<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>CEB Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/ceb/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/ceb/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Mon, 30 Mar 2026 05:14:28 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>CEB Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/ceb/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை</title>
		<link>https://oruvan.com/request-to-use-electricity-economically/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 30 Mar 2026 05:14:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[CEB]]></category>
		<category><![CDATA[Electricity Board]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=47636</guid>

					<description><![CDATA[<p>தற்போதைய சூழ்நிலையில் வலுசக்தியை வினைத்திறனாகவும் உரிய முகாமைத்துவத்துடனும் பயன்படுத்த வேண்டும் என இலங்கை நிலையான எரிசக்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் டி.எம்.டபிள்யூ.ஜே. பண்டார தெரிவித்துள்ளார். மாலை ஐந்து மணி முதல் அதிகாலை வரை மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு எரிபொருட்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களின் பங்களிப்பு இந்த நேரத்தில் அவசியமானது என்றும், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது முக்கியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எரிபொருட்களை எரிப்பதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/request-to-use-electricity-economically/">மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தற்போதைய சூழ்நிலையில் வலுசக்தியை வினைத்திறனாகவும் உரிய முகாமைத்துவத்துடனும் பயன்படுத்த வேண்டும் என இலங்கை நிலையான எரிசக்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் டி.எம்.டபிள்யூ.ஜே. பண்டார தெரிவித்துள்ளார்.</p>
<p>மாலை ஐந்து மணி முதல் அதிகாலை வரை மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு எரிபொருட்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>பொதுமக்களின் பங்களிப்பு இந்த நேரத்தில் அவசியமானது என்றும், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது முக்கியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p>
<p>எரிபொருட்களை எரிப்பதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு அதிக செலவு ஏற்படும் என்றும், மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதன் மூலம் மின்சார முகாமைத்துவத்தை மேற்கொள்வதானது மக்களின் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதுடன், எரிபொருள் எரிப்பதையும் குறைக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.</p>
<p>பொதுமக்கள் எரிசக்தி வினைத்திறன் கொண்ட உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கு முன்வர வேண்டும் எனத் தெரிவித்த அவர், நிலையான எரிசக்தி அதிகார சபையினால் தற்போது ஒரு முத்திரை முறைமை நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், இதன் மூலம் LED மின்குமிழ்கள், குளிரூட்டிகள் மற்றும் ஏசி இயந்திரங்களைக் கொள்வனவு செய்யும் போது எரிசக்தி வினைத்திறன் மிக்க உபகரணங்களைத் தேர்வு செய்ய முடியும் என்றும் கூறினார்.</p>
<p>அதேபோல், எரிசக்தி வினைத்திறன் குறைந்த உபகரணங்கள் நாட்டுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கான சட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், குறுகிய காலத்தில் எரிசக்தியை வினைத்திறனாக்குவதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p>
<p>தற்போதைய நிலையில் நாட்டுக்கு மசகு எண்ணெய் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதாகவும், இதனால் மின்சார உற்பத்திக்காக டீசல் பயன்படுத்தப்படுவதால் மின் உற்பத்திக்கு அதிக செலவு ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p>
<p>பகல் வேளையில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால், பொதுமக்கள் தமது அத்தியாவசியத் தேவைகளுக்கான நேரத்தை மாற்றியமைத்து அவற்றை பகல் பொழுதில் செய்துகொண்டால், மின் உற்பத்திச் செலவைக் குறைப்பதுடன் மக்களின் மின்சாரக் கட்டணத்தையும் குறைத்துக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/request-to-use-electricity-economically/">மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் இரண்டு மின் பிறப்பாக்கிகள் பாதிப்பு</title>
		<link>https://oruvan.com/two-generators-damaged-at-nurachcholai-thermal-power-station/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Dec 2025 03:11:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[CEB]]></category>
		<category><![CDATA[Generators]]></category>
		<category><![CDATA[Norochcholai power plant]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=41909</guid>

					<description><![CDATA[<p>பழுதுபார்ப்பு பணிகள் காரணமாக நுரைச்சோலையில் உள்ள லக்விஜய நிலக்கரி மின் நிலையத்தில் உள்ள இரண்டு மின் பிறப்பாக்கிகள் தற்போது செயல்படாமல் இருப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தேசிய மின் கட்டம் 600 மெகாவாட் உற்பத்தி திறனை இழந்துள்ளதாக மின்சார சபையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். தற்போது, ​​நுரைச்சோலையில் உள்ள லக்விஜய நிலக்கரி மின் நிலையத்தில் உள்ள ஒரு மின் பிறப்பாக்கி மட்டுமே செயல்பாட்டில் உள்ளது, இது தேசிய மின் கட்டத்திற்கு 300 [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/two-generators-damaged-at-nurachcholai-thermal-power-station/">நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் இரண்டு மின் பிறப்பாக்கிகள் பாதிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பழுதுபார்ப்பு பணிகள் காரணமாக நுரைச்சோலையில் உள்ள லக்விஜய நிலக்கரி மின் நிலையத்தில் உள்ள இரண்டு மின் பிறப்பாக்கிகள் தற்போது செயல்படாமல் இருப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.</p>
<p>இதன் காரணமாக தேசிய மின் கட்டம் 600 மெகாவாட் உற்பத்தி திறனை இழந்துள்ளதாக மின்சார சபையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.</p>
<p>தற்போது, ​​நுரைச்சோலையில் உள்ள லக்விஜய நிலக்கரி மின் நிலையத்தில் உள்ள ஒரு மின் பிறப்பாக்கி மட்டுமே செயல்பாட்டில் உள்ளது, இது தேசிய மின் கட்டத்திற்கு 300 மெகாவாட் மின்சாரத்தை வழங்குகிறது.</p>
<p>வழக்கமான பராமரிப்பு காரணமாக லக்விஜய மின் நிலையத்தில் உள்ள ஒரு மின் பிறப்பாக்கி நவம்பர் மூன்றாம் திகதி செயல்பாட்டில் இருந்து நீக்கப்பட்டதாகவும், தொழில்நுட்பக் கோளாறால் டிசம்பர் 20 ஆம் தினதி மற்றொரு மின் பிறப்பாக்கி செயழிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இரண்டு மின் பிறப்பாக்கிகளும் தற்போது பழுதுபார்க்கப்பட்டு வருவதுடன், ஜனவரி முதல் வாரத்தில் அவைகளை மீண்டும் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>எவ்வாறாயினும், நீர் மின் உற்பத்தி வெற்றிகரமாகத் தொடர்வதால், நாளாந்த மின்சார விநியோகத்தில் எந்தத் தடங்கலும் ஏற்படவில்லை என்று இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/two-generators-damaged-at-nurachcholai-thermal-power-station/">நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் இரண்டு மின் பிறப்பாக்கிகள் பாதிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கை மின்சார சபையின் நிவாரணம்!</title>
		<link>https://oruvan.com/relief-from-the-sri-lanka-electricity-board/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Dec 2025 11:33:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[CEB]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=39818</guid>

					<description><![CDATA[<p>நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மின் பாவனையாளர்களின் வீடுகளில் மின் துண்டிப்பு எதனையும் மேற்கொள்ளப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர், மின் பொறியியலாளர் ஷெர்லி குமார இதனை தெரிவித்துள்ளார். மின் கட்டணம் செலுத்தப்படாமைக்காக இந்த மாதத்தில் எந்தவொரு துண்டிப்பும் மின்சார சபையினால் மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும், செலுத்தப்பட வேண்டிய கட்டணம் அடுத்த மாதங்களில் உரிய கட்டணத்துடன் சேர்க்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். மேலும், பல [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/relief-from-the-sri-lanka-electricity-board/">இலங்கை மின்சார சபையின் நிவாரணம்!</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மின் பாவனையாளர்களின் வீடுகளில் மின் துண்டிப்பு எதனையும் மேற்கொள்ளப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர், மின் பொறியியலாளர் ஷெர்லி குமார இதனை தெரிவித்துள்ளார்.</p>
<p>மின் கட்டணம் செலுத்தப்படாமைக்காக இந்த மாதத்தில் எந்தவொரு துண்டிப்பும் மின்சார சபையினால் மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும், செலுத்தப்பட வேண்டிய கட்டணம் அடுத்த மாதங்களில் உரிய கட்டணத்துடன் சேர்க்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.</p>
<p>மேலும், பல பாதிக்கப்பட்ட பகுதிகளில் மானி வாசிப்புகள் மற்றும் மின் கட்டணப் பட்டியல்கள் விநியோகிப்பது சாத்தியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இந்நிலையில், அந்தக் கட்டணப் பட்டியல்கள் அடுத்த மாதங்களில் பாவனையாளர்களுக்குக் கிடைக்கச் செய்யப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/relief-from-the-sri-lanka-electricity-board/">இலங்கை மின்சார சபையின் நிவாரணம்!</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மின்சார கட்டண திருத்தம் &#8211; நாளை இறுதி முடிவு</title>
		<link>https://oruvan.com/electricity-tariff-revision-final-decision-tomorrow/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 13 Oct 2025 05:42:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[CEB]]></category>
		<category><![CDATA[பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு]]></category>
		<category><![CDATA[மின்சார கட்டணம்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=35208</guid>

					<description><![CDATA[<p>இந்த ஆண்டின் இறுதி மின்சார கட்டண திருத்தம் குறித்த இறுதி முடிவை நாளை அறிவிப்பதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் கடைசி காலாண்டில், ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மின்சார கட்டணத்தில் 6.8 சதவீத அதிகரிப்பை இலங்கை மின்சார சபை (CEB) கோரியுள்ளது. இது தொடர்பான பொது ஆலோசனை செப்டம்பர் 18 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் தொடங்கியது, இறுதி ஆலோசனை கூட்டம் கடந்த எட்டாம் திகதி மேல் மாகாணத்தில் நடைபெற்றது. முன்வைக்கப்பட்ட கருத்துகள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/electricity-tariff-revision-final-decision-tomorrow/">மின்சார கட்டண திருத்தம் &#8211; நாளை இறுதி முடிவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்த ஆண்டின் இறுதி மின்சார கட்டண திருத்தம் குறித்த இறுதி முடிவை நாளை அறிவிப்பதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.</p>
<p>இந்த ஆண்டின் கடைசி காலாண்டில், ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மின்சார கட்டணத்தில் 6.8 சதவீத அதிகரிப்பை இலங்கை மின்சார சபை (CEB) கோரியுள்ளது.</p>
<p>இது தொடர்பான பொது ஆலோசனை செப்டம்பர் 18 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் தொடங்கியது, இறுதி ஆலோசனை கூட்டம் கடந்த எட்டாம் திகதி மேல் மாகாணத்தில் நடைபெற்றது.</p>
<p>முன்வைக்கப்பட்ட கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு, மின்சார கட்டண திருத்தம் எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பது குறித்த தனது முடிவை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு நாளை அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த ஆண்டுக்கான மூன்றாவது மின்சார கட்டண திருத்தம் குறித்து பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக நடத்தப்பட்ட அமர்வுகளில் சுமார் 500 பேர் கருத்துகளையும் பரிந்துரைகளையும் சமர்ப்பித்துள்ளனர்.</p>
<p>இதற்கிடையில், மின்சார சபையின் மறுசீரமைப்பு முறையாக மேற்கொள்ளப்படாவிட்டால் மின்சார கட்டண உயர்வை தடுக்க முடியாது என்று இலங்கை மின்சார சபையின் சுயாதீன ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.</p>
<p>மின்சார  சபையின் மறுசீரமைப்பு தொடர்பாக தனது சங்கம் ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் சுயாதீன ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரபாத் பிரியந்தா தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/electricity-tariff-revision-final-decision-tomorrow/">மின்சார கட்டண திருத்தம் &#8211; நாளை இறுதி முடிவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஏழு லட்சம் ரூபாய் நிலுவை!! மகிந்த வசித்த வீட்டிற்கு மின் மற்றும் நீரை துண்டிக்க நடவடிக்கை</title>
		<link>https://oruvan.com/seven-lakh-rupees-outstanding-action-taken-to-cut-off-electricity-and-water-to-the-house-where-mahinda-lived/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Oct 2025 06:12:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CEB]]></category>
		<category><![CDATA[EB Bill]]></category>
		<category><![CDATA[Mahinda Rajapaksa]]></category>
		<category><![CDATA[Water Bill]]></category>
		<category><![CDATA[Water Board]]></category>
		<category><![CDATA[Wijerama House]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=34837</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வசித்து வந்த கொழும்பு &#8211; விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள வீட்டின் மின்சாரம் மற்றும் நீர் விநியோக இணைப்புகள் துண்டிக்கப்படவிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை அதிகாரிகள் நீர் இணைப்பை துண்டிக்க விஜேராம இல்லத்திற்கு சென்றிருந்தனர். அத்துடன், ஒரு லட்சம் ரூபாய் நிலுவைத் தொகை இருந்ததால் மின்சார சபை ஊழியர்களும் மின்சார இணைப்பை துண்டிக்க அங்கு சென்றிருந்தனர். விஜேராம இல்லத்தில் தற்போது பாதுகாப்புப் பணியாளர்கள் மட்டுமே இருப்பதன் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/seven-lakh-rupees-outstanding-action-taken-to-cut-off-electricity-and-water-to-the-house-where-mahinda-lived/">ஏழு லட்சம் ரூபாய் நிலுவை!! மகிந்த வசித்த வீட்டிற்கு மின் மற்றும் நீரை துண்டிக்க நடவடிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வசித்து வந்த கொழும்பு &#8211; விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள வீட்டின் மின்சாரம் மற்றும் நீர் விநியோக இணைப்புகள் துண்டிக்கப்படவிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை அதிகாரிகள் நீர் இணைப்பை துண்டிக்க விஜேராம இல்லத்திற்கு சென்றிருந்தனர்.</p>
<p>அத்துடன், ஒரு லட்சம் ரூபாய் நிலுவைத் தொகை இருந்ததால் மின்சார சபை ஊழியர்களும் மின்சார இணைப்பை துண்டிக்க அங்கு சென்றிருந்தனர்.</p>
<p>விஜேராம இல்லத்தில் தற்போது பாதுகாப்புப் பணியாளர்கள் மட்டுமே இருப்பதன் காரணமாக, அதிகாரிகள் திரும்பி வந்ததாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>இந்த விடயம் குறித்து கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வினவிய போது,</p>
<p>விஜேராம இல்லத்தில் ஆறு லட்சம் ரூபாய் நிலுவைத் தொகை இருப்பதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபையின் தலைவர்சந்தன பண்டார தெரிவித்தார்.</p>
<p>நிலுவைத் தொகை தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கான வழக்கமான நடைமுறையின்படி, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள வீட்டிற்கு நீர் விநியோகத்தை துண்டிக்க அதிகாரிகள் சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.</p>
<p>வீட்டில் நிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள், நீர் கட்டணம் குறித்து பொறுப்பான நபர்களுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>இதனால், விஜேராம இல்லத்திற்கு நீர் விநியோகத்தை துண்டிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள வீடு இன்னும் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படவில்லை.</p>
<p>அரசாங்க சொத்து ஆய்வாளர்கள் பொருட்களை வரிசைப்படுத்தி மகிந்த ராஜபக்ஷவுக்குச் சொந்தமான பொருட்களை பிரித்த பின்னர, வீடு அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படும் என்று மகிந்த ராஜபக்ச தரப்பு கூறுகிறது.</p>
<p>இந்த வீட்டில் ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் பொது நிர்வாக அமைச்சகத்திற்குச் சொந்தமான பொருட்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.</p>
<p>ஜனாதிபதி செயலக அதிகாரிகள் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான பொருட்களைப் பட்டியலிட்டுள்ளதாகவும் மகிந்த தரப்பு தெரிவித்துள்ளது.</p>
<p>மகிந்த ராஜபக்ச இந்த வீட்டை விட்டு வெளியேறியிருந்தாலும், வீடு இன்னும் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படவில்லை.</p>
<p>எனவே, மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களையும் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கும் திகதியில் செலுத்த வேண்டும்.</p>
<p>எனவே, இந்த வீட்டை விரைவில் கையகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகிந்த தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/seven-lakh-rupees-outstanding-action-taken-to-cut-off-electricity-and-water-to-the-house-where-mahinda-lived/">ஏழு லட்சம் ரூபாய் நிலுவை!! மகிந்த வசித்த வீட்டிற்கு மின் மற்றும் நீரை துண்டிக்க நடவடிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நாடு முழுவதும் மின் தடை ஏற்படும் சாத்தியம் &#8211; ஆனந்த பாலித எச்சரிக்கை</title>
		<link>https://oruvan.com/there-is-a-possibility-of-power-outages-throughout-the-country-ananda-palitha-warns/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Oct 2025 05:34:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CEB]]></category>
		<category><![CDATA[ஆனந்த பாலித]]></category>
		<category><![CDATA[மின் தடை]]></category>
		<category><![CDATA[மின்சார சபை]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=34731</guid>

					<description><![CDATA[<p>மின்சார பொறியாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக நாடு முழுவது மின் தடை ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பின் இணைப்பாளர் ஆனந்த பாலித எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த முடிவு தன்னிச்சையாக எடுக்கப்படவில்லை எனவும், அனைத்து தொடர்புடைய அதிகாரிகளுக்கும் எழுத்துப்பூர்வமாக அறிவித்த பின்னரே எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்படி, &#8220;அனைத்து பராமரிப்பு மற்றும் பழுது பார்க்கும் பணிகளும் நிலையான எட்டு மணி நேர வேலை காலத்தில் மட்டுமே மேற்கொள்ளப்படும். அதற்கு மேல், எவ்விதமான அவசரமாக [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/there-is-a-possibility-of-power-outages-throughout-the-country-ananda-palitha-warns/">நாடு முழுவதும் மின் தடை ஏற்படும் சாத்தியம் &#8211; ஆனந்த பாலித எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மின்சார பொறியாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக நாடு முழுவது மின் தடை ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பின் இணைப்பாளர் ஆனந்த பாலித எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p>
<p>இந்த முடிவு தன்னிச்சையாக எடுக்கப்படவில்லை எனவும், அனைத்து தொடர்புடைய அதிகாரிகளுக்கும் எழுத்துப்பூர்வமாக அறிவித்த பின்னரே எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>இதன்படி, &#8220;அனைத்து பராமரிப்பு மற்றும் பழுது பார்க்கும் பணிகளும் நிலையான எட்டு மணி நேர வேலை காலத்தில் மட்டுமே மேற்கொள்ளப்படும்.</p>
<p>அதற்கு மேல், எவ்விதமான அவசரமாக இருந்தாலும், பராமரிப்பு அல்லது பழுது பார்க்கும் பணிகள் முன்னெடுக்கப்பட மாட்டாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>இலங்கை மின்சார சபையின் (CEB) மறுசீரமைப்பு தொடர்பாக ஆரம்பித்த தொழிற்சங்கத்தின் போராட்டம், பின்னர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தீவிவரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>நிறுத்தப்பட்ட பதவி உயர்வுகள், செலுத்தப்படாத சம்பள நிலுவைகள் மற்றும் தற்காலிக 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவை நிரந்தரமாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளா விரிவடைந்துள்ளதாக ஆனந்த பாலித குறிப்பிட்டார்.</p>
<p>எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகத்திடமிருந்து எந்த பதிலும் இல்லை கிடைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.</p>
<p>நெருக்கடியை நிவர்த்தி செய்ய எந்த அதிகாரியும் முன்வரவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.</p>
<p>இந்த பிரச்சினைகளை கையாள நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தோல்வியடைந்துள்ளனர்.</p>
<p>இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்களில் சமநிலை இல்லை எனவும் இந்த நிலை நீடித்தால் நாடு விரைவில் மின் தடையை சந்திக்கும்,&#8221; என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/there-is-a-possibility-of-power-outages-throughout-the-country-ananda-palitha-warns/">நாடு முழுவதும் மின் தடை ஏற்படும் சாத்தியம் &#8211; ஆனந்த பாலித எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மின்சார ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து</title>
		<link>https://oruvan.com/electricity-workers-holidays-cancelled/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Sep 2025 10:53:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[CEB]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=33359</guid>

					<description><![CDATA[<p>மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு தொடர்ச்சியான மின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனிடையே, மின்விநியோகத்துடன் தொடர்புடைய அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து நேற்று முன்தினம் நள்ளிரவு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது. 1979 ஆம் ஆண்டின் 61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச்சேவைகள் சட்டத்தின் 02ஆம் பிரிவிற்கமைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/electricity-workers-holidays-cancelled/">மின்சார ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.</p>
<p>பொதுமக்களுக்கு தொடர்ச்சியான மின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.</p>
<p>இதனிடையே, மின்விநியோகத்துடன் தொடர்புடைய அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து நேற்று முன்தினம் நள்ளிரவு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.</p>
<p>1979 ஆம் ஆண்டின் 61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச்சேவைகள் சட்டத்தின் 02ஆம் பிரிவிற்கமைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.</p>
<p>மக்களின் இயல்பு வாழ்க்கையை நடத்திச்செல்ல குறித்த சேவைகள் அத்தியவசியமானவை என்பதையும் அந்த சேவைகளுக்கு இடையூறு அல்லது தடை ஏற்படக்கூடும் என்பதை கருத்திற்கொண்டும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.</p>
<p>24 கோரிக்கைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகளுடன் தொடர்புடைய தொழிற்சங்கங்களுடன் பொறியியலாளர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கடந்த 25ஆம் திகதி முதல் சுகயீன விடுமுறை, சட்டப்படி வேலைசெய்யும் தொழிற்சங்க நடவடிக்கை மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன.</p>
<p>தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையின் மூன்றாவது கட்டமாக அனைத்து பெறுகை செயற்பாடுகளிலிருந்தும் விலகியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் மின்சார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.</p>
<p>The post <a href="https://oruvan.com/electricity-workers-holidays-cancelled/">மின்சார ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மின் கட்டணத்தை 6.8% அதிகரிக்க இலங்கை மின்சார சபை முன்மொழிவு</title>
		<link>https://oruvan.com/ceylon-electricity-board-proposes-to-increase-electricity-tariffs-by-6-8/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 09 Sep 2025 10:46:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[CEB]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=32115</guid>

					<description><![CDATA[<p>2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டுக்கான மின்சார கட்டண திருத்த முன்மொழிவை இலங்கை மின்சார சபை (CEB) சமர்ப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் மின்சார கட்டணத்தை 6.8% அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இதுதொடர்பான வாய்வழி பொது ஆலோசனைகள் செப்டம்பர் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அத்துடன் எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகள் ஒக்டோபர் 7ஆம் திகதிக்குள் செய்யப்பட வேண்டும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/ceylon-electricity-board-proposes-to-increase-electricity-tariffs-by-6-8/">மின் கட்டணத்தை 6.8% அதிகரிக்க இலங்கை மின்சார சபை முன்மொழிவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டுக்கான மின்சார கட்டண திருத்த முன்மொழிவை இலங்கை மின்சார சபை (CEB) சமர்ப்பித்துள்ளது.</p>
<p>இதன் அடிப்படையில் மின்சார கட்டணத்தை 6.8% அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.</p>
<p>இதுதொடர்பான வாய்வழி பொது ஆலோசனைகள் செப்டம்பர் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.</p>
<p>அத்துடன் எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகள் ஒக்டோபர் 7ஆம் திகதிக்குள் செய்யப்பட வேண்டும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/ceylon-electricity-board-proposes-to-increase-electricity-tariffs-by-6-8/">மின் கட்டணத்தை 6.8% அதிகரிக்க இலங்கை மின்சார சபை முன்மொழிவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மின்சார திருத்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு</title>
		<link>https://oruvan.com/electricity-reform-bill-gazetted-ceb-to-be-restructured-into-four-state-owned-entities/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 21 May 2025 05:20:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[CEB]]></category>
		<category><![CDATA[electricity]]></category>
		<category><![CDATA[gazetted]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[restructured]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=20820</guid>

					<description><![CDATA[<p>இலங்கை மின்சாரத் துறையின் மறுசீரமைப்பில் முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில், முன்மொழியப்பட்ட மின்சார திருத்த சட்டமூலம் உத்தியோகப்பூர்வமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய சட்டமூலத்தின்படி, முன்னர் இருந்த, இலங்கை மின்சார சபையை 12 தனித்தனி நிறுவனங்களாகப் பிரிப்பதை நோக்கமாகக் கொண்ட விதிகள் நீக்கப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக, திருத்தப்பட்ட சட்டமூலம் இலங்கை மின்சார சபையை நான்கு நிறுவனங்களாக மறுசீரமைக்க முன்மொழிகிறது, இவை அனைத்தும் முழுமையாக அரசுக்குச் சொந்தமானதாக அமையும். எரிசக்தித் துறையில் செயற்றிறன் மற்றும் சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கான சீர்திருத்தங்களின் விரைவு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/electricity-reform-bill-gazetted-ceb-to-be-restructured-into-four-state-owned-entities/">மின்சார திருத்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கை மின்சாரத் துறையின் மறுசீரமைப்பில் முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில், முன்மொழியப்பட்ட மின்சார திருத்த சட்டமூலம் உத்தியோகப்பூர்வமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.</p>
<p>புதிய சட்டமூலத்தின்படி, முன்னர் இருந்த, இலங்கை மின்சார சபையை 12 தனித்தனி நிறுவனங்களாகப் பிரிப்பதை<br />
நோக்கமாகக் கொண்ட விதிகள் நீக்கப்பட்டுள்ளன.</p>
<p>அதற்கு பதிலாக, திருத்தப்பட்ட சட்டமூலம் இலங்கை மின்சார சபையை நான்கு நிறுவனங்களாக மறுசீரமைக்க முன்மொழிகிறது,<br />
இவை அனைத்தும் முழுமையாக அரசுக்குச் சொந்தமானதாக அமையும்.</p>
<p>எரிசக்தித் துறையில் செயற்றிறன் மற்றும் சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கான சீர்திருத்தங்களின் விரைவு மற்றும் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/electricity-reform-bill-gazetted-ceb-to-be-restructured-into-four-state-owned-entities/">மின்சார திருத்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மின்சாரக் கட்டணத்தை 50 வீதமாக அதிகரிக்கக் கோரிக்கை</title>
		<link>https://oruvan.com/demand-to-increase-electricity-tariffs-by-50-percent/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 30 Apr 2025 06:31:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anurakumara dissanayaka]]></category>
		<category><![CDATA[CEB]]></category>
		<category><![CDATA[IMF]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=18952</guid>

					<description><![CDATA[<p>ஜூலை மாதம் முதல் மின்சாரக் கட்டணங்களை சுமார் ஐம்பது சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்று இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் முன்மொழிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இந்த முன்மொழிவை முற்றிலுமாக நிராகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஜனாதிபதி கலந்து கொண்ட இந்த சிறப்புக் கூட்டத்தின் போது, ​​இலங்கை மின்சார சபை அதிகாரிகள் இந்த முன்மொழிவை முன்வைத்தனர், ஆனால் ஜனாதிபதி அதற்கு உடன்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படாவிட்டால், [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/demand-to-increase-electricity-tariffs-by-50-percent/">மின்சாரக் கட்டணத்தை 50 வீதமாக அதிகரிக்கக் கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஜூலை மாதம் முதல் மின்சாரக் கட்டணங்களை சுமார் ஐம்பது சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்று இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் முன்மொழிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
<p>எனினும், இந்த முன்மொழிவை முற்றிலுமாக நிராகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p>
<p>ஜனாதிபதி கலந்து கொண்ட இந்த சிறப்புக் கூட்டத்தின் போது, ​​இலங்கை மின்சார சபை அதிகாரிகள் இந்த முன்மொழிவை முன்வைத்தனர், ஆனால் ஜனாதிபதி அதற்கு உடன்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படாவிட்டால், சபை நிதி ரீதியாக நிலையற்றதாகிவிடும் என்று மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.</p>
<p>சர்வதேச நாணய நிதியமும் மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்க பரிந்துரைத்துள்ளதாகவும் மின்சார சபை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p>
<p>இருப்பினும், தற்போதைய நிலையில் மின்சாரக் கட்டணங்களைப் பராமரிப்பதால் நிதி ஸ்திரமின்மை ஏற்படாது என்று பொதுப் பயன்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.</p>
<p>இதற்கிடையில், இலங்கைக்கு மின்சார கட்டண திருத்தம் தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p>
<p>செலவுகளை ஈடு செய்யும் வகையில் மின்சாரக் கட்டணங்கள் மறுசீரமைக்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்திற்கு வலியுறுத்துவதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/demand-to-increase-electricity-tariffs-by-50-percent/">மின்சாரக் கட்டணத்தை 50 வீதமாக அதிகரிக்கக் கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
