72nd-skeleton-discovered-in-the-burial-ground/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 22 Jul 2025 02:34:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Chemmani Mass Graves]]></category>
		<category><![CDATA[Chemmani News]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=27230</guid>

					<description><![CDATA[<p>நான்கு அல்லது ஐந்து வயது மதிக்கத்தக்க பிள்ளைகளின் எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட, இலங்கையில் நான்காவது பெரிய மனித புதைகுழி வளாகத்தில் பத்து நாட்கள் இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் அகழ்வுப்பணிகள் ஆரம்பமாகியுள்ளன. 10 நாள் இடைவேளைக்குப் பின்னர் அகழ்வாய்வின் முதல் நாளில் மேலும் ஏழு எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன், அகழ்வாய்வுத் தளத்தில் வைத்து நேற்றைய தினம் (ஜூலை 21) ஊடகங்களிடம் தெரிவித்தார். “இன்றைய [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/11-7-million-rupees-allocated-for-the-chemmani-72nd-skeleton-discovered-in-the-burial-ground/">செம்மணிக்கு 11.7 மில்லின் ரூபாய் ஒதுக்கீடு, புதைகுழியில் 72வது எலும்புக்கூடு கண்டறியப்பட்டது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நான்கு அல்லது ஐந்து வயது மதிக்கத்தக்க பிள்ளைகளின் எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட, இலங்கையில் நான்காவது பெரிய மனித புதைகுழி வளாகத்தில் பத்து நாட்கள் இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் அகழ்வுப்பணிகள் ஆரம்பமாகியுள்ளன.</p>
<p>10 நாள் இடைவேளைக்குப் பின்னர் அகழ்வாய்வின் முதல் நாளில் மேலும் ஏழு எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன், அகழ்வாய்வுத் தளத்தில் வைத்து நேற்றைய தினம் (ஜூலை 21) ஊடகங்களிடம் தெரிவித்தார்.</p>
<p>“இன்றைய 16ஆம் அகழ்வில் முதலாவது &#8216;சைட் வன்&#8217; புதைகுழியில் நான்கு மண்டையோட்டுத் தொகுதிகள் பகுதியளவில் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை இரண்டாவது புதைகுழியில் 3 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு மொத்தமாக 7 அடையாளம் காணப்பட்டுள்ளன.”</p>
<p>யாழ்ப்பாண பொலிஸாரினால் நடத்தப்பட்ட நீதித்துறை நடவடிக்கைகள் குற்றவியல் விசாரணை பிரிவுக்கு (CID) மாற்றப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி தெரிவித்தார்.</p>
<p>ஜூலை 10 ஆம் திகதி அகழ்வாய்வுக் குழுவினருக்கு ஓய்வு அளிக்க தற்காலிகமாக பணிகள் நிறுத்தப்பட்டபோது, 15 நாட்களாக தொடர்ந்த இரண்டாம் கட்ட அகழ்வுப் பணியில், செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழியிலிருந்து 65 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தன.</p>
<p>இதற்கமைய, குற்றப் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட செம்மணி புதைகுழி வளாகத்தில் இருந்து இதுவரை 72 பேரின் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.</p>
<p>செம்மணி உள்ளிட்ட புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளின் வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>&#8220;மனித புதைகுழிகளில் இருந்து உடல்களை தோண்டி எடுக்கவும், சாட்சிகளைப் பாதுகாக்கவும், பயனுள்ள விசாரணைகளை நடத்தவும், இறந்தவர்களை அடையாளம் காணவும் போதுமான நிதி ஒத்துழைப்பு, நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தை வழங்கவும்” அரசாங்கத்திற்கு பரிந்துரைக்குமாறு வலிந்து காணாமல் ஆக்கப்படுகின்றவர்கள் தொடர்பான ஐ.நா. குழுவிற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அனுப்பி வைக்கப்பட்ட அண்மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>செம்மணி அகழ்வுப் பணிக்காக 11.7 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள விடயத்தை வெளிப்படுத்திய நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார &#8220;பணம் ஒரு பிரச்சினை அல்ல&#8221; என இந்தியாவின் தி இந்து ஊடகத்திடம் தெரிவித்திருந்தார்.</p>
<p>செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழியில் மேலும் பல எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்படலாம் என ஆய்வாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ள நிலையில், ஓகஸ்ட் 6 ஆம் திகதி அகழ்வாய்வுத்தளத்தில் வழக்கு விசாரணையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/11-7-million-rupees-allocated-for-the-chemmani-72nd-skeleton-discovered-in-the-burial-ground/">செம்மணிக்கு 11.7 மில்லின் ரூபாய் ஒதுக்கீடு, புதைகுழியில் 72வது எலும்புக்கூடு கண்டறியப்பட்டது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
